என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் அரிசி கடத்தல்"

    • பயனாளிகள் மட்டுமே ரேசன் அரிசி பெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
    • ரேசன் அரிசி கடத்தப்படுவதற்கு முன்பே, தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    அனைத்துப் பொது விநியோகத் திட்டக் கடைகளிலும் தரமான அரிசி கிடைக்கிறது என்று பொதுமக்களும் மாற்றுக் கட்சியினரும் பாராட்டுகின்ற நிலை உருவாகியுள்ளது. அரிசி கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டதன் காரணமாக மூன்று மடங்கு அளவிற்கு அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு அதிகமான வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

    அரிசி ஆலைகளில் திடீர் சோதனை நடத்தி கடத்தலுக்குத் துணை போன அரிசி ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு அவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. அரிசிக் கடத்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் புலனாய்வு செய்து, கடத்தலுக்கு முன்பே அதை நிறுத்தும் வண்ணம் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அத்துடன் வழக்கமாக கடத்தலில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து அவர்களின் மறுவாழ்வுக்கு வழி செய்து அவர்களைக் கடத்தலில் ஈடுபடுத்தாமல் நல்வழிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பயனாளிகள் மட்டுமே அரிசி பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும், ரேசன் அரிசி வாங்கி தாங்கள் பயன்படுத்தாமல் வெளியில் விற்பவர்கள் யார் என்பதைக் கடைகள் வாரியாகக் கண்டறிந்து அவர்களை எச்சரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பொது விநியோகத் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஒத்துழைத்தால் தான் அரிசிக் கடத்தலை அறவே தடுக்க முடியும். அரசி கடத்தல் தொடர்பாக தகவல் அளிக்க விரும்புபவர்கள் கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 வழியாகவும் தெரியப்படுத்தலாம்.

    பொதுமக்களுக்குத் தரமான அரிசி வழங்க வேண்டும் என்ற அரசின் எண்ணத்தையும் கருத்தில் கொண்டு, கடத்தலில் வாடிக்கையாக ஈடுபட்டுள்ளோர் தங்கள் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அரிசிக் கடத்தலே இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வேப்பூர் அருகே 3 டன் ரேசன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
    • திடீரென ஒருவர் வண்டியில் இருந்து தப்பி ஓடியதால் சந்தேகமடைந்த போலீசார், வண்டியில் இருந்த மற்றொரு நபரை பிடித்து விசாரித்தனர்.

    கடலூர்:

    வேப்பூர் போலீஸ் ஏட்டு ஞானசேகரன் தலைமையிலான போலீசார், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் கூட்டுரோடு அருகே வாகண தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த மகேந்திரா பிக்கப் வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். திடீரென ஒருவர் வண்டியில் இருந்து தப்பி ஓடியதால் சந்தேகமடைந்த போலீசார், வண்டியில் இருந்த மற்றொரு நபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் வேப்பூர் அருகே பெரியநெசலூரைச் சேர்ந்தவர் சசிக்குமார், (வயது37) என்பவர் ரேசன் அரிசி கடத்தல் ஏஜெண்டாக இருப்பதும், 3 டன் ரேசன் அரிசியை கடத்தி செல்வதும் தெரிய வந்தது. அதை தொடர்ந்து, இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, சசிக்குமாரை கைது செய்தனர். தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சின்னசேலம் அருகே லாரியில் கடத்திய 13.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • காட்டுமன்னார்குடி அருகே குமராட்சியை சேர்ந்த முத்துகுமாரசாமி கடத்தி வந்து உள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி, ரேசன் அரிசி கடத்தல் மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாக்குறிச்சி டோல்கேட்டில் கீழ்குப்பம் போலீஸ் தனிப்பிரிவுசப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையில் இன்று அதிகாலை செம்பாக்குறிச்சி டோல்கேட் அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தனர். அந்த லாரியில் 13.5 டன் ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இந்த ரேசன் அரிசியினை காட்டுமன்னார்குடி அருகே குமராட்சியை சேர்ந்த முத்துகுமாரசாமி கடத்தி வந்து உள்ளார். பின்னர் அவரை கைது செய்து, அரிசி மற்றும் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்து விழுப்புரம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் கடத்தப்பட்ட ரேசன் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும், ராஜேந்திரனையும் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கூறுகையில் கள்ள க்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோத ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • 1,140 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளி லிருந்து வெளி மாநிலங்க ளுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையின் வேலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகுமார் மேற் பார்வையில் இன்ஸ்பெக்டர் ரேகா, சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் வின்டர்பேட்டை பகுதியில் ஈடுபட்டனர்.

    அப்போது சுகுமார் என்பவரது மனைவி விஜயா (வயது 50) 40 கிலோ எடை கொண்ட 26 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1,140 கிலோ ரேஷன் அரிசியை அவர்கள் பறிமுதல் செய்து அரக்கோணம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இதனிடையே விஜயா தப்பிவிட்டார்.

    அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • 10 கி.மீ. விரட்டி சென்று அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்
    • நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே ஆந்திரா மாநிலத்திற்கு காரில் ரேசன் அரிசி கடத்துவதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்திய போது நிற்காமல் சென்றது இதனால் அந்த வாகனத்தை வருவாய் துறையினர் பணியாண்டப்பள்ளி பகுதியில் இருந்து மூக்கனூர் வழியாக ஒரு வழி பாதையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு வரை துரத்தினர். அப்போது நாட்டறம்பள்ளி அருகே சண்டியூர் பகுதியில் காரை மடக்கி பிடித்த போது டிரைவர் காரை நிறுத்தி விட்டு சினிமா பாணியில் ரேசன் கடத்தும் கும்பல் டிரைவரை காப்பாற்ற பின் தொடர்ந்து வந்து மற்றொரு காரில் ஏறி தப்பி ஓடிவிட்டார்.

    அதன் பிறகு காரை சோதனை செய்ததில் 20 மூட்டைகளில் சுமார் ஒரு டன் ரேசன் இருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து வருவாய் துறையினர் சுமார் 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்து காரை பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். பின் வாகனத்தை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படை த்தனர் நாட்டறம்பள்ளி பகுதியில் சினிமா பாணியில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வேனில் சட்ட விரோதமாக அனுமதியின்றி ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கடத்தப்படுவது தெரியவந்தது.
    • போலீசார் வேனை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் சமீபகாலமாக லாட்டரி சீட்டு விற்பனை, கஞ்சா, ஹான்ஸ் மது பாட்டில் உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோதமான செயல்கள் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா அதிரடி நடவடிக்கையில் முற்றிலுமாக குறைந்து வருகிறது.இந்நிலையில் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு வேன் மூலம் ரேசன் அரிசி கடத்துவதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனை அடுத்து அவரது உத்தரவின் பேரில் வளத்தி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்று காலை செஞ்சியில் இருந்து சேப்பட்டு நீலாம்பூண்டி பஸ் நிறுத்தம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வேன் ஒன்று அதிவேகமாக வந்தது. இதைப் பார்த்த போலீசார் உடனே வேனை மறித்து அதில் சோதனை செய்தனர். இதில் வேனில் சட்ட விரோதமாக அனுமதியின்றி ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கடத்தப்படுவது தெரியவந்தது. உடனே போலீசார் வேனை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு கீழ்ரவளந்தவாடி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 32) டிரைவர் என்பது தெரிய வந்தது. மேலும் போலீசார் இது குறித்து விழுப்புரம் குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கிருஷ்ணமூர்த்தியை ஒப்படைத்தனர்.இது குறித்து குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த ரேஷன் அரிசி யார் மூலம் எங்கு கடத்த ப்பட்டுள்ளது மேலும் இந்தக் கடத்தலுக்கு தொடர்பா னவர்கள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 250 கிலோ பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன், பரமேஸ்வரி மற்றும் போலீ சார் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவர்கள் திருத்தணியை சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் ஆந்திர மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து அவர்களிடம் இருந்து தலா 25 கிலோ கொண்ட 10 மூட் டைகளில் சுமார் 250 கிலோ எடையிலான ரேசன் அரி சியை பறிமுதல் செய்து இருவ ரையும் கைது செய்தனர்.

    • ரேஷன் அரிசி கடத்தும் முதியவர் மாமூல் தர மறுத்ததால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பீமநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் தப்பி ஓடிய 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.

    திருச்சி:

    திருச்சி பீமநகர் யானைக் கட்டி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவநேசன் (வயது 60). திருமணமாகாத இந்த முதியவர் ரேஷன் அரிசி வாங்கி விற்பனை செய்து வந்தார். அதைத்தொடர்ந்து அவர் மீது ரேஷன் அரிசி கடத்தியதாக பொது விநியோகத்திட்ட சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் காந்தி மார்க்கெட்டில் இருந்து சிவநேசன் யானைக்கட்டி மைதானத்திற்கு தனது மொபட்டில் புறப்பட்டுச் சென்றார். பீமநககர் காவிரி தியேட்டர் மேம்பாலத்தில் சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கும்பல் அவரை வழிமறித்தனர்.

    திடீரென அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவநேசனின் பின்னந்தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் அவருக்கு தலையில் மூன்று இடங்களில் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது. இதையடுத்து அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் தப்பி ஓடிய 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.

    இதில் அரிவாளால் சிவநேசனை வெட்டியவர்கள் ஒரு ஜாதி அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்கள் ரேஷன் அரிசி கடத்தும் சிவநேசனிடம் மாமூல் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஐந்து பேரும் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ரேஷன் அரிசி கடத்தும் முதியவர் மாமூல் தர மறுத்ததால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பீமநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • வாகனங்கள் மற்றும் ரெயில்களில் அரிசி கடத்தலில் கும்பல் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு கைது நடவடிக்கைகளை தொடர்ந்தாலும் ரேசன் அரிசி கடத்தல் நீடித்து வருகிறது. வாகனங்கள் மற்றும் ரெயில்களில் அரிசி கடத்தலில் கும்பல் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஊத்துக்கோட்டையில் இருந்து சிலர் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்துவதாக ஊத்துக்கோட்டை துணை போலீஸ் கண்காணிப்பாளர் கணேஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் படி சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் ஊத்துக்கோட்டை 4 ரோடுகள் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஊத்துக்கோட்டை அருகே உள்ள அந்தேரி தெலுங்கு காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கஜேந்திரனை கைது செய்தனர். ஆந்திராவுக்கு ரேசன் அரிசியை கடத்தி சென்றதாக அவர் தெரிவித்து உள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • 450 கிலோ பறிமுதல்
    • கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி மற்றும் போலீசார் ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    1-வது பிளாட்பாரத்தில் 3 பெண்கள் 30 மூட்டைகளில் ரேசன் அரிசியை ரெயிலில் கடத்துவதற்காக தயார் நிலையில் வைத்து இருந்தனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர் விசாரணையில் ஜோலார்பேட்டையில் இருந்து கர்நாடகாவிற்கு ரெயிலில் ரேசன் அரிசி கடத்த இருந்ததாக தெரிவித்தனர்.

    இதைய டுத்துஜோலார்பேட்டை கோடியூரை சேர்ந்த விஜயலட்சுமி (வயது 48 ), மலை அடிவாரம் அம்மு (38), சோமநாயக்கன்பட்டி சரசு (70) ஆகியோரை போலீசார் கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து 450 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • மங்களம் கிராமத்தில் புதுப்பாளையம் செல்லும் சாலையில் போலீசார் ரோந்து சென்றபோது சிக்கினர்
    • ரேசன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்று விற்பனை செய்வதாக தகவல்

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் இன்று மாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.மங்களம் கிராமத்தில் புதுப்பாளையம் செல்லும் சாலையில் சென்றனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் அரிசி மூட்டைகளை கொண்டு சென்று கத்தரிக்காய் செடிகளுக்கு இடையே இறக்கி வைத்ததை பார்த்து சந்தேகம் அடைந்தனர். எனவே, அந்த இருவரையும் போலீசார் பிடித்து உரிய முறையில் விசாரித்தனர்.

    அப்பொழுது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். எனவே, சந்தேகம் அடைந்த போலீசார் அப்பகுதியை அதிரடியாக சோதனை செய்தனர். அப்பொழுது அங்கு சுமார் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ரேஷன் அரிசியுடன், மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

    பின்னர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர்கள் கும்மிடிப்பூண்டி ஒன்றியம், சின்ன நத்தம் கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜ்(வயது28), ஆரம்பாக்கம் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(வயது32) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் தங்களது மோட்டார் சைக்கிளில் ஆங்காங்கே சென்று ரேஷன் அரிசிகளை விலைக்கு வாங்கி கொண்டு வந்து கத்தரிக்காய் தோட்டத்தில் பதுக்கி வைப்பார்களாம். பின்னர், அதனை ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்று விற்பனை செய்வார்களாம்.

    2 டன் ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை திருவள்ளூரில் உள்ள குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க ஆரணி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

    • 200 கிலோ பறிமுதல்
    • கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 3-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. ரெயிலில் முன்பகுதியில் உள்ள பொது பெட்டியில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    10 மூட்டைகளில் 200 கிலோ ரேஷன் அரிசியை 2 பெண்கள் கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    ×