search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூடியூபர்"

    • யூடியூபர் பறக்கவிட்ட பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்து ஓடினர்.
    • சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் எடுக்க முயன்றவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பரபரப்பான குகட்பல்லி பகுதியில் ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டு ரீல்ஸ் எடுத்த யூடியூபரை போலீசார் கைது செய்தனர்.

    யூடியூபர் பறக்கவிட்ட பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    அந்த வீடியோவில் யூடியூபர் பவர் ஹர்ஷா என்ற மகாதேவ் சாலையின் நடுவில் நின்று பணத்தை பறக்க விடுகிறார். இதனால் சிதறிய நோட்டுகளை எடுக்க வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களை நிறுத்தி, பணத்தை எடுக்கின்றனர். நடந்து சென்றவர்களும் ரூபாய் நோட்டுகளை முண்டியடித்து சேகரிக்கின்றனர். சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் எடுக்க முயன்றவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வீடியோ வைரலானதை அடுத்து ஹர்ஷா மீது வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

    • பெங்களூருவை சேர்ந்தவர் இஷான் சர்மா.
    • சமீபத்தில் பதிவிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெங்களூருவை சேர்ந்தவர் இஷான் சர்மா. யூடியூப் பிரபலமான இவர் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள 5 நட்சத்திர விடுதியில் அவர் அறை எடுத்து தங்கியிருந்தார்.

    அப்போது ஊழியர்களிடம் குடிக்க தண்ணீர் கேட்டநிலையில் குடிநீருக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து வீடியோவுடன் ஒரு பதிவை வெளியிட்டார்.

    அதில் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின் ஒருநாள் கட்டணம் ரூ,16 ஆயிரம் என்றும் ஆனால் குடிநீர் காசு கொடுத்து தனியாகதான் வாங்க வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

    இஷான் சர்மாவின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிய நிலையில் ஓட்டல் நிர்வாகத்தினர் மீது கடும் கண்டனம் எழுந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் தேசியப் பறவையான மயிலை சமைத்து வீடியோ பதிவிட்டுள்ளார்.
    • காட்டுப் பன்றிக் கறி சமையல் வீடியோவையும் பிரணாய் பதிவிட்டிருந்தார்.

    தெலங்கானாவில் யூடியூபர் ஒருவர் மயில் கறி சமைத்து வம்படியாக வந்து சிக்கலில் மாட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம் சிர்சில்லா [Siricilla ] மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்ந்தவர் பிரணாய் குமார்.

    பாராம்பரிய உணவு வகைகளைச் சமைத்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வரும் பிரணாய் பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் தேசியப் பறவையான மயிலை சமைத்து அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

     

    ஆனால் மயிலை கொல்வது சட்டவிரோதம் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரணாய் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றத்தை உறுதி செய்த பின் அவரை கைது செய்து விரைவில் சிறையில் அடிப்போம் எனவும் சிர்சில்லா மாவட்ட எஸ்.பி ராஜண்ணா உறுதியளித்துள்ளார்.

    சர்ச்சைக்குப்பிறகு பிரணாய், மயில் கறி வீடியோவை தனது யூடியூப் சேனலில் இருந்து நீக்கியுள்ளார். எனினும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு முன்னதாக காட்டுப் பன்றிக் கறி சமையல் வீடியோவையும் பிரணாய் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சாகசத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கிறார்.
    • இரண்டே நாளில் இந்த வீடியோவை சுமார் 4 கோடி பேருக்கு மேல் ரசித்துள்ளனர்.

    'ஐ ஷோ ஸ்பீடு' என்ற பெயரில் பிரபலமான யூ-டியூபர் ஸ்ட்ரீமர் . 19 வயது இளைஞரான இவர் பல்வேறு சாகசங்களை வீடியோவாக பதிவு செய்து யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இவரை பல லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

    இவர் சமீபத்தில் வேகமாக ஓடி வரும் காரை, தாவிக்குதித்து தாண்டியபடி வீடியோ பதிவு செய்தார். இவருக்காக, இவரது தந்தை தங்களுக்கு சொந்தமான சொகுசு காரை வேகமாக ஓட்டி வருகிறார். ஓடி வரும் காருக்கு முன்னே தைரியமாக நிற்கும் ஸ்ட்ரீமர் சரியான நேரத்தில் காரை தாவிக்குதித்து, உயரம் தாண்டும் வீரர் போல அந்தப் பக்கம் சாய்ந்துவிடாமல் கம்பீரமாக நிற்கிறார்.

    பின்னர் சாகசத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கிறார். தந்தையுடன் ஹைபை செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். அந்த வீடியோவை பின்னர் வலைத்தளத்தில் பதிவேற்றினார். "இந்த சாகசத்தை செய்த உலகின் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். லைக் பண்ணுங்க, சேர் பண்ணுங்க" என்று பேசுகிறார். இரண்டே நாளில் இந்த வீடியோவை சுமார் 4 கோடி பேருக்கு மேல் ரசித்துள்ளனர்.

    • நீலேஸ்வர்22 என்ற பெயரில் ‘யூ-டியூபர்’ சேனல் நடத்தி வரும் நீலேஸ்வர் 8 லட்சத்து 87 ஆயிரம் சந்தாதாரர்களை பெற்றுள்ளார்.
    • சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சுமார் 5 மணிநேரம் போராடி நீலேஸ்வரை பத்திரமாக மீட்டனர்.

    சமூக வலைதள புகழுக்காக இளைஞர்கள் செய்யும் சில சாகசங்கள் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் 'யூ-டியூபர்' ஒருவர் ரீல்ஸ் வீடியோவிற்காக செல்போன் டவரில் ஏறிய காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

    நீலேஸ்வர்22 என்ற பெயரில் 'யூ-டியூபர்' சேனல் நடத்தி வரும் நீலேஸ்வர் 8 லட்சத்து 87 ஆயிரம் சந்தாதாரர்களை பெற்றுள்ளார். இந்நிலையில் சந்தாதாரர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சாகசம் செய்ய திட்டமிட்ட அவர், தனது நண்பருடன் அப்பகுதியில் உள்ள செல்போன் டவர் அருகே சென்றார். பின்னர் அந்த டவரில் நீலேஸ்வர் ஏறியதை அவரது நண்பர் வீடியோ எடுத்துள்ளார்.

    இவர்களின் ஆபத்தான செயலை பார்த்த அப்பகுதி பொது மக்கள் அங்கு திரண்டனர். உடனே நீலேஸ்வரின் நண்பர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால் நீலேஸ்வர் செல்போன் டவரில் சிக்கிக் கொண்டார். உடனே பொது மக்கள் போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சுமார் 5 மணிநேரம் போராடி நீலேஸ்வரை பத்திரமாக மீட்டனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், சமூக வலைதளங்களில் புகழ் பெறுவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • சல்மான் கான் வீட்டின் முன் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
    • சல்மான் கானை கொலை செய்யப் போவதாக வீடியோ வெளியிட்டு மிரட்டிய ராஜஸ்தானை சேர்த்த பன்வாரிலால் பன்டி என்ற யூடியூபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது கொலை முயற்சிகள் அடுத்தடுத்து நடந்து வருவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் மும்பையின் பாந்திரா பகுதியில் உள்ள சல்மான் கான் வீட்டின் முன் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

     

    இந்த விவகாரத்தில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுள் அனுஜ் தபான் என்பவர் கடந்த மே 1 ஆம் தேதி காவல் நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தவிர்த்து அவர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அரியானவைச் சேர்த்த பிஷ்னாய் மற்றும் கோல்டி ஆகிய ரவுடிக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் நவி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சல்மான் கானின் பாந்திரா இல்லத்தையும், பன்வேலில் உள்ள பண்ணை வீட்டையும், சல்மான் கானின் படப்பிடிப்பு தளத்தையும் பல நாட்களாக வேவு பார்த்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் சல்மான் கானை கொலை செய்யப் போவதாக வீடியோ வெளியிட்டு மிரட்டிய ராஜஸ்தானை சேர்த்த பன்வாரிலால் பன்டி என்ற யூடியூபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் நெடுஞ்சாலையில் வைத்து எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் பன்டி பேசியதாவது, "லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் கோல்டி கேங்கைச் சேர்நதவர்கள் என்னுடன் தான் உள்ளனர், நான் சல்மான் கானை கொலை செய்யப் போகிறேன்" என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் விரைந்த மும்பை சைபர் கிரைம் போலீசார் பன்டியை கைது செய்து மும்பை அழைத்து வந்தனர். பன்வரலால் பன்டிக்கு குற்றப்பின்னணி இருக்கிறதா? அல்லது விளம்பரத்துக்காக வீடியோ வெளியிட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19-வது லீக் போட்டி நடைபெற்றது
    • ஈகோ கிளாஸை எளிதாக விளக்கும் வகையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இந்த போட்டிக்கு வந்த நபர் ஒருவர் அரங்கேற்றியுள்ளார்.

    டி20 உலகக்கோப்பை 2024 போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வரும் நிலையில் நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியை காண வந்த பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஷாத் அகமத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கிரிக்கெட்டை விளையாட்டு என்று கருதுவதையும் தாண்டி இரண்டு நாடுகளுக்குமாக ஈகோ கிளாசாக ரசிகர்கள் மாற்றத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த ஈகோ கிளாஸை எளிதாக விளக்கும் வகையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இந்த போட்டிக்கு வந்த நபர் ஒருவர் அரங்கேற்றியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ரேசா கான் என்ற அந்த கன்டன்ட் கிரியேட்டர், தனது பாகிஸ்தானிய தந்தையையும், இந்திய மாமனாரையும் போட்டிக்கு அழைத்து வந்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடும்போது அவர்களின் ரியாக்சன்களைப் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து வீடியோ வைரலாகி வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவந்த உயிரே படத்தில் இருவேறு சித்தாந்தங்களைக் கொண்ட தகப்பன்கள் மும்பையில் நடக்கும் மதக் கலவரத்தின்போது தங்களுக்குள் உள்ள வித்தியாசங்களையும் பிரிவினையையும் எதிர்கொள்ளும் தருணத்தை சந்திப்பர். இந்த வீடியோ அதை நினைவுபடுத்துவதாக உள்ளது.   

    • காரின் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
    • 3 பேரும் ஒரு வாரம் சமூகசேவை செய்ய வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் சஞ்சு டெக்கி. பிரபல யூடியூபரான இவர் தனது சேனலில் வித்தியாசமான வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வந்தார். அதன் மூலமாக மிகவும் பிரபலமா னார். அவரது யூ-டியூப் சேனலை 1.6 மில்லியன் சந்தாதாரர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சஞ்சு டெக்கி, நடிகர் பஹத் பாசில் நடித்து சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தை போன்று தனது காரில் நீச்சல் குளம் அமைத்தார். அதில் தண்ணீரை நிரப்பி தனது நண்பர்களுடன் குளித்தபடியே காரை சாலையில் ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது அவர்களது காரில் பிரச்சினை ஏற்பட்டதால் காரில் இருந்த தண்ணீரை சாலையில் வெளியேற்றினர்.

    அவர்களின் இந்த நடவடிக்கையால் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சஞ்சு டெக்கி இந்த காட்சிகளை யூடியூப்பில் நேரலையில் பதிவிட்டதால் அவர் நண்பர்களுடன் காருக்குள் குளித்தது, தண்ணீரை சாலையில் திறந்துவிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு அனைத்தும் யூ-டியூப் நேரலையில் வெளியானது.

    இந்த வீடியோ காட்சியை லட்சக்கணக்கானோர் நேரலையில் பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலப்புழா போக்குவரத்து துறை அதிகாரிகள் சஞ்சு டெக்கியின் காரை நடுவழியில் நிறுத்தி பறிமுதல் செய்தனர். போக்குவரத்து விதிகளை மீறியதாக சஞ்சு டெக்கி மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    மேலும் சஞ்சு டெக்கியின் ஓட்டுனர் உரிமம் மற்றும் காரின் வாகன பதிவு சான்றிதழை போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்தனர். இந்நிலையில் சஞ்சு டெக்கி, அவரது நண்பர்கள் சூர்யநாராயணன், அபிலாஷ், ஸ்டான்லி கிறிஸ்டோபர் ஆகிய 3 பேரும் ஒரு வாரம் சமூகசேவை செய்ய வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    அவர்கள் 3 பேரும் வருகிற 3-ந்தேதி முதல் மலப்புரம் எடப்பால் பகுதியில் உள்ள மோட்டார் வாகன பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கட்டாய பயிற்சியில் பங்கேற்க வேண்டும், ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரம் சமூகவேலை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • டிடிஎஃப் வாசனின் கடைக்கு சென்று போலீசார் ஆய்வு செய்தனர்.

    சென்னை:

    பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடிஎஃப் வாசன் கடந்த வருடம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், போக்குவரத்துத்துறை அவரது லைசென்ஸ் உரிமையை 10 வருடத்திற்கு ரத்து செய்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு ஜெயிலில் அடைக்கப்பட்ட அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    இந்நிலையில் சென்னை அயப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் டிடிஎஃப் வாசனின் இருசக்கர வாகன கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.

    அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை விற்பனை செய்ததாக எழுந்த புகாரில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    டிடிஎஃப் வாசனின் கடைக்கு சென்று போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

    • சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
    • கோவை மத்திய சிறையில் இருந்து சென்னைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

    பெருந்துறை:

    பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கை உடைக்கப்பட்ட நிலையில் கோவை அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இந்நிலையில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்ற த்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கோவை மத்திய சிறையில் உள்ள தனது மகன் சவுக்கு சங்கருக்கு பாதுகாப்பு இல்லாததால் அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்த சிறைத்துறை பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று காலை சவுக்கு சங்கரை கோவை போலீசார் சென்னைக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்படி சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் இருந்து சென்னைக்கு பலத்த போலீஸ் பாது காப்புடன் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சவுக்கு சங்கர் தன்னுடைய கை வலிப்பதாகவும், உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் நிலையத்து க்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் அங்கிருந்து நேரடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர் சாந்தி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு காலை 9.45 மணி அளவில் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு போலீஸ் வேனில் அழைத்து செல்லப்பட்டார்.

    அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று சவுக்கு சங்கரை பார்த்து கேள்வி எழுப்பினர். அப்போது அவரை பேசவிடாமல் போலீசார் தடுத்து அழைத்து சென்றனர். சவுக்கு சங்கருக்கு தொடர்ந்து குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. அதனை ஒரு காவலர் கையில் தூக்கி பிடித்த படி சென்று கொண்டிருந்தார்.

    • "8 பாசஞ்சர்ஸ்" எனும் ரூபியின் சேனலுக்கு 2 மில்லியன் பயனர்கள் தேர்ந்தனர்
    • உணவு, குடிநீர், படுக்கை மறுக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்

    மேற்கு அமெரிக்காவில் உள்ள மாநிலம், உடா (Utah). இதன் தலைநகரம் சால்ட் லேக் சிட்டி (Salt Lake City).

    உடா மாநிலத்தில், 42 வயதான ரூபி ஃப்ராங்கி (Ruby Franke) எனும் பெண், தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    கடந்த 2015ல் ரூபி, யூடியூப் வலைதளத்தில் குழந்தைகளை வளர்ப்பது தொடர்பான வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ உருவாக்கத்தில் அவரது குழந்தைகளையும் அவர் பங்கெடுக்க செய்தார்.

    "8 பாசஞ்சர்ஸ்" (8 Passengers) எனும் அவரது யூடியூப் சேனலுக்கு குறுகிய காலத்திலேயே 2 மில்லியன் பயனர்கள் சேர்ந்தனர்.

    2020 காலகட்டத்தில் அவரது மகன்களில் ஒருவர் தனக்கு நேரும் துன்புறுத்தலை குறித்து ஒரு வீடியோ பதிவு செய்திருப்பதை ஒரு பயனர் கண்டு, ரூபியின் முந்தைய வீடியோக்களை கவனமாக ஆய்வு செய்தார். அதில் ரூபி தனது குழந்தைகளை "கட்டுப்பாடு" எனும் பெயரில் துன்புறுத்தும் சான்று கிடைத்தது.

    இதனை தொடர்ந்து ரூபியை விசாரிக்க உடா மாநில குழந்தைகள் நல அதிகாரிகளிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.

    குற்றச்சாட்டுகளை மறுத்த ரூபி, 2022ல் தனது யூடியூப் சேனலை நிறுத்தி விட்டார். ரூபியும், அவரது கணவரும் பிரிந்தனர். 


    தொடர்ந்து "ஜோடி ஹில்டெப்ராண்ட்" என்பவரின் "கனெக்ஷன்ஸ் க்ளாஸ்ரூம்" (ConneXions Classroom) எனும் சேனலில் ரூபி தனது வீடியோக்களை பதிவேற்றினார்.

    2022ல் அவரது 12-வயது மகன் ஒருவன் வீட்டை விட்டு தப்பி, அண்டை வீட்டாரிடம் உணவு கேட்கும் போது அவன் உடலெங்கும், பல காயங்கள் இருப்பதும், அவை அச்சிறுவனை பலமாக கயிற்றினால் கட்டி வைத்ததால் ஏற்பட்டவை என்பதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்களும், காவல்துறையினரும் விரைந்து வந்து ரூபியின் வீட்டை ஆய்வு செய்தனர்.

    அங்கு அவர்களுக்கு ரூபி தனது குழந்தைகளுக்கு உணவு, குடிநீர் வழங்காமல் சித்திரவதை செய்ததற்கான தடயங்கள் காவல் அதிகாரிகளுக்கு கிடைத்தது.

    இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்று, ரூபி ஃப்ராங்கி மற்றும் அவரது தொழில் கூட்டாளி ஹில்டெப்ராண்ட்" (54) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    விசாரணையின் போது நீதிமன்றத்தில் உடா மாநில அரசு தரப்பு வழக்கறிஞர், "ஃப்ராங்கியின் குழந்தைகள் நாஜி படையினர் நடத்திய சித்திரவதை கூடங்களை போன்ற சூழலில் வீட்டில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், படுக்கை, பொழுதுபோக்கு என அனைத்தும் மறுக்கப்பட்டு வந்தது" என தெரிவித்தார்.

    இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் தலா 60 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    • எக்ஸ் தளத்தில் பகிர்ந்தால் வீடியோ தயாரிப்பு செலவில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும்.
    • மிஸ்டர் பீஸ்ட்டின் முதல் வீடியோ நேரடியாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது.

    உலக அளவில் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் மிஸ்டர் பீஸ்ட். ஜிம்மி டொனால்ட்சன் என்ற இயற்பெயர் கொண்ட இவரது வலைதள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளை குவிப்பது வழக்கம்.

    ஆனால் இவர் இதுவரை எக்ஸ் தளத்தில் எந்த வீடியோக்களையும் பதிவிட்டது கிடையாது. மிகுந்த பொருட் செலவில் தான் உருவாக்கும் வீடியோக்களை அவர் யூ-டியூப்பில் வெளியிட்டு வந்தார்.

    சமீபத்தில் எக்ஸ் தளத்தின் அதிபரும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், யூடியூப் பிரபலமான மிஸ்டர் பீஸ்ட் ஏன் தனது வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிடுவதில்லை என கேள்வி கேட்டிறிந்தார்.

    அதற்கு மிஸ்டர் பீஸ்ட் அளித்த பதிலில், "என்னுடைய ஒவ்வொரு வீடியோவையும் மிகுந்த பொருள் செலவில் தயாரிக்கிறேன். எக்ஸ் தளத்தில் அதனை பகிர்ந்தால் வீடியோ தயாரிப்பு செலவில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும் என தனது தயக்கத்தை கூறியிருந்தார்.

    அவரது இந்த பதிவை எக்ஸ் தள பயனர்கள் பலரும் வரவேற்றனர். இந்நிலையில் எலான் மஸ்க் கோரிக்கையை ஏற்று மிஸ்டர் பீஸ்ட் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அந்த வீடியோவுடன் அவரது பதிவில், எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ எவ்வளவு விளம்பர வருவாயை ஈட்டுகிறது என்று பார்க்க நான் ஆவலாக உள்ளேன். 

    அடுத்த வாரம் விளம்பர வருவாயாயை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார். இதைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்த எலான் மஸ்க் தனது பதிவை மறு பகிர்வு செய்து, மிஸ்டர் பீஸ்ட்டின் முதல் வீடியோ நேரடியாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது என கூறியிருந்தார்.

    அவரது மிஸ்டர் பீஸ்ட்டின் வீடியோ மிகவும் வேடிக்கையாகவும், சுவராஸ்யமாகவும் இருந்ததாக பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவரது முதல் வீடியோவை 2.7 கோடி

    ×