என் மலர்
நீங்கள் தேடியது "மளிகை கடை"
- மளிகைக் கடைகள் என்பது பொருட்களை விற்கும் கடை மட்டுமல்ல.
- ஆயிரக்கணக்கான மளிகைக் கடைகள் தற்போது மூடப்படுகின்றன.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவ்வப்போது பொதுமக்களையும் வியாபாரிகளையும் சந்தித்து பேசி வருகிறார்.
அதன்படி டெல்லியில் உள்ள மளிகை கடை வியாபாரிகளை சந்தித்து அவர்களது குறைகளை ராகுல்காந்தி கேட்டறிந்தார்.
இது தொடர்பான விடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "சமீபத்தில் டெல்லியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்றேன். மளிகைக் கடைகள் என்பது பொருட்களை விற்கும் கடை மட்டுமல்ல. அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் உணர்வுப்பூர்வமான தொடர்புகளைக் கொண்டுள்ளனர், ஆனால் வர்த்தக வணிகத்தின் விரைவான வளர்ச்சியின் காரணமாக, ஆயிரக்கணக்கான மளிகைக் கடைகள் தற்போது மூடப்படுகின்றன. இது கவலையளிக்கிறது.
தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை நாம் ஊக்குவிக்கும் அதே சமயம் அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு பாதுகாப்பையும் வழங்க வேண்டும். நமது பொருளாதாரம் மாற்றமடைந்து, உலகப் போக்குகளுக்கு ஏற்ப நாம் முன்னேறும்போது, சிறு வணிகர்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்" என்று பதிவிட்டுள்ளார்.
- போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
- மண்ணெண்ணெய் குண்டு வீசிய இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்து, தப்பியோடிய முகமது அன்சாரியை வலை வீசி தேடி வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பகவுண்டன் புதூர் மேற்கு, கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 52). இவருக்கு தமிழரசி (42) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் கங்கா நகர் சந்திப்பில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான வீட்டின் முன் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி (24) என்ற இளைஞர் மளிகை கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளார். கடைக்காரர் சுப்பிரமணி சிகரெட் இல்லை என்று கூறியதால், 2 ரூபாய்க்கு பீடி மட்டும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.
சுமார் 15 நிமிடம் கழித்து மீண்டும் அப்பகுதிக்கு வந்த முகமது அன்சாரி, மதுபாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி திரியை பற்ற வைத்து, மளிகை கடை மீது வீசினார். மண்ணெண்ணெய் குண்டு வெடித்ததில் கடையின் முன்பு அடுக்கி வைத்திருந்த 20 லிட்டர் தண்ணீர் கேன்கள் மற்றும் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த தின்பண்டங்களும் எரிந்து கருகியது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்தில் கூடியதால் முகமது அன்சாரி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தான்தோன்றிமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தான்தோன்றிமலை போலீசார் மண்ணெண்ணெய் குண்டு வீசிய இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்து, தப்பியோடிய முகமது அன்சாரியை வலை வீசி தேடி வருகின்றனர்.
- 11 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது.
- புதிய தீர்மானத்துக்கு மாநகராட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கேள்வி நேரத்தின் போது பா.ஜ.க. உறுப்பினர் உமா ஆனந்த் சென்னை மாநகராட்சி எவ்வளவு கடன் வாங்கி உள்ளது. அதற்கு எவ்வளவு வட்டி கட்டுகிறீர்கள். ஒ.எஸ்.ஆர். லேண்ட் முறைகேடாக பயன்படுத்துவதாக தகவல் வருகின்றன என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மேயர் சென்னை மாநகராட்சி 2024-ம் ஆண்டு ரூ.3 ஆயிரத்து 63 கோடி கடன் வாங்கியது. இதில் ரூ.1,573 கோடி திருப்பி கட்டப்பட்டு உள்ளது. இன்னும் ரூ.1,488 கோடி நிலுவையில் உள்ளது.
இதற்காக ரூ.8.5 கோடி வட்டி கட்டுகிறோம் காலாண்டுக்கு ஒரு முறை வாங்கிய கடன் திருப்பி செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.
மண்டலக் குழு தலைவர் நேதாஜி யூ கணேசன் பேசும்போது, சென்னை மாநகராட்சியில் மேயர் துணை மேயரை ஆணையாளரை சந்திக்க முடிகிறது.
ஆனால் குறிப்பிட்ட ஒரு அதிகாரி அறையில் இருந்து கொண்டே மாமன்ற உறுப்பினரை சந்திக்க முடியாது என பணியாளரிடம் சொல்லி அனுப்புகிறார் சந்திக்க மாட்டேன் என போர்டு வைத்து விட்டால் நாங்கள் சந்திக்க செல்ல மாட்டோம்.
சில பணிகளை செய்யலாம் என நாங்கள் அவரை சந்திக்க நினைக்கிறோம். ஆனால் அவர் அனுமதி மறுக்கிறார். இதனால் அரசுக்கும் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றார்.
மண்டலக் குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் பேசுகையில் மாநகராட்சி மண்டலக் குழு கூட்டங்களில் வருவாய் துறை சார்பில் அதிகாரிகள் யாரும் பங்கு பெறுவதில்லை என்று புகார் கூறினார்.
மேலும் தனது மண்டலத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளன மூன்று வார்டுகளில் உதவி பொறியாளர்கள் இல்லை அதை சரி செய்து தாருங்கள். மணலி பகுதியில் மாலை 4 மணிக்கு அம்மோனியா வாயு திறந்து விடப்படுகிறது. 6 மணி வரை இது வருகிறது.
இதனால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. மாசு கட்டுப்பாடு வாரியம் இதை கண்காணிக்க வேண்டும். எனது பகுதியில் 11 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது.
10 சதவீத பணிகள் தான் இன்னும் பாக்கியுள்ளது. அதை விரைந்து முடிக்க வேண்டும். மணலி பகுதியில் ஆட்டு இறைச்சி கூடம் அமைத்து தர வேண்டும் என்றார்.
ஆணையாளர் குமரகுருபரன் இதற்கு பதில் அளித்து பேசுகையில், நான் தலைமைச் செயலாளருடன் பேசி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை கண்காணிக்க கூறுகிறேன். உயர் அதிகாரிகளிடம் கூறி மண்டல கூட்டங்களுக்கு அனைத்து துறை அதிகாரிகள் வருவதற்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்றார்.
சென்னையில் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய மளிகை கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கடைகளுக்கு ஆயிரம் சதுரடி வரை ஆண்டுக்கு ரூ.3 ஆயிரத்து 500 தொழில் உரிமைத் தொகையாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் 500 சதுர அடிக்குள் செயல்பட்டு வரும் சிறு மளிகைகாரர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
அவர்களின் சுமையை குறைக்க மாநகராட்சி 2 நிலைகளாக வரையறுத்து உள்ளது. அதன்படி, 500 சதுர அடிக்குள் செயல்படும் மளிகைக் கடைகள் தொழில் உரிமக் கட்டணம் ரூ.1,200-ம், 501 சதுர அடியில் இருந்து 1000 சதுர அடி வரையிலான மளிகைக் கடைகள் ரூ.3 ஆயிரத்து 500-ம் தொழில் உரிமத் தொகையாக செலுத்த வேண்டும்.
இதன் மூலம் 500 சதுர அடிக்குள் இருக்கும் சிறு மளிகைக் கடைக்காரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 300 மிச்சப்படும். இந்த புதிய தீர்மானத்துக்கு மாநகராட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சென்னை கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு ஒப்படைக்கவும் மாநகராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட மெரினா கடற்கரை மற்றும் 95 ஏக்கர் பரப்பளவு கொண்ட பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர், திருவான்மியூர், புது கடற்கரை பகுதிகளை ஒரு வருடம் தூய்மையாக பராமரிக்க ரூ.4 கோடியே 54 லட்சம் தனியார் நிறுவனத்துக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
- 20 ஆண்டுகளுக்கு மேலாக மளிகை கடை நடத்தி வருபவர் கந்தசாமி.
- மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டம், முத்தூர், முத்துமங்கலம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மளிகை கடை நடத்தி வருபவர் கந்தசாமி (வயது57) . இவர் வழக்கம் போல் நேற்று 16ந் தேதி தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இன்று சனிக்கிழமை காலை வந்து பார்க்கும்போது கடையின் மேல் உள்ள சிமெண்ட் சீட்டை பிரித்து உள்ளே இறங்கி கடையில் இருந்த ரொக்கம் ரூ. 5 ஆயிரம் மற்றும் நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது முத்தூர் -வெள்ளகோவில்-காங்கயம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதால் காவல்துறையினர் ரோந்து பணி மற்றும் வாகனத் தணிக்கையை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- மளிகை கடை உரிமையாளர் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
- மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் கொங்கு நகரை சேர்ந்தவர் பீட்டர் (46). இவர் மணிக்கூண்டு அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
இன்று காலை பீட்டர் தனது 2 மகள்களை அழைத்து கொண்டு அய்யப்பன் நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் மகள்களை பள்ளியில் இறக்கி விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது அய்யப்பன் நகர் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி பீட்டர் மீது மோதியது.
இதில் நிலைகுலைந்த அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தெரிய வந்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர்.
பின்னர் பலியான பீட்டரின் உடலை மீட்டு பரிேசாதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எல்.இ.டி. டிவியையும் மர்ம நபர்கள் எடுத்து சென்றனர்
- கடையில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கொள்ளை
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் அனந்தம் பாலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் வயது 49 இவர் நேசமணி நகர் சைமன்காலனி பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் சுரேஷ் கடையை பூட்டிவிட்டு சென்றார்.
இன்று காலை கடைக்கு வந்தபோது கடையில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த மேஜை உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ 13 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டு இருந்தது.
மேலும் எல்.இ.டி. டிவியையும் மர்ம நபர்கள் திருடிச் சென்று இருந்தனர். இதுகுறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடையில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.