என் மலர்
நீங்கள் தேடியது "கிறிஸ்டியானோ ரொனால்டோ"
- கானாவுடனான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
- நட்சத்திர வீரர் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார்.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதின.
முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது.
இறுதியில், கானாவுக்கு எதிரான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 65-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இந்நிலையில், 5 உலக கோப்பைகளில் (2006, 2010, 2014, 2018, 2022) கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.
- 37 வயதான ரொனால்டோ சவுதி கிளப்பின் அழைப்பை ஏற்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆண்டுக்கு ரூ.612 கோடிக்கு மேல் கிடைக்கும்.
ரியாத்:
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த அவர் கால்பந்து உலகில் பல சாதனைகளை புரிந்துள்ளார்.
அதிகம் பணம் சம்பாதிக்கும் வீரரான ரொனால்டோவை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இதில் அவர் சாதனையும் புரிந்துள்ளார்.
இந்த நிலையில் உலக கோப்பை போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது ரொனால்டோ இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் யுனைடட் கிளப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
அந்த கிளப் நிர்வாகம் அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து அவர் மான்செஸ்டர் யுனைடட் கிளப் மானேஜர் எரிக் டென்னை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில் சவுதி அரேபியா கிளப் ஒன்று ரொனால்டோ தங்கள் கிளப்பில் விளையாடுவதற்காக கோடிக்கணக்கான பணத்தை வழங்க முன் வந்துள்ளது.
ரியாத்தில் உள்ள அல்நாசர் கிளப் ரொனால்டோவை 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்ய ரூ.1838 கோடி தர இருப்பதாக விருப்பம் தெரிவித்து அழைப்பு விடுத்துள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.612 கோடிக்கு மேல் கிடைக்கும். இதை சி.பி.எஸ். ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.
37 வயதான ரொனால்டோ சவுதி கிளப்பின் அழைப்பை ஏற்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அவர் அந்த கிளப்பில் விளையாட தனது விருப்பத்தை தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது ரொனால்டோவின் இறுதி முடிவுக்காக அந்த கிளப் காத்திருக்கிறது.
அல் நாசர் அணி ஆசியாவின் சிறந்த கிளப்களில் ஒன்றாகும். 9 'லீக்' பட்டங்களை வென்றுள்ளது. ரொனால்டோ கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக கோப்பையில் கானாவுக்கு எதிராக கோல் அடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- போர்ச்சுகல் அணிக்கான எனது அர்ப்பணிப்பு ஒரு கணமும் மாறவில்லை.
- எனது அணியினரையோ, எனது நாட்டையோ ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன்.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த போர்ச்சுகல் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில் போர்ச்சுக்கல் உலக கோப்பையை வெல்லும் என்ற தன்னுடைய கனவு முடிவுக்கு வந்து விட்டதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
போர்ச்சுக்கலுக்கு கோப்பையை வென்று கொடுப்பதே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியக் கனவாகும். கனவு இருக்கும் வரை அழகாக இருந்தது. இந்த கனவுக்காக நான் கடுமையாக போராடினேன். துரதிஷ்டவசமாக என்னுடைய கனவு நேற்று முடிவுக்கு வந்தது.
போர்ச்சுகல் மீதான எனது அர்ப்பணிப்பு ஒரு கணமும் மாறவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் எப்போதும் ஒரு (போர்த்துகீசியம்) இலக்கிற்காக போராடி வருகிறேன். எனது அணியினரையோ அல்லது எனது நாட்டையோ நான் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன். 16 ஆண்டுகளுக்கும் மேலாக நான் விளையாடிய 5 உலகக் கோப்பை ஆட்டங்களில், எப்போதும் மில்லியன் கணக்கான போர்ச்சுகீசியர்களின் ஆதரவிலும், நான் எனது முழுமையான பங்களிப்பை கொடுத்தேன்.
எப்போதும் அனைவரின் நோக்கத்திற்காக போராடும் ஒருவனாக இருக்கிறேன். இப்போதைக்கு அதிகம் பேச விரும்பவில்லை. ஒரு நல்ல ஆலோசகராக இருந்து ஒவ்வொருவரும் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டிய நேரம் இது. நன்றி போர்ச்சுகல், நன்றி, கத்தார். இவ்வாறு ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
போர்ச்சுக்கல் அணிக்காக 5 உலக கோப்பை தொடர்களில் ரொனால்டோ விளையாடி உள்ளார். இந்நிலையில் அடுத்த உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. அப்போது ரொனால்டோவுக்கு 41 வயது ஆகி விடும் என்பதால் அதில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
- உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதால் வேதனையில் உள்ளார்
- மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து வேறு கிளப்பிற்கு செல்ல இருக்கிறார்
கால்பந்து என்றாலே நமக்கு சற்றென்று நினைவுக்கு வரும் ஒரு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்றால் அது மிகையாகாது. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர் கால்பந்தில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி சாதனை புரிந்துள்ளார்.
என்றாலும், போர்ச்சுக்கல் அணிக்காக உலகக் கோப்பையை இதுவரை வென்று கொடுத்தது கிடையாது. 37 வயதாகும் இவருக்கு கத்தாரில் நடைபெற்று வரும் 2022 உலகக் கோப்பைதான் கடைசி உலகக் கோப்பை. இதில் எப்படியாக சாதித்து விட வேண்டும் என்று நினைத்திருந்தார்.
ஆனால், காலிறுதி ஆட்டத்தில் மொராக்கோவிடம் தோல்வியடைந்து போர்ச்சுக்கல் பரிதாபமாக வெளியேறியது. மைதானத்தில் இருந்து வீரர்கள் அறைக்கு செல்லும்போது அழுது கொண்டே சென்றார். மேலும் காலிறுதிக்கு முந்தைய மற்றும் காலிறுதி ஆட்டங்களில் மாற்று வீரராகவு களம் இறக்கப்பட்டார். இதுவும் அவருக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
தற்போது தான் இருக்கும் நிலையை யதார்த்தத்தின் 3 அம்சங்கள் என மூன்று வார்த்தைகளில் விவரித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில், ''Pain (வலி), Uncertainty (உறுதியற்ற நிலை) And Constant work (தொடர்ந்து வேலை)'' எனப் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்களுக்கு எளிதில் பொருள் புலப்படாத இந்த மூன்று வார்த்தைகளில் தனது தற்போதைய நிலையை ரொனால்டோ வெளிப்படுத்தியுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
உலகக் கோப்பையில் இருந்து போர்ச்சுக்கல் வெளியேறியதை வலி என பதிவிட்டுள்ளதாகவும், மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகிய நிலையில் மாற்று கிளப்பை இன்னும் தேர்வு செய்யாத நிலையை நிலையற்ற தன்னை என பதிவிட்டுள்ளதாகவும், என்னவாக இருந்தாலும் தொடர்ந்து தனது பணியை செய்ய வேண்டும். அதன் மூலம் தன்னை மேம்படுத்தி சிறந்த கிளப்பிற்கு செல்ல வேண்டும் என்பதை தொடர்ந்து வேலை என பதிவிட்டுள்ளதாகவும் அர்த்தம் கொள்ளப்படுகிறது.
- அல்-நசர் அணியுடன் ரொனால்டோ, 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்துள்ளார்.
- இதையடுத்து அல்-நசர் அணியின் டி-சர்ட் ரொனால்டோவிடம் வழங்கப்பட்டது.
லிஸ்பன்:
பிரபல கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வந்த ரொனால்டோ அந்த கிளப் அணியில் இருந்து சமீபத்தில் வெளியேறினார். இதையடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய பல கிளப் அணிகள் போட்டியிட்டன.
இதில் சவுதி அரேபியாவை சேர்ந்த கிளப் அணியில் ரொனால்டோ இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சவூதி அரேபியாவை சேர்ந்த கிளப் அணியான அல்-நசர் அணியுடன் ரொனால்டோ ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் படி அவர் ஆண்டுக்கு 200 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1770 கோடி) பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-நசர் அணியுடன் ரொனால்டோ, 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்துள்ளார். இதையடுத்து அல்-நசர் அணியின் டி-சர்ட் ரொனால்டோவிடம் வழங்கப்பட்டது. அவரது பெயர் பொறித்த டி-சர்ட்டை அறிமுகப்படுத்தினார்.
புதிய அணியில் இணைந்தது குறித்து ரொனால்டோ கூறியதாவது:-
ஐரோப்பிய கால்பந்தில் நான் பெற்ற வெற்றியால் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ஆசியாவில் எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இதுவே சரியான தருணம் என்று கருதுகிறேன்.
எனது புதிய அணியின் வீரர்களுடன் இணைவதை எதிர்நோக்கி இருக்கிறேன். அவர்களுடன் சேர்ந்து வெற்றியை அடைய உதவுவேன் என்றார். அல்-நசர் கிளப் அணி டுவிட்டரில் கூறும் போது, வரலாறு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இது எங்கள் கிளப்பை இன்னும் பெரிய வெற்றியை அடைய ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், எங்கள் லீக், தேசம், எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும் ஒரு கையொப்பமாகும். ரொனால்டோவை வரவேற்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.
37 வயதில் ரொனால்டோ விளையாட உள்ள 6-வது அணி அல்-நசர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- துருக்கியில் நடந்த சம்பவங்கள் மிகுந்த வருத்தமளிப்பதாக ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
- துருக்கிக்கு உலக நாடுகளில் இருந்து உதவிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளது.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட தொடர் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9500-ஐ நெருங்கியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும் உலக நாடுகளில் இருந்து உதவிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளது. பெரும் சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்பந்து உலகமும் தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறது.
இந்நிலையில் துருக்கி நிலநடுக்கத்தால் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் கையொப்பமிடப்பட்ட ஜெர்சியை ஏலத்திற்கு வழங்கியுள்ளார் என துருக்கி கால்பந்து வீரர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

துருக்கி கால்பந்து வீரர் மெரிஹ் டெமிரல் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
ரொனால்டோவுடன் பேசினேன், துருக்கியில் நடந்த சம்பவங்கள் மிகுந்த வருத்தமளிப்பதாக சொன்னதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் கையெழுத்திட்ட ஜெர்சியை ஏலத்தில் வழங்குவதாக அறிவித்தார். அதன் மூலம் கிடைக்கும் பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
- தனது 200 சர்வதேச போட்டியில் அவர் கோல் அடித்து முத்திரை பதித்தார்.
- அவர் 123-வது சர்வதேச கோலை பதிவு செய்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
ரெய்க்ஜவிக்:
ஐரோப்பிய கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 14 முதல் ஜூலை 14 வரை ஜெர்மனியில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜவிக்கில் நடந்த யூரோ தகுதி சுற்று போட்டி ஒன்றில் போர்ச்சுக்கல்- ஐஸ்லாந்து அணிகள் மோதின.
போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இதில் விளையாடினார். அவருக்கு இது 200-வது சர்வதேச போட்டியாகும். இதன் மூலம் ரொனால்டோ புதிய சாதனை படைத்தார். 200 சர்வதேச போட்டிகளில் ஆடிய முதல் வீரர் ஆவார்.
போர்ச்சுக்கல் நாட்டுக்காக 200 போட்டிகளில் விளையாடிய 38 வயதான அவருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.
123- வது கோல் இந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 1-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை தோற்கடித்தது. 89-வது நிமிடத்தில் ரொனால்டோ இந்த கோலை அடித்தார்.
தனது 200 சர்வதேச போட்டியில் அவர் கோல் அடித்து முத்திரை பதித்தார். அவர் 123-வது சர்வதேச கோலை பதிவு செய்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக குவைத் வீரர் அல் முதாவா 196 சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளார்.
அர்ஜென்டினாவை சேர்ந்த உலகின் மற்றொரு முன்னணி கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி 175 சர்வதேச போட்டியில் பங்கேற்று 10-வது இடத்திலும், 103 கோல்கள் அடித்து 3-வது இடத்திலும் உள்ளார்.
- அல் நஸர் அணிக்கு புதிய வீரர்களை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
- நைஜீரியாவைச் சேர்ந்த முசா தனது தேசிய அணிக்காக 16 கோல்கள் அடித்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸர் அணி கடந்த 2018-ம் ஆண்டில் லீ செஸ்டர் சிட்டி அணி வீரர் அகமது முசாவை ஒப்பந்தம் செய்தது.
ஆனால் அவருக்கான ஒப்பந்தத் தொகை 18 மில்லியன் டாலர்களை செலுத்த அல் நஸர் தவறிவிட்டது.
இதையடுத்து, 2021-ம் ஆண்டில் பணத்தைச் செலுத்தாவிட்டால் அல் நஸர் பதிவுத் தடையை எதிர்கொள்ள நேரிடும் என பிபா எச்சரித்தது.
இந்நிலையில், எந்த புதிய வீரர்களையும் தங்கள் அணியில் சேர்க்க அல் நஸருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை நீக்கும் பொருட்டு அல் நஸர் கட்டணம் செலுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
நைஜீரியாவைச் சேர்ந்த முசா தனது தேசிய அணிக்காக 16 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
- இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதும், ஐபிஎல் அணியின் கேப்டனாக இருந்தபோதும் முதன்மையான கோப்பைகளை வென்று கொடுத்ததில்லை.
- ரொனால்டோ- மெஸ்சி இடையிலான போட்டி கால்பந்து விளையாட்டில் மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது.
இணைய தளத்தில் மிகப்பெரிய தேடும் மையமாக கூகுள் அமைந்துள்ளது. கூகுள் பக்கத்தில் தேடினால், கிடைக்காதது ஏதும் கிடையாது எனலாம். இணைய தளம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு சந்தேகம் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவதாக கூகுள்தான்.
இவ்வளவு புகழ் வாய்ந்த கூகுள் நிறுவனம், தங்களது தேடும் பக்கத்தில் கடந்த 25 வருடத்தில் அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட் வீரர், விளையாட்டு வீரர் யார் என்பதை தெரிவித்துள்ளத.
இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் தெண்டுல்கர், எம்எஸ் தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களை பட்டியல் இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சர்வதேச சதங்கள் (50) அடித்த விராட் கோலிதான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார்.
விராட் கோலி இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார். கேப்டனாக இருந்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதும், ஐபிஎல் அணியின் கேப்டனாக இருந்தபோதும் முதன்மையான கோப்பைகளை வென்று கொடுத்ததில்லை. இருந்த போதிலும் கூகுளில் தேடும் நபர்களில் நம்பர் ஒன்னாக திகழ்கிறார். இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பத்திக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
ஆனால் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு முதல் இடம் கிடைக்கவில்லை. போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 38 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல்-நகர் கிளப்பில் விளையாடி வருகிறார். 38 வயது ஆனாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்.
ரொனால்டோ- மெஸ்சி இடையிலான போட்டி கால்பந்து விளையாட்டில் மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது. ரொனல்டோ ரியால் மாட்ரிக் அணிக்காகவும், மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும் விளையாடிய காலம் கால்பந்து விளையாட்டின் பொற்காலம் எனலாம்.
ரொனால்டோ மாஸ்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிக் அணிகளுக்காக விளையாடிய 15 வருட காலத்தில் ஜாம்பவானாக திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது.
- 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ 260 மில்லியன் டாலர் சம்பளம் வாங்குவதாக குறிப்பிட்டுள்ளது.
- மெஸ்சி 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.
அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை (Business magazine Forbes) ஆண்டுதோறும் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடம் பிடித்துள்ளார்.
இதன்மூலம் ரொனால்டோ தொடர்ந்து 4-வது முறையாக முதல் இடம் பிடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார்.
போர்ப்ஸ் தகவல்படி 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ 260 மில்லியன் டாலர் சம்பளம் வாங்குவதாக போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் அவருடைய சம்பளம் 136 மில்லியன் டாலரில் இருந்து இருந்து 260 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
கால்பந்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் எதிரியாக பார்க்கப்படும் மெஸ்சி கடந்த முறை 2-வது இடத்தில் இருந்தார். தற்போது 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். பார்சிலோனாஅணிக்காக விளையாடி வந்த மெஸ்சி தற்போது அமெரிக்க கால்பந்து கிளப்பில் விளையாடி வருகிறார்.
கோல்ஃப் வீரர் ஜான் ரஹ்ம் 218 மில்லியன் டாலருடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மெஸ்சி 135 மில்லியன் டாலருடன் 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். கூடைப்பந்து வீரர் லே'பிரோன் ஜேம்ஸ் 128.2 மில்லியன் டாலருடன் 4-வது இடத்தையும், மற்றொரு கூடைப்பந்து வீரர் ஜியான்னிஸ் ஆன்டேடோகவுன்ம்போ 111 மில்லியன் டாலருடன் 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
கால்பந்து வீரர் எம்பாப்வே 110 மில்லியன் டாலருடன் 6-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
நெய்மர் (கால்பந்து) 108 மில்லியன் டாலர், கரிம் பென்சிமா (கால்பந்து) 106 மில்லியன் டாலர், ஸ்டீபன் கர்ரி (கூடைப்பந்து) 102 மில்லியன், லாமர் ஜேக்சன் (அமெரிக்க கால்பந்து) 100.5 மில்லியன் டாலருடன் முறையே 7 முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.
- கடைசி லீக் ஆட்டத்தில் இரண்டு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
- 2019-ல் அப்டெர்ரஜாக் ஹம்தல்லா ஒரு சீசனில் 34 கோல்கள் அடித்தது சாதனையாக இருந்தது.
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதியில் உள்ள அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். அல்-நாசர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று அல்-இத்திஹாட் அணியை எதிர்கொண்டது. இதில் அல்-நாஸர் அணி 4-2 என அல்-இத்திஹாட் அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்தார். இதன்மூலம் சவுதி புரோ லீக் கால்பந்தில் ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக அப்டெர்ரஜாக் ஹம்தல்லா 2019-ல் 34 கோல்கள் அடித்ததுதான் சாதனையாக இருந்தது. அதை தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ முறியடித்துள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் கிறிஸ்டியானோ ரொனால்டோ "சாதனைகளை நான் பின்தொடரவில்லை. அதுதான் என்னை பின்தொடர்கின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்து முறை பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெனால்டி ஷூட்டை தவற விட்டு தோற்றதால் மனமுடைந்து மைதானத்திலேயே ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
- ரொனால்டோ அழும் காட்சிகளே தற்போது இணையத்தை நிறைந்துள்ளன.
கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபிய அணியின் கேப்டனாக சவுதி ப்ரோ லீக் தொடரில் அவ்வணியை திறமையாக வழிநடத்தி பைனல்ஸ் வரை அழைத்து வந்தார். அதன்படி நேற்று (மே 31) சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் உள்ள கிங் அப்துல்லா மைதானத்தில் வைத்து நடந்த கிங் கப் சவுதி லீக் தொடரின் இறுதிப்போட்டியில் அல்- ஹிலால் அணியை ரொனால்டோவின் அல்- நாசர் அணி எதிர்கொண்டது.
இந்த போட்டியில் இறுதிவரை போராடிய அல்- நாசர் அணி பெனால்டி ஷூட்டை தவறவிட்டதன் மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் அல்- ஹிலால் அணியிடம் தோற்றது. இந்நிலையில் பெனால்டி ஷூட்டை தவற விட்டு தோற்றதால் மனமுடைந்து மைதானத்திலேயே ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
ரொனால்டோ அழும் காட்சிகளே தற்போது இணையத்தை நிறைந்துள்ளன. அவர் அழும் வெடியோவைப் பகிர்ந்து அவருக்கு நெட்டிசன்களும் ரொனால்டோ ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
கால்பந்து விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டவரான ரொனால்டோ தோல்விக்காக கண்ணீர் விட்டு அழுத்தத்தில் ஆச்சர்யம் இல்லை என்று கூறும் நெட்டிசன்கள், கிரிக்கெட்டை போல் வணிக லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் ரொனால்டோ போன்ற உண்மையான வீரர்கள் எப்போதும் முன்னுதாரணமாக திகழ்கின்றனர் என்று கருத்து கூறி வருகின்றனர்.
முன்னதாக லீக் தொடரில் அல் நசர் அணி, அல் இத்திஹாத் அணியுடன் மோதிய போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதி முடிவதற்கு முன் ஒரு கோல், ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் மற்றொரு கோல் என இரண்டு கோல்களை ரொனால்டோ அடித்தார். இதன் மூலம் இந்த சீசனில் 35 கோல்களை அடித்து, ஒரே சீசனில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.