என் மலர்
நீங்கள் தேடியது "கிராமம்"
- அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன.
- மைதானங்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திருப்பூர் :
தமிழகத்தில் கிராமப்புறங்களில் மாணவா்கள் இளைஞா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், உடற்பயிற்சிகள் செய்வதற்கான ஆா்வத்தை ஏற்படுத்தவும் கடந்த 2006ஆம் ஆண்டுதி.மு.க. ஆட்சிக் காலத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு அடிப்படை உடற்பயிற்சிகள் செய்வதற்கான உபகரணங்கள், கபடி, வாலிபால் விளையாடுவதற்கான கட்டமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டன.
இந்த விளையாட்டு சாதனங்கள் ஊராட்சி நிா்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன. மைதானங்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னா் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மைதானங்கள் பராமரிக்கப்படவில்லை.
பின்னா் கடந்த 2020ம் ஆண்டில் அம்மா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கிராமம்தோறும் ஊரக வளா்ச்சித் துறை மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மைதானங்கள் மேம்பாடு செய்யப்பட்டது.
தற்போது, அனைத்து கிராமங்களிலும் மைதானங்கள் பயன்பாடு இல்லாமல் புதா் மண்டி காட்சியளிக்கிறது. மேலும் விளையாட்டு பயிற்சி உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டன. ஆக்கிரமிப்பால் பல இடங்களில் மைதானமே இல்லாத நிலை உள்ளது. தற்போது, விளையாட்டில் சாதிக்க நினைப்பவா்களுக்கு கிராமங்களில் எவ்வித வசதியும் இல்லை. எனவே கிராமப்புற மைதானங்களை பராமரித்து உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்க வேண்டும். இதற்கு சிறப்புக் குழு அமைத்து மைதானம், உபகரணங்கள் பராமரிப்பை குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். கிராமம்வாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தி இளைஞா்களை ஊக்குவிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- 32 மீனவ கிராமங்களில் 1000 நாட்டு படகுகள் உள்ளது.
- நாட்டுப்படகு மீனவர்கள் 5000 பேர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
பேராவூரணி:
வங்கக்கடலில் உருவாகி யுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர்சிவகுமார் எச்சரிக்கை விடுத்தார்.
இதனை தொடர்ந்து 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
துறைமு கத்தில் பாதுகா ப்பாக படகுகள் நிறுத்தி வைக்கப்ப ட்டுள்ளன.
மல்லிபட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகள் உள்ளன.
கொள்ளுக்காடு புதுப்பட்டினம், மல்லிப ட்டினம், பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, மந்திரிபட்டினம், செம்பியன் மாதேவிபட்டினம், அண்ணாநகர் புது தெரு, கணேசபுரம் உள்ளிட்ட 32 மீனவ கிராமங்களில் 1000 நாட்டுப் படகுகள் உள்ளது.
விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.
மற்ற நாட்களில் நாட்டுப் படகு மீனவர்கள் மீன் பிடித்து தொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று சனிக்கிழமை 3 -வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 5000 பேர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
- முகாமில், 3000-க்கும் மேற்பட்டோர் மின் இணைப்பை ஆதாருடன் எவ்வித கட்டணம் இல்லாமல் இணைத்து கொண்டனர்.
- வரும் வாரத்தில் விடுபட்டுள்ள கிராமங்களில் முகாம் நடைபெறும்.
பூதலூர்:
செங்கிப்பட்டி-பூதலூர் சாலையில் புதுப்பட்டியில் இயங்கி வரும் ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் மற்றும் கல்வியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் வழியாக மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம் பூதலூர் வட்டத்தில் உள்ள 20 கிராமங்களில் நடைபெற்றது. இம்முகாமில் கிராம மக்கள் 3000-க்கும் மேற்பட்டோர் தங்கள் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் எவ்வித கட்டணம் இல்லாமல் இணைத்து கொண்டனர்.
முகாமில் கல்லூரியின் தலைவர் பொறியாளர் சத்தியநாதன், கல்லூரியின் செயலர்.ஜெனட் ரம்யா, பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர்.குமரன், பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் மோகன், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் அறிவுமணி, கல்வியியல் கல்லூரியின் துணை முதல்வர் கருப்பையா, பேராசிரியர்கள், கல்லூரியின் மாணவ, மாணவிகள் ஆகியோர் முகாம் சிறப்புற நடைபெற உதவி புரிந்தனர்.அனைத்து ஊர்களிலும் உள்ள பஞ்சாயத்து தலைவ ர்கள் முன்னிலையில் முகாம் தொடங்கிநடந்தது.
வரும் வாரத்திலும் விடுபட்டு உள்ள கிராமங்களில்முகாம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
- ஜி-20 உச்சிமாநாடு விழிப்புணர்வு என முப்பெரும் விழா நடைபெற்றது.
- 22 கிராமங்களை சேர்ந்த 35 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 2.75 கோடி கடனுதவி.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கருப்பூர் கவ்டெசி தொண்டு நிறுவன த்தில் டாக்டர் அம்பேத்கரின் 132 -ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா ஜி20 உச்சிமாநாடு விழிப்புணர்வு என முப்பெரும் விழா நடைபெற்றது.
வருகை தந்த அனைவரையும் கவ்டெசி தொண்டு நிறுவன தலைவர் மாவடியான் வரவேற்றார்.மதுரை பேராசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கி தஞ்சாவூர், கரந்தை, திருச்சென்னம்பூண்டி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, மைக்கேல்பட்டி, மாத்தூர் உள்ளிட்ட 22- கிராமங்களைச் சார்ந்த 35 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ2.75 கோடி வங்கி மதிப்பிலான கடனு தவிகளை வழங்கி பேசினார்.
விழாவில் பூண்டி வெங்கடேசன், பூதலூர், தங்க.கென்னடி, திருப்பூந்துருத்தி சிவக்குமார், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
விழா நிகழ்ச்சியை கவ்டெசி நிறுவன செயலாளர் கருணாமூர்த்தி தொகுத்து வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கவ்டெசி நிறுவன பணியாளர்கள் கோமதி, சுபாஷினி, கனேஷ்வரி, ஆர்த்தி, ரூபன் ஆகியோர் செய்திருந்தனர்.
விழா நிறைவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.
- திருக்காட்டுப்பள்ளி சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று பிரச்சார பணிகளில் ஈடுபடும்.
- பூதலூரில் பிரச்சார வாகனம் மேற்கொள்ளப்பட்டது.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்து அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்க விழா பூதலூர் வட்டாரத்தில் பூதலூர் வட்டார கல்வி அலுவலர்கள் ரமாபிரபா, கோமதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன், பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன், பேரூராட்சி துணைத் தலைவர் ரமணி, பேரூராட்சி கவுன்சிலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் மற்றும் இட ஒதுக்கீடு பயன்பாடுகள் ஆகியவற்றை விளக்கும் பிரச்சார வாகனம் திருக்காட்டுப்பள்ளி சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று பிரச்சார பணிகளில் ஈடுபடும். திருக்காட்டுப்பள்ளி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் முருகானந்தம் வரவேற்று, நன்றி கூறினார்.
இதேபோல பூதலூரில் பிரச்சார வாகனம் பிரச்சாரம் மேற்கொண்டது.
- திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் ஊருக்கு வந்த பழனிச்சாமியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
- 21-ம் நூற்றாண்டில் இன்னும் இதுபோன்ற கொடுமைகள் உள்ளதா என பழனிச்சாமி வேதனையுடன் உள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பாலப்பட்டி ஊராட்சி பழையமாரப்பன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி(62). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் விசயமாக ஹைதராபாத்துக்கு வேலைக்கு சென்றார். அப்போது அங்கு வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் ஊருக்கு வந்த பழனிச்சாமியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
மாற்றுசமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததால் ஊருக்குள் வரக்கூடாது என தெரிவித்தனர். இதனையடுத்து பழனிச்சாமி தனது மனைவி மற்றும் பெற்றோருடன் கூம்பூர் அருகே தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். தனது ஊரில் உள்ளவர்களை எப்போதாவது பார்க்க வேண்டும் என நினைத்தால் கூட ஊருக்குள் விடாமல் தடுத்து வந்தனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை இறந்துவிட்டார். இறப்பு செய்தி சொல்வதற்காக அந்த ஊருக்கு சென்றபோது அவர்கள் யாரும் வரவில்லை. இதனால் மனம் வெறுத்து தனது குடும்பத்தினர் உதவியுடன் தந்தையை எடுத்துச்சென்று அடக்கம் செய்தார். தற்போது இவரது தாயாரும் முதுமை காரணமாக இறக்கும் தருவாயில் உள்ளார். அவரும் தான் இறந்துவிட்டால் ஊர்மக்களை அழைத்து தன்னை அடக்கம் செய்யவேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
ஆனால் ஊர்மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 21-ம் நூற்றாண்டில் இன்னும் இதுபோன்ற கொடுமைகள் உள்ளதா என பழனிச்சாமி வேதனையுடன் உள்ளார். காதல் திருமணம் செய்தது தவறா, அவர்கள் வாழ தகுதியற்றவர்களா என கதறி அழுது தனது தாய் நிம்மதியாக ஊர்மக்கள் அனைவரையும் பார்க்க அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- வடவன்பட்டி கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
- வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டன.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மயில்ராயன்கோட்டை நாடு வடவன்பட்டி கிராமத்தில் முனிநாதர் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
முன்னதாக இப்பகுதிகளை சேர்ந்த கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் முனி நாதர் பொட்டலிலும், கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டன.
விரட்டு மஞ்சுவிரட்டு என்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு ஓடிய காளைகளை வீரத்தோடு அடக்க முற்பட்டனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு பணியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர்.
- தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது.
- மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் கண்மாயில் தண்ணீர் அளவு குறைந்ததால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அதிகாலை முதல் பெரியகாரை கிராமத்தை சுற்றியுள்ள பணங்காட்டான்வயல், கள்ளிக்குடி, கோட்டவயல், நயினார்வயல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கச்சா, வாளி, கூடையுடன் வந்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து கிராமத்து முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் நின்று வெள்ளைக்கொடி காட்டிய தும் மீன்பிடிக்க தயாராக இருந்தவர்கள் கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்களை பிடிக்க தொடங்கி னர்.
இதில் விரால், கெழுத்தி, கட்லா, கெண்டை போன்ற மீன்கள் சிக்கியது. ஒரு சில மீன்கள் 2 கிலோ அளவிலும் மேலும் அனைவருக்கும் போதிய அளவு மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுபோன்ற மீன் பிடி திருவிழாக்களால் விவசா யம் செழித்து கிராம மக்க ளின் ஒற்றுமை வளரும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த மீன்பிடி திருவிழாவால் சுற்றுவட்டார பகுதி கிராமங்களின் வீடுகளில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது.
- ஊரில் இருந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஊரை விட்டு புறப்பட்டனர்.
- ஊர் எல்லையில் சிலரை பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்தனர்.
கிருஷ்ணகிரி :
கிருஷ்ணகிரி அருகே உள்ள கூளியம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒம்பலகட்டு கிராமத்தில் தொடர்ந்து பல்வேறு மரணங்கள் நிகழ்ந்து வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஊரை காலி செய்து விட்டு வனப்பகுதியில் குடியேறி ஊரில் புகுந்துள்ள பேயை விரட்ட முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று அதிகாலையில் ஊரில் இருந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஊரை விட்டு புறப்பட்டனர். அப்போது தாங்கள் வளர்த்து வந்த ஆடு, மாடு, கோழிகள் மற்றும் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளையும் உடன் அழைத்து சென்றனர். ஊர் எல்லையில் சிலரை பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்தனர்.
இதனை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள வனப்பகுதிக்கு சென்ற கிராம மக்கள் நாள் முழுவதும் அங்கேயே தங்கி வன தேவதைகளை வழிபட்டு சமைத்து சாப்பிட்டனர். பின்னர் மாலை சூரியன் மறைந்த பின் கிராம தெய்வங்களுடன் கரகம் எடுத்து கொண்டு முன்னால் செல்ல, அந்த கரகத்தின் பின்னால் கிராம மக்கள் அணிவகுத்து சென்றனர்.
பின்னர் தங்கள் ஊர் எல்லையை சென்றடைந்ததும் ஆடுகளை பலியிட்டு வழிபட்டதுடன் தங்கள் வீடுகளுக்கு முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்ட பின்னர் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.
- பாரம்பரிய தொழிலாக ஊறுகாய் தயாரிப்பு நடந்து வருகிறது.
- சில ஆண்களின் பெயருக்கு அடைமொழியாக ஊறுகாய் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
திருப்பதி:
ஊறுகாய் என்ற வார்த்தையை கேட்கும் போதே நம் வாயில் எச்சில் ஊற தொடங்குகிறது.
தென்னிந்திய உணவைப் பொறுத்தவரை காரசாரமான ஊறுகாய் இல்லாமல் நிறைவடைவதில்லை.
ஊறுகாய் தயாரிப்பு குடிசைத் தொழிலாக பல இடங்களில் செய்யப்படுகிறது. ஆனால் ஒரு கிராமம் முழுவதும் 70 ஆண்டுகளுக்கு மேலாக ஊறுகாய் மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அந்த கிராமத்தை ஊறுகாய் கிராமம் என்று அழைக்கின்றனர்.
ஆந்திரமாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உசுலுமறு கிராமம். இங்கு பாரம்பரிய தொழிலாக ஊறுகாய் தயாரிப்பு நடந்து வருகிறது. இந்த கிராமத்திற்குள் நுழையும்போதே ஊறுகாய் வாசனை துளைக்கிறது.
அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் ஊறுகாய் தயாரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. மாங்காய் ஊறுகாய் எலுமிச்சை இஞ்சி, புளி, பச்சை மிளகாய் மற்றும் நெல்லிக்காய் என ஒவ்வொருவரும் தனித்தனியாக ஊறுகாய்களை தயார் செய்து வருகின்றனர்.
இங்குள்ள சில ஆண்களின் பெயருக்கு அடைமொழியாக ஊறுகாய் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
கோதாவரி ஆற்றின் துணை நதியான வசிஷ்டா கரையில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் அங்கு ஊறுகாய்க்கு தேவையான அனைத்து மாங்காய் எலுமிச்சை போன்றவை கிடைக்கின்றன.
இதே போல கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்
அங்கம்பாலம் மற்றும் நற்கடிபள்ளி ஆகிய கிராமங்களில் வீட்டுக்கு வீடு ஊறுகாய் தயாரிப்பு நடந்து வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக பிளாஸ்டிக் பைகளிலும், ஆந்திராவுக்கு வெளியேயும் பிற நாடுகளுக்கு மண் ஜாடிகளிலும் ஊறு காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த குடிசைத் தொழில் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாயை அளிக்கிறது. இதனை 70 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.
- கிராம மக்கள் பலமுறைபோக்குவரத்துறையினரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
- மாவட்டத்தில் பஸ் வசதி இல்லாத கிராமங்களை கண்டறிந்து நடவடிக்கை உரிய எடுக்க வேண்டும்.
திருப்பூர்:
இந்திய மாதர் தேசிய சம்மேளம் திருப்பூர் புறநகர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் பல்லடம், ஆறுமுத்தாம்பளையம் ஊராட்சியில் அறிவொளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு உரிய பஸ் வசதியில்லை .இது குறித்து போக்குவரத்துறையினரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
ஆகவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பஸ் வசதி செய்து தர வேண்டும். அதே போன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமப்புற பகுதிகளில் பஸ் வசதி இல்லை. அதனால் நகரப் பகுதிகளுக்கு அன்றாடப் பணிகளுக்கும், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு வர முடியாமல் மக்கள் பாதிப்பு அடைகின்றனர்.
மாவட்டத்தில் பஸ் வசதி இல்லாத கிராமங்களை கண்டறிந்து நடவடிக்கை உரிய எடுக்க வேண்டும். அவினாசி தாலுகாவில் உள்ள கானூர் ஊராட்சியில், சின்ன கானூர், பெரிய கானூர் பகுதியில் இயங்கும் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்து செல்வது இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் அவதி அடைகின்றனர். அதனை முறைப்படுத்தி நேரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
ஊத்துக்குளி ஏ. பெரியபாளையம் ஊராட்சியில் உள்ள நல்லக்கட்டிப்பாளையம் பகுதியில் சரியான முறையில் பஸ் இயக்கப்படாத காரணத்தால் அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக அவதிப்பட்டு வருகின்றனர். அதனை சரி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- தடுப்பூசி குழுவினர், ஆங்காங்கே முகாம் அமைத்து இப்பணியை செய்து வருகின்றனர்.
குடிமங்கலம்
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது.கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் வாயிலாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது கேரளாவில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.இதனால் மாநில எல்லையையொட்டிய தமிழக கிராமங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி உடுமலை அடுத்த கோடந்தூர், தளிஞ்சி, ஈசல்தட்டு, குழிப்பட்டி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் கால்நடைத்துறையால் கோமாரி தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில் கால்நடைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் கூறியதாவது:-
தமிழக - கேரள மாநில எல்லையையொட்டி கிராமங்களில் கோமாரி தடுப்பூசி போடப்படுகிறது. குறிப்பாக 12,000 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தடுப்பூசி குழுவினர், ஆங்காங்கே முகாம் அமைக்கும்போது கால்நடை வளர்ப்போர் தங்களது 4 மாத வயதிற்கு மேற்பட்ட பசு மற்றும் எருமைகளுக்கு தவறாது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.