search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி 7 மாநாடு"

    • ஜி7 மாநாட்டின் முதல் பகுதியான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
    • பிரதமர் மோடி 3-வது முறை ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

    புதுடெல்லி:

    அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கி லாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு ஜி7 ஆகும்.

    ஜி7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு இன்று முதல் 15-ந்தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார்.

    இந்நிலையில், இத்தாலி பிரதமரின் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி புறப்பட்டுச் சென்றார். 

    தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

    ஜி7 மாநாட்டின் முதல் பகுதியான உச்சி மாநாட்டில் மட்டும் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். மாநாட்டின் மற்றொரு பகுதியாக சுவிட்சர்லாந்து அழைப்பு விடுத்துள்ள உக்ரைன் அமைதி மாநாட்டில் பிரதமர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இது ரஷியாவிற்கு எதிரானது என கருதப்படுவதால் பிரதமர் இதில் பங்கேற்பதை தவிர்ப்பதாக கூறப்படுகிறது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் ஜி7 மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

    ஜி7 மாநாட்டில் உரையாற்றுவதுடன் ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்படி அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்துப் பேசுகிறார். இதேபோல இத்தாலி, கனடா பிரதமருடனும் அவர் பேசுகிறார்.

    பிரதமர் மோடி இத்தாலி பயணத்தை முடித்துக்கொண்டு நாளையே நாடு திரும்புகிறார்.

    பிரதமரின் இத்தாலி பயணம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் வினய் குவாத்ரா கூறுகையில், ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பது கடந்த ஆண்டு இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவுகளை பின் தொடர்வதற்கான வாய்ப்புகளை வழங்கும். ஜி7 மாநாட்டில் இந்தியா தொடர்ந்து பங்கேற்பது உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இந்தியாவின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதை சுட்டிக்காட்டுகிறது.

    உக்ரைன் மோதலை தீர்க்க பேச்சுவார்த்தைதான் சிறந்த வழி என்பதை நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம். சுவிட்சர்லாந்தில் நடை பெறும் உக்ரைன் அமைதி மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என தெரிவித்தார்.

    ஆனால் அமைதி மாநாட்டில் இந்தியா சார்பில் யார் கலந்து கொள்வார்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

    • ஜி7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடக்கிறது.
    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மேக்ரான் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

    ரோம்:

    அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு ஜி7 ஆகும்.

    ஜி7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு இன்று முதல் 15-ம் தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி புறப்பட்டுச் செல்கிறார்.

    அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் ஜி7 மாநாட்டில் பங்கேற்கின்றனர். ஜி7 மாநாட்டில் உரையாற்றுவதுடன் ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

    இந்நிலையில், ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி வந்தடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.

    இதேபோல், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி அதிபர் ஆகியோரையும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.

    • ஜி7 மாநாடு ஜெர்மனியில் நேற்று தொடங்கியது.
    • இதில் பங்கேற்ற பிரதமர் மோடி உலக தலைவர்களை சந்தித்தார்.

    பெர்லின்:

    அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பின் மாநாடு நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாநாடு ஜெர்மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது.

    இதற்கிடையே, ஜி-7 மாநாடு நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கால்ஸ் கைகுலுக்கி வரவேற்றார்.

    மேலும், மாநாட்டில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோரும் பிரதமர் மோடியிடம் கைகுலுக்கி மகிழ்ந்தனர்.

    இதையடுத்து, உலக தலைவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • ஜி-7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார்.
    • ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    பெர்லின்:

    அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு தொடங்கியது.

    இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார்.

    மாநாட்டில் பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தது. அதில் உக்ரைன்-ரஷியா போர் முக்கிய இடம் பிடித்தது. ஜி 7 நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தனர்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஜி-7 மாநாட்டில் காணொலி வாயிலாக இன்று கலந்துகொண்டார்.அப்போது அவர் பேசுகையில், குளிர் காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

    ஜி7 மாநாட்டில் பேசிய உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி குலேபா கூறுகையில், ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும். உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் அளிக்க வேண்டும். ரஷியாவின் ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    ×