என் மலர்
நீங்கள் தேடியது "போதை பொருள்"
- கலெக்டர் உத்தரவு
- போதை பொருட்கள் விற்றால் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை
வேலூர்:
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் போதை பொருட்களாக கருதப்படும் ஹான்ஸ் மற்றும் குட்கா, புகையிலை ஆகியவை விற்பனை செய்வதை ஏற்கனவே தடைசெய்யப்பட்டு அமுலில் உள்ளது.
சில வியாபாரிகள் கள்ளத்தனமாக தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.
இதையடுத்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சோதனையின்போது மேற்படி பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மற்றும் கடையின் உரிமத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் தங்கள் கடைகளின் முன்பு பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில் "இங்கு ஹான்ஸ், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதில்லை" என்ற அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குலசேகரம் இன்ஸ்பெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- இந்த ஓட்டமானது திற்பரப்பு பகுதியில் இருந்து தொடங்கி குலசேகரம் அரசு மருத்துவமனை வரை நடைபெற்றது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இன்றைய சமுதாயத்தில் போதை பொருட்களுக்கு அடிமை யாகும் மாணவர்கள், இளைஞர்கள் அதன் அழிவை உணர்ந்து அதில் இருந்து விடுபட உறுதிமொழி ஏற்று குலசேகரத்தில் செயல்ப டும் நற்பணி மன்றம் சார்பாக நடத்திய மாரத்தான் விழிப்புணர்வு போட்டியில் நேபாள நாட்டிற்குச் சென்று சிலம்பு விளையாடி தங்கம், வெள்ளி பதக்கங்கள் பெற்ற விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டியானது திற்பரப்பு பகுதியில் இருந்து 6000 மீட்டர் தூரத்திற்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஓட்டத்தை குல சேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் டாக்டர் நெல்சன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ஓட்டமானது திற்பரப்பு பகுதியில் இருந்து தொடங்கி குலசேகரம் அரசு மருத்துவமனை வரை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் போதைப் பொருள்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் 65 வயதான மூதாட்டி பள்ளி மாணவ- மாணவிகளோடு கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை மகிழ் வித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த மூதாட் டியை கவுரவிக்கும் விதமாக ஊக்க தொகையும், கேடயமும் வழங்கப்பட்டது. மூதாட்டி இந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மன நலம் குன்றிய மாணவர் ஒருவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அந்தமாணவனை கவுரவிக்கும் விதமாக ஊக்கத்தொகையும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
- சப்-இன்ஸ்பெக்டர் சோபனராஜ் பெண்கள் வன்கொடுமை குறித்து மாணவ மாணவிகளிடம் விளக்கி கூறினார்.
- போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தால் மாணவர்கள் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்
கன்னியாகுமரி:
கருங்கல் போலீஸ் நிலையத்தில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் துண்டத்துவிளை புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் சுமார் 50 பேர் ஆசிரியையுடன் கலந்து கொண்டனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ் மற்றும் சோபனராஜ் ேபாலீசாரின் செயல்பாடு, காவல்துறையில் தற்போது பயன்படுத்தப்பபட்டு வரும் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு கஞ்சா போன்ற போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் எடுத்து கூறி, போதைப்பொருட்களை ஒருவரும் பயன் படுத்தகூடாது என அறிவுறுத்தினார். மேலும் போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தால் மாணவர்கள் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்து போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை காக்க உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் சப்-இன்ஸ்பெக்டர் சோபனராஜ் பெண்கள் வன்கொடுமை குறித்து மாணவ மாணவிகளிடம் விளக்கி கூறினார். இவைகளை கேட்டு அறிந்த மாணவ மாணவிகள் போலீசாருக்கு நன்றி கூறினர்.
- டிரோனில் 5 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- பாகிஸ்தானின் டிரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
பஞ்சாப் மாநிலம் டர்ன்தரான் மாவட்டத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே வயல் வெளியில் டிரோன் ஒன்று கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தபோது அதில் 5 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தலைமை இயக்குனர் சவுரவ் யாதவ் கூறும்போது, "5 கிலோ எடையுள்ள ஹெராயின் அடங்கிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஹெக்சாகாப்டர் டிரோனை போலீசார் கைப்பற்றினர்" என்றார்.
கடந்த 28ம் தேதி அமிர்தசரஸ் மற்றும் டர்ன் தரான் மாவட்டங்களில் ஊடுருவிய இரண்டு பாகிஸ்தானின் டிரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2 பேர் கைது - ஒருவர் தப்பி ஓட்டம்
- போலீசார் தீவிர வாகன சோதனை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் போதைப் பொருள்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனை தடுக்கும் விதத்தில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் படந்தாலு மூடு சோதனை சாவடியில் தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. அந்த காரை போலீசார் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து விரட்டிய போது, கார் குழித்துறை சப்பாத்து பாலம் அருகாமையில் சென்றபோது தொடர்ந்து செல்ல முடியாமல் நின்றது. அப்போது காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் கும்பல் தலைவன் கணேஷ் தப்பி ஒடிவிட்டார்.
காரில் இருந்த டிரைவர் மற்றும் 2 பேர் சிக்கினர்.அவர்களிடமிருந்து 300 கிராம் போதை பொருளும் சிக்கியது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது அதன் விவரம் வருமாறு:-
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் குட்கா கடத்தல் தொழில் செய்து வருகிறார்.இவர் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் ஜங்ஷன் அருகில் துணிக்கடை நடத்தி வருவருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புத்தாரம் மகன் பிரகாஷ் (வயது 30) மூலம் ராஜஸ்தானிலிருந்து போதைப் பொருள் கடத்தி வந்து குமரி மாவட்டம், கேரளா, பெங்களுர் உட்பட பல இடங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த கிருஷ்ணாலால் மகன் ராஜேஷ் (27) என்பவர் மூலம் கல்லூரி மாணவர்களுக்கும் போதைப்பொருள் சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து பிரகாஷ், ராஜேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்
மேலும் ஓட்டுனருக்கு இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான கணேசை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார்.போலீசார் நடத்திய விசாரணையில் மார்த்தாண்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வடநாட்டு கும்பல்களுக்கும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. கணேஷ் கைதாகும் பட்சத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
- குற்றவாளியை பிடிக்க தனிப்படை ராஜஸ்தானுக்கு விரைந்தது
- தப்பி ஓடிய கணேஷ் மற்றும் அவரது சக கூட்டாளிகளை பிடிக்க ராஜஸ்தான் போலீசின் உதவியை நாட குமரி மாவட்ட போலீசார் முயற்சி
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் போதைப் பொருள்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதத்தில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று படந்தாலு மூடு சோதனை சாவடி யில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வர ராஜ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது சொகுசு கார் வேகமாக வந்தது.
அந்த காரை போலீசார் நிறுத்தும்படி கூறியும் நிற்காமல் சென்றதால் அதனை விரட்டிச் சென்று குழித்துறை சப்பாத்து பாலம் பகுதியில் போலீசார் மடக்கினர்.
காரில் இருந்த ஓட்டுநர் மற்றும் 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்களி டமிருந்து எம். டி .எம். ஏ. என்ற 300 கிராம் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் தான் இதனை கடத்தி வந்ததாகவும் அவர் காரில் இருந்து தப்பி சென்று விட்டதும் தெரியவந்தது. மேலும் காரில் வந்த 2 பேர்
மார்த்தாண்டத்தில் ஜவுளிக்கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புத்தாரம் மகன் பிரகாஷ் (வயது30) மற்றும் கிருஷ்ணாலால் மகன் ராஜேஷ் (27) என தெரியவந்தது.
இவர்கள் மூலம் ராஜஸ்தா னிலிருந்து கணேஷ் போதைப் பொருளை கடத்தி வந்து குமரி மாவட்டம், கேரளா, பெங்களுர் உட்பட பல இடங்களில் புழக்கத்தில் விட்டுள்ளான்.
இந்தநிலையில் தப்பி ஓடிய கணேஷ் மற்றும் அவரது சக கூட்டாளிகளை பிடிக்க ராஜஸ்தான் போலீசின் உதவியை நாட குமரி மாவட்ட போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர்களை பிடிக்க குமரி மாவட்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றுள்ளது.
கன்னியாகுமரி:
பள்ளி மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது போதை பொருள் சம்பந்தப்பட்ட ஏதேனும் தகவல் தெரிந்தாலோ, தகவல் அளிக்க குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் திறந்து வைத்தார். பின்னர் அவர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற் படுத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், போதைப் பொருட்களை விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் 70103 63173 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டும், புகார் பெட்டி மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். மேலும் தகவல் அளிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றார்.
- போதைப் பொருட்கள் உட்கொண்டால் உடல்நிலை சீர்கெடுவது மட்டுமின்றி ஆயுள் காலம் குறைவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
- மாணவர்கள் போதைப் பொருட்கள் பழக்கத்துக்கு ஆளாக கூடாது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் உட்கொண்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தமிழ்ச் செல்வம் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இன்ஸ்பெக்டர் ஏழுமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருட்கள் உட்கொண்டால் உடல்நிலை சீர்கெடுவது மட்டுமின்றி ஆயுள் காலம் குறைவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே மாணவர்கள் போதைப் பொருட்கள் பழக்கத்துக்கு ஆளாக கூடாது. படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். யாராவது கஞ்சா போன்ற போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்தால் 9444005105 செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்போரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். மேலும் தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
இவ்வாறு இன்ஸ்பெக்டர் ஏழுமலை தெரிவித்தார்.
- மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணி ஒவரின் பேக்கை சோதனை செய்தனர்.
- மும்பையைச் சேர்ந்த அந்த பயணியை சுங்க அதிாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மும்பை:
மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணி ஒவரின் பேக்கை சோதனை செய்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பையின் உள் பகுதியை கிழித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அந்த பையில் கோகைன் எனும் போதை பொருள் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பையில் இருந்த 2.81 கிலோ மதிப்புள்ள கோகைக்கனை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.28.10 கோடியாகும்.
இதை தொடர்ந்து மும்பையைச் சேர்ந்த அந்த பயணியை சுங்க அதிாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சமூக வலைதளம் மூலம் அறிமுகமா நபர் ஒருவர் அந்த போதை பொருளை தன்னிடம் கொடுத்ததாக கைதான அந்த பயணி தெரிவித்தார்.
கடந்த வாரம் மும்பை சர்வதேச விமான நிலையத்தல் ரூ.47 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏ.டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் அறிவுரை
- பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போதைக்கு எதிரான பிரசாரத்தை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.
நாகர்கோவில்:
தமிழ்நாடு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் நேற்று குமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவர் போலீஸ் அதிகாரிகளு டன் ஆலோ சனை மேற்கொண் டார்.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஈஸ்வரன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனையின்போது, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டம் கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்றப்பட வேண்டும். வெளி மாநிலங்க ளில் இருந்து கஞ்சா விற்பனைக்கு கொண்டு வரப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் அறிவுரை வழங்கினார்.
அதோடு கஞ்சா மற்றும் போதைக்கு அடிமையான இளை ஞர்கள், மாண வர்களை மீட்கும் வகையில் காவல்துறையினர் விழிப்பு ணர்வு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டும் என்றும் கூறினார். மேலும் மாவட்டத்தில் போதை மீட்பு சிகிச்சை மையங்களுடன் காவல்துறையினர் இணைந்து செயலாற்ற வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போதைக்கு எதிரான பிரசாரத்தை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை அதிகப்படுத்த வேண்டும். மேலும் போதைக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ளும் வகையில் போட்டோ பாயின்ட் ஏற்படுத்தும் நிகழ்ச்சியையும் ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த போட்டோ பாயிண்ட், பல்வேறு முக்கிய இடங்களில் வைக்கவும், பள்ளி, கல்லூரிகளில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். மேலும் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் பறிமுதல் செய்த கஞ்சா வைக்கப்பட்டுள்ள குடோனையும் ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் பார்வையிட்டார்.
- சுமார் 150 பேர் தங்க வைக்கப்பட்டு இருந்ததும் மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்ததும் தெரியவந்தது.
- 5 ஆண்டுகளில் போதைப்பொருள் கொடுத்து பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டார்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி என்கிற பெயரில் ஆசிரமம் இல்லம் இயங்கி வருகிறது. இங்கு சேர்க்கப்பட்டு இருந்தவர்களில் பலர் மாயமானதாக புகார் எழுந்தது.
இதன் தொடர்ச்சியாக கெடார் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் சுமார் 150 பேர் தங்க வைக்கப்பட்டு இருந்ததும் மேலும் இங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக கெடார் போலீசார் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த மனநலம் பாதிக்கப்பட்டோரை சித்ரவதை செய்தல், உள்நோக்கத்துடன் அவர்களை வெளிமாநிலத்துக்கு அழைத்து செல்லுதல், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட 13 பிரிவின் கீழ் உரிமையாளர், அவரது மனைவி உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
தப்பி வந்த பெண் ஒருவர் தன்னார்வலர்களிடம், கூறுகையில் தான் ஒடிசாவிலிருந்து விழுப்புரத்தில் பிச்சை கேட்டு வந்ததாகவும், அங்கு ஒரு 'மீட்பு' குழு தன்னை அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறினார்.
5 ஆண்டுகளில், போதைப்பொருள் கொடுத்து பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டார். சங்கிலியால் பிணைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். இதனை அந்த பெண் எதிர்க்க முயன்றபோது, உரிமையாளர் கூண்டில் வைத்திருந்த குரங்குகள் மூலம் கொடூரமாக கடிக்க செய்தனர் என கண்ணீர்மல்க தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் நடந்த விசாரணையில் சம்பவங்கள் உண்மை என தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஆசிரமத்தை மூடுவதற்கு கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
- உசிலம்பட்டியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
- கஞ்சா மற்றும் போதை பொருள் வியாபாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக உசிலம்பட்டி மதுரை ரோட்டில் தனியார் மகாலில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் மற்றும் உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு ஆகியோர் தலைமையில் உசிலம்பட்டி பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யும் மற்றும் கஞ்சா தொழில் செய்யும் கஞ்சா வியாபாரிகளுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப்பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.
போதைப்பொருட்களின் உற்பத்தி, நடவடிக்கைகளின் மூலம் நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் எனவும், கஞ்சா மற்றும் போதை பொருள் வியாபாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதில் உசிலம்பட்டி போலீசார் கலந்து கொண்டனர்.