search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஸ்பெண்டு"

    • கடந்த 2021-ம் ஆண்டு ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக நந்தம்பாக்கம் போலீசாரால் ஜெயந்தி கைது செய்யப்பட்டார்.
    • இரவு கைதிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் கணக்கெடுத்த போதுதான் ஜெயந்தி ஜெயிலில் இருந்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது.

    செங்குன்றம்:

    பெங்களூரை சேர்ந்தவர் ஜெயந்தி (32). இவர் செம்மஞ்சேரியில் தங்கி பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக நந்தம் பாக்கம் போலீசாரால் ஜெயந்தி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் ஜெயந்தி சிறையில் இருந்த போது பார்வையாளர்கள் நுழைவு பகுதி வழியாக சென்று புழல் ஜெயிலில் இருந்து தப்பி வெளியே சென்றுவிட்டார்.

    அவர் தப்பி சென்றது உடனடியாக போலீசாருக்கு தெரியவில்லை. இரவு கைதிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் கணக்கெடுத்த போதுதான் ஜெயந்தி ஜெயிலில் இருந்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது. கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது பார்வையாளர்கள் நுழைவு வாயில் வழியாக ஜெயந்தி வெளியே செல்வது பதிவாகி உள்ளது. இதை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறைக் காவலர்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகிய 2 பேரையும் சஸ்பெண்டு செய்து சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டு உள்ளார். புழல் ஜெயிலில் இருந்து தப்பிய ஜெயந்தியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதுகாப்பு அதிகம் உள்ள புழல் ஜெயிலில் இருந்து பெண்கைதி தப்பி சென்ற சம்பவம் அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தபால் நிலைய உதவி அஞ்சல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.
    • பிளாஸ்டிக் கவர்களில் மூட்டையாக தபால்கள் கிடந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நிஜமாபாத் மாவட்டம், சுபாஷ் நகர் தபால் நிலையத்தில் தபால்காரராக வேலை செய்து வந்தவர் கார்த்திக்.

    இவரது கட்டுப்பாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக வந்த வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை. பான் கார்டு, டிரைவிங் லைசன்சு, வங்கி காசோலைகள் உள்ளிட்ட தபால்களை வழங்கவில்லை.

    இது குறித்து வாடிக்கையாளர்கள் கார்த்திக்கிடம் கேட்டபோது உங்களுக்கு எதுவும் வரவில்லை. வந்தால் கண்டிப்பாக தருகிறேன் என அலட்சியமாக பதில் அளித்து வந்துள்ளார்.

    இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கார்த்திக் மீது சந்தேகம் அடைந்து இது குறித்து தபால் நிலைய உதவி அஞ்சல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.

    நேற்று காலை தபால் நிலையத்திற்கு வந்த கார்த்திக்கிடம் உதவி அஞ்சலக கண்காணிப்பாளர் தபால் நிலையத்தில் இருந்து எடுத்துச் சென்ற தபால்களை ஏன் முறையாக குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கவில்லை என விசாரணை நடத்தினார்.

    அதற்கு கார்த்திக் தனக்கு ஒன்றும் தெரியாது என பதிலளித்தார். இதையடுத்து உதவி அஞ்சலக கண்காணிப்பாளர் கார்த்திக் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது பிளாஸ்டிக் கவர்களில் மூட்டையாக தபால்கள் கிடந்தது.

    மூட்டைகளில் சுமார் 6 ஆயிரம் தபால்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் மூட்டை கட்டி வைத்து இருந்தது தெரிய வந்தது. கார்த்திகை சஸ்பெண்டு செய்தனர்.

    • இழப்பீடு பெற வி.ஏ.ஓ., ஆர்.ஐ., ஆகியோரி டம் ஒப்புதல் பெற்று, வேளாண் துறை சான்று இணைக்க வேண்டும்.
    • ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் விசாரித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில், 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. வனப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் கரும்பு, மக்காசோளம், ராகி உள்ளிட்ட பயிர்களை வன விலங்குகள் சேதப்படுத்தி வருகிறது.

    அதற்கு, இழப்பீடு பெற வி.ஏ.ஓ., ஆர்.ஐ., ஆகியோரிடம் ஒப்புதல் பெற்று, வேளாண் துறை சான்று இணைக்க வேண்டும். இவ்வாறு கடம்பூரை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள், பயிர்களை சேதப்படுத்தியது. வேளாண் சான்று கோரி, சத்தியமங்கலம் வேளாண் உதவி இயக்குனர் வேலுசாமியிடம் முறையிட்டார்.

    அந்த விவசாயி, தனது பையில் வைத்திருந்த மொபைல் போனில், 'வீடியோ' பதிவை 'ஆன்' செய்து வைத்து, அதிகாரியிடம் பேசி பதிவு செய்தார். அதில் அலுவலக செலவுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், இழப்பீடு தொகை ரூ. 22 ஆயிரத்தை ரூ. 24 ஆயிரமாக போட்டு தருவதாக கூறினார்.

    அதற்கு அந்த விவசாயி, 'எனக்கு இதுபோன்ற விபரம் தெரியாது. நான், குன்றி மலையில் இருந்து வருகிறேன். 500 ரூபாய் மட்டும் கொண்டு வந்தேன். 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டேன். மீதமுள்ள, 400 ரூபாய்தான் உள்ளது,' என்றார்.

    அதையும் மீறி அந்த அதிகாரி, யாரிடமாவது வாங்கி வரும்படி கூறியதும், தனக்கு யாரையும் தெரியாது என விவசாயி கூறுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் விசாரித்தார். இந்நிலையில், சென்னை, வேளாண் துறை இயக்குனர் சுப்பிரமணியம் வெளியிட்ட உத்தரவில் கூறியதாவது:-

    சத்தியமங்கலம் தாலுகா குன்று கிராம விவசாயி இடம் இழப்பீடு வழங்குவதற்காக சத்தியமங்கலம் வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் கே.வேலுசாமி, பேரம் பேசியதற்கான பதிவுகள் வெளியானது. இதன் அடிப்படையில், அவர் உடனடியாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். மறு உத்தரவு வரும் வரை அவர், சஸ்பெண்ட்டில் தொடர்வார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான வக்கீல்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    பெங்களுரு:

    கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் பிரீதம். சம்பவத்தன்று இவர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிக்மகளூர் நகர போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது வக்கீல் பிரீதமை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரியவந்ததும் போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான வக்கீல்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. பின்னர் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு விக்ரம் ஆம்தே விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் வக்கீல் மீது தாக்குதல் நடத்தியதாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    மேலும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரையும் சஸ்பெண்டும் செய்தார். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் இருந்து போலீஸ் சூப்பிரெண்டு விக்ரம் ஆம்தே வெளியே செல்லாமல் வக்கீல்கள் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரெண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார். இதையடுத்து வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் போலீசாரை கண்டித்து சிக்மகளூர் பார்கவுன்சில் உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    இருளர் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்டு செய்ய ப்பட்டார்.விழுப்புரம் அருகே நல்லா ப்பாளையம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டி டம் மனு கொடுத்தார். எனது கணவர் 2014-ம் ஆண்டு உடல் நலக் குறைவால் காலமானார். கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவித் தொகை கேட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் சென்றேன்.

    அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார். இதையடுத்து பாலியல் புகார் கூறப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாக்கியராஜை சஸ்பெண்ட் செய்து ஷாகுல் அமீது உத்தரவிட்டுள்ளார்.

    • பூட்டிய அறைக்கு உள்ளே இருப்பது யார்? நீங்களாக வெளியில் வருகிறீர்களா? அல்லது கதவை உடைத்து உள்ளே வரட்டுமா? என்று கேட்டுள்ளார்.
    • பணியின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இருவரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவிட்டார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை காவேரி நகர் அடுத்த ஆரோக்கியநாதபுரம் பகுதியில் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையின் கீழ் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த வாரம் நள்ளிரவு நேரத்தில் இந்த அலுவலகத்தில் உள்ள ஏ.சி.அறை ஒன்றில் ஒரு ஆண், ஒரு பெண் என போலீஸ் ஜோடி ஒன்று தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உடனடியாக அங்கு விரைந்து சென்ற அவர் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு கதவை தட்டினார். யாரும் கதவை திறக்கவில்லை.

    இதனையடுத்து அவர் பூட்டிய அறைக்கு உள்ளே இருப்பது யார்? நீங்களாக வெளியில் வருகிறீர்களா? அல்லது கதவை உடைத்து உள்ளே வரட்டுமா? என்று கேட்டுள்ளார். இதனை அடுத்து அந்த ஜோடி மெதுவாக கதவை திறந்து வெளியில் வந்தனர்.

    அவர்கள் இருவரையும் அக்கோலத்தில் பார்த்த அந்த துணை போலீஸ் சூப்பிரண்டு இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினார். அதில் அந்த ஆண் போலீஸ்காரர் அதே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியில் உள்ளவர் என்றும், அந்த பெண் போலீஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் பணியில் உள்ளவர் என்றும் இருவரும் திருமணம் ஆகாதவர்கள் என்றும் தெரிய வந்தது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை அளித்தார்.

    இதனையடுத்து பணியின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இருவரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவிட்டார். இச்சம்பவம் சகபோலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மருத்துவமனை முதல்வர் பதவியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    • உத்தரவை கேரள மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலர் முகமது ஹனீஷ் பிறப்பித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அனில்குமார். இவர் மீது பல்வேறு தரப்பில் இருந்து குற்ற்ச்சாட்டுகள் கூறப்பட்டன. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    அதில் அவரது மீதான குற்றசாாட்டு உறுதியானதை தொடர்ந்து அவர் மருத்துவமனை முதல்வர் பதவியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கேரள மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலர் முகமது ஹனீஷ் பிறப்பித்துள்ளார்.

    • திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
    • மின்வாரிய அதிகாரிகள், கேங்மேன்கள் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி தென்னூரில் உள்ள தலைமை மின்வாரிய பொறியாளர் அலுவலகத்தின் மலைக்கோட்டை பிரிவில் ராஜீவ் காந்தி என்பவர் கேங்மேனாக பணியாற்றி வருகிறார்.

    இவர் இரு தினங்களுக்கு முன்பு பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பலத்த காயம் அடைந்தார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மின் இணைப்பை துண்டிக்காமல் உரிய பாதுகாப்பு இல்லாமல் 110 கே.வி. மின் கம்பத்தில் ஏறி பணி செய்யுமாறு உயர் அதிகாரி வாய்மொழி உத்தரவிட்டதாகவும், மின்சாரம் உள்ள பகுதிகளில் அவர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்ற விதிக்கு புறம்பாக ராஜீவ் காந்தியை பணி செய்ய வைத்ததால் இந்த விபத்து நடந்ததாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். விபத்துக்கு காரணமான அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் தென்னூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மேலும் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் மின்வாரிய அதிகாரிகள், கேங்மேன்கள் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உதவி மின் பொறியாளர் ஆர். சரவணன் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    • விற்பனையாளர் பருப்பு இல்லை என்று சொல்பவர்கள் வரட்டும் , நான் பேசி கொள்கிறேன் என மெத்தனமாக பதில் அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • ஊழியரை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சார்பதிவாளர் செல்வி உத்தரவிட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் - 15வேலம்பாளையம் தொடக்க வேளாண்மைக்கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 59, வேலம்பாளையம் ரேசன் கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேசன் கார்டு இல்லாமல் சுமார் 20 கிலோ பருப்பை வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற போது அங்கிருந்த பொதுமக்கள் ரேசன்கார்டு இல்லாமல் இவ்வளவு பருப்பை எப்படி மொத்தமாக கொண்டு செல்கிறீர்கள் என அந்த வாலிபரை பார்த்து கேட்டனர்.

    மேலும் கார்டுதாரர்கள் கேட்டால் பருப்பு இல்லை என திருப்பி அனுப்பிவிட்டு கடைக்காரர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்கிறீர்களா என விற்பனையாளரிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர்.

    அதற்கு விற்பனையாளர் பருப்பு இல்லை என்று சொல்பவர்கள் வரட்டும் , நான் பேசி கொள்கிறேன் என மெத்தனமாக பதில் அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்தநிலையில் 15வேலம்பாளையம் ரேசன் கடையில், ரேசன் கார்டு இல்லாமல் விற்பனையாளர் ராமாத்தாள் மொத்தமாக பருப்பை விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சார்பதிவாளர் செல்வி இன்று உத்தரவிட்டார்.

    • மின்சாரம் பாய்ந்து கேங்மேன் காயம்
    • திருச்சி உதவி மின் பொறியாளர் சஸ்பெண்டு


    திருச்சி


    திருச்சி தென்னூரில் உள்ள தலைமை மின்வாரிய பொறியாளர் அலுவ லகத்தின் மலைக்கோட்டை பிரிவில் ராஜீவ் காந்தி என்பவர் கேங்மேனாக பணியாற்றி வருகிறார்.


    இவர் இரு தினங்களுக்கு முன்பு பணியில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து பலத்த காயம் அடைந்தார்.பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


    மின் இணைப்பை துண்டி க்காமல் உரிய பாதுகாப்பு இல்லாமல் 110 கே.வி. மின் கம்பத்தில் ஏறி பணி செய்யு மாறு உயர் அதிகாரி வாய்மொழி உத்தர விட்டதா கவும், மின்சாரம் உள்ள பகுதி களில் அவர்க ளை பணியில் ஈடுபடுத்த கூடாது என்ற விதிக்கு புறம்பாக ராஜீவ் காந்தியை பணி செய்ய வைத்ததால் இந்த விபத்து நடந்ததாக புகார் எழுந்தது. அதைத் தொ டர்ந்து பாதிக்க ப்பட்ட வருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். விபத்துக்கு காரணமான அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் தென்னூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பா ட்டம் நடந்தது.மேலும் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய பொறி யாளர் அலுவலகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் மின்வாரிய அதிகாரிகள், கேங் மேன்கள் தரப்பில் நடத்த பேச்சு வார்த்தையில் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க ப்படும் என உறுதி அளிக்க ப்பட்டது. இதைத் தொட ர்ந்து சம்பந்தப்பட்ட உதவி மின் பொறியாளர் ஆர். சரவ ணன் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்ப ட்டுள்ளார்.




    • செட்டிபுண்ணியம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் ஒருவரை பிடிக்க போலீசார் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டும் சிக்காமல் இருந்தார்.
    • போலீஸ்காரர் கோகுலை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் அதிரடியாக உத்தரவிட்டார்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அனைத்து போலீசாரும் தங்களது போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனையை ஒழிக்கவும், இதில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மறைமலைநகர் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் ஒருவரை பிடிக்க போலீசார் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டும் சிக்காமல் இருந்தார். இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்தபோது மாமல்லபுரம் அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வரும் கோகுல் என்பவர் கஞ்சா வியாபாரிக்கு போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவித்து வந்தது தெரியவந்தது. மாவட்ட போதை தடுப்பு சிறப்பு பிரிவில் உள்ள போலீஸ்காரர் கோகுல் பல குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீஸ்காரர் கோகுலை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் அதிரடியாக உத்தரவிட்டார்.

    • ரேசன் கடை விற்பனையாளர் சஸ்பெண்டு
    • அதிகாரி நடவடிக்கை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்ட ராம்பட்டு அடுத்த தென் கரும்பலூர் 124 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.

    இதன் கட்டுப்பாட்டில் அதே கிராமத்தில் கூட்டுறவு பொது விநியோகத் திட்டம் மூலம் ரேசன் கடை இயங்கி வருகிறது.

    இந்த கடையில் விற்பனையாளராக செங்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 48) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த மாதம் பொதுமக்களுக்கு அரிசி பருப்பு சரியான முறையில் போடவில்லை என்று மாவட்ட கூட்டுறவு சார் பதிவாளர் மணிவண்ணனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    அதன் அடிப்படையில் வங்கி செயலாளர் அண்ணா மலை விசாரணை செய்தார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய 2,500 கிலோ அரிசி, 100 கிலோ பருப்பு ஆகியவை பொதுமக் களுக்கு வழங்காமல் அவர் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கூட்டுறவு சார்பதிவாளருக்கு கடிதம் எழுதினார்.

    அதன் அடிப்படையில் பொது மக்களுக்கு அரிசி பருப்பு வழங்காமல் விற்பனை செய்த சுரேஷ் குமாரை கடந்த 30-ந் தேதி முதல் தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட கூட்டுறவு சார்பதிவாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

    ×