search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 240305"

    • 13 ஆயிரத்து 463 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
    • கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 26-ந் தேதி வரை ரூ.14.37 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்ட நீடித்த நிலையான மேலாண்மை இயக்கம் கூட்டுப் பண்ணையத் திட்டம் மற்றும் தமிழ்நாடு நீர் பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டங்களின் மூலம் 15 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ரூ.359.16 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டு தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 13463 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

    மேலும் கூட்டுறவு துறை மூலம் 2023-24-ம் ஆண்டுக்கு ரூ.456.65 கோடி கடன் வழங்கி நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த ஏப்ரல் ஒன்று முதல் மே 26 வரை ரூ.14.37 கோடி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு தேவையான 6512.07 டன் உரங்கள் தற்போது இருப்பில் உள்ளது.மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் மண்டல இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    • தலைஞாயிறு பகுதியில் கூடுதலாக 5 ஆயிரம் எக்டரில் குறுவை சாகுபடி செய்யப்படும்.
    • குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் வயல்களை கோடை உழவு செய்து தயாராகலாம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு வேளாண்மை அலுவலகத்தில் 44 டன் ஆடுதுறை 53 நெல் விதை இருப்பு உள்ளது என்றும், விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் வாங்கி பயன்படுத்தலாம் என வேளாண்மை துறை அலுவலர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தலைஞாயிறு பகுதியில் 4 ஆயிரம் எக்டரில் குறுவை சாகுபடி நடைபெறும்.

    ஆனால், இந்த ஆண்டு சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால் தலைஞாயிறு பகுதியில் கூடுதலாக 5 ஆயிரம் எக்டரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    குறுவை சாகுபடிக்காக தலைஞாயிறு, நீர்முளை, கொத்தங்குடி, பனங்காடி ஆகிய 4 வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஆடுதுறை 53 நெல் விதை 44 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், சாகுபடிக்கு தேவையான சிங் சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட நுண்ணூட்ட சத்து உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது விதை மற்றும் உரங்கள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்றும், குறுவை சாகுபடிக்கு தற்போது கோடை உழவு செய்ய ஏற்ற நேரமாகும்.

    எனவே, குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் வயல்களை கோடை உழவு செய்து குறுவை சாகுபடிக்கு தயாராகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 331 மெட்ரிக் டன் காம்ளக்ஸ் உரம் தருமபுரி ரயில் நிலையம் வந்தடைந்தது.
    • விவசாய தேவைக்கு பயன்படுத்த மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஜயா கூறியுள்ளார்.

    தருமபுரி, 

    தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக் கடைகளுக்கு வினியோகம் செய்ய டி.ஏ.பி உரம் 1027 மெட்ரிக் டன்னும் 331 மெட்ரிக் டன் காம்ளக்ஸ் உரம் தருமபுரி ரயில் நிலையம் வந்தடைந்தது.

    தருமபுரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 76 மெட்ரிக் டன் டி.ஏ.பியும், காம்ப்ளக்ஸ் 20 மெட்ரிக் டன்னும், கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 70 மெட்ரிக் டன் டி.ஏ.பியும் 25 மெட்ரிக் டன் காம்ளக்ஸ் உரங்களும்,

    திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு 60 மெட்ரிக்டன் டி.ஏ.பி உரமும், தருமபுரி மாவட்ட இருப்பு கிடங்கில் 310 டன் டி.ஏ.பி உரமும் காம்ளக்ஸ் உரம் 130 மெட்ரிக் டன்னும், கிருஷ்ணகிரி மாவட்ட இருப்பு கிடங்கில் 511 மெட்ரிக் டன் டி.ஏ.பி உரங்களும் 136 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் இருப்பு வைக்கப்பட்டன.

    லாரிகளில் மூலம் பிரித்து அனுப்பும் பணியினை தருமபுரி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு தாம்சன் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது இப்கோ தருமபுரி மாவட்ட விற்பனை அலுவலர் அப்துல்லா உடனிருந்தார். மேலும் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் யூரியா 2923 மெட்ரிக் டன்னும் டி.ஏ.பி 3043 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 811 மெட்ரிக் டன்னும் காம்ளக்ஸ் 4668 மெட்ரிக் டன்ணும், சூப்பர் பாஸ்பேட் 395 மெட்ரிக் டன்னும் மொத்தம் 11840 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட் டுள்ளது.

    விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி அரசு மானிய உரங்களை பெற்று தங்களின் விவசாய தேவைக்கு பயன்படுத்த வேண்டுமாய் தருமபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஜயா அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

    • தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.
    • வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைக்க வேண்டும், புல் இனக்களை நீக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேதாரண்யம் பகுதியில் நடப்பு சம்பா, தாளடி நெற்பயிர்களில் இலை சுருட்டு புழு தாக்குதல் தென்படுகிறது.

    இதன் அறிகுறிகள் என்ன வென்றால் நெற்கதிரில் உள்ள இலைகள் நீள் வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும்.

    தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.

    இலைகள் நீள்வாட்டில் சுருண்டு, புழுக்கள் அதனுள்ளே இருந்துவிடும்.

    இதனை கட்டுப்படுத்தும் முறைகளாவது நெல்வயல்களில் தேவைக்கு அதிகமாக தொழு உரங்கள் இடுவதை தவிர்க்கவும். வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைக்க வேண்டும், புல் இனக்களை நீக்க வேண்டும்.

    இலை சுருட்டு புழுவை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு, வேப்பஎண்ணை ஆகியவற்றை தெளிக்க வேண்டும்.

    மேலும் பூச்சிச்கொல்லியை கட்டுப்படுத்த அசிபேப் அசார்டியாக்டின் குளோரோடேரேனிலிபுருள் புளுபென்டிமைட் தையமீத்தாக்கம் மருந்துகளை தெளித்து இலை சுருட்டு புழுவை கட்டுபடுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டிஎஸ்பி உரத்தினை கரைத்து தெளிந்த கரைசலை மேலாக வடிகட்டி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
    • விவசாயிகள் தங்கள் வரப்பு உளுந்து சாகுபடியில் கூடுதல் கவனம் வைத்து அதிக மகசூல் அடைய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் சம்பா தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல் வரப்புகளில் பெருமளவில் உளுந்து சாகுபடி உள்ளது.

    இவ்வாண்டு குறிப்பிட்ட இடைவெளியில் சீராக வடகிழக்கு பருவமழை கிடைப்பதால் வரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து நன்கு செழித்து வளர்ந்து உள்ளது. தற்போது பூக்கும் தருணத்தில் உள்ளது.

    ஆடுதுறை 5 வம்பன் 8 முதலிய இடங்களில் பயிரிடப்பட்டுள்ளன வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்வதால் கூடுதல் வருமானமும் இயற்கை முறையில் நெல் வயலில் தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்த முடிகிறது.

    2 சதவீதம் டிஏபி கரைசல் 20 லிட்டர் தண்ணீரில் நாலு கிலோ டிஎஸ்பி உரத்தினை கரைத்து 24 மணி நேரம் ஊற வைத்து பிறகு தெளிந்த கரைசலை மேலாக வடிகட்டி எடுத்து அத்துடன் 180 லிட்டர் தண்ணீர் கலந்து மாலை நேரத்தில் கைதெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

    பயிர் வகை நுண்ணுட்டம் இரண்டு கிலோ 100 லிட்டர் தண்ணீர் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும் பஞ்சகவ்யா பசு மாட்டின் சாணம் கோமியம் பால்,நெய் தயிர் முதலியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் நொதி கரைசல் பஞ்சகாவியம் ஆகும் .

    இப் பஞ்சகாவியத்தினை ஒரு டேங்க்கு 300 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். உயிர் உரங்கள் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஸ் பாக்டீரியா மூன்றையும் தலா 250 மில்லி கலந்து இந்த கரைசலை டேங்குக்கு 100 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

    உளுந்து சாகுபடிகள் மூலம் கூடுதல் வருமானம் புரதச்சத்து உள்ள உணவு கிடைப்பதுடன் கால்நடைகளுக்கு உளுந்து தட்டை தீவனமாக பயன்படுகிறது. எனவே விவசாயிகள் தங்கள் வரப்பு உளுந்து சாகுபடியில் கூடுதல் கவனம் வைத்து அதிக மகசூல் அடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உரங்களுடன் இணை பொருட்கள் வாங்க வற்புறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
    • கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் யூரியா 1991 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 841 மெட்ரிக் டன், பொட்டாஷ் 574 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 2,028 மெட்ரிக் டன் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உரங்கள் அரசு நிர்ணயம் செய்த விலையிலேயே தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலையில் பிஓஎஸ் எந்திரங்கள் மூலமாக பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்களை விவசாயிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்து விற்க வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்களை தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும். விவசாயிகள் உரங்கள் வாங்கும் போது உரிய ரசீது பெற வேண்டும்.

    மேலும் இருப்பு விபரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். உரங்களுடன் நேனோ யூரியா போன்ற இணை பொருட்களை விவசாயி களுக்கு கட்டாயப்படுத்தி வழங்கக்கூடாது.

    உரிய ஆவணமின்றி உர விற்பனையில் ஈடுபடக்கூடாது. இதனை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரசாயன உரங்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக சில விவசாயிகள் இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றனர்.
    • ஆடுகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம், திருக்கருக்காவூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயத்திற்கு கால்நடைகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்த சமீபகாலமாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    முந்தைய காலங்களில் கால்நடை கழிவுகளை இயற்கை உரமாக வயல்களுக்கு இட்டு அதிகளவில் விவசாயம் செய்து வந்தனர். அதற்காகவே விவசாயிகள் அதிகளவில் வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வந்தனர். சமீபகாலமாக கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால் கால்நடை கழிவுகள் அதிகளவில் கிடைப்பதில்லை.

    அதனால் இயற்கை உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தது.

    ரசாயன உரங்களால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு அதில் விளைவிக்ககூடிய தானியங்களை உண்ணும் மனித இனம் மட்டுமின்றி கால்நடைகள் உள்பட அனைத்து உயிரினங்களும் பல்வேறு நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

    சமீப காலமாக ரசாயன உரங்கள் தட்டுப்பாடு, மற்றும் விலை உயர்வு காரணமாக சில விவசாயிகள் மீண்டும் இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றனர்.

    வயல்களில் ஆடுகள், மாடுகள் உள்ள கால்நடைகளை அடைத்து வைப்பதன் மூலம் கால்நடைகளின் சாணம், புளுக்கை மற்றும் கழிவு விவசாய நிலங்களுக்கு மீண்டும் இயற்கை உரம் சிறந்த இயற்கை உரமாக கிடைக்கிறது.

    இதற்காக இராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் தஞ்சை உள்பட டெல்டா மாவட்டங்களுக்கு மேய்ச்சலுக்காகவும் இயற்கை உரத்திற்காக கொண்டு வரப்பட்டு ஆடுகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கிடை அமைக்கும் பணிகளில் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து ஏலாகுறிச்சி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர் கூறியதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் அறுவடை பணிகள் முடிந்தவுடன் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து ஆடு, மாடுகளை சேகரித்து மேய்ச்சலுக்காக கொண்டு வந்து சுமார் 5 மாதம் வரை இங்கேயே கிடை அமைத்து தங்கி மேய்ச்சலில் ஈடுபடுத்துவோம்.

    ஒரு இரவுக்கு கிடை வைக்க 2 ஆயிரம் பணம் மற்றும் 3 படி அரிசியை கூலியாக பெறுவோம் என்றார்.

    • நடப்பு பருவத்திற்கு தேவையான ஸ்பிக் யூரியாமற்றும் டிஏபி சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 673 மெட்ரிக் டன் அளவு வந்தடைந்தது.
    • விவசாயிகள் பயிர்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படு த்தாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட காம்ப்ளஸ் உரங்க ளையும் பயன்படுத்த வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனி யார் உர நிறுவன நிலை யங்களில் யூரியா 2 ஆயிரத்து 558 மெட்ரிக் டன், டிஏபி1,243 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,113 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 679 மெட்ரிக் டன்மற்றும் காம்ப்ளக்ஸ் 3,424 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நடப்பு பருவத்திற்கு தேவையான ஸ்பிக் யூரியாமற்றும் டிஏபி சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 673 மெட்ரிக் டன் அளவு வந்தடைந்தது.

    இதனை வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் (த.க) ஆய்வு செய்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரைப்படி பயிர்களு க்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் வாங்கி ரசீது பெற்று பயனடையலாம். விவசாயிகள் பயிர்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படு த்தாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட காம்ப்ளஸ் உரங்க ளையும் பயன்படுத்த வேண்டும்.

    மேலும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டு றவு விற்பனை நிலை யங்களில் அரசு நிர்ண யித்த விலையில் மட்டும் விற்பனை விவசாயி களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • கையில் பெரிய அளவிலான பேனா படம் வரைந்திருந்த தெர்மாகோலுடன் மனு கொடுக்க வந்தனர்.
    • விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி விவசாய கடன் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்கிட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநிலத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் தங்களது கையில் பெரிய அளவிலான பேனா படம் வரைந்திருந்த தெர்மாகோலுடன் வந்து மனு கொடுக்க வந்தனர்.

    அவர்கள் வைத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டன. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுவரை நிவாரணமும் வழங்கவில்லை . இழப்பீம் வழங்கவில்லை. உடனடியாக பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 81 இடங்களில் நெல் சேமிப்பு கிடங்கு கட்டினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். டெல்டா மாவட்டங்களில் உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். விலைவாசி ஏற்றம் உள்ள டி.ஏ.பி. ரூ.1400-ம், பொட்டாஷ் விலை ரூ.1900-ம், காம்ப்ளக்ஸ் விலை ரூ.1500 என உள்ளதை உடனே குறைக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய பம்பு செட்டுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை உடனே மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். 2022-23-க்கான சம்பா பருவத்திற்கு கூட்டுறவு கடன் உடனே வழங்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி விவசாய கடன் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கொடுத்தனர். தெர்மாகோல் பேனாவுடன் மனு கொடுக்க வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாடித்தோட்ட பைகள், செடி வளர்ப்பதற்கான தொங்கும் தொட்டிகள், மண்புழு உரங்கள், கை தெளிப்பான்கள், கவாத்து கத்திரிக்கோல் மற்றும் குழித்தட்டுகளும் உள்ளன.
    • விற்பனை செய்யும் அனைத்து பொருட்களும் தரமானதாகவும், குறைவான விலையிலும் இருப்பதனால் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தோட்டக்கலை மற்றும் மழை பயிர்கள் துறை சார்பில் தஞ்சாவூர் உழவர் சந்தையில் டான்ஹோடா விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது.

    தோட்டக்கலை துணை இயக்குநர் கலைச்செல்வன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் மரியரவிஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இங்கு தோட்டக்கலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குன்னூர் பழப்பதனிடும் நிலையத்தில் தயாரித்த ஜாம், மா ஊறுகாய்,மற்றும் கன்னியா குமாரியில் உள்ள தேனீக்கள் மகத்துவ மையத்தில் தயாரித்த தேன், பட்டை மற்றும் பிரியாணி இலையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.மேலும் மாடித்தோட்ட பைகள், செடி வளர்ப்பதற்கான தொங்கும் தொட்டிகள், மண்புழு உரங்கள், கை தெளிப்பான்கள், கவாத்து கத்திரிக்கோல், மற்றும் குழித்தட்டுகளும் உள்ளன.

    இங்கு விற்பனை செய்யும் அனைத்து பொருட்களும் தரமானதாகவும், குறைவான விலையிலும் இருப்பதனால் பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தோட்ட க்கலை உதவி இயக்குநர்கள் முத்தமிழ்ச்செல்வி, கனிமொழி, தோட்டக்கலை அலுவலர்கள் சோபியா, கிருத்திகா, உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் ஜெய்ஜிபால், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் வெங்கடாசலபதி, செந்தில்குமார், ராஜ்குமார் மற்றும் வேளாண் வணிகதுறை உதவி அலுவலர்கள் அமரேசன், மோனிஷா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    • தனியார் நிறுவனம் மூலம் விவசாயிகளுக்கு அரசின் சான்று பெற்ற விதை நெல் மற்றும் உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
    • 30 சதவீதம் பகுதி நெற்கதிர் வந்த நிலையில், மீதமுள்ள 70 சதவீதம் பகுதி விதை நெல் முளைப்பு திறன் இல்லாததால் பயிர் வீணாகியுள்ளது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள வேளாண்துறை இலக்கு நிர்ணயித்து, அதற்கேற்ப அரசின் சான்று பெற்ற விதை நெல் அரசு மூலமாகவும், அரசின் அனுமதியுடன் தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டது.

    அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்னும் 5 அல்லது 6 வாரங்களில் அறுவடை பணிகள் நடை பெற உள்ளது.

    இந்நிலையில் வலங்கை மான் வட்டம் தென்கரை ஆலத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் விவசாயிகளுக்கு அரசின் சான்று பெற்ற விதை நெல் மற்றும் உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இத்தகைய தனியார் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்பட்ட அரசு சான்று பெற்ற விதை நெல் ரகம் கோ.51 என்ற விதை நெல்லை, வெங்கடேசன்,சுகுமார், சீனிவாசன், குரு சீனிவாசன், கணேசன்,வீரமணிபோன்ற ஏராளமான விவசாயிகள் வாங்கி சுமார் நூற்றுக்க ணக்கான ஏக்கர் பரப்பளவில் குறுவை நடவு பணிகளை மேற்கொண்டனர்.

    இன்னும் ஒரு சில வாரங்களில் அறுவடை பணிகள் தொடங்க உள்ள நிலையில் கோ.51 ரகம் பயிரிடப்பட்ட வயல்களில் 30 சதவீதம் பகுதி நெற்கதிர் வந்த நிலையில், மீதம் உள்ள 70 சதவீதம் பகுதி விதை நெல் முளைப்பு திறன் இல்லாததால் பயிர் வீணாகியுள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் வேளாண்துறை கட்டுப்பா ட்டில் செயல்படும் விதை நெல்லை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் தனியார் நிறுவனம்.

    அரசு சான்று பெற்ற விதை நெல்லின் தரமற்ற விதை நெல்லை கலப்படம் செய்தனரா?

    அல்லது குறுவை நெல்லுடன் சாம்பா, தாளடி போன்ற நெல்லை கலந்து விற்பனை செய்தனராா?

    என் பிரச்சினை எழுதுவதாகவும் இதற்கு வேளாண் துறை அதிகாரிகளே முழு பொறுப்பு என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

    தென்கரை ஆலத்தூர் கிராமத்தில் நூற்றுக்க ணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ள குறுவை விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    போலி கலப்பட விதை நெல்லால் குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கினால் தான் விவசாயத்தையும், தங்கள் குடும்பத்தையும் காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அரசு போலி கலப்பட விதை நெல் விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, கலப்பட விதை நெல்லால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி அதன் மூலம் அடுத்த கட்ட சம்பா, தாளடி பயிர் சாகுபடி பணிகளை மேற்கொள்ள அரசு பேருதவியாக இருக்க வேண்டும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

    • பயிருக்கு குறைந்த அளவில் தேவைப்படும் சத்துக்களான இரும்பு, துத்தநாகம், போரான், தாமிரம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கும்.
    • விவசாயிகள் குறைந்த செலவில் கூடுதல் மகசூல் பெற உதவிடும் வகையில் அவற்றை மானிய விலையில் வழங்கி வருகிறது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் வேளாண்மை உதவி அலுவலர் கோவிந்தசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உணவில் உப்பின் பயன்பாட்டை போன்றே நுண்ணூட்ட உரங்கள் தேவை. அதை சிறிதளவில் இட்டாலும் இதன் தேவை இன்றியமையாதது. பயிருக்கு குறைந்த அளவில் தேவைப்படும் சத்துக்களான இரும்பு, துத்தநாகம், போரான், தாமிரம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கும்.

    இரும்புச்சத்து பயிரின் பச்சை தன்மையை சீராக வைக்க உதவுகிறது. இதன் குறைப்பாட்டால் பயிர்கள் வெளிறி மஞ்சள் நிறம் அல்லது வெண்மை நிறத்துடன் காணப்படும். துத்தநாகச்சத்து கணு இடைப்பகுதி வளர்ச்சி, புரதங்களின் சேர்க்கையில் பங்காற்றி மொத்த மகசூலில் 20 சதவீதம் வரை அதிகரிக்க உதவுகிறது. இந்த சத்து குறைப்பாட்டால் பயிர்கள் வளர்ச்சி குன்றி குட்டையாகி மகசூல் பாதிக்கும். போரான் சத்து குறைப்பாட்டால் பூ உதிர்தல், காய், கனிகளின் அளவு சிறுத்து, ஒல்லியாகவும் ஒழுங்கற்ற அமைப்புடன் காணப்படும்.தாமிர சத்து பயிரின் இனப்பெருக்கத்தினை அதிகரித்து, அதிக மகசூல் பெற உதவுகின்றது. இந்த சத்து குறைப்பாட்டினால் பயிரில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. மாங்கனீசு சத்து பச்சையம் உருவாதல், ஒளிர்சேர்க்கை, நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.

    இதன் குறைபாட்டால் இலை நரம்பிடை பகுதிகள் வெளிறி காணப்படும். பயிர்களில் எளிதில் நோய் ஏற்படும். இவ்வாறு பல்வேறு முக்கிய பணி களை செய்யும் இந்த நுண்ணூட்டச் சத்துக்கள் இடுவதன் மூலம் நமது பயிரின் மொத்த மகசூலில் 15-20 சதவீம் கூடுதலாக பெறலாம். குறைந்த அளவே தேவைப்படும் இந்த நுண்ணூட்ட உரங்கள் ஒவ்வொரு பயிருக்கும் தேவைப்படும் அளவு மாறும்.வேளாண்மை துறை நுண்ணூட்ட சத்து கலவை களாக, சிறு தானிய பயிர்களுக்கான கலவை, எண்ணை வித்து கலவை, தென்னை நுண்ணூட்ட கலவை என ஒவ்வொரு பயிருக்கும் தேவையான அளவு சத்துக்களை தேவையான விகிதத்தில் கலந்து விவசாயிகள் வழங்கி வருகிறது. இதை பயிருக்கு ஏற்ப இடுவதற்கு எளிதாக ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ நுண்ணூட்ட கலவை பொட்டலங்களாக விநியோகம் செய்து வருகிறது.

    விவசாயிகள் குறைந்த செலவில் கூடுதல் மகசூல் பெற உதவிடும் வகையில் அவற்றை மானிய விலையில் வழங்கி வருகிறது. நடப்பு பருவத்தில் பரமத்தி வட்டார விவசாயிகள் கூடுதல் மகசூல் பெற ஜி.எஸ்.டி நீங்கலாக 50 சதவீத மானிய விலையில் நுண்ணூட்ட உரங்களை பெற்று பயிருக்கு இடலாம். விவசாயிகள் சிட்டா நகல், ஆதார் எண்ணுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

    ×