என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றம்"

    • தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம். எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வந்த பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் அலுவலகம், பூதப்பாண்டி கட்டிடபிரிவு உதவி பொறியாளர் அலுவலகம் ஆகியவை பராமரிப்புக்கு என்று தென்காசி மாவட்டம் ஆலங்கு ளம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதே போன்று தக்கலையில் இயங்கி வந்த கட்டிட பிரிவு அலுவலகம் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

    தமிழக பொதுப்பணித்து றையில் கட் டிடஅமைப்பு உருவாக்கப்பட்டபோது, குமரி மாவட்டத்தில் ஒரு கோட்டம், 4 உப கோட்டம் மற்றும் 10 பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அரசு கட்டிடங்களை பராமரிப்பு செய்து வருவ துடன், புதிய கட்டிடங்க ளையும் கட்டி வருகிறது.

    இந்த அலுவலகங்கள் குமரி மாவட்டத்தில் இருந்து மாற் றப்படுவதால் ஒரு உதவி செயற்பொறியாளர் பணியிடம், 3 உதவி பொறி யாளர் இளம் பொறியாளர், ஒரு கண்காணிப் பாளர், ஒரு உதவியாளர் பணியிடம் போன்றவை இந்தமாவட் டத்தில் இருந்து பறிபோய் விடுகிறது. இதனைக் கருத் தில் கொண்டு, குமரி மாவட்டத்தில் இயங்கி வந்த அலுவலகங்களை பிற மாவட்டங்களுக்கு மாற்றுவதற்கு பிறப்பிக்கப் பட்ட அரசு உத்தரவை உடனே ரத்து செய்ய வேண் டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    மேலும் இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பியுள்ளார்.

    • அப்டா மார்க்கெட் வழியாக பஸ்கள் இயக்கம்
    • ரூ.1.40 கோடி செலவில் சீரமைப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகருக்கு புத்தன் அணையிலிருந்து பைப் லைன் மூலமாக கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக சாலைகள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது‌. பைப் லைன்கள் அமைக்கப்பட்ட சாலை கள் குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது. அதை சீரமைக்க நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தற்பொழுது அசம்பு ரோடு பகுதியில் சாலை சீரமைக்க ரூ.1 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் இன்று தொடங் கப்பட்டது. ஜே.சி.பி. எந்திரம் மூலமாக சாலை கள் தோண்டப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன் மற்றும் நெடுஞ் சாலை துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டதையடுத்து அசம்பு ரோட்டில் போக்கு வரத்து மாற்றி விடப்பட்டு உள்ளது.சாலையின் குறுக்கே தடுப்பு வேலிகள் அமைத்து சாலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. அங்கு போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அசம்பு ரோட்டில் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. நாகர்கோவில் வடசேரியில் இருந்து செல்லும் அனைத்து பஸ்களும் ஒழுங்கினசேரி அப்டா மார்க்கெட் வழியாக நாற்கரசாலையில் சென்று புத்தேரிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் புத்தேரியில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் நாற்கரசாலை வழியாக வந்து அப்டா மார்க்கெட் ஒழுகினசேரி வழியாக வடசேரிக்கு வருகிறது.

    போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த சாலை பணியை விரைந்து முடிக்க ஒப்பந்தக்காரர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இரவு பகலாக இந்த பணியை முடிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    • நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.
    • போக்குவரத்து மாற்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணியில் இருந்து நாளை (சனிக்கிழமை) திருவிழா முடியும் வரை அமலில் இருக்கும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட் டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. இன்று (வெள்ளிக்கிழமை) 9-ம் நாள் திருவிழா நடைபெறு கிறது. நாளை (சனிக்கி ழமை) திருவிழா நிறைவ டைகிறது. இந்த திருவிழா வில் 8, 9, 10-ம் நாட்களின் போது ஏராளமான மக்கள் வருவார்கள். இதனால் ஆலய வளாகத்திலும், கேப் ரோட்டிலும் மக்கள் கூட் டம் அதிகமாக இருக்கும். இதனால் போக்குவ ரத்து நெசரிசல் ஏற்படும். என வே 9, 10-ம் நாள் திரு விழா க்களி ன்போ து போலீ சார் போ க்கு வரத்து மாற் றம் செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண் டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாகர் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன் னிட்டு பொதுமக்கள் மற் றும் போக்குவரத்து நலன் கருதி போக்குவரத்து மாற் றம் செய்யப்படுகிறது. கன் னியாகுமரி, இருளப்பபுரம் மற்றும் ஈத்தாமொழியில் இருந்து பீச்ரோடு வழியாக நாகர்கோவில் வரும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையாக ஆயுதப் படை முகாம் ரோடு பொன்னப்ப நாடார் காலனி, கார்மல் பள்ளி, ராமன்புதூர், செட்டிக்குளம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

    வடசேரி, கோர்ட்டு ரோடு மற்றும் அண்ணா பஸ் நிலை யத்தி லிருந்து கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், பறக்கை, இருளப்பபுரம் மற் றும் ஈத்தாமொழி மார்க்க மாக செல்லும் அனைத்து வாகனங்களும் வேப்பமூடு சந்திப்பு. பொதுப்பணித் துறை அலுவலக சாலை வழியாக செட்டிக்குளம் -சந் திப்பு.இந்து கல்லூரி சாலை, பீச்ரோடு சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

    இந்த போக்குவரத்து மாற்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணியில் இருந்து நாளை (சனிக்கிழமை) திரு விழாமுடியும் வரை அமலில் இருக்கும். இந்த போக்குவ ரத்து மாற்ற த்திற்கு பொதுமக் களும், வாகன ஓட்டுனா களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கெள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

    • மேயர் மகேஷ் தகவல்
    • வேதநகர் பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு மினி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் 52 வார்டுகளிலும் ஆய்வு பணியை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பீச் ரோடு பகுதியில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கில் இன்று மேயர் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள குப்பை களை அப்புறப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண் டார். பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதா வது:-

    நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. ஏற்கனவே நாகர் ேகாவில் நகரப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கள் கொட்டப்பட்டு உள் ளது. இங்கு அடிக்கடி தீ விபத்துகளும் நடந்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த குப்பை கிடங்கை மாற்றவேண்டும் என்று பொதுமக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

    இந்த குப்பை கிடங்கை மாற்ற அனைத்து நடவ டிக்கைகளும் மேற் கொள் ளப்பட்டு வருகிறது. ஏற்க னவே குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து எடுக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.பிளாஸ்டிக் தவிர்த்து மற்ற குப்பைகளை உரமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் இன்னும் ஆறு மாத காலத் திற்குள் இந்த குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகர்கோவில் நகரில் பொதுமக்களின் பிரச்சினை களுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு பிரச்சி னைகளை தீர்க்க நடவ டிக்கை மேற்கொண்டு வரு கிறோம். கழிவுநீர் ஓடைகள் அனைத்தும் சீரமைக்கப் பட்டு வருகிறது. பொது மக்க ளுக்கு தங்கு தடை யின்றி குடிநீர் வழங்கவும் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம். விரைவில் புத்தன் அணை குடிநீர் திட்டம் மக்களின் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து வி.என். காலனி பகுதியில் உள்ள பூங்காவை ஆய்வு செய்த மேயர் மகேஷ் அந்த பூங்காவை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தர விட்டார். இதைத்தொடர்ந்து வேதநகர் பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு மினி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

    ஆய்வின் போது மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ஸ்டாலின் பிரகாஷ் மற்றும் ஷேக் மீரான் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கடைகளிலிருந்து குப்பைகளை வெளியே கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் டதி பள்ளியில் இருந்து வேப்பமூடு வரை ரூ. 2 கோடி செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. டதி பள்ளி பகுதியில் கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அந்த பகுதியில் கழிவு நீர் ஓடை மழை நீர் ஓடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த பகுதியில் இருந்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டார். வேப்பமூடு பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் குப்பைகளை சாலை ஓரத்தில் போட்டிருந்ததை பார்த்தார். அதை உடனே அகற்ற உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் டதி பள்ளியில் இருந்து வேப்பமூடு வரை உள்ள சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்படும். அதன்பிறகு அந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் சாலை ஓரத்தில் நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் .

    இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதற்கான ஒதுக்கப்பட்ட பகுதியில் மட்டுமே நிறுத்த வேண்டும். கோர்ட் ரோட்டில் சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரை குப்பையில்லா நகரமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கடைகளிலிருந்து குப்பைகளை வெளியே கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், பகுதி செயலாளர் ஷேக் மீரான் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • காலை மற்றும் மதியம் தங்களின் வருகையினை தவறாமல் என்.எம்.எம்.எஸ். செயலி வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே தாங்கள் பணிக்கு வருகை தந்தது உறுதி செய்யப்பட்டு ஊதியம் வழங்க இயலும்.
    • கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2021-2022-ம் நிதியாண்டு முதல் அனைத்து பணிகளும் நடைபெறும் இடங்களில் தொழிலாளர்களின் வருகை பதிவு 21-5-2021 முதல் இருமுறை என்.எம்.எம்.எஸ். செயலி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சக இயக்குனரின் கடிதத்தில் 1-1-2023 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தனிநபர் சொத்து உரு வாக்கம் பணிகளை தவிர்த்து அனைத்து பணித்தளத்தி லும் (20-க்கும் குறைவான தொழிலாளர்களை கொண்ட பணி கூட) என்.எம்.எம்.எஸ். செயலி மூலம் மட்டுமே வருகை பதிவு மேற்கொள்ள கட்டாய மாக்கப்பட்டு உள்ளது.

    மேலும் விலக்கு ஏதும் அளிக்கப்பட மாட் டாது எனவும், இதன் அடிப்ப டையிலேயே வருகை பதிவுகள் பதியப்பட்டு நிதி பரிமாற்ற ஆணை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக என்.எம்.எம்.எஸ். செயலி மூலம் வருகை பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணியாளர்களும் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) காலை மற்றும் மதியம் தங்களின் வருகை யினை தவறாமல் என்.எம்.எம்.எஸ். செயலி வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே தாங்கள் பணிக்கு வருகை தந்தது உறுதி செய்யப்பட்டு ஊதியம் வழங்க இயலும்.

    மேலும் இத்திட்டத்தின் குறைகள் தீர்ப்பதற்காக சத்தியசீலன் என்பவர் குமரி மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவருடைய செல்போன் எண்-8925811310, மின்னஞ்சல் முகவரி - Ombudsmankki@gmail.com ஆகும். எனவே பொதுமக்கள் மற்றும் திட்டத்தில் பணி புரிபவர்கள் திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறை தீர்ப்பாளரின் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக் கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுசீந்திரத்திற்கு மீண்டும் ஜெயசந்திரன் நியமனம்
    • இன்ஸ்பெக்டர் இளவரசு மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம்

    நாகர்கோவில்:

    நெல்லை சரகத்துக்குட் பட்ட போலீஸ் நிலையங்க ளில் பணியாற்றும் 19 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பிறப்பித்துள்ளார்.

    திருவட்டார் இன்ஸ் பெக்டர் ஷேக் அப்துல் காதர் நெல்லை மாவட் டம் சேரன்மாதேவி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். கருங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் பணி புரிந்தவர். மீண்டும் இங்கு இன்ஸ்பெக்டராக ஜெயசந் திரன் பதவியேற்க உள்ளார்.

    சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை சிட்டி எஸ்.பி. சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் இசக்கிதுறை கருங்கல் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

    கொல்லங்கோடு இன்ஸ் பெக்டர் ராமா நெல்லை மாவட்ட சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்டுள்ளார். மார்த் தாண்டம் போலீஸ் நிலை யத்தில் கடந்த ஒரு மாத காலமாக இன்ஸ்பெக் டர்கள் இல்லாத நிலை இருந்தது. இதனால் வழக்கு விசாரணைகளில் தொய்வு ஏற்படுவதாக சமூக ஆர்வ லர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் இளவரசு மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    • கோனியம்மன் கோவில் தேரோட்டம்
    • போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆணடுக்கான திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

    தேர் முகூர்த்தக்கால் நடும் விழா கடந்த மாதம் 23-ந் தேதி நடந்தது.

    இதனை தொடர்ந்து கடந்த 14-ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் திருவிழா தொடங்கியது.

    20-ந் தேதி கிராம சாந்தி, 21-ந் தேதி கொடியேற்றம், அக்னிசாட்டு நடந்தது. தினமும் பெண்கள் கொடி கம்பத்திற்கு நீரூற்றி வழிபட்டு வருகின்றனர்.

    திருவிழா நாட்களில் தினமும் அம்மன் புலிவாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகன திருவீதி உலா நடந்தது.

    இன்று மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (1-ந் தேதி) நடக்கிறது. பிற்பகல் 2.05 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ராஜ வீதி தேர் திடலில் இருந்து புறப்படும் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் திடலை அடையும். மார்ச் 3-ல் தெப்பத்திருவிழாவும், 4-ந் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது.

    மார்ச் 6-ந் தேதி நடக்கும் வசந்த விழாவுடன் கோனியம்மன் கோவில் திருவிழா நிறைவடைகிறது.

    கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை (1-ந் தேதி) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உக்கடம், பேரூர், ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார் பேட்டை, தெலுங்கு வீதி.

    செட்டி வீதி, சலிவன் வீதிக ளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பேரூரில் இருந்து செட்டி வீதி, ராஜவீதி வழியாக நகருக்குள் வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. பேரூரில் இருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகே வலதுபுறம் திரும்பி அசோக் நகர் ரவுண்டானா வழியாக பேரூர் பைபாஸ் ரோடு வழியாக செல்லலாம்.

    வைசியாள் வீதி, செட்டி வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சேத்து மாவாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் சாலையை அடையலாம்.

    மருதமலை தடாகம் சாலையில் இருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. மருதமலை தடாகம் சாலையில் இருந்து காந்திபார்க், பொன்னைய ராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.

    உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக, தடாகம் ரோடு, மருதமலை, மேட்டுப்பாளையம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா வழியாக காந்திபார்க் சென்று செல்ல வேண்டும்.

    கனரக வாகனங்கள் நகருக்குள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர் திருவிழா நடைபெறும் வீதிகளான ராஜவீதி, ஒப் பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி. வீதி ஆகிய சாலைகளில் வாகனம் நிறுத்த அனுமதியில்லை.

    இருசக்கர வாகனங்களை ராஜவீதி மாநகராட்சி வாகன நிறுத்தும் இடத்திலும், நான்கு சக்கர வாகனங்களை உக்கடம் போலீஸ் நிலையத்திற்கு எதிரே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திற்கு கீழே உள்ள காலியிடத்தில் நிறுத்திக் கொள்ளலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது. 

    • மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.
    • செய்தி வெளியிட்ட மாலைமலர் நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம்- பொள்ளாச்சி மெயின் ரோட்டில், பழைய பல்லடம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு உள்ள மின் கம்பம் பழுதடைந்து எந்த நேரமும் சாய்ந்து விழும் அபாய நிலையில் இருந்தது.இதனை மாற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இது குறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனைப் படித்த மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய கம்பத்தை நட்டனர். மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட மாலைமலர் நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • கருங்காலகுடி-சிங்கம்புணரி சாலை இருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • 18 சுக்காம்பட்டி வரை மதுரை மாவட்டமாகும். அதற்கு அடுத்து பகுதி சிவகங்கை மாவட்டம் ஆகும்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ளது கருங்காலக்குடி. இங்கிருந்து 18 சுக்காம்பட்டி வழியாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு செல்லும் சாலை உள்ளது. இதனை இரு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று ஐக்கிய முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் பக்ருதீன் அலி அகமத் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். அது நெடுஞ்சாலை துறை பரிசீல னைக்கு அனுப்பப்பட்டி ருந்தது. இது குறித்து நெடுஞ்சாலை துறையின் மேலூர் பகுதி உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கருங்காலக்குடி பேட்டையில் இருந்து சிங்கம்புணரி வரை இருவழி பாதையாக மாற்ற வேண்டும் என்று தாங்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளீர்கள். அது பரிசீலணையில் உள்ளது. மேலும் அதை 18 சுக்காம்பட்டி வரை மதுரை மாவட்டமாகும். அதற்கு அடுத்து பகுதி சிவகங்கை மாவட்டம் ஆகும். எனவே கருங்காலக்குடி பேட்டையில் இருந்து 18 சுக்காம்பட்டி வரை அதனை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2023-24 திட்டத்தில் சேர்த்து அரசுக்கு பிரேணை அனுப்பப்படும் என தங்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போத்தனூர் ரெயில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • தெற்கு ரெயில்வே சார்பில் ரெயில்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை போத்தனூர் ரெயில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரிலிருந்து மங்களூருக்கு இரவு 11.15 மணிக்கு செல்லும் விரைவு ரெயில் (வண்டி எண் 16159) ஏப்ரல் 27, 29-ந் தேதிகளில் திருச்சி கோட்டை, கரூர், புகளூர், கொடுமுடி, ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், பீளமேடு, கோவை வடக்கு, கோவை, போத்தனூர் வழியாக செல்வதற்கு பதிலாக திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக செல்லும்.

    ஜார்கண்ட் மாநிலம் ,தன்பாத்திலிருந்து கேரளத்தின் ஆலப்புழா செல்லும் விரைவு (ரெயில் வண்டி எண் 13351) ஏப்ரல் 26, 28 தேதிகளில் ஈரோடு, திருப்பூர், கோவை, வழியாக செல்வதற்கு பதிலாக சேலம், நாமக்கல், கருவூர், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக செல்லும்.

    ஈரோடு- பாலக்காடு நகரம் இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரெயில் ( வண்டி எண்கள் : 06818/06819) ஏப்ரல் 28 , 30-ந் தேதிகளில் கோவையுடன் நிறுத்தப்படும். கோவையிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல ஈரோடு சென்றடையும்.

    மதுரை-கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரெயில் (வண்டி எண்கள் : 16721/16722) ஏப்ரல் 28, 30-ந் தேதிகளில் போத்தனூருடன் நிறுத்தப்படும். போத்தனூரிலிருந்து பிற்பகல் 2.52 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல ஈரோடு சென்றடையும்.

    மதுரை-கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரெயில் (வண்டி எண்கள் 16721/16722) ஏப்ரல் 28, 30-ந் தேதிகளில் போத்தனூருடன் நிறுத்தப்படும். போத்தனூரிலிருந்து பிற்பகல் 2.52 மணிக்கு புறப்பட்டு வழக்கம்ேபால மதுரை சென்றடையும்.

    கண்ணூர்- கோவை இடையே இயக்கப்படும் மெமு ரெயில் விரைவு ரெயில் (வண்டி எண்கள் : 16608/16607) ஏப்ரல் 28, 30 -ந் தேதிகளில் போத்த னூருடன் நிறுத்தப்படும். கோவையிலிருந்து பிற்பகல் 2.34 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல கண்ணூர் சென்றடையும்.

    கேரள மாநிலம் சொரனூர்- கோவை இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரெயில் (வண்டி எண்கள் 06804/06805) ஏப்ரல் 28, 30-ந் தேதிகளில் போத்தனூருடன் நிறுத்தப்படும். போத்தனூரிலிருந்து பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல சொரனூர் சென்றடையும்.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • காளிகுமாரசாமி கோவிலுக்கு அருகில் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.
    • சாலையில் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

    வீரபாண்டி:

    திருப்பூா் வீரபாண்டி அருகே உள்ள பலவஞ்சிபாளையத்தில் இருந்து காளிகுமாரசாமி கோவிலுக்கு செல்லும் சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.இந்தத் சாலையானது தாராபுரம் சாலைக்கு சென்றடைவதால் வாகனப் போக்குவரத்தும் அதிக அளவில் உள்ளது.

    காளிகுமாரசாமி கோவிலுக்கு அருகில் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு வரும் மதுப்பிரியா்கள் மதுவை அருந்திவிட்டு காலி பாட்டில்களை சாலைகளில் வீசிச் செல்கின்றனா். மேலும் பகல் நேரங்களில் சாலையோரம் அமா்ந்து மது அருந்துவதால் இந்த சாலையில் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. ஆகவே, மதுபானக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    ×