search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைகள் கொள்ளை"

    • பிரபல நகைக்கடைக்குள் நேற்று இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது.
    • கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய் சிங் உயிரிழந்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் நகை கடைக்குள் புகுந்து உரிமையாளரை சுட்டுக்கொன்று நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பிவாண்டி பகுதியில் பிரபல நகைக்கடைக்குள் நேற்று இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது.

    அப்போது, நகைக்கடையில் இருந்தவர்களை சரமாரியாக கொள்ளை கும்பல் தாக்கியது.

    கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய் சிங் உயிரிழந்துள்ளார். அவரது தம்பிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

    நகைக்கடையில் இருந்த நகைகளை அள்ளிச்சென்ற மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.

    வெறும் 4 நிமிடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

    • வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
    • தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தக்கலை:

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள சுவாமியார் மடத்தை அடுத்த புலிப்பணம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் மனோஜ் (வயது 34), என்ஜினீயர்.

    இவர் தற்போது கோவையில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். புலிப்பணத்தில் உள்ள வீட்டில் ராதாகிருஷ்ணனும் அவரது மனைவி சந்திரகலாவும் வசித்து வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து மனோஜ், சொந்த ஊருக்கு வந்தார். தொடர்ந்து தந்தையை சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கேயே தங்கி சிகிச்சை பெற வேண்டி இருந்ததால், சந்திரகலாவும் சென்று விட்டார்.

    இதனால் அவர்களது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதனை பார்த்தவர்கள் மனோஜுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க மற்றும் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து பார்வையிட்டனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தன.

    பீரோவில் இருந்த 35 பவுன் நகைகைள், ரூ.1½ லட்சம் மற்றும் ஒரு வெள்ளி குத்துவிளக்கு கொள்ளை போயிருப்பதாக தக்கலை போலீசில் மனோஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தங்க நாணயம், வெள்ளி கொலுசு மற்றும் ரூ.1,500 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
    • கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் அருகே ஆலக்குடி பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்த 2 வீடுகளின் கதவை உடைத்து நகைகள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    தஞ்சாவூர் அருகே உள்ள ஆலக்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 36). இவர் தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவை அருகே உள்ள கல்விராயன் பேட்டையில் நடத்தினார். விழா முடிந்து அங்கேயே இளங்கோவன் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தங்கினார்.

    இந்த நிலையில் இளங்கோவனுக்கு அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் போன் செய்து வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளங்கோவன் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தார். பீரோ உடைக்கப்பட்டு 20 கிராம் தங்கசெயின், 1 கிராம் தங்க நாணயம், வெள்ளி கொலுசு மற்றும் ரூ.1,500 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதேபோல், இளங்கோவனின் எதிர்வீட்டை சேர்ந்த சரவணன் மகன் மணிகண்டன் என்பவரின் வீட்டின் முன்பக்க கதவையும் உடைத்து ரூ.4,500 ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்தும் வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து 2 வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • தடயவியல் நிபுணர்கள் கை ரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வாகைக்குளம் மாயன் நகரை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி காசம்மாள் (வயது 70). இவர்களுக்கு பாண்டியராஜன், பரசுராமன் என்ற 2 மகன்களும், பாண்டியம்மாள் என்ற மகளும் உள்ளனர்.

    மகன்கள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்கள். பாண்டியம்மாளை பிச்சை என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து பல்கலை நகர் அருகே உள்ள ராஜம் பாடியில் தனிக்குடித்தனம் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கராசு விபத்து ஒன்றில் சிக்கி உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் ராஜம்பாடியில் உள்ள தனது மகள் பாண்டியம்மாள் வீட்டில் தங்கி அவரது பராமரிப்பில் ஓய்வெடுத்து வந்தார்.

    இதற்கிடையே காசம்மாள் மட்டும் மாயன் நகரில் உள்ள வீட்டில் தனியாக வசித்துள்ளார். நேற்று இரவு காசம்மாளுக்கு தங்கராசு போன் செய்து ஏன் நீ மட்டும் அங்கு தனியாக இருக்கவேண்டும்? நீயும் மகள் பாண்டியம்மாள் வீட்டுக்கு வந்துவிட வேண்டியதுதானே? என்று கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்த காசம்மாள் விரைவில் மகள் வீட்டுக்கு வருவதாக தெரிவித்திருந்தார்.


    இந்தநிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் காசம்மாள் வசித்து வந்த வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. வழக்கமாக அதிகாலையில் வாசல் தெளித்துவிட்டு செல்வார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் எழுந்து வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது கடும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் காசம்மாள் தலைக்குப்புற பிணமாக கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் வழிந்து உறைந்த நிலையில் காணப்பட்டது. உடனடியாக அவர்கள் இதுபற்றி அவரது கணவர் தங்கராசுவுக்கும், சிந்துப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த திருமங்கலம் டி.எஸ்.பி. அருள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையிட்டனர். இதில் காசம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் விரசாரணையை தீவிரப்படுத்தினர். மோப்ப நாய் சார்லி வரவழைக்கப்பட் டது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் சோதனை நடத்தினர். இதில் காசம்மாள் கழுத்தில் கிடந்த 15 பவுன் தங்க தாலிச்சங்கிலி, பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகைகள் உள்பட 65 பவுன் நகைகளை 'மர்ம' நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது. கொள்ளையடிக்க வந்த கும்பல் காசம்மாளை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மோப்ப நாய் சார்லி அந்தப் பகுதியில் சிறிது தூரம் சென்று திரும்பி வந்தது. சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் கை ரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொன்று 65 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 39). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ராசாத்தி (35)என்கிற மனைவியும், சுஜித் சரண் (11) என்கிற மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு கோத்தகிரியில் உள்ள தனது உறவினர் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மணிமாறன் தனது வீட்டினை பூட்டிவிட்டு, குடும்பத்தாருடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் இன்று காலை மணிமாறனின் தங்கையான மகேஸ்வரி என்பவர் வீட்டினை பார்த்தபொழுது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 10 பவுன் எடையுள்ள உள்ள தங்க நகை, ரொக்கம் ரூ.80 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக மகேஸ்வரி உடனடியாக துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருச்சியில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    துறையூர் நகரப் பகுதியில் வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதியிலேயே வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அண்ணா பேருந்து நிலையம் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரகுராஜன் மனைவி லட்சுமி (வயது 53). இவர் கணவரை பிரிந்து 20 ஆண்டுகளாக மகனுடன் வசித்து வருகிறார். இவரது மகன் தனியார் பொறியியல் கல்லூரியில் வேலை செய்து வருகிறார்.

    லட்சுமி களிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதற்காக வீட்டில் இருந்து தினமும் காலையில் பள்ளிக்கு ஷேர் ஆட்டோ மற்றும் அரசு பேருந்தை பயன்படுத்தி வந்துள்ளார். தினமும் வீட்டிலிருந்து ஆட்டோ மூலம் சிவகங்கை நான்கு வழிச்சாலை சந்திப்பு வந்து அங்கிருந்து ஒரு ஆட்டோ அல்லது பஸ் மூலம் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வீட்டிலிருந்து கிளம்பிய லட்சுமி ஆட்டோவில் விக்ரம் மருத்துவமனை சந்திப்பு அருகே வந்து அங்கிருந்து மற்றொரு ஆட்டோ மூலம் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள பள்ளியில் வேலை செய்யும் இரண்டு ஆசிரியைகள் உள்ளிட்ட நான்கு பேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர்.

    மற்ற இரண்டு ஆசிரியர்களும் அவர்களது பள்ளி அருகே இறங்கிக் கொள்ள ஆட்டோவில் லட்சுமி மற்றும் அவருடன் பயணி ஒருவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவிற்கு டீசல் போடுவதாக லட்சுமியிடம் கூறிய ஆட்டோ டிரைவர் பெட்ரோல் நிலையம் செல்வதற்கு பதிலாக வேறொரு பாதையில் ஆட்டோவை ஓட்டியுள்ளார். ஏன் என்று கேட்ட லட்சுமியிடம் இது தான் குறுக்கு வழி என்று கூறிய ஆட்டோ டிரைவர் மறைவான காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

    அப்போது ஆட்டோவில் இருந்த இளைஞர் மற்றும் ஆட்டோ டிரைவரும் சேர்ந்து தலைமை ஆசிரியை லட்சுமியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்தனர். அவர் காதில் அணிந்திருந்த தோடு மாட்டலை கழட்டி தருமாறும் தராவிட்டால் காதை அறுத்து விடுவோம் என்று கூறியதாலும் உயிருக்கு பயந்த அவர் காது கழுத்தில் அணிந்திருந்த 9½ பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றனர்.

    ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய லட்சுமி அங்கிருந்து தப்பி அந்த வழியாக வந்தவர்களின் உதவியுடன் கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நகைக்காக பட்டப்பகலில் தலைமை ஆசிரியை வெட்டி நகையை பறித்து சென்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் பொது போக்குவரத்தை தவிர்த்து பெரும்பாலும் ஷேர் ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றனர். சாலை விதிகளை சில ஆட்டோக்கள் மதிக்காமலும் சாலை விதிகளை மீறுவதாலும் அதிக நபர்களை ஆட்டோவில் ஏற்றி செல்வதாகவும் பல்வேறு விபத்துக்கள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆட்டோவில் பள்ளி தலைமை ஆசிரியைக்கு நடந்த சம்பவம் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

    • திருட்டு சம்பவங்கள் தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    • கேமராக்களில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரம் பி.வி. லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தாமணி (வயது 52). இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் திருடப்பட்டிருந்து.

    இதே போன்று எஸ்.வி.புரம் ஆர்.ஜி.நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சத்யாதேவி (29). இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு புதுக்கோட்டைக்கு சென்று விட்டனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 1½ பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இதே போன்று பூட்டியிருந்த கணேசபுரம் நாச்சம்மாள் (75) என்பவரது வீட்டின் கதவையும் உடைத்து ரூ.36 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று உள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும்.

    இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவு நேரம் அங்கு சென்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • செந்தில், சீனிவாசன் ஆகிய 2 பேரை ஆயுதங்களை காட்டி மிரட்டினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ளது பூங்கொடி கிராமாம். இந்த ஊரை சேர்ந்த செந்தில், சீனிவாசன் ஆகிய 2 பேர் காரில் பைபாஸ் சாலையில் வந்தனர். புதுக்கோட்டை அருகே அண்டகளூர் பகுதியில் வந்தபோது 2 பெரும் காரை ஓரமாக நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றனர்.

    அப்போது சுமார் 8 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் கத்தி, அரிவாள் வைத்திருந்தனர். திடீரென்று அவர்கள் செந்தில், சீனிவாசன் ஆகிய 2 பேரையும் ஆயுதங்களை காட்டி மிரட்டினர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த செயின்களை பறித்தனர்.

    பின்பு சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக அவர்களை அங்கேயே கட்டிப்போட்டு சித்ரவதை செய்ததாக தெரிகிறது. பின்பு அந்த வழிப்பறி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட செந்தில், சீனிவாசன் ஆகிய இருவரும் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் இதுபோன்று தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுபற்றி தகவல் அறிந்த பூங்கொடி கிராம மக்கள் பைபாஸ் சாலையில் திரண்டனர்.

    அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த அவ்ழியாக போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து டி.எஸ்.பி. ராகவி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வேலுசாமி, மருது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அங்கு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வழிப்பறி கும்பலை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு உண்டானது. இதனிடையே கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த செந்தில், சீனிவாசன் ஆகியோர் புதுக்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளையர்கள் குறித்து அவர்கள் கொடுத்த அடையாளங்களின் பேரில் கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு பீரோ பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
    • போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள பிளசண்ட் நகரை சேர்ந்தவர் டாக்டர் கலைக்குமார் (வயது 52). இவர் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி டாக்டர் புனிதவதி, சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் வெளியூரில் படித்து வருகிறார்.

    மனைவி மற்றும் மகள் வாரத்திற்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வருவார்களாம். கலைக்குமார் தான் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவரும் தினமும் காலை 7.30 மணிக்கு பணிக்காக நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு கிளம்பி சென்று விடுவாராம். அதன்பிறகு மாலை அல்லது இரவு நேரத்தில் தான் அவர் வீடு திரும்புவார்.

    நேற்று காலையும் வழக்கம் போல் வேலைக்குச் சென்ற கலைக்குமார், இரவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு பீரோ பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    அதில் இருந்த பொருட்கள் மற்றும் துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனால் கொள்ளை சம்பவம் நடந்திருப்பதை உணர்ந்த அவர், நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்த்தனர். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து யாரோ மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பீரோவில் இருந்த 87 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் கலைக்குமார் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை நடந்த பிளசண்ட் நகர் பகுதி வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியாகும். இங்கு வீடுகளும் நெருக்கமாகவே உள்ளன. அப்படியிருந்தும் ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளையர்கள் லாவகமாக வீட்டுக்குள் புகுந்து நகை-பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே ஆள் இல்லாத வீட்டில் இதுபோன்று கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஆனாலும் கொள்ளை யர்கள், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இதனை தடுக்க கொள்ளையர்களை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பட்டபகலில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள எர்ரப்பட்டி பொதுப்பணித்துறை காலனி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர் பெங்களூரில் எலக்ட்ரிகல் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளி (30). இவர் அருகிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர்களது மேல் மாடியில் மகேஸ்வரி (27) இவரது கணவர் அருண் தம்பதிகள், வாடகை இருந்து வருகின்றனர். இவர்களும் தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கீழ்வீடு மற்றும் மேல் வீட்டில் உள்ளவர்கள் வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விட்டனர். வீட்டில் வேறு்எவரும் இல்லை.

    வேலை முடிந்து மீண்டும் மாலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது இருவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் வள்ளி உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் உள்ள லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.5 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

    அதே போல் மேல் மாடியில் குடியிருந்து வரும் மகேஸ்வரி வீட்டில் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு ரூ.6 லட்சம் மதிப்பிலான 13 பவுன் நகைகள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதனை கண்டு இவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து இரு குடும்பத்தினரும் அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவேறு வழக்குகளாக பதிவு செய்து கைரேகை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவை சேகரித்து அதன் மூலமாக விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    பட்டபகலில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாடியில் குடியிருந்த நர்சு வீட்டிற்குள்ளும் கொள்ளையடிக்க முயன்றனர்.
    • வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 75). இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு சொந்தமான வீடு இதே பகுதியில் உள்ளது. வீட்டின் மாடியில் நர்சு ஒருவருக்கு வாடகைக்கு விட்டுவிட்டு கீழ் தளத்தில் வசித்து வந்தனர்.

    மேலும் வேலுச்சாமி குடும்பத்துடன் ஆந்திராவில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இதனால் வீட்டை பூட்டிவிட்டு அங்கேயே தங்கியிருந்தனர். எப்போதாவது விடுமுறைக்கு மட்டுமே இங்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். மேலும் பீரோவையும் உடைத்து அதிலிருந்த தங்கம், வெள்ளி நகைகளையும், ரொக்க பணத்தையும் அள்ளிச் சென்றனர்.

    இதனையடுத்து மாடியில் குடியிருந்த நர்சு வீட்டிற்குள்ளும் கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அங்கு எதுவும் சிக்கவில்லை. பின்னர் அருகில் இருந்த மற்றொரு வீட்டின் வாசலில் கட்டியிருந்த 2 சேவல்களையும் திருடிக்கொண்டு அக்கும்பல் தப்பியோடினர்.

    காலையில் வேலுச்சாமியின் வீடு திறந்து கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் கொள்ளை நடந்த விவரம் தெரியவந்தது. இதுகுறித்து வேலுச்சாமியிடம் கேட்ட போது பீரோவில் 3 பவுன் தங்கநகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் வைத்திருந்ததாக தெரிவித்தார்.அந்த நகை, பணம் திருடு போனது.

    இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குஞ்சம்மாள் ரத்த காயத்துடன் அலறி துடித்து கொண்டு இருந்தார்.
    • மர்ம நபர் ஒருவர் தாக்கி நகைகள் திருடு சென்றது தெரியவந்தது.

    பவானி:

    பவானி அருகே உள்ள காளிங்க ராயன்பாளையம் அடுத்த மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி உமா சாந்தி. ராஜாவின் தாய் குஞ்சம்மாள் (65).

    அவர்கள் அனைவரும் அந்த பகுதியில் ஒன்றாக வசித்து வருகி றார்கள். உமா சாந்தி கவுந்தப்பாடி புதூர் பகுதி யில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரி யராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் உமா சாந்தியை அழைத்து வருவ தற்காக ராஜா கவுந்தப்பாடி புதூருக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது தாய் கஞ்ச ம்மாள் மட்டும் தனி யாக இரு ந்தார். இதையடுத்து ராஜா பள்ளியில் இருந்து மனைவி யை வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது குஞ்சம்மா ள் வீட்டின் படுக்கை அறையி ல் ரத்த காயத்துடன் அலறி துடித்து கொண்டு இருந்தார்.

    இதை கண்டு அதிர்ர்ச்சி அடைந்த அவர்கள் மூதா ட்டி யிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவரை மர்ம நபர் ஒருவர் தாக்கி அவர் கழுத்தில் அணி ந்திருந்த 2 பவுன் தங்கச் செயின் மற்றும் கையில் அணிந்திரு ந்த 3 பவுன் வலையல் என 5 பவுன் நகைகள் திருடு சென்றது தெரியவந்தது.

    இதில் படுகாயம் அடைந்த குஞ்சம்மாளை அக்கம் பக்க த்தினர் உதவி யுடன் மீட்டு பவானி அரசு மருத்துவம னைக்கு அனு ப்பி வைத்துள்ளனர்.

    அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகி ச்சை க்காக ஈரோடு அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்ப ட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து ராஜா சித்தோ டு போலீசில் புகார் கொடு த்தார். அதன் பேரில் சித்தோ டு போலீசார் மற்று ம் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி ஆகியோர் சம்பவ இடம் வந்து அந்த மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்ட னர்.

    இதில் மூதாட்டி தனியாக வீட்டில் இருந்ததை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் அவரை தாக்கி நகைகள் கொள்ளை யடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு மர்ம நப ர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சித்தோடு போலீ சார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×