என் மலர்
நீங்கள் தேடியது "ரோந்து பணி"
- சாராய வியாபாரி விஜயகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
- சப்- இன்ஸ்பெக்டர் பழனி இவரை பிடித்து கைது செய்தார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே மலையம் பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47) அப்போது ரோந்து சென்ற திருவெண்ணைநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் சாராய வியாபாரி விஜயகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
விழுப்புரம் கே. கே. ரோடு அண்ணா நகரை சேர்ந்தவர் அய்யனார் (62). இவர் திருவெண்ணைநல்லூர் அருகே தென்மங்கலம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் சாராயம் விற்பனை செய்தார். அப்போது ரோந்து சென்ற திருவெண்ணைநல்லூர் சப்- இன்ஸ்பெக்டர் பழனி இவரை பிடித்து கைது செய்தார்.
- சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அவரிடம் இருந்து 5 லிட்டர் ட சாராயத்தை கைப்பற்றினர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே தகரை கிராமத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது தகரை கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மனைவி செல்வி என்பவர் தனது வீட்டில் சாராயம் விற்றார். அவரிடம் இருந்து 5 லிட்டர் ட சாராயத்தை கைப்பற்றினர். அவர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.
- போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- கிருஷ்ணவேணி மது விற்பனையில் ஈடுபட்டதுதெரியவந்து அவரை கைது செய்தது.
கடலூர்:
பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ)நந்தகுமார், தலைமை யிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி அடுத்த பாரதி நகரில்அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி (வயது 65) மது விற்பனையில் ஈடுபட்டதுதெரியவந்தது இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து ஏராளமான மது பாட்டி ல்களை பறிமுதல் செய்தனர் .அவரைபண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தலா 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் கொசப்பாடி, பொய்க்குணம், செம்பராம்பட்டு, நெடுமானூர் ஆகிய கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர் . அப்போது அங்குள்ள வீடுகள், வயல்வெளிகளில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த கொசப்பாடியை சேர்ந்த ராஜேந்திரன் (58), சேஷசமுத்திரத்தை சேர்ந்த முத்து (71), பூட்டை கிராமத்தை சேர்ந்த மார்க்ஸ் லெனின் (39), நெடுமானூரை சேர்ந்த முத்தம்மாள் (58) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
- நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
- பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டி,
பண்டிகை காலங்கள் மற்றும் புத்தாண்டு நெருங்கி வருவதால் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்படும். இதன் காரணமாக குற்ற செயல்களை முன்கூட்டியே தடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. மகேஸ்வரன் மேற்பார்வையில் நேற்று முதல் காவல் துறையின் ரோந்து பணிகள் 24 மணி நேரமும் செயல்பட தொடங்கியது. ஊட்டி சேரிங்கிராஸ் சாலை, ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா சாலை என முக்கியமான சாலை சந்திப்புகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கும் பணி நடைபெறும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
- அய்யனார் கோவில் அருகே அதே ஊரை சேர்ந்த சரவணன்.
- 25 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலமும் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
கடலூர்:
புதுப்பேட்டைபோலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உதவி ஆய்வாளர்செல்வம் ஆகியோர்திருவாமூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள அய்யனார் கோவில் அருகே அதே ஊரை சேர்ந்த சரவணன் (வயது25) சுமார் 15 லிட்டர் பிடிக்கக்கூடியபாலிதீன் கவரில் சுமார் 10 லிட்டர் விஷ நெடி உள்ளசாராயமும், சுமார் 25 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலமும் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்துவழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து அவனிடமிருந்து விஷ சாராயம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பாவளம் கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் லாரி டியூப்களில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- 6 லாரி டியூப்பில் பதுக்கி வைத்திருந்த சுமார் 360 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சங்கரா புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாவளம் கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் லாரி டியூப்களில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் துரை மணிகண்டன் (29) என்பவர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து துரைமணிகண்டனை கைது செய்த போலீசார், 6 லாரி டியூப்பில் பதுக்கி வைத்திருந்த சுமார் 360 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- போலீசார் மூக்கனூர் பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டனர்.
- வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் மூக்கனூர் பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டனர். அப்போது தும்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது27) என்பவர் மூக்கனூர் ஏரிக்கரை அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘ஹைவே’ போக்குவரத்து போலீசாரின் ரோந்து பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
- அதிகரிக்கும் விபத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தேவிபட்டினம், ஏர்வாடி, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்களில் புண்ணிய தலங்கள் இருப்பதால் வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட 'ஹைவே' போலீசார் தங்கள் பணியை முறையாக மேற்கொள்ளாததால் வாகனங்களின் விதி மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த வழியாக செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இந்த வழித்தடத்தில் குடி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் நபர் களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சோதனை சாவடியில் போலீசார் இல்லாதால் விபத்துக்களை ஏற்படுத்தும் டிரைவர்கள் எளிதில் தப்பிச் சென்று விடுகின்றனர். இரவில் நடந்து செல்பவர்கள் மீது வாகனம் மோதுவதும், அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் தலை கீழாக கவிழ்வதும், அசுர வேகத்தில் வாகனங்கள் செல்வதும் இந்த சாலையில் தொடர்கதையாக நடந்து வருகிறது.
நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ரோந்து போலீசார் தலை காட்டுவதே கிடையாது. இதனால் இந்த பகுதியில் உயிர்பலி எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
நேற்று நதிப்பாலம் அருகே நடந்த நெஞ்சை உருக்கும் சம்பவத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து பிறந்த குழந்தையுடன் வீடு திரும்பிய தம்பதி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நதிப்பாலம் அருகே சிக்னல் விளக்கு அமைக்க கோரி பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பகுதியில் விபத்து என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.
கண் துடைப்பு நடவடிக்கையாக மாதத்திற்கு ஒரு முறை போக்குவரத்து போலீசார் ஆய்வு என்ற பெயரில் இரண்டொரு வழக்குப்பதிவு செய்து 'சாதனை' செய்கின்றனர். இதை தடுக்க ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- சுமார் 2 மணி நேரம் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
- நிலுவையிலுள்ள மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டனர்.
திருவள்ளூர்:
கூடுதல் காவல் துறை இயக்குனர் சங்கர், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பகலவன் ஆகியோர் திருவள்ளூர் மாவட்டத்தில் திடீரென நள்ளிரவில் ரோந்து பணி சென்று ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
மாவட்டம் முழுவதும் குற்றச்சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் இரவில் ரோந்து பணியில் இருக்கும் போலீசார் முறையாக பணி செய்கிறார்களா என ஆய்வு செய்தனர். அப்போது இரவு முழுவதும் விழித்திருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் போலீசாருக்கு போலீஸ் அதிகாரி அறிவுரை வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது போலீஸ் நிலையத்தில் புகார்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் பற்றி கேட்டறிந்து, நிலுவையிலுள்ள மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டனர்.
இந்த ஆய்வின் போது திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்கலா, திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- காரைக்கால் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பான் மசாலா பாக்கெட்டுகள் விற்பனை நடைபெறுவதாக நிரவி போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காரைக்காலை அடுத்த நிரவி ஹேவெய்ஸ் நகரில், தடை செய்யப்பட்ட போதை புதையிலை பொருள்க ளான குட்கா, ஹான்ஸ், கூல்லிப் மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகள் விற்பனை நடைபெறுவதாக நிரவி போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், ஹேவெய்ஸ் நகரில் ரவி (வயது47) என்பவரது வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வீட்டில் மறைத்து வைத்திருந்த, ரூ.60 ஆயிரம் மதிப்பிலான ஹான்ஸ், கூலிப் போன்ற போதை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரவியிடம் நடத்திய விசாரணையில், காரைக்கால் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (27), நிரவி கீர்த்திகா நகரை சேர்ந்த சூர்யா (26) ஆகிய 3 பேரை கைது செய்து, காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.
- பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த 3பேரை போலீசார் கைது செய்தனர்
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் அம்பேத்கர் நகர் மற்றும் ரெயில் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது ெரயில் நிலையம் அருகில் உள்ள பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த சின்ன கள்ளிப்பட்டை சேர்ந்த நவநீதன்(31), ராஜா(26). சாவடி பாட்டை தெருவை சேர்ந்த இளவரசன் (26)ஆகி யோரை போலீசார் கைது செய்தனர்.