என் மலர்
நீங்கள் தேடியது "கண்ணாடி உடைப்பு"
- அடையாளம் தெரியாத நபர் பஸ்சை வழிமறித்து அவருடைய இரு சக்கர வாகனத்தை பஸ் முன்னாடி நிறுத்தினார்.
- இதனால் டிரைவர் சுரேஷ் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கள்ளக்குறிச்சி:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் செந்தாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 44). இவர் தனியார் பஸ்சில் 10 வருடமாக டிரைவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று பகல் 2 மணி அளவில் கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இந்திலி ஆர் .கே. எஸ். கல்லூரி அருகே அடையாளம் தெரியாத நபர் பஸ்சை வழிமறித்து அவருடைய இரு சக்கர வாகனத்தை பஸ் முன்னாடி நிறுத்தினார்.
பின்னர் டிரைவரை பார்த்து நீ பஸ் சாலையில் ஓட்டுறியா? இல்லை வானத்தில் ஓட்டுகிறாயா? என ஆபாசமாக திட்டி கல்லால் பஸ்சின் முன் பகுதி கண்ணாடியை உடைத்துசேதப்படுத்தினார். இதனால் டிரைவர் சுரேஷ் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் வழக்கை பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கைது செய்யப்பட்ட சுமனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.முதல் கட்ட விசாரணையில் சுமன் குடிபோதையில் கண்டக்டரிடம் ஏற்பட்ட தகராறில் பஸ்சை கல்வீசி உடைத்திருப்பது தெரியவந்துள்ளது.
- தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.
நாகர்கோவில், அக்.27-
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து வடசேரி புத்தேரி இறச்ச குளம் வழியாக காட்டுப்புதூ ருக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு அண்ணா பஸ் நிலையத்திலிருந்து அரசு பஸ் ஒன்று காட்டுப்பு தூருக்கு சென்றது. பஸ்ஸில் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த சுமன் (வயது 23) என்பவர் பயணம் செய்தார். அவர் பஸ் கண்டக்டரிடம் டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் கண்டக்டருக்கும் சுமனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் சுமன் காட்டுப்புதூர் பகுதியில் பஸ்சை விட்டு இறங்கி அவரது சகோதரி வீட்டிற்கு சென்றார். வழக்கமாக பஸ் காட்டுப்புதூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது வழக்கம்.அதேபோல் டிரைவர் கண்டக்டர்கள் இரவு பஸ்ஸை காட்டுப்புதூர் பகுதியில் நிறுத்தி வைத்தி ருந்தனர்.
இதேபோல் காட்டுப்புதூ ருக்கு இயக்கப்படும் மற்றொரு அரசு பஸ்சும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பஸ்ஸில் 2 டிரைவர்களும் கண்டக்டர்களும் தூங்கிக் கொண்டிருந்தனர்.நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது.
இதையடுத்து டிரைவர் கண்டக்டர்கள் கண்விழித்து பார்த்த போது பஸ்ஸின் கண்ணாடியை சுமன் கல்வீசி உடைத்து கொண்டு இருந்தார். இதில் பஸ்சின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகள் உடைந்தன. உடனே டிரைவர், கண்டக் டர்கள் அவரை பிடிக்க முயன்றனர்.அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பஸ் கல்வீசி உடைக்கப் பட்டது குறித்து பூதப் பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். உடைக்கப்பட்ட இரண்டு பஸ்களையும் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் சுமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ஊருக்குள் பதுங்கி இருந்த சுமனை போலீசார் பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுமனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.முதல் கட்ட விசாரணையில் சுமன் குடிபோதையில் கண்டக்டரிடம் ஏற்பட்ட தகராறில் பஸ்சை கல்வீசி உடைத்திருப்பது தெரியவந்துள்ளது.தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.
- குடிபோதையில் அட்டகாசம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த குருவராஜ பேட்டையை சேர்ந்தவர் விஜயன். அவரது மகன் குமார் (வயது 30), இவர், அப்பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் அருகே மினி லாரியை நிறுத்தி இருந்தார்.
அப்போது சோகனூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் (23), தனுஷ் (20), பரத் (18) ஆகி யோர் குடிபோதையில் லாரியின் கண்ணாடியை உடைத்ததாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜ், தனஷ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விழுப்புரம் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.
- புதுவை மாநிலம் மதகடிப்பட்டி பகுதியில் 2 வாலிபர்கள் ஏறினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட த்திற்கு புதுவையில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்த வண்ணம் இருக்கும். இந்நிலையில் சம்பவத்தன்று புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி 50 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை டிரைவர் பார்த்த சாரதி ஓட்டினார். கண்டக்ட ராக உமாநாத் பணியில் இருந்தார். அப்போது புதுவை மாநிலம் மதகடிப்பட்டி பகுதியில் 2 வாலிபர்கள் ஏறினர். அவர்கள் குடித்து விட்டு எந்த நிலையில் இருக்கிறோம் என்று கூட தெரியாமல் போதை தலைக்கேறி இருந்தனர். மேலும் அவர்கள் பஸ்ஸில் ஏரியதிலிருந்து இறங்கும் வரை சத்தம் போடுவது கூச்சல் போடுவது பஸ்ஸில் இருந்த பயணி களை பயமுறுத்து வது உள்ளிட்ட ஒழுங்கீ னமான செயல்களை செய்த னர். மேலும் அவர்கள் பஸ் கண்டக்டர் உமாநாத் இடம் தகராறில் ஈடுபட்டனர். இதன் பின்னர் அந்த 2 போதை வாலிபர்களும் கோலியனூர் கூட்ரோட்டில் இறங்கினர்.
அதன்பின் பஸ் சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு வாலிபர்களும் போதையில் அருகில் கிடந்த கல்லை எடுத்து பஸ் பின்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள் பதறிப் போய் அழறினர். இந்த கல்விச்சில் அதிர்ஷ்ட வசமாக எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து பஸ் டிரை வர் கண்டக்டர் வளவனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து மொபைல் போன் மூலம் எடுக்கப்பட்ட போட்டோ ஆதாரங்களின் அடிப்ப டையில் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் கோலியனூர் கூட்ரோடு ராமையன் பாளையம் பகுதி யைச் சேர்ந்த சக்திவேல் (வயது 25), ராசையா (26) என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ராசையாவை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- தலைவர்கள் உருவப்படங்களின் கண்ணாடியை உடைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- உருவப்படம் உடைப்பு காரணமாக நெல்லை சந்திப்பில் இருந்து திருப்பணி கரிசல்குளம் செல்லும் பஸ் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பேட்டை அருகே உள்ள திருப்பணி கரிசல்குளம் பகுதியில் பொதுமக்களால் ஊர் முகப்பில் பீடம் ஒன்று அமைக்கப்பட்டு முத்துராமலிங்கத் தேவர் உருவப்படம் மற்றும் பூலித்தேவன் உருவப்படம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு மர்ம நபர்கள் பீடத்தின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நெல்லை துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே தலைவர்கள் உருவப்படங்களின் கண்ணாடியை உடைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என உறுதி அளித்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
அதன்பிறகு அங்கிருந்த படங்கள் மற்றும் சிலைகள் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டு புதிய படங்கள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உருவப்படம் உடைப்பு காரணமாக நெல்லை சந்திப்பில் இருந்து திருப்பணி கரிசல்குளம் செல்லும் பஸ் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
- சிறிது தூரம் சென்றவுடன் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்து வந்தனர்.
- ஆத்திரமடைந்து முன்பக்க படியின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியின் மேல் பகுதியில் போடப்பட்டிருந்த தகரத்தை வேகமாக தட்டி உள்ளார்.
விழுப்புரம்:
திண்டிவனத்தில் இருந்து இன்று காலை அரசு பேருந்து கீழ் எடையாளம் கிராமத்திற்கு சென்றுள்ளது. அங்கிருந்து மீண்டும் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றவுடன் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்து வந்தனர். அப்போது நடத்துனர் படியில் தொங்கி சென்ற மாணவர்களை பேருந்தின் மேலே ஏறி வரும்படி கூறினார்.
இதனால் முன்பக்க படியில் நின்று வந்த மாணவன், ஆத்திரமடைந்து முன்பக்க படியின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியின் மேல் பகுதியில் போடப்பட்டிருந்த தகரத்தை வேகமாக தட்டி உள்ளார். இதில் கண்ணாடி உடைந்து பேருந்தின் உள்ளே சிதறியது. இதனால் பேருந்தின் உள்ளே பயணம் செய்த பயணிகள் அலறி அடித்து கீழே இறங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி மாணவன் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அனந்தீஸ்வரன் கோவில் அருகே பஸ்சினை நிறுத்திவிட்டு காலையில் விருத்தாசலத்திற்கு இந்த பஸ் இயக்கப்படும்.
- அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
கடலூர்:
விருத்தாசலத்திலிருந்து பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்திற்கு தடம் எண்.12-ல் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பேர்பெரியான்குப்பம் அனந்தீஸ்வரன் கோவில் அருகே பஸ்சினை நிறுத்திவிட்டு காலையில் விருத்தாசலத்திற்கு இந்த பஸ் இயக்கப்படும். அதுபோல நேற்று இரவு இந்த பஸ்சினை நிறுத்திவிட்டு டிரைவர் முருகன் (வயது 46), கண்டக்டர் எம்பெருமான் 2 பேரும் ஓய்வு எடுத்தனர். ஆங்கில புத்தாண்டு பிறப்பினை கொண்டாடும் விதமாக குடித்து விட்டு முழு போதையில் 3 வாலிபர்கள் நள்ளிரவு 3 மணிக்கு பஸ்சின் அருகில் வந்தனர். பக்கவாட்டில் நின்ற 3 பேரும் பஸ்சினை தட்டினர். பஸ்சினுள் இருந்து இறங்கி வந்த டிரைவர் முருகன், எதற்காக பஸ்சினை தட்டுகிறீர்கள் என்று போதை வாலிபர்களிடம் கேட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் 3 பேரும் டிரைவர் முருகனை தாக்கிவிட்டு, பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பிவிடுகின்றனர். இதில் பலத்த காயமடைந்த டிரைவர் முருகன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மானடிக்குப்பம் ராஜதுரை (வயது 24), முத்தாண்டிக்குப்பம் பிரவின் குமார் (23), வீரசிங்ககுப்பம் செல்வமணி (23) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஐ.டி ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- காரை நிறுத்திவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை,
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் விக்ரம் (வயது 25). என்ஜினீயர். இவர் சம்பவத்தன்று இரவு புத்தாண்டு கொண்டாட தனது சகோதரர் வருண் மற்றும் நண்பர் அதீஸ்வரன் ஆகியோருடன் காரில் ஆர்.எஸ்.புரம் சென்றார்.
அங்கு அவர்கள் காரை நிறுத்திவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சிலர் விக்ரமிடம் தகராறு செய்தனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கல்லால் அவரது கார் கண்ணாடியை உடைத்தனர்.
மேலும் அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி விக்ரமை தாக்கினர். தடுக்க முயன்ற வருண் மற்றும் அதீஸ்வரனையும் தாக்கி மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இதில் காயமடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து விக்ரம் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குடிபோதையில் தாக்குதல் நடத்தியது ஆர்.எஸ்.புரம் சுக்கிரவார்பேட்டையை சேர்ந்த ஐ.டி ஊழியர் ஸ்ரீ பிரமோத் (23) மற்றும் அவரது நண்பர் கோவில்மேடு வ.உ.சி நகரை சேர்ந்த கவுதம் (35) என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 2 பேர் கைது
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
ஆற்காட்டில் இருந்து சிப்காட், லாலாபேட்டை, ரெண்டாடி, கல்லாலமட்குப்பம் வழியாக சோளிங்கருக்கு அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது.
அந்த பஸ், கல்லாலமட்குப்பம் வந்தபோது மோட்டார்சைக்கிளில் வந்த போதை கும்பல் 3 பேர் பஸ்சை வழி மறித்து நிறுத்தினர்.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது 3 பேரும் அவர்கள் வைத்திருந்த பீர் பாட்டிலால் கண்ணாடியை உடைத்து விட்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து சோளிங்கர் கொண்டபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வந்த போலீசார் பஸ்சை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அதில் தப்பிச்சென்ற நபர்கள் நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சீதாராமன் (வயது 33), கோகுல் (23), அப்துல் லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (25) என்பது தெரியவந்தது.
இவர்களில் சீதாராமன், விஜய்யை போலீசார் கைது செய்தனர். கோகுலை தேடி வருகின்றனர்.
- கோயம்புத்தூரில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பேருந்து சனிக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது.
- பஸ்சை சண்முகநாதன் என்பவர் ஓட்டி வந்தார்.
வெள்ளகோவில் :
கோயம்புத்தூரில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பேருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை சண்முகநாதன் என்பவர் ஓட்டி வந்தார். பஸ் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம் அருகே வரும்போது வெள்ளகோவில் எம்.பழனிசாமி நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 45) என்பவர் குடிபோதையில் பஸ் கண்ணாடியை கல்லால் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் பஸ் கண்ணாடி உடைந்து விட்டது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் காயம் இன்றி தப்பினர்.இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கற்களை வீசி தாக்கினர்
- மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
நெமிலி:
திருத்தணியில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி செல்லும் தனியார் பஸ் ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த சேந்தமங்க லத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணியள வில் சென்று கொண்டிருந்தது. அப்போது மர்மநபர்கள் திடீரென்று கற்களை வீசி தாக் குதல் நடத்தினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ்சை விட்டு அலறியடித்து கீழே இறங்கி ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. போலீ சார் வருவதற்கு முன்பே மர்ம கும்பல் அங் கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல் வீசி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டார்.
இதை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ம.க வினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, வாலாஜா அடுத்த மருதாலம் கூட்ரோடு அருகே பா.ம.க வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக திருத்தணியில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், கல் வீசி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பஸ் மீது கல்வீசிய சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.