என் மலர்
நீங்கள் தேடியது "கே பாலகிருஷ்ணன்"
- கவர்னர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மார்க்சையும், மார்க்சியத்தையும் சாடியிருக்கிறார்.
- மார்க்சிய சித்தாந்தத்தை விமர்சிப்பதன் மூலம் ஆளுநர் ரவி தான் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்ட் என்பதையே வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்து மாநில உருவாக்கத்தை கடித்து, மாநிலத்தின் பெயரைக் கடித்து, அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் கடித்து, இப்போது மார்க்சையும், டார்வினையும் கடிக்க ஆரம்பித்திருக்கிறார். செக்கு என்றும், சிவன் என்றும் தெரியாமல் நடந்து கொள்வதைப் போல கவர்னர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மார்க்சையும், மார்க்சியத்தையும் சாடியிருக்கிறார்.
அறிவில் அந்நிய அறிவு, உள்ளூர் அறிவு என்றும் கிடையாது. சொல்லப்போனால் ஆர்.என்.ரவியின் ஞான பீடம் ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே நாடு என்கிற உதவாக்கரை தத்துவத்தையும், சாகாவையும் பாசிஸ்ட் முசோலினியிடமிருந்தும், கொடி வணக்கம், மார்பில் கை வைத்து வணங்கும் முறை, சுவஸ்திக் ஆகியவற்றை ஹிட்லிரிடமிருந்தும் கடன்பெற்றுக் கொண்ட அமைப்பு.
இன அழிப்புக் கொள்கைக்கு ஹிட்லரை முன்னோடியாக கொள்ள வேண்டும் என்று ஜெர்மன் நாஜியை குருவாக ஏற்றுக் கொண்ட அமைப்பு. தத்துவம், நடைமுறை என அனைத்தையும் ஐரோப்பாவிலிருந்து கடன் வாங்கிக் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்த ஆர்.என்.ரவி மார்க்சியத்தை அந்நிய தத்துவம் என்று பேசுவது அவரது அறியாமையையே காட்டுகிறது.
மனிதகுல வரலாற்றில் ஆளும் வர்க்கத்தின் சுரண்டல், ஒடுக்குமுறை கொடுமைகளிலிருந்து உழைப்பாளி வர்க்கத்தை மீட்டு சுரண்டலற்ற பொதுவுடமை சமூகத்தை அமைக்க வழிவகுக்கும் மார்க்சிய சித்தாந்தத்தை விமர்சிப்பதன் மூலம் ஆளுநர் ரவி தான் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்ட் என்பதையே வெளிப்படுத்தியுள்ளார். மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது என்று பேசுகிறார்.
பெருநோய்களை சிதைக்கும் தடுப்பு மருந்துகளை தவறானது என்று யாரும் பேச மாட்டார்கள். உலகத்தை அதன் அனைத்து விதமான கோரங்களிலிருந்தும் மீட்டெடுத்து அனைவருக்குமான பூமியாக மாற்றுவதே மார்க்சியத்தின் நோக்கம். அது சிதைக்கும் தத்துவமல்ல. அது செதுக்கும் தத்துவம். அறிவுச் சிதைவு ஏற்பட்டவர் மட்டுமே அதை சிதைக்கும் தத்துவமாக கருதுபவர்கள்.
ஆர்.என்.ரவி அரசு அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு அடாவடித்தனமாகவும், பொருத்தமற்ற முறையிலும் பேசுவதை கண்டித்தும், மார்க்சியம் குறித்து அவதூறாக பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தியும் அவர் செல்லுமிடம் எல்லாம் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிப்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.
இதன் தொடக்கமாக 2023 பிப்ரவரி 28 அன்று கவர்னர் மாளிகை முன்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புகளும், ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும் கலந்துகொண்டு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கட்சியை மக்கள் அருவெறுப்போடு பார்க்கிறார்கள்.
- முதலில் அவரது கட்சி நிலைமையை பார்த்து விட்டு மற்ற கட்சியை பற்றி விமர்சிக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
தி.மு.க.வை மக்கள் வெறுப்பதாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறுவது வேடிக்கையானது. இந்தியாவே வெறுக்கும் கட்சி பா.ஜனதா. அந்த கட்சியை மக்கள் அருவெறுப்போடு பார்க்கிறார்கள்.
அருவெறுப்பான கட்சியின் தலைவராக இருக்கும் அண்ணாமலை தி.மு.க.வை மக்கள் வெறுப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. முதலில் அவரது கட்சி நிலைமையை பார்த்து விட்டு மற்ற கட்சியை பற்றி விமர்சிக்க வேண்டும்.
- பா.ஜ.க, அ.தி.மு.க எவ்வளவு பிரசாரம் செய்தாலும் எடுபடாது.
- எல்லா கட்சிகளையும் போல கூடுதலான தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளது.
கோவை:
கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பா.ஜ.க., அ.தி.மு.க கட்சிகளை வீழ்த்துவதற்காக தி.மு.க. கூட்டணியில் உள்ளோம். அ.தி.மு.க., பா.ஜ.கவின் பி டீமாக செயல்படுகிறது.
இந்த பாராளுமன்ற தேர்தலில் கடந்த அளவு கிடைத்த வெற்றி கூட இந்த முறை அ.தி.மு.க.வால் பெற முடியாது.
சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பது போல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். முத்தலாக், சிஏஏ, காஷ்மீர் பிரிவினை போன்றவை கொண்டு வரப்பட்டபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்து விட்டு, தற்போது சிறுபான்மை மக்களின் காவலன் என அ.தி.மு.க. ஏமாற்ற பார்க்கின்றது.
அதனை எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றால் மறந்திருக்கலாம். சிறுபான்மை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். பா.ஜ.க, அ.தி.மு.க எவ்வளவு பிரசாரம் செய்தாலும் எடுபடாது.
கோவை, மதுரை ஆகிய இரு தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்றோம். அதேபோன்று வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் இந்த 2 தொகுதிகளையும் வலியுறுத்தி கேட்டு பெறுவோம். மதுரை, கோவை பாராளுமன்ற தொகுதிகளை கண்டிப்பாக கேட்போம்.
எல்லா கட்சிகளையும் போல கூடுதலான தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளது. கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கூடுதல் தொகுதிகள் கேட்போம். தொகுதி பங்கீட்டில் பிரச்சனை ஏற்படும் என நினைக்கின்றனர். ஆனால் தொகுதி உடன்பாடு சுமூகமாக நடைபெறும்.
உண்மைக்கு மாறான விஷயங்களை மோடி தொடங்கி அண்ணாமலை வரை பேசுகின்றனர். அண்ணாமலை மூளைக்கு எதுவும் தெரியாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் காவிரி டெல்டா பகுதி என்பது பற்றி ஞானமே இல்லை.
அண்ணாமலை ஞானசூனியமாக இருக்கின்றார். தமிழக வளர்ச்சிக்கு யார் அதிகம் இருந்திருக்கின்றனர், கம்யூனிஸ்டுகளா, பா.ஜ.க.வா என பகிரங்கமாக விவாதிக்க தயார்.
தமிழக அரசு மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள தொழில்கள் வேறு பல மாநிலங்களுக்கு இடம் மாறும் நிலை இருக்கிறது.
சிறுகுறு தொழில்முனைவோரிடம் பேச்சு நடத்தி தொழில் கடன்கள் வழங்கி அவர்கள் தொழில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் மீது குண்டர் சட்டம் போடக்கூடாது என்பதை உடனே வலியுறுத்தினோம். தி.மு.க. கொடுத்து இருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
போக்குவரத்து ஊழியர் சம்பள விவகாரம், பழைய ஓய்வூதியம் போன்றவை நிறைவேற்றப்பட வேண்டும். தொழில் துறையினருக்கு மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்
- இந்தியா கூட்டணியில் பிரச்சினையே இல்லை என்று சொல்லவில்லை.
- கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும்போது எங்கள் கருத்தை தெரிவிப்போம்.
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் கூடுதல் சீட் கேட்க முடிவு செய்துள்ளது.
இதுபற்றி அந்த கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
இந்தியா கூட்டணியில் பிரச்சினையே இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் தேர்தல் நெருங்க நெருங்க எல்லோரும் ஒன்றுபட்டு பா.ஜனதாவை வீழ்த்துவோம். எல்லா கட்சிகளுக்கும் கூடுதல் சீட்டுக்கான எதிர்பார்ப்பு இருக்கிறது. கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும்போது எங்கள் கருத்தை தெரிவிப்போம். கண்டிப்பாக கூடுதல் தொகுதிகளை தி.மு.க. தலைமையிடம் கேட்போம். தேர்தலில் தி.மு.க. எந்த நிதியும் எங்களுக்கு தந்தது கிடையாது. நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தி.மு.க. வினரின் செலவுக்கு தேவைப்படும் நிதியை வாங்கி தி.மு.க.வினரிடமே கொடுத்து விட்டோம். இந்த முறையும் அப்படித்தான். அவர்களிடம் நிதி வாங்கி நாங்கள் தேர்தல் செலவுக்கு பயன்படுத்த மாட்டோம் என்றார்.
- தமிழ்நாட்டில் இருந்து ஆதினம் செங்கோலை மோடியிடம் கொடுத்தது குறிப்பிடதக்கது.
- பா.ஜ.க, அ.தி.மு.க-வை தோற்கடித்து தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவேண்டும்.
தருமபுரி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் தயாரிப்பு பேரவை கூட்டம் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்ததலைவர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்திற்கு பின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னணி ஊழியர்கள் வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. பா.ஜ.க-வின் தலைவர் அண்ணாமலை பேசும் போது அரசியல் அநாகரிகமாக பேசக்கூடாது.
அவர் குறிப்பாக தி.மு.க கூட்டணி கட்சியினரை தரம் தாழ்த்தி பேசிவருகிறார். தமிழகத்தில் பா.ஜ.க 40 தொகுதிகளிலும் தோற்பது, தேர்தலுக்கு முன்னரே உறுதியாகிவிட்டது. மேலும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வை டெபாசிட் இழக்க வைப்போம்.
மேலும் அவர்கள் ஆபாச படத்தை வெளியிடுவதாக கூறி தருமபுரம் ஆதினத்தை மிரட்டுகின்றனர். போலீசார் விசாரணையில், அவரை மிரட்டுவதே பா.ஜ.க கட்சியினர் என தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆதினம் செங்கோலை மோடியிடம் கொடுத்தது குறிப்பிடதக்கது. அவருக்கே அந்த நிலை என்றால் மக்கள் யோசித்து பார்க்க வேண்டும்.
பா.ஜ.க ,அ.தி.மு.க-வை தோற்கடித்து தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவேண்டும். சாதிய கூட்டணியை தோற்கடிக்க கிராமங்கள் தோறும் சென்று பிரச்சாரம் செய்யவேண்டும்.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து 2 சீட் கொடுத்துள்ளனர். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் எந்த தொகுதி என்பது முடிவாகும், தி.மு.க கூட்டணி தேர்தல் கால கூட்டணி அல்ல, மதச்சார்பின்மையை பாதுகாக்க, உருவான கொள்கை கூட்டணி.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மத்திய அரசு நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு அதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
- பழனியில் நீதிமன்ற உத்தரவுப்படி 500க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டுள்ளன.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இன்று மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மேற்குவங்க மாநிலத்தில் 2 ரெயில்கள் மோதியதில் 9 பேர் பலியாகி பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற பல்வேறு ரெயில் விபத்துகள் நாட்டில் நடந்துள்ளன. இதற்கு மத்திய அரசின் தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியப்போக்கே காரணம். விபத்து நடந்த பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதாக கூறுகின்றனர். பல்வேறு நவீன வசதிகள் வந்துவிட்ட போதிலும் விபத்துகளை தவிர்க்க இந்தியாவில் அதுபோன்ற எந்த வசதியையும் மத்திய அரசு செய்யவில்லை.
நீட் தேர்வு வேண்டாம் என்று முதன்முதலில் தமிழகம் குரல் கொடுத்த நிலையில் தற்போது குஜராத், கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களும் அந்த மனநிலைக்கு வந்துவிட்டன. நீட் தேர்வில் ஏற்படும் குளறுபடி, முறைகேடு ஆகியவை மாணவர்களின் வாழ்க்கை யோடு, எதிர்காலத்தோடு விளையாடுவதாக உள்ளது. எனவே மத்திய அரசு நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு அதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
நெல்லையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடிக்கு பாதுகாப்பு அளித்ததற்காக கட்சி அலுவலகம் போலீசார் முன்னிலையிலேயே தாக்கப்பட்டது. அங்கிருந்த கம்யூனிஸ்ட்டு தொண்டர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். எனவே தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகு றித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். உச்சநீதிமன்றமே அறிவுறுத்திய பிறகும் ஆணவ கொலைகள் தொடர்வது கவலையளிக்கிறது. எனவே இதற்கு எதிராக தமிழக சட்டப்பே ரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து சட்டம் இயற்ற வலியுறுத்த உள்ளோம்.
மேட்டூர் அணையிலிருந்து இந்த முறை ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு காவிரியில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் கர்நாடகா அரசுடன் இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அதேபோல் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்காச்சோள பயிர்கள் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதுடன் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி பின்னர் அதிலிருந்து ஜகா வாங்கிவிட்டார். போட்டியிட்டால் கண்டிப்பாக தோல்வி உறுதி என்பதால் புறக்கணித்துவிட்டு வேறு காரணங்களை கூறி வருகிறார்.
பழனியில் நீதிமன்ற உத்தரவுப்படி 500க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசும், பழனி தேவஸ்தானமும் நீதிமன்ற உத்தரவுகளை காரணம் காட்டாமல் அந்த வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரே நாடு ஒரே தேர்தலால் மாநில சுயாட்சி பறிக்கப்படும்.
- திமுக கூட்டணி அதிமுக கூட்டணி போல் அடிமை கூட்டணி இல்லை.
மதுரை:
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் 2025-ம் ஆண்டு ஏப்ரல் 2 முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் மோசமான நடவடிக்கைகளை எதிர்த்து நாடு தழுவிய கண்டன இயக்கத்தை ஒரு வாரம் நடத்த உள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தலால் மாநில சுயாட்சி பறிக்கப்படும்; கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படும்.
கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிந்த பின்பும் மத்திய அரசு இன்னும் புதிய கவர்னரை நியமிக்கவில்லை; மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் நபரை மத்திய அரசு கவர்னராக நியமிக்க வேண்டும். சிபிஎம்ஐ பொறுத்தவரை கவர்னர் பதவி தேவை இல்லை. தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
திமுக கூட்டணி அதிமுக கூட்டணி போல் அடிமை கூட்டணி இல்லை. அதிமுக பாஜக கூட்டணியின்போது தமிழ்நாட்டின் உரிமைகளை எடப்பாடி பழனிசாமி காவு கொடுத்தார். எடப்பாடி பழனிசாமி கூறுவது போல திமுக கூட்டணியில் குழப்பம் எதுவுமில்லை, கோரிக்கையை நிறைவேற்ற சொல்வதில் என்ன குழப்பம். மத்திய அரசை எதிர்த்து உறுதியாக போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 'அரசுப் பள்ளிகள் தனியாரால் தத்தெடுப்பு’ என வெளியிட்ட அறிக்கை குறித்து தகவல்.
- நான் அந்த செய்தியை அடிப்படையாக வைத்து தான் அறிக்கை வெளியிட்டேன்.
'அரசுப் பள்ளிகள் தனியாரால் தத்தெடுப்பு' என வெளியிட்ட அறிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-
பத்திரிக்கையில் வரக்கூடிய செய்தியை அடிப்படையாக வைத்துதான் அறிக்கையோ அல்லது பதிலோ வழங்கவேண்டி இருக்கிறது.
அந்த செய்தியில், அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்கிறார்கள் என தகவல் கிடைக்கிறது. அவ்வாறு யார் செய்தி போட்டார்களோ அவர்களை தான் கேட்க வேண்டும்.
நான் அந்த செய்தியை அடிப்படையாக வைத்து தான் அறிக்கை வெளியிட்டேன்.
இதுபோன்ற செய்தி வந்தவுடன் தமிழக அரசு அல்லது அமைச்சர் மறுப்பு தெரிவித்திருந்தால் நாங்கள் எதுவும் கூறப்போவதில்லை. அரசு, செய்தியை மறுக்காததால் எங்களுக்கு வேறு வழி இல்லை.
இன்றைக்கு தமிழக அரசு அவ்வாறு செய்யும் முடிவு இல்லை என கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், அவ்வாறு செய்தி வந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மார்க்சிஸ்ட் கட்சி என்பது யாரோ ஒருவருக்கு சொந்தமான கட்சி அல்ல.
- சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா?
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 24-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தலைமை வகித்தார்.
இந்த பொதுக் கூட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் தொழிற்சங்க பிரிவு செளந்தரராஜன், மதுரை எம்.பி வெங்கடேசன், வாசுகி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பேசிய கே.பாலகிருஷ்ணன், பா.ஜ.க. மற்றும் பா.ம.க. குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். மேலும் தாங்கள் கூட்டணி அமைத்துள்ள ஆளுங்கட்சியான தி.மு.க.-வையும் அவர் தாக்கி பேசினார். அவர் பேசியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்காக கொதிக்கும் அண்ணாமலை, அ.தி.மு.க. ஆட்சியின் போது பொள்ளாச்சியில் பெண்களுக்கு வன்கொடுமை நடந்ததே அப்போது அமெரிக்காவுக்கு படிக்கப் போயிருந்தாரா?. அ.தி.மு.க.-வோடு கூட்டணி பேசிக்கொண்டிருந்தார். அன்றைக்கு ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கோரவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி உங்களுக்கு கவலையில்லை, அரசியல் தான் முக்கியமாக இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க.-வின் முயற்சிகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.-வின் முயற்சி தமிழகத்தில் ஒருபோதும் வெற்றி பெறாது.
ஒரு கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்த போது அந்த கட்சியின் நிறுவனர், இது நான் உருவாக்கிய கட்சி. இங்கே நான் சொல்வதை தான் எல்லோரும் கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை என்றால் அவர்கள் இந்த அரங்கத்தை விட்டு வெளியே போய்விடலாம் என்று பேசுகிறார். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி என்பது யாரோ ஒருவருக்கு சொந்தமான கட்சி அல்ல. லட்சக்கணக்கான உழைப்பாளர்கள் தங்கள் உதிரத்தை சிந்தி வளர்த்திருக்கிற கட்சி.
ஆளும் தி.மு.க. உடன் கூட்டணி வைத்துள்ளோம் என்ற அடிப்படையில் பா.ஜ.க., பா.ம.க.-வை கே.பாலகிருஷ்ணன் விமர்சித்தார் என்று பார்த்தால், முதலமைச்சரையும் கேள்வி எழுப்பினார்.
ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் யார் அந்த சார் என்று எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனும் கேள்வியை முன்வைக்க, தற்போது மற்றொரு கூட்டணி கட்சியான சி.பி.எம். கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் முதலமைச்சரை கேள்வி கணைககளால் துளைத்திருப்பது தி.மு.க. கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திமுக ஆட்சியில் எவ்வளவோ போராட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- போராட்டம் நடத்துபவர்களை ரிமாண்ட் செய்யும் சூழ்நிலை கூட ஏற்படுவதில்லை.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியால் சில நாட்களாக தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சால் தி.மு.க. கூட்டணியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 24-வது மாநில மாநாடு பேசிய கே. பாலகிருஷ்ணன், ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தி.மு.க. அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
நேற்றுவரை ஆட்சியை பாராட்டியவர் பாலகிருஷ்ணன். அவருக்கு என்ன நெருடல் என புரியவில்லை. அவர் எந்த கண்ணோட்டத்தில் பேசுகிறார் என்பதும் தெரியவில்லை. குற்றம்சாட்ட வேண்டுமென்ற நோக்கில் குறைசொன்னால் அதற்கெல்லாம் பதில் தர முடியாது. பாலகிருஷ்ணனின் கோரிக்கைகள் என்னவென்று அறிந்து நிவர்த்தி செய்வோம். திமுக ஆட்சியில் எவ்வளவோ போராட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின்போது மக்கள் பாதிக்கக்கூடாது என்பதே அரசின் நோக்கம்.
அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்தது கடந்த ஆட்சிக்காலம். போராட்டம் நடத்துபவர்களை ரிமாண்ட் செய்யும் சூழ்நிலை கூட ஏற்படுவதில்லை என்று கூறினார்.
- முதல்வரை எப்போதும் சீண்டி பார்க்க வேண்டும் என்ற நெருக்கடி கே.பாலகிருஷ்ணனுக்கு இருக்கலாம்.
- பல்லாண்டு அனுபவம் கொண்ட தோழர் உணராமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 24-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தி.மு.க. அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், நேற்றுவரை ஆட்சியை பாராட்டியவர் பாலகிருஷ்ணன். அவருக்கு என்ன நெருடல் என புரியவில்லை. அவர் எந்த கண்ணோட்டத்தில் பேசுகிறார் என்பதும் தெரியவில்லை. குற்றம்சாட்ட வேண்டுமென்ற நோக்கில் குறைசொன்னால் அதற்கெல்லாம் பதில் தர முடியாது.
பாலகிருஷ்ணனின் கோரிக்கைகள் என்னவென்று அறிந்து நிவர்த்தி செய்வோம். திமுக ஆட்சியில் எவ்வளவோ போராட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின்போது மக்கள் பாதிக்கக்கூடாது என்பதே அரசின் நோக்கம். அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்தது கடந்த ஆட்சிக்காலம். போராட்டம் நடத்துபவர்களை ரிமாண்ட் செய்யும் சூழ்நிலை கூட ஏற்படுவதில்லை என்று கூறினார்.
இந்த நிலையில், கே.பாலகிருஷ்ணன் பேச்சு தோழமைக்கான இலக்கணம் அல்ல என்று தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் கூறியருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கியிருக்கிறார் கே.பாலகிருஷ்ணன். போராட்டங்களை நடத்திவிட்டு அனுமதி அளிக்கவில்லை என கூறுவது அரசியல் அறமல்ல. பாலகிருஷ்ணனின் பேச்சு கூட்டணி அறமல்ல, மனசாட்சிக்கு அறமும் இல்ல.
அவசர நிலை என்றால் என்ன என்றே தெரியாத நிலையிலா இருக்கிறார் பாலகிருஷ்ணன். பின்விளைவுகளை பற்றி கவலைபடாமல் பேசுவது தோழமைக்கான இலக்கணம் அல்ல. குழப்பம் ஏற்படுத்துபவர்களுக்கு வக்கீலாக மாற வேண்டியது ஏன்? பாலகிருஷ்ணன் 6 நாட்களுக்கு முன் அவர் எழுதிய அறிக்கையை படிக்க வேண்டும்.
முதல்வரை எப்போதும் தொடர்பு கொள்ளும் நிலையில் இருக்கிறார் கே.பாலகிருஷ்ணன். எதற்காக வீதியில் நின்று கொண்டு இப்படி கேட்க வேண்டும். முதல்வரை எப்போதும் சீண்டி பார்க்க வேண்டும் என்ற நெருக்கடி கே.பாலகிருஷ்ணனுக்கு இருக்கலாம்.
விழுப்புரம் மாநாட்டில் பாலகிருஷ்ணன் வெளிச்ச விதைகளை விதைக்கவில்லை. பல்லாண்டு அனுபவம் கொண்ட தோழர் உணராமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
- மாநில மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.
- கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பதவியில் இருந்து விலக கே.பாலகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதனால், தன்னை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
விழுப்புரத்தில் கட்சியின் மாநில மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் கட்சியில் எந்த பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
அதன்படி, விழுப்புரம் மாநில மாநாட்டில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.