search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நட்சத்திரம்"

    • நாசாவின் எக்சோபிளானட் சர்வே சாட்டிலைட் [TESS] என்ற தொலைநோக்கி மூலம் இதை கண்டுபிடித்துள்ளனர்.
    • சூரியனின் எடையில் 26 சதவீதம் உள்ள Gliese 12b கிரகத்தில் 42° செல்ஸியஸ் தட்பவெப்பம் காணப்படுகிறது.

    பூமியைப் போல் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற தன்மைகளைக் கொண்ட வெளிப்புற கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனைச் சுற்றும் கிரகங்கள் சூரியக் குடும்பத்தில் அடங்கும். அதுபோல கூறிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள நட்சத்திரங்களைச் சுற்றும் கண்டுபிடிக்கப்படும் கிரகங்கள் வெளிப்புற கோள்கள் [எக்ஸோபிளானட்ஸ்] என்று அழைக்கப்டுகின்றன. இதுவரை இதுபோல 5,600 வெளிக்கோள்கள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

     

    அந்த வகையில் நட்சத்திர மண்டலத்தில் 40 ஒளியாண்டுகள் தொலைவில் உயிர்கள் வாழ்வதற்கான தன்மைகளைக் கொண்ட புதிய வெளிப்புறக் கிரகத்தை நாசாவின் எக்சோபிளானட் சர்வே சாட்டிலைட் [TESS] என்ற தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கோளுக்கு Gliese 12b என்று பெயரிடப்பட்டுள்ளது.

    டுவார்ப் விண்மீனை ஒருமுறை சுற்றிவர இந்த கிரகம் 12.8 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. பூமி மற்றும் வீனஸ் [வெள்ளி] ஆகிய கிரங்களின் எடைகளுக்கு இடைப்பட்ட எடையில் உள்ள Gliese 12b கிரகத்தில் திரவ நீர் இருக்க அதிகம் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

     

    சூரியனின் எடையில் 26 சதவீதம் உள்ள Gliese 12b கிரகத்தில் 42° செல்ஸியஸ் தட்பவெப்பம் காணப்படுகிறது. திரவ நீர் மற்றும் உயிர்கள் வாழ்வதற்கான தட்பவெப்பம் ஆகியவை ஒருங்கே அமைந்த இந்த புதிய கிரகம் குறித்து விஞ்ஞானிகள் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்து வருகின்றனர். 

    • மணிநேரத்துக்குச் சராசரியாக1 மில்லயன் மைல் [16,09,344 kmph] வேகத்தில் நகரும் மர்மப் பொருள் ஒன்றை கண்டறிந்துள்ளது.
    • இதை விண்களாகவோ நட்சத்திரமாகவோ வகைப்படுத்த முடியவில்லை.

     ஆகாயத்தில் நிறைந்துள்ள அதிசயங்கள் பெரும்பாலானவை இன்னும் கண்டறியப் படாமலேயே இருந்து வருகிறது. காலங்காலமாக மனிதர்கள் விண்வெளியின் ரகசியங்களை அறிந்து கொள்வதில் தீரா வேட்கையுடன் செயலாற்றி வருகின்றனர். அறிவியல் வளர்ச்சி அந்த தேடுதலுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.

    அந்த வகையில் உலகின் மிக மேம்பட்ட அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தற்போது விண்வெளியில் ஒரு மணிநேரத்துக்குச் சராசரியாக1 மில்லயன் மைல் [16,09,344 kmph] வேகத்தில் நகரும் மர்மப் பொருள் ஒன்றை கண்டறிந்துள்ளது. பால் வெளியை வீட்டு இந்த பொருளானது 1 மில்லயன் மைல் வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது.

    பிளான்ட் 9 என்று திட்டத்தின்கீழ் நடந்த ஆய்வில் இந்த பொருளானது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருளுக்கு CWISE J1249 என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.ஆகாயத்தை இன்பிராரெட் ஒளியின் வழியாக ஆராய்ந்த இந்த மர்ம பொருள் விஞ்ஞானிகள் கவனத்துக்கு வந்துள்ளது.

     

    இதை விண்களாகவோ நட்சத்திரமாகவோ உறுதியாக வகைப்படுத்த முடியவில்லை. இந்த பொருளின் மையத்தில் ஹட்ரஜன் காணப்படவில்லை. எனவே இதை வாயு நிறைந்த ராட்சத கிரகம் மற்றும் குறைந்த நிறை கொண்ட நட்சத்திரம் ஆகிய இரண்டு வரையறைக்கு இடைப்பட்ட பொருளாக வகைப்படுத்த முடியும் என்பர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

    • மாமியார் ராசிக்கு மருமகள் ராசியானது 6, 8-வது ராசியாக வந்தால் தம்பதியினரை தனி குடும்பம் வைப்பது நல்லது.
    • பெண்ணிற்கு 22வது நட்சத்திரத்தில் உள்ள ஆண் மகனை திருமணம் செய்தால் அந்த ஆணிற்கு ஆயுள் குறைந்துவிடும்.

    திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் முக்கியமான ஒன்றாகும். திருமணம் என்றாலே திருமணம் செய்ய போகும் தம்பதியினருக்கு ஜாதக பொருத்தம் பார்த்து செய்வது பாரம்பரிய வழக்கமாகும். இப்போது ஒரே ராசி நட்சத்திரத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் செய்யலாமா என்பதை முழுமையாக தெரிந்துக்கொள்ளுவோம்..

    திருமணம் என்பது கணவன் மனைவியாக அமையும் தாம்பத்தியினரின் மகிழ்ச்சியான வாழ்க்கை, குழந்தை பேறு, ஆயுள், செல்வநிலை, சுபிட்சமான எதிர்கால நிலை போன்ற எதிர்கால அம்சங்களை இருவரின் ஜாதகங்களை வைத்து அவர்களுடைய ராசி, நட்சத்திரம் கிரகங்களை வைத்து ஜோதிடர்கள் கணித்து கூறுவது வழக்கம்.

    திருமணம் செய்ய போகும் இருவருக்கும் ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் கொண்டவர்களுக்கு பொருத்தம் பார்க்கும் போது தம்பதியினரின் பிறந்த நட்சத்திரத்தினை வைத்து 10 பொருத்தங்கள் மற்றும் கிரகங்களை வைத்து திருமணம் முடிவு செய்யப்படுகிறது.

    திருமணம் செய்யும் ஆண் மற்றும் பெண் தம்பதியினருக்கு ஒரே நட்சத்திரம் இருந்தால் நட்சத்திர பொருத்தத்தில் 10 பொருத்தத்திற்கும் மேற்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும் திருமணத்தில் முக்கியமான பொருத்தம் என்று சொல்லக்கூடிய மாங்கல்ய பொருத்தம் அவர்களுக்கு இருக்காது.

    அதனால் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் கொண்டவர்களுக்கு திருமணம் செய்வதை தவிர்த்து கொள்வது நல்லது.

    ஒரு ராசிக்கு ஏழரை சனி, அஷ்டம சனி வரும்பொழுது தம்பதியினர் இடையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குடும்பத்தில் அதிக கருத்து வேறுபாடுகள் தோன்ற வாய்ப்புள்ளது.

    ஒரே ராசி இருந்தால் சரி, திருமணம் ஆக போகும் பெண்ணிற்கு இருக்கும் நட்சத்திரத்திற்கு பின் உள்ள நட்சத்திரம் அந்த ஆணுக்கு இருந்தால் நன்மை அமையும். தம்பதியினருக்கு ஒரே ராசி, நட்சத்திரம் இருந்தால் ஒரே மாதிரியான ரசனைகள் தான் இருக்கும்.

    கிரகநிலைகள் மாறும்போது இருவரின் வாழ்க்கையும் மிக பாதிப்படைய செய்யும். இதனால் ஒரே ராசியாக இருந்தாலும் நட்சத்திரம் மட்டும் வேறு இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

    திருமணம் செய்ய போகும் ஆண், பெண் இருவருக்கும் பகையோனி நட்சத்திரம் இருந்தால் திருமணம் செய்யக்கூடாது. இதனை மீறி திருமணம் செய்பவர்களுக்கு வாழ்வில் எப்போதும் சண்டைகள் இருந்துகொண்டே இருக்கும்.

    பெண்ணிற்கு 7 ஆம் நட்சத்திரத்தினை சேர்ந்த ஆண் மகனை திருமணம் செய்து வைத்தால் வீட்டில் தினமும் சித்திரவதை நடக்கும். பெண்ணிற்கு 12,17-வது நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களை மணம் செய்து வைத்தால் வீட்டில் துரதஷ்டமும், தர்த்தரியம் ஏற்படும்.

    பெண்ணிற்கு 22–வது நட்சத்திரத்தில் உள்ள ஆண் மகனை திருமணம் செய்தால் அந்த ஆணிற்கு ஆயுள் குறைந்துவிடும்.

    மாமியார் ராசிக்கு மருமகள் ராசியானது 6, 8-வது ராசியாக வந்தால் தம்பதியினரை தனி குடும்பம் வைப்பது நல்லது. இதனால் பல வித பிரச்சனைகள் குறையும்.


    திருமணம் செய்ய போகும் ஆண் / பெண் இருவருக்கும் ரோகினி, திருவாதிரை, மகம், அஸ்தம், உத்திரட்டாதி, ரேவதி, விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் ஆண், பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான நட்சத்திரம் இருந்தது என்றால் திருமணம் முடிப்பது நல்லது.

    அஸ்வினி, கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூரம், பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம் போன்ற நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒரே நட்சத்திரங்கள் கொண்டவர்களாக இருந்தால் பரிகாரத்திற்கு பின்பு திருமணம் செய்து கொள்ளலாம்.

    திருமணம் செய்யக்கூடாத ஒரே நட்சத்திரம்:

    பரணி, ஆயில்யம், ஸ்வாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி போன்ற நட்சத்திரம் ஆண், பெண் இருவருக்கும் ஒன்றாக இருந்தால் திருமணம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.

    பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, சித்திரை, விசாகம், மகம், ஸ்வாதி போன்ற 12 நட்சத்திர தினங்களில் பணம் கொடுக்கவும், வாங்கவும் கூடாது. மீறி செய்தால் பணம் திரும்ப வராது. பணத்தினை திரும்ப செலுத்துவதில் கஷ்டம் ஏற்படும். இந்த நட்சத்திரங்களில் பிரயாணம் செய்தால் சிக்கல்கள் ஏற்படும். அடுத்து உடலில் நோய்வாய்பட்டால் குணமடைவதற்கு நீண்ட நாள் ஆகும்.

    • ஒளி மாசுபட்ட நகரங்களில் இருந்தும் கூட வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய பிரகாசமான காட்சியை உருவாக்கும் என்றும் தெரிவித்தனர்.
    • ஒரு புதிய வெடிப்பைக் குறிக்கிறது என்றும், அந்த வெடிப்பு செப்டம்பர் மாதம் நிகழும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    பூமியிலிருந்து 3 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள டி கொரோனே பொரியாலிஸ் என்ற விண்மீன் தொகுப்பில் ஒரு நட்சத்திரம் விரைவில் வெடித்து சிதறும் என்றும், அதை இரவில் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    இது ஒளி மாசுபட்ட நகரங்களில் இருந்தும் கூட வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய பிரகாசமான காட்சியை உருவாக்கும் என்றும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து நாசா விஞ்ஞானி ரெபெக்கா ஹவுன்செல் கூறும்போது, இது வாழ்நாளில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு.

    இது நிறைய புதிய வானியலாளர்களை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார். டி கொரோனே பொரியாலிஸ் கடைசியாக 1946-ம் ஆண்டு வெடித்தது.

    அந்த வெடிப்புக்கு சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த அமைப்பு திடீரென மங்கலானது.

    அதேபோல் கடந்த ஆண்டு டி கொரோனே பொரியாலிஸ் அமைப்பு மீண்டும் மங்கலானது.

    இது ஒரு புதிய வெடிப்பைக் குறிக்கிறது என்றும், அந்த வெடிப்பு செப்டம்பர் மாதம் நிகழும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    • ரோமரிஷி சந்திரகிரகத்துக்கு உரியவர் ஆவார்.
    • எனவே அவரை வழிபட்டால் சந்திரகிரக தோஷம் இருந்தால் அகன்று விடும்.

    ஏதாவது பிரார்த்தனை இருந்தால் வீட்டில் ஒரு இடத்தில் ரோமரிஷியை ஆவாகனம் செய்து பழம், தண்ணீர் வைத்து வேண்டி கொண்டால் நினைத்தது நடக்கும் என்று பலன் பெற்றவர்கள் சொல்கிறார்கள்.

    ரோமரிஷி சந்திரகிரகத்துக்கு உரியவர் ஆவார்.

    எனவே அவரை வழிபட்டால் சந்திரகிரக தோஷம் இருந்தால் அகன்று விடும்.

    மனதில் தைரியத்தை ஏற்படுத்துவது சந்திரகிரகம்தான்.

    ரோமரிஷியை கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் எந்த அளவுக்கு வழிபடுகிறார்களே....

    அந்த அளவுக்கு மனதில் தெளிவும், தைரியமும் உண்டாகும்.

    முக்கிய பிரச்சினைகளில் முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்தால் ரோமரிஷியை மனமுருக வேண்டினால் தெளிவான முடிவெடுப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

    எனவே கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் ரோமரிஷியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

    • கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் திங்கட்கிழமை தோறும் ரோமரிஷியை மனதில் நினைத்து வீட்டிலேயே வழிபடலாம்.
    • அவருக்குரிய போற்றிகள், மந்திரங்களை சொல்லி வந்தால் ரோமரிஷி பலன் தருவதை கண்கூடாகப் பார்க்க முடியும்.

    ரோமரிஷி எங்கு ஜீவசமாதி ஆனார் என்பதில் தெளிவான விளக்கங்கள் இல்லை.

    3 கோடி பிரம்மாவின் வாழ்வுக்குப் பிறகே இவரது வாழ்நாள் முடிவுக்கு வரும் என்று சில நூல்களில் குறிப்பு உள்ளது.

    ஆனால் அது எந்த அளவுக்கு நம்பகத்தன்மை கொண்டது என்பதை யாராலும் உறுதிபடுத்த முடியவில்லை.

    இதனால் அவர் தியானம் செய்த இடங்கள் அருள் அலையை தரும் இடங்களாக இருக்கின்றன.

    கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் திங்கட்கிழமை தோறும் ரோமரிஷியை மனதில் நினைத்து வீட்டிலேயே வழிபடலாம்.

    அவருக்குரிய போற்றிகள், மந்திரங்களை சொல்லி வந்தால் ரோமரிஷி பலன் தருவதை கண்கூடாகப் பார்க்க முடியும்.

    ரோமரிஷியை வழிபடும்போது வெண்பொங்கல் நைவேத்தியம் படைத்து வழிபடலாம்.

    • ரோமரிஷி தரிசனம் செய்த இந்த 9 சிவாலயங்களும் நவகைலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
    • நவக்கிரங்களுடன் தொடர்புடைய இந்த 9 ஆலயங்களும் சீரும் சிறப்பும் மிக்கவை.

    இதே போன்று தமிழகத்தின் சில சிவாலயங்களில் ரோமரிஷி சித்தரின் தியான பீடங்கள் இருக்கின்றன. அந்த சிவாலயங்களில் தியானம் செய்த காலங்களில் அவரது உடலில் இருந்து விழும் ரோமங்கள் பிரம்மனின் மரணத்தை குறிப்பதாக கருதப்பட்டது. ஒரு தடவை பிரம்மன் மறையும் போது மட்டுமே அவரது உடலில் இருந்து ஒரு ரோமம் விழுந்து லிங்கமாக மாறியதாக சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் ரோமரிஷி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பது உறுதியாகிறது.

    சிவாலயங்களில் தியானம் செய்து திருப்பணிகள் செய்த ரோமரிஷி இறுதியில் சிவனை நேரில் பார்த்து தரிசனம் செய்து சிவமுக்திபேறு பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

    இதற்காக அவர் அகத்தியரின் உதவியை நாடினார்.

    அவருக்கு உதவ முன் வந்த அகத்தியர், "தாமிரபரணி நதியில் நான் ஒன்பது தாமரை மலர்களை விடுகிறேன்.

    அவை மிதந்து சென்று கரை ஒதுங்கும் இடங்களில் லிங்கம் நிறுவி வழிபட்டால் சிவபெருமான் காட்சி தருவார்" என்றார்.

    அதன்படி தாமிரபரணி நதிக்கரையில் பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் ஆகிய 9 இடங்களில் சிவாலயம் அமைத்து ரோமரிஷி வழிபட்டார்.

    இறுதியில் தாமிரபரணி நதியும் கடலும் சேர்ந்து சங்கமிக்கும்  இடத்தில் ரோமரிஷிக்கு சிவபெருமான் காட்சி அளித்தார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ரோமரிஷி தரிசனம் செய்த இந்த 9 சிவாலயங்களும் நவகைலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    நவக்கிரங்களுடன் தொடர்புடைய இந்த 9 ஆலயங்களும் சீரும் சிறப்பும் மிக்கவை.

    இந்த தலங்களில் வழிபட்டால் ரோமரிஷி பெற்ற பலன்கள் நமக்கும் கிடைக்கும். அதற்கு ரோமரிஷியை போன்று மனமுருக வழிபட வேண்டியது அவசியமாகும்.

    • குறிப்பாக அந்த ஆலயத்தில் உள்ள வட்டபாறையில் ரோமரிஷியின் மந்திரங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.
    • அந்த மன்னன்தான், இந்த ரோமரிஷி ஆலயத்தையும் கட்டியதாகக் கருதப்படுகிறது.

    சென்னையில் வசிப்பவர்கள் திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தில் வழிபாடுகள் செய்வதன் மூலம் ரோமரிஷியின் அருளை பெற முடியும்.

    குறிப்பாக அந்த ஆலயத்தில் உள்ள வட்டபாறையில் ரோமரிஷியின் மந்திரங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

    கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் அந்த பகுதியில் தியானித்தால் சிவபெருமான் அருளுடன் ரோமரிஷி தரும் பலன்களையும் பெறலாம்.

    அதே திருவொற்றியூரில் தேரடி பஸ் நிறுத்தம் அருகே உள்ள எல்லையம்மன் கோவில் பகுதியில் இருக்கும் மயிலாண்டவர் ஆலயத்தில் ரோமரிஷி உருவ ரூபமாக இருக்கிறார்.

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தை கட்டிய காஞ்சி மன்னன் தொண்டைமானுக்கு ரோமரிஷி முனிவர் காட்சி கொடுத்து அருள் பாலித்ததாக குறிப்புகள் உள்ளன.

    அந்த மன்னன்தான், இந்த ரோமரிஷி ஆலயத்தையும் கட்டியதாகக் கருதப்படுகிறது.

    • சமீப காலமாக இந்த துளசி மாடத்தில் ரோமரிஷிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் அங்கு சென்றும் வழிபடலாம்.

    இதே போன்று ரோமரிஷி தமிழகத்தின் வேறு சில பகுதியிலும் தன்னை பற்றிய பதிவை உருவாக்கி இருக்கிறார்.

    தஞ்சை, கரந்தையில் உள்ள சிதாநாதீஸ்வரர் கோவிலும் ரோமரிஷி சித்தர் தவம் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

    அவர் தவம் இருந்த இடத்தில் சிறிய துளசி மாடம் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த இடத்தை ரோமரிஷியின் ஜீவ சமாதி என்றும் சொல்கிறார்கள்.

    சமீப காலமாக இந்த துளசி மாடத்தில் ரோமரிஷிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் அங்கு சென்றும் வழிபடலாம்.

    தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கரந்தை அருகில் வடவாற்றங்கரை பூக்குளம் சிதாநந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது.

    நீண்ட நாள் நோயால் தவிப்பவர்களுக்கு இந்த ஆலயம் பரிகார தலமாக இருப்பதால், ரோமரிஷியின் அருளையும் பெற முடியும்.

    • ரோமரிஷிக்கு சிவபெருமான் காட்சி அளித்த இடத்தில் தற்போது அவரது அதிஷ்டானம் அமைந்துள்ளது.
    • அதன் மீது தான் முருகப்பெருமான் தனது இரு தேவியருடன் எழுந்தருளி உள்ளார்.

    அந்த நிலையில் நீராடாமல் ஜம்புகாரண்யேஸ்வரரை தரிசனம் செய்ய ரோமரிஷி புறப்பட்டு வந்தார்.

    இதை கண்டதும் அவரை கோபுர வாசலிலேயே முருகப்பெருமான் தடுத்து நிறுத்தினாராம்.

    இதனால் வேதனை அடைந்த ரோமரிஷி அந்த கோபுர வாசல் அருகிலேயே தவம் இருக்க தொடங்கி விட்டார்.

    தினசரி நீராடல் போன்ற புறத்தூய்மையை விட ஆத்மார்த்தமாக நினைக்கும் அவரது அகத்தூய்மையே சிறந்தது என்பதை உலகத்துக்கு உணர்த்தும் வகையில் கோவிலுக்கு வெளியில் வந்து ரோமரிஷிக்கு ஜம்புகாரண்யேஸ்வரர் காட்சி கொடுத்ததாக அந்த ஆலய தல வரலாறில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ரோமரிஷிக்கு சிவபெருமான் காட்சி அளித்த இடத்தில் தற்போது அவரது அதிஷ்டானம் அமைந்துள்ளது.

    அதன் மீது தான் முருகப்பெருமான் தனது இரு தேவியருடன் எழுந்தருளி உள்ளார்.

    இந்த முருகருக்கு குமரகுருபரர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    ரோமரிஷியின் அருளைப் பெற விரும்பும் கிருத்திகை நட்சத்திரத்துக்காரர்கள் கூந்தலூரில் ஜம்புகாரண்யேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று ரோமரிஷியின் அதிஷ்டானம் அமைந்துள்ள பகுதியில் அமர்ந்து தியானம் செய்தாலே போதும் நிச்சயம் பலன் உண்டு.

    கூந்தலூர் ஆலயத்தின் ஈசான்யம் பகுதியில் இந்த அதிஷ்டானம் இருக்கிறது. ஈசான்யம் பகுதியில் நவக்கிரகங்கள் சன்னதி அமைக்கப்பட்டிருக்கும்.

    ஆனால் இந்த தலத்தில் செவ்வாயுடன் தொடர்புடைய முருகப்பெருமான் அங்கு அமர்ந்து இருப்பதால், எத்தகைய செவ்வாய் தோஷமும் இத்தலத்தில் காலடி எடுத்து வைத்ததும் விலகி ஓடி விடும் என்பது ஐதீகமாகும்.

    சனி கிரக பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் தலமாகவும் ரோமரிஷி அதிஷ்டானம் திகழ்கிறது.

    • அந்த பாடல்களின் மூலம் ரோமரிஷி பற்றி பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
    • அந்த வகையில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் அவர் வாழ்ந்ததற்கான தடயங்கள் இப்போதும் உள்ளன.

    அவர் ஆனி மாதம் கிருத்திகை நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் என்பது உறுதியாகி உள்ளது.

    அவர் ஜீவ சமாதி அடைந்ததற்கான உறுதியான தகவல்களும் இல்லை.

    அதற்கு காரணம் அவர் உடல் அழியவில்லை.

    அவர் கைலாய மலைக்கு சென்று ஜீவ சமாதி அடைந்ததாக பெரும்பாலான ஆய்வு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் பல பகுதிகளில் அவர் வாழ்ந்துள்ளார். பல சிவாலயங்களுக்கு சென்று தியானம் இருந்து திருப்பணிகள் செய்துள்ளார்.

    ரோமரிஷி வைத்தியம் ஆயிரம், ரோமரிஷி சூத்திரம் ஆயிரம், ரோமரிஷி ஞானம் 50, ரோமரிஷி பெருநூல் 500, ரோமரிஷி காவியம் 500, ரோமரிஷி மூப்பு சூத்திரம் 30, ரோமரிஷி ஜோதிட விளக்கம் போன்று ஏராளமான நூல்களை எழுதி உள்ளார்.

    அதற்கான ஆதாரங்களும், ஆவணங்களும் கிடைத்து உள்ளன.

    அந்த பாடல்களின் மூலம் ரோமரிஷி பற்றி பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

    அந்த வகையில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் அவர் வாழ்ந்ததற்கான தடயங்கள் இப்போதும் உள்ளன.

    கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் ஜம்புகாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தங்கி இருந்து அவர் செய்த அற்புதங்கள் இப்போதும் பேசப்படுகிறது.

    சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அந்த ஆலயத்தில் அவர் தவம் செய்யும்போது தனது தாடியை தடவி தங்கத்தை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுப்பாராம்.

    ஒரு தடவை அவர் தாடி வழியே தங்கம் வருவது நின்று போனது.

    உடனே தாடியை மழித்து அகற்றி விட்டார்.

    என்றாலும் ஈசனிடம் சரண் அடைய அவர் மனம் விரும்பியது.

    • இவர் அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் ஒருவர் ஆவார். காகபுஜண்டரின் முதன்மையான சீடர் ஆவார்.
    • இவர் ரோமில் இருந்து வந்ததால் ரோம ரிஷி என்று அழைக்கப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள்.

    ஆனால் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த அனைவருக்கும் இத்தனை பாக்கியமும் ஒருசேர ஒருங்கே கிடைத்து விடுவதில்லை.

    இந்தப் பாக்கியங்களை பெற சித்தர்களை நாடி தியானம் செய்து வழிபட்டால் நன்மை உண்டு.

    கிருத்திகை நட்சத்திரத்தில் அவதரித்த அல்லது முக்தி பெற்ற சித்தர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

    மயிலாடுதுறை பால் சுவாமிகள் (மார்கழி&கார்த்திகை), ஞானாந்தகிரி சுவாமிகள் (தை&கார்த்திகை) மதுரை காதகிணறு நடனகோபால சுவாமிகள் (மார்கழி&கிருத்திகை) கிருத்திகையுடன் தொடர்புடையவர்கள்.

    கொடுமுடி அருகே சிவகிரியில் உள்ள ராமானந்த சித்தர் ஜீவ சமாதியில் கிருத்திகை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    ஆனால் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முழு பயனை அடைய வேண்டுமானால் ரோமரிஷி சித்தரை நாடி செல்ல வேண்டும்.

    இவர் அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் ஒருவர் ஆவார். காகபுஜண்டரின் முதன்மையான சீடர் ஆவார்.

    இவர் ரோமில் இருந்து வந்ததால் ரோம ரிஷி என்று அழைக்கப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள்.

    ஆனால் இவர் உடல் முழுக்க முடி (ரோமம்) இருந்ததால் இவருக்கு ரோம ரிஷி என்ற பெயர் ஏற்பட்டதாக ஒரு கருத்து உண்டு.

    ஆனால் போகர் தனது பாடலில், "ரோமரிஷி செம்படவருக்கும் குறத்திக்கும் பிறந்தவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதனால் ரோமரிஷிக்கு அந்த பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

    அதே போன்று அவரது அவதாரம் பற்றிய ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.

    ×