search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224655"

    • அத்திக்கடவு-அவினாசி திட்டம், திருப்பூர் மாநகராட்சிக்கு 4-வது குடிநீர் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது
    • தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் பிரச்சினைகளால் சிக்கி தவிக்கிறது.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன் நடைபெற்றது. தமிழகத்தில் விஷசாராயம், போலி மதுபானங்களால் இறப்பு, போதைப்பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்- ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:- தி.மு.க.ஆட்சியில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கள்ளசாராயம், போலி மது, போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. திருப்பூரில் பனியன் தொழில் நலிவடைந்துள்ளது. வேலைவாய்ப்பு இல்லாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்திக்கடவு-அவினாசி திட்டம், திருப்பூர் மாநகராட்சிக்கு 4-வது குடிநீர் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. 4-வது திட்ட குடிநீரை செயல்படுத்தினால் அ.தி.மு.க. அரசுக்கு பெயர் கிடைத்து விடும் என்று காலதாமப்படுத்துகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் பிரச்சினைகளால் சிக்கி தவிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் சிறப்பாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் வெகுண்டெழுந்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்துக்கு விஜயகுமார் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, என்.எஸ்.என்.நடராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, அம்மா பேரவை மாநில இணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், பகுதி செயலாளர்கள் திலகர்நகர் சுப்பு, மகேஷ்ராம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அம்மா பேரவை மாவட்ட தலைவர் அட்லஸ் லோகநாதன், வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிசாமி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • 12 மணி நேரம் வேலை என்ற சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
    • ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் தி.மு.க அரசு கொண்டுவந்துள்ள 12 மணி நேரம் வேலை என்ற சட்டத்தை திரும்ப பெற கோரி தஞ்சையில் சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார்.

    அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் கோதண்டபாணி, ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணை ப்பாளர் குருசாமி, சி.ஐ.டி.யூ விரைவு போக்குவரத்து சங்க மாநில துணை செயலாளர் வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் வடிவேலன் உள்ளிட்டோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.

    இதில் சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் அன்பு, முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் பேர்நீதி ஆழ்வார், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி, சுமை பணி சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் சாய்சித்ரா, அரசு போக்குவரத்து சிஐடியு சங்க பொருளாளர் ராமசாமி, டாஸ்மாக் சங்க மாவட்ட தலைவர் மதியழகன்,
    டி .ஆர். இ .யூ. சங்க தலைவர் ரஜினி, தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • களியக்காவிளை போலீசார் குழித்துறை பகுதியில் ரோந்து பணி
    • வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குழித்துறை பகுதியில் சட்டவிரோதமாக எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் பெரிய பெரிய பாறாங் கற்களை உடைத்து கடத்துவதாக களியக்காவிளை போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து களியக்காவிளை போலீசார் குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது குழித்துறை பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் ஜாக்கிஅமர் வாகனம் ஒன்று அனுமதி இல்லாமல் பாறைகளை உடைப்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர் மேலும் வாகனத்தின் உரிமையாளரும் நிலத்தின் உரிமையாளரும் தப்பி ஓடிவிட்டனர்.

    இதைத்தொடர்து பறிமுதல் செய்த வாகனத்தை போலீசார் காவல்நிலையம் கொண்டு சென்று வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்தனர் மேலும் வாகனத்தின் உரிமையாளர் யார்? நிலத்தின் உரிமையாளர் யார்? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழித்துறை பகுதியில் சமூக விரோதிகள் அதிகாரிகள் உதவியுடன் பெரிய பெரிய பாறைகளை உடைத்து கடத்துவது தொடர்கதையாக நடந்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, ரேஷன் அரிசி கடத்துவோர், விபசார தொழிலில் ஈடுபடுபவர் மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது.
    • 175 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் மாநகரில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வழிப்பறியில் ஈடுபடு–வோர், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, ரேஷன் அரிசி கடத்துவோர், விபசார தொழிலில் ஈடுபடுபவர் மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது.

    இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டிற்கு சிறையில் இருந்து வெளியே வர முடியாது.

    தமிழக சிறைகளில் 1000-க்கும் மேற்பட்டோர் குண்டாசில் கைதாகி சிறையில் உள்ளனர்.

    சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின் பேரில் இந்த ஆண்டு 175 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் 80 பேர் ரவுடிகள், 16 பேர் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள், 51 பேர் வழிப்பறி மற்றும் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள்.

    கடந்த ஆண்டில் 129 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டு இருந்தனர். கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 46 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சிவகங்கை நாலுகோட்டை கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டஉதவி மையம், சிவகங்கை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுகள் இணைந்து சிவகங்கை வட்டம் நாலுகோட்டை கிராமத்தில் மனித உரிமைகள் கருத்தரங்கு மற்றும் பொதுமக்களுக்கு அடிப்படை தேவை பற்றி விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தியது.

    மாவட்ட வக்கீல் சங்க செயலர் சித்திரைசாமி, சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு புள்ளியில் ஆய்வாளர் கண்ணதாசன், நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் ஆகியோர் பேசினர்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராணி நன்றி கூறினார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் பாஸ்கரன், மஞ்சுளா, செல்வி, பெண் காவலர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    • 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
    • கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், குப்பம் அருகே உள்ள காளிபாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன், அப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கல் குவாரிக்கு எதிராக போராடி வந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அவர் கொல்லப்பட்டார்.

    இதையடுத்து, குவாரி உரிமையாளர் செல்வக் குமார் (வயது 39), வேன் டிரைவர் சக்திவேல் (24), குவாரி ஊழியர் ரஞ்சித் (43) ஆகிய 3 பேரை க.பரமத்தி போலீசார் கைது செய்தனர்.

    இவர்களில் செல்வக்குமார், ஏற்கனவே குண்டர் தடுப்பு, சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சக்திவேல், ரஞ்சித் ஆகியோரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., சுந்தரவதனம், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அந்த பரிந்துரையை ஏற்று கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மீதமுள்ள இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    • தொழிலாளியை தாக்கியவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • சாதி பெயரைச் சொல்லி தாக்கியதாக கூறப்படுகிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் காசிலிங்கம்(வயது 48). விவசாய கூலி தொழிலாளி. இவர் கடந்த 8-ந் தேதி சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த அருள் என்பவரது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையில் ஈடுபட்டார். அப்போது அதே கிராமத்தில் வசித்து வரும் கண்ணுசாமியின் மகன் பூபாலன் என்பவர் தண்ணீர் சென்று கொண்டிருந்த மடையை அடைத்துவிட்டு அவரது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தொடங்கியுள்ளார். இது குறித்து பூபாலனிடம் காசிலிங்கம் கேட்டபோது, பூபாலன் சாதி பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி, காசிலிங்கத்தை தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காசிலிங்கம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது குறித்து தா.பழூர் போலீசில் காசிலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன், சாதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • மாநில செயல் தலைவர் கோதண்டம், வக்கீல்களும் பார் கவுன்சிலும் என்ற தலைப்பில் பேசினார்.
    • பத்திரப்பதிவு செய்ய வக்கீல்கள் மட்டும் அனுமதிக்க சட்டம் இயற்ற வேண்டும்.

    திருப்பூர்:

    அகில இந்திய வக்கீல்கள் சங்க திருப்பூர் மாவட்ட நான்காவது மாநாடு திருப்பூரில் நடந்தது. மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மணவாளன் வரவேற்றார்.மாநாட்டை மாநில பொது செயலாளர் முத்து அமுதநாதன் துவக்கி வைத்தார். செயலாளர் பொன்ராம் வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் வரதராஜ் வரவு செலவு அறிக்கையும் வாசித்தனர். மாநில செயல் தலைவர் கோதண்டம், வக்கீல்களும் பார் கவுன்சிலும் என்ற தலைப்பில் பேசினார்.

    மாநாட்டில் அகில இந்திய பார் கவுன்சில் வக்கீல்களுக்கான சேம நல நிதியை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மாநில அரசு, தமிழ்நாடு பார் கவுன்சில் வக்கீல்களுக்கு சேம நல நிதியை 10 லட்சமாக உயர்த்தியதை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.5 லட்சம் ரூபாய் நிரந்தர மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். பத்திரப்பதிவு செய்ய வக்கீல்கள் மட்டும் அனுமதிக்க சட்டம் இயற்ற வேண்டும்.

    பிறப்பு இறப்பு சான்று தொடர்பான வழக்குகள், வாடகை ஒப்பந்தம் தொடர்பான வழக்குகள், குழந்தைகள் தத்து கொடுப்பது தொடர்பான வழக்குகள் போன்றவற்றை கோர்ட்டில் தாக்கல் செய்து நடத்தும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

    திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் வக்கீல்களுக்கு அறைகள் கட்ட இடம் ஒதுக்கி அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். அனைத்து வக்கீல்கள் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் நூலகம், தபால் அலுவலகம், வங்கி, கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும்.தமிழக வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும். திருப்பூர் மாவட்ட கோர்ட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் பெஞ்ச், பார் கூட்டம் நடத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. சங்க மாவட்ட தலைவராக சுப்பராயன், துணைத்தலைவர்களாக கண்ணன், சேகர், தமயந்தி, கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்களாக மோகன், துணை செயலாளர்களாக பொன்ராம், நவீன், வினோத்குமார், கவுரி மற்றும் 7 கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    • விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வைத்து தோற்கடித்துள்ளனர்.
    • இது போன்ற கருத்து தெரிவித்தால் நாட்டை பிரிவினைவாதத்திற்கு கொண்டு சேர்க்கும் என்றார்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30 -வது மாநில மாநாடு நேற்று தொடங்கப்பட்டது. நாளை வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாடு தொடக்க நிகழ்ச்சியாக நாகப்பட்டினம் புத்தூரில் இருந்து நாகை அவுரிதிடல் வரை பேரணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொது செயலாளர் ஹன்னன் முல்லா மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரம் கணக்கான விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது:-

    பொதுக் கூட்டங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசும் மோடி, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலும் அளிப்பதில்லை. நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க முடியாத மோடியை விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வைத்து தோற்கடித்துள்ளனர். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தியாக இருக்க வேண்டுமென அமித்ஷா தெரிவிக்கிறார். பல கலாச்சாரம் உள்ள நாட்டில் இது போன்ற கருத்து தெரிவித்தால் நாட்டை பிரிவினைவாதத்திற்கு கொண்டு சேர்க்கும் என்றார்.

    • சர்வதேச நீதி தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இலவச சட்டவிழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
    • வசதியில்லாத காரணத்தால் ஒருவருக்கு நீதி கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் அரசே இலவசமாக இப்பணிகளை செய்து வருகிறது என்று நீதிபதி சுனில்ராஜா பேசினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள கற்குடி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் சர்வதேச நீதி தினத்தை முன்னிட்டு செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இலவச சட்டவிழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

    வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவருமான நீதிபதி சுனில்ராஜா தலைமை தாங்கினார். கற்குடி ஊராட்சி மன்ற தலைவா் முத்துபாண்டியன், துணைத் தலைவா் பாக்கியலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

    பணிநிறைவு சி.ஐ.டி. அண்ணா மலை வரவேற்றார். வழக்கறிஞா்கள் சுடர்முத்தையா, ராமலிங்கம், கார்த்திகைராஜன், பாத்திமாசித்திக் ஆகியோர் சட்ட நுணுக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி பேசினர்.

    நீதிபதி சுனில்ராஜா பேசியதாவது:-

    இந்த குழுவின் நோக்கம் என்னவென்றால் சட்டத்தின் முன் அனை வரும் சமம். ஏழை, வசதி படைத்தவன் என்ற வேறுபாடு கிடையாது. வசதியில்லாத காரணத்தால் ஒருவருக்கு நீதி கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் அரசே இலவசமாக இப்பணிகளை செய்து வருகிறது.

    நீண்ட காலமாக நடந்து வரும் வழக்குகளை மக்கள் நீதிமன்றம் சமரச தீர்ப்பாயம் மூலம் தீர்வு தேடிக்கொள்ளலாம். அப்படி தீர்வு கிடைக்கப் பெற்றவா்களுக்கு வழக்குக்காக தங்கள் செலவு செய்த தொகை உங்களுக்கு திருப்பி வழங்கப்படும். இந்த முகாமில் அதிமாக பெண்கள் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. என்றார்.

    நிகழ்ச்சியில் வழக்கறி ஞா்கள் மாலதி, சாமி, குமார், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் குத்தா லிங்கம், வேல்விழி, பத்மாவதி, அம்பிகா, வடகாசி, வசந்தகாளி, திரு மலைக்கு மார், வேலம்மாள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    ஊராட்சி செயலா் இசக்கி நன்றி கூறினார். ஏற்பாடு களை வட்ட சட்டப் பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணின் செய்திருந்தார்.

    • இந்தியாவில் அமலாக இருக்கும் புது சட்டம் பற்றிய தகவலை மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.
    • இது மக்களுக்கு வருவாய் ஈட்டித் தருவதோடு, சாலை ஒழுங்கை பின்பற்ற வைக்கும்.

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி சாலைகள் மற்றும் வீதிகளில் தவறாக பார்க் செய்யப்பட்டு இருக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க புது சட்டம் இயற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளபட்டு வருவதாக தெரிவித்து இருக்கிறார்.

    புது சட்டத்தின் கீழ் தவறாக பார்க்கிங் செய்யப்பட்டு இருக்கும் வாகனத்தின் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் எடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பலாம். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு தவறை இழைத்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்து, அதில் ரூ. 500-ஐ புகைப்படம் எடுத்து அனுப்பிய நபருக்கு வழங்கப்படும்.


    தவறான பார்க்கிங் செய்த நபரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து புகைப்படம் மூலம் தகவல் கொடுத்தவருக்கு ரூ. 500 சன்மானமாக வழங்கப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    புது சட்டம் பற்றிய தகவல்களை மத்திய மந்திரி நிதின் கட்கரியோ அல்லது அமைச்சக அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அந்த வகையில், இந்த சட்டம் இயற்றப்படுவது குறித்த பரிசீலனை நடைபெற்று வருவதாகவே எடுத்துக் கொள்ள வேணஅடும். ஒருவேளை இந்த தட்டம் அமலுக்கு வந்தால், சாலைகளில் பார்க்கிங் தொடர்பாக நடைபெறும் பல்வேறு பிரச்சினைகள் எதிர்காலத்தில் முற்றிலுமாக தவிர்க்கப்படும்.

    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டியுள்ளார்.
    • பொதுதேர்வு விடைதாள் திருத்தும் பணியையும் ஆசிரியர்கள் புறக்கணித்து உள்ளனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதியில் அ.ம.மு.க. முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார்.

    தொடர்ந்து தலைமை கழகபேச்சாளரும், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளருமான வக்கீல் குரு முருகானந்தத்தின் புதிய வழக்கறிஞர் அலுவலகத்தை குத்துவிளக்கு ஏற்றி தொ டங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக அம்மாவால் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் தி.மு.க. அரசால் கைவிடப்பட்டு உள்ளது. அம்மா உணவகம் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது.

    விடியல் அரசு என கூறி வரும் தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எவ்விதமான பயன்படக்கூடிய திட்டங்கள் எதுவும் இல்லை. தினமும் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.

    மின்வெட்டு மக்களை பெரிதும் பாதிப்படைய செய்து உள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 அறிவித்து ஓராண்டு முடிந்தும் இன்னும் வழங்க முடிய வில்லை. மக்களுக்கு எவ்வித வகையிலும் பயன் அளிக்காத திட்டங்கள்பல இடங்களில் செயல்படுத்த ப்படுகிறது.

    குறிப்பாக அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் திட்டங்களை தேர்வு செய்கின்றனர். மக்களுக்கு எவ்வித பயனும் இல்லாத வகையில் கடலூர் மற்றும் இளையான்குடி பகுதி யில் பொதுமக்களின் எதிர்ப்பை யும் கண்டு கொள்ளாமல் புதிய பஸ்நிலையம் அமைக்க ப்படுகிறது. தற்போது அரசு பொதுதேர்வு விடைதாள் திருத்தும் பணியையும் ஆசிரியர்கள் புறக்கணித்து உள்ளனர். இதனால் தி.மு.க. அரசிற்கும் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட தலைவர் தேர்போகி பாண்டி, மாநில அம்மா பேரவை செய லாளர் டேவிட் அண்ணா துரை, தமிழ்நாடு-பாண்டிச் சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் கார்த்திகேயன், மாநில சிறுபான்மைப்பிரிவு செயலாளர் துருக்கி ரபீக்ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் மற்றும் மாவட்ட, மானாமதுரை ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×