என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்ணெய்"

    • டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
    • வரிவிதிப்பு முறை ஏப்ரல் 2ம் தேதி அமலுக்கு வரும்.

    வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் அல்லது எரிவாயு வாங்கும் நாடுகள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், வெனிசுலா நாடு அமெரிக்காவுக்கு எதிரியாக செயல்பட்டு வருகிறது. வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த வரிவிதிப்பு முறை ஏப்ரல் 2ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு காரணமாக சீனா, ஸ்பெயின், இந்தியா, ரஷியா, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் வெனிசுலா ஏற்றுமதி செய்த ஒட்டுமொத்த எண்ணெயில் சீனா 68 சதவீதம் அளவுக்கு எண்ணெய் வாங்கியுள்ளது அமெரிக்க எரிசக்தித் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

    வெனிசுலாவுக்கு எதிராக வரிவிதிப்பு அறிவித்துள்ள போதிலும், அமெரிக்கா தற்போதும் அங்கிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த ஜனவரியில் அமெரிக்கா 8.6 பாரெல் எண்ணெயை வெனிசுலாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சிலுவையின் கீழ் வைக்கப்பட்ட பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் தேங்கி இருந்தது.
    • குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அந்தநபரின் வீட்டில் குவிந்தனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது பாரத் நகர். இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவர் தனது வீட்டில் இயேசு சிலுவை ஒன்றை சுவற்றின் மீது மாட்டி வைத்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி இவரது வீட்டின் சுவர் முழுவதும் எண்ணெயாக காணப்பட்டது. எப்படி இங்கு எண்ணெய் வந்தது. யாரும் சுவற்றில் எண்ணெயை தடவாதபோது இது எப்படி என யோசித்தார்.

    தொடர்ந்து வீட்டில் மாட்டியிருந்த இயேசு சிலுவையை உற்று நோக்கினார். அப்போது சிலுவையில் இருந்து தேங்காய் எண்ணெய் வழிந்ததாக தெரிகிறது. இதனை கண்டதும் ஆச்சரியம் அடைந்தார்.

    உடனே சிலுவையின் கீழ் ஒரு பாத்திரத்தை வைத்துள்ளார். பின்னர் மறுநாள் பார்த்தபோது அந்த சிலுவையின் கீழ் வைக்கப்பட்ட பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் தேங்கி இருந்தது. இதனால் அவருக்கு, ஆச்சரியமும் உண்டானது.

    இதற்கிடையே இயேசு உருவத்தில் இருந்து தேங்காய் எண்ணெய் வடிந்த தகவல் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதி முழுவதும் வேகமாக பரவியது.

    இதையடுத்து குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அந்தநபரின் வீட்டில் குவிந்தனர். அவர்கள் தேங்காய் எண்ணெய் வடிந்த இயேசு சிலுவை உருவத்தை அதிசயத்துடன் பரவசத்துடன் வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து செல்லும்போது தேங்காய் எண்ணெயும் வாங்கி சென்றனர்.

    • குழந்தையின் உடல் வளர்ச்சியை வேகப்படுத்துகிறது.
    • பிறந்த குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது நல்லது.

    பிறந்த குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. ஒரு சரியான எண்ணெய் மசாஜ், குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. வயிற்று வலிக்கு நல்ல ஒரு சிகிச்சையாக உள்ளது, குழந்தையின் உடல் வளர்ச்சியை வேகப்படுத்துகிறது. எண்ணெய் மசாஜ் மூலம் குழந்தையின் வளர்ச்சியை அதிகரிப்பது பெற்றோர் கையில் மட்டும் தான் உள்ளது.

    குழந்தைகளுக்கு இயற்கையான எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வதால் அவர்களின் சரும ஆரோக்கியம் மேம்படும். தசை மற்றும் எலும்புகள் வலுப்பெறும். குழந்தைக்கும் அன்னைக்குமான பாசம் அதிகரிக்கும்.

    குழந்தையின் நாசுக்கான சருமத்தில் ஏதாவது ஒரு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது குழந்தையின் சருமத்தில் தவறான பாதிப்புகளைத் தரும். எந்த ஒரு எண்ணெயையும் குழந்தைக்கு தடவுவதற்கு முன்னர், குழந்தையின் கை அல்லது கால் பகுதியில் ஒரு சிறிய பகுதியில் தடவி, சோதித்து, ஒரு மணி நேரம் கழித்து தடிப்பு, ஒவ்வாமை போன்ற எந்த ளரு பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து பின்னர் முழு உடலிலும் தடவலாம்.

    குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும்போது, அதில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தில் தொற்று மற்றும் வறட்சி ஏற்படாமல் காக்கும்.

    சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய்யை உபயோகப்படுத்தினால் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    பாதாம் எண்ணெய் தோல் நோய்கள் உண்டாகாமல் காக்கும். சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

    குழந்தைகளின் சருமம் வறண்டதாக இருந்தால், விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். நகங்கள் மற்றும் தலை முடிக்கும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதனால் தலைமுடி மற்றும் விரல்கள் மிகவும் பளபளப்பாக மாறுகின்றன. குழந்தையின் உடலில் விளக்கெண்ணெய் தடவி, 10-15 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

    குழந்தைக்கு மசாஜ் செய்ய ஆலிவ் எண்ணெய் மிகவும் ஏற்றது. ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் குழந்தையின் தசை வேகமாக வளர்ச்சி அடைகிறது. ஆனால் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி குழந்தைக்கு மசாஜ் செய்யும்போது சில விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைக்கு தோல் அழற்சி, வெட்டு அல்லது தடிப்புகள் இல்லாமல் இருக்கும்போது மட்டும் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தவும். வறண்ட மற்றும் சென்சிடிவ் சருமம் கொண்ட குழந்தையின் சருமத்திற்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது .

    • இதனைத் தினமும் இரவு செய்யலாம்.
    • சோர்வடைந்த கண்களுக்கு சிகிச்சையளிக்கின்றன.

    ஜோஜோபா எண்ணெயில் (Jojoba Oil ) அழற்சி எதிர்ப்பு மற்றும் காயம் குணப்படுத்தும் பண்புகள் உள்ளதால் சோர்வடைந்த உங்கள் கண்களைப் புத்துயிர் பெறச் செய்யும். அவோகேடாவில் வைட்டமின்கள் ஏ, சி, டி மற்றும் ஈ ஆகியவை நிறைந்து இருப்பதால் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி சருமத்தினை மென்மையாக வைக்கிறது. அப்ரிகாட் கர்னல் எண்ணெயில் வைட்டமின் ஏ, ஓலிக் அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் உள்ளதால் சோர்வடைந்த கண்களுக்கு சிகிச்சையளிக்கின்றன. அத்துடன் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து சருமத்தில் பயன்படுத்துவதால் கண்களைச் சுற்றியுள்ள பகுதியை நீரேற்றத்துடன் வைக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ஜோஜோபா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு

    தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டியளவு

    அப்ரிகாட் கர்னல் எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு

    அவோகேடா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு

    4 எண்ணெய்களையும் எடுத்து அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி கண்களைச் சுற்றித் தடவிவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து கழுவுங்கள். இதனைத் தினமும் இரவு செய்யலாம்.

    கண் சுருக்கங்கள்

    ஆரஞ்சு பழத்தின் தோல் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுவதால் கண்களில் ஏற்பட்ட சுருக்கத்தினை சரி செய்ய உதவுகிறது. வேப்ப எண்ணெய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் கண்களின் தோற்றத்தினை மேம்படுத்துகிறது.

    தேவையான பொருட்கள்

    1 தேக்கரண்டியளவு ஜோஜோபா எண்ணெய் 1 தேக்கரண்டி அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர், 3 முதல் 4 துளி வேப்ப எண்ணெய் எடுத்து ஒன்றாகக் கலந்து கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம்.

    • கறிவேப்பிலை எண்ணெயின் மகத்துவம் கொஞ்சம் அல்ல.
    • இதெல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வழி முறைகள் தான்.

    கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தயாரிக்கப்படும் எண்ணெயின் மகத்துவம் கொஞ்சம் அல்ல. இந்த எண்ணெயானது இளம் வயதினரை தாக்கும் நரை முடியை மீண்டும் கருமையாக்க உதவி புரிகிறது. இதெல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வழி முறைகள் தான்.

    இப்போது இருக்கும் இளைய தலைமுறை கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுவது, கெமிக்கல் கலந்த ஷாம்பூக்களை பயன்படுத்துவது, போதுமான அளவு தூங்காமல் விழித்திருப்பது போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே தலைமுடி நரைத்து முதிர்ந்த தோற்றத்தை கொடுக்கிறது. இது அவர்களது மன தைரியத்தை குறைக்கிறது.

    இந்த பெரும் பிரச்சனையில் இருந்து விடுபட கறிவேப்பிலை எண்ணெய் பயன்படுத்தலாம். இப்போது கறிவேப்பிலை எண்ணெய் தயாரிக்கும் முறையை பார்க்கலாம்…

    தேவையான பொருட்கள்:

    கறிவேப்பிலை எண்ணெய் செய்ய இரண்டே பொருட்கள் போதும். ஒன்று செக்கில் கொடுத்து அரைக்கப்பட்ட சுத்தமான தேங்காய் எண்ணெய் வேண்டும். இரண்டாவது நிழலில் உலர்த்தப்பட்ட கறிவேப்பிலை இலைகள். கறிவேப்பிலையில் ஈரப்பதம் இல்லாதவாறு நிழலில் உலர்த்த வேண்டும்.

    செய்முறை:

    முதலில் தேவையான அளவு கறிவேப்பிலையை உருவி ஒரு தட்டில் அல்லது துணியில் போட்டு நிழலில் உலர்த்தி வையுங்கள். கறிவேப்பிலையில் ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்து கொள்ளவும். கடாய் ஒன்றில் ஒரு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதனை சூடு செய்யுங்கள்.

    தீயை குறைவாக வைத்து சூடு செய்யுங்கள். அதே சமயம் புகை வரும் அளவிற்கு சூடு செய்ய வேண்டாம். எண்ணெய் சூடேறிய பிறகு உலர்த்தி வைக்கப்பட்ட கறிவேப்பிலையை சேர்த்து விட்டு அடுப்பை அணைத்து விடலாம். இந்த எண்ணெய் நன்றாக ஆறி வரட்டும். கறிவேப்பிலை நிறம் மாறி வரும்.

    எண்ணெய் முழுவதுமாக ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் இதனை ஊற்றி வைத்து பயன்படுத்தலாம். கறிவேப்பிலையோடு சேர்த்தே ஊற்றிக் கொள்ளலாம். கறிவேப்பிலை எண்ணெயில் மிதக்காமல் நன்றாக மூழ்கி இருக்க வேண்டும். எப்போதும் பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். இளநரை உள்ளவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இந்த எண்ணெயை உபயோகிக்கலாம்.

    • கூந்தல் நன்கு வளர்ந்து இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.
    • இந்த எண்ணெய் கூந்தல் உதிர்வு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை தரும்.

    தேவையான பொருட்கள்

    தேங்காய் எண்ணெய் - 500 மி

    நல்லெண்ணெய் - 100 மி

    கரிசலாங்கண்ணி இலைகள் - 2 கைப்பிடி

    அரைக்க வேண்டியவை

    சின்ன வெங்காயம் - 20

    செம்பருத்தி இலை - 2 கைப்பிடி

    கறிவேப்பிலை - 2 கைப்பிடி

    கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்

    மருதாணி - 1 கைப்பிடி

    நெல்லிக்காய் - 10

    வெந்தயம் - 2 ஸ்பூன்

    கற்றாழை - 2 இதழ்.

    செய்முறை

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து 3 எண்ணெயை ஊற்றி மிதமாக சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலக்கவும். அடிபிடிக்காமல் இருக்க பொறுமையாக சிறிது நேர இடைவெளியில் கிளறிக் கொண்டே இருக்கவும். நுரை அடங்கும் வரை காய வைத்து இறக்கி ஆற விடவும்.

    இப்போது எண்ணெய் நன்கு கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதனை பாட்டிலில் சேகரித்து தினமும் பயன்படுத்தி வர கூந்தல் நன்கு வளர்ந்து இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.

    குறிப்பு: சளி பிடிக்கும் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை பயன்படுத்துவதை தவிர்த்து விடவும்.

    • தீபம் ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய் முக்கியத்துவம் வாய்ந்தது.
    • எந்த எண்ணெய் தீபம் ஏற்ற உகந்தது என்று அறிந்துகொள்ளலாம்.

    கடலை எண்ணெய், பாமாயில், ரீபைண்டு ஆயில், கடுகு எண்ணெய் போன்றவற்றை விளக்கேற்ற பயன்படுத்தக்கூடாது. இவற்றால் தீமைகளே ஏற்படும்.

    இறைவனுக்கு உகந்த எண்ணெய் விபரம் வருமாறு:-

    மகாலட்சுமிக்கு - நெய்

    திருமால், சர்வ தேவதைகளுக்கு - நல்லெண்ணெய்

    விநாயகருக்கு - தேங்காய் எண்ணெய்

    சிவபெருமானுக்கு - இலுப்பை எண்ணெய்

    அம்பாளுக்கு -நெய்,விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து ஊற்றி ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜை செய்ய, அம்பாளின் அருள் கிடைக்கும்.

    தீபத்திற்கு ஏற்ற எண்ணெய்

    பசு நெய்:- லட்சுமி வாசம் செய்வாள், புத்திர பாக்கியம் கிட்டும்.

    நல்லெண்ணெய்:- பூஜை தீபத்திற்கு சிறந்தது, சனி பரிகாரம் தரும், லட்சுமிகடாட்சம் உண்டாகும்.

    தேங்காய் எண்ணெய்:- லலிதமான தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யும், கணவன், மனைவி பாசம் கூடும், பழையபாவம் போகும்.

    இலுப்பை எண்ணெய்:- எல்லாப் பாவங்களும் போகும், மோட்சம் கிட்டும், நல்ல ஞானம் வரும், பிறப்பு அற்றுப் போகும்.

    விளக்கெண்ணெய்:- தெய்வ அருள், புகழ், ஜீவன சுகம், உற்றார் சுகம், தாம்பத்திய சுகம் இவைகளை இது விருத்தி செய்யும்.

    வேப்ப எண்ணெய்:- குலதெய்வ அருள் கிடைக்கும்.

    மூவகைஎண்ணெய்- நெய், வேப்பஎண்ணை, இலுப்பை எண்ணெய் இந்த மூன்றும் கலந்து தீபமிட செல்வம் உண்டாகும். ஆரோக்கியம் தரும். இறைவழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.

    • நீர் நிர்வாகத்தை மேற்கொள்ள சொட்டு நீர் பாசனம் மூலமும் தென்னை சாகுபடி நடைபெறுகிறது.
    • திருப்பூர் மாவட்டத்தில் ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 8336 தேங்காய் என ஆண்டுக்கு 51.59 கோடி தேங்காய்கள் உற்பத்தியாகிறது.

    திருப்பூர்:

    கடந்த 3 மாதங்களாக தேங்காய் பருப்பு மற்றும் எண்ணெய் விலை சரிந்து அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் அதே நேரத்தில் தென்னையின் உப பொருட்களான மஞ்சி, தேங்காய் தொட்டி, தேங்காய் புண்ணாக்கு விலை கணிசமாக விலை அதிகரித்து வருகிறது. கொப்பரை மற்றும் பருப்புக்கு உரிய விலை இல்லாமல் உப பொருட்கள் விலை உயர்வதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடியானது விவசாயிகளால் தனி பயிராக சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்னை சாகுபடியானது பெரும்பாலும் நீர் பாசன வசதி உள்ள இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் நீர் நிர்வாகத்தை மேற்கொள்ள சொட்டு நீர் பாசனம் மூலமும் தென்னை சாகுபடி நடைபெறுகிறது.

    கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பு ஆண்டில் கூடுதலான மழை பொழிவை திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது. இதன் காரணமாக தேங்காய் உற்பத்தித் திறன் அதிகரித்து உள்ளது. உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக கொப்பரை மற்றும் தேங்காய் பருப்பு விலையில் சரிவும் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தை பொறுத்தவரை 61890 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 மாதங்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டப்பட்டு சந்தைகளுக்கும், கொப்பரையாகவும் பருப்பாகவும் மாற்றப்பட்டு வியாபாரிகள் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் எண்ணெய் உற்பத்திக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 8336 தேங்காய் என ஆண்டுக்கு 51.59 கோடி தேங்காய்கள் உற்பத்தியாகிறது. இது மற்ற மாவட்டங்களை காட்டிலும் சற்று குறைவான உற்பத்தியாக உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக தமிழக அரசின் கவனத்திற்கு இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது. மேலும் தென்னை விவசாயிகளும் கொப்பரை மற்றும் தேங்காயினை நேரடியாக குறைந்தபட்ச ஆதார விலையில் அரசு கொள்முதல் செய்திட கோரிக்கை வைத்தனர் .

    இக்கோரிக்கையினை மாவட்ட கலெக்டர் பரிசீலனை செய்து கருத்துரு அனுப்ப பரிந்துரை செய்ததன் பேரில் தமிழ்நாடு அரசு, தென்னை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த கொப்பரையினை விலை ஆதரவு திட்டத்தின் கீழ் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் NAFED வாயிலாக கொள்முதல் செய்திட அரசாணை வெளியிடப்பட்டது .

    இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை , பெதப்பம்பட்டி, பொங்கலூர் மற்றும் காங்கேயம் ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இதன்படி நான்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் கடந்த நவம்பர் வரை 9844 விவசாயிகளிடமிருந்து 129 கோடி ரூபாய் மதிப்பிலான 12145 மெட்ரிக் டன் அரவை தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என திருப்பூர் மாவட்ட கலெக்டர் தனது செய்திக்குறிப்பில் கூறியிருந்தார்.

    அதே நேரத்தில் இந்திய அளவில் பெரும் பகுதி தென்னை பயிரானது கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இதில் கர்நாடக மாநிலத்தில் 5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் ெதன்னை பயிரிடப்பட்டு ஆண்டுக்கு 4200 மெட்ரிக் டன் உற்பத்தியும், தமிழகத்தில் 4.65 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டு 3,751 மெட்ரிக் டன் உற்பத்தியும், கேரள மாநிலத்தில் 7 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை பயிரிடப் பட்டுள்ளதில் 3300 மெட்ரிக் டன் தேங்காயும் உற்பத்தி ஆகிறது.

    இந்நிலையில் கடந்த ஆண்டை விட அரவை கொப்பரை விலை வீழ்ச்சி அடைந்து தேங்காய் மற்றும் கொப்பரை விலை 2021 ம் ஆண்டு விலையை விட கிட்டத்தட்ட 50 சதவீதம் சரிந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2021ல் தேங்காய் ஒன்று 16 ரூபாய்க்கும் ஒரு கிலோ கொப்பரை 150 க்கும் விற்பனையானது. அது இந்த ஆண்டில் ஒரு கிலோ கொப்பரை 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது என கடந்த வாரம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் ஒன்றிய வேளாண்மைத்துறை செயலாளர் மனோஜ் அகஹுஜா விடம் அளித்திருந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தற்போது கொப்பரை மற்றும் தேங்காய் பருப்பு விலையுடன் எண்ணெய் விலையும் சரிவை சந்தித்து வருகிறது. இதன்படி கடந்த 15 ந்தேதி ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் அதிக பட்சமாக வரிகள் சேர்க்காமல் ரூ.123.50க்கும், குறைந்த பட்சமாக ரூ.121.50க்கும் விற்பனையானது. அதுவே இன்று அதிக பட்ச விலை 120 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக 118 ரூபாய்க்கும் விலை நிர்ணயமானது.

    15 கிலோ டின் இரு வாரங்கள் முன்பு அதிகபட்சமாக வரிகள் சேர்க்காமல் ரூ.1850க்கும், குறைந்தபட்சமாக ரூ.1820க்கும் விலை நிர்ணயமானது. இன்று அதிகபட்சமாக 1800 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக 1770 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் ஆகியுள்ளது.

    தேங்காய் புண்ணாக்கு 60 கிலோ மூட்டை 1570 ரூபாய்க்கும், ஒரு கிலோ 26.16 ரூபாய்க்கும் வரிகள் சேர்க்காமல் விலை நிர்ணயமானது. இதேபோல் ஆக்டிவேட்டெட் கார்பன் தயாரிக்க பயன்படும் தேங்காய் தொட்டி ஒரு டன் 200 ரூபாய் உயர்ந்து 12200 ரூபாய் என விலை போனது. எண்ணெய் விலையும், தேங்காய் பருப்பு விலையும் சரிந்து வரும் நிலையில் தேங்காய் தொட்டி விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கதுஎண்ணெய், விலை, விவசாயிகள்

    • பேராவூரணியில் தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
    • சத்துணவு திட்டத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சங்கத் தலைவர் காந்தி தலைமை வகித்தார்.

    கௌரவ தலைவர் வேலுச்சாமி, துணை தலைவர் கோவிந்தசாமி, பொருளாளர் பன்னீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர் ராம்குமார் வரவேற்றார்.

    கூட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் 25க்கு விற்ற தேங்காய் தற்போது ரூபாய் பத்துக்கு கீழ் விற்கப்படுகிறது.

    உற்பத்தி செலவுக்கு கூட கட்டுபடி ஆகாத விலையில் தேங்காய் விற்பதால், விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பொதுமக்கள் அனைவரும் சமையல் உள்ளிட்ட அனைத்து தேவைக்கும் தேங்காய் எண்ணையை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    பேராவூரணி தொகுதி சென்னைக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தும், புவிசார் குறியீடு பெறுவதற்கு ஆதாரங்களை திரட்டி தருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    சத்துணவு திட்டத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். அனைத்து அங்காடிகளிலும் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்னை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், நாம் உழவர் இயக்க தலைவர் பிரபு ராஜா, மதுரை வேளாண் கல்லூரி முன்னாள் முதல்வர் வைரவன், தென்னை உற்பத்தியாளர் சங்க மாநிலச் செயலாளர் அறந்தாங்கி செல்லத்துரை, வடகாடு மிளகு உற்பத்தி அறிமுக விவசாயி பாலுச்சாமி, கீரமங்கலம் நக்கீரர் தென்னை மைய நிறுவனர் காமராசு, திருச்சி வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் இலக்குவணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    முடிவில் இணைச் செயலாளர் முகமது சமீர் நன்றி கூறினார்.

    • உடல் முழுவதும் எண்ணெய் தடவுவதால், ரத்த ஓட்டம் சீரடையும்.
    • சரும ஆரோக்கியம் மேம்படும்.

    நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் உடல்நலனில் ஏற்படும் பிரச்சினைகளை களையவும் எண்ணெய் குளியல் அவசியம்.

    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும், புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்கிறது, சித்த மருத்துவம்.

    சீரகம் சேர்த்துக் காய்ச்சிய நல்லெண்ணெயை தேய்த்துக் குளிப்பதன் மூலம் ரத்தக் கொதிப்பு, அதிக உடல் சூடு, தூக்கமின்மை, மன அமைதியின்மை போன்ற பித்த நோய்களைத் தடுக்கலாம், குறைக்கலாம்.

    செம்பருத்தி, நெல்லிக்காய், கரிசாலை சேர்த்துக் காய்ச்சிய நல்லெண்ணெய், முடி வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இளநரையைத் தடுக்க உதவும். மனதை அமைதிப்படுத்தும்.

    சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள அரக்கு தைலத்தை பயன்படுத்துவதன் மூலம் உடல் நாற்றம், தொண்டை பிரச்சினை, ரத்தக் குறைவு போன்ற நோய்கள் விலகும். சளி, இருமல், சைனஸ் போன்ற கப நோய்களை போக்கச் சுக்கு தைலத்தால் தலைக்கு குளிக்கலாம்.

    அத்துடன் வாரம் இரு முறை தலை முதல் கால்வரை எண்ணெய் தேய்த்துக் குளித்துவருவதால், சரும ஆரோக்கியம் மேம்படும். உடலின் வெப்பம் குறையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தோல் நோய்கள் தொலைந்து போகும், பசி அதிகரிக்கும். உடல் முழுவதும் எண்ணெய் தடவுவதால், ரத்த ஓட்டம் சீரடையும். உடலின் வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு, வாத நோய்கள் குணமடையும். மன அழுத்தம் குறையும்.

    எண்ணெய் குளியல் நாளன்று அசைவ உணவுகள், காரம் அதிகமுள்ள பொருட்கள், மசாலாப் பொருட்கள், எளிதில் செரிக்காத பண்டங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் தேய்த்து குளித்த நாளன்று, உடல் சற்று பலமிழந்து காணப்படுவது இயற்கையே.

    எனவே, கடினமான வேலைகளைச் செய்யாமல் ஓய்வெடுப்பது நல்லது. அன்றைக்குப் பகலில் உறங்குவதையும் உடலுறவையும் தவிர்க்க வேண்டும் என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

    • மாதம் ஒருமுறை முடியை மிகக்குறைந்த அளவு ட்ரிம் செய்ய வேண்டும்.
    • சீப்பால் தலையைச் சீவும்போது, தலைப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

    * 300 மி.லி தேங்காய் எண்ணெயில் 150 மி.லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி வடிகட்டி, பெண்கள் 21 நாட்கள் தலையில் தடவிவந்தால், தலைமுடி நன்றாக வளரும்.

    * வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைப் பகுதியைத் தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து உலர வைத்துக் குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வளரும். முட்டையின் வெள்ளைப் பகுதியில் உள்ள ஊட்டச்சத்துகள், முடியின் வேர்க்கால்களைச் சரிசெய்யும் தன்மை கொண்டவை. மேலும், முடியை மென்மையாகவும் பொலிவோடும் வைக்கும்.

    * ஆண்கள், கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிப்பதற்கு முன்பு, தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைத்துக் குளித்துவந்தால், இளமையில் ஏற்படும் தலை வழுக்கை நீங்கி முடி வளரும்; இளநரை குறையும்.

    * முடி வளரும்போது, முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு, முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதனால், முடியின் வளர்ச்சி குறையத் தொடங்குகிறது. மாதம் ஒருமுறை முடியை ட்ரிம் செய்வதால் முடியின் வலிமை அதிகரிக்கும். மாதம் ஒருமுறை முடியை மிகக்குறைந்த அளவு ட்ரிம் செய்ய வேண்டும்.

    * வாரம் ஒருமுறை தவறாமல் தேங்காய் எண்ணெய் கொண்டு தலையை மசாஜ் செய்து, நன்கு ஊறவைத்துக் குளிக்க வேண்டும். இதனால், முடிக்கு வேண்டிய சத்துகள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

    * சீப்பால் தலையைச் சீவும்போது, தலைப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆண்கள் தினமும் மூன்று முதல் நான்கு முறை தலைக்குச் சீப்பைப் பயன்படுத்தித் தலை சீவலாம். இதனால், முடியின் வேர், புத்துணர்ச்சியுடன் இருக்கும். கூர்மையான பிளாஸ்டிக் சீப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மிருதுவான முதல் தர பிளாஸ்டிக் அல்லது மரச் சீப்பைப் பயன்படுத்தலாம்.

    * கோடை காலங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முடியின் மீது சூரிய ஒளி நேரடியாகப் படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். சூரியக் கதிர்கள் தலைப்பகுதியைத் தாக்கி, முடி உதிர்வதை அதிகரிக்கும். இந்த நேரத்தில் புறஊதா பி கதிர்கள் முடியின் வேர்க்கால்களில் ஊடுருவி வறட்சியை ஏற்படுத்தும். எனவே, வெளியே செல்லும்போது தலைக்குத் தொப்பி அணிந்தோ அல்லது துப்பட்டாவைத் தலையில் கட்டிக்கொண்டோ செல்லலாம்.

    * பெண்கள், தங்களது அடர்ந்த கூந்தல் ஈரமாக இருக்கும்போது, தலைக்குச் சீப்பு பயன்படுத்த வேண்டாம். முடி ஈரமாக இருக்கும்போது வலிமை இழந்து இருக்கும். அப்போது, சீப்பைப் பயன்படுத்தினால், முடி வேரோடு வந்துவிடும். முடி உலர்ந்த பின்னரே சீப்பு பயன்படுத்த வேண்டும்.

    * அதீத வெப்பம் தலைமுடியைப் பாதிக்கும். தலைக்குக் குளித்த பின்னர், முடியை உலரவைக்க பலர், எலெக்ட்ரானிக் ஹேர் டிரையரைப் பயன்படுத்துவார்கள். இப்படிப் பயன்படுத்துவதால், முடியின் வேர்க்கால்கள் பாதிக்கப்படும். இவ்வாறு தினமும் பயன்படுத்தினால், விரைவில் வழுக்கை ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது. எனவே, எப்போதும் முடியை இயற்கையான வழியில் உலரவைப்பதுதான் நல்லது. தலைக்குக் குளித்தவுடன் வெயிலில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

    * வெங்காயத்தை நீரில் வேகவைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம். வெங்காயச் சாற்றைக்கொண்டு முடியை மசாஜ் செய்து, ஊறவைத்துக் குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம், முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.

    * கண்டிஷனர் முடிக்கு நல்லதுதான். ஷாம்பு, சிகைக்காய் பயன்படுத்துவதால் ஏற்படும் வறட்சியைப் போக்கி, முடியை மிருதுவாக வைத்துக்கொள்ள உதவும். தரமற்ற கண்டிஷனர் முடியின் வேர்க்கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும். ரசாயனம் கலந்த கண்டிஷனர் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயற்கையான கண்டிஷனரானத் தயிரைப் பயன்படுத்தலாம். இதனால், எந்தப் பாதிப்பும் ஏற்படாது. முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

    * குறைந்தது ஏழு மணி நேரத் தூக்கம் அவசியம். அதற்கும் குறைவாகத் தூங்கினால், முடி ஆரோக்கியத்தை இழந்துவிடும். தினமும், போதிய அளவு தூங்குங்கள். இதனால் முடியின் ஆரோக்கியமும் அடர்த்தியும் அதிகரிக்கும்.

    * தினமும் தலைக்குக் குளித்தால், தலையில் உள்ள இயற்கையான எண்ணெய்ப் பசை வெளியேறிவிடுவதோடு, முடி, பொலிவை இழந்துவிடும். முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வாரத்துக்கு இரண்டு முறை தலைக்குக் குளித்தால் போதும்.

    * காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வதோடு, தண்ணீரை அதிக அளவில் பருகுங்கள். இதனால், முடியின் வளர்ச்சியும் அடர்த்தியும் அதிகரிக்கும். முடியின் வேர்கால்களில் இயற்கையான எண்ணெய்ப் பசை நிலைத்திருக்கும்.

    • கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தாமல் பயன்படுத்தலாம்.
    • குளிர்காலத்தில் எண்ணெயை மிதமான சூட்டில் உபயோகிப்பதே நல்லது.

    இந்திய கலாசாரத்தில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் வழக்கத்தை பலரும் கடைப்பிடித்து வருகிறார்கள். குழந்தை பிறப்பதற்கு சில நாட்கள் முன்னதாகவே, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் குழந்தை பராமரிப்புக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாரித்து வைப்பார்கள். அதில் முக்கியமானவை மசாஜ் செய்வதற்கான எண்ணெய் மற்றும் குளியல் பொடி.

    மசாஜ் செய்வதற்கு பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யை பயன்படுத்துவார்கள். குழந்தைகளின் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும். எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும்போது சரும வறட்சி நீங்கும். உடல் வளர்ச்சி அதிகரிக்கும். எலும்புகள் வலுவாகும். ரத்த ஓட்டம் சீராகும். தேங்காய் எண்ணெய் அடர்த்தி குறைவாக இருப்பதால் சருமத்தில் எளிதாக ஊடுருவும்.

    இது கோடை காலத்தில் சருமத்தை குளிர்விக்கும். பனிக்காலத்தில் சருமத்துக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கும். பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் அழற்சியை நீக்கும். சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இதில் உள்ள ஆக்சிஜனேற்ற அழற்சி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் குழந்தைகளுக்கு சரும பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

    குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்காக, ரசாயனங்கள் கலக்காமல் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தலாம். அதற்கான குறிப்புகள் இங்கே…

    அதிக முற்றல் அல்லது இளசாக இல்லாமல், நடுத்தரமாக இருக்கும் தேங்காய்கள் 2 அல்லது 3 எடுத்துக்கொள்ளவும். அவற்றை துருவி தண்ணீர் சேர்க்காமல் இரண்டு முறை பால் பிழிந்துகொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் தேங்காய்ப்பாலை ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும். சிறிது நேரத்தில் பால் சிறு சிறு கட்டிகளாக மாறத் தொடங்கும்.

    அவ்வப்போது அதை அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கடைசியாக பாலில் இருக்கும் தண்ணீர் சத்து முழுமையாக வற்றி, எண்ணெய் மேலே மிதந்து வரும். இப்போது தீயை அணைக்கவும். எண்ணெய் ஆறியதும் வடிகட்டி கண்ணாடி ஜாடியில் ஊற்றி வைக்கவும். இதை அறை வெப்பநிலையில் வைத்திருந்து பயன்படுத்தலாம். வீட்டில் தயாரிக்கும் இந்த எண்ணெய்யை நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம் என்றாலும், குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் புதிதாக தயாரித்து பயன்படுத்துவது நல்லது. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல், பிரசவித்த தாய்மார்களும் இதைப் பயன்படுத்தலாம்.

    தேங்காய் எண்ணெய்யை குழந்தைகளுக்கு பயன்படுத்தும் முறை

    கோடைக்காலத்தில், பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய்யை சூடுபடுத்தாமல் அப்படியே பயன்படுத்தலாம். அதேசமயம், குளிர்காலத்தில் மிதமான சூட்டில் உபயோகிப்பதே நல்லது. முதலில் குழந்தையின் மார்பில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி, கைகளால் மேல்நோக்கி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

    அதைத் தொடர்ந்து தலை, கைகள், கழுத்து, கால்கள் மற்றும் பாதங்களில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம். வட்ட மற்றும் மேல்நோக்கிய இயக்கங்களில் மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். குழந்தையின் தொப்புள், மூக்கு, கண்கள் மற்றும் காதுகளில் எண்ணெய் ஊற்றுவதைத் தவிர்க்கவும்.

    ×