என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறந்த நாள் விழா"

    • காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் லலித் ஆண்டனி தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரியில் 5 ரோடு ரவுண்டானா அருகில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் லலித் ஆண்டனி தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.சி.சேகர், மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு

    முன்னாள் மாவட்ட தலைவர் அக. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நடராஜன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். முன்னதாக மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும், தர்கா, தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திர வர்மா, மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன், கவுன்சிலர் விநாயகம், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் கமலக்கண்ணன், நகர துணை தலைவர்கள் பிலால், மரிய இருதயம், வட்டார தலைவர்கள் மாது, கோபால், அமல்ராஜ், முன்னாள் நகர தலைவர் முபாரக், காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் விழா ஓசூரில் கொண்டாடப்பட்டது.
    • மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க.சார்பில், மறைந்த முன்னாள் தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் விழா ஓசூரில் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, ஓசூர் தாலுக்கா அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், அதனைத்தொடர்ந்து அன்பழகன் உருவப்படத்திற்கும் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர்கள் ராமு, வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், நாகராஜ் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
    • ஒன்றிய பிரதிநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையத்தில் மறைந்த முன்னாள் கல்வி அமைச்சரும், பேராசிரியருமான அன்பழகனின் 100-வது பிறந்த நாள் விழாவையொட்டி மத்தூர் தி.மு.க. (வடக்கு) ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் குண வசந்தரசு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் மத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், முன்னாள் ஒன்றிய குழுத் துணைத் தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் தலைவரும், ஊராட்சி செயலாளருமான கமலநாதன், ஒன்றிய துணை செயலாளர் ஜீவானந்தம் ,கண்ணன்ட ஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.எஸ்.சங்கர்,நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி கதிர்வேல், ஒட்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ்குமார், கே.எட்டிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாள் மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்தராஜ், சாந்தமூர்த்தி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய பிரதிநிதி தனசேகரன், கண்ணுகானூர் குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பேராசிரியருமான அன்பழகனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
    • அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பெரும்பாலை,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் பஸ் ஸ்டாண்டில் தி.மு.க. முன்னாள் பொது செயலாளரும் பேராசிரியருமான அன்பழகனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

    இதில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பொதுமக்ககளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இதில் ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ,மாவட்ட பிரதிநிதி தனபாலன், ஏரியூர் ஒன்றிய துணை செயலாளர்கள் சம்பத்குமார், சின்னு மஞ்ச நாயக்கன அள்ளி கவுன்சிலர் வையாபுரி, ராமகொண்ட அள்ளி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணன், நாகமரை ஊராட்சி செயலாளர் திருமுருகன், மஞ்சாரள்ளி புஷ்பராஜ், ஏரியூர் பகுதி கிளை செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • காவிப்படை சொந்தங்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி தேசிய இளைஞர் தினம் ஒன்றிய தலைவர் நாகராஜ் தலைமையில் கமலம் இன்டர்நேஷனல் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் பெரியாம்பட்டியில் உள்ள மனநல காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது .இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட செயலாளர் தெய்வமணி, இளைஞர் அணி தலைவர் மௌனகுரு மற்றும் ஒன்றிய பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் சக்திவேல் ,இளைஞர் அணி விக்னேஷ் ஓ .பி. சி. அணி ஒன்றிய துணைத் தலைவர் ரமேஷ், ஒன்றிய இளைஞரணி, செயற்குழு உறுப்பினர்கள் அன்பு மற்றும் அருள், கிளை தலைவர்கள் சபரி, ஜீவானந்தம், செந்தில் வேல், அருள், ராதாகிருஷ்ணன், எம்..ஜி.ஆர். சின்னதுரை மற்றும் காவிப்படை சொந்தங்கள் திருவிழா கலந்து கொண்டனர்.

    • எஸ்.புதூர் ஒன்றியத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா, ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா, ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், அவைத்தலைவர் நாகராஜன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக கூறி வந்த நீட் தேர்வு ரத்து இன்று வரை தீர்வு காணப்படாத ஒரு கனவாகவே இருந்து வருகிறது. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மக்களுக்கு பலனளிக்கும் துறையில் இருந்து வந்த 2 அமைச்சர்களை அமைச்சரவை மாற்றம் என்ற பெயரில் மாற்றம் செய்து ஏனோ தானோ என்ற பேரில் துறையை வழங்கி உள்ளார் என்றார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் வாசு, குணசேகரன், சுப்பிரமணியன், வேலு, செந்தில்குமார், ஜெகன், ஒன்றிய தலைவர்கள் திவ்யா பிரபு, விஜயகுமார், ஒன்றிய அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் நேரு, நெற்குப்பை பேரூர் செயலாளர் அடைக்கப்பன், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் நாகராஜன், துலாவூர் பார்த்திபன் மற்றும் மாவட்ட, ஒன்றி,ய பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூர் அருகே மத்திகிரியில், மாநகர தெற்கு பகுதி அ.தி.மு.க. சார்பில், கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு, தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர்.வாசுதேவன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஜெ.பி.என்ற ஜெயப்பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவின் போது, ஜெயலலிதா படத்துக்கு பூஜைகள் செய்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    பின்னர், கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாமன்ற உறுப்பினர் கலாவதி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகிகள் சாக்கப்பா, கிருஷ்ணன், மற்றும் முகமது இப்ராகிம், சுரேஷ்பாபு, முத்துராஜ் உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி கதிர்வேல் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
    • குழுத் தலைவர் சாந்தா குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார்

     மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வடக்கு ஒன்றியம் நாகம்பட்டி ஊராட்சி என். மோட்டூரில் தமிழகத முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் கொண்டாடபட்டது, இதனையடுத்து நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி கதிர்வேல் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் சாந்தா குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார் . மேலும் மத்தூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பிரேம்குமார் ,என் மோட்டூர் கிளை செயலாளர் திருநாவுக்கரசு, வார்டு உறுப்பினர் சக்திவேல், சங்கர், ராமமூர்த்தி, முன்னாள் கிளை செயலாளர் அன்பு, கிருஷ்ணமூர்த்தி, மோகன்ராஜ், ராம்குமார், அன்பழகன், முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் தலைமையேற்றார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் தொரை கொடியேற்றி வைத்தார். ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, ராஜா, மாவட்ட பிரதிநிதி தம்பி இஸ்மாயில், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், நகர துணை செயலாளர் ரீட்டாமேரி பர்னபாஸ், நகர பொருளாளர் அணில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் அந்தோனி மேத்யூஸ், ஜெயராமன், மார்கெட் ரவி, தியாகு, சசிகுமார், ராஜன், அமலநாதன், மல்லிகொரை மூர்த்தி, தர்மராஜ், ஆல்துரை, ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கஜேந்திரன், விஷ்னு, ரகுபதி, கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பர்னபாஸ், வெங்கடேஷ், ஸ்டான்லி, பாபுராஜ், ஊட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் குண்டன், பௌ்ளன், செல்வம், காளி, மாதன், ராஜேஷ் மற்றும் இளைஞர் அணியினர் விவேக், மீன்ராஜ், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • என்.ஏ.ராமச் சந்திரராஜாவின் 99-ஆவது பிறந்த நாள் விழா 2 நாட்கள் கொண்டாடப்பட்டது.
    • ”வாழப் பழகலாம் வாங்க” என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினாா்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி, ந.அ.மஞ்சம்மாள் நினைவு தொடக்கப்பள்ளி மற்றும் ந.அ.மஞ்சம்மாள் தொழில் நுட்பக்கல்லூாி ஆகிய கல்வி நிறுவனங்களை நிறுவிய கல்வி வள்ளல், தொழில திபா் அமரா் என்.ஏ.ராமச் சந்திரராஜாவின் 99-ஆவது பிறந்தநாள் விழா 2 நாட்கள் கொண்டாடப்பட்டது.

    முதல்நாள் நிகழ்வாக, என்.ஆா்.கிருஷ்ணம ராஜா மண்டபத்தில் செந்த மிழ்ச்சுடா் சிவக்குமாா் "வாழப் பழகலாம் வாங்க" என்னும் தலைப்பில் சொ ற்பொழிவாற்றினாா்.

    2-ம் நாள் விழா மதுரை ரோட்டில் ந.அ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப் பள்ளிக்கு வடபுறம் அமைந்துள்ள "சாந்தி ஸ்தல்" நினைவுப் பூங்காவில் நடை பெற்றன. காலை நிகழ்ச்சி யில், மானேஜிங் டிரஸ்ட்டி என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி ராஜா நிறுவனரது நினை வாலயத்தில் மாலைகள் அணிவித்து மலா்களால் வழிபாடு செய்தாா். மேலும், நினைவுப்பூங்காவைப் பராமரித்துவரும் ஊழியா்களுக்கு வேட்டி சேலைகள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கினாா். தொடா்ந்து ஸ்ரீவில்லி புத்தூா் ஸ்திரிரத்னா கலைவளர்மணி உமா சந்திரசேகா் மற்றும் குழுவினரின் கீா்த்தனாஞ்ஜலி நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, என்.ஏ.ராமச்சந்திரராஜா குருகுலத் தாளாளா் மஞ்சுளா கிருஷ்ணமூா்த்தி ராஜா முன்னிலை வகித்தாா்.

    விழாவில், கடையநல்லூா் முனைவா் சங்கர நாரா யணன் வீணை இசையால் நிறுவனருக்கு வீணாஞ்ஜலி செலுத்தினாா். ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிாியா் நல்லா சிாியர் ரமேஷ் வரவேற்றுப் பேசினாா். முடிவில் பட்டதாாி உதவித் தலைமை ஆசிாியா் இளையபெருமாள் நன்றி கூறினாா். தமிழாசி ரியர் பிரான்சிஸ் அருள்ராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    • தி.மு.க.மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
    • கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்க வேண்டும்

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் ராஜ ரத்தினம் தலைமை தாங்கி னார். மாவட்ட செய லாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்து கொண்டு பேசினார்.

    மாநகர செயலாளர் ஆனந்த் வரவேற்றார். பொருளாளர் கேட்சன், குளச்சல் சட்டமன்ற பார்வையாளர் அருண், துணை செயலாளர் கரோலின் ஆலிவர் தாஸ், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், சற்குரு கண்ணன், லிவிங்ஸ்டன், சுரேந்திரகுமார், பிராங்கி ளின், பாபு, ரமேஷ்பாபு, செல்வம், சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தொழில் முதலீட்டை பெருக்குகின்ற வகையில் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய மேலை நாடுகளுக்கு சென்று வெற்றி வாகை சூடி வருகை தரவுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மனதார வாழ்த்துவது, முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதியின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை வருகிற 3-ந்தேதி தொடங்கி அடுத்த வருடம் 3-ந் தேதி வரை சிறப்பாக கொண்டாடு வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டம், நகரம், பகுதி, ஒன்றியம், வட்டம் பகுதி களில் நலத்திட்ட உதவிகள், இலவச மருத்துவ முகாம், ரத்த தான முகாம்கள், ஆதரவற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அறுசுவை உணவு வழங்குதல், நோட்டுப்புத்தகம், எழுது பொருள் வழங்குதல், கருணாநிதியின் சிறப்புகளை விளக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள், பட்டி மன்ற கலை நிகழ்ச்சி கட்டுரை போட்டிகளை நடத்துவது. நூற்றாண்டு விழா தொடக்க நாளான வருகிற ஜூன் 3-ந்தேதி குமரி கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் மற்றும் கிளை கழகங்களிலும் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை விரிவுபடுத்தி புதிய உறுப்பினர்களை தீவிரமாக சேர்ப்பது, ஜூன் 3-ந்தேதி சென்னையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்டம் சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, பகுதி செயலாளர்கள் சேக் மீரான், ஜவகர், துரை, ஜீவா மற்றும் குமரி ஸ்டீபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கருணாநிதியின் 100வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • தொடர்ந்து ஒரிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மவுன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான மதியழகன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், தலலமை செயற்குழு உறுப்பினர் பரிதாநவாப், நகர செயலாளர் நவாப், பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லாம், நாகராஜ், சித்ரா சந்திரசேகர், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன் மற்றும் அன்பரசன், மதியழகன், நிர்வாகிகள் கடரலசுமூர்த்தி, திருமலைச்செல்வன், மோதிலால், டேம் பிரகாஷ், ஜமுனா புருஷோத்தமன், கேபிள் சரவணன், ராஜசேகர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஒரிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மவுன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ×