என் மலர்
நீங்கள் தேடியது "பைக் விபத்து"
- விபத்து குறித்து சபாபதி மனைவி ஆனந்தி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- பைக்கை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது கீழ்ப்புத்துப்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவன் என்பது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சபாபதி (வயது45). இவர் கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 5-ந் தேதி தனது பைக்கில் வீட்டில் இருந்து கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சிறுவன் ஓட்டி வந்த பைக் சபாபதி பைக் மீது மோதியது. இதில் சபாபதிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பிறகு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
விபத்து குறித்து சபாபதி மனைவி ஆனந்தி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்.
இதில் பைக்கை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது கீழ்ப்புத்துப்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவன் என்பது தெரியவந்தது. எனவே புதிய மோட்டார் வாகன தடைச் சட்டத்தின் படி சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த அவரது தந்தை கூலித் தொழிலாளி விஜயகாந்த் (43) என்பவரை குற்றவாளியாக சேர்த்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நிபந்தனை ஜாமினில் விடுவித்தனர். சிறுவனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கக்கூடாது எனவும் 12 மாதங்களுக்கு பைக்கின் பதிவு சான்றிதழை இடை நீக்கம் செய்யவும் வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
- 2 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த அமுடூர் கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம். இவரது மகன் சதாசி வம் (வயது 30), கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று மோட்டார்சைக்கிளில் அமுடூர் கிராமத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பூதேரி கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிளும் இவரது மோட்டார்சைக்கிளும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சதாசிவம் சம்பவ இடத்திலேயே புரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த கோவிந்தராஜ், சிவக்குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக் காக வந்தவாசி அரசு ருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கத்தை அடுத்த சூரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 36), கட்டி மேஸ்திரி. இவரது மனைவி உமா (26). இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் சென்றுள்ளார். மனைவியை அழைத்து வர நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து சங்கர் பைக்கில் காவேரிப்பாக்கம் நோக்கி வந்தார்.
கட்டளை அருகே வரும் போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது இரவு நேரம் என்பதால் இந்த விபத்து குறித்து யாருக்கும் தெரிய வில்லை. பின்னர் சங்கர் மனைவி நள்ளிரவு உறவினருடன் பைக்கில் செய்யாறு பகுதியில் இருந்து காவேரிப்பாக்கம் நோக்கி வந்துள்ளார். அப்போது கட்டளை அருகே சாலையில் தனது கணவர் விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மயக்க நிலையில் இருந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து உமா நேற்று காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலம் அருகே வாலிபருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற மாணவி விபத்தில் பலியானார்.
- அவர்கள் ராஜபாளையம் ரோட்டில் ஆலம்பட்டி பாலம் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நாய் வந்தது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் சாத்தங்குடியை சேர்ந்தவர் பூமிராஜா. இவரது மகள் மகாலட்சுமி (வயது 16). இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இவரும் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் தென்னரசு (20) என்பவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் டி.கல்லுப்பட்டி சென்று விட்டு மீண்டும் திருமங்கலம் நோக்கி வந்தனர்.
அவர்கள் ராஜபாளையம் ரோட்டில் ஆலம்பட்டி பாலம் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் மாணவி மகாலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மாணவி பரிதாபமாக இறந்தார். காயமடைந்த தென்னரசு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவீடு திரும்பினார்.
இந்த விபத்து குறித்து மாணவியின் தந்தை பூமிராஜா திருமங்கலம் தாலுகா போலீசில் புகார்செய்தார். அதில், தனது மகளை தென்னரசு கடத்தி சென்றபோது அவர் விபத்தில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து தென்னரசை கைது செய்தனர்.
- நாய் குறுக்கே வந்ததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 55), இவர் மாட்டு தரகு வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் செய்யாருக்கு பைக்கில் வந்தார். தாண்டுக்குளம் கிராமம், அட்டை கம்பெனி அருகில் வந்து கொண்டிருந்த போது திடீரென நாய்குறுக்கே பாய்ந்தது.
நாய் மீது ஏற்றாமல் இருக்க பிரேக் போட்டு நிலை தடுமாறி கீழே விழுந்ததில், ஆனந்தனுக்கு தலை மற்றும் உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக செய்யாறு அரசு பொது மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.
இது சம்பந்தமாக செய்யாறு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து மூதாட்டி தவறி விழுந்து பலியானார்.
- நாய் துரத்தியதால் இந்த விபரீதம் ஏற்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி முத்துசுப்பையாபுரத்தை சேர்ந்தவர் சித்திரைகனி.இவரது மனைவி பூசணம் (வயது 60). இவர் சம்பவத்தன்று தனது மகன் முருகனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
செட்டியார்பட்டி ஆசிரியர் காலனி அருகே சென்றபோது திடீரென ஒரு நாய் பின்னால் அமர்ந்திருந்த பூசணத்தை பார்த்து குரைத்தபடி துரத்தி வந்தது. இதனால் பீதியடைந்த அவர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்தார். தலையில் படுகாயமடைந்த பூசணத்தை சேத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு நிலைமை மோசமானதால் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூசணம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- மற்றொருவர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
அசாம் மாநிலத்தை சேர்ந்த வர் சஞ்சய் (வயது 30). இவர் கல்குவாரியில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானார்.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்குள்ளான மற்றொரு பைக்கில் வந்த சோலூர் பகுதியை சேர்ந்த காவலாளி சுரேஷ் படுகாயம் அடைந்தார். அவரை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீ சார் சஞ்சய் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையை கடந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
வேலூர் பாலமதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மணிகண்டன் (வயது 36) நேற்று காலையில் கேளூர் சந்தைமேட்டில் ரோட்டைக் கடக்க முயன்றார். அப்போது திருவண்ணா மலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மணிகண்டன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அடிபட்டு இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வளைவில் திரும்பிய போது விபத்து
- போலீசார் விசாரணை
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பச்சமுத்து (வயது 62) விவசாயி, சதீஷ் (32) டிரைவர். இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் நேற்று இருவரும் வேடநத்தம் கிராமத்தில் இருந்து கீழ்பென்னாத்தூருக்கு வந்தனர். பின்னர் இருவரும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வேடநத்தம் கிராமத்திற்கு திரும்பினர்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த குண்ணங்குப்பம்- தேப்பனந்தல்குளம் அருகில் உள்ள வளைவில் சென்ற போது திடீரென கரும்பு லோடு ஏற்றிவந்த டிராக்டரும் பைக்கும் மோதியது.
இதில் பச்சமுத்து, சதீஷ் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் நேதாஜி (வயது 40). கூலி தொழிலாளி. இவர் வேலை சம்பந்தமாக வாணியம்பாடிக்கு சென்றார். பின்னர் வேலைகள் முடிந்து வாணியம்பாடியில் இருந்து ஆம்பூருக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஆலாங்குப்பம் அருகே நெடுஞ்சாலையில் வந்த போது பைக்கில் இருந்து நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார். இதில் நேதாஜி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நேதாஜி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் நேதாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த நெடுங்கலை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி அஞ்சலை (வயது 56). இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு புதூர்சென்று விட்டு இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது நெடுங்கல் அரசு பள்ளி எதிரே வேகமாக வந்த பைக் மோதியதில் அஞ்சலை பலத்த காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அஞ்சலியை மீட்டு செய்யாறு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
டாக்டர்கள் பரிசோதனை செய்து அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து அனக்காவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- வெளியே சென்று வீடு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 70) ஓய்வு பெற்ற போஸ்ட் மேன்.
இவர் நேற்று பால் வாங்கி கொண்டு வீடு திரும்பும் போது பொன்னையில் இருந்து லாலாப்பேட்டை நோக்கி வந்த பைக் இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த பத்மநாபனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.