என் மலர்
நீங்கள் தேடியது "செந்தில்பாலாஜி"
- இறுதிக்கட்ட விசாரணை வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெறும்.
- வழக்கை வேறு அமர்வு விசாரணைக்கு மாற்ற கோரிக்கை விடுத்தார்.
சென்னை:
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும், இந்த சோதனையின் அடிப்படையில் மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரியும் தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை முதலில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் விசாரித்து, மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வாய்மொழியாக அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக 2 நீதிபதிகளும் கூறினர். இதனால், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தபோது, மூத்த வக்கீல் கே.எம்.விஜயன் ஆஜராகி, டாஸ்மாக் துறையை கவனித்து வரும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வக்கீலாக கே.ராஜா உள்ளார். இவர் நீதிபதி கே.ராஜசேகரின் இளைய சகோதரர் என்பதால், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றலாம்' என்றார்.
ஆனால், இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்தனர்.
இந்த நிலையில், ஐகோர்ட்டு தலைமை நீதி பதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு இன்று காலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல் ஆஜராகி, ''டாஸ்மாக் துறையை கவனித்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வக்கீலாக, நீதிபதி கே.ராஜசேகரின் தம்பி உள்ளதால், இந்த வழக்கை வேறு அமர்வு விசாரணைக்கு மாற்ற வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்க மறுத்த நீதி பதிகள், 'இதுகுறித்து சம்பந்தப்பட்ட நீதிபதிகளிடம் முறையிடலாம்' என்று கூறினர்.
- 70 ஜோடிகளுக்கு தி.மு.க. சார்பில் திருமணம் நடைபெற உள்ளது.
- அரசின் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவி குழு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
கோவை,
கோவை சின்னியம்பாளையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநா–ளையொட்டி 70 ஜோடிகளுக்கு தி.மு.க. சார்பில் திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
இதனை–யொட்டி திருமண விழா நடைபெறும் இடத்தில், நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதோடு, ஒருங்கிணைந்த தி.மு.க. சார்பில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்து பரிசுகளை வழங்குகிறார். இதனைத் தொடர்ந்து வ .உ. சி. மைதானத்தில் அரசின் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவி குழு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மாலையில் கொடிசியாவில் நடைபெறும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் 2ஆயிரம் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிளிகளை வழங்கி விழா பேருரையாற்ற உள்ளார்.
கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளில் மின் இணைப்பு துண்டிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டு சுட்டிகாட்டிய இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் செங்கல் உற்பத்தியை தொடங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது.
வருவாய்த்துறை ஆவணங்கள் சரியாக இருந்தால் 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும். கோைட காலமான ஏப்ரல், மே, மாதங்களில் மின் தேவையை பூர்த்தி செய்ய 4,200 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டுள்ளது.
இதற்காக டெண்டர் கோரப்பட்டு இது செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மின் விநியோகத்தில் எந்த வித பாதிப்பும் இருக்காது.
6,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய சோலார் பூங்காவுக்காக டெண்டர் கோரபட்டுள்ளது. இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை 99.7 சதவீதம் இணைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 0.3 சதவீதம் தான் இணைக்க வேண்டியது உள்ளது. இன்னும் இரு தினங்களில் அந்த பணிகள் நிறைவடையும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் பழ–னிசாமி விமர்சித்துள்ளார்.
அ.தி.மு.க.வுக்கு அவர்கள் நினைத்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. அந்த விரக்தியில் இது போன்ற கருத்துக்களை கூறுகின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வெற்றி பயணம் என்பது வரக்கூடிய 2024 மக்களவை தேர்தலுக்கான தொடக்கம்.
40 பாராளுமன்ற தொகுதியிலும், முதல்-அமைச்சரின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள்.
சட்டசபை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் இரட்ைட இலை சின்னத்தில் தான் அ.தி.மு.க போட்டியிட்டது. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அவ்வளவு தான். மக்களுக்கு நன்மை செய்ய கூடிய இயக்கமாக கட்சியை வழிநடத்த வேண்டும் என்ற சூழல் அ.தி.மு.கவிடம் இல்லை.
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக அ.தி.மு.க.வினர் கருத்து தெரிவிக்கவில்லை. அ.தி.மு.க.வை பொறுத்தவரை மக்களை பற்றிய கவலை இல்லை. அவர்களின் தேவை யார் டெல்லியில் போட்டி போட்டு அடிமையாக இருப்பது என்பது தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி உள்ளார்.
- வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் சோ்க்கை கடந்த 2 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்து உள்ளது.
ஈரோடு:
வணிகர் தினமான நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது மாநாடு 'வணிகர் உரிமை முழக்க மாநாடு' என்ற பெயரில் ஈரோடு டெக்ஸ்வேலி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.
மாநாட்டில் வணிகர்களுக்கான 'வி.வி.டி.', 'மைசாட்டோ' ஆகிய செயலிகள் மற்றும் பேரமைப்பு வலைதளம் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், வி.செந்தில்பாலாஜி, பி.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி உள்ளார். வணிகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பெயரில் காவல் உதவி செயலி கொண்டு வரப்பட்டது. எனவே வணிகர்களுக்கு உறுதுணையாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது, வணிகர்கள் விடுக்கும் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்றி வருகிறார். 2007-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரைமுறை செய்வதற்கு மனுக்கள் பெறப்பட்டது. ஆனால் கட்டிடம் வரைமுறை தொடர்பாக முடிவு எடுக்கக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மனுக்களை பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்து விட்டது. வேண்டுமென்றால் மனுக்களை பெறுவதற்கான அவகாசத்தை நீட்டிப்பு செய்யலாம். முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று காலஅவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது கூறியதாவது:-
வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் சோ்க்கை கடந்த 2 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்து உள்ளது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியே காரணம்.
இந்த மாநாட்டில் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசும்போது, மின் கட்டணம் உயர்வு தொடா்பாக போராட்டம் நடத்தப்படுமா? என்று உறுப்பினர்கள் கேள்வி கேட்டதாக தெரிவித்தார். அந்த கேள்வி கேட்டவர்களை பார்த்து கேட்கிறேன், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.410-ல் இருந்து ரூ.1,200 உயர்த்தப்பட்டதற்கும் ஏன் போராட்டம் நடத்தவில்லை. பேரமைப்பு தலைவரை தூண்டிவிடும் வகையில் செயல்படுகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விக்கிரமராஜா நேரில் சந்தித்து கோரிக்கையை தெரிவிக்கும்போது, அதை அவர் உடனடியாக நிறைவேற்றி கொடுத்து வருகிறார்.
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
அமைச்சர் பி.மூா்த்தி பேசியதாவது:-
திராவிட மாடல் ஆட்சி வணிகர்களுக்கு முழுஆதரவு அளித்து வருகிறது. நேர்மையாக தொழில் நடத்தி வரும் உங்களை போன்ற வணிகர்களுக்கு எப்போதும் தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும். கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வணிகர் நல வாரியத்தின் நிர்வாகிகளை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.
இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.
- அரசு போக்குவரத்து கழகம் என்பது மக்களுக்கு சேவை வழங்கும் ஒரு துறையாகும்.
- ஓய்வு பெற்றவர்களுக்கான பஞ்சப்படி கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது.
கோவை:
கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணியின்போது இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பண பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஓய்வு பெற்ற பணியாளர்கள் 353 பேர், விருப்ப ஓய்வு பெற்ற 68 பணியாளர்கள், இயற்கை எய்திய 53 பணியாளர்களின் வாரிசுதாரர்கள் என மொத்தம் 518 பணியாளர்களுக்கு ரூ.145.58 கோடி மதிப்பிலான பணபலன்களை வழங்கினர்.
இதனை தொடர்ந்து கோவை மாநகரில் இயங்கும் பஸ்களில் முதல்கட்டமாக 65 பஸ்களுக்கு புவிசார் நவீன தானியங்கி (ஜி.பி.எஸ்.) அறிவிப்பான் மூலம் பஸ் நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பின்னர் கோவை மண்டலத்தில் 3 பணிமனைகள், ஈரோடு மண்டலத்தில் 3 பணிமனைகள், திருப்பூர் மண்டலத்தில 1 பணிமனை என மொத்தம் 7 பணிமனைகளில் டிரைவர்கள் மற்றும் கண்டெக்டர்கள் தங்குவதற்கு குளிர்சாத வசதியுடன் கூடிய ஓய்வு அறைகளையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் அனைத்து டிரைவர்களுக்கு கையேடு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் 2 ஆண்டுகளுக்கான எந்த பலன்களையும் வழங்கவில்லை. அவர்கள் வழங்காமல் விட்டு சென்ற பணப்பலன்களை தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் அதற்கு என நிதி ஒதுக்கி, தற்போது பணப்பலன்கள் வழங்கி உள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் போராடாமலேயே இந்த நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.
கடந்த காலங்களில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்படி இருந்தது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். அப்போது சம்பள விகிதங்கள் மாற்றியமைக்கபட்டு, குழப்பம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சீர்குலைக்கப்பட்ட சம்பள விகிதங்களை, தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பழையபடி, கலைஞர் வழங்கியபடி இப்போது 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கி வருகிறோம்.
அரசு போக்குவரத்து கழகம் என்பது மக்களுக்கு சேவை வழங்கும் ஒரு துறையாகும். பிற மாநிலங்களில் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் உயர்த்தப்படவில்லை. தனியார் துறையினர் சிலர் தங்கள் பஸ்களில் கட்டணத்தை உயர்த்துகின்றனர். இதுபற்றிய தகவல் வந்தவுடன், அதிகாரிகளை வைத்து உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஓய்வு பெற்றவர்களுக்கான பஞ்சப்படி கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. அது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் புதிய ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணிக்கு எடுக்கப்படவில்லை. தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் பணி நியமனம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிற பணிமனைகளிலும் பணி நியமனம் நடைபெறும்.
தமிழக முதலமைச்சர் 2 ஆயிரம் பஸ்களை வாங்குவதற்கு மாநில அரசின் நிதியை ஒதுக்கி உள்ளார். இதற்கான டெண்டர் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது. இதுதவிர ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் 2,400 பஸ்கள் வாங்குவதற்கான பணியும் தொடங்கி உள்ளது. 6 மாத காலத்துக்குள் புதிய பஸ்கள் நடைமுறைக்கு வந்து விடும்.
பைக் டாக்சி என்பது தனிநபர் பயன்படுத்தும் வாகனம். அதனை வாடகைக்கு விடும் வாகனமாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. தமிழக அரசை பொறுத்தவரை பைக் டாக்சியை பயன்படுத்தக்கூடாது. பைக் டாக்சியை வாடகைக்கு விடுவதற்கு இதுவரை எந்தவிதியும் நிர்ணயிக்கப்படவில்லை. தமிழகத்தில் பைக்டாக்சிக்கு அனுமதி கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை.
- தமிழகத்தில் எங்குமே மின் தடை என்பது இல்லை.
கோவை:
கோவை மேட்டுப்பாளையம் ரோடு எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.7 கோடி மதிப்பில் புனரமைத்தல் மற்றும் கூடுதல் அபிவிருத்தி பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க முதலமைச்சர் ரூ.200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கினார்.
தற்போது அந்த நிதியின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் சாலை பணிகள் நிறைவுற்று அவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று ரூ.71 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மின்கட்டண உயர்வை பொருத்தவரை தமிழக அரசு மிக தெளிவான விளக்கம் கொடுத்து விட்டது. அதன்படி வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை. மேலும் விசைத்தறி, கைத்தறி, விவசாயத்திற்கு வழங்கப்பட்டும் வரும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் கட்டணத்தில் மட்டுமே சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த மாற்றத்தையும், மத்திய அரசின் அறிவுறுத்தலின் படியே மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மாற்றம் செய்துள்ளது.
மின்வெட்டு தொடர்பாக ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். நான் கேட்கிறேன் ஓ.பி.எஸ். வீட்டில் மின் தடை ஏற்பட்டதா? அல்லது அவரது தோட்டத்தில் மின் தடை ஏற்பட்டதா?.
தமிழகத்தில் எங்குமே மின் தடை என்பது இல்லை. சீராக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஓ.பி.எஸ் தானும் இருக்கிறேன் என்பதை காட்டி கொள்வதற்காகவே அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
அரசியலுக்காகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தமிழகத்தில் மின்தடை உள்ளது என குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் அமித் ஷா வருகையின் போது ஏற்பட்ட மின்தடை என்பது எதிர்பாராத வகையில் நடந்த நிகழ்வு. அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது.
எனவே எதில் அரசியல் செய்ய வேண்டும் என்பதை மறந்து எதை வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என நினைப்பவர்களின் எண்ணம் திராவிட மண்ணில் எடுபடாது.
பா.ம.க தலைவர் அன்புமணி, மது விற்பனையில் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். தமிழகத்தில் ஆண்டிற்கே ரூ.45 ஆயிரம் கோடிக்கு தான் மது விற்பனை நடக்கிறது. அப்படி இருக்கும் போது எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போன்றோர் பாராளுமன்ற தேர்தலில் ஒரு சீட் வாங்குவதற்காகவே சில கருத்துக்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார்கள். அவர்களுக்கு மக்கள் நலனில் எந்த அக்கறையும் கிடையாது.
இப்படி அறிக்கை விடுபவர்கள் மக்கள் நலன் சார்ந்த குற்றச்சாட்டுகளை வைத்தால் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். மற்றபடி அரசியலுக்காக சொல்லப்படும் கருத்துகளை யாரும் பொருட்படுத்த தேவையில்லை.
வருமான வரித்துறை அதிகாரிகள் என் வீட்டிற்கு வரவில்லை. வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் சோதனை நடைபெற்ற இடத்தில் இருந்தவர்கள் கொடுத்துள்ளனர். கூடுதல் ஆவணங்கள் கேட்டாலும் அவர்கள் சமர்ப்பிக்க தயாராக உள்ளார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார்பாடி, மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், தி.மு.க. மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் பலர் இருந்தனர்.
- செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில் சோதனை
- மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை
தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரது தம்பி அசோக்குமார் உள்பட அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என இவருக்கு தொடர்புடையதாக கருதப்படும் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மாதம் 26-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கரூரில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் அப்போது சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறையினரை தி.மு.க.வினர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் வருமானவரித் துறையினரிடம் அடையாள அட்டையை கேட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது 4 அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
இதைத் தொடர்ந்து மத்திய போலீஸ் படை பாதுகாப்புடன் அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அவரது நண்பர்கள் சங்கர், மணி ஆகியோரது வீடு அலுவலகங்களில் 1 வாரமாக சோதனை நீடித்தது.
இதில் பல ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி அந்த வீடுகளுக்கு சீல் வைத்தனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது சம்பந்தமாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளை தவிர அவரது உறவினர்கள் வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை குறி வைத்துதான் இவர்களது வீடுகளில் சோதனை நடந்து வருவதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் காலையில் சோதனை மேற்கொண்டனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றபோது அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இல்லை. நடைபயிற்சிக்காக வெளியில் சென்றிருந்தார். ஆனாலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது அடையாள அட்டையை காட்டிவிட்டு வீட்டுக்குள் சென்று காத்திருந்து சோதனை மேற்கொண்டனர்.
வீட்டில் இருந்த உதவியாளர்களிடம் செந்தில் பாலாஜிக்கு தகவல் தெரிவித்து வரவழையுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். உடனே உதவியாளர்கள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தகவல் கொடுத்தனர். அவர் நடைபயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு வீட்டுக்கு அவசரமாக நடந்து வந்தார்.
அப்போது அவரை நிருபர்கள் வழிமறித்து கேட்டதற்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் என்ன நோக்கத்திற்காக வந்துள்ளனர்? எதை தேடுவதற்காக வந்திருக்கிறார்கள்? என தெரியவில்லை.
அவர்களின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். என்ன விளக்கம் கேட்டாலும் நாங்கள் பதில் சொல்ல தயார்.
எனக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். சோதனை முடிந்ததும் நான் விரிவாக பேசுகிறேன் என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றார்.
செந்தில் பாலாஜி வந்ததும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது அறைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதே நேரத்தில் ஆர்.ஏ.புரம் பிஷப் கார்டன் பகுதியில் உள்ள விஸ்வநாதன் டெல்பி ஹோம் அடுக்குமாடி குடியிருப்பில் அசோக்குமார் தங்கி இருந்த வீட்டிலும், அபிராமபுரம் 3-வது தெருவில் உள்ள ஸ்ரீபதி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மற்றொரு வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் அடையார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதை கேள்விப்பட்டு தி.மு.க. கட்சி நிர்வாகிகள் அங்கு குவிந்தனர்.
பதட்டம் ஏற்படாமல் இருப்பதற்காக போலீசாரும் அங்கு வந்திருந்து நிலைமையை கண்காணித்தனர்.
கரூரில் கடந்த 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதற்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு அந்த அதிகாரிகள் முற்றுகையிடப்பட்டனர். அதிகாரிகளின் கார் சேதப்படுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து மத்திய பாதுகாப்படை பாதுகாப்புடன் வருமானவரித்துறை அதிகாரிகள் 8 நாட்கள் தொடர் சோதனை நடத்தினர்.
பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். இதையடுத்து வழக்கறிஞர் மூலம் அதிகாரிகளுக்கு அவர்கள் கேட்ட விபரங்களை கொடுத்தார்.
இந்த நிலையில் இன்று கரூர் ராமகிருஷ்ண புரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மண்மங்கலம் ராமேஸ்வரபட்டி பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் வீடு, ஈரோடு சாலை கோதூரில் உள்ள ஆடிட்டர் வீடு,
கொங்கு மெஸ் சுப்பிரமணி வீடு மற்றும் வெங்கமேட்டில் உள்ள ஒருவர் வீடு என மொத்தம் 5 இடங்களில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த அதிகாரிகள் அனைவரும் கேரள பதிவு எண் கொண்ட கார்களில் வந்துள்ளனர். சோதனையில் மத்திய பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் மேற்கண்ட சோதனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வருமான வரித்துறையை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி, அமைச்சரவையில் நீடிக்க கூடாது.
- தமிழக ஆளுநருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
திருப்பூர் :
சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சரவையில் நீடிக்க கூடாது என அறிவித்த தமிழக ஆளுநருக்கு சிவசேனா கட்சியின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.ஒரு அரசாங்க ஊழியர் இது போன்ற ஒரு கிரிமினல் குற்றச்சாட்டில் ஈடுபட்டால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் அவரது பணியை தொடர முடியும் என சட்டம் உள்ளது.
அது போல செந்தில் பாலாஜி சட்டப்படி சட்ட நடவடிக்கைகளை எதிர் கொள்ள வேண்டும்.ஊழல் செய்தவர்களுக்கு அமைச்சர் பதவி என்பது சட்டமன்றத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்.இதனை சிவசேனா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
- ஐ.சி.யூ. வார்டில் வைத்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.
- எங்களை பொறுத்தவரை உடல் நலம் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடுதான் அணுகி வருகிறோம்.
சென்னை:
அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஐ.சி.யூ. வார்டில் வைத்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மாலையில் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆஸ்பத்திரியின் 4-வது தளத்தில் அறை எண். 435-ல் தற்போது செந்தில்பாலாஜி தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே இருக்கிறார். மருத்துவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர் உடல் நிலை தேறி வருவதாக தெரிவித்தார்கள். விரைவில் பூரண குணம் அடைவார்.
எங்களை பொறுத்தவரை உடல் நலம் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடுதான் அணுகி வருகிறோம்.
சமீபத்தில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்ற போது கூட மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டேன்.
இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.
- தமிழத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், பீகார் சென்று சர்வகட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம்.
- மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சூரப்பள்ளி, சவுரியூர், காப்பரத்தாம்பட்டி, கரிக்காப்பட்டி பகுதிகளில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கட்சியை கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: -
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அ.தி.மு.க கொண்டு வந்த ஒவ்வொரு திட்டத்தையும் ரத்து செய்கின்ற காட்சியைத்தான் சாதனையாக பார்க்கிறோம்.
தமிழகத்தில் மின் கட்டணம் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கைத்தறி, விசைத்தறி, உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. தமிழத்தை காப்பாற்ற முடியாத முதலமைச்சர் ஸ்டாலின், பீகார் சென்று சர்வகட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம்.
நான் முதலமைச்சராக இருந்தபோது, உங்கள் மீது வழக்கு போட்டிருக்க முடியும். ஆனால் வழக்கு போடவில்லை.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருந்தது. 4ஆண்டுகள் சிறப்பான ஆட்சி தந்தோம். பொது இடத்தில் கூட்டம் போட்டு எங்கள் ஆட்சி மீதுள்ள குற்றச்சாட்டை சொல்லுங்கள், அதற்கு நான் பதில் தருகிறேன்.
கைதான அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்தில் மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர். இதற்கு தான் மத்திய அரசு ரெய்டு நடத்துகிறது. செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டால், பலர் சிக்குவார்கள்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அ.தி.மு.க. அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
- கவர்னர் டிஸ்மிஸ் செய்ததை அரசியல் சட்டத்துக்கு முரண்பாடானது என்கிறார்.
செந்தில்பாலாஜி டிஸ்மிஸ் செய்யப்பட்டது, பின்னர் அந்த உத்தரவை கவர்னர் நிறுத்தி வைத்தது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, இது என்ன நியாயம்? என்று புரியவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அ.தி.மு.க. அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
ஆனால் இப்போது கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் தனது அமைச்சரவை அமைச்சரை கவர்னர் டிஸ்மிஸ் செய்ததை அரசியல் சட்டத்துக்கு முரண்பாடானது என்கிறார். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?
செந்தில்பாலாஜி ஊழல் செய்துள்ளார். ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தவிர ஒட்டு மொத்த தமிழகமும் விரும்புகிறது என்றார்.
- அமலாக்கத்துறை விசாரணை முடிந்து சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்
- நீதிமன்றத்தில் அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
அதனடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை முதல் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். ஐந்து நாள் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிமன்ற காவலை நீட்டித்து புழல் சிறையில் அடைக்க மீண்டும் உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குற்றபத்திரிகையை அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை டிரங்க் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.
இந்த நிலையில் குற்றப்பத்திரிகை உள்ளிட்ட வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விரைவாக விசாரிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதில் அல்லி, இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு தெரிவிக்கும்படி கூறினார்.
அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டதும், நீதிபதி இந்த மனு மீது விசாரணை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 10 மாதங்களுக்கும் மேலாக செந்தில்பாலாஜி சிறையில் உள்ளார்.
- அடுத்த வாரம் விசாரணை நடைபெறும்
புதுடெல்லி:
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து இருந்தது.
இதற்கிடையே ஜாமீன் வழங்க கோரியும், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் செந்தில்பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று வந்தது. அப்போது விசாரணையை ஒத்திவைக்க அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இதற்கு செந்தில்பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அடுத்த வாரம் விசாரணை நடைபெறும் வழக்கை ஒத்திவைக்க யாரும் கேட்ட கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து வருகிற 15-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.