என் மலர்
நீங்கள் தேடியது "இந்து முன்னணி"
- மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க திட்டம்
- குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்திற்கு பின்னர் நீதிபதி வேணுகோபால் கமிஷன் அமைக்கப்பட்டது
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்திற்கு பின்னர் அமைக்கப்பட்ட நீதிபதி வேணுகோபால் கமிஷன் பரிந்துரைகளின் படி புதிதாக ஆலயங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
ஆனால் தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று நடந்தது.
நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்பு நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் கண்ணன், சுப்பிரமணியன், பிரவீன், சுரேஷ் பாபு, தியாகராஜன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க திட்டமிடப்பட்டிருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- தமிழகத்தில் கோவில்களில் இருந்து வரும் வருமானம் முழுவதையும் அரசு எடுத்துக் கொள்கிறது.
- விளக்குகள் கூட ஏற்றமுடியாத பல்லாயிரம் கோவில்கள் அறநிலையத் துறையின் கீழ் உள்ளன.
திருப்பூர்:
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்திலிருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடம் 600 ஆண்டுகள் பாரம்பரியம் உடையது. தமிழ் மொழியை வளா்த்ததிலும் ஆன்மிகத்தை செம்மைப்படுத்தியதிலும் தொண்டை மண்டல ஆதீனத்தின் பங்கு அளப்பரியதாகும்.
தமிழகத்தில் கோவில்களில் இருந்து வரும் வருமானம் முழுவதையும் அரசு எடுத்துக் கொள்கிறது. ஆனால் தரிசனத்துக்காக வரும் பக்தா்களின் நலனின் அரசு துளியும் அக்கறை காட்டியது இல்லை. சிதிலமடைந்த கோவில்களை சீரமைப்பதில்லை. விளக்குகள் கூட ஏற்றமுடியாத பல்லாயிரம் கோவில்கள் அற நிலையத் துறையின் கீழ் உள்ளன. இந்தக்கோவில்கள் மீது எல்லாம் அக்கறை காட்டாமல் அலட்சியம் காட்டும் அறநிலையத் துறை ஆதீனத்தின் மீது பாா்வையை திருப்புவதன் நோக்கம் என்ன?
காஞ்சிபுரம் தொண்டை மண்டலத்தின் 233வது ஆதீனமாக திருச்சிற்றம்பலம் ஞானதேசிக பரமாச்சாரியாா் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறாா். இந்நிலையில் அறநிலையத் துறை அமைச்சரின் உறவினா் பல்லாயிரம் கோடி சொத்துள்ள ஆதீன மடத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் அவருக்கு தொல்லை கொடுத்து வந்த சூழலில் உடல் நலத்தைக் காரணம் காட்டி அவா் பதவியில் இருந்து விலகியுள்ளாா்.
இதைத்தொடா்ந்து காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்துக்கு செயல் அலுவலரை நியமித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். ஆகவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆதீனத்தை ஆக்கிரமிக்கும் இந்து சமய அறநிலைத் துறை செயல்களை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
- தக்கலையில் காவடி கட்டத் தடை-அனுமதியால் பரபரப்பு
- இன்று காலை தாமதமாக தொடங்கியது ஊர்வலம்
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று தக்கலை குமார கோவிலில் அமைந்துள்ள வேளிமலை முருகன் கோவில்.
இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன் நிறைவேற்ற விரதம் இருந்து காவடி எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இந்த ஊர்வலத்தில் போலீஸ், பொதுப்பணி என அரசு துறைகள் சார்பிலும் காவடி எடுப்பது உண்டு.
காவடி கட்டிய பின்னர் அதனை யானை மீது வைத்து ஊர்வலம் நடைபெறும். இந்த ஆண்டு ஊர்வலம் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று காலை நடை பெற்றது.முன்னதாக ஊர்வலம் செல்லும் சாலையோரம் காவடிகளை வரவேற்கும் விதமாக வாழைக்குலை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன.
ஊர்வலத்தில் பங்கேற்ப தற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று காவடி கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. தக்கலை போலீஸ் நிலையத்திலும் காவடி கட்டுவதற்கான பணிகள் மற்றும் பூஜை ஏற்பாடுகள் நேற்று மாலை யில் தொடங்கியது.
ஆனால் இரவு 9 மணிக்கு மேல் பணிகள் எதுவும் நடைபெறாமல் ேபாலீஸ் நிலையம் களையிழந்து காணப்பட்டது. இந்த சூழலில் போலீஸ் நிலையம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. இங்கு வைத்து காவடி கட்டக் கூடாது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தர விட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதனால் பாரதிய ஜனதா வினர் அதிருப்தி அடைந்த னர். அவர்களும், இந்து முன்னணி அமைப்பினரும் நள்ளிரவு 12 மணிக்கு தக்கலை போலீஸ் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இன்று அதிகாலை 2 மணி வரை அவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் சமர சம் செய்ய முயன்றனர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதே நேரம் போலீஸ் நிலையத்தில் காவடி கட்டும் பணியும் நடைபெறவில்லை. இத னால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இதற்கிடையில் போலீஸ் காவடி இல்லாமல், வேளி மலை முருகன் கோவிலுக்கு காவடி ஊர்வலம் செல்லக் கூடாது. நாளை (இன்று) காலை அனைத்து பகுதி களில் இருந்து எடுக்கப்படும் காவடிகளும் தக்கலை போலீஸ் நிலையம் முன்பு வரவேண்டும் என போரா ட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
இந்த சூழலில் இன்று காலை பல்வேறு பகுதிகளில் இருந்து யானையுடன் காவடி ஊர்வலங்கள் புறப்பட்டன. அவை தக்கலை போலீஸ் முன்பு வரக்கூடும் என்பதால் பல இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலங் காலமாக செந்தூர் முருகன் காவடி, தக்கலை காவல் நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வேளிமலை முருகன் சந்நிதியில் நிறைவு பெறும். ஆனால் இந்த ஆண்டு ஏற்பட்ட பிரச்சி னையால் இன்று அதிகாலை தொடங்க வேண்டிய பூஜை சடங்குகள் திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்படவில்லை.
எனவே அனைத்து முருக பக்தர்களும், பாரதிய ஜனதா நிர்வாகிகளும், பொது மக்களும் தக்கலை காவல் நிலையம் முன்பு நியாயம் கேட்க திரள வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
ஆண்டு தோறும் காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய காவடி ஊர்வலம் இன்று தொடங்கப்படாதது குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காலை 9.30 மணியளவில் போலீஸ் காவடிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் காவடி கட்டும் பணிகள் தொடங்கின.
இதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் புறப்பட்ட காவடிகள், வேளிமலை முருகன் கோவிலை நோக்கி ஊர்வலமாகச் சென்றன.
இந்த நிலையில் தக்கலைக்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில் பாரம்பரியமாக தக்கலை காவல் நிலையத்தில் இருந்து ்பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு அரசு அமைப்புகள் சார்பில் குமாரகோவிலுக்கு காவடிக்கட்டு செல்வது பாரம்பரியமாக நடை பெற்று வருகிறது
ஆனால் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் மேடைகளிலும் பொது வெளியிலும் மத ஒற்றுமையை பற்றி பேசி விட்டு இது போன்ற பாரம்பரியமான நிகழ்ச்சி களுக்கு திட்டமிட்டு தடை ஏற்படுத்தி வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாகமும் ஆளும் கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து செயல் படுகின்றனர். மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு போன்ற அதிகாரிகள் குறைந்த கால கட்டங்களில் மாவட்டத்தில் பணிபுரிவார்கள். ஆனால் உள்ளூர் அமைச்சர் அதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
- சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவா்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்படுவது கவலை அளிக்கும் விஷயம்.
- சமூக அக்கறையுடன் செயல்படும் நபா்களுக்கு காவல் துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்,டிச.20-
தமிழகத்தில் சமூக அக்கறையுடன் செயல்படும் நபா்களுக்கு காவல் துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் ஊழல், முறைகேடு, போதைப் பொருள் விற்பனை குறித்து நேரடியாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவா்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்படுவது கவலை அளிக்கும் விஷயம்.
திருக்கழுக்குன்றத்தில் பா.ஜ.க. இளைஞா் அணி பொறுப்பாளா் தனசேகா் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளாா். இவா் சில நாள்களுக்கு முன்பாக கஞ்சா பயன்படுத்திய நபரிடம் அது எங்கே கிடைக்கிறது, யாா் விற்பனை செய்கிறாா், யாா் ஆதரவு அளிக்கிறாா்கள் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு சமூக ஊடகங்களில் வெளியிட்டாா்.
இந்நிலையில், கஞ்சா வியாபாரிகளால் தனசேகா் தாக்கப்பட்டிருப்பது காவல் துறை மற்றும் அரசும் உடந்தையோ என்ற சந்தேகத்தை ஏழுப்புகிறது.
இத்தகைய சம்பவங்களில் ஈடுபடும் நபா்கள் யாா் என்று காவல் துறைக்குத் தெரிந்திருந்தும் பல நிா்பந்தங்களால் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஆகவே, சமூக அக்கறையுடன் செயல்படும் நபா்களுக்கு காவல் துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போலீசார் பள்ளி மாணவிகள் பாதுகாப்பு கருதி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை.
- இந்து முன்னணி தொழிற்சங்கம் சார்பில் தடையை மீறி சங்கம் அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தென்புறம் தினசரி மார்க்கெட் மற்றும் முப்புடாதி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை உள்ளது. இந்த இடத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அமைக்க பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போலீசிடம் அனுமதி கேட்டு மனு வழங்கப்பட்டது. ஆனால் போலீசார் பள்ளி மாணவிகள் பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் இன்று இந்து முன்னணி தொழிற்சங்கம் சார்பில் அந்த இடத்தில் போலீஸ் தடையை மீறி சங்கம் அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதனால் போலீசார் அந்த பகுதியில் இருபுறமும் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் வங்கதேசத்தை சோ்ந்தவா்கள் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளது தெரியவருகிறது.
திருப்பூர்:
வெளிநாட்டினா் ஊடுருவலைக் கண்காணிக்க இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கோவை விமான நிலையத்தில் அன்வா் உசேன் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது வங்கதேசத்தைச் சோ்ந்தவா் என்பதும், திருப்பூரில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளதும் தெரியவந்தது.
ஆகவே தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் வங்கதேசத்தை சோ்ந்தவா்கள் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளது தெரியவருகிறது. ஆகவே வெளிநாட்டினா் ஊடுருவலைக் கண்காணிக்கும் வகையில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சில ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வருகிறது.
- உடலில் பல இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு, அங்கிருந்து தலைமறைவானார்.
திருப்பூர் :
திருப்பூர், சாமுண்டிபுரம் சூரியகாந்தி வீதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 25). இந்து முன்னணி சாமுண்டிபுரம் பகுதி பொறுப்பாளர்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராம்பிரபு, (26), என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்தநிலையில் சுரேந்திரன், நேற்று சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, போதையில் வந்த ராம்பிரபு, சுரேந்திரனை கத்தியால் உடலில் பல இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு, அங்கிருந்து தலைமறைவானார்.
இதில் படுகாயம் அடைந்த சுரேந்திரன், திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான ராம்பிரபுவை தேடி வருகின்றனர்.
- வழிபாட்டுக் கூடம் அமைப்பதாக சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.
- கட்டடிம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள காளி வேலம்பட்டி பகுதியில், பெரும்பான்மை மக்கள் வசித்து வரும் பகுதியில், மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் தொழிற்சாலை கட்ட அனுமதி வாங்கி, வழிபாட்டுக் கூடம் அமைப்பதாக, ஏற்கனவே சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இது குறித்து நேற்று இந்து முன்னணி மேற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமையில் இந்து முன்னணியினர், பல்லடம் தாசில்தார் மற்றும் பல்லடம் போலீஸ் நிலையத்தில், அந்தக் கட்டடிம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.
- வடமாநில தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாக, கலந்தாய்வு கூட்டம் இந்து முன்னணி சார்பில் நடந்தது.
- திருப்பூர் எப்போதும் வந்தாரை வாழ வைக்கும் நகரம், அச்சமின்றி தங்கி பணியாற்றலாம்.
திருப்பூர் :
திருப்பூரில் கடந்த மாதம் வடமாநிலத்தவர் குறித்தும் அவர்களது செயல்பாடுகள் குறித்து தேவையற்ற பிரச்சினை கிளப்பும் வகையிலான வீடியோக்கள் வதந்தியாக பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்த போலீ சார், இச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூருக்கு வந்த, டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேரில் ஆய்வு செய்து, வடமாநிலத்தவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தார். இம்மாதம் 5-ந் தேதி கோவை - பீகார் இடையே கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.இந்த சிறப்பு ரெயிலில் 1,350 வடமாநிலத்தவர் ஹோலி பண்டிகை கொண்டாட தங்கள் சொந்த மாநிலங்களுக்கு பயணமாகினர்.
பண்டிகை கொண்டாட்டம் முடிந்ததுடன், திருப்பூரில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல், இயல்பு நிலை நிலவுதால், சொந்த மாநிலம் சென்ற பலரும் ெரயிலில் திருப்பூர் திரும்பி வருகின்றனர். திருப்பூர் வழியாக பயணிக்கும் பல்வேறு தினசரி, வாராந்திர ெரயில்களில் அதிக அளவில் வடமாநிலத்தவர் திருப்பூர் நோக்கி வந்து கொண்டுள்ளனர். தொழிலாளர்கள் மீண்டும் திரும்புவதால் திருப்பூர் தொழில் துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாக, கலந்தாய்வு கூட்டம் இந்து முன்னணி சார்பில் நடந்தது.மாநில அமைப்பாளர் பக்தன், மாநில பொதுசெயலாளர் கிஷோர்குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாநில தலைவர் காடஸ்வரா சுப்ரமணியம் பேசுகையில், திருப்பூர் எப்போதும் வந்தாரை வாழ வைக்கும் நகரம். அச்சமின்றி தங்கி பணியாற்றலாம். சமூக விரோதிகள் மற்றும் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவை சீர்குலைக்கும் முயற்சிக்கு யாரும் இடமளிக்க கூடாது. பிரிவினைவாதிகளை கண்டு பயப்பட தேவையில்லை என்றார்.
உத்திரபிரதேச இந்துமத் பொறுப்பாளர் சிவமூர்த்தி பேசுகையில், தமிழகத்தில் மொழி ஒரு பிரச்சினை இல்லை. தமிழர்கள் காசிக்கு வருகின்றனர். காசியில் இருந்து ராமேஸ்வரம் வந்து வணங்குகிறோம். எப்போதும் வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு வந்துவிடக்கூடாது என்றார்.
- பக்தர்கள் ஆண்டுதோறும் பாதயாத்திரையாக வந்து குண்டம் இறங்குவது வழக்கமாக நடக்கிறது.
- 90 சதவீதம் பக்தர்கள் பூக்குழிக்குள் இறங்க அனுமதிக்கப்படவில்லை.
பெருமாநல்லூர் :
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றது. திருப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்ர்கள் ஆண்டுதோறும் பாதயாத்திரையாக வந்து குண்டம் இறங்குவது வழக்கமாக நடக்கிறது. இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையினரின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தாலும், அலட்சியத்தாலும் குண்டம் திருவிழாவில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. குண்டம் இறங்குவதில் ஏராளமான பக்தர்கள் தீக்காயம் அடைந்தனர். இதன்காரணமாக 90 சதவீதம் பக்தர்கள் பூக்குழிக்குள் இறங்க அனுமதிக்கப்படவில்லை.
விரதம் இருந்து குண்டம் இறங்க வந்த ஏராளமான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது ஒருபுறம் இருக்க கோவிலுக்கு வெளியே தற்காலிக கடைகள் அமைக்க டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தன. இந்தநிலையில் கடைகள் அமைக்கப்பட்டு இருந்த ஒட்டுமொத்த இரும்பு கொட்டகையும் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு விஷயத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் இவ்வளவு அலட்சியம் காட்டியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இந்து அல்லாதவர்களுக்கு டெண்டர் கொடுக்கக்கூடாது. குண்டத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி காலை 11 மணிக்கு பெருமாநல்லூர் நால்ரோட்டில் இந்து முன்னணி சார்பில் பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவது என இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
- கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது.
- கடந்த 10-ந் தேதி கடைகளின் மேற்கூரைகள் சரிந்து மூவருக்கு காயம் ஏற்பட்டது.
பெருமாநல்லூர் :
பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. பக்தர்கள் பலர் குண்டம் இறங்கும் போது தீக்காயம் அடைந்தனர்.10-ந் தேதி கடைகளின் மேற்கூரைகள் சரிந்து மூவருக்கு காயம் ஏற்பட்டது. இதைக்கண்டித்து இந்து முன்னணி அமைப்பு சார்பாக பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்திருந்தது. இந்த நிலையில் கோவில் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் இந்து முன்னணி அமைப்பினருடன் பேச்சுவார்த்தை கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் ஆர்.எஸ்.எஸ்.கோட்ட பொறுப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில செயலாளர் செந்தில்குமார், கோவில் நிர்வாகத்தின் சார்பில் செயல் அலுவலர் காளிமுத்து, கோவில் மிராசுதாரர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே வருகிற 20-ந் தேதி இணை ஆணையர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என இந்து முன்னணியினர் அறிவித்துள்ளனர்.
- கிறிஸ்துவ சர்ச், ஜெப கூடங்களை புனரமைக்க விண்ணப்பிக்கும் வேண்டுகோளை அறிக்கையாக அளித்து வருகின்றனர்.
- தமிழகத்தில் தி.மு.க.,வின் ஆட்சி வந்த பின் கிறிஸ்துவர்களின் மதமாற்றம் தலைவிரித்தாடுகிறது.
திருப்பூர் :
இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு முதல் தமிழகத்தின் மாவட்ட கலெக்டர்கள், கிறிஸ்துவ சர்ச், ஜெப கூடங்களை புனரமைக்க விண்ணப்பிக்கும் வேண்டு கோளை அறிக்கையாக அளித்து வருகின்றனர். மதசார்பற்ற அரசு, மக்களின் வரி பணத்தை மத வழிபாட்டு தலங்கள் சீரமைப்பு நிதியாக அளிப்பது கூடாது.
இந்துகோவில்களை அரசு, தனது அதிகாரம் எனும் இரும்பு பிடிக்குள் வைத்து ஆட்டிப்ப டைத்து வருகிறது. பல்லாயிரம் கோவில்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருந்தும் ஒரு கால பூஜை கூட இல்லாத நிலை இருக்கிறது.ஆனால் தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில், கோவில்களை சீரமைக்க அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. சர்ச்சுகளுக்கு மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்க காரணம் கிறிஸ்துவ ஓட்டு வங்கி தான். தமிழகத்தில் தி.மு.க., வின் ஆட்சி வந்த பின் கிறிஸ்துவர்களின் மதமாற்றம் தலைவிரித்தாடுகிறது. சர்ச் புனரமைப்பு நிதி தருவது அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பானது. இந்த அறிவிப்பை அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்,