search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனிக்கிழமை"

    • ஆசைகளை நிறைவேற்றும் சக்தி கற்பூரத்திற்கு உண்டு.
    • திருமண உறவில் சிக்கல் இருந்தால் வெள்ளி அல்லது வேறு ஏதேனும் பாத்திரத்தில் கற்பூரத்தை எரிக்கவும்.

    வாஸ்து சாஸ்திரத்தின்படி வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவர பல வழிகள் உள்ளன. வருமானம் பெருக, வீட்டில் உள்ள கண் திருஷ்டி நீங்க, வேலை கிடைக்க, பல சுப பலன்கள் கிடைக்க சிறு விசயம் செய்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். வாஸ்து படி கற்பூரம் மற்றும் கிராம்பு எரிப்பது பல பிரச்சனைகளை சமாளிக்கும்.

    இரவில் கிராம்பு வைத்து கற்பூரம் கொளுத்துங்கள். ஆசைகளை நிறைவேற்றும் சக்தி கற்பூரத்திற்கு உண்டு. உங்கள் விருப்பம் நன்றாக இருந்தால் அது நிச்சயம் நிறைவேறும்.

    பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபட, சனிக்கிழமை இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன், கிராம்பு மற்றும் கற்பூரத்தை வெள்ளிக் கிண்ணத்தில் எரிக்கவும். இப்படிச் செய்தால் பணப் பற்றாக்குறையைப் போக்கலாம்.


    வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை விரட்ட கற்பூரம், கிராம்பு மற்றும் ஏலக்காய் நன்றாக வேலை செய்கிறது. இவை தீய சக்திகளை வீட்டில் இருந்து விலக்கி வைக்கும். கற்பூரம், ஐந்து ஏலக்காய், ஐந்து கிராம்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து எரிக்கவும். முதலில் பூஜையறையில் வைத்து எரித்துவிட்டு அந்த புகையை வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவ விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் அமைதி உண்டாகும், கண் தோஷம் நீங்கும். எதிர்மறை ஆற்றல்கள் அகற்றப்படும். வீட்டில் இருப்பவர் மீது தீய பார்வை இருந்தால் அது நீங்கும். இவற்றை எரிப்பதன் மூலம் வீட்டில் உள்ள எந்த நோய்வாய்ப்பட்ட நபரின் உடலில் இருந்தும் அந்த பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.

    சனிக்கிழமை மாலை வீட்டில் கிராம்பு மற்றும் கற்பூரத்தை எரிப்பது குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியையும் அன்பையும் தருகிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எதிரிகளிடமிருந்து விடுபடுங்கள். இந்த பரிகாரம் எதிரிகளை விட மேலான கையைப் பெற உதவுகிறது. மேலும் கிராம்பு மற்றும் கற்பூரத்தை எரித்து வர வீட்டில் உள்ள பிணக்குகள் நீங்கும்.


    சில சமயங்களில் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்கள் தொழிலில் வெற்றி பெற முடியாது. இது போன்ற சமயங்களில் கற்பூரத்துடன் இந்த தீர்வை முயற்சிக்கவும். இந்த அணுகுமுறை நீங்கள் விரும்பிய வெற்றியைத் தரும். வேலை நேர்காணலுக்குச் செல்லும்போது கற்பூரம் மற்றும் கிராம்பு எரிப்பது நல்லது. மேலும் இரண்டு கிராம்புகளை வாயில் போட்டுவிட்டு வெளியே செல்லவும். நேர்காணலுக்குச் செல்வதற்கு முன் அவற்றை அசைக்கவும். இப்படி செய்தால் வேலை கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம். கடுகு எண்ணெயில் இரண்டு கிராம்புகளைப் போட்டு, காலையில் கடவுளுக்கு அருகில் தீபம் ஏற்றவும். அதன் பிறகு நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தொழிலில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும்.

    திருமண உறவில் சிக்கல் இருந்தால் வெள்ளி அல்லது வேறு ஏதேனும் பாத்திரத்தில் கற்பூரத்தை எரிக்கவும். அறையின் மூலையில் இரண்டு கற்பூரங்களை வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் இரவில் கற்பூரம் மற்றும் கிராம்புகளை எரிப்பதால் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கும். ஆறு கற்பூரம் மற்றும் 36 கிராம்புகளை எடுத்து வீட்டில் தூவி உங்கள் திருமண வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கும்.

    • சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
    • திரளாள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வட்டம், திருபுவனம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சின்ன சீரங்கம் எனப்படும் அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளாள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    • பிளஸ் 2வில் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • நடப்பாண்டு பிளஸ் 1 மாணவருக்கும் பயிற்சி வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி வழங்குகிறது. பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் பிளஸ் 1ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பிளஸ் 1 மாணவர்கள், 10-ம்வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    பிளஸ் 2வில் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களும், பிளஸ் 1ல் ஒரு ஒன்றியத்துக்கு 20 மாணவர்களும் என ஒன்றியத்துக்கு 70 மாணவர் தேர்வு செய்து பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை பிளஸ் 2 மாணவருக்கு மட்டுமே நீட் பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு பிளஸ் 1 மாணவருக்கும் பயிற்சி வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒன்றியத்துக்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து சனிக்கிழமை தோறும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். நவம்பர் மூன்றாவது வாரம் பயிற்சி வகுப்பு துவங்கும். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு வழியிலும் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும். நேரடி வகுப்புகளாக நடத்தப்படும். மாணவரின் வருகை மற்றும் மதிப்பெண் பதிவுகள் கவனத்தில் கொள்ளப்படும் என்றனர்.

    • ஆதி கேசவ சேவா சங்க டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    • காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்

    கன்னியாகுமரி:

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பர். மேலும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை தரிசிப்பது சிறப்பானது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.

    நேற்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூ டங்கள் வேலை நாளாக இருந்தபோதும் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில், பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் அலயம், கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேசப்பெருமாள் ஆலயம் ஆகியவற்றில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருவட்டார் ஆதிகே சவப்பெருமாள் கோவி லில் காலை சிறப்பு பூஜை களைத்தொடர்ந்து மதியம் ஸ்ரீபலி பூஜை நடைபெற்றது. மதியம் சிறப்பு அன்ன தானம், மாலையில் சூரி யனின் ஒளிக்கதிர்கள் ஆதி கேசவப் பெருமாளின் திருமேனியில் விழும் நிகழ்வு ஆகியன நடந்தது.

    நேற்று மாலையில் சூரியக் கதிர்கள் விழும் நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இன்றும் சூரியக்கதிர் பெருமாளின் திருமேனியில் விழும் நிகழ்வு நடைபெறும்.

    புரட்டாசி சனிக்கிழமை என்பதால் வழக்கத்தை விட ஏராளமான பக்தர் கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.கிருஷ்ணன் சன்னதியில் முழுக்காப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து ஆதி கேசவ சேவா சங்க டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு பிர சாதம் வழங்கப்பட்டது.

    • திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் அதிகாலையில் மகா திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடைபெற்றது.
    • ஸ்ரீவீரராகவப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பூர் :

    புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் அதிகாலையில், ஸ்ரீதேவி பூமிதேவி தாயார் சமேத வீரராகவப்பெருமாளுக்கு மகா திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. அடுத்தாக, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கோவில் கொடிமரம் அருகே கருட வாகனத்துடன் பக்தர்களுக்கு சேவைசாதித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விரதம் இருக்கும் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

    அவிநாசி அருகே மொண்டிபாளையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில், தாளக்கரை ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. காங்கேயம் அருகே உள்ள பெருமாள் மலையில் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்போர் இங்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று பிரசன்ன வெங்கட பெருமாளுக்கு மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. சிறப்பு பூஜையில் திருப்பூர், காங்கேயம், சிவன்மலை, ஊதியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருப்பூர் அருகே அவிநாசிபாளையத்தில் ராமசாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டும் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி ராமசாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக அவிநாசிபாளையம் - பொங்கலுார் ரோட்டில் தற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலை 5மணி முதல் இரவு 7 மணி வரை திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையம், திருப்பூர் பழைய பஸ் நிலையம், காங்கயம், பல்லடம், தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    திருப்பூர் மற்றும் அவிநாசியில் இருந்து தாளக்கரை லட்சுமிநரசிம்மர் கோவில், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கும் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. உடுமலை நெல்லுக்கடை வீதியில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவில்,உடுமலை பெரிய கடை வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோவில், ஊத்துக்குளி ரோடு தென்திருப்பதி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

    • முக்கிய ரோடுகளில், ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
    • கோட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் ;

    திருப்பூர் மாவட்ட சாலை பாதுகாப்பு குழுவில் திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள முக்கிய ரோடுகளில், ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக, ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையில் கோட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி அமைப்புகள், போலீசார், நெடுஞ்சாலைத்துறை, மின்துறை என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளனர்.

    கலெக்டர் உத்தரவுப்படி திருப்பூர் ஆர்.டி.ஓ., தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இது குறித்து கலெக்டர் வினீத் கூறியதாவது:- திருப்பூர் வருவாய் கோட்டத்தில் சனிக்கிழமை தோறும், ஆக்கிரமிப்பு அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., தலைமையிலான குழுவினர், முறையான முன்னறிவிப்பு செய்து நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.ஒவ்வொரு ரோடு வாரியாக, வாரம் தோறும் ஆக்கிரமிப்பு அகற்றி புதிய ஆக்கிரமிப்பு உருவாகாமல் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×