search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மா.சுப்பிரமணியன்"

    • குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.
    • மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தி உள்ளது.

    சென்னை:

    குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பொது சுகாதார அவசர நிலையாக கடந்த 14-ந் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தி வழிகாட்டி நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.

    விமான நிலையத்தில் அதன்பேரில் தமிழகத்திலும் பொது சுகாதாரத்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை தொற்று விமான பயணிகள் மூலம் மற்ற நாடுகளிலும் பரவ வாய்ப்பு இருக்கிறது.

    எனவே ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பயணிகளை கண்காணிக்க சென்னை விமான நிலையத்தில் நாளை முதல் முகாம் தொடங்கப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நேரடி விமான சேவை இல்லாவிட்டாலும் தொடர் பயணங்கள் மூலம் வரும் பயணிகள் கண்காணிக்கப்படுவார்கள்.

    ஸ்கேனிங், ஸ்கிரீனிங் சோதனை நடத்தப்படும். குரங்கம்மையின் அறிகுறியான கொப்புளங்கள் கண்டறியப்பட்டால் அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார்.

    பயமுறுத்தும் இந்த தொற்று பரவிய விதம் விசித்திரமானது. 1958-ல் டென்மார்க் தலைநகராமான கோபன் ஹேகனில் உள்ள ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட குரங்குகளிடையே இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இதனால் எம்பாக்ஸ் என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

    1970-ல் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் முதல் முதலாக மனிதர்களிடம் இந்த வகை வைரஸ் பரவியது கண்டறியப்பட்டது.

    சின்னம்மை, பெரியம்மை நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டாலும் இந்த வைரஸ் பெரியம்மை குடும்பத்தை சேர்ந்தது என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினார்கள்.

    இந்த வைரஸ் மனிதர்களுக்கு எப்படி பரவியது என்பது பற்றி ஆய்வு செய்ததில் எலி, அணில்களிடம் காணப்பட்ட இந்த வைரஸ் அவை மனிதர்களை பிராண்டு வது மற்றும் அவற்றை சமைத்து சாப்பிடுவது மூலம் பரவியது தெரியவந்தது.

    தொற்று ஏற்பட்டு 5-ல் இருந்து 21 நாட்களில் இதன் அறிகுறிகள் உடலில் வெளிப்படும். அம்மை நோய் வந்தால் எப்படி உடல் முழுவதும் கொப்புளங்கள் தோன்றுமோ அதே போல் தான் வரும்.

    கூடவே காய்ச்சல், இருமல், உடல் வலியும் இருக்கும். அந்த கொப்புளங்கள் அம்மை நோயை போலவே 4 வாரங்களுக்குள் காய்ந்து விழுந்து விடும்.

    கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உடையவர்கள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு தாக்குதல் தீவிரமாக இருக்கும்.

    நுரையீரல் பாதிப்பு, மூளைக்காய்ச்சல், பார்வை குறைபாட்டையும் ஏற்படுத்தும் என்கிறார்கள்.

    மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவும். என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

    இந்த நோய் தொற்று ஏற்பட்டவரின் எச்சில் மற்றும் விந்து வழியாக பரவும், உடல் முழுவதும் தோன்றிய கொப்புளங்கள் காய்ந்து முற்றிலுமாக குணமாகும் வரை அடுத்தவருக்கு பரவலாம் என்கிறார்கள்.

    கடந்த காலங்களில் இந்த நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக குறைந்த சதவீதத்தில் இருந்துள்ளது. ஆனால் கடந்த ஓராண்டில் காங்கோ நாட்டில் 18 ஆயிரத்து 245 பேருக்கு குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டது. அதில் 919 பேர் உயிரிழந்துள்ளார்கள். இறப்பு 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    இந்த நாட்டுக்கு அருகில் இருக்கும் கென்யா, புருண்டி, ருவாண்டா, உகாண்டா ஆகிய நாடுகளில் இந்த தொற்று பரவி வருகிறது.

    குரங்கம்மை கண்டவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இடைவெளி, முகக்கவசம், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். எனவே விழிப்புணர்வு அவசியம் என்கிறார்கள்.

    • இந்தியாவில் குரங்கம்மை நோய் இல்லை.
    • குரங்கம்மை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சைதாப்பேட்டை மருத்துவமனை, கொளத்தூர் புறநகர் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளை மேம்படுத்தி தந்து கொண்டிருக்கிறார்.

    வருகிற ஜனவரி மாதம் பணிகள் நிறைவடைந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மருத்துவமனையை திறக்க உள்ளார்.

    இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் மருத்துவ காப்பீட்டு திட்டம் மிகச் சிறப்பான வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் பயன்பாட்டில் உள்ளது .

    கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவ மனையில் இதுவரை 3 லட்சத்து 13 ஆயிரத்து 864 புறநோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

    உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டு உள்ளது மத்திய மந்திரி நட்டா இந்தியாவில் குரங்கம்மை நோய் இல்லை என்று அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை.

    தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு ஆடைகள் தவிர்த்து தெரிகிற உடல் பகுதியில் முகம் போன்ற பகுதியில் குரங்கம்மை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கிறார்கள். யாருக்காவது அந்த பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள்.

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் செய்த சாதனையே தெரிந்து வைத்திருக்கவில்லை. அம்மா கிளினிக் இருந்தது. அம்மா மருந்தகம் என்று இல்லை. அம்மா உப்பு கடை என்று வைத்திருந்தார்கள்.

    ஒன்றிய அரசின் மக்கள் மருந்தகம் தமிழ்நாட்டில் 800-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது, அம்மா மருந்தகம் என்று எந்த காலத்திலும் வைக்க வில்லை, ஜெயக்குமார் எந்த நினைப்பில் சொல்கிறார் என்று தெரியவில்லை.

    அம்மா கிளினிக் இருந்தது, ஒன்றிய அரசாங்கத்தின் நிதி ஆதாரத்தோடு ஒரு வருடத்திற்கு உண்டான அரசாணை பெற்று ஒரே ஒரு மருத்துவர் நியமனம் பெற்று எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாக மருத்துவமனைகளை வைத்தார்கள்.

    அம்மா கிளினிக், பெரிய கட்டமைப்போடு விளங்கி யது போலவும், நூற்றுக் கணக்கான மருத்துவர்கள் அந்த மருத்துவமனையில் வேலை செய்தது போலவும், அம்மா கிளினிக் மூடி விட்டதால் தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு சிதைந்ததைப் போல எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

    அம்மா கிளினிக்கும், அம்மா மருந்தகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அவர்கள் காலத்தில் வந்தது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகிறார்.

    தைப்பொங்கல் அன்று ஆயிரம் இடங்களில் மக்கள் மருந்தகம் பயன்பாட்டிற்கு வரும், இந்த திட்டத்திற்கும் அம்மா மருந்தகம் என்ற பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைதான் ஜெயலலிதா அம்மையார் திறந்து வைத்து கல்வெட்டு வைத்துக் கொண்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு இறப்பு இல்லாமல் சாதனை படைத்துள்ளது.
    • மருத்துவமனையை பொறுத்தவரை என்ன தேவைகளாக இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.

    மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சென்று உள்ளார். அங்கு சத்திரக்குடியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுவதை பார்வையிட முடிவு செய்தார். 10 கிராமங்கள் வழியாக சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார். கடந்த 3 ஆண்டுகளாக அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு இறப்பு இல்லாமல் சாதனை படைத்துள்ளது.

    இதை அறிந்ததும் அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்களை நேரில் அழைத்து பாராட்டினார். தொடர்ந்து அவர்களுக்கு தேநீர் விருந்து அளித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். அவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இதே போல் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு சாதனை படைக்க வேண்டும் என்றும், மருத்துவமனையை பொறுத்தவரை என்ன தேவைகளாக இருந்தாலும் தெரியப்படுத்துங்கள். உதவுவதற்கு முதலமைச்சர் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

    அதைத்தொடர்ந்து பரமக்குடி அரசு மருத்துவ மனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் சரிவர இல்லை. முக்கியமாக சி.டி.ஸ்கேன் அறை சுத்தமாக இல்லாமல் நோய் தொற்று ஏற்படும் வகையில் இருந்தது. இதனால் மருத்துவமனை தலைமை மருத்துவர் தன் பணியில் சரிவர இல்லாமல் பொதுமக்கள் சுகாதாரத்திற்கு பாதகம் ஏற்படும் வகையில் பணி செய்ததால் அவரை உடனடியாக பணிமாற்றம் செய்யுமாறு உத்தரவிட்டார். மற்றும் இணை இயக்குனர் பணியில் சுணக்கம் காட்டியதற்கு விளக்கம் கேட்கும்படி மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனருக்கு உத்தர விட்டார்.

    • மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்.
    • ஆகஸ்ட் 25-ந் தேதி, மடிப்பாக்கத்தில் நடக்க உள்ளது.

    சென்னை:

    மடிப்பாக்கம் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் நடத்தும் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கான லோகோவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

     சென்னையின் முன்னணி தன்னார்வ அமைப்பாகிய மடிப்பாக்கம் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் (Madipakkam Social Service Trust), தமது சேவையின் 350-ஆவது வாரத் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 25-ந் தேதி, மடிப்பாக்கத்தில் மாபெரும் மாரத்தான் நிகழ்ச்சியை நடத்த உள்ளது.

    இந்த போட்டி தொடர்பான சிறப்பு லோகோவை, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் குடும்பமாக பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சியில் ஒரு கிலோ மீட்டர், மூன்று கிலோ மீட்டர் மற்றும் ஐந்து கிலோ மீட்டர் என மாரத்தான் ஓட்டங்கள் மூன்று விதமாக நடைபெறும்.

    மரம் நடுதலை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட உள்ள இந்த மாரத்தான் போட்டியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மிகப்பெரிய விழிப்புணர்வு பதிவை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

    அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த மாரத்தான் ஓட்டம், காலை 8.30 மணிக்கு முடிவடைகிறது. கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது.

    கடந்த ஏழு ஆண்டுகளாக, மரங்கள் நடும் பணியில் தீவிரமாக செயலாற்றி கவனம் ஈர்த்து வரும் இந்த டிரஸ்ட், 60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் மடிப்பாக்கம், புழுதிவாக்கம், மூவரசம்பேட்டை, வேளச்சேரி, சுண்ணாம்பு குளத்தூர், பள்ளிக்கரணை போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள், 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் 7500-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு அவற்றை பத்திரமாகப் பராமரித்து வருகிறது.

    மேலும், இரண்டு பெரிய நீர் நிலைகளை தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தூர்வாரியும் உள்ளது.

    ஒவ்வொரு வார இறுதியிலும் மரம் நடுதல் மற்றும் நட்ட மரங்களைப் பராமரிக்கும் பணிகளை துரிதமாக கையாண்டு வருகிறது.

    அந்த வகையில் இவ்வமைப்பின் 350-வது வார சேவையைக் கொண்டாடும் விதமாக இந்த மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.msstrust.org

    • ஒவ்வொரு பரிசோதனைக்கும் தனித்தனி கட்டணங்கள் உள்ளது.
    • குற்றச்சாட்டுகளால் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும்.

    சென்னை:

    சைதாப்பேட்டையில் வடமாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் அந்த சிறுவனின் சகோதரிக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க ரூ.1000 லஞ்சம் கொடுத்ததாக அந்த சிறுமியின் தந்தை தெரிவித்த தகவல் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்ட போது கூறியதாவது:-

    எழும்பூர் ஆஸ்பத்திரியில் லஞ்சம் கேட்டார்கள் என்பது முற்றிலும் தவறா னது. வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் நமது அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற ரூ.1000 டெபாசிட் வாங்கப்படும். அதன் பிறகு பரிசோதனைகள் தேவைப் பட்டால் அதற்கும் ஒவ்வொரு பரிசோதனைக்கும் தனித்தனி கட்டணங்கள் உள்ளது.

    இது எல்லா மாநிலங்களி லும் நடைமுறையில் இருப் பதுதான். இந்த உண்மையை உணராமல் திரித்து சொல் வது வேதனை அளிக்கிறது. இந்த மாதிரி தவறான குற்றச்சாட்டுகளால் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும். அரசு ஆஸ்பத்திரி கள் நமது ஆஸ்பத்திரி. அவை சிறப்பாக நடக்க எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.

    சைதாப்பேட்டை சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலக்க வில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தொழிலாளர் முகாமில் 625 குடும்பங்கள் வசிக்கிறது. மொத்தம் 1300 பேர் இருக்கிறார்கள். வேறு யாருக்கும் உடல்நல பாதிப்பு இல்லை என்பதை வீடு வீடாக சென்று சோதனை நடத்தி கண்டறியப்பட்டு உள்ளது. சிறுமி உயிரிழந்த தற்கு காரணம் என்ன என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொசுக்கள் மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • குழந்தைகளிடையே சளி மற்றும் காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடுமையான வெப்பம், திடீர் மழை என்று பருவநிலை மாறி மாறி வருகிறது. இதனால் கொசுக்கள் மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தற்போது பள்ளிகளும் திறந்துள்ளதால் குழந்தைகளிடையே சளி மற்றும் காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.

    இது தொடர்பாக குழந்தைகள் நல முதுநிலை மருத்துவ நிபுணர் டாக்டர் வில்வநாதன் கூறியதாவது:-

    பருவ காலங்கள் மாறும்போது இன்ப்ளூ யன்ஸா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள், டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் பரவலாக காணப்படும். அந்த வகையில் தற்போது குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவர்களிடையே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பலருக்கு ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன.

    கடந்த வாரம் வரை இத்தகைய நிலை இல்லை. ஓரிரு நாட்களாக தான் சூழல் மாறி இருக்கிறது. காய்ச்சல் அறிகுறிகளுடன் நேற்று (17-ந்தேதி) மருத்துவ மனைகளை நாடியவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் 3 மடங்கு உயர்ந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    இது சீசன் காய்ச்சல்தான். பருவநிலை மாறும்போது இந்த மாதிரி தொற்று வியாதிகள் ஏற்படுவது வழக்கமானதுதான். கடந்த ஆண்டுகளை விட அதிகமாக பரவுவதாக வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை. எனவே மக்கள் தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம்.

    பொதுவாகவே பருவ நிலைகள் மாறும்போது முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சிய நீரை குடிப்பது, சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிப்பது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். அது மட்டுமல்ல, காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை களுக்கு சென்று மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மருத்துவமனையில் நடைபெறும் புதிய கட்டிடப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அமைச்சர் சந்தித்து நலம் விசாரித்தார்.

    அவினாசி:

    கோவையில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை அவிநாசி அரசு பொது மருத்துவ மனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மருத்துவ மனையில் உள்ள மருந்தகம், ஆண்கள் - பெண்கள் மருத்துவ பகுதி, அறுவை சிகிச்சை அரங்கம் , மருத்துவ மனையில் நடைபெறும் புதிய கட்டிடப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    மேலும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

    • நீட்தேர்வு முறைகேடு குறித்து பல வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.
    • நீட் தேர்வில் முறைகேடு இல்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போன்றது என்றார்.

    சென்னை:

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    தற்போது நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இந்தியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் சமுதாயம் பொங்கி எழுந்து வருகிறது.

    நாடுமுழுவதும் 23 லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற தகவல் முறையாக தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறு இதில் பல குழப்பங்கள் இருக்கின்றன.

    நீட் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போன்றது.

    நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. தமிழக அரசின் சட்டத்துறை சார்பிலும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    • 1021 காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • இந்திய அளவில் மும்பைக்கு அடுத்தபடியாக புற்று நோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அமைய உள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத் தொடக்க விழா மற்றும் மருத்துவத்துறையில் ரூ.3.63 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் 4 மாவட்டங்களில் சாய, தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் போன்ற காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 18 வயது மேல் நிரம்பிய ஆண், பெண் அனைவருக்கும் பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் காணொளி மூலம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    ஆண்களை பொறுத்தவரை போதை பொருட்களால் வாய் புற்று நோய் பாதிப்பு ஏற்படும் நிலையும், பெண்களுக்கு மார்பகம், கருப்பை புற்று நோய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    புற்றுநோய் 4 நிலைகள் அடிப்படையில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் முதல் 2 நிலைகளில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். 4 மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், தலைமை மருத்துவமனை என 1,397 மருத்துவ கட்டமைப்பு மூலம் புற்றுநோய் கண்டறியும் பணிகள் நடைபெறவுள்ளது.

    இதற்கு அடுத்த படியாக கரூர், அரியலூர் மாவட்டத்தில் தொடங்க கோரிக்கை வந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் குளிர் சாதனப் பெட்டியில் ஏற்பட்ட சின்ன மின்கசிவு காரணமாக தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மருத்துவ கழிவு எரிப்பது சுகாதார சீர்கேடுகள் ஏற்படுத்த கூடிய ஒன்று. வடகிழக்கு பருவமழை, சளி, காய்ச்சல் பாதிப்பு கருதி தான் கோவை மாவட்ட கலெக்டர் முககவசம் அணிய பரிந்துரை செய்துள்ளார்.

    ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 சதவீதம் காலி பணியிடங்கள் இருப்பது உண்மை. அதை நிரப்ப 1021 காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்திய அளவில் மும்பைக்கு அடுத்தபடியாக புற்று நோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அமைய உள்ளது. இதற்காக ரூ.220 கோடியில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. 2025-க்குள் காசநோய், தொழுநோய் இல்லா தமிழகத்தை உருவாக்க முயன்று வருகிறோம். அதை போலவே புற்று நோய் பாதிப்புகளை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆண்டும் 38 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிரிழப்பு இல்லை.
    • உயிரிழப்பு இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் உயிர்சேதம் எதுவுமில்லாமல் தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்துள்ளது.

    இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிப்பதில் தீக்காயத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

    கடந்த 2020-ம் ஆண்டு 15 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. ஒருவர் உயிரிழந்தார். 2021-ல் 30 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டும் 38 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிரிழப்பு இல்லை.

    இரண்டு ஆண்டுகளாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் உயிரிழப்பு இல்லாமல் தடுக்க தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவ மனைகளில் மொத்தம் 750 படுக்கைகளும் சிறப்பு தீக்காயம் வார்டுகளும் அமைக்கப்பட்டிருந்தன.

    சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் மட்டும் லேசான தீக்காயங்களுடன் 15 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். தமிழகம் முழுவதும் 30 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் பாதிப்போ உயிர்சேதமோ ஏற்படவில்லை. உயிரிழப்பு இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்தது.

    இதற்கு முக்கிய காரணம் விழிப்புணர்வுதான். காவல்துறை, தீயணைப்புத் துறை மாசு கட்டுபாட்டு வாரியம், சேவை துறைகள், பள்ளி ஆசிரியர்களின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருமலைகோவில் சாலை வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் சுற்றளவில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
    • தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் நடை பயிற்சி மேற்கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலையில் தென்காசி வந்தார். வந்த உடன் வழக்கம்போல் தனது பாணியில் காலையிலேயே நடைபயிற்சி மேற்கொண்டார்.

    மேலகரம் அடுத்துள்ள மின்நகர் காசிமேஜர்புரம், இலஞ்சி திருமலைகோவில் சாலை வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் சுற்றளவில் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வே.ஜெயபாலன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் நடை பயிற்சி மேற்கொண்டனர்.

    • நீட் தேர்வில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

    சென்னை :

    சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் 104 மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் மூலம் நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் மன உளைச்சலை தவிர்க்கும் வகையில் மனநல ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர் கோவிந்தராவ், மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலாளர் முத்துச்செல்வன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம், 104 தொலைபேசி மருத்துவ மற்றும் தகவல் மையம் 24 மணி நேர சேவை மூலம் 'நீட்' தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பதற்கு ஆலோசனை வழங்கும் விதமாக தொடங்கி வைக்கப்பட்டது. 40 மன நல ஆலோசகர்கள் பணியில் அமர்த்தப்பட்டு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    2022-ம் ஆண்டில் 60 மனநல ஆலோசகர்களை கொண்டு இச்சேவை விரிவுபடுத்தப்பட்டது. இந்த ஆண்டில் (2023) நட்புடன் உங்களோடு மனநல சேவை 14416 தொடங்கப்பட்டு கூடுதலாக 20 மனநல ஆலோசகர்கள் மற்றும் 2 மனநல மருத்துவர்களை கொண்டு வலுப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் '104' மருத்துவ உதவி தகவல் மையம் என்பது தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நோக்கத்தின்படி, இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதிய 1,44,516 பேருக்கு மே 18-ந்தேதி ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதன் மூலம் இதுவரை 54,374 மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. அதில் 177 பேர் அதிக மனநல அழுத்தத்தில் உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களிடம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

    நீட் தேர்வில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 68,823 தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளின் விவரங்கள் நீட் தேர்வு நிர்வாகத்திடம் கேட்கப்பட்டு உள்ளது.

    அவர்களின் விவரங்கள் கிடைத்தவுடன் அந்த மாணவர்களை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.

    இதுமட்டுமன்றி நீட் தேர்வு முடிவில் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த மாணவர் பிரபஞ்சன் ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் நான்கு இடங்கள் தமிழ்நாட்டை சேர்ந்த 4 மாணவர்கள் இடம் பிடித்துள்ளது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. இதன் மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் தமிழ்நாட்டில் கிடைக்கிறது என்பது உறுதியாகி உள்ளது.

    மத்திய அரசு 15 சதவீதத்துக்கான கலந்தாய்வு நடத்தி முடித்தவுடன்தான் தமிழ்நாடு அரசு மீதமுள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டியுள்ளது. இதனால் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்த ஆண்டு ஒரே நேரத்தில் 15 சதவீதம் மற்றும் 85 சதவீத மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இதற்கான விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் உடனடியாக வழங்கினால், கடந்தாண்டு ஏற்பட்ட காலதாமதத்தையும் தவிர்த்து உடனடியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விரைந்து முடிக்கப்படும்.

    மேலும் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் தேர்வுக் குழு செயலாளர் ஆகியோரிடம் அடுத்த வாரமே மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கும் பணியை தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் காலதாமதம் இன்றி உடனடியாக மருத்துவ மாணவர்கள் சேர்க்கை உறுதிபடுத்தப்படும்.

    மேலும், இந்த ஆண்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 450 இளங்கலை மருத்துவ படிப்பு இடங்களும், அரசு புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லூரியில் 50 பல் மருத்துவ இடங்களும், கே.கே.நகரில் உள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் 50 இளங்கலை மருத்துவ இடங்கள் என மொத்தம் 550 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×