என் மலர்
நீங்கள் தேடியது "பிறந்தநாள் விழா"
- திருப்பூர் மாவட்டம் முழுவதும் 8 சட்டமன்றத் தொகுதிகளில் பல்வேறு விழாக்கள் நடைபெற இருக்கிறது.
- நற்பணி மன்றத்தில் இணைக்கும் இணைப்பு விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற தலைவர் என்.எஸ்.கே.சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் இன்று முதல் 10 நாட்கள் தொடர்ந்து விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் டிசம்பர் 2-ந் தேதி உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாநில தலைவர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளைெயாட்டி தொடர்ந்து 10 நாட்கள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 8 சட்டமன்றத் தொகுதிகளில் பல்வேறு விழாக்கள் நடைபெற இருக்கிறது.
குறிப்பாக ஆதரவற்றோர் விடுதிகளுக்கு அன்னதானம், பல துறை மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம், ரத்ததான முகாம், நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்குதல், பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை, புதிதாக உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற பெயர் பலகை திறப்பு விழா, மாற்று கட்சியில் இருந்து நண்பர்களை நற்பணி மன்றத்தில் இணைக்கும் இணைப்பு விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழா தொடக்கமாக உடுமலைப்பேட்டை நகராட்சி தேஜஸ் மகாலில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
10 நாட்கள் விழாவில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள், கழகத்தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும். இ்வ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் வழங்கினார்.
- இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் விமல், தென்பழஞ்சி சுரேஷ், பெருங்குடி வசந்த் முன்னிலை வகித்தனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் சார்பில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அறிவுறுத்தலின்படி திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன் தலைமை தாங்கினார். இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் விமல், தென்பழஞ்சி சுரேஷ், பெருங்குடி வசந்த் முன்னிலை வகித்தனர்.
வட்ட செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழைகளுக்கு தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம், சலவைப் பெட்டி ஆகியவற்றை வழங்கினார்.
இதில் மாவட்ட கவுன்சிலர் புவனேசுவரி ராஜசேகர், அரசு வழக்கறிஞர் சிவராஜா நீதி மன்னன், ஏசு சாமுவேல், இளைஞர் அணி சாரதி, அவனியாபுரம் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்
- அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வெற்றியை முன்னிட்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
- ஊத்துக்குளி நகரத் தலைவர் வேலன், இளைஞர் அணி சந்தோஷ், கொமதேக. தீபன், மற்றும் தொண்டர்கள் ,நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஊத்துக்குளி :
ஊத்துக்குளி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வெற்றியை முன்னிட்டு ஊத்துக்குளி பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஊத்துக்குளி வட்டாரத் தலைவர் சர்வேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், மாவட்ட பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோஜ் குமார், மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் காளிதாஸ், ஊத்துக்குளி நகரத் தலைவர் வேலன், இளைஞர் அணி சந்தோஷ், கொமதேக. தீபன், மற்றும் தொண்டர்கள் ,நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- காங்கயம் பா.ஜ.க. நகர தலைவர் சிவப்பிரகாஷ் தலைமை தாங்கினார்.
- காங்கயம் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காங்கயம் :
காங்கயம் நகர பஸ் நிலைய வளாகத்தில் நகர பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கயம் பா.ஜ.க. நகர தலைவர் சிவப்பிரகாஷ் தலைமை தாங்கினார். வாஜ்பாயின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கட்சி–யின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதே போல் காங்கயம் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது.
- பா.ஜ.க. சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் மருந்துகள் வைக்கும் இரும்பு அலமாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் மருந்துகள் வைக்கும் இரும்பு அலமாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.மணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கே.சி.எம்.பி.சீனிவாசன், மாவட்டத் துணைத் தலைவர்கள் வினோத் வெங்கடேஷ், ஜி.கே.எஸ்.பாலு மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் வடிவேலன்,ரமேஷ், தினேஷ், பன்னீர் செல்வகுமார், கனக செல்வம், நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது.
- பள்ளபாளையம் வாளவாடி ஆகிய இடங்களிலும் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
- ஆதித்யா ராஜ் மற்றும் மாநில,மாவட்ட,நகர,வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உடுமலை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே .வாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்உடுமலை நகரத்தில் ஏரி பாளையம் மற்றும் ரயில் நிலையம் அருகிலும் மேலும் போடிபட்டி,பள்ளபாளையம் வாளவாடி ஆகிய இடங்களிலும் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும்,அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் மாவட்டத் தலைவர் டி.ரெத்தினவேல்,மாநில செயற்குழு உறுப்பினர் யு .கே. சி. முத்துக்குமாரசாமி, மாநில இளைஞரணி துணைத்தலைவர் அபிராமி செந்தில்குமார்,நகரத் தலைவர் பாலகிருஷ்ணன்,வட்டாரத் தலைவர்கள் அருளானந்தம்,ரவிச்சந்திரன் மாவட்ட மகளிர் அணி தலைவி மீனா குமாரி,மாவட்ட இளைஞரணி தலைவர் பிரசாந்த் குமார்,மாவட்ட மாணவர் அணி தலைவர் ஆதித்யா ராஜ் மற்றும் மாநில,மாவட்ட,நகர,வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கனிமொழியின் பிறந்தநாள் விழா சித்தம்பலம் பிரிவில் கொண்டாடப்பட்டது.
- தி.மு.க. கொடி ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் பிறந்தநாள் விழா சித்தம்பலம் பிரிவில் கொண்டாடப்பட்டது.
ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் தி.மு.க. கொடி ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. நிர்வாகிகள் சாமிநாதன், சசிகுமார் இளைஞர் அணி ராஜேஸ்வரன், பாலகுமார், குப்புசாமி, பிரகாஷ், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கனிமொழி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- குடியாத்தம் நகர அ.தி.மு.க. சார்பில் நடந்தது
- அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டது
குடியாத்தம்:
குடியாத்தம் நகர அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு குடியாத்தம் படவேட்டு எல்லையம்மன் கோவில் அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் உருவ படத்துடன் மேள தாளங்களுடன் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகர செயலாளர் ஜே.கே.என்.பழனி தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா, முன்னாள் நகர மன்ற தலைவர் எம்.பாஸ்கர், நகர் மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, வழக்கறிஞர் கே.எம்.பூபதி, நகர நிர்வாகிகள் ஆர்.கே.அன்பு, வி.என்.தனஞ்செயன், கே.அமுதாகருணா, எஸ். என்.சுந்தரேசன், எஸ்.ஐ. அன்வர்பாஷா, அட்சயாவினோத்குமார், எம்.கே. சலீம், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ்.டி.மோகன்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் த.வேலழகன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் அன்னதானங்களை தொடங்கி வைத்தார். நகரில் உள்ள 36 வார்டுகளிலும் எம்.ஜி.ஆர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டது.
- ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- மளிகை சுப்பிரமணி தங்கவேல், வெள்ளியங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கயம் :
நத்தக்காடையூர் பகுதி அ.தி.மு.க. சார்பில் கடைவீதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் எஸ்.இளங்கோ தலைமை தாங்கினார். காங்கயம் ஒன்றிய செயலாளர் என்.எஸ்.என்.நடராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் பழையகோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் ராசு சண்முக சேகரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் பி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம், எம்.கே.குமாரசாமி, சிவு சென்னியப்பன், என்.பொன்னுச்சாமி, தம்பி பழனிச்சாமி, ஜெயபிரகாஷ், ஆர்.எஸ். கலைமணி, மளிகை சுப்பிரமணி தங்கவேல், வெள்ளியங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடந்தது.
- வட்ட செயலாளர்கள் இலைக்கடை சரவணன், பக்கீர்முகம்மது, ஜோசப்விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா நடந்தது. இதையொட்டி ஐந்து விளக்கு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழச்சியில் மாவட்ட மகளிரணி தலைவர் டாக்டர் சித்ராதேவி, மாவட்ட மகளிரணி இணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர், நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், ராம்குமார், அமுதா, கனகவள்ளி, நகர மகளிரணி செயலாளர் சுலோச்சனா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சேதுபதி, கணேசன், மாவட்ட பிரதிநிதி தட்சிணாமூர்த்தி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனரணி இணை செயலாளர் ஆரோக்கியசாமி, வட்ட செயலாளர்கள் இலைக்கடை சரவணன், பக்கீர்முகம்மது, ஜோசப்விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- பேரூர் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் விழாவில் முன்னிலை வகித்தார்.
- பிறந்தநாள் விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சிவகிரி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகிரி பேரூர் தி.மு.க. சார்பில் சிவகிரி பஸ் நிலையம் முன்புறம் உள்ள கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் மருதப்பன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், பேராசிரியர் நல்லசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் முனி யாண்டி, மருதுபாண்டியன், சி.எஸ்.மணி, தங்கராஜ், கார்த்திக், முருகன், அழகு சுந்தரம், ராமச்சந்திரன், முத்தையா, குமாரவேல், ஆனந்தா ஆறுமுகம், பேரூர் துணை செயலாளர், பொருளாளர், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 13 தங்க மோதிரம், ரூ.1 லட்சம், கேமரா திருட்டு
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் - இளவேனில் தம்பதியினரின் பெண் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் விழாவை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு கொண்டாடினர்.
அப்போது திருமண மண்டபத்தில் குழந்தைக்குப் பரிசாக வழங்கப்பட்ட 13 மோதிரம், 5 பவுன் நகை, 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமரா உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக அஜித்குமார் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமண மண்டபத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.