என் மலர்
நீங்கள் தேடியது "எல் முருகன்"
- தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி தேர்தலுக்கான விருப்பமனு தாக்கல் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொடங்கியது.
- பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி உள்ள விருப்பமனு தாக்கல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
சென்னை:
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 19 மாநிலங்களில் புதிய தலைவர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் பா.ஜ.க. தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது.
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்கான விருப்ப மனுக்களை இன்று சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி தேர்தலுக்கான விருப்பமனு தாக்கல் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொடங்கியது.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி உள்ள விருப்பமனு தாக்கல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
இதையடுத்து தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டசபை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கமலாலயம் வந்துள்ளனர்.
இந்த நிலையில், மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் முன்னிலையில் நயினார் நாகேந்திரன் விருப்பமனு தாக்கல் செய்தார்.
- மத்திய மந்திரி எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோரும் தேர்வு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.
- தலைவர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்து விட்டது.
சென்னை:
தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக பிரதமர் மோடியும், மத்திய மந்திரி அமித்ஷாவும் ஆலோசித்து வருகிறார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து திரும்பியதும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதற்கிடையில் இந்த இரு கட்சிகள் நெருங்கி வருவது தமிழக பா.ஜ.க. தலைவர் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் பேசுபொருளாகி இருக்கிறது.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பா.ஜ.க. தனித்துவமான கட்சியாக செயல்பட வேண்டும். தேர்தலில் சீட்டுக்காக திராவிட கட்சிகளிடம் கை ஏந்தும் நிலை இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
மேலும் தற்போது தமிழகத்தில் அரசியல் களம் எப்படி இருக்கிறது? ஒவ்வொரு கட்சியினர் பற்றியும் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? கட்சிகளின் செல்வாக்கு எப்படி இருக்கிறது? என்பது போன்ற பல்வேறு விவரங்களை துல்லியமாக 234 தொகுதிகளிலும் ஆய்வு செய்து அந்த அறிக்கையை அமித்ஷாவிடம் கொடுத்து உள்ளார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை அண்ணாமலை கடுமையாக விமர்சித்ததால் தான் கூட்டணி அமையாமல் போனது என்று பலர் ஆதங்கப்படுகிறார்கள். எனவே இந்த தேர்தலிலும் அந்த மாதிரி சூழ்நிலை வரக்கூடாது என்று அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் கருதுகிறார்கள்.
அமித்ஷாவுடனான சந்திப்பின் போதும் எடப்பாடி பழனிசாமி இதுபற்றி தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக அண்ணாமலையிடம் அமித்ஷா விவாதித்துள்ளார். தான் எந்த தலைவருக்கும் எதிரானவன் இல்லை. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்க்கிறேன். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. கட்சியில் எந்த பணியையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று உறுதியாக கூறி இருக்கிறார்.
எனவே அண்ணாமலை மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. இதை அடுத்து தலைவர் பதவியை குறி வைத்து மூத்த நிர்வாகிகள் காய் நகர்த்தி வருகிறார்கள். நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் இந்த ரேசில் இருப்பதாக கூறப்படுகிறது.
அண்ணாமலைக்கே மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. மாற்றுவதாக இருந்தால் யாருக்கு கொடுக்கலாம் என்பது பற்றி பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன. இதுவரை நாடார், கவுண்டர், தலித், பிராமணர் ஆகிய சமூகங்களை சேர்ந்தவர்கள் தலைவர்களாக இருந்துள்ளார்கள். எனவே பெரும்பான்மையாக இருக்கும் தேவர் சமூகத்துக்கு வழங்கலாம். அதன்படி நயினார் நாகேந்திரனை தேர்வு செய்யலாம் என்கிறார்கள்.
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் அதிரடியாக பேசக்கூடியவர். கவர்னர் பதவியை உதறிவிட்டு தேர்தல் களத்துக்கு வந்தார். வெற்றி பெறாவிட்டாலும் 2-ம் இடத்துக்கு வந்தார். எனவே அவரை தேர்வு செய்யலாம் என்கிறார்கள்.
அதே போல் மத்திய மந்திரி எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோரும் தேர்வு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றி கட்சி நிர்வாகிகள் கூறும்போது, "தலைவர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்து விட்டது. வருகிற 6-ந்தேதி பிரதமர் மோடி ராமேசுவரம் வருகிறார். அவர் வந்து சென்ற பிறகு தமிழ் புத்தாண்டு தினத்தில் (ஏப்ரல் 14) அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் புத்தாண்டு தினத்தில் கேரளாவில் விஷு பண்டிகை கொண்டாடப்படும். கேரளாவுக்கும் புதிய மாநில தலைவரை நியமிக்க வேண்டும். எனவே இரு மாநிலங்களுக்கும் மகிழ்ச்சிகரமான புத்தாண்டு தினத்தில் புதிய தலைவர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றனர்.
- திமுக அரசு, தமிழகம் முழுவதும் பாஜகவினர் மீது வன்முறையை ஏவி வருகிறது.
- பாஜக தொண்டர்கள் மீது காவல் துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக இன்று நடத்திய போராட்டத்தில் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், போலீசாரின் கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எல். முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில், திமுக ஆட்சியில் டாஸ்மாக் துறையில் நடைபெற்றுள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறையின் அறிக்கையால் ஆடிப்போயுள்ள திமுக அரசு, இது தொடர்பான தகவல்கள் மக்களைச் சென்றடையாமல் தடுப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஊழலை தமிழக மக்களிடத்தில் எடுத்துச் சென்று, உண்மையை அம்பலப்படுத்தி வருகிறது நமது தமிழக பாரதிய ஜனதா கட்சி.
இதனால் ஆத்திரமடைந்துள்ள திமுக அரசு, தமிழகம் முழுவதும் பாஜகவினர் மீது வன்முறையை ஏவி வருகிறது. டாஸ்மாக் துறையில் நடைபெற்றுள்ள 1000 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட முயன்ற பாஜக தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
பாஜக தொண்டர்கள் மீது காவல் துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் சகோதரர் அண்ணாலை, பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.ஆர்.சரஸ்வதி, மாநில துணைத் தலைவர் @KaruNagarajan
அவர்கள், மாநிலச் செயலாளர் @VinojBJP
உள்ளிட்ட, தமிழக பாஜக-வின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையை ஏவி பாஜக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவு காண்கிறார். அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை.
வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் மீதும், முக்கிய நிர்வாகிகள் மீதும் தொடுக்கப்பட்டிருக்கும் இந்த அதிகார துஷ்பிரயோகச் செயலை, உடனடியாக தமிழக காவல்துறை கைவிட வேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாலை 6 மணிக்கு காமராஜர் சாலை ஓட்டல் ஜெயராமில் பயனாளிகளோடு கலந்துரையாடுகிறார்.
- மாலை 7.30 மணிக்கு கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
புதுச்சேரி:
மத்திய மந்திரி எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக புதுவைக்கு வந்தார். இன்று மதியம் 12 மணிக்கு அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரியில் பிரதமரின் கனவு திட்டம் குறித்து கலந்துரையாடினார். இன்று மதியம் 3 மணிக்கு முத்தியால்பேட்டை சோலை நகர் இளைஞர் விடுதியில் மீனவ சமுதாய மக்களுடன் கலந்துரையாடுகிறார்.
மாலை 4.30 முதல் 5.30 மணி வரை தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் புதுவை மாநில வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மாலை 6 மணிக்கு காமராஜர் சாலை ஓட்டல் ஜெயராமில் பயனாளிகளோடு கலந்துரையாடுகிறார். மாலை 7.30 மணிக்கு கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
இரவு புதுவையில் தங்கும் மத்திய மந்திரி எல்.முருகன் நாளை காலை 10 முதல் 11 மணி வரை பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்., எம்.பி.யோடு பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
தொடர்ந்து 11.45 மணிக்கு 45 அடி சாலை மகாராஜா மகாலில் நடைபெறும் மண்டல குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து முதலியார்பேட்டை அசோக்பாபு எம்.எல்.ஏ. வீட்டில் உணவருந்தும் மத்திய மந்திரி, மாலை 4 மணிக்கு பாகூரில் பா.ஜனதா நிர்வாகிகளோடு கலந்துரையாடுகிறார். பின்னர் 6.30 மணிக்கு புதுவை ஓட்டல் சற்குருவில் வியாபாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.
மத்திய மந்திரி வருகையையொட்டி புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- வெளிநாடுகளுக்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யக்கூடிய தலைசிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்து செயல்படுகிறோம்.
புதுச்சேரி:
பிரதமர் மோடியின் 20 ஆண்டுகால மக்கள் நல பணிகள் பற்றி பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் எழுதிய புத்தக கருத்தரங்கம் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரியில் நடந்தது.
பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி தலைவர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால் நாட்டு மக்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சியை பெற்றுள்ளார்கள். புத்தகத்தில் பல்வேறு துறை சார்ந்தோர் முக்கியக் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யக்கூடிய தலைசிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்து செயல்படுகிறது.
2014 வரை 7 எய்ம்ஸ் மட்டுமே இருந்தது. 8 ஆண்டுகளில் 14 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைக் கொடுத்துள்ளோம். தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளைக் கொடுத்துள்ளோம்.
புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மருத்துவ மாணவர்கள், பொறியியல் மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் படிக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுத்துள்ளது.
இவ்வாறு எல்.முருகன் பேசினார்.
- ஜல் ஜீவன் திட்டதின் கீழ் புதுவையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
- புதுவையில் மேம்பாலம் கட்ட ரூ.500 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
மத்திய இணை மந்திரி எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக புதுவை வந்தார்.
இன்று அவர் கட்சி அலுவலகத்தில் பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் சிறப்பு நிதியாக ரூ.1400 கோடி ரூபாய் புதுவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுவையில் மேம்பாலம் கட்ட ரூ.500 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. புதுவை பெஸ்டு புதுவையாக மாற்ற முதல்-அமைச்சருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். புதுவை-விழுப்புரம் சாலை ரூ.92 கோடியில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். புதுவையில் முதல்கட்டமாக 1400 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் திட்டதின் கீழ் புதுவையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் எல்லையை தாண்டுவதும் அவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது குறித்து இலங்கை அரசிடம் பேசி மீனவர்களை மீட்டு வருகிறோம்.
சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் புதுவை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.
விமான நிலைய விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2-வது கட்டமாக இன்று நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமனங்களை பிரதமர் மோடி வழங்கினார்.
- சென்னை ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப். மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு மத்திய மந்திரி எல்.முருகன் தலைமை தாங்கினார்.
திருநின்றவூர்:
மத்திய அரசில் ஒரு ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாடு முழுவதும் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
2-வது கட்டமாக இன்று நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமனங்களை பிரதமர் மோடி வழங்கினார்.
டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அதேநேரத்தில் இதர மாநிலங்களில் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டு வழங்கினர்.
சென்னை ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப். மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு மத்திய மந்திரி எல்.முருகன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் தபால்துறை, மருத்துவ துறை, வங்கி பி.எஸ்.எப். உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய மந்திரி எல்.முருகன் வழங்கினார். சி.ஆர்.பி.எப். துறையின் டி.ஐ.ஜி. தினகரன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அந்தமான் வடக்கு மற்றும் மத்திய மாவட்டத்தில் உள்ள மாயாபந்தரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்கிறார்.
- மீனவர் சமுதாயத்தினருடன் மத்திய மந்திரி எல்.முருகன் உரையாற்றுகிறார்.
சென்னை:
மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு அந்தமானில் சுற்றுப்பயணம் செய்கிறார். சென்னையில் இருந்து இன்று காலை அந்தமான் புறப்பட்டு செல்லும் அவர் போர்ட் ப்ளேரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
நாளை (சனிக்கிழமை) தெற்கு அந்தமான் பகுதியில் உள்ள துர்காபூரில் மீனவ சமுதாயத்தினருடன் அவர் உரையாற்றுகிறார். பின்னர் ராதா கோவிந்த் கோவிலில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளிலும், திக்லிபூர் விருந்தினர் மாளிகையில் நடைபெறும் உள்ளூர் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து, அந்தமான் வடக்கு மற்றும் மத்திய மாவட்டத்தில் உள்ள மாயாபந்தரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். மாயாபந்தர் பஜாரில் மாவட்ட பஞ்சாயத்து சமுதாய கூடத்தில் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் மீனவர் சமுதாயத்தினருடனும் அவர் உரையாற்றுகிறார். தொடர்ந்து பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்க உள்ளார்.
போர்ட் ப்ளேர் தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலாளர், உயர் அதிகாரிகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாக அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) சென்னை திரும்புகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- மத்திய அரசு வேலை என்றால் எந்த மாநிலத்திலும் சென்று பணியாற்ற முடியும்.
- மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களும் அதிகம் வர வேண்டும்.
திருச்சி:
இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்களுக்கு 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கும் ரோஸ்கர் மேளா திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்தார். அதன் மூன்றாம் கட்டமாக 71 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்று பணி ஆணைகளை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக இன்று திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகாமையில் நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு ரெயில்வே, சுங்கத்துறை, கலால் துறை, விமானத்துறை உள்ளிட்ட மத்திய அரசு துறை சார்ந்த 129 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார். அதன்படி கடந்த அக்டோபர் 22-ந்தேதி 75 ஆயிரம் பேருக்கும், அதன் பின்னர் நவம்பர் 22-ந்தேதி 71 ஆயிரம் பேருக்கும் பிரதமர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இன்றைய தினம் மூன்றாவது கட்டமாக நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார். அதேபோன்று கடந்த டிசம்பர் மாதம் புதிதாக பணியில் சேரும் ஒன்றரை லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் முகாமையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
தற்போது புதிதாக வேலையில் சேர்ந்துள்ள இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் தேச முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள்.
2047-ல் நாடு மிகப்பெரிய வல்லரசாக திகழவும், சுய சார்புடன் இருக்கவும் இந்த இளைஞர்கள் பணியாற்ற வேண்டும். மத்திய அரசு வேலை என்றால் எந்த மாநிலத்திலும் சென்று பணியாற்ற முடியும். மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களும் அதிகம் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
+2
- பிரதமர் மோடி என்ன சொல்கிறார் என்று உலக தலைவர்கள் உற்று நோக்குகின்றனர்.
- மேக்கிங் இந்தியா திட்டத்தின்கீழ் பாதுகாப்பு துறை தேவையான தளவாடங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
நெல்லை:
அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) 3 நாள் மாநில மாநாடு நெல்லை சங்கீதசபாவில் நேற்று தொடங்கியது.
மாநாட்டின் 2-ம் நாளான இன்று வையத் தலைமை கொள்ளும் சுயசார்பு பாரதம், திராவிடத்தால் நாம் இழந்தது என்ன என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு பேசியதாவது:-
25 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் மாணவராக கலந்து கொண்டேன். இப்போது மீண்டும் கலந்து கொள்ள வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
1998-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இதுபோன்ற மாநாட்டில் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது உயர்பதவிகளில் இருந்தவர்கள் பாகுபாடின்றி கலந்து கொண்டார்கள்.
இந்தியா, சுயசார்பு பாரதத்தின் கீழ் இயங்கி கொண்டு இருக்கிறது. ஏ.பி.வி.பி. அமைப்பில் இருந்து வந்தவர்கள் தான் இன்று இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
8 ஆண்டுகள் இந்தியா எந்த அளவிற்கு முன்னேறியுள்ளது என்பதை சொல்ல 8 ஆண்டுகள் தேவைப்படும். உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்கி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து, உலக நாடுகள் நம்மை திரும்பி பார்க்கிறது.
பிரதமர் மோடி என்ன சொல்கிறார் என்று உலக தலைவர்கள் உற்று நோக்குகின்றனர். ரஷ்யா, உக்ரைன் போரின்போது உலகத்தில் எந்த நாடுகளும் செய்யாத ஒன்றை இந்தியா செய்தது.
அப்போது உக்ரைனில் மருத்துவம் படித்த 20 ஆயிரம் மாணவர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இதற்கு காரணம் பிரதமர் மோடி உலக தலைவர்களுடன் இணக்கமாக இருந்ததினால் தான்.
மேக்கிங் இந்தியா திட்டத்தின்கீழ் பாதுகாப்பு துறை தேவையான தளவாடங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. இதற்கு பிரதமர் மோடிதான் காரணம். கடல் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் 2-வது இடத்தில் உள்ளோம்.
கொரோனா காலகட்டத்தில் 200 கோடி தடுப்பூசிகள் தயாரித்து இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகத்திற்கும் வினியோகித்தோம்.
ஹாலிவுட் படங்கள் வெளிநாட்டில் தான் எடுக்கப்படும் என்ற நிலையை மாற்றி சென்னை, பெங்களூரு போன்ற இடங்களிலும் அதற்கான தொழில் நுட்ப வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாய்மொழியை ஊக்குவிக்கதான் புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் போட்டியிடவே இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அனைவரும் இணைந்து அனைவருக்கமான வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 5 மணி அளவில் கோவிலுக்கு சென்று சத்ரு சம்கார மூர்த்தி சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தார்.
- சுவாமி மூலவர், சண்முகரை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
திருச்செந்தூர்:
மத்திய இணை மந்திரி எல். முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று நெல்லை வந்தார்.
இந்நிலையில் எல். முருகன் இன்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அதிகாலை 5 மணிக்கு அவர் கோவிலுக்கு சென்று சத்ரு சம்கார மூர்த்தி சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் வெளிபிரகாரத்தில் ஆனந்த விலாசம் மண்டபத்தில் நடைபெற்ற சத்ரு சம்கார மூர்த்தி சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் மீண்டும் கோவிலுக்குள் சென்று சத்ரு சம்கார மூர்த்தி சாமி சன்னதியில் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர் அவர் சுவாமி மூலவர், சண்முகரை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அப்போது பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், சிறுபான்மை பிரிவு அணி தலைவர் ஸ்டீபன் லோபோ, ஆலய மேம்பாட்டு பிரிவு செயலாளர் வினோத், நகர செயலாளர் நவ மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஜி20 மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று பல்வேறு துறைகள் சார்ந்த நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது.
- புதிய கல்வி கொள்கை உலகத்திற்கு போட்டியாக இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை வழிகாட்டும் விதமாக அமையும்.
சென்னை:
இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டையொட்டி பல மாநிலங்களின் தலைநகரங்களில் பல்வேறு தலைப்புகளில் உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னையில் 3 நாள் கல்வி கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. தரமணி ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் 29 நாடுகளை சார்ந்த பிரதிநிதிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் என 900 பேர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து 2-வது நாள் கருத்தரங்கு இன்று காலை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடைபெற்றது.
நேற்று விவாதிக்கப்பட்ட பல்வேறு அம்சங்களின் தொடர்ச்சியாக இன்றைய கூட்டத்தில் அனைத்து நாட்டு பிரதிநிதிகளும் விவாதித்தனர்.
இதில் மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய்மூர்த்தி தொடக்க உரையாற்றினார். மத்திய மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு வரவேற்று பேசினார். அப்போது புதிய கல்வி கொள்கை குறித்து விரிவாக பேசினார்.
இதன்பிறகு மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி20 மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று பல்வேறு துறைகள் சார்ந்த நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது. அந்த வரிசையில் சென்னையில் கல்வி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் 29 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கருத்தரங்கை சென்னையில் நடத்துவது கவுரவத்தை கொடுக்கும் நிகழ்வாக உள்ளது. இந்த மாநாடு மூலம் கல்வித்துறையில் ஆராய்ச்சி மேம்படும். புதுப்புது கண்டுபிடிப்புகள் திறன் முக்கியத்துவம், ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம், புதிய தேசிய கல்வி கொள்கை, தாய்மொழியை ஊக்குவிக்க என பலவற்றுக்கு இது உதவும்.
இன்றைய புதிய கல்வி கொள்கை உலகத்திற்கு போட்டியாக இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை வழிகாட்டும் விதமாக அமையும். தாய்மொழியை ஊக்கப்படுத்தவும் வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.