என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி கொலை"

    • நிலம் சம்பந்தமான பிரச்சினையால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 50). விவசாயம் செய்து வந்தார். இவருக்கும் இவரது சகோதரி மகன் அஜித் (22) என்பவருக்கும் ஏற்கனவே நிலம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக ஜோதி மீது அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் வழக்கு இருப்பதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஜோதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது அவரை அஜித் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோதியை வெட்டினார். பின்னர் ஜோதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அஜித் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அஜித்தை தேடி வருகின்றனர்.

    சொத்திற்காக மாமா என்று கூட பார்க்காமல் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மைதுகனியின் வயலுக்கு அருகே புளியங்குடியை சேர்ந்த சகோதரரான 2 பேருக்கு சொந்தமான வயல் உள்ளது.
    • மைதுகனியை வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற நேரத்தில் அவர்கள் 2 பேரும் வெட்டிக்கொலை செய்திருக்கலாமா? அல்லது வேறு யாரேனும் இதனை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணி அம்பேத்கார் 1-வது தெருவை சேர்ந்தவர் மைது கனி(வயது 46). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    புளியங்குடி நவசாலை ஊருக்கு சற்று தொலைவில் உள்ள காடுவெட்டி குளத்திற்கு அருகே ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான நிலத்தை மைதுகனி குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்தார்.

    நேற்று மாலை மைதுகனி வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அவரை தேடி வயலுக்கு சென்றனர். அப்போது வயல் பாதையில் மைதுகனி வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த மைதுகனி உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மைதுகனியை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மைதுகனியின் வயலுக்கு அருகே புளியங்குடியை சேர்ந்த சகோதரரான 2 பேருக்கு சொந்தமான வயல் உள்ளது.

    இவர்களுக்கும், மைதுகனிக்கும் வயலில் பயிர் வைப்பது சம்பந்தமாக இடப்பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. சமீபத்தில் மைதுகனி வளர்த்து வந்த நாய், அந்த தரப்பினரின் கோழிகளை கடித்துக்கொன்றதாகவும், அது தொடர்பாகவும் 2 தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மைதுகனியை வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற நேரத்தில் அவர்கள் 2 பேரும் வெட்டிக்கொலை செய்திருக்கலாமா? அல்லது வேறு யாரேனும் இதனை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் கைது

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த உப்பிரபல்லி கொல்லிமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு கோவிந்தசாமி, ரவி (வயது 60), பாபு என்ற 3 மகன்கள் உள்ளனர்.

    இதில் கோவிந்தசாமியும், பாபுவும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இவர்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. நிலம் சம்பந்தமாக கோவிந்தசாமி குடும்பத்தினருக்கும், பாபு குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ரவி கடந்த 14-ந் தேதி தனது அக்கா லைலா வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கோவிந்த சாமியின் மகன் ராஜேந்திரன் ( 28) என்பவர் தனது சித்தப்பா ரவியை அழைத்து நிலம் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது.

    இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் ரவியை சரமாரியாக தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த ரவியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் போலீசார் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கைது கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனைத் தொடர்ந்து குடியாத்தம் போலீசார் ராஜேந்திரன் மீது கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெங்கடசாமி, கொடூரமான முறையில் இறந்து கிடந்தார்.
    • யாரேனும் கொலை செய்து போட்டு சென்றார்களா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியகோட்டப்பள்ளி பக்கமுள்ள பெத்தளப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 65). விவசாயி. இவர் நேற்று முனதினம் வழக்கம் போல தனது விவசாய நிலத்திற்கு வேலைக்காக சென்றார்.

    மாலை அவரது நிலம் வழியாக பொதுமக்கள் சிலர் சென்றனர். அந்த நேரம் அங்கு வெங்கடசாமி, கொடூரமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கை, கால், தொடை மற்றும் கழுத்து பகுதியில் தோல்கள் உரிந்த நிலையில் இருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து அவரது மகன் ஆனந்தனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து மகராஜகடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பிணமாக கிடந்த வெங்கடசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முதியவர் வெங்கடசாமியை யாரேனும் கொலை செய்து போட்டு சென்றார்களா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சந்தேக மரணம் பிரிவின் கீழ் மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மின்சார ஒயர் கம்பியால் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்தார்.
    • சந்தேகத்தின் பேரில் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள சிட்லிங் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இரவு நேரத்தில் காவலுக்காக தோட்டத்தில் உள்ள கொட்டகையில் படுத்திருந்திருக்கிறார்.

    காலை 8 மணிக்கு வீட்டிற்கு பால் எடுத்து வருவது வழக்கம். நீண்ட நேரம் தோட்டத்திலிருந்து வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி தங்கம்மாள் தோட்டத்திற்கு சென்று பார்த்த பொழுது கழுத்தில் மின்சார ஒயர் கம்பியால் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்தார்.

    சம்பவம் குறித்துதங்கம்மாள் தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். உறவினர்கள் அனைவரும் தோட்டத்திற்கு சென்று பார்த்த பிறகு இது குறித்து கோட்டப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவலின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பெருமாள் தனக்கு விற்ற நிலத்தை புறம்போக்கு நிலம் என்று கூறியதாலும், வீடு கட்டவிடாமல் தடுத்ததாலும் மதன் ஆத்திரம் அடைந்தார். அங்கிருந்த கல்லை எடுத்து பெருமாளை தாக்கினார்.
    • பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த கோளிவாக்கம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). விவசாயி. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

    பெருமாள் சில வருடங்களாக தனியாக வசித்து வந்தார். பெருமாள் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை உத்திரமேரூர் மருதம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மதன் என்பவருக்கு விற்றார்.

    மதனின் மனைவி கோளிவாக்கத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த நிலத்தில் வீடு கட்ட மதன் முடிவு செய்தார். இதற்காக கல், மண் போன்றவற்றை அங்கு இறக்கினார்.

    இன்று காலையில் அங்கு வந்த பெருமாள், இது புறம்போக்கு நிலம். இதில் வீடு கட்டக்கூடாது என்று மதனிடம் கூறினார்.

    பெருமாள் தனக்கு விற்ற நிலத்தை அவரே புறம்போக்கு நிலம் என்று கூறியதாலும், வீடு கட்டவிடாமல் தடுத்ததாலும் மதன் ஆத்திரம் அடைந்தார். அங்கிருந்த கல்லை எடுத்து பெருமாளை தாக்கினார்.

    இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், டி.எஸ்.பி. ஜூலியர் சீசர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பலத்த காயம் அடைந்த தண்டபாணி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
    • அலங்கியம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை ரோடு தளவாய்பட்டினம் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 55) விவசாய தொழிலாளி. இவரது மகன் காளிதாஸ் (29).

    காளிதாசுக்கு திருமணமான நிலையில் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் தண்டபாணி வேலைக்கு செல்லுமாறு மகனை கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று அறுவடை பணியை முடித்துக்கொண்டு தண்டபாணி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் படுத்திருந்த காளிதாசுக்கும் தண்டபாணிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மகனை கண்டிக்க இரும்பு கம்பியை எடுத்து மிரட்டிய போது அந்த இரும்பு கம்பியை பிடுங்கிய காளிதாஸ், தந்தை என்றும் பாராமல் தண்டபாணியின் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த தண்டபாணி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தண்டபாணி இறந்தார்.

    இதுகுறித்து அலங்கியம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான காளிதாசை தேடி வருகின்றனர். தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி பாலாஜி நகரை சேர்ந்தவர் சிவராமப்பா (51) விவசாயி. மேலும் இவர் வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை, அந்த பகுதியில், பசுமாடுகள் தீவனத்திற்காக புற்களை அறுத்து காரில் ஏற்றி வீடு நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஜுஜு வாடியில் உள்ள மயானம் அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், காரை வழிமறித்து, அவரை வெளியே இழுத்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஒசூர் சிப்காட் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சிவராமப்பாவுக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பாபு என்கிற ராமகிருஷ்ணன், நாராயணசாமி ஆகியோருக்கு இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதற்காக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது என்பது தெரியவந்தது.

    தனது தந்தையை நிலத்தகராறு காரணமாக பாபு என்கிற ராம கிருஷ்ணன், நாராயணசாமி ஆகிய 2 பேரும் வெட்டி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிவராம் மகன் மாதுகுமார் போலீசில் புகார் செய்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

    • சிவராமனின் மகன் மதுகுமார் கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
    • சரணடைந்த 2 பேரை சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள தமிழக மாநில எல்லையாக உள்ள ஜூஜூவாடி கிராமம் பாலாஜி நகரை சேர்ந்த சிவராமன் (வயது52) என்பவர் கால்நடை பண்ணை வைத்து

    பராமரிப்பு செய்து வந்தார். இவருக்கு போப்பம்மாள் என்ற மனைவியும், மதுகுமார் என்ற மகனும், சைத்ரா என்ற மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 8-ந் தேதி வழக்கம்போல் கால்நடைகளுக்கு தேவையான தீவன புல்லை வாங்கி கொண்டு ஆம்னி காரில் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் காரின் குறுக்கே வழி மறித்து கண்ணில் மிளகாய்பொடி தூவி பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சிவராமனின் மகன் மதுகுமார் கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில் ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் தலைமையில் கொலை செய்தவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சிவராமனை கொலை செய்ததாக போச்சம்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.வீ.சண்முகநாதன் முன்னிலையில் நேற்று மதியம் 2 பேர் சரணடைந்தனர்.

    சரணடைந்த இருவரும் ஜூஜூவாடி காந்தி நகரை சேர்ந்த சேகர் என்பவரது மகன் சீனிவாஸ் என்கிற காந்தி (26) அவரது நண்பர் ஓசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீகாந்த் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சரணடைந்த 2 பேரையும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக ஓசூரை அடுத்த பேகைப்பள்ளியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் முரளி (27), ஜூ ஜுவாடியைச் சேர்ந்த திலீப் குமார் என்கிற கொன்னே (28), மகேந்திரன் (32), ஊத்தங்கரையை அடுத்த ஆனந்தூரைச் சேர்ந்த சிம்புவின் மனைவி அனுசியா (23) ஆகிய 4 பேரை ஓசூர் சிப்காட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தற்போது தக்காளியின் விலை உச்சத்தை எட்டி உள்ளது.
    • நீண்ட நேரம் ஆகியும் மதுகர் ரெட்டி வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் தக்காளி தோட்டத்திற்கு வந்து பார்த்தனர்.

    திருப்பதி:

    தக்காளி விலை கிலோ ரூ.150 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் தக்காளி தட்டுப்பாடு காரணமாக விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளி மதிப்பு எங்கேயோ சென்று விட்டது.

    ஆந்திராவில் கடந்த வாரம் தக்காளி விற்பனை செய்து விட்டு பணத்துடன் வீடு திரும்பிய விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில் மற்றொரு விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளார்.

    ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பெட்ட திப்பா சமுத்திரத்தை சேர்ந்தவர் மதுகர் ரெட்டி. விவசாயி.

    இவருக்கு ஊருக்கு வெளியே விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலத்தில் தக்காளி பயிரிட்டு உள்ளார்.

    தற்போது தக்காளியின் விலை உச்சத்தை எட்டி உள்ளதால் கொள்ளையர்கள் தக்காளியை பறித்து சென்று விடுவார்கள் என எண்ணி தினமும் தக்காளி தோட்டத்திற்கு பாதுகாப்பாக காவல் இருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு மதுகர் ரெட்டி தக்காளி தோட்டத்திற்கு காவலுக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் தக்காளிகளை பறித்தனர்.

    இதனைக் கண்ட மதுகர் ரெட்டி தக்காளி பறிக்கும் நபர்களை விரட்டினார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் மதுகர் ரெட்டியின் கழுத்தை நெரித்தனர். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து தோட்டத்தில் இருந்து தக்காளிகளை கும்பல் பறித்து சென்றனர்.

    நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் மதுகர் ரெட்டி வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் தக்காளி தோட்டத்திற்கு வந்து பார்த்தனர்.

    அப்போது மதுகர் ரெட்டி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மதனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மதுகர் ரெட்டி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈஸ்வரமூர்த்தி கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • தண்டனை காலம் முடிந்து இருவரும் வெளியே வந்திருந்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கொண்டரசம்பாளையம் ஓட்டக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வர மூர்த்தி (வயது 60). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து கொண்டு மாடுகள் வளர்த்து வந்தார். இன்று அதிகாலை மாடுகளில் பால் கறந்து விட்டு கொட்டா புளிபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் வழங்குவதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    கொண்டரசம்பாளையம் விநாயகர் கோவில் அருகே செல்லும் போது திடீரென அங்கு வந்த ஈஸ்வர மூர்த்தியின் உடன் பிறந்த அண்ணன் பழனிச்சாமி(63) கண்ணிமைக்கும் நேரத்தில் ஈஸ்வரமூர்த்தியை அரிவாளால் வெட்டினார். இதில் ஈஸ்வரமூர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தாராபுரம் டி.எஸ்.பி., கலையரசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ஈஸ்வரமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பழனிச்சாமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். ஈஸ்வரமூர்த்தி கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஈஸ்வர மூர்த்திக்கும் பழனிச்சாமிக்கும் பொதுவாக 8 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் ஈஸ்வரமூர்த்தி மனைவி முத்துலட்சுமி மற்றும் மகள்கள் வாணி ஸ்ரீ(12 ), இளங்கவி(11) ஆகியோருடன் தோட்டத்தில் வசித்து வந்தார். அதே தோட்டத்தில் மற்றொரு பகுதியில் பழனிசாமி வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நிலத்தை பிரித்து கொடுக்காத காரணத்தினால் ஈஸ்வர மூர்த்திக்கும் பழனிச்சாமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த பிரச்சினையில் இன்று காலை, தம்பி என்றும் பாராமல் ஈஸ்வர மூர்த்தியை பழனிச்சாமி வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஏற்கனவே சகோதரர்களான பழனிச்சாமி , ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கடந்த 38 வருடங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த அண்ணன்-தம்பியான சேது , ஸ்ரீதர் ஆகியோரை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் முடிந்து இருவரும் வெளியே வந்திருந்தனர். இந்தநிலையில் சொத்து பிரச்சினையில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் ஈஸ்வர மூர்த்தியை பழனிச்சாமி கொலை செய்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கோவிந்தசாமிக்கும் அவரது மகன் நடராஜனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.
    • நெஞ்சில் காயம் ஏற்பட்டதில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் முத்தையம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்த சாமி (வயது 86). விவசாயியான இவருக்கு சாமிநாதன் (60), நடராஜ் (55) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    கோவிந்தராஜ்க்கு சொந்தமாக அப்பகுதியில் தோட்டம் உள்ளது. மேலும் கோவிந்தசாமிக்கும் அவரது மகன் நடராஜனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.

    இந்தநிலையில் இன்று காலை கோவிந்தசாமி தனது தோட்டத்தில் வளர்ப்பு மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் இருந்து விழுந்த 2 தேங்காய்கள் சாக்கடையில் கிடந்தன.

    அதனை எடுத்த கோவிந்தசாமி, எதிரே உள்ள தோட்டத்திற்குள் வீசி உள்ளார். இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த மகன் நடராஜனின் மனைவி ஈஸ்வரி (50), பேத்தி லாவண்யா (25) ஆகியோர் அடுத்தவர் தோட்டத்திற்குள் எதற்காக தேங்காயை வீசினாய் என தகாத வார்த்தைகளால் பேசினர்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஈஸ்வரி, லாவண்யா ஆகியோர் கீழே கிடந்த கல் மற்றும் தேங்காயை எடுத்து கோவிந்தசாமி மீது வீசினர் . இதில் நெஞ்சில் காயம் ஏற்பட்டதில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கோவிந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஈஸ்வரி, லாவண்யா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். லாவண்யா பல்லடத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயியை மருமகள் மற்றும் அரசு பெண் அதிகாரி கல்லால் தாக்கி கொன்ற சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×