search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேட்டோ"

    • உக்ரைன் படைகள் முன்னேறுவதைத் தடுக்க ரஷியா தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது.
    • ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜபோரிஜியா (Zaporizhzhia Nuclear Power Plant) அணுமின் நிலையம் உக்ரைனில் உள்ளது

    ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்த போர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. ராணுவ பலம் கொண்ட ரஷியாவின் தாக்குதலைச் சமாளிக்க மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகள் செய்து வருகின்றன. எனினும் இந்த போரில் ரஷியாவின் கைகள் ஓங்கி இருக்கிறது.

    உக்ரைன் தலைநகர் கீவ் வரை ரஷிய படைகள் தாக்குதல்களை முன்னெடுத்தன.மேற்குலகின் பொருளாதாரத் தடைகளை மீறி இந்த போரில் ரஷியா அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது. மறுபுறம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோவில் அங்கமாவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

     

    இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வரும் போரில் முதல் முறையாக உக்ரைன் படைகள் ரஷியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. ரஷியாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாகப் பொதுமக்கள் 76 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். அதேசமயம் கூர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் முன்னேறுவதைத் தடுக்க ரஷியா தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது.

     

    ரஷியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது குறித்து உக்ரைன் முதலில் மவுனம் காத்து வந்த நிலையில் தற்போது அதிபர் ஜெலன்ஸ்கி வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் ரஷியாவுக்கு எதிரான போரில் இது மிகப்பெரிய வெற்றி என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் உக்ரைனின் இந்த நடவடிக்கை மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

     

    இதற்கிடையில் உக்ரைனில் ரஷிய ராணுவ வீரர்கள் கைப்பற்றி இருந்த ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜபோரிஜியா (Zaporizhzhia Nuclear Power Plant) அணுமின் நிலையத்தை அழிக்க திட்டமிட்டு, ரஷிய வீரர்கள் அதற்கு தீ வைத்தனர். இதனால் கரும்புகை எழுந்து அணுவீச்சு தாக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு உக்ரைன்தான் ரஷியாவும், ரஷியாதான் காரணம் என்று உக்ரைனும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன. 

    • அக்டோபர் 1-ந்தேதி பதவி ஏற்றுக் கொள்ள இருக்கிறார்.
    • ஜூலை மாதம் நடைபெறும் மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக வரவேற்கப்பட இருக்கிறார்.

    அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளை உள்ளடக்கியது நேட்டோ அமைப்பு. மிகப்பெரிய பாதுகாப்பான அமைப்பாக இது கருதப்படுகிறது. இந்த 32 நாடுகளும் தங்களுக்குள் ஆயுதங்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

    இந்த 32 நாடுகளில் ஒரு நாடு மீது இந்த அமைப்பில் இல்லாத நாடு தாக்குதல் நடத்தினால் அது ஒட்டுமொத்தமாக நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படும்.

    இந்த பாதுகாப்பான நோட்டோ அமைப்பின் பொதுச் செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் பிரதமர் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது.

    உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிக்கலான நேரத்தில் மார்க் ரூட்டே பொதுச் செயலாளர் பதவியை ஏற்க இருக்கிறார்.

    ஜூலை 9 மற்றும் 11-ந்தேதி வாஷிங்டனில் நடைபெறும் மாநாட்டின்போது ரஷிய அதிபர் புதின் மற்றும் மற்ற நாட்டின் அதிபர்கள் அதிகாரப்பூர்வமாக அவர் வரவேற்பார்கள்.

    தற்போது பொதுச் செயலாளரான இருக்கும் நர்வேயின் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ந்தேதி முடிவடைகிறது. அக்டோபர் 1-ந்தேதி மார்க் ரூட்டே பொதுச் செயலாளராக பதவி ஏற்பார்.

    ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் 10 வருடத்திற்கு மேல் இந்த பதவியில் நீடித்தார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ல் படையெடுத்தபோது அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன்-ரஷியா இடையே இரண்டு ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது.
    • உக்ரைன் எல்லைப் பகுதியில் பெரும்பகுதியை ரஷியா கைப்பற்றியுள்ளது.

    ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது திடீரென படையெடுத்தது. இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் கால்வாசி பகுதிகளை ரஷியா பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைனில் அமைதி திரும்பவும், உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் ஏற்படவும் உலகத் தலைவர்களின் உதவிகளை நாடி வருகிறார்.

    அவ்வப்போது ரஷிய அதிபர் போர் நிறுத்தத்திற்கான ஒரு பரிந்துரையை முன்மொழிவார். அதை உக்ரைன் ஏற்றுக்கொள்ளாது. உக்ரைன் மண்ணில் இருந்து ரஷியப் படைகள் வெளியேறும்வரை புதின் உடன் நேரடி பேச்சு கிடையாது என்பதில் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக உள்ளார்.

    அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் வழங்கு ஆயுத உதவிகளை வைத்து ரஷியாவை உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான் உக்ரைனில் அமைதி நிலவ ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக நாளை சுவிட்சர்லாந்தில் ஒன்றுகூடுகின்றனர்.

    இதில் ஈகுவேடார், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா அதிபர்கள் கலநது கொள்ள இருக்கிறார்கள். அதேபோன்று ஐப்பிரோப்பியாவின் பெரும்பாலான நாட்டின் அதிபர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்கக்ப்படுகிறது.

    அமெரிக்கா சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்து கொள்ள இருக்கிறார். துருக்கி, சவுதி அரேபியா வெளியுறவுத்துறை மந்திரிகளை அனுப்புகிறது. இந்தியா, தென்ஆப்பிரிக்கா பொன்ற நாடுகள் அதிகாரிகளை பிரதிநிதியாக அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் ரஷியா கலந்து கொள்ளவில்லை. அமைதி பேச்சுவார்த்தையில் ரஷியா மற்றும் உக்ரைன் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என சீனா தெரிவித்துள்ளது.

    என்னவாக இருந்தாலும் உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ மற்றும் போர் நிறுத்தம் ஏற்பட இந்த கூட்டத்தில் முதல்அடி எடுத்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஷிய அதிபர் புதின் நேற்று, "உக்ரைன் நேட்டோவில் இணையும் திட்டத்தை கைவிட்டால், 2022-ல் தங்களுடைய பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து உக்ரைன் துருப்புகளை திரும்பப் பெற்றால் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய தாயர்" எனத் தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் புதினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    • 2022-ல் ரஷியா தன்னுடன் இணைத்த பிராந்தியத்தில் இருந்து உக்ரைன துருப்புகள் வெளியேற வேண்டும்.
    • நேட்டோ அமைப்பில் இணைவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. ரஷியாவுக்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    அமைதிக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ஜி-7 மாநாடு நடைபெறும் இத்தாலிக்கு சென்று தலைவர்களை சந்தித்து வருகிறார்.

    இந்த நிலையில் உக்ரைன் இரண்டு விசயங்களை செய்தால் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படும் என ரஷிய அதிபர் புதின் உறுதி அளித்துள்ளார்.

    ரஷியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் அதிபர் புதின் பேசும்போது "ரஷியா தன்னுடன் 2022-ம் ஆண்டு இணைத்துக் கொண்ட நான்கு பிராந்தியங்களில் இருந்து துருப்புகளை திரும்பப்பெற தொடங்கினால், நேட்டோ அமைப்பில் இணைவதற்கான திட்டத்தை கைவிட முடிவு செய்தால் உடினடியாக போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட தயார். நாங்கள் அதை உடனடியாக செய்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    சுவிட்சர்லாந்தில் உலக தலைவர்கள் ஒன்று கூடி உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான திட்டத்தை வகுக்க உள்ளனர். அமெரிக்கா- உக்ரைன் இடையே 10 வருட பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினிடம் இருந்து போர் நிறுத்தம் குறித்த பரிந்துரை வந்துள்ளது. இதை உக்ரைன ஏற்குமா என்பது சந்தேகம்தான்?.

    • பல தசாப்தங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்தது ஸ்வீடன்
    • "இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்" என நேட்டோ பொதுச்செயலாளர் கூறினார்

    இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவின் தலைமையில் 31 நாடுகள், ஒன்றிணைந்து அமைத்த ராணுவ கூட்டமைப்பு நேட்டோ (North Atlantic Treaty Organization) எனப்படும்.

    நேட்டோ உறுப்பினர் நாட்டை மற்றொரு நாடு தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால், அனைத்து நேட்டோ நாடுகளும் ஒருங்கிணைந்து உறுப்பினர் நாட்டிற்கு ஆதரவாக நிற்கும். இதில் ஒரு நாடு உறுப்பினராக சேர விரும்பினால், அனைத்து நாடுகளும் அந்த கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும்.

    பல தசாப்தங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்த ஸ்வீடன், ரஷிய-உக்ரைன் போருக்கு பிறகு அமெரிக்க-சார்பு நிலைக்கு மாறியது.

    2022ல் நடந்த ரஷியாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பிற்கு பிறகு, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட ஸ்வீடன், (NATO) நேட்டோ அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்தது.

    ஆனால், "தனக்கு எதிரான நாடு" எனக் கூறி ஸ்வீடனின் இணைப்பை ஹங்கேரி ஆதரிக்க மறுத்து வந்தது. மற்றொரு நேட்டோ உறுப்பினர் நாடான துருக்கி, "தனது நாட்டிற்கு எதிரான குர்து இன பிரிவினைவாதிகளுக்கு ஸ்வீடன் ஆதரவளிக்கிறது" என குற்றம் சாட்டி ஸ்வீடனை இணைக்க சம்மதிக்கவில்லை.

    கடந்த ஜனவரி மாதம், தனது முடிவை மாற்றிக் கொண்ட துருக்கி, ஸ்வீடன் நேட்டோ உறுப்பினராக ஆதரவளித்தது.

    சில வாரங்களுக்கு முன், ஹங்கேரியும் தனது நிலையை மாற்றி கொண்டது.

    நேட்டோவில் உறுப்பினராக இணைவதற்கு சுவீடன் நாட்டிற்கு இருந்த அனைத்து தடைகளும் நீங்கிய நிலையில், நேற்று, அதிகாரபூர்வமாக ஸ்வீடனின் இணைப்பு அறிவிக்கப்பட்டது.


    நேட்டோ அமைப்பில் இணையும் 32-வது உறுப்பினர் நாடு ஸ்வீடன் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்வீடனின் இணைப்பு குறித்து, "இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்" என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் (Jens Stoltenberg) கூறினார்.

    இது குறித்து பேசிய ஸ்வீடன் அதிபர் உல்ஃப் க்ரிஸ்டர்சன் (Ulf Kristersson), அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.


    • பிரதமராகவும், அதிபராகவும் புதின் கடந்த 2 தசாப்தங்களாக அதிகாரத்தில் உள்ளார்
    • ரஷியாவின் மேற்கு பிராந்தியத்தை நாம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்

    இன்னும் சில வாரங்களில் ரஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் வெல்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

    பிரதமராகவும், அதிபராகவும் புதின் கடந்த 2 தசாப்தங்களாக அதிகாரத்தில் உள்ளார்.

    இந்நிலையில், இன்று, ரஷிய அதிபர் புதின் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    மேற்கத்திய நாடுகள் ஆதிக்க மனப்பான்மையுடன் நமது வளர்ச்சியை முடக்க முயன்று வருகின்றன.

    அது மட்டுமல்ல, அவர்கள் நம்மை அழிக்கவும் பார்க்கின்றனர்.

    அவர்கள் நோக்கம் எதுவாக இருந்தாலும் நமது நாட்டையும் உக்ரைனையும் அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தி கொள்வதில்தான் முனைப்பு காட்டுகின்றனர்.

    நமக்கிடையே பிளவு ஏற்படுத்தி நம்மை வலிமை குறைந்தவர்களாக உருவாக்க முயல்கின்றனர்.

    பெரும்பாலான ரஷிய மக்கள் உக்ரைனில் "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எடுக்கப்பட்டதை வரவேற்கிறார்கள்.

    ரஷிய குடிமக்கள்தான் நமது சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்.

    நமது எதிர்காலம் செல்லும் திசை குடிமக்களாகிய உங்கள் கைகளில்தான் உள்ளது.


    அரேபிய நாடுகள் மற்றும் லத்தீன் நாடுகளுடன் நமது உறவை நாம் வலுப்படுத்தி கொள்ள வேண்டும்.

    நேட்டோ (NATO) நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் துருப்புகளை அனுப்பினால், அணு ஆயுதப் போர் துவங்கும்.

    நேட்டோவில் பின்லாந்தும், சுவீடனும் இணைவதால் ரஷியாவின் மேற்கு பிராந்தியத்தை நாம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

    எந்த எதிரி நாட்டின் எல்லைக்கு உள்ளேயும் சென்று அழிக்க கூடிய ஆயுதங்கள் நம்மிடையே உள்ளன.

    ரஷியாவை ஆக்கிரமிக்க எவரேனும் முனைந்தால் இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட பாதிப்புகளை விட கடுமையான பாதிப்புகள் உருவாகும்.

    இவ்வாறு புதின் கூறினார்.

    • நேட்டோ உறுப்பினரை எந்த நாடு தாக்கினாலும் அனைத்து நாடுகளும் ஒன்றாக எதிர்க்கும்
    • நீண்ட காலமாக ஸ்வீடன் எந்த போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்தது

    இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவின் தலைமையில் 31 நாடுகள் ஒன்றிணைந்து அமைத்த அணி நேட்டோ (North Atlantic Treaty Organization).

    நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு நாட்டை வேறொரு நாடு தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால், அனைத்து நேட்டோ நாடுகளும் ஒருங்கிணைந்து அந்த நாட்டிற்கு ஆதரவாக நிற்கும்.

    நேட்டோ அமைப்பில் ஒரு நாடு உறுப்பினராக சேர விரும்பினால், அனைத்து நாடுகளும் அந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க வேண்டும்.

    சுமார் 200 வருடங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்த ஸ்வீடன், ரஷிய-உக்ரைன் போருக்கு பிறகு அமெரிக்க-சார்பு நிலைக்கு மாறியது.

    2022ல் உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்த பிறகு ஸ்வீடன், (NATO) நேட்டோ அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்தது.

    ஆனால், ஸ்வீடன் தனக்கு எதிரான நாடு எனக் கூறி ஸ்வீடனின் இணைப்பை ஹங்கேரி ஆதரிக்க மறுத்து வந்தது.

    இந்நிலையில், ஹங்கேரி தனது நிலையை மாற்றி கொண்டது.

    ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பன் (Viktor Orban), "இரு நாடுகளும் ஒருவருக்காக மற்றொருவர் இறக்கவும் தயாராக உள்ள நாடுகள்" எனக் கூறி ஸ்வீடன் நேட்டோவில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்தார்.


    ஹங்கேரியின் ஒப்புதல் குறித்த தகவல் வந்த நிலையில் நேற்று ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் க்ரிஸ்டர்ஸன் (Ulf Kristersson) மகிழ்ச்சி தெரிவித்தார்.

    ஹங்கேரியின் இந்த முக்கிய முடிவு குறித்து நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க், "நேட்டோ, முன்னை காட்டிலும் வலுவான மற்றும் பாதுகாப்பான அமைப்பாகவும் மாறி விட்டது" என (Jens Stoltenberg) தெரிவித்தார்.

    மற்றொரு நேட்டோ உறுப்பினர் நாடான துருக்கி, தனது நாட்டிற்கு எதிரான குர்து இன பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி ஸ்வீடன் இணைய சம்மதிக்கவில்லை.

    ஆனால், கடந்த ஜனவரி மாதம், தனது முடிவை மாற்றிக் கொண்ட துருக்கி, ஸ்வீடன் நேட்டோ உறுப்பினராக ஆதரவளித்தது.

    • 18 மாதங்களாக நடைபெறும் போர் 540வது நாளை நெருங்கி இருக்கிறது
    • இந்த நகரின் வழியாகத்தான் உக்ரைனை விட்டு வெளியேறும் அகதிகள் போலந்து செல்கின்றனர்

    கடந்த பிப்ரவரி 2022ல் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது.

    இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளுதவியுடனும், ராணுவ தளவாட உதவியுடனும் உக்ரைன் தீவிரமாக ரஷியாவுடன் போர் செய்து வருகிறது. 18 மாதங்களாக நடைபெறும் இந்த போர் 540வது நாளை நெருங்கி வரும் நிலையில், இரு தரப்பிலும் பொருட்சேதங்களும், உயிர்சேதங்களும் பலமாக இருக்கின்றன.

    இந்நிலையில் உக்ரைனின் வடமேற்கு பகுதியில் உள்ள வோலின் (Volyn) மற்றும் மேற்கு பகுதியில் உள்ள ல்விவ் (Lviv) என 2 நகரங்கள் மீது ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த இரு நகரங்களும் நேட்டோ உறுப்பினரான போலந்து நாட்டிற்கும் உக்ரைனுக்குமான எல்லையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    வடமேற்கிலுள்ள வோலின் பகுதியில் நடைபெற்ற தாக்குதல்களில் மூன்று பேர் உயிரிழந்திருக்கின்றனர். வோலின் பகுதியிலுள்ள லுட்ஸ்க் (Lutsk) பகுதியில் ஒரு தொழில் நிறுவன கட்டிடம் சேதமடைந்தது. பலர் தாக்குதலால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ல்விவ் பகுதியில் நடைபெற்ற தாக்குதல்களிலேயே பெரியதாக கருதப்படும் தற்போதைய தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இங்கு ரஷியாவால் ஏவப்பட்ட 6 ஏவுகணைகள் பல கட்டிடங்களை அழித்தன. இந்நகரத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தகர்க்கப்பட்டன. ஒரு மழலையர் விளையாட்டு மைதானம் சேதமானது.

    ல்விவ் மீது ஜூலை 2023 வரை ரஷியா தாக்குதல்கள் எதுவும் நடத்தவில்லை. இந்நகரத்திலிருந்துதான் ரஷிய-உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனை விட்டு வெளியேறும் அகதிகள் போலந்து நாட்டிற்கு செல்கின்றனர்.

    இந்த இரு நகரங்கள் மட்டுமின்றி வேறு சில பகுதிகளிலும் வான்வழி தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது. ரஷியா செலுத்திய 28 ஏவுகணைகளில் 16 ஏவுகணைகளை உக்ரைன் வானில் இடைமறித்து வீழ்த்தியுள்ளது.

    • நேட்டோ தலைவர்கள் உக்ரைன் எதிர்காலத்தில்தான் இந்த கூட்டணியில் சேர முடியும் என்று கூறியதோடு நிறுத்தி விட்டனர்.
    • நேட்டோ உச்சி மாநாட்டில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அதிபரின் பேச்சால் சலசலப்பு.

    லிதுவேனியா:

    நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உள்ள 31 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேற்று லிதுவேனியா நாட்டின் தலைநகர் வில்னியஸ் நகரில் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்காக கூடினர்.

    இந்த மாநாட்டில் உக்ரைன் நாட்டை நேட்டோவில் இணைத்து கொள்ள முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உட்பட பல நாட்டினர் எதிர்பார்த்திருந்தனர்.

    ஆனால், நேட்டோ தலைவர்கள் உக்ரைன் எதிர்காலத்தில்தான் இந்த கூட்டணியில் சேர முடியும் என்று கூறியதோடு நிறுத்தி விட்டனர்.

    இந்நிலையில், நேட்டோ உச்சி மாநாட்டில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ரஷிய அதிபர் புதின் பெயருடன் குழப்பி அவரை "விளாடிமிர்" என்று குறிப்பிட்டார்.

    பைடன் உடனே தன்னைத் திருத்திக் கொண்டு பின்னர் ஜெலென்ஸ்கி என்று குறிப்பிட்டார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பைடன் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவில், "விளாடிமிர் மற்றும் நான்... ," என்று கூறிய பைடன், தவறுதலாக குறிப்பிட்ட சில நொடிகளில் அவர் தன்னைத் திருத்திக் கொண்டு, ஜெலென்ஸ்கியும் நானும்.. உக்ரைனில் இருந்தபோதும் மற்ற இடங்களில் நாங்கள் சந்தித்தபோதும் நாங்கள் செய்யக்கூடிய உத்தரவாதங்களைப் பற்றி பேசினோம்..," என்று இருந்தது.

    • எதிர்காலத்தில்தான் இணைய முடியும் என நேட்டோ நாடுகள் அறிவிப்பு
    • காலவரையறை கூறப்படாதது அபத்தமான செயல் என்கிறார் ஜெலன்ஸ்கி

    நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உள்ள 31 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேற்று லிதுவேனியா நாட்டின் தலைநகர் வில்னியஸ் நகரில் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்காக கூடியுள்ளனர். இந்த மாநாட்டில் உக்ரைன் நாட்டை நேட்டோவில் இணைத்து கொள்ள முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உட்பட பல நாட்டினர் எதிர்பார்த்திருந்தனர்.

    ஆனால், நேட்டோ தலைவர்கள் உக்ரைன் எதிர்காலத்தில்தான் இந்த கூட்டணியில் சேர முடியும் என்று கூறியதோடு நிறுத்தி விட்டனர். அதனை அமைப்பில் சேர எந்த முறையான அழைப்பையும் வழங்கவில்லை.

    உக்ரைனின் எதிர்காலம் நேட்டோவில் உள்ளது என்று பிரகடனத்தில் தெரிவித்த தலைவர்கள், அதற்கான செயல்முறைக்கு எந்த காலக்கெடுவையும் வழங்கவில்லை.

    நேட்டோவின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், "கூட்டணியில் உள்ள உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்படும்போது கூட்டணியில் சேர உக்ரைனுக்கு அழைப்பு விடுப்போம்" என்று மட்டுமே கூறியிருக்கிறார்.

    இந்த பின்னடைவு ஜெலன்ஸ்கியை கோபப்படுத்தியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இதுகுறித்து டுவீட் செய்திருக்கும் அவர், "நேட்டோ உக்ரைனை சேர்க்க தயாராக இல்லை. இணைவதற்கு எந்த காலவரையறையும் கூறப்படவில்லை. இது அபத்தமான செயல்" என்று தெரிவித்திருக்கிறார்.

    ரஷியாவுடன் போரில் ஈடுபடும்போது நேட்டோவில் சேர முடியாது என்பதை ஜெலன்ஸ்கி ஏற்று கொள்கிறார். ஆனால், போர் முடிந்தவுடன் கூடிய விரைவில் அதில் சேர விரும்புகிறார்.

    காலக்கெடு எதுவும் வரையறுக்காததால், ரஷியாவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் நேட்டோ ஈடுபடும்போது உக்ரைனை உறுப்பினராக்குவதா? வேண்டாமா? என தங்கள் நிலை ஒரு பேரம் பேசும் பொருளாக மாறிவிடும் சந்தர்ப்பம் உள்ளது. இது எங்களுக்கு ஒரு பலவீனம் ஆகி விடலாம்" என்று அதிபர் செலன்ஸ்கி கூறியிருக்கிறார்.

    கடந்த காலத்தில், மேற்கத்திய பாதுகாப்பு உறுதிமொழிகள், 2 ரஷிய படையெடுப்புகளைத் தடுக்கத் தவறிவிட்டன என்பதாலும், உக்ரைன் நேட்டோவின் ஒரு அங்கமானால் ரஷியாவிற்கு போரை நீடிக்க ஒரு ஊக்கத்தை அளிக்கலாம் என்பதாலும் சில உறுப்பு நாடுகள் உக்ரைனை சேர்த்துக்கொள்ள அஞ்சுகிறது.

    • துருக்கி அதிபர், சுவீடன் பிரதமர், நேட்டோ பொது செயலாளர் சந்திப்பிற்குப்பின் எர்டோகன் ஆதரவு
    • எர்டோகன் ஆதரவு அளித்தாலும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆதரவு பெற வேண்டும்

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதில் இருந்து அண்டை நாடுகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுவதில் கவனம் செலுத்தி வருகின்றன. உக்ரைன் நேட்டோ படையில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டதால்தான், ரஷியா போர் தொடுக்க முக்கிய காரணம் என சொல்லப்பட்டது.

    இருந்தாலும் ரஷியாவுக்கு எதிராக தொடர்ந்து சண்டையிட்டு வரும் உக்ரைன், நேட்டோ படையில் இணைவதற்கான மற்ற நாடுகளின் ஆதரவுகளை கோரி வருகிறது. கடந்த வாரம் துருக்கி சென்ற அவர், அந்நாட்டு அதிபர் எர்டோகனை சந்தித்தார். அப்போது, உக்ரைன் நேட்டோ படையில் இணைய எர்டோகன் ஆதரவு அளித்தார்.

    இதற்கிடையே சுவீடன் நேட்டோவில் இணைய விண்ணப்பித்திருந்த நிலையில், துருக்கி தொடர்ந்து தடையை ஏற்படுத்தி வந்தது. குர்திஷ் குழு, துருக்கி அரசுக்கு எதிரான ஆர்வலர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதால், துருக்கி தடையை ஏற்படுத்தி வந்தது.

    இந்த நிலையில் நேற்று துருக்கி அதிபர் எர்டோகன், சுவீடன் நேட்டோ படையில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளார். இருந்தாலும், துருக்கி நாடாளுமன்றத்தில் ஆதரவு பெற வேண்டும். அதற்கான அழுத்தத்தை கொடுப்பதாக எர்டோகன் உறுதி அளித்துள்ளார்.

    துருக்கி அதிபர் எர்டோகன், சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்சன், நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சந்திப்பிற்கு பிறகு இந்த முடிவை துருக்கி எடுத்துள்ளது.

    துருக்கியின் இந்த முடிவை வரலாற்று நாள் என ஜோன்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். மேலும், ''சுவீடன் இணைவது, நேட்டோ கூட்டணி நாடுகளின் பாதுகாப்பிற்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் பயனளிக்கும். இது பாதுகாப்பு மற்றும் வலிமையை ஏற்படுத்தும்'' என்றார்.

    சுவீடன் 32-வது நாடாக நேட்டோவில் இணைகிறது.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி துருக்கி சென்றுள்ளார்
    • உக்ரைன்- ரஷியா போர் முடிவுக்கு வர துருக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டது

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி சுமார் 500 நாட்களை நெருங்கியுள்ளது. என்றாலும், இதுவரை சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு மிகப்பெரிய அளவில் ராணுவ உதவி செய்து வருகிறது. ராணுவ உதவி கேட்பதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அதன் ஒரு பகுதியாக அவர் துருக்கி சென்றுள்ளார். துருக்கி சென்ற அவரை, அந்நாட்டு அதிபர் எர்டோகன் வரவேற்றார். அப்போது உக்ரைன் நேட்டோ படையில் இணைய சம்மதம் தெரிவித்தார். அதோடு நேட்டோவில் இணைய தகுதியான நாடு எனவும் தெரிவித்தார்.

    முன்னதாக, சுவீடன் நேட்டோ படையில் இணைய விண்ணப்பம் செய்திருந்தது. ஆனால் துருக்கி அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சுவீடன் நிரந்தர உறுப்பினர் ஆக முடியவில்லை. துருக்கி பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் குர்திஷ் மற்றும் இதர குரூப் விவகாரத்தில் போதுமான நடவடிக்கை எடுக்காததால் சுவீடனுக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஆனால் பின்லாந்து நேட்டோவில் இணைய ஆதரவு அளித்துள்ளது.

    துருக்கி- ஐரோப்பிய நாடுகள் இடையே உணவு தானியம் குறித்த ஒப்பந்தம் ஒன்று உள்ளது. இந்த ஒப்பந்தம் கருங்கடல் வழியாக உணவு தானியங்களை கொண்டு செல்வது என்பதாகும். இந்த ஒப்பந்தம் வரும் ஜூலை 17-ந்தேதி முடிவடைகிறது. இதை நீட்டிக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என எர்டோகன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உக்ரைன் தானியங்கள் கருங்கடல் வழியாக எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும். சுமார் 30 மில்லியன் டன் உணவு தானியங்கள் வெளிநாடுகளுக்கு உக்ரைனில் இருந்து செல்வதால் உணவு தட்டுப்பாட்டை ஓரளவிற்கு சமாளிக்க முடியும்.

    ரஷியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தடைவிதித்துள்ளதால், இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷியா தயக்கம் காட்டுகிறது.

    உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இருநாடுகளிடமும் துருக்கி நெருங்கிய நட்பு வைத்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தராக இருக்க உதவியாக இருக்கிறது.

    சுவீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணையாமல் நடுநிலை வகித்து வந்தன. ஆனால், உக்ரைன் போரைத் தொடர்ந்து, தற்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளன.

    ×