என் மலர்
நீங்கள் தேடியது "கடத்தி"
- பண்டிகை காலம் நெருங்குவதை ஒட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வாகனத்தை சோதனை செய்து போது அதில் வெளிமாநில பாண்டிச்சேரி சாராயம் கடத்தி வந்ததனர்.
நன்னிலம்:
பண்டிகை காலம் நெருங்குவதை ஒட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா பேரளம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருக்கொட்டாரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காரைக்காலில் இருந்து வந்த காரை மறித்து சோதனை செய்ய முயன்றனர்.
அப்பபோது காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர்.
சந்தேக அடிப்படையில் வாகனத்தை சோதனை செய்து போது அதில் வெளிமாநில பாண்டிச்சேரி சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதை அடுத்து காரில் இருந்த ரூ 75 ஆயிரம் மதிப்புள்ள 2500 பாக்கெட் சாராயத்தையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடியவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
- பவானி போலீஸ் நிலையத்தில் அந்த மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
- போலீசார் அருண்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பவானி:
பவானி பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பவானி போலீஸ் நிலையத்தில் அந்த மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் திருவண்ணாமலை பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த அருண்குமார் (19). என்பவர் பவானியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி வேலை பார்த்து வருவதும், அவர் தான் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அருண்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பிளஸ்-2 மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பவானியில் பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது.
- 1,520 கிலோ ரேஷன் அரிசி 38 மூட்டைகளில் கட்டி வட மாநிலத்தவருக்கு கூடுதல் விலைக்கு விற்க எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.
- பின்னர் அவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்க ப்பட்டனர். அவர்களிட மிருந்து சரக்கு ஆட்டோ, ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு இன்ஸ்பெ க்டர் பன்னீர்செல்வம் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்ட போலீசார் கருங்கல்பாளையம், கிருஷ்ணம் பாளையம், பம்பிங் ஸ்டேஷன் ரோட்டில் வாகன சோதனை–யில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் 1,520 கிலோ ரேஷன் அரிசி 38 மூட்டைகளில் கட்டி வட மாநிலத்தவருக்கு கூடுதல் விலைக்கு விற்க எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக ஈரோடு கருங்கல்பாளை யத்தை சேர்ந்த பன்னீர் (60) சுரேஷ் (36) ஈரோடு நொச்சிகாட்டு வலசை சேர்ந்த தினகரன் (29) நாமக்கல் குமார பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி ( 23) ஈரோடு கருங்கல்பாளையம் சுரேஷ் (35) அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (25) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்க ப்பட்டனர். அவர்களிட மிருந்து சரக்கு ஆட்டோ, ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம்:
சேலம் மாவட்டம் கரிய கோவில் அருகே உள்ள பகுடு பட்டி ஏரி வளைவுப் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 40). விவசாயி.
இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை . இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.
அப்போது கீரைகடை பிரிவு ரோட்டில் டீக்கடை வைத்திருந்த மூலப் பாடியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மணி வேலை 2 பேர் தேடி வந்ததாகவும், வீட்டு முகவரி மற்றும் போன் நம்பரை கேட்டதாகவும் தெரிவித்தார்.
இதனால் மணிவேல் மனைவி ரஞ்சிதம் அதிர்ச்சி அடைந்தார் .இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மணிவேல் தனது மனைவி ரஞ்சிதத்திடம் செல்போனில் பேசினார் .அப்போது தன்னை 2 பேர் காரில் கடத்தி சென்று விட்டதாக கூறினார்.
உடனடியாக செல்போன் அழைப்பு துண்டிக்–கப்பட்டது . இதையடுத்து அவர் பேசிய நம்பரை தொடர்பு கொண்டபோது செல்போன்