search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 பேர்"

    • தந்தை - மகன் இருவரும் படுகாயமடைந்தனர்.
    • விபத்துகள் தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமாரி:

    புதுக்கடையை அடுத்த கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (வயது 59). இவர் சம்பவ தினம் தனது மகன் அபிசின் (21) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து புதுக்கடை - வெட்டு மணி சாலையில் சென்று கொண்டிருந்தார். காப்புக் காடு பகுதியில் செல்லும் போது அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைககிள் மீது மோதியது. இதில் தந்தை - மகன் இருவரும் படுகாயமடைந்தனர்.இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு அனுமதித்தனர்.

    மேலும் தொழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஞான முத்து மனைவி தங்கபாய் (64). இவர் நேற்று தனது வீட்டருகே சாலையோரத்தில் புல்அறுத்துக் கொண்டி ருந்தார். அப்போது சாலை யில் அதிவேகமாக வந்த பிக்கப் வாகனம் ஒன்று தங்கபாய் மீது மோதியது. இதில் அவர் படுகாய மடைந்தார்.. வாகனத்தை ஓட்டி வந்தவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடி யுள்ளார். படுகாயமடைந்த தங்க பாய் காஞ்சிர கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வருகிறார்.

    இது போன்று தேங்கா பட்டணம் பகுதி பாலத்தடி என்ற இடத்தை சேர்ந்த லாரன்ஸ் (63) என்பவர் நேற்று காலையில் தனது மகன் தினேஷ் (28) என்பவருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முக்காடு பகுதியை சேர்ந்த அஜீத் என்பவர் ஓட்டி வந்த பைக் தினேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் காஞ்சிர கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமத்க்கப்பட்டுள்ளார்.

    இந்த விபத்துகள் தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கொலை செய்தமைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிபதி வழங்கினார்.
    • 4 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனர்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முன் விரோதம் காரணமாக சதீஷ்குமார் வேலை செய்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் சதிஷ்குமாரை வெட்டி கொலை செய்தனர்.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்த னர்.

    இந்த வழக்கானது பவானி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி லதா தீர்ப்பு கூறினார்.

    இதில் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் (45), ஆனந்த பிரபு (37), சூரியகுமார் (27) மற்றும் வெங்கடேஷ்குமார் (38) ஆகிய 4 பேருக்கும் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

    மேலும் வீடு புகுந்து அத்துமீறி கொலை செய்த மைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் நீதிபதி வழங்கினார். இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் தீர்ப்பு கூறினார்.

    இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனர்.

    • சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
    • சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    தெங்கம்புதூர் அருகே உள்ள வடக்குஅஞ்சு குடியிருப்பு சாஸ்தான் கோயில் விளையை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 24). இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனுஷ் (23), ஜெகன் (35), வினோத் (24), சுயம்புலிங்கம் என்ற லிங்கம் (30) ஆகியோர்க்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நி லையில் நேற்று முன்தினம் இரவு விஷ்ணு தனது வீட்டின் அருகில் உள்ள கோவில் மடத்து சொத்தில் வைத்து மது அருந்தி கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த தனுஷ், ஜெகன், வினோத், சுயம்புலிங்கம் என்ற லிங்கம் ஆகியோர் விஷ்ணுவை தகாத வார்த்தைகள் பேசி, கத்தியால் குத்தினர்.

    இதில் படுகாயம் அடைந்த விஷ்ணு சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் 4 பேரும் அங்கி ருந்து தப்பி சென்று விட்டனர். காயம் அடைந்த விஷ்ணு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

    அங்கிருந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விஷ்ணுவை தாக்கிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.

    • 600 கிராம் கஞ்சா, ஒரு எலக்ட்ரானிக் எடை மெஷின், சிறிய கவர்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் பறிமுதல்
    • மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா பல இடங்களில் விற்கப்படுவதாக போலீ சாருக்கு புகார்கள் வந்தன. இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா விற்பவர்களை கைது செய்து வருகின்றனர். இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால சுந்தரம் தலைமையிலான போலீசார் நேற்று காலை கண்ணாட்டு விளை சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக 4 வாலிபர்கள் வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.

    இதனை தொடர்ந்து போலீசார் 4 பேரையும் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. 4 பேரிடம் இருந்தும் 600 கிராம் கஞ்சா, ஒரு எலக்ட்ரானிக் எடை மெஷின், சிறிய கவர்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் மணவாளக்குறிச்சியை சேர்ந்த ராஜேஷ் (வயது 28), கக்கோடு அஜித் (27), தாணுதாஸ் (35), குருந்தன் கோடு காளிதாஸ் (23) என தெரிய வந்தது.

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அனுமதி யின்றி அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
    • இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அனுமதி யின்றி அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி தலைமையிலான போலீசார் ஏற்காடு மலை கிராமங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

    இதில், கீரைக்காடு பகுதியில் மலர் கொடி என்பவரும், ஒண்டிக்கடை பகுதியில் சசிகலா என்பவரும், அரங்கம் கிராமத்தில் ராணி என்பவரும், பட்டிபாடி கிராமத்தில் சின்னம்மா என்ப வரும் அனுமதி இல்லாமல் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • ரெயிலில் கடத்தி வந்த 3½ கிலோ குட்கா பறிமுதல்
    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தி உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் தலைமை யிலான போலீசார் நேற்று வல்லன்குமாரவிளை அரசு உயர்நிலைப் பள்ளி அருகே ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 வாலிபர்களை போலீசார் பிடித்து சோதனை செய்தனர்.

    அப்போது அவர்களிடம் 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் இளங்கடையை சேர்ந்த அசோக் (வயது 25), வல்லன் குமாரன்விளையைச் சேர்ந்த அருள் செல்வன் (30), தியாகராஜன் பழவிளையை சேர்ந்த ஜெனித் (21) என்பது தெரிய வந்தது. போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கஞ்சா சென்னையிலிருந்து வாங்கி வருவதாக தெரிவித்த னர். தொடர்ந்து போலீசார் நான்கு பேரிடமும் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் ரெயில்வே போலீசார் தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தி உள்ளனர்.நேற்று புனேவிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் அனாதையாக பை ஒன்று கிடந்தது.போலீசார் அதை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3½ கிலோ புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புகையிலை கொண்டு வந்தவர்கள் குறித்த விப ரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    • செல்போன் கடை ஊழியர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த செல்போன் கடை ஊழியரான வினோத் (வயது 28) கடந்த ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதாகி ஏற்கனவே திருச்சி மத்திய சிறையில் உள்ள பெரம்பலூர் கம்பன் நகரை சேர்ந்த பூவாயி என்ற பூவரசன்(21), வடக்கு மாதவி ரோட்டை சேர்ந்த மணிகண்டன்(21), முத்து நகரை சேர்ந்த பப்லு என்ற சத்தியமூர்த்தி(24), வடக்கு மாதவி ஏரிக்கரையை சேர்ந்த வெங்கடேஷ்(21) ஆகிய 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா மேற்கண்ட பூவரசன், மணிகண்டன், சத்தியமூர்த்தி, வெங்கடேஷ் ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலினை பெரம்பலூர் போலீசார் திருச்சி மத்திய சிறையில் நேற்று வழங்கினர். குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் மேற்கண்ட 4 பேரையும் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீஸ் ஏட்டு செல்வராணி ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு மணி வெகுவாக பாராட்டினார்.

    • வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
    • இந்த நிலையில் விடுதியில் நேற்று காலை 4 மாணவிகளும் திடீரென வாந்தி எடுத்தவாறும், மயங்கிய நிலையிலும் இருந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ெபண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது.

    4 மாணவிகள்

    இந்த விடுதியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஆரம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் தங்கி, வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் நேற்று காலை 4 மாணவிகளும் திடீரென வாந்தி எடுத்தவாறும், மயங்கிய நிலையிலும் இருந்தனர்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள், 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பரபரப்பு தகவல்

    இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் 4 மாணவிகளும் விஷம் குடித்தது ஏன்? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த 19-ம் தேதி கோகுலாஷ்டமிக்கு பள்ளி விடுமுறை என்பதால், 4 மாணவிகளும் விடுதியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் சொந்த ஊருக்கு செல்லாமல் மாணவிகள் கொட்டைப்புத்தூர் கிராமத்திலுள்ள தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    கடந்த 22-ந்தேதி வீட்டில் இருந்து விடுதிக்கு வந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை. இதனிடையே 4 மாணவிகளில் ஒரு மாணவியின் பெற்றோர் கடந்த 22-ந்தேதி விடுதிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு மாணவி இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் விசாரித்தபோது மாணவி, சக மாணவிகளுடன் சேர்ந்து யாருக்கும் தெரிவிக்காமல் ஏத்தாபூரில் உள்ள கோவிலுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் விடுமுறை நாளில் நேராக வீட்டிற்கு வராமல் தங்களின் தோழி வீட்டிற்கு சென்றுள்ளதும் தெரிந்தது. இதையடுத்து பெற்றோர் நீண்ட நேரம் விடுதியில் காத்திருந்து விட்டு வீட்டிற்கு திரும்பினர்.

    விஷம் குடித்தனர்

    இந்த நிலையில் கோவிலுக்கு சென்று விட்டு விடுதிக்கு திரும்பிய மாணவிகள், விடுதிக்கு பெற்றோர் வந்து விட்டு சென்றதை கேள்விப்பட்டனர். பெற்றோர், தங்களை அடித்து விடுவார்கள் என பயந்து நேற்று முன்தினம் மாலை எலிபேஸ்ட் வாங்கிக்கொண்டு விடுதிக்கு வந்து இரவு உணவு சாப்பிட்டு விட்டு எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது

    விடுதி ஊழியர்களிடம் விசாரணை

    மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை தனி வட்டாட்சியர், போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் விடுதி சமையலர் சத்தியம்மாள் மற்றும் விடுதியில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானி அருகே உள்ள ஜம்பை கருக்கபாளையம் ரோடு பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தின் அருகில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

    சித்தோடு:

    பவானி அருகே உள்ள ஜம்பை கருக்கபாளையம் ரோடு பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தின் அருகில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் சம்பவயிடம் விரைந்து சென்றுள்ளனர். அப்போது பவானி வடக்கு பள்ளி வீதியை சேர்ந்த செந்தில் (47), பாலக்கரை வீதியை சேர்ந்த கோகுல் (20), ஒருச்சேரிபுதூரை சேர்ந்த கதிர்வேல் (47) பவானி காவேரி வீதியை சேர்ந்த சங்கர் (54) ஆகிய 4 பேர் வெள்ளை கலரில் 2 சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

    • சிறுவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடி மற்றும் போலீசார் ரோந்து சென்று சோதனை செய்தனர்.
    • அப்போது கலைமகள் வீதியில் உள்ள ஒரு வீட்டில் 4 பேர் சூதாடி கொண்டிருந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூர் பகுதியில் சிலர் சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சிறுவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடி மற்றும் போலீசார் ரோந்து சென்று சோதனை செய்தனர். அப்போது கலைமகள் வீதியில் உள்ள ஒரு வீட்டில் 4 பேர் சூதாடி கொண்டிருந்தனர்.

    அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் கெட்டிசெவியூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் (60), கவுந்தப்பாடியை சேர்ந்த வெங்கடேசன் (40), விஜயகுமார் (64), மொடச்சூர் விஸ்வநாதன் (49) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரத்து 810 பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செல்போன் கடை ஊழியர்கொலை வழக்கில் 4 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
    • நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த கோபாலின் மகன் வினோத்(வயது 28). இவர் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர், தனது நண்பர் கார்த்திக்குடன்(25) நிர்மலா நகரில் அருகே பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், வினோத்தை கத்தியால் குத்தி கொலை செய்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 4 பேர் நேற்று மாலை பெரம்பலூர் போலீசில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது உள்ள வழக்கை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்

    கரூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக்குழு கூட்டம் சுங்ககேட்டில் உள்ள கட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு உடனடி வேலைகள் குறித்து பேசினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா மாநிலக்குழு முடிவுகளை விளக்கி பேசினார்.

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணம் இயற்கையான மரணம் இல்லை என்பதாலும், மாணவி மரணத்தில் சந்தேகம் உள்ளதாலும் இதுகுறித்து காவல்துறை தீர விசாரிக்க வேண்டும். மாணவி மரணத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    இந்த பிரச்சனைக்காகப் போராட வலைதளத்தில் பதிவிட்ட வாலிபர் சங்க கரூர் மாநகரத் தலைவர் சிவகுமார் உள்ளிட்ட நான்கு பேரை, பசுபதிபாளையம் போலீசார் அதிகாலையில் கைது செய்தது. இந்த செயலை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் ஜனநாயக விரோதமாக இவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்வதோடு, எதிர்காலத்தில் பொது பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் ஜனநாயக சக்திகளை கைது செய்யும் போக்கை காவல்துறை கைவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். மக்கள் நலன் காக்கும் அரசு என பிரகடனப்படுத்திக் கொள்ளும் திமுக அரசு, காவல்துறையின் இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்களை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்திக் கரூர் மாவட்டக்குழு கேட்டுக்கொள்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றிப்பட்டது.

    ×