என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளி"

    • திருமண தடை நீங்கும். கஷ்டங்கள் விலகும். வியாபாரம் தொழில் நன்றாக நடைபெறும்.
    • ஆயுள் விருத்தி உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.

    கருச்சிதைவையும், நம் கருமத்தையும் நீக்குபவள்.

    நம் ஜாதகத்தில் உள்ள ராகு, கேது தோஷங்கள் நிவர்த்தி செய்பவள்.

    நம் ஜாதகத்தில் உள்ள பூர்வீக தோஷங்கள், பாவங்களை நீக்கி அருள்பவள்.

    அமாவாசை தினத்தன்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அஷ்ட ஹோமம். ஸர்பரேஷ்வரர் ஹோமம். சரித்தியங்கர ஹோமம் நடைபெறும்.

    கணபதி ஹோமத்தின் பலன்கள்

    சங்கடங்களும், கஷ்டங்களும், துன்பங்களும் விலகி சகல நன்மைகளும் உண்டாகும்.

    நவக்கிரக ஹோமத்தின் பலன்கள்

    திருமண தடை நீங்கும். கஷ்டங்கள் விலகும். வியாபாரம் தொழில் நன்றாக நடைபெறும்.

    அஷ்ட பைரவர் ஹோமத்தின் பலன்கள்

    ஆயுள் விருத்தி உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.

    சர்பரேஸ்வரர் ஹோமத்தின் பலன்கள்

    பட்சி தோஷம், பிசு கத்தி தோஷம் (பெண் சாபம்) வாகன தோஷம் நிவர்த்தி ஆகும்.

    பிரத்தியங்கரா தேவி ஹோமத்தின் பலன்கள்

    கிரகங்களால் ஏற்படும் தடைகள், அதனால் உண்டாகும் பாவங்களும் நீங்கி தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இவ்விமானம் அறிவானந்த வடிவமானது என்று தலப்புராணம் கூறுகிறது.
    • முதல் சுற்றாலையின் வட பகுதியில் அம்பாள் கோவிலும், அதன் கீழ் பால் சரபேசர் கோவிலும் இருக்கிறது.

    சரபேஸ்வரருக்கு கும்ப கோணத்திற்கு அருகில் மயிலாடுதுறை செல்லும் சாலையில் திருபுவனம் என்ற ஊரில் உள்ள கம்பகரேஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி உள்ளது.

    திரிபுவன வீரபுரம் என்பதே இத் தலத்தின் பழைய பெயராகும்.

    இப் பெயரே இவ்வூர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

    இப் பெயர் இப்போது திருபுவனம் என்று மருவி வழங்கப்படுகிறது.

    இது மட்டுமின்றி விவவனம், திரிபுரவனம், தேவசேத்திரம் என்ற வேறு பல பெயர்களும் இத்தலத்திற்கு உள்ளன.

    ஊரின் நடுவே கிழக்கு நோக்கி இக் கோவில் அமைந்துள்ளது. இதற்கு 3 முக்கிய வாசல்கள் இருக்கிறது.

    அவைமட்டுமின்றி அர்த்த மண்டபத்தின் தென் பகுதியில் ஒன்றும், வட பகுதியில் ஒன்றும் ஆக 2 வாசல்கள் இருக்கின்றன.

    முதல் கோபுரம் 7 நிலைகளுடனும், 2ம் கோபுரம் 3 நிலைகளுடனும் கூடிய வாசல்கள் அழகுபெற செய்கின்றன.

    இக் கோவிலுக்கு 2 பிரகாரங்கள் இருக்கிறது.

    அவற்றுள் முதல் திருச் சுற்றாலையில் திருச்சுற்று மாளிகை இருக்கிறது.

    இம் முதல் திருச்சுற்றாலையில் நடுப்பகுதியில் நடுக்கந் தீர்த்த பெருமாள் எழுந்தருளி இருக்கிறார்.

    கர்ப்ப கிரகத்தின் விமானம் தஞ்சை ராஜராஜேச்சரம், கங்கை கொண்ட சோழேச்சரம் இவைகளின் விமானங்களை ஒத்தது ஆகும்.

    இவ்விமானம் அறிவானந்த வடிவமானது என்று தலப்புராணம் கூறுகிறது.

    முதல் சுற்றாலையின் வட பகுதியில் அம்பாள் கோவிலும், அதன் கீழ் பால் சரபேசர் கோவிலும் இருக்கிறது.

    2ம் திருச்சுற்றாலையில் வசந்த மண்டபமும், யாக சாலையும் அமைந்திருக்கிறது.

    மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் பெயர் ஸ்ரீகம்பகரேசுவர்.

    தமிழில் நடுக்கம் தீர்த்த பெருமான் என்பது பொருள்.

    திருபுவன ஈச்சரமுடையாக தேவர் என்பது இக்கோவில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருப்பெயராகும்.

    • 51 சக்தி பீடங்களில் ஒன்றாக ஜெசோரேஷ்வரி கோவில் விளங்குகிறது.
    • வங்கதேச சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் மோடி இக்கோவிலுக்கு சென்றார்.

    டாக்கா:

    வங்கதேசத்தின் சத்கிரா சியாம்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெசோரேஷ்வரி காளி தேவி கோவில் அமைந்துள்ளது. இந்து புராணங்களின்படி இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருக்கும் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக ஜெசோரேஷ்வரி கோவில் விளங்குகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது வங்காளதேச சுற்றுப்பயணத்தின்போது இந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள காளி தேவி சிலைக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கிரீடம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம் தற்போது திருடப்பட்டுள்ளது. நேற்று கோவில் பூசாரி தினசரி பூஜையை முடித்துவிட்டு கிளம்பிய பின் மதியம் 2 மணி முதல் 2.30 மணிக்குள் இந்த திருட்டு நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கர்நாடக மாநிலத்தில் நாளை பிரதிஷ்டை செய்யப்படுகிறது
    • அந்த சிலை 6 டன் எடையுடன் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் 100-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைக்கூடங்கள் உள்ளன. அங்கு கல்லில் செதுக்கப்படும் சாமி சிலைகள் இந்தியா முழுவதும் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் திருமுருகன்பூண்டியில் உள்ள ஒரு சிற்பக்கலைக்கூடத்தில் 12 அடி உயரத்தில், பல்வேறு சிறப்பம்சங்களுடன் கொல்கத்தா காளி சிலை செதுக்கப்பட்டுள்ளது. அந்த சிலை 6 டன் எடையுடன் ஒரே கல்லில், 10 தலைகள், 10 கால்கள், ஏகசூலம், சங்கு, கதை, ரத்த கின்னம், கதிர் அரிவாள், அரக்கன் தலை, கத்தி, சாட்டை, வில் அம்பு, டமாரம் என 10 கைகளிலும் 10 ஆயுதங்களுடன் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் காளி சிவன் ரூபத்தில் வந்து கொடூர அரக்கனை காலடியில் போட்டு மிதிப்பது போன்றும் சிலை செதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காளிக்கு 20 மனித தலைகள் கொண்ட மாலை அணிவித்திருப்பது போன்ற தோற்றத்துடன் சிலை சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. சிற்பி சிவக்குமார் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் 6 மாதங்களில் இந்த சிலை வடிவமைப்பு பணியை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

    இந்த சிலை நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருமுருகன்பூண்டியில் இருந்து கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சாந்திராம கிராமத்தில் உள்ள கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக லாரி மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

    • பிரபல ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை.
    • இவர் வெளியிட்ட காளி ஆவணப்பட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பிரபல ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கிய, 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார். அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

    கனடாவில் வெளியிடப்பட்ட இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்ட லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர்.


    காளி போஸ்டர்

    லீனா மணிமேகலை மீதான புகாரின் அடிப்படையில் டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, லீனா மணிமேகலை மீண்டும் சிவன், பார்வதி வேடமிட்ட இருவர் புகைப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார்.

    இந்நிலையில் இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்யக்கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, லீனா மணிமேகலையை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறும் அவரது தயாரிப்பு நிறுவனமான டூரிங் டாக்கீஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டும் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    • காளி பட போஸ்டர் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி டெல்லி போலீசில் புகார்.
    • இந்து கடவுளை அவமரியாதை செய்வதாக கனடா இந்து அமைப்புகள் குற்றச்சாட்டு.

    இயக்குனர் லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது.


    லீனா மணிமேகலை

    இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் காளி பட போஸ்டர் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இயக்குனர் லீனா மணிமேகலை மீது டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச மாநில போலீசார் 153A மற்றும் 295A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதனிடையே டொராண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகம், இந்திய தூதரகம் அறிவுறுத்தலின் படி காளி ஆவணப்படத்தை திரையிடுவதிலிருந்து நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில்,  தொடர்ந்து எழுந்த சர்ச்சை காரணமாக இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்ட காளி ஆவணப்பட போஸ்டர் சமூக வலைதள நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தை சேர்ந்த திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை என்பவர் ‘’காளி’’ என்ற பெயரில் ஒரு ஆவணப்படத்தை எடுத்துள்ளார்.
    • லீனா மணிமேகலையை கைது செய்து, தவறுக்கான தண்டனையை மத்திய அரசு கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும் என சித்தர் கூறியுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம், அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தை சேர்ந்த திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை என்பவர் ''காளி'' என்ற பெயரில் ஒரு ஆவணப்படத்தை எடுத்துள்ளார். இந்த ஆவணப்படத்தில் இவரே நடித்துள்ளதுடன், இந்துக்களின் தெய்வமான காளியை படபோஸ்டரில் புகை பிடிப்பது போன்று அவதூறாக சித்தரித்துள்ளார்.

    மதவழிபாடுகளில் முன்னோர்கள் காலம் முதல் இப்போது வரையிலும் பாரம்பரியத்தை தவறாமல் கடைபிடித்து வரும் தமிழகத்தை சேர்ந்த இந்த இயக்குநர் இந்த அளவுக்கு கீழ்த்தரமாக நடந்துகொண்டுள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    இந்து தெய்வத்தின் புனிதத்தை பாழ்படுத்தியற்காக இந்த லீனா மணிமேகலையை கைது செய்து, தவறுக்கான தண்டனையை மத்திய அரசு கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும்.

    மேலும், அவரது ஆவணப்படத்தை உலகின் எந்தப்பகுதியிலும் வெளியிட முடியாத அளவிற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கையை தாமதமின்றி உடனடியாக எடுத்திடவேண்டும். சமூகவலை–தளங்களில் பதிவிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தின் போஸ்டர்களை எல்லாம் முற்றிலுமாக இல்லாமல் செய்திடவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காளி பட போஸ்டர் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி டெல்லி போலீசில் புகார்.
    • இந்து கடவுளை அவமரியாதை செய்வதாக கனடா இந்து அமைப்புகள் குற்றச்சாட்டு.

    இயக்குநர் லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் காளி பட போஸ்டர் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இயக்குனர் லீனா மணிமேகலை மீது டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பாக 153A மற்றும் 295A ஆகிய பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி காவல்துறை பி.ஆர்.ஓ. சுமன் நல்வா, தெரிவித்துள்ளார்.

    இதனிடையே டொராண்டோவில் உள்ள ஆகாகான் அருங்காட்சியகத்தில் காளி ஆவணப்படம் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் போஸ்டர் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பொருட்களை திரும்பப் பெறுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை இந்திய தூதரகம் வலியுறுத்தி உள்ளது.

    இது தொடர்பாக கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து கடவுளை அவமரியாதையாக சித்தரிப்பது குறித்து கனடாவில் உள்ள இந்து சமூகத் தலைவர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக காளி ஆவணப்பட போஸ்டர் குறித்து இயக்குனர் லீனா மணிமேகலை தமது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு மாலைப்பொழுதில் டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் இந்த ஆவணப்படம் என்று கூறியுள்ளார்.

    • லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள ஆவணப்படம் காளி.
    • இதன் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய ஆவணப்படங்களுக்கு பல விருதுகள் கிடைத்தன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறை பற்றி இவர் இயக்கிய மாடத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளையும் வென்றது. கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் சாதிய ஒடுக்குமுறைகள், பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பல கவிதைகளை எழுதியுள்ளார்.


    காளி போஸ்டர்

    லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், இந்த சர்ச்சை குறித்து இயக்குனர் லீனா மணிமேகலை சமூக வலைத்தளத்தின் வாயிலாக விளக்கமும் அளித்துள்ளர். இந்நிலையில், நடிகை குஷ்பு, லீனா மணிமேகலை, காளி ஆவணப்படத்தின் போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • லீனா மணிமேகலையின் ஆவணப்படங்கள் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.
    • பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து கவிதைகளை எழுதியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய ஆவணப்படங்களுக்கு பல விருதுகள் கிடைத்தன. இவரின் பறை, தேவதைகள், பலிபீடம் போன்ற பல ஆவணப்படங்கள் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறை பற்றி இவர் இயக்கிய மாடத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளையும் வென்றது. கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் சாதிய ஒடுக்குமுறைகள், பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பல கவிதைகளை எழுதியுள்ளார்.

    காளி

    காளி

    லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    லீனா மணிமேகலை - காளி

    லீனா மணிமேகலை - காளி

    இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து இயக்குனர் லீனா மணிமேகலை சமூக வலைத்தளத்தின் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தா "arrest leena manimekalai" hashtag போடாம "love you leena manimekalai" hashtag போடுவாங்க என லீனா தெரிவித்துள்ளார்.

    மற்றொரு பதிவில், "எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்" என லீனா தைரியமாக குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காளி சிகரெட் புகைப்பது போன்று வெளியிடப்பட்டுள்ள போஸ்டருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • இந்துக்கள் குறிவைக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

    சென்னை:

    ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கி உள்ள 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில் இந்துக்களின் கடவுளான மகா காளி, சிகரெட் புகைப்பது போன்றும், ஒரு கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தியபடியும் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்து கடவுளை அவமதிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டருக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    டுவிட்டரில் #ArrestLeenaManimekalai என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் இந்து மதம் கேலி செய்யப்படுகிறது, இந்துக்கள் குறிவைக்கப்படுவதாகவும் பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

    • லீனா மணிமேகலையின் ஆவணப்படங்கள் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.
    • பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து கவிதைகளை எழுதியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய ஆவணப்படங்களுக்கு பல விருதுகள் கிடைத்தன. இவரின் பறை, தேவதைகள், பலிபீடம் போன்ற பல ஆவணப்படங்கள் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறை பற்றி இவர் இயக்கிய மாடத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளையும் வென்றது. கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் சாதிய ஒடுக்குமுறைகள், பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பல கவிதைகளை எழுதியுள்ளார்.

    காளி - லீனா மணிமேகலை

    காளி - லீனா மணிமேகலை

    இந்நிலையில், லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் புதிய சர்சையை கிளப்பியுள்ளது. காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம்பெற்றிருக்கிறது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

    ×