search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்சங்கர்"

    • முதல் பிரிக்ஸ் மாநாடானது 2009 ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று ரஷியாவின் ஏகட்ரின்பர்க் [Yekaterinburg] நகரில் வைத்து நடந்தது.
    • ஐநாவுக்கான பிரான்சில் முன்னாள் நிரந்தர பிரதிநிதியான ஜீன் டேவிட் லெவிட்டே [Jean David Levitte] எழுப்பிய கேள்விக்கு ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.

    BRICS கூட்டமைப்பு என்பது 2009 ஆம் ஆண்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய ஒரு அமைப்பாகும். இதில் 2010 இல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது. இந்த 5 நாடுகளில் பெயரில் உள்ள முதல் எழுத்தின் சுருக்கமே BRICS. கடந்த ஜனவரி 2024 இல் எகிப்து, எத்தியோப்பியா, இரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.

    BRICS கூட்டமைப்பின் முக்கிய நோக்கம், அமைதியை நிலைநாட்டுவது, பாதுகாப்பு , நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதே ஆகும். முதல் பிரிக்ஸ் மாநாடானது 2009 ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று ரஷியாவின் ஏகட்ரின்பர்க் [Yekaterinburg] நகரில் வைத்து நடந்தது. 16 வது பிரிக்ஸ் மாநாடானது வரும் அக்டோபர் 22 முதல் 24 வரை ரஷியாவின் காசன் [Kazan] நகரில் வைத்து நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க தற்போது ரஷியா சென்றுள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் இந்தியாவுக்கான அழைப்பு செய்தியைத் தெரிவித்துள்ளார் அதிபர் புதின்.

    Egypt, Ethiopia, Iran and the United Arab Emirates. ஸ்விட்ஸ்ர்லாந்தில் உள்ள ஜெனிவா சென்டரில் நடந்த ஐநா சபை கருத்தரங்கில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் BRICS கூட்டமைப்பு ஏன் உருவானது என்பதற்கு புதிய விளக்கம் ஒன்றைக் கூறியுள்ளார். அதாவது, அமரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்ற ஜி7 கூட்டமைப்பில் மற்ற யாரையும் அனுமதிக்காததால்தான் BRICS உருவானதாகக் கூறியுள்ளார்.

    சர்வதேச பொருளாதார மற்றும் பாதுகாப்பு நல்லுறவுகளைப் பேண வளர்ச்சிப்பாதையில் இருக்கும் நாடுகளுக்குக் குழு தேவை. ஆனால் அதற்கான குழுவான ஜி7 இல் நீங்கள் யாரையும் நுழைய விடவில்லை. எனவே நாங்கள் எங்களுக்கான ஒரு குழுவை உருவாக்கினோம். நாளடைவில் அது மிகப்பெரிய ஒரு குழுவாகப் பரிணமித்துள்ளது. எல்லோரும் அந்த குழுவின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கியுள்ளனர் என்று ஐநாவுக்கான பிரான்சில் முன்னாள் நிரந்தர பிரதிநிதியான ஜீன் டேவிட் லெவிட்டே [Jean David Levitte] எழுப்பிய கேள்விக்கு ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். சமீபத்தில் இத்தாலியின் நடந்த ஜி7 மாநாட்டில் மோடி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • இரு நாட்டு அதிபர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கிறது.
    • இதனால் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் முன்முயற்சியை உலகம் எதிர்பார்க்கிறது.

    பெர்லின்:

    ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

    இந்திய பிரதமர் மோடியின் ரஷியா, உக்ரைன் பயணத்துக்கு பிறகு புதின் இந்தக் கருத்தை தெரிவித்தார். இதே கருத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார்.

    இரு நாட்டு அதிபர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் முன்முயற்சியை உலகமே எதிர்பார்க்கிறது.

    இந்நிலையில், ஜெர்மனியில் நடந்த வெளியுறவு அலுவலகத்தின் தூதர்கள் மாநாட்டில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அப்போது ரஷியா-உக்ரைன் போர் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    இந்த மோதல் போர்க்களத்தில் தீர்க்கப்படும் என நினைக்கவில்லை. ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கும். பேச்சுவார்த்தை நடக்கும்போது ரஷியா மற்றும் உக்ரைன் அந்தப் பேச்சுவார்த்தையில் இருக்கவேண்டும்.

    போர்க்களத்தில் இருந்து நீங்கள் ஒரு தீர்வைப் பெறப் போகிறீர்கள் என நாங்கள் நினைக்கவில்லை. நீங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.

    உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால், நாங்கள் எப்போதும் அதை வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

    • சீனாவைப் பொறுத்தவரை, உங்களுக்கு இரட்டை புதிர் உள்ளது.
    • நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நாங்கள் அமைதியாக இருப்பவர்கள் அல்ல.

    புதுடெல்லி:

    இந்திய வெளியுறவு கொள்கைகள் தொடர்பாக முன்னாள் தூதர் ராஜீவ் சிக்ரி எழுதியுள்ள புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் பங்கேற்ற மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு குறித்து வெளிப்படையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலகின் எந்த நாட்டிற்கும், அண்டை நாடுகள் எப்போதும் ஒரு புதிராகவும், அதே வேளையில் பெரிய சக்திகளாகவும் விளங்குகின்றன.

    சீனாவைப் பொறுத்தவரை, உங்களுக்கு இரட்டை புதிர் உள்ளது. ஏனெனில் அது ஒரு அண்டை நாடு மற்றும் ஒரு பெரிய சக்தி. எனவே, சீனாவுடனான சவால்கள் இந்த இரட்டை வரையறைக்கு பொருந்தும்.

    பாகிஸ்தானுடனான இடைவிடாத பேச்சுவார்த்தையின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். பாகிஸ்தானின் செயல்களுக்கு விளைவுகள் உண்டு. காஷ்மீரைப் பொறுத்தவரை, சட்டப்பிரிவு 370 நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதில் மாற்றமில்லை. எனவே, பாகிஸ்தானுடன் என்ன வகையான உறவைப் பற்றி சிந்திக்கலாம் என்பதுதான் இன்றைய பிரச்சினை.

    நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நாங்கள் அமைதியாக இருப்பவர்கள் அல்ல. நிகழ்வுகள் நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் அதற்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம்.

    ஆப்கானிஸ்தானை பொறுத்தமட்டில், இந்திய-ஆப்கானிய மக்களுக்கு இடையேயான உறவு வலுவானதாக இருக்கிறது. ஆப்கான் சமூகத்தின் மீது இந்தியாவுக்கு நல்லெண்ணம் உள்ளது.

    வங்காளதேசத்தைப் பொறுத்தவரை, அந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, அந்த நாட்டுடனான நமது உறவு மேலும் கீழுமாகவே இருந்துள்ளது.

    தற்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது பாதிப்பை ஏற்படுத்தலாம். அதேநேரத்தில், பரஸ்பர நலன்களை கண்டறிவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

    இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

    • புதினை மோடி கட்டி பிடித்தது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காட்டமாக விமர்சித்திருந்தார்.
    • மக்கள் ஒருவரை ஒருவரை சந்திக்கும்போது அரவணைத்துக்கொள்கிறார்கள். இது எங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதி.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஜூலை 9 அன்று நடந்த 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி ரஷியா சென்றிருந்தார். அப்போது மோடியை புதின் காட்டித் தழுவி வரவேற்றார்.

    புதினை மோடி கட்டி பிடித்தது அப்போது விமர்சனத்துக்கு உள்ளாகியது. குறிப்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதை காட்டமாக விமர்சித்திருந்தார்.

    அவரது எக்ஸ் பதிவில், "இது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் உலகின் கொடூரமான குற்றவாளியோடு மாஸ்கோவில் இன்று கட்டித் தழுவியுள்ளது அமைதிக்கான முயற்சிகள் மீது விழுந்த பெருத்த அடியாக உள்ளது' என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், நேற்று உக்ரைன் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.

    உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் மோடி நடத்திய சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.

    அப்போது, கடந்த மாதம் பிரதமர் மோடியின் மாஸ்கோ பயணம் குறித்து நீங்கள் பேசினீர்கள். இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தது விமர்சனத்துக்கு உள்ளானது. ரஷ்யாவிலிருந்து அதிக அளவிலான கச்சா எண்ணெய் நாம் இறக்குமதி செய்கிறோம். உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு இந்தியா வெளிப்படையான கண்டனம் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்க இந்தியா ரஷியாவுக்கும் ஆதரவு தெரிவிக்காமல் அணிசேரா கொள்கையை பின்பற்றுகிறது என்று ஜெலென்ஸ்கியை நம்ப வைப்பதற்கு உங்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டதா? என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    மோடி புதின் சந்திப்பு குறித்து எழுந்த விமர்சனத்துக்கு பதில் அளித்த ஜெய்சங்கர் "மக்கள் ஒருவரை ஒருவரை சந்திக்கும்போது அரவணைத்துக்கொள்கிறார்கள். இது எங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. ஒருவேளை உங்களது கலாச்சாரத்தில் அவ்வாறு இல்லாமல் இருக்கலாம். நேற்று உக்ரைன் சென்ற பிரதமர் மோடி ஜெலன்ஸ்கியை கட்டி பிடித்ததையும் நான் பார்த்தேன். பல இடங்களில் பல தலைவர்களை பிரதமர் மோடி கட்டி அணைத்திருக்கிறார்" என்று கூறினார்.

    • ராமநாதரபுரத்தை சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
    • கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "ராமநாதரபுரத்தை சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட சம்பவம் கவலை அளிப்பதாக தெரிவிப்பு 4 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், நேற்று (19.8.2024) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆழ்ந்த வேதனையும் கவலை அளிப்பதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

    அண்மையில் 2 மீனவர்கள் உயிரிழந்த நிலையில் மீனவர் பிரச்சனை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாட்டிலிருந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சந்தித்ததை நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர், அதற்குப் பின்னரும் குறிப்பிடத்தக்க நிவாரணமோ தீர்வோ ஏற்படவில்லை என்று வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

    அனைத்து மிவைர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவித்து தாயகத்திற்கு அழைத்து வருவதை உறுதி செய்திட வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வளியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    நமது மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவங்களால் மீனவக் குடும்பங்கள் மிகுந்த துயரங்களுக்கு ஆளாவதோடு, கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வும், அவர்களது வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவ குடும்பங்களின் மன நம்பிக்கையை குலைத்து, பெருத்த நிதி சுமையை ஏற்படுத்தி, அவர்களது பாரம்பரிய மீன்பிடித் தொழிலை கடினமாக்கி உள்ளதாகவும் நமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திடவும் இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நிரந்தர தீர்வை ஏற்படுத்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும் எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், கடலோர மீனவ சமுதாயத்தினரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவித்து தாயகத்திற்கு அழைத்து வருவதை உறுதி செய்திட வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.


    • இன்று முதல் 11-ந்தேதி வரை மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்வார்.
    • மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்திக்கிறார்.

    புதுடெல்லி:

    இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் 3 நாட்கள் பயணமாக இன்று மாலத்தீவுக்கு செல்கிறார்.

    இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று முதல் 11-ந்தேதி வரை மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்வார்.

    இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த ஜெய்சங்கரின் பயணம் நோக்கமாக உள்ளது.

    இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது மற்றும் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராயப்படும் என்று தெரிவித்தது. ஜெய்சங்கர் தனது பயணத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்திக்கிறார்.

    மேலும் மாலத்தீவின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேசுகிறார். இதில் ஒப்பந்தங்கள் கையெழுத்ததாக வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாலத்தீவில் அதிபராக பதவியேற்றவுடன் முகமது முய்சு தனது நாட்டில் உள்ள இந்திய படைகளை வெளியேற உத்தரவிட்டார். சீன ஆதரவாளரான அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.

    மேலும் இந்திய பிரதமர் மோடியை மாலத்தீவு மந்திரிகள் விமர்சனம் செய்தனர். இதையடுத்து இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் தவிர்த்தனர். இதனால் அந்நாட்டு பொருளாதாரம் கடுமையாக பாதித்தது.

    இதையடுத்து இந்திய எதிர்ப்பு நிலையை அதிபர் முகமது முய்சு கைவிட்டார். அவர் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரின் மாலத்தீவு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
    • இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்டுள்ள நிலையில், ஜெய் சங்கரிடம் இங்கிலாந்து மந்திரி பேசியுள்ளார்.

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது எகஸ் பக்கத்தில் இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் லாமி தன்னிடம் பேசியதாகவும், அப்போது வங்காளதேசத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை குறித்து பேசியதாகவும், வங்காளதேசம் மற்றும் மேற்கு ஆசியாவின் சூழ்நிலை குறித்து விவாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் நிரந்தரமாக அடைக்கலம் கொடுக்கப்போகும் நாடு எது? என்பதில் சிக்கல் நிலவி வரும் நிலையில் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பேசியது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

    ஆனால், ஷேக் ஹசீனாவின் அடைக்கலம் குறித்து பேசியதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    வங்காளதேசத்தில் அசாதாரண நிலை நிலவியதால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவசரமாக இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இங்கிலாந்தில் குடியேற அரசியல் அடைக்கலம் கேட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் இங்கிலாந்து குடியேற்ற சட்டப்படி தனிநபர் இங்கிலாந்து சென்று அங்கு அடைக்கலம் கோர முடியாது. இதனால் இங்கிலாந்து இந்த விசயத்தில் இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளது.

    இதற்கிடையே இந்தியா நிரந்தரமாக அடைக்கலம் வழங்க தயாராக இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் இருநாட்டு அதிகாரிகள் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கிடையே இங்கிலாந்தில் அடைக்கலம் திட்டத்தை ஷேக் ஹசீனாவின் மகன் மறுத்துள்ளார்.

    ஷேக் ஹசீனா வங்கதேச பிரதமராக 15 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் தொடங்கிய நிலையில், பின்னர் அவருக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த திங்கட்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு வந்தார். அங்கிருந்து ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    ஷேக் ஹசீனாவுடன் இந்தியா வந்தவர்கள் வேறு இடத்திற்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஷேக் ஹசீனாவின் அடுத்த நகர்வு என்ன? என்ற கேள்விக்கு இந்திய வெளியுறவுத்துறை, இந்தியாவுக்கு அதுகுறித்த எந்த அப்டேட்டும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

    • எச்சரிக்கையாக இருக்கும்படி எல்லைக் காவல் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • வங்காளதேசத்தில் 19,000 இந்தியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

    புதுடெல்லி:

    வங்காளதேச விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று மதியம் அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருவதற்கு மிகக் குறுகியகால ஒப்புதல் ஒன்றை கோரினார்.

    அண்டை நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்கும்படி எல்லைக் காவல் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    வங்காளதேசத்தின் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    வங்காளதேசத்தில் 19,000 இந்தியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 9,000 மாணவர்கள் உள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் கடந்த ஜூலை மாதத்தில் இந்தியா திரும்பியுள்ளனர்.

    ஆகஸ்ட் 5-ம் தேதி அன்று ஊரடங்கு உத்தரவையும் மீறி டாக்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்தனர். பாதுகாப்பு அமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யும் முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

    வங்காளதேச அதிகாரிகளிடமிருந்து விமான அனுமதிக்கான கோரிக்கையையும் நாங்கள் பெற்றோம். அவர் நேற்று மாலை டெல்லி வந்தார் என தெரிவித்தார்.

    • இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 22 வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • இலங்கை சிறையில் உள்ள 87 மீனவர்கள், 175 படகுகளை விரைவாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக மீனவர்கள் 9 பேர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவித்திடக்கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    அக்கடிதத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 22 வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச எண்ணிக்கை இது என கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.

    இலங்கை சிறையில் உள்ள 87 மீனவர்கள், 175 படகுகளை விரைவாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • இந்த மாநாடு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இருக்கும் நாடுகளின் வலுவான கூட்டமைப்பை கட்டமைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.
    • இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் மாநாட்டில் பங்கேற்க கஜகஸ்தான் சென்றுள்ளார்.

    கஜகஸ்தான் நாட்டின் அஸ்டானா நகரில் வைத்து இன்றும் நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடிப்பெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ரஷிய அதிபர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங் தற்போது கஜகஸ்தான் நாட்டுக்கு சென்றடைந்துள்ளனர். இந்த மாநாடு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இருக்கும் நாடுகளின் வலுவான கூட்டமைப்பை கட்டமைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.

     

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடானது கடந்த 2001 ஆம் ஆண்டு ரஷியா மற்றும் சீனாவின் முன்முயற்சியால் மத்திய ஆசிய நாடுகளின் பாதுகாப்பைக் குறித்து ஆலோசித்து உறுதிசெய்ய ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். இந்தியா, பாகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளது. மேலும் துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளும் இந்த ஷாங்காய் கூட்டமைப்பு ஆலோசனைகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறது.

    இந்த வருட மாநாட்டில் கூட்டமைப்பில் உள்ள மற்றைய நாடுகளின் அதிபர்கள் தலைவர்கள் பங்கேற்கும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் மாநாட்டில் பங்கேற்க கஜகஸ்தான் சென்றுள்ளார்.

     

    உக்ரைன் மீது போர் தொடுத்ததால் மேற்குலகத்தால் பெருளாதார தடைகளை எதிர்கொண்ட ரஷியா தனியாக இல்லை என்று அவர்களுக்கு காண்பிக்கும் விதமாக இந்த மாநாட்டை ரஷிய அதிபர் புதின் முன்னெடுத்துச் செல்வார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் இந்த மாநாட்டை மத்திய ஆசியாவில் சீனாவை பிரதானப்படுத்தும் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வார் என்று தெரிகிறது. 

     

    • மீனவர்கள் 2024 ஜூலை 5 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
    • தமிழ் மீனவர்கள் பல நூற்றாண்டுகளாக மீன்பிடித்து வந்த கடலில் மீன்பிடிக்கும் உரிமையை எமர்ஜென்சி காலத்தில் காங்கிரஸ் அரசு பறித்தது.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    தமிழகத்தின் ராமந்தபுரத்தில் உள்ள பாம்பனில் இருந்து 25 மீனவர்கள் மற்றும் 4 படகுகள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தொடர் கைது சம்பவங்கள் காரணமாக, மீனவர்கள் 2024 ஜூலை 5 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

    1974ல் கச்சத்தீவை கைவிட்டதால், கடந்த பல தசாப்தங்களாக இந்த தொடர் கைதுகளால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். 1974 ஒப்பந்தம், பிரிவு 5, மீனவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் கச்சத்தீவுக்கு வருகை தராமல் கலாசார மற்றும் பொருளாதார உரிமைகளை வழங்கியது. பயண ஆவணங்கள் அல்லது விசாக்கள் பெறுதல். பிரிவு 6 இன் கீழ், பாரம்பரிய (வரலாற்று) நீரில் இரு நாடுகளின் கப்பல்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

    பின்னர், எமர்ஜென்சியின் போது, மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடாவின் எல்லைகளை தீர்மானிக்க இந்தியா மற்றும் இலங்கை இடையே (மார்ச் 23, 1976) மற்றொரு ஒப்பந்தம் போடப்பட்டது. பிரிவு 5இல், முன்னர் வழங்கப்பட்ட கலாச்சார மற்றும் பொருளாதார உரிமைகள், 'ஒவ்வொரு கட்சிக்கும் நீர் மற்றும் பிராந்திய கடல், அத்துடன் தீவுகள் ஆகியவற்றின் மீதும், எல்லையில் அதன் பக்கத்தில் விழும் இறையாண்மை மற்றும் 'ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உண்டு. இறையாண்மை உரிமைகள் மற்றும் கான்டினென்டல் ஷெல்ஃப் மற்றும் பிரத்தியேக பொருளாதார மண்டலம் மற்றும் அவற்றின் வளங்கள் மீது, வாழும் அல்லது உயிரற்றவை, மேற்கூறிய எல்லையின் அதன் பக்கத்தில் விழும்.

    தமிழ் மீனவர்கள் பல நூற்றாண்டுகளாக மீன்பிடித்து வந்த கடலில் மீன்பிடிக்கும் உரிமையை எமர்ஜென்சி காலத்தில் காங்கிரஸ் அரசு பறித்தது. நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திறமையான தலைமையின் கீழ், நமது தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ள இந்த நீண்டகால நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான நிரந்தரத் தீர்வைக் காணும் முயற்சியில் நமது வெளியுறவு அமைச்சகத்தின் முயற்சிகளை நாங்கள் முழுமையாக ஒப்புக்கொள்கிறோம்.

    இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகளில் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்றி கச்சத்தீவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும், கைதிகளை முன்கூட்டியே திருப்பி அனுப்பவும், அவர்களின் மீன்பிடி படகுகளை விடுவிக்குமாறு வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

    • இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
    • பாஜக ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்சனையை தேர்தல் நேர முழக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும், மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த கோரியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது படகுகளை விடுவிக்கவும், மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த கோரியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், சமீப வாரங்களில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகக் கவலைபடத் தெரிவித்துள்ளதோடு, IND-TN-10 MO 1379 மற்றும் IND-TN-09-MO-2327 என்ற பதிவெண்களைக் கொண்ட இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளிலும் இரண்டு பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படருகளிலும் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்கள் 1-7-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    1974 ஆம் ஆண்டிலிருந்தே, அப்போதைய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை நிலவுவதாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் தனது 27-6-2024 நாளிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை கோடிட்டுக் காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், தி.மு.க. தலைமையிலான மாநில அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை அப்போது முழுவீச்சில் எதிர்த்தது என்பதையும், தனது எதிர்ப்பை தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு இது சம்பந்தமாக மாநில அரசடன் முறையாக கலந்தாலோசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்திய உரிமைகளுக்கும் நலன்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் அவற்றைப் பறிக்கும் வகையிலும் கச்சத் தீவை முழுமையாக இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது அப்பொதைய ஒன்றிய அரசு தான் என்று தனது கடிதத்தில் அழுத்தத்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

    தனது தலைவரும் அப்போதைய தி.மு.க. தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தூக்கல் செய்து, அதில் 'ஒன்றிய அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பிற்கு முரணானதாக இருக்கும்போது. கச்சத்தீவின் இறையாண்மை ஒரு தீர்க்கப்பட்ட விஷயம் என்று கூற முடியாது" என்று திட்டவட்டமாகக் கூறியிருந்ததை முதலமைச்சரி அவர்கள் நமது கடிதத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

    தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்சனையை தேர்தல் நேர முழக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் கச்சத்தீவை மீட்க குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் அது எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் . தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தாத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும் எனத் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வலையில் மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரக்கினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைக்கர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×