என் மலர்
நீங்கள் தேடியது "கிறிஸ்தவ ஆலயம்"
- நேற்றிரவு ஆலயத்தில் இருந்த கெபியை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.
- கெபியை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி மக்கள் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாசரேத்:
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரத்தில் புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது. ஆர்.சி. சர்ச் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மிகப்பெரிய சபைகளில் ஒன்றான இந்த ஆலயத்தில் தினந்தோறும் இரவு பிரார்த்தனைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்றிரவு இந்த ஆலயத்தில் இருந்த கெபியை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதனை அறிந்த அந்த ஆலய மக்கள் இன்று காலை ஆலயம் முன்பு திரண்டனர்.
அவர்கள் கெபியை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அங்குள்ள மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்லமுடியாமல் போனது. அவை அனைத்தும் சாலைகளில் அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஏரல் தாசில்தார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு தாசில்தார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
- இந்த பேராலயம் தான் கோட்டார் மறைமாவட்ட தலைமை பேராலயமாகவும் விளங்குகிறது.
- 1941-ம் ஆண்டு ஆலயத்தின் கோபுரம் கற்களால் கட்டி எழுப்பப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையின் சிறப்புமிகுந்த மறைமாவட்டங்களில் குமரி மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள கோட்டார் மறைமாவட்டமும் ஒன்றாகும். கீழ்த்திசை நாடுகளின் திருத்தூதர், இரண்டாம் பவுல், கேட்டவரம் தருபவர் என்று கிறிஸ்தவர்களால் போற்றி புகழப்படும் புனித சவேரியார் நற்செய்தி அறிவித்து, மக்களுக்கு தொண்டாற்றிய பங்குகளில் கோட்டார் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது. புனித சவேரியாருக்கு எழுப்பப்பட்ட முதல் ஆலயம் என்ற பெருமையை கோட்டார் புனித சவேரியார் பேராலயம் வகிக்கிறது. இந்த பேராலயம் தான் கோட்டார் மறைமாவட்ட தலைமை பேராலயமாகவும் விளங்குகிறது.
தேவசகாயத்துடன் தொடர்புடைய பங்கு
இந்த கோட்டார் மறைமாவட்டத்தின் பங்குகளில் ஒன்றாக நாகர்கோவில் மாநகரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள மேலப்பெருவிளை பங்கு உள்ளது. இந்த பங்கு, கோட்டார் மறைமாவட்டம் உருவாவதற்கு, (அதாவது 1930-க்கு) முன்பே இருந்த பழமையும், பாரம்பரியமும் கொண்ட பங்குகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது திருவிதாங்கூர்- கொச்சி சமஸ்தானமாக இருந்தபோது கோவா மறைமாவட்டத்தில் இருந்து கி.பி.1886-ம் ஆண்டில் கொல்லம் மறை மாவட்டம் உருவானது. அப்போது இன்றைய குமரி மாவட்டத்தில் இருந்த 14 பங்குகளில் மேலப்பெருவிைள பங்கும் ஒன்று என்ற பெருமையைக் கொண்டது. இயேசுவின் நற்செய்தியால் ஈர்க்கப்பட்டு, மறைசாட்சியாக இந்திய மண்ணில் ரத்தம் சிந்திய முதல் இல்லற புனிதர் என்ற பெருமையைப் பெற்ற புனித தேவசகாயத்துடன் தொடர்புடைய பங்கு இந்த மேலப்பெருவிளை பங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலில் அரை சென்ட் மனையில் சிலுவை பாணியில் பனை ஓலையினால் ஒரு குருசடியை இப்பகுதி மக்கள் உருவாக்கி இயேசுவை வழிபட்டு வந்தனர். 5 முன்னோடி குடும்பங்கள் இணைந்து இந்த குருசடியில் வழிபாடுகள் நடத்தி வந்தனர். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பதை உணர்ந்த இப்பகுதியின் முன்னோர்கள் குருசடி இருந்த இடத்தில் கி.பி.1832-ம் ஆண்டில் புனித செபமாலை அன்னைக்கு மண்சுவராலும், ஓட்டுப்புரையாலும் ஆலயம் ஒன்றை உருவாக்க நினைத்தனர். அதற்கு வடசேரி, அறுகுவிளை, புதுக்குடியிருப்பு, சாந்தான் செட்டிவிளை ஊர்க்காரர்களும், மேலப்பெருவிளை ஊர்க்காரர்களும் இணைந்து ஆலயம் எழுப்பினர்
வேண்டுதல் நிறைவேற்றும் அன்னை
1941-ம் ஆண்டு ஆலயத்தின் கோபுரம் கற்களால் கட்டி எழுப்பப்பட்டது. 1942-ம் ஆண்டு தொடங்கி 1944-ம் ஆண்டுகளில் கோவில் உட்புறப் பலிபீடம் புதுப்பிக்கப்பட்டது. இன்றும் இந்த ஆலயம் கல் கட்டிடமாகவும், ஓடுகளால் ஆன மேற்கூைரயுடனும் பழமை மாறாமல் காட்சி அளிக்கிறது. கி.பி.1858-ம் ஆண்டில் இந்தியாவில் பரவிய காலரா, வைசூரி போன்ற கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக மக்கள் மடிந்தனர். இந்தியாவின் தென்கோடியான குமரி மண்ணையும் இந்நோயின் தாக்கம் விட்டு வைக்கவில்லை. அந்த சமயத்தில் மேலப்பெருவிளை மக்கள் இந்த நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சலேத் அன்னையை நோக்கி இடைவிடாது வேண்டினர். புனித லூக்காவின் நற்செய்தி வாசகத்திற்கேற்ப மாதா, மக்களுக்கு அருள்பாலித்து, ஒரு கெபியை கட்ட பணித்தார். அதன்படி மக்கள் கற்களை தலைமேல் சுமந்து வந்து கெபியைக் கட்டினர்.
அதில் 1867-ம் ஆண்டு புனித சலேத் அன்னை சொரூபத்தை அன்றைய கொல்லம் ஆயர் எப்ரேம் ஸ்தாபித்தார். ஊர் மக்களைத் தாக்கி வந்த கொள்ளை நோய்களும் அன்னையின் அருளால் முற்றிலும் அகன்றது. அன்று முதல் இன்று வரை அன்னையிடம் மனம் உருகி வேண்டுபவர்களின் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறுகிறது என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
புதுமைகள் நிகழ்கிறது
சலேத் மாதாவின் எழில்மிகு தோற்றத்துடன் கூடிய இந்த கெபியானது 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 -ந் தேதி அன்றிருந்த பங்கு பணியாளர்களின் இடையறாத உழைப்பாலும் பங்கு மக்களின் வீடுகள் தோறும் சென்று நன்கொடைகள் பிரித்தும் புதிதாகக் கட்டப்பட்டது. அன்றைய ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் கெபியை அர்ச்சித்து வைத்தார். சலேத் அன்னை 1864-ம் ஆண்டு சலேத் மலையில் காட்சி கொடுத்ததை கொண்டாடும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 19 -ந் தேதி ஆடம்பர விழாவாக தற்போதைய பங்குத்தந்தை குருசு கார்மல் முயற்சியால் கொண்டாடப்பட்டது. அத்தோடு புதுமைகள் பல நிகழும் அன்னையின் கெபியில், மாதந்தோறும் 19-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு சிறப்பு திருப்பலியும், தொடர்ந்து கஞ்சிதர்மமும் நடைபெற்று வருகிறது. தற்போதைய பங்குத்தந்தை குருசு கார்மல் ஊர் மக்களுடன் இணைந்து, நன்கொடை சேகரித்து கெபியில் மேற்கூரை அமைத்து தந்துள்ளார்.
மேலப்பெருவிளை 1989-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந் தேதி முதல் தனிப்பங்காக உதயமானது. 1990-ம் ஆண்டு இந்த பங்கு பணியாளருக்கு இல்லம் அமைக்கப்பட்டது. அதுமுதல் பங்குத்தந்தை அங்கு தங்கி பணியாற்றி வருகிறார். 1962-ம் ஆண்டு இந்த ஊரில் ஒரு ரேடியோ நிலையம் கட்டப்பட்டது. அதனை பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக அங்கம் வகித்த லூர்தம்மாள் சைமன் திறந்து வைத்துள்ளார். 1963-ம் ஆண்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், 1966-ல் படிப்பகமும், 1968-ல் கோட்டார் சமூகசேவை மையத்தால் ஏற்படுத்தப்பட்ட கிராம மருந்தகமும் உருவானது. 1965-ம் ஆண்டில் ஊர் மக்களின் நீராதாரத் தேவையை பூர்த்தி செய்ய கோவில் நிலத்தில் கிணறு வெட்டி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. 2003-ம் ஆண்டு புனித ஜெபமாலை அன்னை சமுதாய நலக்கூடம் பங்கு மக்களின் உதவியோடு அடிக்கல் நாட்டப்பட்டு 2004-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
புனித தேவசகாயம்
2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி இந்த பங்கில் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற குருசு கார்மல், புனித சலேத் அன்னை கெபியில் புதுமை பொருட்கள் விற்பனை நிலையத்தையும், நிர்வாகிகள் அலுவலகத்தையும் கட்ட முயற்சி எடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டி முடித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் புனித தேவசகாயத்துக்கென்று வெள்ளிக்கிழமை நவநாள் திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது. அதற்கென்று திருச்சூரிலிருந்து புனித தேவசகாயம் சொரூபம் ஒன்றை தனது சொந்த முயற்சியில் வாங்கி அதை சலேத் அன்னை கெபியில் வைத்து ஸ்தாபித்து பவனியாக ஆலயத்திற்கு கொண்டுவந்த பெருமையும் பங்குத்தந்தை குரூஸ் கார்மலையே சாரும்.
மகிமை பெருகுகிறது
மேலும் இந்த ஆலயம் தொடர்பாக மேலப்பெருவிளை பங்குத்தந்தை குருசு கார்மல் கூறியதாவது:-
கோட்டார் மறை மாவட்டத்திற்கு உட்பட்ட பங்குகளில் மேலப்பெருவிளை பங்கும் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள ஜெபமாலை மாதா ஆலயத்தில் ஜெபமாலை அன்னையும், சலேத் அன்னையும் பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள். இதனை ஆலயத்துக்கு நன்றி செலுத்த வரும் பக்தர்களின் மூலமாக காண முடிகிறது. அதனால் அன்னையின் மகிமை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இந்த ஆலயத்தில் வார நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து திருப்பலியும், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு திருப்பலி, 7.30 மணிக்கு மறைக்கல்வி குழந்தைகளுக்கான திருப்பலியும் நடைபெறுகின்றன. ஞாயிறுதோறும் காலை 8.45 மணி முதல் 9.45 மணி வரை மறைக்கல்வியும், தொடர்ந்து 10.30 மணி முதல் அனைத்து சிறார் இயக்கங்களும் செயல்படுகின்றன. மாதத்தில் ஒருநாள் மறைக்கல்வி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டு வருகிறது.
உறுதிமொழி
இதுதவிர கடந்த ஆண்டு முதல் மாதத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சிறுவர்களுக்கான ஆங்கில திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மறைக்கல்வி மாணவர்களுக்கென்று ஞாயிறு காலை 7.30 மணிக்கு திருப்பலி நிறைவேற்றி அதில் மறைக்கல்வி மாணவர்களே, இசைமீட்டி பாடலும் பாட முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் அக்ேடாபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி 2-வது ஞாயிற்றுக்கிழமை முடிவடையும்.
இங்கு ஏற்கனவே மறைக்கல்வி, பாலர் சபை, சிறுவழி இயக்கம், இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம், இளைஞர் இயக்கம், மரியாயின் சேனை, வின்சென்ட் தே பவுல் சபை மற்றும் கிராம பெண்கள் சங்கம் ஆகியன செயல்பட்டு வந்தன. நான் இங்கு பொறுப்பேற்ற பிறகு நற்செய்தி பணிக்குழு, குடும்பநலப் பணிக்குழு, கைகள் தன்னம்பிக்கை இயக்கம், பிரான்சிஸ்கள் மூன்றாம் சபை, திருஇருதயநாதர் சபை, வழிபாட்டுக் குழு, கத்தோலிக்க சேவா சங்கம், பெண்கள் பணிக்குழு, கார்மல் சபை என பல சபைகள் உருவாக்கப்பட்டுள்ளது. பங்கு மக்களும் துடிப்போடு செயல்பட்டு வருகிறார்கள்.
இறையருளில் பிறந்து, பங்குதந்தையர் பணியில் வளர்ந்து, இணை தந்தையர்கள் உழைப்பில் உயர்ந்து முழுமை பெற்ற இந்த ஊர் சலேத்அன்னையின் அடிச்சுவட்டில் ஊரின் நலனிலும், வளர்ச்சியிலும் அக்கறை காட்டுகிற சமூகமாக மாற்றுவோம் என உறுதிமொழி ஏற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த திருத்தலத்திற்கு ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்கள்.
- கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இந்த திருத்தலத்திற்கு வந்து ஜெபிக்கிறார்கள்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த திருத்தலத்திற்கு அதிகம் வருகிறார்கள். அவர்கள் 9 நாட்கள் நவநாள் ஜெபம் அல்லது 9 வாரம் நவநாள் என்ற அடிப்படையில் குழந்தை இயேசுவை பிரார்த்தனை செய்கிறார்கள். அவ்வாறு செய்தவன் மூலம் ஏராளமானோருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திருப்பதாக கூறுகிறார்கள்.
அன்பு, அமைதி, பொறுமை, தியாகம் இவற்றையெல்லாம் கிறிஸ்தவம் மிகவும் வலியுறுத்தி வருகிறது. கிறிஸ்தவத்தில் கத்தோலிக்க திருச்சபையில் குழந்தை இயேசுவின் மீதுள்ள பக்தி பல ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் மனதில் இருந்து வருகிறது. இயேசுவின் புனிதமான குழந்தை பருவத்தை கிறிஸ்தவர்கள் இன்றளவும் வணங்கி வருவதுபோல் புனித குழந்தை தெரசா, புனித பிரான்சிஸ் அசிசி, புனித அந்தோணியார் மற்றும் புனித அவிலா தெரசா போன்ற பல புனிதர்கள் தெய்வீக குழந்தை இயேசுவின் மீது மிகவும் பக்தி கொண்டிருந்தார்கள்.
பூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் பெங்களூருவில் கடந்த 1969-ம் ஆண்டில் குழந்தை இயேசு மீதான பக்தி மக்களிடையே மிக அதிகமாக பரவ தொடங்கியது. பெங்களூருவில் உள்ள சொன்னேனஹள்ளி, வண்ணாரப்பேட்டை, நீலசந்திரா, ஆஸ்டின் டவுன், ஆனேபாளையா, ஈஜிபுரா போன்ற பகுதிகளில் பெருந்திரளான மக்கள் குழந்தை இயேசுவை வேண்டி ஜெபிக்க ஆரம்பித்தனர்.
குழந்தை இயேசு மீது கொண்ட தீவிர ஈடுபாட்டால்பெண் ஒருவர் விவேக்நகரில் குழந்தை இயேசுவுக்கு பேராலயம் கட்ட இடம் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் இதுபற்றி அவர் ஒரு பாதிரியாரிடம் கூறி முறையிட்டார். அப்போது விவேக்நகரில் குழந்தை இயேசுவுக்கு தேவாலயம் கட்ட இடம் கிடைக்க குழந்தை இயேசுவிடம் ஜெபிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து அந்த பாதிரியார் குழந்தை இயேசுவை நோக்கி நவநாள் ஜெபத்தை ஆரம்பித்தார். அதன்பேரில் அங்கு தேவாலயம் கட்ட இடம் கிடைத்தது.
1971-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ந்தேதி குழந்தை இயேசுவுக்கு தேவாலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. தேவாலயம் கட்டப்பட தொடங்கிய நிலையில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஜெபக்கூடத்தில் குழந்தை இயேசுவின் சொரூபம் மக்கள் வணங்குவதற்காக வைக்கப்பட்டது. அங்கு தினமும் மக்கள் வந்து குழந்தை இயேசுவிடம் தங்கள் பிரச்சினைகளை கூறி பிரார்த்தனை செய்தனர். சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக சூறாவளி காற்று, புயல் இப்படி பல்வேறு இயற்கை சீற்றங்களை தாண்டி அந்த ஜெபக்கூடம் குழந்தை இயேசுவின் அருளால் எந்தவித சேதமும் இன்றி இருந்தது. இதுவே கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் தொடர்ந்து நவநாள் ஜெபமும் நடத்தப்பட்டது.
குழந்தை இயேசுவின் அற்புதத்தைக் கண்டு ஏராளமான மக்கள் தேவாலயத்துக்கு வந்து பிரார்த்திக்க ஆரம்பித்தனர். 1972-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி வியாழக்கிழமை அன்று முதல் நவநாள் ஜெபம் தொடங்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ஒவ்வொரு வியாழக்கிழமை அன்று இந்த தேவாலயத்தில் நவநாள் ஜெபம் நடக்கிறது. இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14-ந் தேதி இந்த திருத்தலத்தின் ஆண்டு விழா கொண்டாடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு அதுவும் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு காலக்கட்டத்திற்கு பிறகு தற்போதுள்ள தேவாலயம் கடந்த 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி முழுமையாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் குழந்தை இயேசுவால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தால் தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திருத்தலத்திற்கு இன்று ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்கள். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இந்த திருத்தலத்திற்கு வந்து ஜெபிக்கிறார்கள்.
மேலும், குழந்தைகள் உடல்நிலை ஆரோக்கியமாகவும், அவர்கள் சிறந்த அறிவுத்திறனுடன் இருக்க வேண்டியும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டியும் குழந்தைகளுடன் இந்த திருத்தலத்திற்கு வந்து குழந்தை இயேசுவை பிரார்த்திக்கிறார்கள்.
- தமிழக அரசு இத்திருத்தலத்தை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 120 ஆண்டுகளைக் கடந்தும் தற்போது வானளாவிய உயரத்துடன் ஆலயம் காணப்படுகிறது
கிறிஸ்தவ தேவாலயங்களை பொறுத்தவரை, ஆண்டவர் ஏசு, தன் இரு கைகளாலும் ஆசிர்வாதம் செய்வது போலவே அவரது உருவம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சிவகங்கை மாவட்டம், இடைகாட்டூரில் உள்ள தேவாலயத்தில் மட்டும் ஏசு, தன் இதயத்தை திறந்து காட்டிய நிலையில் இருப்பார். இது மாதிரியான உருவ அமைப்பு கொண்ட சிலை, உலகிலேயே 3 இடங்களில் மட்டுமே உள்ளன. ஒன்று பிரான்ஸ் நாட்டிலுள்ள மார்க்கரேட் மேரியின் கான்வென்ட் மற்றும் 2-வது ரீம்ஸ் நகரில் உள்ள கதீட்ரல் சபையிலும், 3-வது, இந்தியாவில் இடைக்காட்டூரிலும் உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் 130 ஆண்டுகளுக்கு முன் மரிய அன்னாள் என்பவர் வாழ்ந்து வந்தார். கடுமையான இதய நோயால் அவதிபட்டு வந்த அவர் பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லையாம். இந்நிலையில், கத்தோலிக்க சபையைச் சேர்ந்த சிலர் 9 நாட்கள் விரதம் இருந்து ஆண்டவரான ஏசுவை மனம் உருகி வழிபட்டால் நோய் தீரும் என கூறினர். இதையடுத்து அன்னாள் அவ்வாறு விரதமிருந்து வழிபட தொடங்கினார். இதையடுத்து 5-வது நாள் அன்று அவரது உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்து மறுநாள் மருத்துவரிடம் சென்று காண்பித்த போது இதய நோய் குறைந்து வருவதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து நாளடைவில் அவரது இருதய நோய் முற்றிலும் குணமடைந்து விட்டதாக அந்த மருத்துவர் கூறினார். இதனால் மகிழ்ச்சியடைந்த அவர் தன் இதய நோயை குணப்படுத்திய ஆண்டவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தார். அப்போதுதான் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் பங்கு தந்தையாக இருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்டிணன்ட் செல் என்பவர் அங்கு ஒரு தேவலாயம் ஒன்றை அமைப்பதற்காக தேவையான பொருள் ஏற்பாடு செய்வதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். இதுகுறித்து தகவலறிந்த அன்னாள், அங்கு ஆலயம் அமைப்பதற்காக ஆகும் செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக கூறி அந்த ஆலயத்தை எப்படி நிர்மானிப்பது என்றும், ஆண்டவரை எப்படி உருவாக்குவது என்றும் ஆலோசித்தனர்.
இந்நிலையில் மார்க்ரேட் மேரி என்பவர் 1673-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரலேமோனியால் நகரில் உள்ள கன்னியர் மடத்தில் வாழ்ந்து வந்தார். ஒருநாள், அவர் கனவில் ஒவ்வொரு நாளும் மக்கள் படும் துன்பங்கள், துயரங்கள் மற்றும் கஷ்டங்களால் என் மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது பார் என்று கூறி, தன் இதயத்தை திறந்து காண்பித்துள்ளார் ஏசுகிறிஸ்து. கனவில் பார்த்த மார்க்ரேட் மேரி அதிர்ச்சியுடன் திடுக்கிட்டு எழுந்தார். பின், அவரது கூற்றுப்படியே ஏசு, தன் இதயத்தை திறந்து காண்பிக்கும்படியான திரு இருதய ஆண்டவர் உருவம் இங்கு உருவாக்கப்பட்டது.
மேலும் புனித அன்னாளிடம் பொருளுதவியும், மார்க்ரேட் மேரியிடம் உருவ படமும் பெற்ற பெர்டிணன்ட் செல் இடைக்காட்டூர் வந்து ஆலயம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கினார். இந்த ஆலயம் பிரான்ஸ் நாட்டு, 'கோத்தி' எனும் கட்டடக் கலையின் அடிப்படையில் சுண்ணாம்புடன், கருப்பட்டி மற்றும் இதர பொருட்களின் கலவையால் கட்டடம் கட்டப்பட்டு, 'சம்மனசு' எனப்படும் வானதூதர்கள், 153 பேரின் உருவங்களும் வைக்கப்பட்டுள்ளது. 120ஆண்டுகளைக் கடந்தும் தற்போது வானளாவிய உயரத்துடன் ஆலயம் காணப்படுகிறது. தற்போது இந்த ஆலயத்திற்கு வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் தமிழக அரசு இத்திருத்தலத்தை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆற்றூரில் புனித ஆந்திரேயா ஆலயம் உள்ளது.
- நேற்று இரவு புனிதர்களின் தேர்பவனி நடந்தது.
ஆற்றூரில் புனித ஆந்திரேயா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 30-ந்தேதி பங்கு குடும்ப விழா தொடங்கி நடந்து வருகிறது. 4-ம் திருநாளான நேற்று இரவு புனிதர்களின் தேர்பவனி நடந்தது.
நிறைவு நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு ஜெபமாலை, புகழ் மாலை, 9.30 மணிக்கு நடைபெறும் பெருவிழா திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் இயேசுரெத்தினம் தலைமை தாங்குகிறார். குழித்துறை மறைமாவட்ட பொருளாளர் அகஸ்டின் அருளுரை வழங்குகிறார்.
ஆலய பங்குத்தந்தை பெ.வெலிங்டன் கூறியதாவது:-
ஆற்றூரில் சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இணைந்து மண் சுவராலான ஓலைக் கொட்டகை அமைத்து, புனித அந்திரேயாவை பாதுகாவலராகக் கொண்டு வழிபட்டு வந்தனர்.
அதன்பிறகு, அதாவது 75 ஆண்டுகளுக்கு முன் கல்லினால் சுவர் எழுப்பி, ஓட்டுக்கூரையால் ஆலயம் அமைத்து வழிபட்டனர். புத்தன்கடை பங்கின் கிளைப்பங்காக ஆற்றூர் செயல்பட்டு வந்தது. தொடக்கத்தில் 3 மாதங்களுக்கு ஒருமுறையும், சில காலத்திற்குப் பிறகு மாதத்திற்கு ஒருமுறையும் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
புனிதரின் பரிந்துரையில் இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் எண்ணற்ற அற்புதங்கள் நடந்து வந்ததால், மக்களின் வருகை அதிகரித்தது. அப்போதைய புத்தன்கடை பங்குத்தந்தை மரியதாசனால் புதிய ஆலய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, அருட்பணியாளர் சார்லஸ் பொரோமியோவால் ஆலய கட்டுமான பணிகள் நிறைவு செய்யப்பட்டு 14.5.1979 அன்று ஆயர் ஆரோக்கியசாமியால் அர்ச்சிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வருகிறது.
புத்தன்கடை பங்கில் பொறுப்பேற்றிருந்த அருட்பணியாளர்கள் சூசை, இயேசு ரெத்தினம் ஆகியோர் பணிக்காலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்தனர்.
அதன்பிறகு 24.5.1991 அன்று ஆயர் லியோன் அ.தர்மராஜ் கோட்டார் மறை மாவட்டத்தின் 100-வது தனி பங்காக ஆற்றூர் உயர்த்தப் பட்டது.
மாத்தூர், ஏற்றகோடு, தச்சூர், மாத்தார் ஆகிய பங்குகளை ஆற்றூரின் கிளைப்பங்குகளாக கொண்டு, அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, ஆற்றூரின் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.
அருட்பணியாளர் லாரன்ஸ் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டு 26.5.2012 அன்று ஆயர் பீட்டர் ரெமிஜியுசால் அர்ச்சிக்கப் பட்டது.
பங்குத்தந்தை ஜே.செல்வராஜ் பணிக்காலத்தில் புனித அந்தோணியார் குருசடி புதுப்பிக்கப் பட்டது.
18.6.2022 அன்று நான் இவ்வாலய பங்குத்தந்தையாகப்பொறுப்பேற்றேன். தொடர்ந்து ஆலயம், குருசடி ஆகியவற்றைப்புதுப்பித்து இறை நம்பிக்கையில் மக்களை வழி நடத்தி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புனித அந்தோணியாரின் திருப்படத்தை ஆலயத்தில் ஸ்தாபித்தல் செய்கிறார்.
- புனித அந்தோணியாரின் திருப்படத்தை ஆலயத்தில் ஸ்தாபித்தல் செய்கிறார்.
வில்லுக்குறி அருகே உள்ள அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த பழைய ஆலயம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
அதைதொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட அந்தோணியார் ஆலய அர்ச்சிப்பு விழா, புனித அந்தோணியாரின் திருப்பண்டம் ஸ்தாபித்தல் விழா, முதல் திருப்பலி நிறைவேற்றி 80-ம் ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
அதன்படி நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த மண்ணில் 36 ஆண்டுகள் வாழ்ந்து தம் அன்பு, நற்குணத்தால் மக்கள் உள்ளங்களை புனித அந்தோணியார் கவர்ந்தார். அந்த புனிதரான அந்தோணியாரின் உடலின் சிறு பகுதியானது ரோம பேரரசின் உதவியுடன் இந்த ஆலயத்துக்கு கொண்டவரபட்டு உள்ளது. அதனை ஆலயத்தில் ஸ்தாபிக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றி புனித அந்தோணியாரின் திருப்படத்தை ஆலயத்தில் ஸ்தாபித்தல் செய்கிறார். சிறப்பு விருந்தனாக முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன், முளகுமூடு வட்டார முன்னாள் முதல்வர் கிலாரி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அதைதொடர்ந்து திருப்பலி, அன்பின் விருந்து ஆகியவை நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் முன்னாள் பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்பட ஏராளமான கலந்து கொள்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை சுரேஷ்பாபு பங்குபேரவை உதவி தலைவர் மரியஆன்றணி, செயலாளர் புஷ்பலதா, துணைச்செயலாளர் லீமா ரோஸ். மரிய ஜெபஸ்தியான் மற்றும் பங்குமக்கள், பங்கு பேரையினர் பக்த சபைகள் இணைந்து செய்து வருகிறார்கள்.
- கிறிஸ்தவ சபைகளில் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனை தொடங்கி விடும்.
- கத்தோலிக்க திருச்சபைகளில் இரவு தொடங்கும் ஆராதனை நள்ளிரவு வரை நீடிக்கும்.
ஆங்கில புத்தாண்டை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் சமீப காலமாக சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
2022-ம் ஆண்டு இன்று முடிந்து புதிய ஆண்டு 2023 பிறப்பதை வரவேற்கும் வகையிலும் இந்த ஆண்டு முழுவதும் பாதுகாத்து பராமரித்து வந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாட்டு ஆராதனை நடைபெறுகிறது.
அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனை தொடங்கி விடும். குறிப்பாக கத்தோலிக்க திருச்சபைகளில் இரவு தொடங்கும் ஆராதனை நள்ளிரவு வரை நீடிக்கும்.
தென் இந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ), மெத்த டிஸ்ட், ஆற்காடு லூத்தரன், பெந்தேகொஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட பிற திருச்சபைகளில் இரவு 11 மணிக்கு சிறப்பு வழிபாடு தொடங்குகிறது.
பழைய வருட ஆராதனையாக நன்றி ஏறெடுப்பு இதில் முக்கிய அம்சமாக இடம் பெறும். சரியாக இரவு 12 மணி ஆராதனையுடன் புதிய ஆண்டிற்கான ஆராதனை தொடங்கும். புதிய ஆண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவு 12 மணக்கு ஆலயங்களில் பட்டாசு வெடித்தும், மின் விளக்கை சில நிமிடங்களில் அனைத்தும் வரவேற்பார்கள்.
ஹேப்பி நியூ இயர் என கோஷங்கள் கூறி ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். அன்பின் வெளிப்பாடாக கட்டி அரவணைத்தும் வாழ்த்துக்களை கூறுவர்.
சென்னையில் சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர், அண்ணா நகர், பெரம்பூர் லூர்துமேரி, பரங்கி மலை, மாதவரம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க திருச்சபை ஆலங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இதே போல் செயின்ட் கதிட்ரல் ஆலயம், சூணி பறல், ஆருட்ரா, ராயப் பேட்டை வெஸ்லி, சிந்தாரிப் பேட்டை சியோன், பிராட்வே வண்ணாரப் பேட்டை, தாம்பரம், சேலை யூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சி.எஸ்.ஐ. மற்றும் பிற ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடக்கி றது.
புத்தாண்டையொட்டி அனைத்து ஆலயங்களும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. நட்சத்திரங்கள், ஆலயத்தை சுற்றி தொங்க விடப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் குடும்பம், குடும்பமாக புத்தாண்டு ஆராதனையில் பங்கேற்க தயாராகி வருகின்றனர்.
வழக்கத்தை விட எல்லா ஆலயங்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சாமியானா பந்தல் மற்றும் சிறப்பு கூடாரங்கள் அமைத்து உள்ளனர்.
புத்தாண்டு சிறப்பு வழிபாடு முடிந்தவுடன் அனைவருக்கும் தேனீருடன் கேக் வழங்கப்படும். புத்தாண்டையொட்டி முக்கிய ஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
- திரளாக கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
- புனித முடியப்பர் சப்பரபவனி நடைபெற்றது.
காயல்பட்டினம் கொம்புதுறை புனித முடியப்பர் ஆலய திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் மறையுறை நற்கருணை ஆசிரும் நடைபெற்றது.
ஒன்பதாவது நாளான நேற்று முன்தினம் காலையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலியும், மாலையில் திருவிழா மாலை ஆராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புனித முடியப்பர் சப்பரபவனி நடைபெற்றது.
பத்தாம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணி அளவில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் கலந்து ெகாண்டு ஆடம்பர கூட்டு திருப்பலியை நிறைவேற்றினார்.
இதில் 30-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் முதல் முறையாக நற்கருணை ஆசிர் பெற்றனர். முன்னதாக ஆயரை ஊர் மக்கள் வானவேடிக்கையுடன் ஊர்வலமாக ஆலயத்துக்கு அழைத்து சென்றனர்.
தொடர்ந்து காலை 10 மணிக்கு ஆறுமுகநேரி மக்களுக்காக ஆறுமுகநேரி பங்கு தந்தை அலாசியஸ் அடிகளார் திருப்பலி நிறைவேற்றினார்.
அதேபோல் புனித முடியப்பர் ஆலய வழி தோன்றல்களுக்காகவும், தொடர்ந்து ஏரல், பழைய காயல், புன்னக்காயல், வீரபாண்டியன்பட்டணம் போன்ற ஊர்களின் சார்பில் அந்தந்த ஊரின் பங்கு தந்தையர் தனித்தனியே திருப்பலி நிறைவேற்றினா். திருப்பலியில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிரதீஷ் அடிகளார், கொம்புத்துறை ஊர் நல கமிட்டி தலைவர் போர் தாஸ், மற்றும் ஆலய நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். திருவிழாவையொட்டி ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
- சுசீந்திரம் அருகே அக்கரை பகுதியில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது.
- கடந்த 2018-ம் ஆண்டுக்கு பிறகு உண்டியல் திறக்கப்படவில்லை என்று தலைவர் எப்ரேன் ரவி கூறினார்.
என்.ஜி.ஓ.காலனி:
சுசீந்திரம் அருகே அக்கரை பகுதியில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையடுத்து தினமும் பிரார்த்தனைகள் நடந்தது. இன்று காலையில் ஆலயத்தின் மின் விளக்கை அணைப்பதற்காக தலைவர் எப்ரின் ரவி சென்றார். அப்போது ஆலயத்தின் முன்பிருந்த அந்தோணியார் கெபி அருகில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது.
பின்னர் ஆலயத்தின் கதவும் உடைக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ஆலயத்தின் உள்ளே இருந்த மரப்பெட்டி உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து எப்ரின் ரவி சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கடந்த 2018-ம் ஆண்டுக்கு பிறகு உண்டியல் திறக்கப்படவில்லை என்றும் இதனால் உண்டியலில் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் இருந்ததாகவும் தலைவர் எப்ரேன் ரவி கூறினார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- தனிப்படை போலீசார் விசாரணை
- கண்காணிப்பு காமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு
கன்னியாகுமரி:
சுசீந்திரம் அருகே அக்கரை கடைத்தெருவில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள 2 உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து இருந்தனர். அதிலிருந்து பணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர்.
இது குறித்து தலைவர் கபிரியல் ரவி, சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்தனர். அப்போது கோவிலில் 2 கைரேகைகள் சிக்கியது.
அந்த கைரேகைகளை பழைய கொள்ளையர்களின் கைரேகைகளோடு ஒப்பிட்டு பார்த்து வரு கிறார்கள். மேலும் கொள்ளை யர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஏற்கனவே கடந்த சில நாட்களாக ஆலயங்களை குறிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வரு கிறார்கள். எனவே அதே கொள்ளையர்கள் இங்கும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
- நாளை திருவிருந்து ஆராதனை நடக்கிறது.
- 28-ந்தேதி 175-ஆவது பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடக்கிறது.
உடன்குடி கிறிஸ்தியா நகரம் தூய மார்க் ஆலயத்தின் 175-வது பிரதிஷ்டை மற்றும் அசனபண்டிகை விழா நேற்று மாலையில் ஜெயபவனியுடன் தொடங்கியது. பரிபாலனர் ஞானராஜ் கோவில் பிள்ளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இரவு 7 மணிக்கு நற்செய்தி பெருவிழா நடந்தது. இன்று(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சேகர உபவாசக கூடுகை, இரவு 7 மணிக்கு வட இந்திய மிஷனரி கலாசார நிகழ்ச்சிகள், நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு திருவிருந்து ஆராதனை, காலை 11.30 மணிக்கு வாலிப பெண்கள் பண்டிகை, இரவு 7 மணிக்கு சபையார் கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடு நடக்கிறது.
வருகிற 23-ந்தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களும் தினமும் இரவு 7 மணிக்கு நற்செய்தி பெருவிழா, 26-ந் தேதி காலை 8 மணிக்கு குடியரசு தின கொடியேற்று விழா, 11 மணிக்கு திடப்படுத்தல் ஆராதனை, 27-ந் தேதி காலை 8 மணிக்கு மிஷினரி விற்பனை விழா, மாலை 6 மணிக்கு ஆயத்த ஆராதனை, 28-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு 175-ஆவது பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடக்கிறது.
தொடர்ந்து தங்க நாணயங்கள், சிறப்பு மலர்கள் வெளியீடு நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு அசன விருந்து நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு வான வேடிக்கை, 29-ந் தேதி காலை 8.30 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை, நண்பகல் 12 மணிக்கு வேத பாட தேர்வு, மாலை 4 மணிக்கு ஞானஸ்தான, ஆராதனை, இரவு 7 மணிக்கு தியாக சுடர் என்ற வரலாற்று நாடகம் நடைபெறும்.
ஏற்பாடுகளை சேகரகுருவானவர் பாஸ்கர் அல்பட்ராஜன் கவுரவ குருவானர் ஷீபா பாஸ்கர், உதவி குருவானவர் ஜெபத்துரை, சபை ஊழியர் ஆனந்த மணி, பரிபாலனர் ஞான்ராஜ் கோவில் பிள்ளை, தலைவர் பால்ராஜ் செயலாளர் பிரின்ஸ் பொருளாளர் ஜெபஸ்டின் ஜோசப், ஒருங்கிணைப்பாளர் செபஸ்டின் ஆண்ட்ரூஸ் மற்றும் சபை மக்கள் செய்து வருகின்றனர்.
- கிழக்கு தாம்பரத்தில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது.
- விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலியை சேர்ந்த டேனியல் என்பது தெரிந்தது.
தாம்பரம்:
கிழக்கு தாம்பரத்தில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்குள்ள பாதிரியாரின் அறையில் இருந்த மாதா சிலை கண்ணாடி பெட்டியை உடைத்து தங்க சிலுவை, நகை திருடு போனது. இது தொடர்பாக சேலையூர் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது தேவாலயத்துக்கு வந்த வாலிபர் ஒருவர் காணிக்கை செலுத்திவிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது. விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலியை சேர்ந்த டேனியல் (23) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்களை குறி வைத்து திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.