என் மலர்
நீங்கள் தேடியது "நேட்டோ"
- பல தசாப்தங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்தது ஸ்வீடன்
- "இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்" என நேட்டோ பொதுச்செயலாளர் கூறினார்
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவின் தலைமையில் 31 நாடுகள், ஒன்றிணைந்து அமைத்த ராணுவ கூட்டமைப்பு நேட்டோ (North Atlantic Treaty Organization) எனப்படும்.
நேட்டோ உறுப்பினர் நாட்டை மற்றொரு நாடு தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால், அனைத்து நேட்டோ நாடுகளும் ஒருங்கிணைந்து உறுப்பினர் நாட்டிற்கு ஆதரவாக நிற்கும். இதில் ஒரு நாடு உறுப்பினராக சேர விரும்பினால், அனைத்து நாடுகளும் அந்த கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும்.
பல தசாப்தங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்த ஸ்வீடன், ரஷிய-உக்ரைன் போருக்கு பிறகு அமெரிக்க-சார்பு நிலைக்கு மாறியது.
2022ல் நடந்த ரஷியாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பிற்கு பிறகு, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட ஸ்வீடன், (NATO) நேட்டோ அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்தது.
ஆனால், "தனக்கு எதிரான நாடு" எனக் கூறி ஸ்வீடனின் இணைப்பை ஹங்கேரி ஆதரிக்க மறுத்து வந்தது. மற்றொரு நேட்டோ உறுப்பினர் நாடான துருக்கி, "தனது நாட்டிற்கு எதிரான குர்து இன பிரிவினைவாதிகளுக்கு ஸ்வீடன் ஆதரவளிக்கிறது" என குற்றம் சாட்டி ஸ்வீடனை இணைக்க சம்மதிக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம், தனது முடிவை மாற்றிக் கொண்ட துருக்கி, ஸ்வீடன் நேட்டோ உறுப்பினராக ஆதரவளித்தது.
சில வாரங்களுக்கு முன், ஹங்கேரியும் தனது நிலையை மாற்றி கொண்டது.
நேட்டோவில் உறுப்பினராக இணைவதற்கு சுவீடன் நாட்டிற்கு இருந்த அனைத்து தடைகளும் நீங்கிய நிலையில், நேற்று, அதிகாரபூர்வமாக ஸ்வீடனின் இணைப்பு அறிவிக்கப்பட்டது.

நேட்டோ அமைப்பில் இணையும் 32-வது உறுப்பினர் நாடு ஸ்வீடன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வீடனின் இணைப்பு குறித்து, "இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்" என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் (Jens Stoltenberg) கூறினார்.
இது குறித்து பேசிய ஸ்வீடன் அதிபர் உல்ஃப் க்ரிஸ்டர்சன் (Ulf Kristersson), அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
- 2022-ல் ரஷியா தன்னுடன் இணைத்த பிராந்தியத்தில் இருந்து உக்ரைன துருப்புகள் வெளியேற வேண்டும்.
- நேட்டோ அமைப்பில் இணைவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. ரஷியாவுக்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
அமைதிக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ஜி-7 மாநாடு நடைபெறும் இத்தாலிக்கு சென்று தலைவர்களை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் உக்ரைன் இரண்டு விசயங்களை செய்தால் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படும் என ரஷிய அதிபர் புதின் உறுதி அளித்துள்ளார்.
ரஷியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் அதிபர் புதின் பேசும்போது "ரஷியா தன்னுடன் 2022-ம் ஆண்டு இணைத்துக் கொண்ட நான்கு பிராந்தியங்களில் இருந்து துருப்புகளை திரும்பப்பெற தொடங்கினால், நேட்டோ அமைப்பில் இணைவதற்கான திட்டத்தை கைவிட முடிவு செய்தால் உடினடியாக போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட தயார். நாங்கள் அதை உடனடியாக செய்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உலக தலைவர்கள் ஒன்று கூடி உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான திட்டத்தை வகுக்க உள்ளனர். அமெரிக்கா- உக்ரைன் இடையே 10 வருட பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினிடம் இருந்து போர் நிறுத்தம் குறித்த பரிந்துரை வந்துள்ளது. இதை உக்ரைன ஏற்குமா என்பது சந்தேகம்தான்?.
- உக்ரைன்-ரஷியா இடையே இரண்டு ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது.
- உக்ரைன் எல்லைப் பகுதியில் பெரும்பகுதியை ரஷியா கைப்பற்றியுள்ளது.
ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது திடீரென படையெடுத்தது. இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் கால்வாசி பகுதிகளை ரஷியா பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைனில் அமைதி திரும்பவும், உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் ஏற்படவும் உலகத் தலைவர்களின் உதவிகளை நாடி வருகிறார்.
அவ்வப்போது ரஷிய அதிபர் போர் நிறுத்தத்திற்கான ஒரு பரிந்துரையை முன்மொழிவார். அதை உக்ரைன் ஏற்றுக்கொள்ளாது. உக்ரைன் மண்ணில் இருந்து ரஷியப் படைகள் வெளியேறும்வரை புதின் உடன் நேரடி பேச்சு கிடையாது என்பதில் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக உள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் வழங்கு ஆயுத உதவிகளை வைத்து ரஷியாவை உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான் உக்ரைனில் அமைதி நிலவ ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக நாளை சுவிட்சர்லாந்தில் ஒன்றுகூடுகின்றனர்.
இதில் ஈகுவேடார், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா அதிபர்கள் கலநது கொள்ள இருக்கிறார்கள். அதேபோன்று ஐப்பிரோப்பியாவின் பெரும்பாலான நாட்டின் அதிபர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்கக்ப்படுகிறது.
அமெரிக்கா சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்து கொள்ள இருக்கிறார். துருக்கி, சவுதி அரேபியா வெளியுறவுத்துறை மந்திரிகளை அனுப்புகிறது. இந்தியா, தென்ஆப்பிரிக்கா பொன்ற நாடுகள் அதிகாரிகளை பிரதிநிதியாக அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் ரஷியா கலந்து கொள்ளவில்லை. அமைதி பேச்சுவார்த்தையில் ரஷியா மற்றும் உக்ரைன் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என சீனா தெரிவித்துள்ளது.
என்னவாக இருந்தாலும் உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ மற்றும் போர் நிறுத்தம் ஏற்பட இந்த கூட்டத்தில் முதல்அடி எடுத்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷிய அதிபர் புதின் நேற்று, "உக்ரைன் நேட்டோவில் இணையும் திட்டத்தை கைவிட்டால், 2022-ல் தங்களுடைய பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து உக்ரைன் துருப்புகளை திரும்பப் பெற்றால் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய தாயர்" எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் புதினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
- அக்டோபர் 1-ந்தேதி பதவி ஏற்றுக் கொள்ள இருக்கிறார்.
- ஜூலை மாதம் நடைபெறும் மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக வரவேற்கப்பட இருக்கிறார்.
அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளை உள்ளடக்கியது நேட்டோ அமைப்பு. மிகப்பெரிய பாதுகாப்பான அமைப்பாக இது கருதப்படுகிறது. இந்த 32 நாடுகளும் தங்களுக்குள் ஆயுதங்களை பரிமாறிக் கொள்ள முடியும்.
இந்த 32 நாடுகளில் ஒரு நாடு மீது இந்த அமைப்பில் இல்லாத நாடு தாக்குதல் நடத்தினால் அது ஒட்டுமொத்தமாக நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படும்.
இந்த பாதுகாப்பான நோட்டோ அமைப்பின் பொதுச் செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் பிரதமர் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது.
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிக்கலான நேரத்தில் மார்க் ரூட்டே பொதுச் செயலாளர் பதவியை ஏற்க இருக்கிறார்.
ஜூலை 9 மற்றும் 11-ந்தேதி வாஷிங்டனில் நடைபெறும் மாநாட்டின்போது ரஷிய அதிபர் புதின் மற்றும் மற்ற நாட்டின் அதிபர்கள் அதிகாரப்பூர்வமாக அவர் வரவேற்பார்கள்.
தற்போது பொதுச் செயலாளரான இருக்கும் நர்வேயின் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ந்தேதி முடிவடைகிறது. அக்டோபர் 1-ந்தேதி மார்க் ரூட்டே பொதுச் செயலாளராக பதவி ஏற்பார்.
ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் 10 வருடத்திற்கு மேல் இந்த பதவியில் நீடித்தார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ல் படையெடுத்தபோது அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் படைகள் முன்னேறுவதைத் தடுக்க ரஷியா தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது.
- ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜபோரிஜியா (Zaporizhzhia Nuclear Power Plant) அணுமின் நிலையம் உக்ரைனில் உள்ளது
ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்த போர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. ராணுவ பலம் கொண்ட ரஷியாவின் தாக்குதலைச் சமாளிக்க மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகள் செய்து வருகின்றன. எனினும் இந்த போரில் ரஷியாவின் கைகள் ஓங்கி இருக்கிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் வரை ரஷிய படைகள் தாக்குதல்களை முன்னெடுத்தன.மேற்குலகின் பொருளாதாரத் தடைகளை மீறி இந்த போரில் ரஷியா அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது. மறுபுறம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோவில் அங்கமாவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வரும் போரில் முதல் முறையாக உக்ரைன் படைகள் ரஷியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. ரஷியாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாகப் பொதுமக்கள் 76 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். அதேசமயம் கூர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் முன்னேறுவதைத் தடுக்க ரஷியா தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது.

ரஷியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது குறித்து உக்ரைன் முதலில் மவுனம் காத்து வந்த நிலையில் தற்போது அதிபர் ஜெலன்ஸ்கி வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் ரஷியாவுக்கு எதிரான போரில் இது மிகப்பெரிய வெற்றி என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் உக்ரைனின் இந்த நடவடிக்கை மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில் உக்ரைனில் ரஷிய ராணுவ வீரர்கள் கைப்பற்றி இருந்த ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜபோரிஜியா (Zaporizhzhia Nuclear Power Plant) அணுமின் நிலையத்தை அழிக்க திட்டமிட்டு, ரஷிய வீரர்கள் அதற்கு தீ வைத்தனர். இதனால் கரும்புகை எழுந்து அணுவீச்சு தாக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு உக்ரைன்தான் ரஷியாவும், ரஷியாதான் காரணம் என்று உக்ரைனும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.
- உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
- போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு இல்லை என்றார் அதிபர் டிரம்ப்.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. இரு நாடுகள் இடையிலான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இதற்கிடையே, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு போர்நிறுத்தம் குறித்த பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன. ஆனாலும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு இல்லை என டிரம்ப் தெரிவித்தது சர்ச்சையானது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருக்கிறேன் என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தலைநகர் கீவில் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
உக்ரைனில் அமைதி திரும்ப நான் எனது பதவியை விட்டுத் தரவேண்டும் என்றால் அதற்கு தயாராகவே இருக்கிறேன். உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் அதிபர் பதவியை விட்டு விலகத் தயாராக உள்ளேன்.
உக்ரைனின் நிலைப்பாட்டை டிரம்ப் புரிந்துகொள்ள வேண்டும். ரஷியாவின் தாக்குதலால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, டிரம்ப் ரஷியாவிடம் இருந்து எங்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
இந்தப் பிராந்தியத்தில் அமைதி திரும்ப உக்ரைனின் கூட்டாளியாக டிரம்ப் இருக்க வேண்டும். இதை டிரம்ப் புரிந்து கொள்வோர் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
- இரு நாடுகளும் நேட்டோவில் இணைய ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
- அமெரிக்க செனட் சபை தனது ஒப்புதலை இன்று அளித்துள்ளது.
வாஷிங்டன்:
நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து 150 நாட்களாக போர் செய்து வருகிறது.
இதற்கிடையே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு அமெரிக்க செனட் சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேட்டோவில் இணைவதன் மூலம் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் மற்றும் முழு அட்லாண்டிக் கூட்டணிக்கும் பயனளிக்கும் என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே கனடா உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- எண்ணற்ற அச்சுறுத்தல்களின் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளதாக நேட்டோ மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
- ரஷிய அதிபர் புதினின் அச்சுறுத்தல்கள் புதிது இல்லை என்று எஸ்டோனிய பிரதமர் பேச்சு
மாட்ரிட்:
நேட்டோ நாடுகளுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், உலக ஸ்திரத்தன்மைக்கு சீனா கடும் சவால்களை முன்வைக்கிறது என்றும், நேட்டோ மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டது. சைபர் தாக்குதல்கள் முதல் பருவநிலை மாற்றம் வரை, பெரும் அதிகாரப் போட்டி மற்றும் எண்ணற்ற அச்சுறுத்தல்களின் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளது என்று மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேட்டோ அமைப்பை ரஷியா மற்றும் சீனா கடுமையாக சாடி உள்ளன. எங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், எந்த பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்படுகிறதோ, அதே அச்சுறுத்தல்களை நாங்களும் உருவாக்குவோம், என ரஷிய அதிபர் புதின் எச்சரித்தார். நேட்டோதான் உலகம் முழுவதும் பிரச்சினைகளை உருவாக்குகிறது என சீனா குற்றம்சாட்டி உள்ளது.
ரஷிய அதிபர் புதினின் அச்சுறுத்தல்கள் புதிது இல்லை என்று எஸ்டோனிய பிரதமர் காஜா கல்லாஸ் தெரிவித்தார்.