என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் சேவை பாதிப்பு"

    • கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக ரெயிலை நிறுத்தி வைத்திருப்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
    • எண்ணூர் ரெயில் நிலையத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை-கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் பழுது காரணமாக எண்ணூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எண்ணூர் ரெயில் நிலையத்தில் உயர்மின் அழுத்த கோளாறு காரணமாக புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக ரெயிலை நிறுத்தி வைத்திருப்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ரெயில் சேவை பாதிப்பால் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அலுவலகம் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பொன்னேரி ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எண்ணூர் ரெயில் நிலையத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

    கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெஸ்ட் கோர்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
    • ஈரோட்டில் இருந்து கிளம்பிய கூட்ஸ் ஒன்றும் நிறுத்தப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆனங்கூர் ரெயில் நிலையம் அருகே உயர் மின்னழுத்த கம்பி இன்று காலை திடீரென அறுந்து விழுந்தது.

    இதனால் இந்த வழியாக வந்த சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பாதை வழியில் நிறுத்தப்பட்டது. இதேபோல் பெஸ்ட் கோர்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. மேலும் ஈரோட்டில் இருந்து கிளம்பிய கூட்ஸ் ஒன்றும் நிறுத்தப்பட்டது.

    இதனால் இந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து ஈரோடு ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அறுந்து விழுந்த கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பணி சிறிது நேரத்தில் முடிவடைந்து வழக்கம் போல் ரெயில் சேவை தொடர்ந்து நடைபெறும் என ரெயில்வே நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
    • ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு முறை ஓடுபாதை செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம்.

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மராட்டியம், கேரளம், கர்நாடகம், கோவாவில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், மும்பையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இடைவிடாமல் பெய்த கனமழையால், விமான நிலையத்தில், ஆபரேட்டர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு முறை ஓடுபாதை செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    இதில், விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 12 விமானங்கள் உள்பட இண்டிகோவின் 24 விமானங்களும், ஏர் இந்தியாவின் எட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல், மும்பை விமான நிலையத்தில் விஸ்தாரா தனது நான்கு விமானங்களையும் ரத்து செய்துள்ளது.

    ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஆகாசா உட்பட குறைந்தது 15 விமானங்கள் அருகிலுள்ள குறிப்பாக அகமதாபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு மாலை 4 மணி வரை திருப்பி விடப்பட்டன.

    மும்பையில் 82 மிமீ மழை பெய்துள்ளது

    பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தகவலின்படி, மும்பையில் மாலை 4 மணி வரை நகரில் 82 மிமீ மழையும், கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் 96 மிமீ மழையும், மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 90 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

    கனமழை காரணமாக மும்பை முழுவதும் விமான சேவைகள் மட்டுமின்றி சாலை மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

    பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மத்திய ரயில்வேயின் துறைமுகப் பாதையில் சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

    அடுத்த 18-24 மணி நேரத்தில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • சரக்கு ரெயில் தடம் புரண்டதால் 20 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • மதுரை - நிஜாமுதீன் ரெயில் பெத்தபள்ளி - நிஜாமாபாத்-முத்கேட்-பிம்பால்குரி வழியாக திருப்பி விடப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ராகவா புரம் மற்றும் ராமகுண்டம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று இரவு இரும்பு தாது ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் சென்றது.

    திடீரென சரக்கு ரெயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் தண்டவாளம் பெருமளவில் சேதம் அடைந்தது. என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்திவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் மற்றும் தண்டவாள சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாக டெல்லியில் இருந்து தென் மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    20 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 4 ரெயில்கள் பகுதி அளவு ரத்து செய்யப்பட்டது. மேலும் 10 ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

    டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் பெத்தப்பள்ளி நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த பயணிகள் அவதியடைந்தனர்.

    தடம்புரண்ட ரெயில் பெட்டிகளை அதிகாரிகள் பார்வையிட்ட காட்சி.

     

    இதையடுத்து மதுரை - நிஜாமுதீன் ரெயில் பெத்தபள்ளி - நிஜாமாபாத்-முத்கேட்-பிம்பால்குரி வழியாக திருப்பி விடப்பட்டது.

    சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெத்தபள்ளி-நிஜாமாபாத்-அகோலா வழியாக திருப்பி விடப்பட்டது.

    பிலாஸ்பூர்-நெல்லை ரெயில் மச்சேரியல், பல்ஹர்ஷா, அகோலா, பூர்ணா, நிஜாமாபாத், பெத்தபள்ளி வழியாக திருப்பி விடப்பட்டது.

    பயணிகளின் நலனுக்காக உதவி எண்கள் வழங்கப்பட்டு வருவதாக தெற்கு மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • தொடர்ந்து நச்சு புகையை சுவாசிப்பவர்களுக்கு நுரையீரலில் பாதிப்பு.
    • காற்றின் தரக்குறியீடு 500-ஐ தாண்டி விட்டது.

    புதுடெல்லி:

    டெல்லியின் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று 7-வது நாளாக காற்றின் மாசு அபாய கட்டத்தை எட்டி உள்ளது. டெல்லி, நொய்டா, காசியாபாத், குருகிராம் ஆகிய நகரங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 500-ஐ தாண்டி விட்டது.

    டெல்லி ஆனந்த் விகார், அசோக்விகார், பவானா, ஜஹாங்கிர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் மாசு மிக மோசமாக இருப்பதாக மத்திய மாசுகட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

    காற்று மாசு கடுமையாக உள்ளதால் டெல்லியில் அடர்ந்த புகை மூட்டம் நிலவுகிறது. தற்போது பனி பொழிவும் அதிகமாக இருப்பதால் பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளை புகை மூட்டம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரியவிட்டு செல்கின்றனர்.


    காற்று மாசுவினால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. புகைமூட்டம் கார ணமாக டெல்லிக்கு 22 ரெயில்கள் தாமதமாக சென்றன. 9 ரெயில்களில் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விமான சேவையும் பாதிக் கப்பட்டுள்ளது. 8 விமா னங்கள் தரையிறக்க முடியா மல் திருப்பிவிடப்பட்டன. இதனால் பயணிகள் தவிப் புக்கு உள்ளானார்கள்.

    தொடர் காற்று மாசுபாட் டால் பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறிவிட்டது.

    நேற்று முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப் பட்டுள்ளதாக டெல்லி முதல்-மந்திரி அதிஷி தெரி வித்துள்ளார். இந்த வகுப்பு கள் ஆன்லைன் மூலம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    டெல்லி பல்கலைக்கழ கத்தில் வருகிற 23-ந்தேதி வரையிலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 22-ந்தேதி வரையிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

    காற்று மாசு பிரச்சினை இதுவரை இல்லாத வகை யில் உருவெடுத்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுவாச பிரச்சினை உள் ளிட்ட நோய்களால் அவதிப் பட்டு வருகின்றனர்.

    இதனால் தினமும் ஆஸ்பத்திரியை நோக்கி படை யெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தொடர்ந்து ஒரு மணி நேரம் நச்சு புகையை சுவாசிப்பவர்களுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனை சுவாசிப்பவர்க ளுக்கு உடனடியாக எதிர்ம றையான பாதிப்புகள் உட லில் ஏற்படுவதாகவும், இந்த துகள்கள் சுவாச மண்டலத் தில் நுழையும் போது நுரை யீரலில் வீக்கத்தை ஏற்படுத் துவதாகவும் டாக்டர்கள் தெரி விக்கின்றனர்.

    இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க பொது மக்கள் முகக் கவசம் ( மாஸ்க்) அணிய தொடங்கி உள்ளனர்.

    • புறநகர் மின்சார ரெயில்கள் குறிப்பிட்டப்பட்ட அட்டவணைப்படி இயக்கப்படவில்லை என புகார்.
    • மின்சார ரெயில் வழக்கத்தை காட்டிலும் 20 முதல் 30 நிமிடம் வரை தாமதமாக இயக்கப்படுவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டு.

    சென்னை- திருவள்ளூர் இருமார்க்கத்திலும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக பணி நிமித்தமாக திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு அதிகளவில் பயணிகள் வருகின்றனர்.

    இந்த நிலையில், இன்று சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர் மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து பெரம்பூர், ஆவடி வழியாக திருவள்ளூர் செல்லும் மார்க்கத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    புறநகர் மின்சார ரெயில்கள் குறிப்பிட்டப்பட்ட அட்டவணைப்படி இயக்கப்படவில்லை எனவும் மின்சார ரெயில் வழக்கத்தை காட்டிலும் 20 முதல் 30 நிமிடம் வரை தாமதமாக இயக்கப்படுவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 

    • எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.
    • சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் குறைந்து காணப்பட்டது. மதிய நேரத்தில் குளிர் குறைந்து வெயில் காணப்பட்டது. ஆனால் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    பனிமூட்டத்தால் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில் சேவையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக வழக்கமான நேர அட்டவணையைக் காட்டிலும் 15 நிமிடம் வரை தாமதமாக புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    • 50 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெயில் சேவை முடங்கி போய் இருக்கிறது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் ரெயில்வே ஊழியர்கள், சம்பளத்தை உயர்த்தக்கோரி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    நாட்டில் விலைவாசி உயர்வுக்கு ஈடாக தங்களது சம்பளம் போதவில்லை என்றும் 11 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    50 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெயில் சேவை முடங்கி போய் இருக்கிறது.

    ரெயில்கள் இயக்கப்படாததால் ஆயிரக்கணக்கானோர் பஸ்கள், கார்களில் அலுவலகங்கள், மற்ற இடங்களுக்கு செல்கிறார்கள்.

    இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் வாடகைகார்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பஸ் நிறுத்தங்களில் ஏராளமான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இதற்கிடையே போராட்டத்தை கைவிட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறும்போது, இங்கிலாந்து மக்கள் மற்றும் ரெயில் பணியாளர்களின் நலனுக்காக ஒரு விவேகமான சமரசத்துக்கு வர வேண்டிய நேரம் இது என்றார்.

    ×