என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்டனை"

    • பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தது மிகவும் வருந்தத்தக்கது, துரதிஷ்டமானது.
    • உண்மைக் குற்றவாளிகளா என்ற சந்தேகம் இருப்பதாக ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தது மிகவும் வருந்தத்தக்கது, துரதிஷ்டமானது. அன்னாரை இழந்து வாடும் அவரது மனைவி பொற்கொடிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் அவரது இல்லத்திற்கு நேரடியாகச் சென்று தெரிவித்ததோடு, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன். இந்தத் துயரத்தில் வாடும் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மீண்டு வருவதற்கான மன உறுதியை வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    இந்தக் கொலையில் சரணடைந்த குற்றவாளிகள், உண்மைக் குற்றவாளிகளா என்ற சந்தேகம் இருப்பதாக

    ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தக் கொடுஞ்செயல் புரிந்தவர்களையும், தொடர்புடைய அனைத்து உண்மைக் குற்றவாளிகளையும், அவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயரிய பொறுப்பில் இருந்தாலும், அவர்களைக் கண்டறிந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • இளைஞர் ஒரு சிறுமியிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
    • இதனை பார்த்த சிறுமியின் குடும்பத்தினர் இந்த விஷயத்தை பஞ்சாயத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அம்ரோஹா:

    உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள கெடா அப்ரோலா கிராமத்தில் இளைஞர் ஒருவரை பாதி மொட்டையடித்தும் கழுத்தில் செருப்பு மாலையுடன் ஊர்வலமாக கிராம மக்கள் அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கெடா அப்ரோலா கிராமத்தில் உள்ள இளைஞர் ஒரு சிறுமியிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். இதனை பார்த்த சிறுமியின் குடும்பத்தினர் தங்கள் மகளிடம் பேசியதற்காக இளைஞர் மீது கோபமடைந்து, இந்த விஷயத்தை பஞ்சாயத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த பஞ்சாயத்தில் இளைஞருக்கு இந்த கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞரை ஊர்வலமாக அழைத்துச் செல்வதும், சில குழந்தைகள் அவரை கேலி செய்வதும் பதிவாகியது.

    இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இது தொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதே சமூகத்தைச் சேர்ந்த இரு வீட்டாருக்கு இடையே இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • இந்த நூதன தண்டனையால் நொந்து போன சுற்றுலா பயணிகள் போலீசாரிடம் தொடர்ந்து கெஞ்சினர்.
    • போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

    கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் அருகே முடிகரே பகுதியில் உள்ள சார்மதி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அப்பகுதியில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரிப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அருவியை சுற்றி பல இடங்களில் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் சிலர் போலீசாரின் எச்சரிக்கையை மீறி அந்த அருவிக்கு சென்று குளித்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அருவியில் சில வாலிபர்கள் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர். அவர்களின் ஆடைகள் அருவிக்கரையில் இருந்தது. உடனே போலீசார் அந்த உடைகளை எடுத்துக்கொண்டு சென்றனர். இதைப்பார்த்த வாலிபர்கள் அருவியில் இருந்து ஓடி வந்து போலீசாரிடம் தங்கள் ஆடைகளை கேட்டு கெஞ்சினர். ஆனால் அவற்றை உடனடியாக போலீசார் கொடுக்கவில்லை. இந்த நூதன தண்டனையால் நொந்து போன சுற்றுலா பயணிகள் போலீசாரிடம் தொடர்ந்து கெஞ்சினர்.

    இதையடுத்து போலீசார் சுற்றுலா பயணிகளை எச்சரித்து போதிய அறிவுரைகள் வழங்கி, ஆடைகளை கொடுத்து அனுப்பினர். இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பயனர்கள் பலரும் போலீசாரின் நடவடிக்கையை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    • மான்ஸ்டர் என்ற புனைப்பெயரில் அந்த வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.
    • தற்போது ஆடம் செய்த குற்றங்களுக்காக ஆஸ்திரேலிய நீதிமன்றம் 249 வருடங்கள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.

    உலகம் முழுவதும் விதவிதமாக புதுப்புது வகையில் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் பெரும்பாலானவை பாலியல் குற்றங்கள் ஆகும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் வினோதமான வகையில் குற்றங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அதாவது 52வயதான விலங்கியல் நிபுணரும், முதலைகள் ஸ்பெஷலிஸ்டுமான ஆடம் பிரிட்டோன் என்பவர் நாய்களை அடித்து துன்புறுத்தி வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் இதுவரை 39 நாய்கள் உயிரிழந்துள்ளன. நாய்களை வன்புணர்வு செய்வதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார் ஆடம் பிரிட்டோன். இதுபோன்று விலங்குகளை துன்புறுத்தியதாக இவர் மீது 60 குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் இவையனைத்தையும் ஆடம் பிரிட்டோன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

     

    விலங்குகளை பராமரிக்க முடியாமல் திணறும் உரிமையாளர்களிடமிருந்து அவற்றை வாங்கி இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் ஆடம். பாரப்பிலியா paraphilia என்ற மன நோயினால் ஆடம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இந்த நோய் உள்ளவர்கள் குழந்தைகள் மீதும் , உயிரற்ற பொருட்கள் மீதும் பாலியல் இச்சை கொண்டிருப்பர். ஆடம் ஒரு படி மேலாக விலங்குகள் மீது பாலியல் இச்சை கொண்டுள்ளார். விலங்குகளை வன்புறவு செய்வதை படம்பிடிக்கும்போது பல்வேறு கோணங்களில் பல சாதனைகளை பயன்படுத்தி படம்பிடித்துள்ளார்.

    மான்ஸ்டர் என்ற புனைப்பெயரில் அந்த வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். தனது நாய் துன்புறுத்தப்படுவதை வீடியோவில் பார்த்த முன்னாள் உரிமையாளர் அளித்த புகாரை அடுத்து இந்த குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது ஆடம் செய்த குற்றங்களுக்காக ஆஸ்திரேலிய நீதிமன்றம் 249 வருடங்கள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.

    • காவலர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்றார்.
    • தவறான புகாரின் அடிப்படையிலும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்றார்.

    சென்னை:

    பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை மற்றும் தண்டனையை அதிகரிக்கும் 2 சட்ட மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்திருந்தார்.

    இந்த சட்ட மசோதாக்கள் மீது சட்டசபையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்

    அதன் விவரம் வருமாறு:-

    தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறுகையில்,

    இந்த சட்டம் தமிழகத்திற்கு மிக முக்கியமான சட்டம். சிறுமிகளை, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோர் முதல் பின் தொடர்வோருக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தியிருக்கும் அருமையான சட்டம். ஆனால் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. காவலர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்றார்.

    தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) கூறுகையில்,

    மரண தண்டனை குறித்து உலகம் முழுவதும் பல்வேறு கருத்துகள் பரவிவரும் நிலையில் அது குறித்து மட்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.

    ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) கூறுகையில்,

    இந்த தண்டனைகள் விரைவாக கிடைப்பதற்கு ஏதேனும் வழியிருக்கிறதா? கடுமையான தண்டனைகள் இருந்தாலும் விரைவாக கிடைக்காத காரணத்தினால் குற்றங்கள் பெருகுகின்றனர். சட்டத்திருத்தத்திற்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) கூறுகையில்,

    பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைக்கப்படும் நோக்கத்தில் தண்டனையை அதிகரித்து முதலமைச்சர் கொண்டு வந்த மசோதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் புகார் கொடுத்தால் தாமதிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. விழிப்புணர்வு பிரச்சாரம், பாடத்திட்டத்தில் பாலியல் சமத்துவ பாடத்திட்டங்களை கொண்டு வர வேண்டும். சாதிமறுப்பு செய்யும் பெண்கள் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் அவற்றையும் இந்த சட்டத்தில் கொண்டு வர வேண்டும். மரண தண்டனை குறித்து பரிசீலிக்க வேண்டும்.

    இவ்வாறு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

    இதன் பின்னர் பேசிய சட்டதுறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்,

    பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் எண்ணுபவர் தான் நம் முதலமைச்சர். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் கனவிலே கூட எண்ணிப் பார்க்காத அளவிற்கு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

    செல்வபெருந்தகை (காங்கிரஸ்) பேசுகையில்,

    இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    ஜி.கே.மணி (பாமக) கூறுகையில்,

    இந்த சட்டம் தேவையான சட்டம். மரண தண்டனையை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். தவறான புகாரின் அடிப்படையிலும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்றார்.

    இவ்வாறு உறுப்பினர்கள் பேசினார்கள்.

    இதன்பிறகு முதலமைச்சர் கொண்டு வந்த சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    • மதுரை சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி விடுதலை செய்யப்பட்டார்.
    • இவரது தண்டனை காலம் வருகிற 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந் தேதி வரை உள்ளது.

    மதுரை

    மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் மணி என்ற நயினார் (வயது 64). இவர் ஒரு வழக்கில் கைதாகி 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவருக்கு 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந் தேதி ஜாமீன் கிடைத்தது. ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இருந்த போதிலும் அவருக்கான ஆயுள் தண்டனையை கோர்ட்டு உறுதி செய்தது.

    இதனைத் தொடர்ந்து மணி என்ற நயினார் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ந் தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரது தண்டனை காலம் வருகிற 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந் தேதி வரை உள்ளது.

    மதுரை மத்திய சிறையில் நயினார் 3 ஆண்டு, 7 மாதம் வரை சிறை தண்டனை அனுபவித்து வந்தார். 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவரை விடுதலை செய்வது என்று சிறை நிர்வாகம் முடிவு செய்தது. 60 வயதுக்கு மேல் இருக்கும் சிறைவாசிகள் சில குறிப்பிட்ட வழக்குகளில் 50 சதவீதம் தண்டனை அனுபவித்து இருந்தால் அவரை விடுதலை செய்யலாம் என்ற அடிப்படையில் மணி என்ற நயினார் மதுரை மத்திய ஜெயலலிதா இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

    • கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை சுரேஷுக்கு பரோல் விடுப்பு வழங்கப்பட்டது.
    • தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி சுரேஷ் என்கின்ற சத்யராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சிராங்குடி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கின்ற சத்யராஜ் வயது 34. இவர் கரூர் மாவட்டம் மாயனூர் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் மாயனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நடைபெற்ற விசாரணையில் நீதிமன்றம் சுரேஷ் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நிலையில் சுரேஷ் கடந்த 17.4.2014 ஆம் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை சுரேஷுக்கு பரோல் விடுப்பு வழங்கப்பட்டு மூன்று ஆயுதப்படை காவலர்கள் வழி காவலாக நியமிக்கப்பட்டு பட்டுக்கோட்டை அருகே உள்ள சிராங்குடி வடக்கு கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்த சுரேஷ் தப்பி ஓடிவிட்டார்.

    இதை அடுத்து வழி காவலர்களாக வந்த அந்த மூன்று ஆயுதப்படை காவலர்களும் இது பற்றி மதுக்கூர் காவல் நிலையத்தில் தெரிவித்தனர். இதை அடுத்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி சுரேஷ் என்கின்ற சத்யராஜை போலீசார் தேடி வருகின்றனர். ஆயுள் தண்டனை கைதி தப்பித்து ஓடிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வெயில் தாங்க முடியாமல் துடிக்கும் சிறுமியை பக்கத்து வீட்டு தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
    • சிறுமியின் தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்லி கஜூரிகாஸ் பகுதியை சேர்ந்த பெண்ணின் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் மகள் (5) சரிவர வீட்டு பாடம் செய்யவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், மகளின் கை மற்றும் கால்களை கயிறால் கட்டி வீட்டின் கூரையில் சுட்டெரிக்கும் வெயிலில் விட்டு சென்றுள்ளார்.

    வெயில் தாங்க முடியாமல் துடிக்கும் சிறுமியின் நிலையை பக்கத்து வீட்டு நபர் அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

    இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சிறுமி வெயிலில் துடிக்கும் வீடியோவைக் கண்டு சிறுமியின் தாயை மக்கள் திட்டி தீர்க்கின்றனர்.

    இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரியவந்ததை அடுத்து, சிறுமியின் தாய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டு பாடம் செய்யாததால் பெற்ற பிள்ளைக்கே கொடூர தண்டனை வழங்கிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×