என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ முகாம்"

    • இன்று 2-வது நாளாக மருத்துவ முகாம் உறையூர் பகுதியில் நடந்து வருகிறது.
    • மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது.

    திருச்சி:

    திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவில் நேற்று முன்தினம் அங்குசாமி மனைவி மருதாம்பாள் (வயது 75) கோவிந்தராஜ் மனைவி லதா(52) மற்றும் நான்கு வயது சிறுமி பிரியங்கா ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவர்கள் இறந்ததாக குற்றச்சாட்டப்பட்டது.

    மேலும் மின்னப்பன் தெரு மற்றும் சுற்றுவட்டார தெருக்களை சேர்ந்த 40 பேர் வாந்தி மற்றும் வயிற்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்தது.

    மேலும் வாந்தி-பேதிக்கு அந்த பகுதியில் கடந்த 14-ந் தேதி சித்திரை திருவிழா திருவிழாவில் அன்னதானத்தின் போது வழங்கிய மோர் காரணமாக இருக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பிரச்சனையை தொடர்ந்து அந்த பகுதியில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது.


    லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. பொதுமக்கள் சந்தேகம் எழுப்பிய பகுதிகளில் குழிதோண்டி பார்த்த பின்னரும் கழிவு நீர் குடிநீரில் கலந்ததற்கான தடயம் எதுவும் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே உறையூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் வசிக்கும் 11 ஆயிரம் பேருக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) 2-வது நாளாக மருத்துவ முகாம் உறையூர் பகுதியில் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று கூறும்போது, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிகளின் போது, குடிநீரில் கழிவு நீர் கலந்து சோழராஜபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது யாருக்கும் வாந்தி பேதி வரவில்லை. மாறாக மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது.

    உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை. அங்கு தற்போது பாதாள சாக்கடை பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டது. இருப்பினும் சித்திரை திருவிழாவில் அன்னதானத்தின் போது, காலாவதியான குளிர்பானம் வழங்கியதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

    அதனால் பிரச்சனை ஏற்பட்டதா ? என அறிய ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். குழாய் மூலமாக குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ள உறையூர் பணிக்க தெரு, விண்ணப்ப தெரு, நாடார் தெரு ஆகிய பகுதிகளில் நாளை குடிநீர் சப்ளை குழாய் மூலமாக வழங்க இருக்கிறோம்.

    அப்போது வீடு வீடாக சென்று குடிநீரில் பிரச்சனை உள்ளதா என கண்டறிய ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள். கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் திருச்சி மாநகராட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.

    • தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடைபெற உள்ளது.
    • மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்க உள்ளனர்.

    தென்காசி:

    பிங்க் அக்டோபர் 2022 கொண்டாடுவதையொட்டி தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

    முகாமை இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் முரளி சங்கர் தலைமையில் முகாம் நடைபெறுகிறது.

    இதில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பில் கட்டி, வலி, மார்பகக் காம்புகள் உள்போகுதல், மார்பகக் காம்புகளில் இருந்து திரவம் வருதல், மார்பக சருமம் சிவந்து போதல், குடும்பத்தில் யாருக்கேனும் மார்பக புற்றுநோய் இருத்தல், போன்ற ஏதேனும் தொந்தரவு இருப்பின் அவர்கள் முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம். தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அரசு அறுவை சிகிச்சை நிபுணர்கள், மகப்பேறு நிபுணர்கள்,ஸ்கேன் மருத்துவர்கள்,பொது மருத்து வர்கள் என பலர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க உள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தென்காசி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப் பாளர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் முகாமில் மார்பக சுயபரிசோதனை முறைகள் விளக்கப்படுகின்றன. இம்முகாமில் தென்காசி மாவட்ட பெண்கள் கலந்துகொண்டு, மார்பக பிரச்சினைகள் இருப்பின் அவை ஆரம்ப நிலையிலேயே கண்ட றியப்பட்டு சரியான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் பயன்பெறலாம் என கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.

    • 800-க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்
    • நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த சகாயத் தோட்டம் கிராமத்தில் அமைந்துள்ள தொன்பாஸ்கோ வேளாண்மை கல்லூரியில் மென் இன் ஒயிட் மற்றும் போர்டிஸ் ஆஸ்பத்திரி இணைந்து மாபெரும் மருத்துவ முகாமை பேராயர் ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்றது.

    முகாமில் டாக்டர் குகநாத் சிவ கடாசம் கலந்து கொண்டார். இந்த மருத்துவ முகாமில் 800-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    உடன் மென் இன் ஒயிட் நிர்வாகிகள் ஜோசப், கென்னடி, தீபு ஆண்டனி, டாக்டர் பாஸ்கர்ராஜ், டாக்டர் இம்தியாஸ் ரிபாயி, வீரா பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மருத்துவ வசதி வேண்டி நிர்வாகத்தினர் வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூங்குளம் ஊராட்சியில் பள்ளத்தூர் மலையடிவாரப்பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் பொது மக்களுக்கு போதிய மருத்துவ வசதி கிடைப்பதில்லை என்றும் உடனடியாக தங்களுக்கு மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலி தினகரன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ருக்மணி மகேந்திரன் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து உடனடியாக ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ச.பசுபதியை தொடர்பு கொண்டு மருத்துவ வசதி வேண்டி நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்தனர்.

    உடனடியாக கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட இடத்தில் நடமாடும் மருத்துவக் குழு டாக்டர். பிரசாந்த் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்போது சுகாதாரத் துறையினர், கிராம மக்கள், ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டனர்.

    • தற்போது சென்னையில் மழைக்கால நோயான ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவி வருகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் முகாம்களில் மருத்துவர்கள், நர்சுகள், உதவியாளர்கள் இடம்பெற்று இருப்பார்கள்.

    சென்னை:

    சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைக்கால நோய்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறையும், மாநகராட்சியும் இணைந்து நாளை (சனிக்கிழமை) மருத்துவ முகாம்கள் நடத்தும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

    அதன்படி நாளை ஒவ்வொரு வார்டிலும் ஒரு மருத்துவ முகாம் வீதம் 200 வார்டுகளிலும் 200 இடங்களில் முகாம் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் முகாம்களில் மருத்துவர்கள், நர்சுகள், உதவியாளர்கள் இடம்பெற்று இருப்பார்கள்.

    இதற்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்தும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்களுடன் இணைந்து முகாம்களில் பணியாற்றுகிறார்கள்.

    200 வார்டுகளிலும் எந்தெந்த இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும் என்ற விபரம் அனைத்து மண்டல அலுவலகங்களிலும், வார்டு அலுவலகங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது சென்னையில் மழைக்கால நோயான 'மெட்ராஸ் ஐ' வேகமாக பரவி வருகிறது. மருத்துவ முகாம்களில் கண்வலி, காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, டைபாய்டு, சேற்றுப்புண் உள்ளிட்ட வியாதிகள் தொடர்பாக பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்படும்.

    மேல் சிகிச்சை தேவைப்படுபவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்படுவார்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நில வேம்பு குடிநீரும் வழங்கப்படும். உப்பு-சர்க்கரை கரைசலும் வழங்கப்படும்.

    பொதுமக்கள் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்கும்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    • தற்போது சென்னையில் மழைக்கால நோயான மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகிறது.
    • சிறப்பு முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் .

    சென்னை:

    சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைக்கால நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறையும், மாநகராட்சியும் இணைந்து மருத்துவ முகாம்கள் நடத்தும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

    அதன்படி இன்று ஒவ்வொரு வார்டிலும் ஒரு மருத்துவ முகாம் வீதம் 200 வார்டுகளிலும் 200 இடங்களில் முகாம் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் முகாம்களில் மருத்துவர்கள், நர்சுகள், உதவியாளர்கள் இடம்பெற்று இருப்பார்கள்.

    200 வார்டுகளிலும் எந்தெந்த இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும் என்ற விபரம் அனைத்து மண்டல அலுவலகங்களிலும், வார்டு அலுவலகங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது சென்னையில் மழைக்கால நோயான 'மெட்ராஸ் ஐ' வேகமாக பரவி வருகிறது. மருத்துவ முகாம்களில் கண்வலி, காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, டைபாய்டு, சேற்றுப்புண் உள்ளிட்ட வியாதிகள் தொடர்பாக பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்படும். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள்.

    பொதுமக்கள் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்கும்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    • மழைக் காலங்களில் கவனிக்க வேண்டிய விசயங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் வழங்கினார்கள்.
    • மருத்துவ முகாம்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் கே.என்.நேரு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மேயர் பிரியா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    சென்னை:

    சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக அனைத்து வார்டுகளிலும் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார்.

    அதன்படி சென்னை முழுவதும் இன்று 200 இடங்களில் மருத்துவ முகாம் நடந்தது. மாநகராட்சி மருத்துவ துறையுடன் இணைந்து மக்கள் நல்வாழ்வு துறை டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் இந்த முகாமை நடத்தினார்கள்.

    காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம்கள் நடந்தன. பெரும்பாலான முகாம்களில் கூட்டம் அலைமோதியது.

    சேறு நிறைந்த தண்ணீரில் விளையாடியதால் சேற்றுப் புண்கள் ஏற்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தனர். அவர்களுக்கு மருந்து தடவி தொடர் சிகிச்சைக்கு மருந்தும் வழங்கினார்கள்.

    பலர் காய்ச்சல், இருமல், சளி போன்ற தொல்லைகளுக்காக சிகிச்சை பெற வந்திருந்தனர். அவர்களை பரிசோதித்து தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள்.

    முகாம்களில் நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டது. மழைக் காலங்களில் கவனிக்க வேண்டிய விசயங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் வழங்கினார்கள்.

    மருத்துவ முகாம்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் கே.என்.நேரு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மேயர் பிரியா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:-

    2006-ம் ஆண்டு உள்ளாட்சி துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது இதே போல் மழைக்காலத்தில் 155 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அப்போது 64 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றனர். அது இந்திய அளவில் சாதனையாக பதிவானது.

    இன்றும் 200 இடங்களில் நடந்து வரும் முகாம்களில் ஏராளமான மக்கள் பயன் அடைவார்கள்.

    கடந்த ஆண்டு மழை குறைவாக இருந்தது. பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு மழை அதிகமாக பெய்தும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொடர் நடவடிக்கையால் பாதிப்பு குறைவாக இருந்தது.

    கடந்த ஆண்டுகளில் மக்கள் பாதிப்புகளை சொல்ல திரண்டதை பார்த்தோம். இந்த ஆண்டு திரண்டு வந்து நன்றி சொல்கிறார்கள். மழை வெள்ளம் மறைந்து மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

    இரண்டே நாளில் மழை பாதிப்பில் இருந்து சென்னை விடுபட்டுள்ளது. தேவையான அளவு நிதியை முதல்-அமைச்சர் ஒதுக்கி தந்தாலும் அதை சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகள் பெருமை தேடி தந்துள்ளனர்.

    9-ந்தேதி பெரிய அளவில் மழை வரும் என்கிறார்கள். எவ்வளவு பெரிய மழையாக இருந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

    ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன் கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. விரைவில் அந்த பணியையும் செய்து முடித்து அடுத்த ஆண்டு நூறு சதவீதம் மழை பாதிப்பு இல்லாத வகையில் செய்து கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குளத்தூர் நாயக்கர் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களைத் தேடி மருத்துவம் முகாம் நடைபெற்றது.
    • மருத்துவ முகாமில் 927 நபர்கள் கலந்து கொண்டு உரிய பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையும், ஆலோசனைகளும் பெற்று சென்றனர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் குளத்தூர் நாயக்கர் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் முகாம் நடைபெற்றது.

    முகாமை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். முகாமில் புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி மணிமாறன் தலைமையில் மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

    முகாமில் கந்தர்வகோட்டை ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராய ர், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் ஐயா, குளத்தூர் நாயக்கர் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி ராணி மகாலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர் வைரக்கண்ணு, மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மருத்துவ முகாமில் 927 நபர்கள் கலந்து கொண்டு உரிய பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையும், ஆலோசனைகளும் பெற்று சென்றனர்.

    • வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 61 சிறப்பு மருத்துவ முகாம்களின் மூலம் 43,400 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    • 1.99 லட்சம் பயனாளிகள் கண்டறியப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வீரசோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான சிறப்பு மருத்துவ முகாமினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 61 சிறப்பு மருத்துவ முகாம்களின் மூலம் 43,400 நபர்களும், மக்களைத் தேடி மருத்துவத்தின் கீழ் 18,70 லட்சம் பயனாளிகள் பரிசோதனை செய்யப்பட்டு 1.99 லட்சம் பயனாளிகள் கண்டறியப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. நம்மை காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் 1298 நபர்கள் பயனடைந்துள்ளனர் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) சக்திவேல் பாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ஒன்றிய கவுன்சிலர் சவிதா தேவன் தலைமை தாங்கி கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த மருத்துவ முகாமில் கால் நடைகளுக்கு நோய் வராமல் தடுக்கும் தடுப்பூசி மற்றும் சினை மாடுகளுக்கு கால்நடை மருத்துவர் தில்லை தலைமையில் அடங்கிய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    இந்த முகாம் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் துணை தலைவர் சாமுடி வார்டு கவுன்சிலர் தேவன் கூட்டுறவு சங்க துணை தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
    • 533 கால்நடைகளுக்கு சிகிச்சை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை 14 கிராமங்களை உள்ளடக்கிய தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

    ஏலகிரி மலையில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் மக்கள் முக்கிய தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் ஆடு வளர்ப்பு, கறவை மாடுகள் வளர்பு, கோழி வளர்ப்பு, போன்ற கால்நடைகளை வளர்த்தல் பராமரிப்பு செய்து வருகின்றனர்.

    இதனால் ஏலகிரி மலையில் கால்நடைகள் பெருகி வருகின்றன ஏலகிரி மலையில் உள்ள 14 கிராமத்திற்கும் ஒரே ஒரு கால்நடை மருத்துவம் மட்டுமே உள்ளது. இது பழத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது.

    இந்நிலையில் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் நேற்று ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலையில் ராயனேரி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில், வேலூர் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் நவநீதகிருஷ்ணன், திருப்பத்தூர் உதவி இயக்குனர் மருத்துவர் முரளி முன்னிலையில், சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் ஏலகிரி மலை உதவி மருத்துவர்கள் கி. விஸ்வநாதன் மற்றும் அருணாச்சலரமணன், கால்நடை ஆய்வாளர் கி. பாஸ்கர் ஆகிய மருத்துவர்களால் 533 கால்நடைகளுக்கு மருத்துவம் பார்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் 90 மாடுகள், 140 வெள்ளாடுகள், 96 செம்மறி ஆடுகள், 200 கோழி, 7 நாய்களுக்கு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    • வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் தொடர்ந்து 2 முகாம்கள் நடத்தப்படும்.
    • 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் திருப்பூர் மண்டலம் - 2, வார்டு19, திருநீலகண்டபுரம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் முன்னிலையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமை மேயர் தொடங்கி வைத்து பேசியதாவது :- பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கச் செய்தல், நோய்களுக்கான பரிசோதனை மற்றும் உடல்நலம் குறித்த ஆலோசனை வழங்குதல், அதிநவீன பரிசோதனை சாதனங்களால் நோய்களை கண்டறிதல், நோய்கண்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தல், சுகாதார விழிப்புணர்வு கல்வி வாயிலாக உடல்நல மேம்பாடு மற்றும் தனிநபர் ஆரோக்கியத்தை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு "கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்" செயல்படும்.

    இத்திட்டத்தின் மூலம் தொடர்ந்து 2 முகாம்கள் நடத்தப்படும். இம்முகாம்கள் 26.11.2022 அன்று 1ம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்-24, ஈபி காலனி, அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் 3:12.2022 அன்று 4ம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்- 40 இடுவம்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சனிக்கிழமை தோறும் சிறப்பாக நடைபெறும்.

    பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி சுகாதாரமாக வாழ வாழ்த்துகிறேன் என்றார். தொடர்ந்து, 7 நபர்களுக்கு மக்களை தேடி மருத்துவ மருந்து பெட்டகம், 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் துணை மேயர் பாலசுப்ரமணியம், சுகாதார குழு தலைவர் கவிதா நேதாஜி கண்ணன், மாநகர நல அலுவலர் அலுவலர் கௌரி சரவணன், மண்டல தலைவர் கோவிந்தராஜ், மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×