என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி பாஸ்போர்ட்"

    • கடந்த 11-ந் தேதி, இம்மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
    • வெளிநாட்டினர் அடிக்கடி நடமாடும் இடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

    புதுடெல்லி:

    தற்போது, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பான விவகாரங்களை கையாள பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினர் பதிவு சட்டம் உள்பட 4 சட்டங்கள் அமலில் உள்ளன.

    இந்நிலையில், மேற்கண்ட 4 சட்டங்களுக்கு பதிலாக, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா-2025 என்ற புதிய மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. கடந்த 11-ந் தேதி, இம்மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

    இந்த மசோதாவில், தற்போதைய 4 மசோதாக்களில் ஏற்கனவே உள்ள பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், குடியுரிமை தொடர்பான எந்த அம்சமும் இடம்பெறவில்லை.

    இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறுதல், அனுமதிக்கப்பட்ட நாட்களை தாண்டி வெளிநாட்டினர் தங்கியிருத்தல் ஆகிய பிரச்சினைகளை கையாள இம்மசோதா பயன்படுகிறது.

    இந்த மசோதா நிறைவேறியவுடன், பழைய 4 மசோதாக்களும் ரத்து செய்யப்படும். சட்டங்களை எளிமைப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கைக்கேற்ப இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதிய குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    இந்தியாவில் நுழைவதற்கும், தங்குவதற்கும், வெளியேறுவதற்கும் போலி பாஸ்போர்ட்டையோ அல்லது போலி விசாவையோ அல்லது முறைகேடாக பெறப்பட்ட பயண ஆவணங்களையோ பயன்படுத்தினால் அவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு குறையாமலும், 7 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    அத்துடன், ரூ.1 லட்சத்துக்கு குறையாமலும், ரூ.10 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.

    உரிய பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் நுழையும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டுகள்வரையும், ரூ.5 லட்சம்வரை அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை விதிக்கப்படும்.

    வெளிநாட்டினர் தங்கியிருக்கும் தகவலை ஓட்டல்கள், பல்கலைக்கழகங்கள், இதர கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவை தெரிவிப்பது கட்டாயம் ஆகும். அதன்மூலம் வெளிநாட்டினர் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும்.

    மேலும், விமானம் மற்றும் கப்பல்களில் வெளிநாட்டினர் வரும் தகவல்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனமும், கப்பல் நிறுவனமும் அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிப்பது அவசியம்.

    வெளிநாட்டினர் அடிக்கடி நடமாடும் இடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலி பாஸ்போர்ட் எடுத்து சிங்கப்பூரில் வேலை பார்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • கைதான வாலிபர் மீது ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் வீரகனூர் அருகே உள்ள வடக்கு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 46). இவர் அம்மம்பாளையத்தில் உள்ள ஆவினில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது பெயரில் அவரது உறவினரான தெற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (37) என்பவர் வீரமுத்து பெயரில் போலியாக பாஸ்போர்ட் 2002-ம் ஆண்டு எடுத்து சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

    இது குறித்து வீரமுத்து சேலம் குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். அதன் பேரில் டிஎஸ்பி இளமுருகன் மற்றும் போலீசார், ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ராஜேஷ் நாடு திரும்பும் போது தகவல் கொடுக்குமாறு லுக் அவுட் நோட்டீஸ் விமான நிலையத்துக்கு அனுப்பினர்.

    இதையடுத்து ராஜேஷ் நேற்று திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அங்குள்ள அதிகாரிகள் பிடித்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

    அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் எனக்கு 17 வயது என்பதால் பாஸ்போர்ட் எடுக்க முடியாது. எனவே வீரமுத்து ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை திருடி பாஸ்போர்ட் எடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து ராஜேசை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கடந்த வாரம் வங்காள தேசத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் போலி பாஸ்போர்ட் மூலம், மலேசியாவில் இருந்து சென்னை வந்த போது கைது செய்யப்பட்டார்.
    • வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை விமான நிலையத்தில் பிடிபடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்கா செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது இந்திய பாஸ்போர்ட்டுடன் ரீனா பேகம்(37)என்ற பெண் சுற்றுலாப் பயணிகள் விசாவில் டாக்கா செல்வதற்காக வந்தார். ஆனால் அவர் வைத்திருந்த பாஸ்போர்ட் மீது குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனை சரி பார்த்த போது அது போலியான பாஸ்போர்ட் என்று தெரியவந்தது. இதையடுத்து ரீனா பேகத்தின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் வங்கதேசத்தில் இருந்து அவர் மேற்குவங்க மாநிலம் வழியாக, இந்தியாவுக்குள் ஊடுருவியதும், இந்தியாவில் போலி பாஸ்போர்ட் தயார் செய்து கொடுக்கும் ஏஜென்டுகள் மூலம், பணம் கொடுத்து இந்த போலி பாஸ்போர்ட்டை வாங்கியதும் தெரியவந்தது.

    அவர் இந்த போலி பாஸ்போர்ட் எதற்காக வாங்கினார்? இந்த பாஸ்போர்ட்டை வைத்து எங்கெங்கு சென்றார்? சென்னைக்கு எதற்கு வந்தார்? எங்கு தங்கி இருந்தார்? அதனை தயாரித்து கொடுத்தவர்கள் யார்? என்று தீவிர விசாரணை நடத்தினர். இதேபோல் கியூ பிரிவு போலீசார், மத்திய உளவு பிரிவு போலீசார் விசாரணை செய்தனர்.

    பின்னர் மேல் விசாரணைக்காக சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் ரீனாபேகம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் ரீனாபேகம் விசாரணைக்கு சரிவர பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    கடந்த வாரம் இதை போல் வங்காள தேசத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் போலி பாஸ்போர்ட் மூலம், மலேசியாவில் இருந்து சென்னை வந்த போது கைது செய்யப்பட்டார்.

    வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை விமான நிலையத்தில் பிடிபடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கோவைக்கு வந்த வங்கதேச வாலிபரை விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    • போலீசார் வாலிபர் மீது வெளிநாட்டினர் என்பதை மறைத்து போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    வளைகுடா நாடான ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு அதிகாலை 4.30 மணியளவில் ஏர் அரேபியா விமானம் வந்தது.

    விமானத்தில் இருந்து பயணிகள் வெளியே வந்து கொண்டு இருந்தனர். அப்போது விமான நிலைய அதிகாரிகள் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளை சோதனை செய்து கொண்டு இருந்தனர். அதிகாரிகளுக்கு விமானத்தில் வந்த வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாலிபரின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அந்த பாஸ்போர்ட் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா முகவரியில் இருந்தது. மேலும் அந்த பாஸ்போர்ட் போலியானது என்பது தெரியவந்தது.

    இது குறித்து அதிகாரிகள் அந்த வாலிபர் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த வாலிபர் தான் இந்தியன் எனவும், தனது சொந்த மாநிலம் மேற்குவங்கம் என கூறினார். இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாலிபரிடம் தேசிய கீதம் பாடும்படி கூறினர். ஆனால் அந்த வாலிபருக்கு பாட தெரியவில்லை.

    தொடர்ந்து அந்த வாலிபரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் வங்கதேச நாட்டை சேர்ந்த அன்வர் உசேன் (வயது 28) என்பது தெரியவந்தது. டெய்லரான இவர் முதலில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் போலி பாஸ்போர்ட் எடுத்து ஷார்ஜாவுக்கு வேலைக்கு சென்று உள்ளார். அங்கு போதிய சம்பளம் கிடைக்காததால் மீண்டும் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கோவைக்கு வந்தது தெரிய வந்தது.

    போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கோவைக்கு வந்த வங்கதேச வாலிபரை விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வெளிநாட்டினர் என்பதை மறைத்து போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தரகரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
    • யூடியூப் மூலமாக மாட்டிக்கொள்ளாமல் போலி பாஸ்போர்ட் தயாரித்தது அம்பலம்.

    போலி பாஸ்போர்ட் விற்பனையில் முக்கிய தரகரை கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதில், பத்தாம் வகுப்பு கூட படிக்காத நபர்களை போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பியது அம்பலமாகி உள்ளது.

    10ம் வகுப்பு படித்து முடிக்காதவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல, மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக அனுமதி அவசியம் ஆகும்.

    மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் அமைத்து போலி பாஸ்போர்ட், விசா தயாரித்தது தெரியவந்துள்ளது.

    யூடியூப் மூலமாக மாட்டிக்கொள்ளாமல் போலி பாஸ்போர்ட் தயாரித்ததாக விசாரணையில் தரகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    • போலிபாஸ் போர்ட்டில் சென்னை வந்த கருப்பையாவை விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் பிடித்தனர்.
    • போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆலந்தூர்:

    தஞ்சாவூரை சேர்ந்தவர் கருப்பையா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா விசாவில் கத்தார் நாட்டிற்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வராமல் அங்கேயே தங்கி தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.

    இந்த நிலையில் போலிபாஸ்போர்ட்டில் சென்னை வந்த கருப்பையாவை விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் பிடித்தனர். பின்னர் அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிறந்த ஊர் மற்றும் பிறப்பு தேதியை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.
    • போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    புதுக்கோட்டை ஆலங்குடியை சேர்ந்தவர் அமீர் ஹுசைன் (வயது 48). இவர் நேற்று முன்தினம் அபுதாபி செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அங்கு இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அமீர் ஹுசைன் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து தன் பெற்றோர் பெயர், பிறந்த ஊர் மற்றும் பிறப்பு தேதியை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.

    அவரை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சிவகங்கை திருப்பத்தூரை சேர்ந்தவர் கதிரேசன் (47). இவர் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்துள்ளார்.

    இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் கதிரேசனின் ஆவணங்களை சோதனை மேற்கொண்டனர். இதில் அவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பிறந்த தேதி மற்றும் பிறந்த ஊரை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் கதிரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருவரையும் இம்மிகிரியேஷன் பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர்.
    • ஏர்போர்ட் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிக்ரியேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் குப்பன் வலசை பகுதியை சேர்ந்த பாலு (வயது 58) என்பவர் போலியான பாஸ்போர்ட் வெளிநாடு சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதேபோன்று மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பேட்டிக் ஏர் விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிக்ரியேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் குத்புதீன் (49) என்பவர் போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இவர்கள் இருவரையும் இம்மிகிரியேஷன் பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கோவைக்கு வந்த ஒரு பெண்ணின் ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
    • தலைமறைவாக உள்ள நாகேஸ்வரராவை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை விமான நிலையத்துக்கு நேற்று மாலை சிங்கப்பூரில் இருந்து ஒரு விமானம் வந்திறங்கியது. தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது கோவைக்கு வந்த ஒரு பெண்ணின் ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் அவர் ஆந்திர மாநிலம் கண்டசாலா பகுதியைச் சேர்ந்த கனகதுர்கா (வயது 36) என்பதும், அவர் போலி பாஸ்போர்ட் மூலம் விமானத்தில் பயணம் செய்தது தெரிய வந்தது. மேலும் வேறு ஒருவரின் முகவரியில் புகைப்படத்தை ஒட்டி போலி பாஸ்போர்ட் தயாரித்து சிங்கப்பூருக்கு சென்று வீட்டு வேலை பார்த்த விவரமும் தெரிய வந்தது.

    தொடர்ந்து அவரை விமான நிலைய குடியேற்றப்பிரிவு அதிகாரி கிருஷ்ணஸ்ரீ, பீளமேடு போலீசில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் கந்தசாமி நடத்திய விசாரணையில் கனகதுர்காவிற்கு போலி பாஸ்போர்ட் எடுக்க, நாகேஸ்வரராவ் என்பவர் உதவி செய்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி பயணம் மேற்கொண்டதாக கனகதுர்காவை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நாகேஸ்வரராவை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சீனாவை சேர்ந்தவர் டூயிங். இவர் வியாபார நிமித்தமாக சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்த அவரது பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக கூறப்படுகிறது.
    • பாஸ்போர்ட்டை சோதனை செய்த அதிகாரிகள் பாஸ்போர்ட் போலியானது என தெரிவித்தனர்.

    திருப்பதி:

    சீனாவை சேர்ந்தவர் டூயிங். இவர் வியாபார நிமித்தமாக சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்த அவரது பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீண்டும் சீனாவிற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார்.

    இந்த நிலையில் சென்னை பாரிசை சேர்ந்த சல்மான் (வயது 32), கண்ணன் (34) ஆகியோர் டூயிங் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டு நாடு திரும்ப முடியாமல் அவதி அடைந்து வருவதையும் அவர் தற்போது ரேணிகுண்டாவில் இருப்பதையும் அறிந்தனர். இதையடுத்து அவர்கள் ரேணிகுண்டாவிற்கு வந்து டூயிங்கை சந்தித்து தங்களுக்கு தெரிந்த பாஸ்போர்ட் அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று தருவதாக தெரிவித்தனர்.

    இதை உண்மை என அறிந்த டூயிங் அவர்கள் கேட்ட ரூ.12 லட்சத்தை கொடுத்தார். இதையடுத்து சல்மான், கண்ணன் ஆகியோர் டூயிங்கிடம் பாஸ்போர்ட்டை கொடுத்துவிட்டு சென்றனர். தனது சொந்த நாட்டிற்கு செல்வதற்காக டூயிங் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்த அதிகாரிகள் பாஸ்போர்ட் போலியானது என தெரிவித்தனர். இதையடுத்து டூயிங், சல்மான், மற்றும் கண்ணன் ஆகியோரது செல்போனை தொடர்பு கொண்டார்.

    அவர்களது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் ரெட்டியிடம் டூயிங் புகார் செய்தார்.

    பரமேஸ்வர் ரெட்டி உத்தரவின் பேரில் திருப்பதி டி.எஸ்.பி ராமச்சந்திரா தலைமையிலான போலீசார் சென்னை பாரிசில் பதுங்கி இருந்த சல்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கண்ணனை தேடி வருகின்றனர்.

    ×