search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல்துறை"

    • வயிற்று வலி எனக்கூறி சவுக்கு சங்கர் மயக்கமடைந்துள்ளார்.
    • சவுக்கு சங்கர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பெண் போலீசாரைப் பற்றி அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் நீலகிரி போலீசாரும் அவர் மீது வழக்கு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று முன்தினம் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்த போலீஸ் காவலுக்கு அனுமதி கேட்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் ஒருநாள் காவல் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தனர். அதன்படி சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று மாலை மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சென்னை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து வந்தனர்.

    இந்நிலையில், வயிற்று வலி எனக்கூறி சவுக்கு சங்கர் மயக்கமடைந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இன்று மதியம் 12.30 மணியளவில் சவுக்கு சங்கர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    சிகிச்சை முடிந்ததும் மீண்டும் காவல்துறை வேனில் ஏறுவதற்காக சவுக்கு சங்கர் வந்தார். அப்போது வேனில் இருந்தபடியே "என் கைதுக்கு உதயநிதிதான் காரணம், உதயநிதி உத்தரவின் பேரில், என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்கு போட்டு கைது செய்து வருகின்றனர்" என தெரிவித்தார்.

    • ஒவ்வொரு என் கவுண்டரின் போதும் இவ்வாறான காரணத்தை காவல்துறை தெரிவிப்பது வழக்கமானதாக இருக்கிறது.
    • அடுத்தடுத்து என்கவுண்டர்கள் என்பது சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்குவதாகும்.

    நீதிக்கு புறம்பான காவல்துறையினரின் மோதல் கொலைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் இன்று (17.07.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    அதன்படி முதல் தீர்மானத்தில் வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

    அத்துடன், 2வது தீர்மானத்தில் நீதிக்கு புறம்பான காவல்துறையினரின் மோதல் கொலைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி கண்டனம் தெரிவித்துளளது.

    இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவு தலைவர் ஆம்ஸ்ட்ராங் இம்மாதம் 5ந் தேதி சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    இக்கொலையில் சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகள் தப்பி விடாமல் உரிய தண்டனை பெற்றுத் தர தேவையான சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 11 பேரையும் தனது பொறுப்பில் எடுத்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

    இந்நிலையில் திருவேங்கடம் என்பவர் தப்பி ஓடியதாகவும், புழல் வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை வைத்து காவல்துறையினரை சுட முயற்சி செய்தபோது திருவேங்கடத்தை காவலர்கள் சுட்டுக் கொன்றதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு என் கவுண்டரின் போதும் இவ்வாறான காரணத்தை காவல்துறை தெரிவிப்பது வழக்கமானதாக இருக்கிறது.

    சமீபத்தில் புதுக்கோட்டையில் துரை என்கிற துரைசாமி என்ற குற்றவாளி என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு காவல்துறை சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது. மனித உயிரையும், மனித உரிமைகள் குறித்தும் கவலைப்படாமல் இப்படி அடுத்தடுத்து என்கவுண்டர்கள் என்பது சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்குவதாகும்.

    குற்றங்கள் நடைபெறுவதை தடுப்பதற்கு என் கவுண்டர்கள் தீர்வல்ல. புலன் விசாரணையை பலப்படுத்தவும், வழக்குகளை விரைந்து முடிப்பதும், சட்டத்தின் வழிமுறையில் நின்று குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அரசமைப்பு சட்டத்தின் வரையறை ஆகும்.

    மேலும், தேசிய மனித உரிமை ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகியவை கொடுத்துள்ள இதுதொடர்பான வழிகாட்டுதல்களை காவல்துறையினர் உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 7 பேர் பயணம் செய்த பைக்கின் பின்புறம் வந்தவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.
    • இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.

    உத்தரபிரதேச மாநிலத்தின் ஹாப்பூர் பகுதியில் ஒரே பைக்கில் 7 பேர் பயணம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.

    7 பேர் பயணம் செய்த பைக்கின் பின்புறம் வந்தவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில், ஹாப்பூர் போலீசார் பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்தவர்களுக்கு 9,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

    காவல்துறையினரின் இந்த நடவடிக்கைகளுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    கடந்தாண்டு இதே ஊரில் ஒரே பைக்கில் 7 பேர் பயணம் செய்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் 22,000 அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காவலர்களுக்கு இலவச பயணத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
    • போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படும்பட்சத்தில் அதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவல்துறை, போக்குவரத்து துறை இடையே நடைபெற்று வரும் பனிப்போரை தடுக்க தவிறய தமிழக அரசை கண்டிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காவல்துறை, போக்குவரத்து துறை இடையே நடைபெற்று வரும் பனிப்போரை தடுக்க தவிறய தமிழக அரசை கண்டிக்கிறேன்.

    சட்டப்பேரவை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவித்தபடி காவலர்களுக்கு இலவச பயணத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    இதனால் போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படும்பட்சத்தில் அதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திரைப்பட காமெடியில் வருவதை போல இரண்டு துறையில் எது பெரியது என அடித்து காட்டுங்கள் என்ற மனநிலையில் இரு துறைகளும் செயல்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பேருந்தில் ஏறிய காவலர் டிக்கெட் எடுக்கமுடியாது என ரகளையில் ஈடுபட்ட வீடியோ வைரலானது.
    • நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க மறுத்து ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமீபத்தில் வைரலானது. அதில், அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள்தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக விளக்கமளித்த போக்குவரத்துத்துறை, போலீசார் பேருந்தில் பயணிக்கையில் கட்டாயம் டிக்கெட் எடுக்கவேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத்துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது என தெரிவித்தது.

    இதற்கிடையே, சென்னையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

    இந்த நடவடிக்கையால் போலீசாருக்கும், போக்குவரத்துத் துறைக்கும் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று காலை செங்கல்பட்டு அருகே வாரண்ட் வைத்திருந்த போலீஸ்காரரிடம் டிக்கெட் எடுக்கும்படி கண்டக்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.

    இதேபோல், திருநெல்வேலியில் உள்ள வள்ளியூரில் போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் நாகர்கோவில் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற 3 டிரைவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தார். சீட் பெல்ட் அணியாதது, யூனிபார்ம் சரியாக அணியாதது தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம் சாட்டுவதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். காவல்துறைக்கும், போக்குவரத்துத்துறைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தொடருமா என்பது அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து தெரிய வரும்.

    • பிகார் தலைநகர் பாட்னாவில் தனியார் பள்ளியின் கழிவுநீர் கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சிசிடிவி காட்சிப்படி, பள்ளிக்கு உள்ளே சென்ற சிறுவன் மீண்டும் வெளியில் வரவே இல்லை.

    பிகார் தலைநகர் பாட்னாவில் தனியார் பள்ளியின் கழிவுநீர் கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை பள்ளி முடிந்து சிறுவன் வீட்டுக்கு வராத நிலையில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஊர் முழுவதும் தேடி வந்துள்ளனர்.

    இன்று காலை சிறுவன் படித்து வந்த தனியார் பள்ளிக்கு வந்த பெற்றோர்களுக்கு பள்ளியில் உள்ளவர்கள் மழுப்பலாக பதிலளித்து அவரைகளை உள்ளே விட மறுத்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.

    அப்போது பள்ளியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் சிறுவனின் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கும்பலைக் கட்டுப்படுத்தி பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முற்றக்கட்டமாக சிறுவன் பள்ளிக்குள் செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிப்படி, பள்ளிக்கு உள்ளே சென்ற சிறுவன் மீண்டும் வெளியில் வரவே இல்லை.

    எனவே சிறுவனைக் கொன்று சடலத்தை மறைத்து வைத்ததாக கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சிறுவனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு ரப்பர் டயர்களுக்கும் பள்ளியின் சுவர்களுக்கும்  தீ வைத்து போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

    • கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார் அவரது மனைவி மெஹர் ஜஹான்
    • சிசிடிவி காட்சிகளை காட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க மனைவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

    உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்திய அவரது மனைவி மெஹர் ஜஹானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கணவனுக்கு போதைப்பொருள் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பிறகு அவரை கட்டிப்போட்டு அவரது ஆண் உறுப்பை சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தி கொடுமைப் படுத்தியுள்ளார்.

    மனைவி தன்னை கட்டி வைத்து தாக்குவது சிகரெட்டால் சுடுவது போன்ற காட்சிகளை சிசிடிவி காட்சிகள் மூலம் கணவன் பதிவு செய்துள்ளார். இதனை ஆதாரமாக கொண்டு கடந்த 5-ம் தேதி காவல்நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.

    இதனையடுத்து, மெஹர் ஜஹான் மீது கொலை முயற்சி, சித்திரவதை செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

    • ஏன் சீட் பெல்ட் அணியவில்லை? காரில் ஏன் சன் ஸ்கிரின் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு அபராதம் விதிக்கின்றனர்.
    • போலீஸ் உயர் அதிகாரிகள் கண்காணித்து உரிய வழிகாட்டுதல்களை போக்குவரத்து போலீசாருக்கு வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியின் மாநில வருவாய் சுற்றுலா துறையை நம்பி உள்ளது.

    வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்தால் தான் வியாபாரம் அதிகரிக்கும். தங்கும் விடுதிகள், ரெஸ்டாரண்ட், மதுபான விற்பனை அனைத்தும் வெளிமாநில சுற்றுலா பயணிகளையே நம்பி உள்ளது.

    தற்போது கோடை விடுமுறையொட்டி, புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    அப்படி வரும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.

    குறிப்பாக சிக்னல்களில் நிற்கும் போக்குவரத்து போலீசார், சிக்னலை கடக்க வரும் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநில கார்களை உடனே நிறுத்தி விடுகின்றனர். அவர்களிடம், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் ஆவணங்களை கேட்கின்றனர்.

    அனைத்தும் இருந்தாலும் கூட, ஏன் சீட் பெல்ட் அணியவில்லை? காரில் ஏன் சன் ஸ்கிரின் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு அபராதம் விதிக்கின்றனர்.

    அதேபோன்று, கடலுார் சாலையில் மாநில எல்லையான முள்ளோடையில், வாகன சோதனை என்ற பெயரில் புதுச்சேரி போலீசார் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை மட்டும் நிறுத்தி சோதனை நடத்தி அபராதம் விதித்தும் வருகின்றனர்.

    போக்குவரத்து சட்டப்படி விதிமீறலில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிப்பது தவறில்லை.

    ஆனால், வெளி மாநில வாகனங்களை மட்டும் குறி வைத்து அபராதம் விதிப்பதும், அவர்களை விரட்டுவதும், புதுச்சேரி அரசு மீது அவப்பெயரை ஏற்படுத்தும்.

    சுற்றுலா பயணிகளின் வருகையும் குறையும். எனவே, போலீஸ் உயர் அதிகாரிகள் கண்காணித்து உரிய வழிகாட்டுதல்களை போக்குவரத்து போலீசா ருக்கு வழங்க வேண்டும் என வெளிமாநில சுற்றுலா பயணிகள் விரும்புகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசார் மடக்கி பிடித்து விசாரிக்கவே அது கடத்தப்பட்ட குழந்தை என்பது உறுதியானது.
    • குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற் கொண்டனர்.

    புதுச்சேரி லாஸ் பேட்டை நரிகுறவர் காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி விஜயலட்சுமி கடற்கரையில் பலூன் விற்கும் தொழில் செய்து வருகிறனர். இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை பகுதியில் விளையாடி கொண்டிருந்த அவர்களது மூன்றரை வயது குழந்தை திடீர் என்று மாயமானது. இது குறித்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது, இரண்டு பேர் குழந்தையை கடத்தி ஒரு பெண்ணிடம் கொடுத்து ஆட்டோவில் அனுப்பி வைத்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணையை தீவிர படுத்திய நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் குழந்தையுடன் ஒரு பெண்ணை கரைக்கால் சாணகரை பகுதியில் இறக்கி விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காரைக்கால் போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்திய போது பெண் ஒருவர் குழந்தையுடன் தப்பி செல்ல முயற்சித்துள்ளார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரிக்கவே அது கடத்தப்பட்ட குழந்தை என்பது உறுதியானது.

    இதனையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கடத்தல் தொடர்புடைய மேலும் இருவரை புதுச்சேரியில் கைது செய்தனர். பின்னர் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற் கொண்டனர். கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்திற்குள் மீட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை.
    • போலீசார் சிறுவனை தேடும் பணியை துவங்கினர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் போவை பகுதியில் உள்ள அசோக் நகரில் ஆறு வயது சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாட சென்றான். விளையாட சென்ற சிறுவன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்வில்லை. இதையடுத்து, பெற்றோர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

    உடனே காவல் நிலையம் விரைந்த பெற்றோர், தங்களின் மகன் காணாமல் போனது பற்றி புகார் அளித்தனர். காணாமல் போன சிறுவன் விளையாடி கொண்டிருந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை. இதன் காரணமாக போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சிறுவனை தேடும் பணியை துவங்கினர்.

    அதன்படி மோப்ப நாய் "லியோ" சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டது. முதலில் சிறுவன் அணிந்திருந்த டி-சர்ட் ஒன்றை மோப்பம் பிடித்த லியோ, பிறகு சிறுவன் விளையாடி கொண்டிருந்த மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டது. அங்கிருந்து தேடலை துவங்கிய லியோ மைதானத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவிலேயே சிறுவனை கண்டுபிடித்து அசத்தியது.

    மோப்ப நாய் தேடுதல் வேட்டையில் இறங்கிய மூன்றரை மணி நேரத்தில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான். அதிநவீன தொழில்நுட்ப உதவிகள் இல்லாத பட்சத்தில் போலீசார் தங்களுக்கே உரிய பாணியில் தேடுதல் வேட்டையை நடத்தியதோடு, சில மணி நேரங்களில் சிறுவனை காப்பாற்றிய சம்பவம் பொது மக்களிடையே வரவேற்பை பெற்றது. 

    • கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பட்டாசுகள் வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க பட்டாசுகள் வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தீபாவளி தினத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர தடை செய்யப்பட்ட, ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி சென்னையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    நேற்றிரவு முதல் தற்போது வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க சென்னை காவல் துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    • கனரக வாகன போக்குவரத்தை பஜார் வீதியில் கட்டுப்படுத்த வேண்டும்.
    • வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடையே கலந்தாலோசனை காவல்துறை சார்பில் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில்காவல் நிலையத்தில் நடைபெற்றது.

    இதில் சமீப காலங்களாக சைபர் கிரைம் குற்றங்கள் பெருமளவில் நடைபெற்று வருவதால் குறிப்பாக அலைபேசியில் 91140என்ற எண்ணில் துவங்கி நமக்கு அழைப்பு வந்தால் அதனை நாம் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் இதனால் நமது வங்கிக் கணக்குகளில் உள்ள பணங்கள் திருடப்படுவதாகவும் பல குற்றச்சாட்டுகள் காவல் நிலையத்திற்கு வருவதால் வியாபாரிகளும் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் பட்டாசு லைசென்ஸ் இல்லாத கடைகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் , கஞ்சா விற்பனை செய்தல் குறித்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டினால் காவல் நிலையம் மற்றும் செல்போனிற்கு தகவல் கொடுத்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை நடைபெற்றது.

    பின்னர் வியாபாரிகள் தெரிவித்ததாவது பண்டிகை காலங்களில் மீஞ்சூர் பஜார் வீதியில் பொதுமக்கள்கூட்டம் அதிகம் காணப்படுவதால் காலை மாலை இரவு நேரங்களில் பஜார் வீதியில் போலீசின் கண்காணிப்பு ரோந்து பணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கனரக வாகன போக்குவரத்தை பஜார் வீதியில் கட்டுப்படுத்த வேண்டும்.

    மீஞ்சூர்ரயில் நிலையத்திற்கு அருகில் அரியன் வாயல் பகுதியில் உள்ள பேருந்து மற்றும் ஆட்டோ நிறுத்துமிடங்களை அரியன் வாயில் அரசு பள்ளிக்கூடத்திற்கு எதிரில் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் இதனால் ரெயில் பயணிகள் மாணவ மாணவியர்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பயணிக்க இயலும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    மேலும் வியாபாரிகள் அனைவரும் தங்கள் கடைகளில் வெளிப்புறத்தையும் இணைக்கும் விதமாக கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மீஞ்சூர் பஜார் வீதியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவலர்கள் அமர்ந்து ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டத்தில்முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆய்வாளர் காளிராஜ் தெரிவித்தார் இந்த கூட்டத்தில் மீஞ்சூர் அத்திப்பட்டு கவுண்டர்பாளையம் பட்ட மந்திரி நந்தியம்பாக்கம் ரமணா நகர் நாலூர் கேசவபுரம் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கிரைம் ஆய்வாளர் சுதாகர், மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் ஷேக் அகமது துணைத் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×