search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உக்ரைன்"

    இதுவரை 45 இந்தியர்கள் ரஷிய ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்ப உள்ளனர்.காலை 6 மணி முதல் நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் நாங்கள் வேலை செய்தோம், தூங்குவதற்கும் அனுமதிக்க மாட்டார்கள்.

    உக்ரைன் ரஷியா போர் கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷிய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள் சேர்க்கப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக அங்கு மாறியுள்ள இந்திய இளைஞர்கள் சிலர் தங்களை காப்பாற்றும்படி வீடியோ வெளியிட்டனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி ரஷியா சென்று அதிபர் புதினை சந்தித்தபோது ரஷிய ராணுவத்திலுள்ள இந்திய இளைஞர்களை பணியிலிருந்து விடுவிக்க வலியுறுத்தியிருந்தார். இதற்கு ரஷியா இசைவு தெரிவித்த நிலையில் இதுவரை 45 இந்தியர்கள் ரஷிய ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்ப உள்ளனர். மேலும் 50 இந்தியர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று வெளியுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் விடுவிக்கப்பட்டவர்களில் தெலுங்கனா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 4 இந்தியர்கள் நேற்றைய தினம் [வெள்ளிக்கிழமை] இந்தியா திரும்பியுள்ளனர். ரஷியாவில் மாதம் ரூ.1 லட்சத்தில் வேலைவாய்ப்பு எனக்கூறி அழைத்துச்செல்லப்பட்ட இவ்விளைஞர்கள் உக்ரைன் போர் தொடங்கியதும் வலுக்கட்டாயமாக ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுப் போர் முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ரஷிய ராணுவத்தில் தாங்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    காலை 6 மணி முதல் நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் நாங்கள் வேலை செய்தோம், தூங்குவதற்கும் அனுமதிக்க மாட்டார்கள்.மனிதாபிமானமற்ற சூழலில் நாங்கள் இருந்தோம். AK-12, AK-74, கிரெனைடுகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கையாள எங்களுக்கு பயிற்சி அளித்தனர். குறைந்த உணவுடன் கடுமையான குளிரில் சுரங்கப்பாதைகளைத் தோண்டினோம். உடல் ரீதியான வலியுடன் மன ரீதியாகவும் எங்களுக்கு கடும் தொல்லைகள் கொடுக்கப்பட்டது.

    எங்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டு வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்டது. போருக்கிடையில் தாங்கள் எத்தனை நாட்கள் உயிர்பிழைக்கப் போகிறோம் என்று அஞ்சினோம். துப்பாக்கி குண்டுகளின் சத்தம் இன்னும் எங்களின் காதுகளுக்கு இரைந்து கொண்டிருக்கிறது. வேலையின்போது நாங்கள் சோர்ந்துவிட்டால் கால்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவார்கள், போரில் நண்பர்கள் பலரின் மரணத்திலிருந்தும் தாங்கள் இன்னும் மீளவில்லை என்று தெரிவித்துள்ளனர். 

    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த அஜித் தோவல் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார்
    • பிரதமர்[மோடி] உங்களிடம் டெலிபோன் மூலம் பேசியிருந்தபடி அதிபர் ஜெலென்ஸ்கி உடனான சந்திப்பு குறித்து விரிவாக எடுத்துரைக்க விரும்புகிறார்.

    உக்ரைன் போரும் இந்தியாவும் 

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவால் உதவ முடியும் என அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட மேற்கு நாடுகள் கூறி வரும் நிலையில் மோடியின் ரஷிய பயணம் மற்றும் அதன்பின்னான உக்ரைன் பயணம் சர்வதேச கவனம் பெற்றது. ரஷியாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமே என்று மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    கடந்த ஆகஸ்ட் 23 அன்று உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியுடன் மோடி ரஷியா உடனான போர் நிறுத்தம் குறித்தும் இந்தியா- உக்ரைன் வர்த்தக உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இந்தியா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் தேசிய மாநாடு பணிகள் தொடர்பாக நேற்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் ரஷியா சென்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

     

    அஜித் தோவல் தூது 

    மேலும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த அஜித் தோவல் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார். மோடி உக்ரைன் சென்று சரியாக இரண்டரை வாரங்கள் கழிந்து ரஷியா சென்றுள்ள அஜித் தோவல் அதிபர் புதினை சந்தித்து கைகுலுக்கி பேசுகையில், பிரதமர்[மோடி] உங்களிடம் டெலிபோன் மூலம் பேசியிருந்தபடி அவரது உக்ரைன் பயணம் குறித்தும், அதிபர் ஜெலென்ஸ்கி உடனான சந்திப்பு குறித்தும் உங்களிடம் விரிவாக எடுத்துரைக்க விரும்புகிறார். எனவே உங்களை சந்தித்து இதுபற்றி விளக்கமாக கூற என்னை தனிப்பட்ட முறையில் பிரதமர் [மோடி] அனுப்பி வைத்துள்ளார் என்று பேசியுள்ளார்.  அதிபர் புதின் மற்றும் அஜித் தோவல் சந்திப்பின்போது இருவரும் தனியே உரையாடியுள்ளனர். அப்போது உக்ரைன் போரை நிறுத்துவதற்காக மோடியின் அமைதி திட்டத்தை அஜித் தோவல் புதினிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தீவிரமாகும் போர் 

    இதற்கிடையே அக்டோபர் 22 முதல் 24 வரை நடக்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வரவேண்டும் என பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் உக்ரைன் போர் தொடர்பாக அதிபர் புதினின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மோடி உக்ரைன் சென்று திரும்பிய சில நாட்களிலேயே ரஷியா- உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைய தொடங்கியது. இருவரும் மாறி மாறி டிரோன்கள் மூலமும் ராக்கெட்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தி வருகிறனர். உக்ரைன் தலைங்கர் கீவில் மின்சார கட்டமைப்பைக் குறிவைத்து ரஷியா பெரிய அளவில் தாக்குதல் நடத்தி இருந்தது குறிப்பிடத்தத்க்து.

    • அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கடந்த வாரம் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
    • அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள பாதிக்கும் மேற்பட்ட மந்திரிகள் மாற்றப்படலாம் என கட்சி தலைவர் தகவல்.

    ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் வழங்கி வருவதால் ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையே ரஷியாவில் உள்ள குர்ஸ்க் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்து வைத்து, ரஷியாவின் திட்டத்தை முறியடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து நான்கு முக்கிய மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர். ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணை பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய மந்திரி ஒலெக்சாண்ட்ர் கமிஷின் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இதில் கமிஷின் ஆயுத உற்பத்தியை அதிகரிப்பதில் முங்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தது.

    நீதித்துறை மந்திரி டெனிஸ் மலியுஸ்கா, சுற்றுச்சூழல் துறை மந்திரி ருஸ்லான் ஸ்ரிலெட்ஸ் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர்.

    நான்கு மந்திரிகள் ராஜினாமா குறித்து அரசும் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நான்கு பேருக்கு பதிலாக முக்கியமான மந்திரி பதவிக்கு புதிதாக யாரை நியமிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம், உடனடியாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். பாராளுமன்றத்திற்கான அந்த கட்சியின் தலைவர், தற்போது இருக்கும் மந்திரிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் மாற்றப்படுவார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    ரஷியாவுக்கு எதிராக சண்டை நடைபெற்று வரும் நிலையில், இந்த ராஜினாமா விவகாரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

    • உக்ரைன் பகுதிகள் மீது ரஷியா விடாமல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
    • ரஷியாவின் ரோன்களின் தாக்குதலை முறியடிக்க 70 உக்ரைன் பெண்கள் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளனர்.

    ரஷியா - உக்ரைன் போர் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அண்மையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை ரஷியா நடத்தியது. இந்த டிரோன்களை தங்களின் ராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது.

    இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் 20 டிரோன்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்தது. டிரோன் விழுந்து சராதோவ் பகுதியில் உள்ள 38 மாடி குடியிருப்பு கட்டடம் தீப்பற்றி எரிந்தது.

    உக்ரைன் பகுதிகள் மீது ரஷியா விடாமல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. ராட்சத மிசைல்கள் மற்றும் டிரோன்களை உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ரஷியாவின் டிரோன் தாக்குதலை முறியடிக்க உக்ரைன் பெண்கள் போர்க்களத்திற்கு வந்துள்ளனர். இந்த பெண்கள் குழு ரஷியாவின் டிரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

    ரஷியாவின் தாக்குதலை சமாளிக்க ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் உக்ரைன் ஆண்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். அவர்கள் உக்ரைன் எல்லையை பாதுகாத்து வருகின்றனர். ஆண்களோடு கைகோர்த்து தற்போது பெண்களும் நாட்டை பாதுகாக்க முன்வந்துள்ளனர். ரஷியாவின் டிரோன் தாக்குதலை முறியடிக்க முதற்கட்டமாக 70 பெண்கள் பாதுகாப்புப் படையில் சேர்ந்துள்ளனர்.

    • உக்ரைன் படைகளை எதிர்கொள்ள தற்போது 30,000 ரஷிய ராணுவ வீரர்கள் கூர்க்ஸ் பிராந்தியத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • இரு நாட்டு எல்லைக்குள் இடையில் ஒரு பாதுகாப்பான மண்டலத்தை உருவாக்க இந்த தாக்குதல் என்று ஜெலன்ஸ்கி கூறினார்

    உக்ரைன் ரஷியா போர் தீவிரமாகி வரும் நிலையில் ரஷியாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தில் மக்கள் வாழும் 100 குடியேற்ற பகுதிகளை [settlements] கைப்பற்றியுள்ளதாகவும் 600 ரஷிய வீரர்களைக் கைது செய்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 2022 இல் தொடங்கி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில் சமீப காலமாக உக்ரைன் ரஷியா மீது பெரிய அளவிலான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.

    கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதலைமுறையாக ரஷியாவுக்குள் நுழைந்த உக்ரைன் படைகள் கூர்க்ஸ் பிராந்தியத்தில் சரமாரியாகத் தாக்குதல் நடத்தின. இதனால் அங்குள்ள மக்கள் வெளியேற்ட்டப்பட்டு, ரஷிய ராணுவம் குவிக்கப்பட்டது . இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ரஷிய மண்ணில் வெளிநாட்டுப் படைகள் முன்னெடுத்த மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.  

     

    இந்த தாக்குதல் குறித்து விளக்கமளித்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, எல்லையிலிருந்து ரஷியா நடத்தும் தாக்குதலை நிறுத்துவதற்காகத்தான் இந்த முயற்சி. இரு நாட்டு எல்லைக்குள் இடையில் ஒரு பாதுகாப்பான மண்டலத்தை உருவாக்குவதற்குத்தான் இந்த தாக்குதல். மற்ற எந்த நோக்கமும் கிடையாது என்று தெரிவித்தார். ஆனால் உக்ரைன் படைகள் ரஷிய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக அதிபர் புதின் குற்றம்சாட்டியிருந்தார்.

    உக்ரைன் படைகளை எதிர்கொள்ள தற்போது 30,000 ரஷிய ராணுவ வீரர்கள் கூர்க்ஸ் பிராந்தியத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உக்ரைன் படைகளைச் சுற்றிவளைத்துப் பாதுகாப்பு அதற்கு மேல் அவர்கள் முன்னேற முடியாத படி பாதுகாப்பு வளையத்தை உருவாக்க முயன்று வருகின்றனர். இந்த நிலையில்தான் உக்ரைன் தரைப்படை தளபதி சிர்ஸ்கி [Syrsky] கூர்க்ஸ் பிராந்தியத்தில் இறுதிவரை நடத்திய தாக்குதல்களில் 600 ரஷிய படை வீரர்களைக் கைது செய்துள்ளோம் என்றும் 100 குடியிருப்பு பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

     

    இதற்கிடையில் நேற்று முன் தினம் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா நூற்றுக்கணக்கான மிசைல்கள் மற்றும் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் மின்சார சேவை கட்டமைப்பை அழிக்க ரஷியா குறி வைத்துவருகிறது. மேலும் உக்ரைன் படைகளும் ரஷ்யாவின் சராதோவ் பகுதியில் டிரோன்களை ஏவித் தாக்குதல் தாக்குதல் நடத்தின 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆகஸ்ட் 23 அன்று உக்ரைன் நாட்டுக்கு அரசுமுறை பயணமாக மோடி சென்றிருந்தார்.
    • ரஷிய அதிபர் புதனுடன் பேசினேன் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அண்மையில், அரசு முறை பயணமாக பிரதமர் மோடி உக்ரைன் சென்றார். அங்கு, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்தித்தார். ரஷியா உடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில், உக்ரைன் நாட்டு பயணம் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் பேசினேன் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "ரஷிய அதிபர் புதினுடன் பேசினேன். இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான கூட்டாண்மை மற்றும் பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தோம். ரஷியா -உக்ரைன் போர் பற்றிய எனது கருத்துகள் மற்றும் சமீபத்தில் நான் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டது குறித்து உரையாடினோம். போரை கைவிட்டு, அமைதியான தீர்வுக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தினேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த ஜூலை 9 அன்று நடந்த 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி ரஷியா சென்றிருந்தார். அப்போது மோடியை புதின் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் விவாதித்தோம்
    • இருதரப்பு உறவை வலுப்படுத்த பைடன் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    அமரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி நேற்றைய தினம் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். சமீபத்தில் மேற்குகொண்ட ரஷிய-உக்ரைன் பயணம், வங்கதேச விவகாரம், இருநாட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருவரும் விரிவாக விவாதித்தோம் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், அதிபர் ஜோ பைடனுடன் உரையாற்றினேன். உக்ரைனில் உள்ள நிலைமை உட்பட பல்வேறு பிராந்திய, உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விரிவாக பேசினோம். அந்த பகுதிகளில் விரைவில் அமைதி மற்றும் நிலைத்தன்மை திரும்ப இந்தியா எப்போதும் முழு ஆதரவு அளிக்கும் என்று அவரிடம் தெரிவித்தேன். வங்கதேச நிலைமை குறித்து பேசியபோது, அங்கு விரைவில் இயல்பு நிலையை மீட்டெடுப்பது குறித்தும் , சிறுபான்மையினரின், முக்கியமாக இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் விவாதித்தோம் என்று பதிவிட்டுள்ளார்.

    இதுதவிர்த்து க்வாட் கூட்டமைப்பு உள்ளிட்ட பிராந்திய, சர்வதேச அமைப்புகளில் இந்தியா-அமெரிக்கா தொடர்ந்து இணக்கமாக செயல்படுவது குறித்தும் பிரதமர் மோடி பைடனுடன் பேசியுள்ளார். இருதரப்பு உறவை வலுப்படுத்த பைடன் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்ததாகவும் இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • ரஷியா நேற்று இரவு, பல கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது
    • மின்சார ஆற்றல் உள்கட்டமைப்பைக் குறிவைத்து ரஷியா மிசைல்களை ஏவி வருகிறது.

    ரஷியா நேற்று இரவு, பல கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த டிரோன்களை தங்களின் ராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது. இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் 20 டிரோன்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. டிரோன் விழுந்து சராதோவ் பகுதியில் உள்ள 38 மாடி குடியிருப்பு கட்டடம் தீப்பற்றி எரிந்தது.

    இந்நிலையில் உக்ரைன் பகுதிகள் மீது ரஷியா விடாமல் தாக்குதல் நடத்தி வருகிறது. ராட்சத மிசைல்கள் மற்றும் டிரோன்களை உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 37 பேர் காயமடைந்தனர். மேற்கு லுட்ஸ்க், கிழக்கு டினிப்ரோ மற்றும் தெற்கு சபோரிஜியா பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மின்சார ஆற்றல் உள்கட்டமைப்பைக் குறிவைத்து மிசைல்கள் ஏவப்பட்டுள்ளன.

    இதனால் நாட்டின் மிகப்பெரிய ஆற்றல் உற்பத்தி நிறுவனம் DTEK கீவ் உள்ளிட்ட தாக்குதலுக்கு உள்ளான 15 நகரங்களில் குறிப்பாக லெவிவ் [lviv] மின்சாரம் சேவைகளை நிறுத்தியுள்ளது. இதனை அந்த மாகாணத்தின் ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த தாக்குதலால் தண்ணீர் விநோயாகம் முடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது
    • வானிலேயே தகர்க்கப்பட்ட டிரோன்களின் பாகங்கள் சராதோவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடங்களின் மீது வவிழுந்து நொறுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது

    ரஷியா உக்ரைன் போர் கடந்த 2 ஆண்டுகளும் மேலாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் உக்ரைன் படைகள் ரஷிய பகுதிகளுக்குள் நுழைந்தது தாக்குதல் நடத்தியது. ரஷியாவின் கூர்க்ஸ் உள்ளிட்ட பிராந்தியங்களை உக்ரைன் படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. இதனால் ரஷிய ராணுவம் பெரிய அளவிலான தாக்குதலுடன் பதிலடி கொடுக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை, 2 கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த டிரோன்களை தங்களின் ராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது. இந்த சம்பத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் 20 டிரோன்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனால் வானிலேயே தகர்க்கப்பட்டடிரோன்களின் பாகங்கள் சராதோவ் பகுதியில் உள்ள 38  மாடி குடியிருப்பு கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  இதற்கிடையில் சராதோவ் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சராதோவ் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் தடைபட்டுள்ளன.

    • இருநாடுகளும் போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வலியுறுத்தி வருகிறது.
    • இதுதொடர்பாக இரு நாட்டு தலைவர்களிடமும் பிரதமர் மோடி நேரிலும் வலியுறுத்தினார்.

    புதுடெல்லி:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டரை ஆண்டு கடந்துள்ளது. இந்தப் போர் குறித்து இந்தியா கவலை தெரிவித்து வருகிறது.

    இரு நாடுகளும் போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக இரு நாட்டு தலைவர்களிடமும் பிரதமர் மோடி நேரிலும் வலியுறுத்தினார்.

    இதற்கிடையே, இத்தாலியில் கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடியைச் சந்தித்த ஜெலன்ஸ்கி, அவரை உக்ரைன் வருமாறு அழைப்பு விடுத்தார். இதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். அதன்படி போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். இதற்காக கடந்த 22-ம் தேதி புறப்பட்டு போலந்து சென்ற அவர், அங்கே 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    அதைத்தொடர்ந்து, ரெயில் மூலமாக உக்ரைனுக்குச் சென்றார். அங்கு உக்ரைன் அதிபரைச் சந்தித்துப் பேசினார். உக்ரைன் அதிபருடனான சந்திப்பின்போது, பிராந்தியத்தில் அமைதி திரும்ப இந்தியா உதவும் என உறுதி அளித்தார்.

    இந்நிலையில், போலந்து மற்றும் உக்ரைன் பயணத்தை நிறைவுசெய்து பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்பினார். தனி விமானம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.

    • வேளாண்மை மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என பல்வேறு விவகாரங்கள் பற்றி விரிவாகக் கலந்துரையாடினர்
    • அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் யான் கிர்பி கருத்து தெரிவித்துள்ளார்

    ரெயில் பயணம் 

    போலந்து நாட்டுக்கு 2 நாள் பயணமாகச் சென்ற மோடி அங்கிருந்து RAIL FORCE ONE என்ற சொகுசு ரெயில் மூலம் 7 மணிநேரம் பயணித்து நேற்றைய தினம் [ஆகஸ்ட் 23] உக்ரைன் சென்றடைந்தார். தலைநகர் கீவ்-வில் அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார். 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் சுதந்திரம்  பெற்ற பின்னர் இந்திய பிரதமர் ஒருவர்  உக்ரைன் செல்வது இதுவே முதல் முறை ஆகும்.

     

    ஆலோசனை...

    இரு தலைவர்களும் தனியாகவும், உயர்மட்டக் குழுவினருடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைனில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது, இந்தியா-உக்ரைன் இடையேயான வர்த்தகம், பொருளாதார பிரச்சனைகள், பாதுகாப்பு, மருந்துகள், வேளாண்மை மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என பல்வேறு விவகாரங்கள் பற்றி விரிவாகக் கலந்துரையாடினர். இந்த பேச்சுவார்த்தை முடிவில் இரு நாடுகளுக்கு இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

    ஒப்பந்தங்கள் 

    வேளாண்மை மற்றும் உணவுத்துறையில் ஒத்துழைப்பு, மருத்துவ உற்பத்தி பொருட்கள் ஒழுங்கமைப்பு துறையில் ஒத்துழைப்பு, உக்ரைனில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மானிய உதவியை இந்தியா வழங்குதல் மற்றும் 2024-28 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சார ஒத்துழைப்பு ஆகிய 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதுதவிர்த்து உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை நிலைநாட்ட இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று ஜெலின்ஸ்கிக்கு மோடி உறுதியளித்தார். மேலும் ஜெலின்ஸ்கியை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

    அமரிக்கா  சொல்வது என்ன?

    இந்நிலையில் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து அமெரிக்காவும் தனது  கருத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிபர் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் யான் கிர்பி கூறியுள்ளதாவது, மோடியின் உக்ரைன் பயணத்தின் மூலம் இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை உயர்த்துவதில் பரஸ்பர விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ரஷிய -உக்ரைன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்தியா செயல்பட முடிந்தால் உதவியாக இருக்கும் என கருதுகிறோம் என்று தெரிவித்தார். 

    • இந்த போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்று மோடி தெரிவித்தார்
    • விரைவில் இந்தியா வந்து இந்திய மக்களிடம் அதற்கான ஆதரவைக் கோருவேன் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார்

    பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக போலாந்து சென்று அங்கிருந்து 7 மணி நேரம் ரெயில் பயணமாக நேற்று [ஆகஸ்ட் 23] உக்ரைன் சென்றடைந்தார். அங்கு தலைநகர் கீவில் அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். இரு தலைவர்களும் தனியாகவும், உயர்மட்டக் குழுவினருடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைனில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.

    மோடி பேசுகையில், இந்த போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. தொடக்கத்தில் இருந்தே ஒருபக்க சார்பாகவேதான் இருக்கிறோம். அது அமைதியின் பக்கமே ஆகும். நாங்கள் புத்தரின் நிலத்தில் இருந்து வந்திருக்கிறோம். அங்கே போருக்கு இடமில்லை. மகாத்மா காந்தியின் தேசத்தில் இருந்து வந்திருக்கிறோம், அவர் ஒட்டுமொத்த உலகுக்கும் ஒரு அமைதியின் செய்தியை வழங்கியவர். எனவே இரு தரப்பும் ஒன்றாக அமர்ந்து பேசி இந்த நெருக்கடிகளில் வெளிவருவதற்கான வழிகளை தேட வேண்டும். உக்ரைனில் அமைதி திரும்புவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

     

    இதற்கிடையில் போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உக்கரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மோடி புதின் பக்கம் இருப்பதை விட அமைதியின் பக்கமே அதிகம் நிற்கிறார். நடுநிலைமையாக அன்றி இந்த போரில் இந்தியா எங்கள் பக்கம் நிற்க வேண்டும். இந்தியா உக்ரைனுக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். விரைவில் இந்தியா வந்து இந்திய மக்களிடம் அதற்கான ஆதரவைக் கோருவேன். இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா பெரும்பங்காற்ற வேண்டும். இந்தியா உலகில் முக்கியமான நாடு. இந்தியாவால் நிச்சயம் அமைதியைக் கொண்டுவர முடியும் என்று தெரிவித்துள்ளார்.

    ×