என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூ"

    • பரமத்தி வேலூர் பகுதியில் பூக்களின் வரத்து குறைவாலும், ஐப்பசி மாத வளர்பிறையை முன்னிட்டு கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இருப்பதால் பூக்களின் விலை‌ உயர்வடைந்துள்ளது.
    • பச்சை முல்லை ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.250-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா ஆனங்கூர், பாகம்பாளையம், பெரியமருதூர், சின்ன மருதூர், தண்ணீர் பந்தல், நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில், மல்லிகை, சம்பங்கி, செவந்தி, அரளி, முல்லை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பூ வியாபாரிகள் வாங்கிய உதிரிபூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்து வரு கின்றனர். அதேபோல் சில வியாபாரிகள் பிளாஸ்டிக் கவரில் போட்டு பாக்கெட்டுகளாக உள்ளூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று உதிரிப்பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் மல்லிகை ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.120-க்கும், ரோஜா கிலோ ரூ.150-க்கும், முல்லைப் பூ ரூ.400-க்கும், பச்சை முல்லை 400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

    நேற்று மல்லிகை கிலோ ரூ.1000-க்கும், சம்பங்கி கிலோ ரூ150-க்கும், அரளி கிலோ ரூ.180-க்கும், ரோஜா கிலோ ரூ.250-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும், பச்சை முல்லை ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.250-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். பூக்களின் வரத்து குறைவாலும், ஐப்பசி மாத வளர்பிறையை முன்னிட்டு கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இருப்பதால் பூக்களின் விலை‌ உயர்வடைந்துள்ளது.

    • கடந்த வாரங்களில் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வந்ததால் பூக்களின் தேவை அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது முகூர்த்த தினங்கள், திருவிழா இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது.
    • இன்று சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் விலை நிலவரம்  (1 கிலோ கணக்கில்) ரூ.2400, ரூ.2600, ரூ.2800 என்ற விலையில் விற்கப்பட்டது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பழைய பஸ் நிலையத்தில் வ.உ.சி. பூ மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி, ஓமலூர்,

    காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, கன்னங்கு றிச்சி, வாழப்பாடி,பேளூர், வீராணம், டி.பெருமா பாளையம் உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    பெங்களூரு, சென்னை, கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் இங்கிருந்து பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருமண முகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிக ரிப்பது வழக்கம். கடந்த வாரங்களில் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வந்ததால் பூக்களின் தேவை அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது முகூர்த்த தினங்கள், திருவிழா இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது.இன்று சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் விலை நிலவரம்  (1 கிலோ கணக்கில்) வருமாறு:-

    குண்டுமல்லிகை-ரூ.1400, முல்லை- ரூ. 800, ஜாதிமல்லிகை-ரூ.400, காக்கட்டான்ரூ-.320, கலர் காக்கட்டான்- ரூ.280, மலைக்காக்கட்டான்-ரூ.280, அரளி-ரூ. 280, வெள்ளை அரளி-ரூ.280,

    மஞ்சள் அரளி- ரூ.280, செவ்வ ரளி-ரூ. 320, ஐ.செவ்வரளி-ரூ.320, நந்தியாவட்டம்- ரூ.280, சி.நந்திவட்டம்-ரூ.280, சம்மங்கி -ரூ.50, சாதா சம்மங்கி-ரூ.50 என்கிற விலையில் விற்கப்பட்டு வருகிறது. கடந்த வாரங்களில் முகூர்த்த தினங்கள், பண்டிகை நாட்கள் சீசன் காரணமாக குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ.2400, ரூ.2600, ரூ.2800 என்ற விலையில் விற்கப்பட்டது. ஆனால் தற்போது சீசன் இல்லாததால் பூக்களின் விலை சரிபாதி யாக சரிந்துள்ளது. வரும்

    நாட்களில் முகூர்த்த

    தினங்கள் மற்றும் பண்டிகை நாட்கள் வரும் போது மீண்டும் பூக்கள் விற்பனை சூடுபிடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிக ரித்துள்ளது. இதன் காரண மாக சேலம் மார்க்கெட்டுக்கு சாமந்தி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. 
    • பூக்கள் வரத்து அதிகரித்து உள்ளதால், போதிய அளவு விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ பூக்கள் அதிக பட்சமாக ரூ.100- க்கு விலையில் செல்கிறது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டத்தில் செட்டிச்சாவடி, கன்னங்குறிச்சி, வீராணம்,

    வலசையூர், ஓமலூர், தீவட்டிப்பட்டி, காடை யாம்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாமந்தி பூக்கள் விளைவிக்கப்படுகிறது. இங்கு அறுவடைக்கு செய்யப்படும் பூக்கள் சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிக

    ரித்துள்ளது. இதன் காரண மாக சேலம் மார்க்கெட்டுக்கு சாமந்தி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. 

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சேலம் மார்க்கெட்டுக்கு வழக்கத்தைவிட அதிகளவில் சாமந்தி பூக்களை விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகிறோம். பூக்கள் வரத்து அதிகரித்து உள்ளதால், போதிய அளவு விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ பூக்கள் அதிக பட்சமாக ரூ.100- க்கு விலையில் செல்கிறது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்றார்.

    • கடந்த 4 நாட்களாக மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000 வரை ஏலம் போனது.
    • இனி வரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளான அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, நவலடிப்பட்டி, செவ்வந்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் குண்டு மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த மல்லிகை பூ செடிகளை பட்டம் மாறுவதற்காக விவசாயிகள் கடந்த மாதம் வெட்டி விட்டனர். இதனால் மிக குறைந்த அளவிலேயே மல்லிகை பூ செடிகளில் இருந்து பறிக்கப்பட்டு ஏலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் எருமைப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் கடந்த 4 நாட்களாக மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000 வரை ஏலம் போனது. இனி வரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    மல்லிகை பூ செடி பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    மல்லிகை பூ செடிகள் பட்டம் மாறுவதற்காக கடந்த மாதம் வெட்டி விடப்பட்டது. தற்போது செடிகள் பூக்கும் நிலைக்கு வராமல் உள்ளன. மேலும் இந்த பகுதியில் பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் மல்லிகை பூ வரத்து முற்றிலும் குறைந்தது.கடந்த மாதம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ வந்த மல்லிகை பூக்கள், தற்போது ஒரு கிலோ கூட வரவில்லை. இதனால் நேற்று வெளியூரில் இருந்து வந்த வியாபாரிகள் ஒரு கிலோ மல்லிகை பூவை ரூ.2000-க்கு ஏலம் எடுத்து சென்றனர். இனிவரும் நாட்களிலும் இந்த விலை நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

    • கோழிக் கொண்டை பூ சீசன் என்பதால், அதிகளவில் பூத்து வருகிறது.
    • வீராணத்தில் கோழிக் கொண்டை சாகுபடி செய்ய ப்பட்டுள்ள இடத்தில், கோழி க்கொண்டை பூ நல்ல முறையில் வளர்ந்து ள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, மங்களபுரம், வீராணம், வலசையூர், கன்னங்குறிச்சி, மேச்சேரி, மேட்டூர் உள்பட பல பகுதிகளில் கோழிக் கொண்டை பூச்சொடி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது கோழிக் கொண்டை பூ சீசன் என்பதால், அதிகளவில் பூத்து வருகிறது. வீராணத்தில் கோழிக் கொண்டை சாகுபடி செய்ய ப்பட்டுள்ள இடத்தில், கோழி க்கொண்டை பூ நல்ல முறையில் வளர்ந்து ள்ளது. இங்கு பறிக்கப்படும் பூக்களை, விவசாயிகள் சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டு க்கும், வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பு கின்றனர்.

    • கரூர் மாவட்ட விவசாயிகள் பூ சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்
    • கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம் உள்பட பல்வேறு ஒன்றியங்களில் விவசாயிகள் பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் கோழிக்கொண்டை, செண்டு மல்லி, விரிச்சிப் பூ, ரோஜா ஆகிய பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு ஆயிரம் ஏக்கருக்கு மேல் பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பூக்களை பறித்து கரூர், திருச்சி, குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் பூ மார்க்கெட்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. தற்போது கோவில் திருவிழா நடந்து வருவதாலும், தொடர்ந்து திருமண முகூர்த்தம் இருப்பதாலும் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தீவிரமாக சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனைப்பட்டு வருகின்றனர்.
    • இப்பகுதிகளில் மலர் சந்தை மற்றும் நறுமண தொழிற்சாலை, குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    வடகாடு பகுதியில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, பிச்சி, அரளி, சென்டி, ரோஜா போன்ற பூக்கள் சாகுபடி பணிகளில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி ஆகும் பூக்கள் அந்தந்த ஊர்களில் உள்ள பூ கமிஷன் கடைகள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளூர் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் முதல் வெளிமாவட்டங்கள் வரை பஸ், மோட்டார் சைக்கிள், சரக்கு வேன் உள்ளிட்டவைகளில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

    அதிகாலை நேரங்களில் இருந்தே பூக்களை பறித்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே விற்பனை நிலையங்களுக்கு விவசாயிகள் பூக்களை கொண்டு சேர்த்தாக வேண்டும். அதனால் கூலி விவசாய தொழிலாளர்களை பயன்படுத்தி பூக்களை பறிக்கும் விவசாயிகள். ஒரு கிலோ பூ பறிக்க ரூ.50 வரை கூலி கொடுக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் தற்போது வெயில் காலை 8 மணிக்கு எல்லாம் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுவதால் பூக்களை பறிக்க படாதபாடு பட வேண்டி இருப்பதாகவும், மேலும் தற்போது கோடை வெயிலால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி இருப்பதால் பூக்கள் விற்பனையும் சரிவர நடப்பது இல்லை எனவும் கூறப்படுகிறது.

    பூக்களின் விலை வீழ்ச்சிக்கு இது ஒரு காரணமாக கூறப்படுகிறது. இப்பகுதிகளில் மலர் சந்தை மற்றும் நறுமண தொழிற்சாலை, குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.1 கிலோ மல்லிகை ரூ.150, முல்லை ரூ.120, கனகாம்பரம் ரூ.300, சென்டி ரூ.40, ரூ.50, பிச்சி ரூ.30, ரூ.40, சம்பங்கி ரூ.10, ரூ.20 ஆகிய விலைகளில் விற்பனை ஆகி வருகின்றன.

    • பூக்கள் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
    • 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அரசபட்டி, வலையங்குளம், தும்பக்குளம், கப்பலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக இந்தப்பகுதி யில் மல்லிகை, பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்றவை பயிரிடப்படுகிறது. இந்த மாதம் சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோவில் திரு விழாக்கள் நடத்துவது வெகுவாக குறைந்துள்ள தால் பூக்களின் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக பூக்கள் விலை கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

    மல்லிகை, முல்லைப்பூ ஆகியவற்றை பறிப்பதற்கு ஒருநாள் கூலி ரூ.150 வழங்கப்படுகிறது. ஆனால் பூக்களின் விலை ரூ.100-க்கு விற்பதால் நஷ்டம் ஏற்படுகிறது. இதன் காரணமாக தோட்டத்தில் உள்ள செடிகளில் பூக்கள் பறிக்கப்படாமல் உள்ளது.

    லட்சக்கணக்கில் செலவழித்து பூ சாகுபடி செய்த விவசாயிகள் விலை சரிவால் வேதனைய டைந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தில் வாசனை திரவியம் ஆலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • நொய்யல் பகுதியில் வரத்து குறைவால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், பேசிப்பாறை, நடையனூர், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். பூக்கள் நன்கு விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தினசரி பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய உதிரிப் பூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டியும் விற்பனை செய்து வருகின்றனர்.

     இல்லத்தரசிகள் கவலை விலை உயர்வு கடந்த வாரம் குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.240-க்கும், முல்லைப் பூ ரூ.240 -க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.200- க்கும், ரோஜா ரூ.180-க்கும், செவ்வந்தி ரூ.170-க்கும் விற்பனையானது. நேற்று குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.340-க்கும், முல்லைப் பூ ரூ.340-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.140-க்கும் ரோஜா ரூ.200-க்கும், செவ்வந்தி ரூ.220-க்கும் விற்பனையானது. வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் ெதரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • வேலாயுதம்பாளையம் பகுதிகளில் பூக்களின் விலை உயர்ந்தது
    • பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் மரவாபாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை, ரோஜா, செவ்வந்தி, சம்பங்கி சம்பங்கி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இங்குவிளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் கோவிலுக்கு வரும் விவசாயிகளுக்கும் அருகாமையில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு செல்கின்றனர். வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் அந்த பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.280-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், அரளி ரூ.80-க்கும், ரோஜா ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் ஏலம் போனது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி ரூ.380-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.120-க்கும், ரோஜா ரூ.220-முல்லைப் பூ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.260-க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • இதுகெட்டி அரளி எனப்படும் ஈரடுக்கு மலராகவும் நமக்கு கிடைக்கிறது.
    • சகாரா பாலைவனத்தில் கூட செவ்வரளி பூப்பது குறிப்பிடத்தக்கது.

    கடன்களை தீர்க்கும் செவ்வரளி

    "அரளி" பூக்களில் எத்தனையோ வகைகள் உள்ளன. ஆனால் அரளி என்று சொன்னதும் சாதாரணமாக நம்மால் அழைக்கப்படும் மலர் செவ்வரளிதான்.

    சிவந்த அரளிப் பூ எங்கும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடிய ஓரடுக்கு மலராகும்.

    இதுகெட்டி அரளி எனப்படும் ஈரடுக்கு மலராகவும் நமக்கு கிடைக்கிறது.

    ஆனால்பெரும்பாலான பக்தர்களால் விரும்பி வாங்கப்படுவது செவ்வரளிப்பூதான்.

    மகாவாராஹிக் குரிய மலர்களில் செவ்வரளி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    அனைவருக்கும் கிடைக்கக்கூடிய எளிய மலர் செவ்வரளி, இம்மலர் சோலை, நந்தவனம், தோட்டம், பாதையோர பாலைவனம் என்ற பாகுபாடுகளின்றி, எங்கும் மிக எளிமையாக பூத்துக்குலுங்கும் அற்புத குணம் உடையது.

    சகாரா பாலைவனத்தில் கூட செவ்வரளி பூப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மலருக்கு விஞ்ஞான பூர்வமாக, காற்றிலுள்ள கார்பனின் அளவைக்குறைக்கக்கூடிய ஆற்றல் உண்டு.

    அதனால்தான் நமது தேசிய நெடுஞ்சாலைகளில் நாற்கரசாலைகளில் அக்கறையுடன் இந்த மலர் அதிகமாக வளர்க்கப்படுகின்றன.

    அம்மனை வழிபடும்போது நமது மனதை அம்மன் மீது ஒரு நிலைப்படுத்தி சிவப்பு அரளி கொண்டு பூஜை செய்தால், குடும்பச் சச்சரவுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.

    மனம் திறந்து கடன் பிரச்சினைகளை கடவுளிடம் சமர்ப்பித்தவிட்டு மஞ்சள் அரளி கொண்டு பூஜை செய்தால் கடன் தொல்லை காணாமல் போகும்.

    வேதனை மிகுதியால் சஞ்சலப்படுபவர்கள், வெள்ளை அரளி கொண்டு வேதபிரானை அர்ச்சித்து வணங்கினால் மன அமைதி கிடைக்கும்.

    இத்தகைய பெருமை மிகு அரளிப்பூ, அனைத்து ஆலயங்களின் நந்தவனங்களிலும் செல்லக் குழந்தையாகவே வளர்க்கப்பட்டு வருகிறது.

    திருக்கரவீரம் மற்றும் திருக்கள்ளில் ஆகிய புண்ணிய தலங்களில் தல விருட்சமாகத் திகழகூடிய பெருமையையும் அரளி பெற்றுதுள்ளது.

    உத்திர நட்சத்திரக்காரர்கள் அரளிச்செடிகளை நடுவதும் வளர்ப்பதும் மிகவும் அல்லது என சொல்லப்படுகிறது.

    • இதனை “கைலாய மலையின் பனித்தூறல்” என்று வர்ணிப்பவர்களும் உண்டு.
    • சிவபெருமானுக்கு பொதுவாக வெள்ளை நிற மலர்கள் மிகவும் படிக்கும்.

    மனதை அமைதிப்படுத்தும் நில சம்பங்கி

    வெள்ளைநிறம் உடைய மலர்கள் சாத்வீக குணத்தை கொண்டவை. மீண்டும் மீண்டும் சாத்வீகமான மலர்களை நாம் இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபாடு செய்து தரிசிக்கும்போது, அந்த வெள்ளை மலர்களில் உள்ள சாத்வீக குணம் நமக்குள்ளும் வந்துவிடும்.

    அத்தகைய சாத்வீக குணத்தை தரும் மலர்களில் ஒன்றாக நில சம்பங்கி மலர் உள்ளது. இந்த நில சம்பங்கி மலர்களுக்கு மற்ற மலர்களை விடக் கூடுதலான ஒரு அம்சம் உண்டு.

    அதாவது நில சம்பங்கி மிகமிக வலிமையான பிரத்யேகமான வாசனை கொண்டது.

    நில சம்பங்கி மாலையை மற்ற மலர்களைபோல கட்டுவது போல் இல்லாமல் ஊசியில் நூல் கோத்து, நீள நீளமாகக் கோத்து, மிக மெல்லிய, நளின மாலைகளை அணிவது இன்றும் வழக்கம்.

    இதைவிட ஆலயங்களில் செய்யப்படும் அனைத்து அலங்காரங்களுக்கும் அதிகம் பயன்படும் மலர் இதுதான்.

    இந்தப் பூவின் வெண்மைநிறம் மற்றும் மெல்லிய நீண்ட குழல் போன்ற வடிவத்தின் காரணமாக, இதனை "கைலாய மலையின் பனித்தூறல்" என்று வர்ணிப்பவர்களும் உண்டு.

    இந்த மலர்மாலை அனைத்து ஆலயங்களிலும் அனைத்து தெய்வங்களுக்கும் எப்போதும் அணிவிக்கப்படும் மாலையாக உள்ளது.

    சகஸ்ரநாம அர்ச்சனைகளுக்கு ஏராளமான பூக்கள் தேவைப்படும்போது வாசனைமிக்க மலர் என்ற ஒரே காரணத்திற்காக அதிகம் இடம்பெறும் மலர் சம்பங்கிதான்.

    மல்லிகை சாகுபடி செய்யும் மதுரை விவசாயிகள் சமீபகாலமாக நிலசம்பங்கி சாகுபடிக்கு வெகுவாக மாறியுள்ளனர்.

    "இரவு ராணி" என்று நம் விவசாயிகள் இந்தப்பூவை சொல்வ துண்டு. சந்தை விற்பனையில் அதிகலாபம் பெற்றுக் கொடுப்பதால் இந்த மலர் பூ வியாபாரிகளின் செல்வம் ஆகவும் கருதப்படுகிறது.

    சிவபெருமானுக்கு பொதுவாக வெள்ளை நிற மலர்கள் மிகவும் படிக்கும்.

    அவனுக்குகந்த நாட்களிலும், நேரங்களிலும் கைநிறைய அள்ளி அள்ளி அர்ச்சித்து வணங்கினால் மனத்தூய்மை பெருகும்.

    உங்களைச்சுற்றி எது நடந்தாலும் பதற்றம் அடைய மாட்டடீர்கள். நிதானமான மனதுடன் செயல்களில் ஈடுபடுவீர்கள்.

    நிலசம்பங்கிப்பூக்களை "புதிய சிருஷ்டி" என்று புதுச்சேரி அன்னை வர்ணித்துள்ளார். எனவே சம்பங்கி மலர்கள் நமக்குள்ள திறனை அதிகப்படுத்தவும், இல்லாத அம்சங்களை உருவாக்கவும் உதவுகின்றன.

    ×