என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் கட்டணம்"

    • புதிய நடைமுறைப்படி வரும் 19ம் தேதி முதல், 2,000 ரூபாய் வரையிலான கட்டணத்தை, வசூல் மையத்தில் செலுத்தலாம்.
    • மின்நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

    திருப்பூர் :

    மின் கட்டண உயர்வு அமலான நிலையில், இரண்டாயிரம் ரூபாய்க்கு அதிகமான பரிவர்த்தனையை, 'ஆன்லைன...வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டுமென, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    புதிய நடைமுறைப்படி வரும் 19ம் தேதி முதல், 2,000 ரூபாய் வரையிலான கட்டணத்தை, வசூல் மையத்தில் செலுத்தலாம். அதற்கு அதிகமான தொகையை, ரொக்கமாக செலுத்த முடியாது.ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

    • குண்டடம் மற்றும் ருத்ராவதி ஆகிய பகுதிகளில் நிா்வாக காரணங்களுக்காக மின் அளவீடு மேற்கொள்ள முடியவில்லை.
    • கணக்கீட்டுப் பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை அக்டோபா் மாதத்துக்கும் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாராபுரம்:

    தாராபுரம் கோட்டம், குண்டடம் மற்றும் ருத்ராவதி பகுதி மக்கள் கடந்த ஆகஸ்ட் மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.காா்த்திகேயன் (பொறுப்பு) விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

    தாராபுரம் கோட்டம், வடக்கு குண்டடம் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட குண்டடம் மற்றும் ருத்ராவதி ஆகிய பகுதிகளில் நிா்வாக காரணங்களுக்காக மின் அளவீடு மேற்கொள்ள முடியவில்லை.எனவே, இப்பகுதி மின் நுகா்வோா் கடந்த ஆகஸ்ட் மாதம் கணக்கீட்டுப் பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை அக்டோபா் மாதத்துக்கும் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நெசவு தொழிலில் அடுத்து வரக்கூடிய பெரிய மாற்றங்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
    • சிறு அளவில் தொழில் செய்து வருவதால் எங்களுக்கு சங்கம், அமைப்புகள் இல்லை.

    திருப்பூர்:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவை, திருப்பூரை சேர்ந்த பெரிய தொழிலதிபர்கள், தொழில்துறை சங்கத்தினர், விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என அமைச்சர், அரசு அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர்.ஆனாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. எவ்வித கட்டண குறைப்பும் இல்லாமல் புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்தது. தற்போது மின் கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது. புதிய மின் கட்டணத்தை பார்த்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்டணத்தை செலுத்த முடியாமல் தவியாய் தவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து சிறு, குறு தொழில் முனைவோர் கூறியதாவது:-

    பெரிய நிறுவனங்கள் தாங்கள் சார்ந்துள்ள அமைப்புகளுடன் சேர்ந்து போராடி அரசிடம் சலுகைகளை பெற்றுக் கொள்கின்றனர். ஆனால், 'ஜாப் ஒர்க்' மற்றும் கூலி அடிப்படையில் வேலை செய்யும் சிறு நிறுவனங்கள் குறைவாக உள்ளன. ஆனால் இவற்றை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. சிறு அளவில் தொழில் செய்து வருவதால் எங்களுக்கு சங்கம், அமைப்புகள் இல்லை.

    மின் கட்டண உயர்வால் ஜாப் ஒர்க் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் காணாமல் போகும் அபாயம் உள்ளது. அனைத்து தரப்பு தொழில்துறையினரையும் அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பாரதிய கைத்தறி சங்க மாநில தலைவர் ஸ்ரீபாபுலால் பேசுகையில், ''பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து வரும், 15 ஆண்டுகளில் கைத்தறி துணிகளின் தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நெசவுத்தொழில் வளர்ச்சி பெறும் வகையில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் தேவை. நெசவு தொழிலில் அடுத்து வரக்கூடிய பெரிய மாற்றங்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

    • முகமது பாத்து அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகிறார்.
    • வீட்டில் 2 அறைகளும், 2 பல்புகளும் தான் இருக்கிறது.

    வள்ளியூர் :

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது பாத்து (வயது40). இவர் தனது தந்தை உதுமான் கனியுடன் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது பாத்து செல்போனுக்கு மின்வாரியத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் 2 மாதத்திற்கான மின்கட்டண தொகை 91 ஆயிரத்து 139 ரூபாய் என்றும், இதற்கு வருகிற 5-ந்தேதி கடைசி நாள் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த முகமது பாத்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.

    இதுகுறித்து அவர் நாங்குநேரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று முறையிட்டார். அப்போது, வழக்கமாக எனது வீட்டிற்கு ரூ.65 மட்டுமே மின்கட்டணம் வரும். வீட்டில் 2 அறைகளும், 2 பல்புகளும் தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது ரூ.91 ஆயிரத்து 139 மின்கட்டணம் எப்படி வரும் என்று அதிகாரிகளிடம் புலம்பி தீர்த்தார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம். 2 நாட்களில் உண்மையான கட்டண ரசீது வந்துவிடும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறி சமாதானப்படுத்தி முகமது பாத்துவை அனுப்பி வைத்தனர்.

    நேற்று முன்தினம் மின்வாரியம் சார்பில் முகமது பாத்து செல்போன் எண்ணுக்கு புதிய கட்டணம் குறித்து குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அதில் மின்கட்டணம் ரூ.122 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த பின்னரே அதிர்ச்சியில் இருந்து முகமது பாத்து மீண்டுள்ளார்.

    • மின்வாரியத்திலிருந்து குறுந்தகவல்களோ, போன் அழைப்புகளோ வராது.
    • பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சென்னை :

    சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சமீப காலமாக 'சைபர் கிரைம்' குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதன்படி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு தங்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும். சென்ற மாத பில் கட்டணம் 'அப்டேட்' செய்யப்படவில்லை. உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு செல்போன் எண்ணையும் சேர்த்து குறுந்தகவலாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்புவார்கள்.

    பொதுமக்களிடம் அவர்கள் செல்போனில் ரிமோட் அக்சஸ் அப்ளிகேஷன்களான Quick Support அல்லது Any Desk போன்ற செயலிகளை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்ய சொல்லுவார்கள். அதன் மூலம் எதிர்முனையில் இருக்கும் பொதுமக்களின் செல்போனில் உள்ள விவரங்களை 'சைபர்' குற்றவாளிகள் எளிதாக பார்க்க முடியும். பின்னர் ரூ.10-க்கு குறைந்த அளவில் 'ரீசார்ஜ்' செய்ய சொல்லுவார்கள். அப்போது பொதுமக்கள் உள்ளிடும் வங்கி தொடர்பான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தங்களுக்கு தேவையான வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பிவிடுவார்கள்.

    இந்த செயலிகள் மூலம் பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி. எண்களையும் குற்றவாளிகளால் எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை கொள்ளையடிப்பார்கள். எனவே பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அந்த செல்போன் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம். மின்வாரியத்திலிருந்து இதுபோன்ற குறுந்தகவல்களோ, போன் அழைப்புகளோ வராது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி
    • நாகராஜா திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன் கன்னியாகுமரியில் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-

    சி.ஐ.டி.யூ. மாநாடு நடைபெறுவதையொட்டி நாகர்கோவிலில் இன்று மாலை ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் செஞ்சட்டை பேரணி நடைபெறுகிறது. வெட்டூர்ணிமடத்தில் இருந்து தொடங்கும் இந்த பேரணி நாகர்கோவில் நாகராஜா திடலை சென்றடைகிறது. பின்னர் நாகராஜா திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரியில் நடைபெற்ற சி.ஐ.டி.யூ.வின் 15-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மத்திய அரசு நமது சமூகத்தில்அமைதியையும்பொருளாதாரத்தையும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது. பல தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன.

    குறிப்பாக சிறு தொழிற்சாலைகள் அதிக அளவில் மூடப்படுகின்றன. நமது பண மதிப்பு வீழ்ந்து கொண்டே இருக்கிறது. அன்னிய செலாவணி வீழ்ச்சி அடைகிறது. இவையெல்லாம் மிக மோசமான அறிகுறி. இலங்கையில் இருந்த அறிகுறி கள் இப்போது இந்தியாவில் இருப்பது தெளிவாக தெரிகிறது. இது அபாயகரமானது என்று மத்தியஅரசை எச்சரிக்கிறோம். மத்திய அரசாங்கம் தன்னுடைய கொள்கைகளில் உடனடி யாக மாற்றம் செய்ய வேண் டும் என்று வலியுறுத்து கிறோம்.

    நவீன தொழிற்சாலை களில் செயற்கை மூளை, ரோபோக்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது அதிகரித்த காரணத்தினால் இருக்கிற வேலையும் பறிபோகிறது. உண்மைகளை மறைக்க கடுமையாக பொய் சொல்கி றார்கள். ஏன் ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது என்று கேட்டால் ரூபாய் மதிப்பு குறையவில்லை டாலர் மதிப்பு கூடி விட்டது என்று நிர்மலா சீத்தாராமன் கூறுவதுபோல ஏராளமாக கூறுகிறார்கள்.

    மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்க வில்லை. கல்வியில், சுகா தாரத்தில் என எல்லா வற்றிலும் தலையிடுகிறார் கள். அதே நேரத்தில் அவர்கள் மக்கள் மத்தியில் சாதி, மதம், மொழியைச் சொல்லி மடைமாற்றம் செய்கிறார்கள். தமிழ்நாட் டில் இந்தி திணிப்பு, அதை யொட்டி இங்கு எழும் எதிர்ப்பு இந்த பிரச்சனைகள் தான் விவாதத்துக்கு வர வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது.

    மத்திய அரசு நமக்கு தரவேண்டிய பணத்தை தராமல் இருப்பது போன்ற வை விவாதத்துக்கு வரக்கூ டாது என்று நினைக்கி றார்கள். அதற்கு ஏற்ப பல்வேறு சதிகளை செய்கி றார்கள். கேரளத்திலும் இதை தான் செய்கிறார்கள். இது ஒருபக்கம் என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தேர்தல் அறிக் கையில் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தி ருந்தார்கள்.

    அந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேறவில்லை.அரசாங்கத்தின் செயல் எங்களுக்கு திருப்தி அளிக்க விலலை என தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். போக்கு வரத்தில் கடந்த ஆட்சியிலிருந்து இதுவரை 85 மாதங்களாக பஞ்சப்படி பாக்கி வைக்கப்பட்டுள்ளது. அதை கொடுப்போம் என்று சொன்னார்கள் அதை கொடுக்கவில்லை.

    பழைய ஓய்வூதியம் ஆட்சிக்கு வந்தால் கொடுப்போம் என்றார்கள். ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கொடுத்து விட்டார்கள். 10 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் ஒரு தொழிலாளி அரசுத்துறையில் பணி யாற்றி இருந்தால் நிரந்தப்ப டுத்துவதாக சொன் னார்கள் செய்யவில்லை. அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களை கால முறை ஊதியத்துக்கு கொண்டு வருவோம் என்று சொன்னார்கள் செய்ய வில்லை.

    தொழிற்சங்கம் அமைக் கும் உரிமையே கேள்விக் குள்ளாகிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் அர சாங்கம் தலையிட்டு முடி வுக்கு கொண்டு வர வேண்டும். தொழிலாளி கள் அவர்க ளது உரி மையை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். அதைக் கெடுக்க முத லாளிகள் முற்பட்டால் அதில் அரசாங்கம் தலை யிட வேண்டும் என்பது எங்களது ஒரு கோரிக்கை.

    மின்சார கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டதை நாங்கள் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். சொத்து மதிப்புகள் அவர் கள் போட்டிருக்கும் வரி மிகவும் மோசமானது. சென்னை போன்ற நகரங் களில் தண்ணீர் கட்ட ணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறார்கள். இவையெல்லாம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது என்பதை மாநில அரசு புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நீட், மொழி, மாநில உரிமை போன்றவற்றில் மத்திய அரசு நடவடிக்கைக்கு எதிரான மாநில அரசின் நிலைபப்பாட்டுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.

    மின்சார சட்டம் 2003-இன் படி கட்டணத்தை உயர்த்தாவிட்டால் கடன்தர மாட்டேன் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது என்கிறார்கள். பல விசயங் கில் அப்படி கட்டாயப்ப டுத்துவார்கள் அது மக்க ளை பாதிக்குமா இல்லையா என்பதிலிருந்து மாநில அரசு முடிவு செய்ய வேண்டும். கட்டண உயர்வு அவசிய மற்றது செய்திருக்க கூடாது.

    அரசாங்கம் இதற்கு வேறு வழிகளை தேட வேண்டுமே தவிர மக்களிட மிருந்து வசூலிக்க கூடாது. உயர்வு கடுமையாகவும் இருக்கிறது. சொத்து வரி 150 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. ரூ.4 ஆயிரத்திற்கு பதிலாக இப்போது ரூ.27 ஆயிரம் கட்ட வேண்டும். ஆகவே இந்த பிரச்சனையில் அர சாங்கம் சற்று கனிவொடு பரிசீலிக்க வேண்டும். ஏழை மக்களை பாதிப்பிலிருந்து விடுவிக்கிற அளவுக்கு நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும் அதனை ரத்து செய்யக்கோரி கையெழுத்து பெறும் நிகழ்ச்சி வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே நடைபெற்றது.
    • நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வணிகர்களிடம் அவர்கள் கையெழுத்து வாங்கினர்.

    நெல்லை:

    தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும் அதனை ரத்து செய்யக்கோரி வணிகர்களிடமிருந்து கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட பா.ஜனதா வர்த்தகப்பிரிவு துணை தலைவர் குரு மகராஜன் தலைமையில் வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா.ஜனதா வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக வர்த்தகப்பிரிவு மாநில செயலாளர் அசோக் குமார், மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வணிகர்களிடம் அவர்கள் கையெழுத்து வாங்கினர். அதனைத் தொடர்ந்து தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நெல்லை வடக்கு, தெற்கு, தூத்துக்குடி தெற்கு, வடக்கு , தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும்.
    • உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

    சென்னை :

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    2022-23-ம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.9.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டியதுள்ளது. எனவே ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின் கட்டணத்தை குறைக்கும்படி பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை ஏற்று, குறைந்த அழுத்த மின் இணைப்பு (லோ டென்சன் 3-பி) கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

    இவ்வாறு மின் கட்டணத்தை குறைப்பதால் தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் கூடுதல் கவுண்டர் திறக்க வலியுறுத்தி உள்ளனர்.
    • மதுரை வில்லாபுரம் பகுதியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    அவனியாபுரம்

    மதுரை வில்லாபுரம் பகுதியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. சிறு தொழில் நிறுவனங்கள் முதல் பெரும் தொழில் நிறுவனங்கள் வரை செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 2 மாதத்திற்கு ஒரு முறை மின்சார கட்டணத்தை கட்டுவதற்கு இப்பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு சென்றால் அங்கு ஒரு கவுண்டரை மட்டும் திறந்து வைத்து மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல மணி நேரம் மின்சார அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.

    மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு ஒரு நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்று பொதுமக்கள் கூறுகின்றனர். தினந்தோறும் வேலைக்கு சென்றால்தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலையில் உள்ள மக்கள் ஒரு நாள் வேலைக்கு லீவு போட்டு இந்த மின்சாரத்தை கட்டணத்தை செலுத்தும் நிலை உள்ளது.

    எனவே கூடுதல் கவுண்டர்களைத் திறந்து உடனடியாக கட்டணம் செலுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின் கட்டணம் உயர்வு ஷாக் அடிக்கிறது. பால் விலை உயர்வு வயிறு எரிகிறது. சொத்து வரி உயர்வு அதிர்ச்சியளிக்கிறது. இதுதான் திராவிட மாடலா?
    • இந்தி எதிர்ப்பு என்கிறார்கள். ஆனால் தி.மு.க.வினர் நடத்தும் 45 பள்ளிகளில் இந்தி கற்று தருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும், உடனடியாக வாபஸ் பெற அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்தியது. மொத்தம் 1100 இடங்களில் நடந்தது. ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

    சென்னையில் 66 இடங்களில் நடைபெற்றது. இதில் அடையாறு தொலைத்தொடர்பு அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல் தலைவர் சத்யராஜா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

    தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விலைவாசியை உயர்த்தமாட்டோம் என்றார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது.

    மின் கட்டணம் உயர்வு ஷாக் அடிக்கிறது. பால் விலை உயர்வு வயிறு எரிகிறது. சொத்து வரி உயர்வு அதிர்ச்சியளிக்கிறது. இதுதான் திராவிட மாடலா?

    முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் எழுதி கொடுப்பதைத்தான் படிப்பது வழக்கம்.

    மழைக்காலத்துக்கு முன்பே முன்னேற்பாடுகள் செய்யாததால் சாலைகள் அனைத்தும் மிகப்பெரிய பள்ளங்களாக மாறி உள்ளன. பொதுமக்கள் உயிரை கையில் பிடித்தபடி பயணிக்கிறார்கள்.

    இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. என்னை மிக மோசமாக பேசினார்கள். அது பற்றி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்துள்ளேன். இது சம்பந்தமாக முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும் என்றேன். ஆனால் இதுவரை கருத்து சொல்லவில்லை.

    இதே நிலை தி.மு.க.வை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்டு இருந்தால் சும்மா இருப்பார்களா? வீட்டில் கல் எறிவார்கள். வெளியே நடமாட விடாமல் போராட்டம் நடத்துவார்கள்.

    இந்தி எதிர்ப்பு என்கிறார்கள். ஆனால் தி.மு.க.வினர் நடத்தும் 45 பள்ளிகளில் இந்தி கற்று தருகிறார்கள்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுவுக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இப்போது ரூ.720 கோடிக்கு மது விற்றதாக கொண்டாடுகிறார்கள்.

    தமிழ் தமிழ் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். பிரதமர் மோடி உலகம் முழுவதும் தமிழின் பெருமையை எடுத்து சொல்கிறார்.

    இந்த போராட்டம் இத்துடன் முடிந்து போகாது தொடரும். அண்ணாமலை தலைமையில் தாமரை மலரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகர் பஸ் நிறுத்தம் அருகில் வடசென்னை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயகணேஷ், திருவொற்றியூர் மேற்கு மண்டல் தலைவர் பாலு ஆ‌கியோ‌ர் தலைமை‌யி‌ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்துகொண்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    தண்டையார்பேட்டையில் மண்டலத் தலைவர் வீரா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கொருக்குப்பேட்டை காரனேசன் நகரில் மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல தலைவர் போஸ்கோ மாணிக்கம், சக்திவேல், அருள் முருகன், சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் சுந்தர ராஜ், கோவிந்த ராஜ், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புறநகர் பகுதிகளான தாம்பரம், பம்மல், பெருங்க ளத்தூர், சிட்லபாக்கம், ஊரப்பாக்கம் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெருங்களத்தூர் பகுதியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொற்றாமரை சங்கரன் மண்டல தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் பால் பாக்கெட்டை கீழே கொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் பழனி வேல் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சிட்லபாக்கத்தில் மாவட்ட செயலாளர் வேதசுப்ரமணியம் தலைமையிலும் பம்மலில் வழக்கறிஞர் அலேக்ஸ் சுதாகர் தலைமையிலும் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மண்டல தலைவர் கணேஷ் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஊரப்பாக்கத்தில் மாவட்ட தலைவர் டி.ஜி.மோகனராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் விளையாட்டு பிரிவு மாநில துணை தலைவர் பாலாஜி தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • இலங்கையைச் சேர்ந்தவர்களை உடனடியாகநாடு கடத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தலைவர் ப.கோபி தலைமையில் நடந்தது. 

    கூட்டத்தில் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.சட்டத்தின் படி அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்ற கூற்றை ஏற்றுக் கொண்டோம்.கொலை குற்றவாளிகளை பொதுத்தலங்களில் உலாவிடுவது சரியல்ல. அவர்களை குறிப்பாக இலங்கையைச் சேர்ந்தவர்களை உடனடியாகநாடு கடத்த வேண்டும். மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரித்து நியாயம் வழங்க வேண்டும்.

    சிறு குறு தொழில் நிறுவனங்களை வயிற்றில் அடிப்பது போல் மின்சார கட்டண உயர்வு மிகப்பெரிய அளவிலே பாதிப்பைஏற்படுத்தி இருக்கிறது. எனவே தமிழக முதல்வர் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவினாசி -அத்திக்கடவு நீர் திட்டத்தை விரைவாக நிறைவு செய்து முழுமையான பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளித்திட வேண்டும்.

    காங்கேயம் பகுதி மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான காங்கேயம் பசுமாடுகளுக்கான என ஒரு ஆராய்ச்சி மையத்தை அரசாங்கமே நிறுவ வேண்டும் என்பதைஇந்த கூட்டத்தின் வாயிலாககேட்டுக் கொள்ளப்படுகிறது.திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விசைத்தறிக்கான 3 ஏ 2 டேரிப் மின் கட்டணத்தை உயர்த்தியது.
    • நல்ல அறிவிப்பு வரும் வரை மின் கட்டணத்தை கட்டுவது இல்லை

    திருப்பூர் : 

    கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம், தலைவர் பழனிசாமி தலைமையில் சோமனூரில் நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விசைத்தறிக்கான 3 ஏ 2 டேரிப் மின் கட்டணத்தை உயர்த்தியது. கடந்த மூன்று மாதங்களாக, ஆணைய தலைவர், அமைச்சர்கள், மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து மின் கட்டண விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. தொழில் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி அரசு உடனடியாக மின் கட்டண குறைப்பு அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    சாதா விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதே நடைமுறை வரும் காலங்களில் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். கட்டணம் குறைக்கப்படும் வரை, மின் கட்டணம் செலுத்துவதில்லை என முடிவு செய்து 70 நாட்கள் ஆகியுள்ளது. நல்ல அறிவிப்பு வரும் வரை மின் கட்டணத்தை கட்டுவது இல்லை என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×