என் மலர்
நீங்கள் தேடியது "கண்காணிப்பு கேமரா"
- கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தொடங்கி வைத்தார்.
- போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பல்லடம் பஸ் நிலையத்தில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவுசெய்தனர்.
பல்லடம்:
பல்லடம் பகுதியில், நடைபெறும் விபத்துக்கள் மற்றும் குற்றச் சம்பவங்களை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது குறித்தும், பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் நிறுவவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 18ந்தேதி" மாலைமலர் "நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பல்லடம் பஸ் நிலையத்தில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவுசெய்தனர். அதன்படி பல்லடம் பஸ் நிலையம் மற்றும் அம்மா உணவகம் பகுதியில் ரூ.1லட்சத்து15 ஆயிரம் மதிப்பில் 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நடமாட்டத்தை 24 மணி நேரமும் போலீசார்,நகராட்சி நிர்வாகம் மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.
இதற்கிடையே கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி, நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரகுமார், திமுக. நிர்வாகிகள் ஜெகதீஷ்,நடராஜ் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உடுமலை வழியாக 4 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- தினமும் நூற்றுக்கணக்கான ரெயில் பயணிகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
உடுமலை:
கோவை திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரெயில்வே நிலையம் உள்ளது. உடுமலை வழியாக 4 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான ரெயில் பயணிகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இங்கு வரும் பணிகளின் பாதுகாப்பை கருதியும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும் கண்காணிப்பு கேமரா வைக்க ெரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வருகிற 17-ந்தேதி முதல் கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்க இருக்கிறது
- ஒரு லாட்ஜில் சமீபத்தில் ஒரு கும்பல் அறை எடுத்து தங்கி இருந்து பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது உங்கள் அனைவருக்கும் தெரியும்
கன்னியாகுமரி, நவ.9-
கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த ஒரு கும்பல் அறை எடுத்து தங்கி இருந்து பலரிடம் பணம் இரட்டிப்பு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி முதல் கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் கன்னியாகுமரியில் உள்ள சிங்கார் இன்டர்நேஷனல் ஓட்டலில் நேற்று இரவு நடந்தது.
கூட்டத்துக்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
கன்னியாகுமரியில் 100-க்கும் மேற்பட்ட லாட்ஜ்கள் உள்ளன. இதில் ஒரு லாட்ஜில் சமீபத்தில் ஒரு கும்பல் அறை எடுத்து தங்கி இருந்து பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே இனி வரும் காலங்களில் லாட்ஜ்களில் அறை எடுக்க வருபவர்கள் பற்றி முழுமையாக அவர்களை பற்றிய விவரங்களை தெரிந்த பிறகு அறை கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் செல்போன் எண்கள் உண்மையிலேயே அவர்களுடையதுதானா? என்று பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஆதார்அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாள அட்டைகள் இல்லாமல் எந்த ஒரு நபருக்கும் லாட்ஜ்களில் தங்குவதற்கு அறை கொடுக்கக் கூடாது.
சந்தேகப்படும் படியான நபர்கள் யாராவது லாட்ஜூகளில் தங்கி இருந்தால் உடனடியாக போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதேபோல நீண்ட நாட்களாக தொடர்ந்து அதே லாட்ஜில் யாராவது தங்கி இருந்தால் அவர்களைப் பற்றிய விவரங்களையும் உடனடியாக போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஒரு சில லாட்ஜூகளில் நிறைய சமூக விரோத செயல்கள் நடந்து கொண்டிருப்பதாக போலீசுக்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சபரிமலை சீசன் தொடங்குவதற்கு முன் அனைத்து லாட்ஜ்களிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.
இது ஒன்றுதான் குற்றங்களை தடுக்க நிரந்தர தீர்வாகும். எனவே கண்காணிப்பு கேமரா இல்லாத லாட்ஜ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்தபட்சம் 90 நாட்களாவது கண்காணிப்பு கேமராவில் பதிவுகள் ஸ்டோர் ஆகி இருக்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு லாட்ஜூகளிலும் காவலாளிகளை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேசினார். இந்தக் கூட்டத்தில் கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, கன்னியாகுமரி லாட்ஜ் உரிமையாளர்கள், சங்க செயலாளர் வக்கீல் ராஜேஷ், துணைத் தலைவர் தாமஸ், பொருளாளர் ஜாண் கென்னடி, மற்றும் 100-க்கும் மேற்பட்ட லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
- பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் விநாயகர் கோவில் தெருவில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளோம்.
- சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் வாய்க்கால் மேடு தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி மனைவி காந்திமதி பல்லடம் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் விநாயகர் கோவில் தெருவில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளோம். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் 6 பேர் வீட்டின் முன்பு பொறுத்தி இருந்த 3 கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். கேமராக்களை உடைக்கும் முன்பு அதில் 6 பேர் உள்ளதாக தெரிகிறது. எனவே கண்காணிப்பு கேமராக்களை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சுமார் 26 ஆயிரம் மதிப்புள்ள 3 கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- அகரம்தென் சந்திப்பு சாலை, பொன்மார் சாலை உள்ளிட்ட 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார்.
- ஆயுதப்படை பயிற்சி மையத்திற்காக ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் இடத்தில் ஆக்கிரமிப்புகள் பெருகி வருகிறது.
வண்டலூர்:
வண்டலூரை அடுத்த வேடமங்கலத்தில் புறகாவல் நிலையம் மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் கண்டிகை சாலை, அகரம்தென் சந்திப்பு சாலை, பொன்மார் சாலை உள்ளிட்ட 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார்.
இதில் ஊராட்சி தலைவர் கல்யாணிரவி, திருப்போரூர் ஒன்றிய குழு தி.மு.க. தலைவர் இதயவர்மன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய முன்னாள் தலைவர் சம்பத்குமார், மாவட்ட கவுன்சிலர் கஜேந்திரன், போலீஸ் துணை கமிஷனர் ஜோஷ்தங்கையா, உதவி கமிஷனர் ரவிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் நெடுங்குன்றம் வனிதா ஸ்ரீசீனிவாசன், நல்லம்பாக்கம் லட்சுமணன், ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி, கீரப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணிரவி போலீஸ் கமிஷனரிடம் அளித்த கோரிக்கை மனுவில், புதிய புறக்காவல் நிலையத்தில் நிரந்தரமாக சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 2 போலீசாரை பணியமர்த்த வேண்டும், ஆயுதப்படை பயிற்சி மையத்திற்காக ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் இடத்தில் ஆக்கிரமிப்புகள் பெருகி வருகிறது. எனவே அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
- தீப விழாவை முன்னிட்டு, கோவில் பாதுகாப்புக்காக கட்டை கோபுரத்தில் சிசிடிவி கேமராக்கள் நேற்று காலை பொருத்தப்பட்டன.
- கோவில் பராமரிப்பு பொறுப்பை தொல்லியல் துறை ஏற்றதால், பக்தர்களிடம் மகிழ்ச்சி ஏற்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் 9 கோபுரங்கள், ஏராளமான மண்டபங்கள் இருக்கின்றன. இங்கு பழமையான தெற்கு கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.
இதற்கு அடுத்து 5-வது பிரகாரத்தில் தெற்கு கட்டை கோபுரம் அமைந்துள்ளது. 5 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தின் உயரம் 70 அடியாகும். தீப விழாவை முன்னிட்டு, கோவில் பாதுகாப்புக்காக கட்டை கோபுரத்தில் சிசிடிவி கேமராக்கள் நேற்று காலை பொருத்தப்பட்டன.
அப்போது கோபுரத்தில் இடம்பெற்றிருந்த காவல் தெய்வங்களான சண்டன், பிரசண்டன் உட்பட தெய்வங்களின் சிற்பங்கள் சேதமடைந்தன. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மாலிக் காபூர் படையெடுப்பில் கோவில் சிலைகள் சிதைக்கப்பட்டது நினைவுக்கு வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர், கோவிலை கையகப்படுத்தியபோது கோவில் நிர்வாகம், சிற்பங்கள் மற்றும் கோவில் பாரம்பரியம் காக்கப்படும் என தொல்லியல் துறையினர் கூறினர்.
ஆனால் கோபுர சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கோவில் பராமரிப்பு பொறுப்பை தொல்லியல் துறை ஏற்றதால், பக்தர்களிடம் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், காலமாற்றத்தில் கோபுர நுழைவாயில் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு கொடிசிற்பங்கள் சிதைந்து விட்டன.
கோவில் அதிகாரிகள் தங்குவதற்கு விடுதிகள் கட்டப்பட்டதில், ஆங்காங்கே துளைகள் போடப்பட்டு கல் மதில்சுவர்கள் சேதமடைந்தன. இப்போது கோபுர சிற்பங்கள் சேதமடைந்துள்ளன என்றனர்.
- பொதுமக்கள் பெரும்பாலான நேரங்களில் அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.
- கேமராக்களின் பதிவைக் கொண்டு குற்றவாளிகளை கண்டறிவதற்கு மிகவும் உதவியாக இருந்தது.
பல்லடம் :
பல்லடம் வட்டாரத்தில் உள்ள வீடுகளில், திருட்டு உள்பட குற்றச்சம்பவங்களைத் தடுக்க போலீசார் தீவிரம் காட்டுகின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:- முக்கிய சாலைகள், பொது இடங்கள், வணிக நிறுவனங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் குற்றச்செயல்கள் தடுக்கப்படுகின்றன.
மேலும் குற்றவாளிகள் எளிதில் போலீசாரிடம் சிக்குவதற்கு இவைகள் உதவிகரமாக இருக்கின்றன. வீடுகளில் ஆட்கள் இல்லாத சமயத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் கைவரிசை காட்டுகின்றனர். போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து வெளியூர் செல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டாலும் இதை, பொதுமக்கள் பெரும்பாலான நேரங்களில் அலட்சியப்படுத்திவிடுகின்றனர்.
வீடுகளின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதன் மூலம் வீடுகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை எளிதாகத் தடுக்க முடியும்.
திருப்பூரில் நடந்த சில கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை வீடுகளின் வெளிப்புறங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவைக் கொண்டு குற்றவாளிகளை கண்டறிவதற்கு மிகவும் உதவியாக இருந்தது.
எனவே வீடுகளில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவதோடு நில்லாமல் அவை முறையாக இயங்குகிறதா என்பதையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
- குற்ற செயலை தடுக்க நடவடிக்கை
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துடன் கேமராக்கள் இணைப்பு
திருப்பத்தூர்:
கந்திலி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடமான கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரி, கெஜல்நா யக்கன்பட்டி அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, ஆம்பள்ளி ரோடு, தோக்கியம் கூட்ரோடு, கந்திலி சந்தை போன்ற முக்கிய இடங்களில் குற்றங்களை தடுக்கவும் விபத்துக்களை குறைக்கவும் பொதுமக்கள் உதவியுடன் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 10 கண்காணிப்பு கேமரா க்கள் பொருத்தப்பட்டுள்ளன. நேற்று கேமராக்கள் தொடங்கி வைக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் விபத்துக்களை குறைக்கவும் 3-வது கண் கண்காணிப்பு கேமரா பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. கந்திலி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட 10 இடங்களில் தற்போது கேமராக்கள் அமைக்க ப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் நேரடியாக கந்திலி போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம் இதன் மூலம் மாவட்ட முழுவதும் குற்ற செயல் மற்றும் விபத்தில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
- வங்கி ஊழியர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்
- பின்பற்றாத வங்கிகள் மீது நடவடிக்கை
அரக்கோணம்:
அரக்கோணத்தில் இயங்கி வரும் ஏடிஎம் மையங்களில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் டவுன் போலீஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளர் கோபால் தலை மையில் நடைபெற்றது.
அப்போது 15 நாட்களுக்குள் அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அது செயல்பாட்டில் இருக்க வேண்டும், ஒவ்வொரு ஏடிஎம் மையங்களில் கண்டிப்பாக காவலாளிகள் அமர்த்தப்பட வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை போலீசார் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை 15 நாட்களுக்குள் அமல் படுத்தப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
இதனால் ஏடிஎம் மையங்களில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதோடு வங்கிகளில் ஏற்படும் கொள்ளை சம்பவங்க ளிலும் தடுக்க இது பெரும் உதவியாக இருக்கும் எனவும் கொள்ளை நடைபெறும் சம்பவங்கள் எளிதில் போலீசார் பிடிப்பதற்கும் இது உதவியாக இருக்கும்.
வங்கிகள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சிசிடிவி கேமராக்களை பார்வையிடும் போது பெயரளவில் மட்டும் இயங்கி வருகிறது.
- பாதுகாக்கும் காவலாளியாக நினைத்து பொருத்தி பரா மரிக்க வேண்டும்.
தாராபுரம் :
தாராபுரம் நகராட்சி பகுதியில் நகராட்சி போலீசார், மக்கள் பங்களிப்போடு 252 சிசிடிவி. கேமராக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு கட்டுப்பாட்டு அறையை போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் பல்லடம் தாலுகா செம்மியம்பாளையம் ஊராட்சியில் கிராமத்தில் உள்ள பிரதான வீதிகள் நுழைவாயில், வளைவு என முக்கிய இடங்களில் நவீனமான 31 சிசிடிவி. கேமராக்கள் பயன்பாடுக்கு வந்தது. மாவட்டத்தில் இரு இடங்களும் பிற இடங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட போலீசார் கூறியதாவது:- இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாததாகவும், குற்றங்களை தடுப்பதில், பேருதவியாகவும் சிசிடிவி. கேமராக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. ஒவ்வொரு வழக்குகளில் குற்றங்கள் நடக்கும் போது, சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளப்படுத்தி காட்டி கொடுக்கிறது. சிசிடிவி.கேமராக்கள் குறித்து கிராமங்களில் கூட விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் நகரங்களில் மக்கள் இதன் பயன்குறித்து இன்னும் அறிவதில்லை.
நகை பறிப்பு, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களில் இடத்தில் விசாரணை நடத்தி அங்குள்ள சிசிடிவி கேமராக்களை பார்வையிடும் போது பெயரளவில் மட்டும் இயங்கி வருகிறது. ஏதோ பெயருக்கு வைக்காமல் தங்கள் உடைமைகளை பாதுகாக்கும் காவலாளியாக நினைத்து இவற்றை பொருத்தி பராமரிக்க வேண்டும்.
ஒரு முறை செலவு செய்து நவீனமான கேமராக்களை பொருத்தினால் காலத்துக்கும் அவை இருக்கும். குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றிணைந்து தங்கள் பகுதியில் சிசிடிவி.கேமராக்களை பொருத்தலாம்.
கடந்த ஆண்டு மாநகரில் நடந்த நகை கொள்ளை சம்பவம், வாலிபரை தலையை துண்டித்து கொலை செய்த வழக்கு, அசாம் மாநில பெண்ணை கொன்று சூட்கேசில்அடைத்து சாக்கடை கால்வாயில் வீசி சென்ற வழக்கு என பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து பிடிக்க போலீசாருக்கு பெரும் உதவியாக சிசிடிவி. கேமரா இருந்தது. திருப்பூர் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 12 கோடி ரூபாய் செலவில் 442 இடங்களில் ஆயிரத்து 200 சிசிடிவி. கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
அதுபோக மாநகராட்சி சார்பில் முக்கிய இடங்களில் சிசிடிவி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்பு, போலீசார், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து தங்கள் பகுதியில் சிசிடிவி.கேமராக்கள் பொருத்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சியின் மிகப்பெரிய வார்டாக 42 வது வார்டு உள்ளது. தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இந்த பகுதியில் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி ஏற்பாட்டின் பேரில் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் பாதுகாப்பு வசதிக்காக கே.வி.ஆர்.நகர் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி முதல் கட்டமாக கேவிஆர் நகர் பகுதியில் .வி.ஆர் நகர் மைதானம், அன்னமார் கோவில், கேவிஆர் நகர் விரிவு உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது.
இதனை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும் 42வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி தொடங்கி வைத்தார். மேலும் அவர் கூறுகையில் 42 வது வார்டு முழுவதும் இது போன்ற சிசிடிவி கேமராக்கள் பொருத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- மேற்பார்வை குழுவுக்கு கலெக்டர் உத்தரவு
- அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு எந் தவித இடையூறும் ஏற்படுத் தாத வகையில் பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, போலீஸ் நிலையங்களிலுள்ள நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர், பத்மநாபபுரம் சப்-கலெக் டர், மாவட்ட ஊராட்சித்தலைவர், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி உதவி இயக்குநர், தேசிய தகவல் மைய மேலாளர் (நிக்) கொண்ட மாவட்ட அள விலான மேற்பார்வை குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழு கூட்டம், கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், பத்மநாபபுரம் கோட்டத்திற்குட்பட்ட தக்கலை, குளச்சல், மணவாளக்குறிச்சி, இரணியல், கருங்கல் ஆகிய போலீஸ் நிலையங்களில் பொருத் தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வின் செயல்பாடுகள் குறித்து பத்மநாபபுரம் சார் ஆட்சியரும், நாகர் கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார், வடசேரி, ஆசாரிபள்ளம், நேசமணி நகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகள் குறித்து நாகர்கோவில் வருவாய் கோட்டாட் சியரும் ஆய்வு மேற்கொண்டதில் அதிக திறன் கொண்ட கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், பதிவான காட்சிகள் தெளிவாக இருக்க வேண்டுமென கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய கலெக்டர், அனைத்து போலீஸ் நிலையங்களிலும், கண்காணிப்பு கேமரா பொருத் தப்பட்டுள்ளது குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க மேற்பார்வை குழு வினருக்கு உத்தரவிட் டார்.
இக்கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 33 சட்ட ஒழுங்கு பராமரிக்கும் போலீஸ் நிலையங்களும்,4 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றும், போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், வெளிப்ப டைத்தன்மையாக போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வரு கிறது என்றும் எஸ்.பி. தெரி வித்தார்.
இக்கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட் சியர் சேதுராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, உதவி இயக்குநர் (பேரூராட்சி கள்) விஜயலெட்சுமி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, நகராட்சி ஆணையாளர்கள், நாகர் கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் நவீன்குமார், உசூர் மேலாளர் (குற்றவியல் ) சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.