search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா"

    • அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என இறுதிவரை போராடியவர் பெரியார்.
    • மகளிருக்கு சொத்தில் சம உரிமை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

    சென்னை:

    தந்தை பெரியார் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இந்த சொற்பொழிவில் பேச்சாளர்களாக திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன், திராவிடர் கழகத்தின் துணை பொது செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி, கெனித்ராஜ் அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விழாப்பேருரை ஆற்றினார்.

    விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், ஏன் தந்தை பெரியார் நினைவு கருத்தரங்கத்தை நடத்துகிறார்கள் என உங்களுக்கு கேள்வி இருக்கலாம். வாழ்வில் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் விளையாட்டு போட்டிகளில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் சுறுசுறுப்பு, விடாமுயற்சி, துவண்டு போகாத மன உறுதி, பகுத்தறிய வேண்டிய ஆராய்ச்சி மனப்பான்மை மிக மிக அவசியம்.

    தந்தை பெரியாரிடம் இவை அனைத்துமே அடிப்படை குணங்களாக இருந்தன. பெரியார் மரணத்தின்போது பெரியார் தன் சுற்றுப்பயணத்தை தான் முடித்துக்கொண்டிருக்கிறார் நாம் தொடர்வோம் என்று கலைஞர் எழுதினார்.

    பெரியார் உடலால் மறைந்தாலும் அவருடைய கருத்துக்கள் என்றைக்கும் அழியாது. 95 வரை வாழ்ந்த பெரியார் இறுதி வரைக்கும் தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காக உழைத்தவர்.

    பகுத்தறிவு சமூகநீதி சுயமரியாதை கொள்கைகளை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தார்கள். அவருடைய கருத்துக்கள் என்றைக்கும் இளமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

    இங்கு ஏராளமான மாணவர்கள் அமர்ந்துள்ளீர்கள். ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட சிலர் தான் படிக்க வேண்டும். மற்றவர்கள் குலத்தொழிலை செய்ய வேண்டும் அவர்களெல்லாம் படித்தாலே தீட்டு என்று சொன்னார்கள்.

    குறிப்பாக மகளிர் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் பொது இடத்தில் சிரித்தால் கூட தப்பு என்றும் கூறினார்கள். இன்றைக்கு அந்த நிலைமை மாறியுள்ளது. எல்லோரும் படிக்கிறார்கள். எல்லோரும் வேலைக்கு செல்கிறார்கள்.

    யார் இந்த மாற்றத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது என எண்ணிப் பார்த்தால் அது தந்தை பெரியாராக தான் இருக்கும்.

    பெரியார் பேசிய அத்தனை வடிவங்களுக்கும் செயல் வடிவம் கொடுத்தது பேரறிஞர் அண்ணா. முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு தான் இன்றைக்கும் அந்த பணியை நம்முடைய முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார்.

    எல்லோருக்கும் சம வாய்ப்பு வேண்டும். உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் உரிமைகள் வேண்டும் என்ற பெரியாரின் பிறந்த நாளை நம் முதலமைச்சர் சமூக நீதி நாளாக அறிவித்தார்.

    சுயமரியாதை திருமணம் செல்லும் என அண்ணா சட்டம் கொண்டு வந்தார். மகளிர் குடும்ப சொத்தில் சம உரிமை உண்டு என கலைஞர் சட்டம் கொண்டு வந்தார். காவல்துறை ராணுவத்தில் பெண்கள் வரவேண்டும் என பெரியார் சொன்னார்.

    இந்தியாவிலேயே முதல்முறையாக 50 வருடத்திற்கு முன்னாடியே தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணியாற்றலாம் என்கிற நிலையை ஏற்படுத்தியவர் கலைஞர் தான். இன்றைக்கு பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும். என்ற எண்ணத்தோடு புதுமைப்பெண் திட்டத்தை நம் முதலமைச்சர் தந்துள்ளார்.

    உங்களில் பல பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வருகிறது. வறுமை காரணமாக கல்வியை விட்டு விடக்கூடாது என தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. மகளிர் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். சுயமரியாதையோடு வாழ வேண்டும். அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும் என்று பெரியார் போராடினார்.

    அதற்கு செயல் வடிவம் கொடுக்கிற விதமாக இந்தியாவிலேயே முதல் முறையாக தான் மகளிர் சுய உதவி குழுக்களை கலைஞர் தொடங்கினார். மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்திட நம்முடைய முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கொண்டு வந்தார். எல்லோரும் நல்ல வேலைக்கு போக வேண்டும் என்ற பெரியாரின் கனவை நினைவாக்க நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீதிபதி மாதிரியான உயர் பதவிகளுக்கு ஏழை எளிய கிராம பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்கள் வரவேண்டும் என வாழ்நாள் முழுக்க போராடியவர் தந்தை பெரியார்.

    அதனை செயல்படுத்தும் விதமாக நம்முடைய முதலமைச்சர் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகிற மாணவர்கள் இளைஞர்களுக்கு மாதம் ரூ.7,500 நிதி உதவி வழங்குகிறார். அது மட்டுமல்லாமல் முதல் நிலை தேர்வில் வென்றால் 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை கொடுக்கிறார்கள்.

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்கிற நிலையை ஏற்படுத்த பெரியார் இறுதிவரை போராடினார். அது முடியாமல் போனபோது பெரியாரின் நெஞ்சில் தைத்த அந்த முள்ளை எடுக்கும் விதமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஏன் பெண்களும் அர்ச்சகராக பணியாற்றலாம் என்கிற நிலையை நம் முதலமைச்சர் ஏற்படுத்தினார்.

    பெரியார் இல்லாமல் நாம் யாரும் இல்லை என்று அறிஞர் அண்ணா சொன்னார். என்னை எத்தனையோ பெயர்களை சொல்லி புகழ்ந்தாலும் பெரியார் வழியை பின்பற்றும் மானமிகு சுயமரியாதைக்காரன் என்று சொல்லும்போது பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றார் கலைஞர்.

    பெரியார் இறந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் அவருடைய கருத்துக்களும் சிந்தனைகளும் இன்றைக்கு சமகாலத்தில் ஒத்துப்போகும் அளவிற்கு உள்ளது. அது என்றைக்கும் இருக்கும் ஆகவே தான் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர் எழிலன், மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவில், தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
    • ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம் ஆகிய தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ் வளர்ச்சித் துறை யின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை யொட்டி அக்டோபர் 11-ந்தேதி அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாளை யொட்டி அக்டோபர் 12-ந் தேதி அன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு நாகர்கோவில், தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாண வர்களை நெல்லை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் ஒரு கல் லூரிக்கு இரண்டு மாண வர்கள் பெயர்ப்பட்டியலையும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர். அண்ணா பிறந்தநாள் பேச்சு போட்டிக்கு பள்ளிக்கு காஞ்சி தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா ஆகிய தலைப்புகளும், கல்லூரிக்கு அண்ணாவும் மேடை பேச்சும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய் மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம் ஆகிய தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

    பெரியார் பிறந்த நாள் பேச்சு போட்டியில் பள்ளி களுக்கு வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள் என்ற தலைப்புகளும், கல்லூரிக்கு பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற் காசியாவின் சாக்ரடீஸ், தன்மானப் பேரொளி, தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள் ஆகிய தலைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

    கல்லூரிப் போட்டியில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு மாவட்ட அள வில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. பள்ளிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர் களுக்கு மாவட்ட அள வில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர் களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர் கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப் புப் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரி பஸ் நிலையம் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு யூனியன் சேர்மனும், வாசு. வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மருதுபாண்டியன், விக்னேஷ் ராஜா, துரைராஜ், ரத்தினராஜ், முருகன், முத்துலட்சுமி, வீரமணி, புல்லட் கணேசன், கார்த்திக், பிச்சை மணி, ராம்குமார், பரமசிவம், ஆனந்தா ஆறுமுகம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணாவை பற்றி தவறாக பேசினால் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர்ராஜூ கூறினார்.
    • அண்ணாவின் வாரிசு நாம் தான் என பெருமிதம் கொள்வோம்.

    மதுரை

    மதுரை மாநகர் அ.தி.மு.க., தெற்கு தொகுதி சார்பாக அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-

    அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் வேறு, வேறு தாய் பெற்றிருந்தாலும் ஒரே மனம்படைத்தோர், ஒரே குணம்படைத்தவர்கள். இருவரும் பிரிக்கமுடியாத சகோதரர்கள். அண்ணாமீது எம்.ஜி.ஆர். அதிக பாசம் கொண்டு இருந்தார்.

    தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரை தான் முன்னிலைப்படுத்துவார். கட்சியில் 28-வது இடத்தில் இருந்தவர் கலைஞர். அண்ணா இருக்கும் வரை கலைஞரை தட்டியே வைத்திருந்தார். ஆனால் தற்போது கலைஞர் தி.மு.க.வை குடும்ப கட்சியாக மாற்றியுள்ளார்.

    அண்ணா அவர்கள் கட்சியை கஷ்டப்பட்டு வளர்த்தார். ஆனால் இன்று 4 சினிமா நடித்துவிட்டு படம் ஓடினதும், நான் தான் முதல்-அமைச்சர் என்று சொல்கின்றனர்.

    சிலர் உடனடியாக கட்சி ஆரம்பிக்கின்றனர், உடனடி யாக மந்திரி ஆகவேண்டும், உடனே முதலமைச்சர் ஆகவேண்டும் என நினைக் கின்றனர். எல்லாம் பாஸ்ட் புட் அரசியல்வாதிகளாக உள்ளனர். அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட அ.தி.மு.க.விற்கு தான் உரிமை உண்டு. தி.மு.க. வினர் அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விட்ட னர். கலைஞர் கருணாநிதிக்கு மகன் ஸ்டாலின் அப்பா விற்கு தப்பாமல் பிறந்திருக் கிறார்.

    தற்போது சிலர் படித்த வனுக்கு பித்துப்பிடிச்சது போல் கேலிபேசுகின்றனர். அண்ணாவை பற்றி கேலிபேசுகின்றனர். இறந்த தலைவர் பற்றி இழிவாக பேசுபவன் இழிபிறவி தான். நாங்கள் கூட கலைஞரை தற்போது மரியாதையாக தான் பேசுகிறோம். ஆனால் மறைந்த தலைவரை மதிக்காமல் பேசினால் தமிழ்சமூகம் அவர்களை மிதித்து விடுவார்கள்.

    ஆளும் கட்சி என்று மப்பில் பேசலாம். அண் ணாவை பற்றி பேசினால் நாக்கை துண்டாக்கும் கொள்கை மறவர்கள் இருக்கிறார்கள். அண்ணா பல்வேறு சாதனை செய்த வர். அண்ணாவை பற்றி எவன் தவறாக பேசினாலும் அவன் நாக்கு அழுகிவிடும்.

    பல ஏழை எளிய மக்கள் முன்னேறியதற்கு பெரியார், அண்ணா தான் காரணம். அதிமுக ஆட்சியில் செயல் படுத்திய பல்வேறு திட்டங் களை தி.மு.க. மூடுவிழா கண்டு வருகிறது. எனவே அண்ணாவின் வாரிசு நாம் தான் என பெருமிதம் கொள்வோம்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    • அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.பி. முத்துகருப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி,

    மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜான்சி ராணி, மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராமசு ப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் வசந்தி, கவுன்சிலர் சந்திரசேகர், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், பாளை மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் ஆறுமுகம், செயலாளர் முத்துப்பாண்டி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், பகுதி செயலாளர்கள் காந்தி வெங்கடாசலம், சண்முக குமார், திருத்து சின்னத்துரை, ஜெயபாலன், வட்டச் செயலாளர்கள் பாறையடி மணி, பக்கீர் மைதீன், நத்தம் வெள்ளபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பேரறிஞர் அண்ணாவின் 114 -வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • அண்ணாவின் உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் பேரூர் தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 114 -வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கொட்டாரம் சந்திப்பில் அண்ணாவின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அண்ணாவின் உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    கொட்டாரம் பேரூர் தி.மு க. செயலாளர் வைகுண்ட பெருமாள் தலைமை தாங்கி அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் ராஜகோபால், கொட்டாரம் பேரூர் தி.மு.க. அவைத்தலைவர் சுப்பையாபிள்ளை, ஒன்றிய பிரதிநிதி சந்திரசேகர், கிளை செயலாளர்கள் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு
    • நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீசார் ரோந்து

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நாளை நடக்கிறது.

    விழாவில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடும் அவர், நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். குடியரசு தின விழாவில் 500 பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி களும் நடக்கிறது.

    இதையடுத்து போலீ சாரின் அணிவகுப்பு ஒத்தி கை நிகழ்ச்சி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்தது. இதில் போலீசார், தீயணைப்பு படையினர், என்.சி.சி. மாணவர் படை யினர் கலந்து கொண்ட னர். இதையடுத்து அண்ணா விளையாட்டு அரங்கம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    விழா நடைபெறும் மைதானத்தில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அண்ணா விளை யாட்டு அரங்க வாசலில் மெட்டல் டிடெக்டர் வாசல் அமைக்கப்பட்டு உள்ளது. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குடியரசு தினத்தை ஒட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தரவின் பேரில் பாதுகாப்பு பணி யில் 1200 போலீசார் ஈடு படுத்தப்பட்டு உள்ளனர்.

    நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிசனங்களுக் குட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்றிரவு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. லாட்ஜ்களில் சந்தேகப்படும் படியான நபர்கள் தங்கி யுள்ளார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு உள்ள வருகை பதிவேட்டை யும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதிகளில் உள்ள லாட்ஜிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. மாவட்ட எல்லை பகுதி களில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட்டு வரு கிறது. அஞ்சு கிராமம், ஆரல்வாய்மொழி, களியக் காவிளை சோதனை சாவடி யில் போலீசார் கண் காணிப்பு பணியை மேற் கொண்டனர்.

    கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். கடலோர காவல் படை போலீசாரும் கண் காணிப்பு பணியை மேற் கொண்டு வருகிறார்கள். சந்தேகப்படும் படியாக யாராவது சுற்றி திரிகிறார் களா? என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலை மையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் உடை மைகளை போலீசார் சோதனை செய்து வருகிறார் கள். நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து வெளி யூர்களுக்கு அனுப்ப வைக்கப்பட்டிருந்த பார்சல் களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை மேற்கொண்டனர்.

    ரெயில் தண்டவாளங்களி லும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது. கன்னியா குமரி, நாங்கு நேரி, வள்ளியூர், இரணியல், குழித்துறை ரெயில் நிலையத்திலும் கூடுதல் போலீசார் பாது காப்பு பணிக்கு நியமிக்கப் பட்டுள்ளனர். நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திலும் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டு உள்ளது ரெயில்வே பாலங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களி லும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கருணாநிதியின் நினைவிடத்தில் 'தலைநிமிர்ந்த தமிழகம்', 'மனங்குளிருது தினம் தினம்' என்று பூக்களால் வாசகங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
    • மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை புத்தாண்டையொட்டி சந்தித்தார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று புத்தாண்டையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    புத்தாண்டையொட்டி கருணாநிதியின் நினைவிடத்தில் 'தலைநிமிர்ந்த தமிழகம்', 'மனங்குளிருது தினம் தினம்' என்று பூக்களால் வாசகங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை புத்தாண்டையொட்டி சந்தித்தார். அப்போது அவர்கள் புத்தகங்களை வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஆவடி நாசர், தங்கம் தென்னரசு, வெள்ளக்கோவில் சாமிநாதன், பெரியகருப்பன், முத்துசாமி, சக்கரபாணி, ரகுபதி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, கு.க.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் மயிலைவேலு, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, தி.நகர் ஜெ.கருணாநிதி மேயர் பிரியா.

    தலைமைச் செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகள் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், முருகானந்தம், பணீந்திர ரெட்டி, சுப்ரியாசாகு, ராஜேஷ் லக்கானி, அமுதா, சிவதாஸ் மீனா, அதுல்ய மிஸ்ரா, நீரஜ்மிட்டல், கிரிலோஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    • 24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவு நீரோடைகள் மோசமான நிலையில் உள்ளது.
    • மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மேயர் மகேஷ் மோட்டார் சைக்கிளில் சென்றும், நடந்து சென்றும் ஆய்வு செய்தார். அண்ணா பஸ்நிலையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மேயர் மகேஷ் அங்குள்ள கழிவறையை சென்று பார்வையிட்டார். அப்போது கழிவறையில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள். இதை தொடர்ந்து அதிகாரியிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து நாகராஜா திடல் , மீனாட்சிபுரம் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதிகளில் கழிவுநீர் ஓடைகள் மோசமாக காணப்பட்டது. அதை உடனடியாக சீரமைக்க மேயர் மகேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .

    இதை தொடர்ந்து மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தை மேம்படுத்த ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அண்ணா பஸ் நிலையம் மேம்படுத்தப்படும். பஸ் நிலையத்தில் உள்ள இருக்கைகள் சீரமைக்கப்படுவதுடன் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவு நீரோடைகள் மோசமான நிலையில் உள்ளது.அந்த ஓடைகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பகுதி சபா கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.அந்த மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது ஆணையாளர் ஆனந்தமோகன்,மண்டலத் தலைவர் ஜவகர், கவுன்சிலர் ரோசிட்டா, திமுக மாணவர் அணி அமைப்பாளர் சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கூட்டுறவு நூற்பாலைகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம் தொழிலாளர்களை பணிக்கு நியமிக்கும் முறையை கைவிட வேண்டும்
    • தினக்கூலி தொழி லாளர்களை வேலையில் இருந்து நீக்கி விட்டு கூட்டுறவு நுற்பாலைகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம் தொழிலாளர்களை பணி அமர்த்தும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது

    நாகர்கோவில் :

    தமிழக அரசு கூட்டுறவு நூற்பாலைகளை முழுமையாக இயக்க வேண்டும். கூட்டுறவு நூற்பாலைகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம் தொழிலாளர்களை பணிக்கு நியமிக்கும் முறையை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    கூட்டுறவு நூற்பாலை அண்ணா தொழிற்சங்க செயலாளர் மாசானம் தலைமை வகித்தார். கூட்டுறவு நூற்பாலை அண்ணா தொழிற் சங்க தலைவர் ஜாமின் ஜெயக்கு மார் வரவேற்றார்.

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பச்சைமால், ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை தலைவர் சகாயராஜ், ஆர ல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசி னார்.

    அப்போது அவர் பேசியதாவது, தமிழக அரசு கூட்டுறவு நூற்பாலைகள் முழுமையாக இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    மேலும் கூட்டுறவு நூற்பாலைகளில் பல ஆண்டுகளாக பணிபுரி கின்ற தினக்கூலி தொழி லாளர்களை வேலையில் இருந்து நீக்கி விட்டு கூட்டுறவு நுற்பாலைகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம் தொழிலாளர்களை பணி அமர்த்தும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதனை உடனடியாக அரசு கைவிட வேண்டும். கூட்டுறவு நூற்பாலை நிரந்தர தொழிலாளர்க ளுக்கு 25-04-2022 அன்று முடிவு செய்யப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தத்தினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    கூட்டுறவு நூற்பாலை தினக்கூலி தொழி லாளர்களுக்கு ரூ.493-க்கு குறைவில்லாமல் ஊதியம் வழங்க வேண்டும், 2-ம், 3-ம் பட்டியல் தினக்கூலி தொழிலாளர்களை கால தாமதமின்றி பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், கே.சி.யு.மணி, ஆரல்வாய்மொழி பேரூர் அவைத் தலைவர் முத்துசாமி, மேலவை பிரதிநிதி சுந்தரம் பிள்ளை மற்றும் சங்கர்லிங்கம், துணைச்செல்வன், நாகரா ஜன், தொழிற்சங்க ஆலோ சகர் ஐயப்பன் மற்றும் அண்ணா தொழி ற்சங்க நிர்வாகிகள், கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பிறந்தநாள் விழா நடந்தது
    • திராவிட கட்சியை தமிழகத்தில் உருவாக்கியவர் அண்ணா.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் நடந்தது. இதையொட்டி ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட அவை தலைவர் ஏ.வி.நாக ராஜன் தலைமையில் மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    விழாவில் பேசிய மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், திராவிட கட்சியை தமிழகத்தில் உருவாக்கியவர் அண்ணா. தமிழகம் மட்டுமல்லாது உலகம் எங்கும் தமிழர்களின் புகழை ஓங்க செய்தவர் அண்ணா. சுயநலம் இல்லாமல் கட்சிக்காகவும், தமிழக மக்களுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அவர் அர்ப்பணித்தார். அவரின் வழியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அ.தி.மு.க.வை உயிரினும் மேலாக கட்டிக் காத்தனர்.

    இந்த கட்சியை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு காப்பாற்ற அண்ணாவின் பிறந்தநாளில் சபதம் ஏற்போம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், சிவமணி, வடிவேல், நகர செயலாளர் இப்ராஹிம் ஷா, மாவட்ட பேரவை இணைச் செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 15, 17-ந் தேதிகளில் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
    • சிறப்புப் பரிசு வழங்கப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் அண்ணா, பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அண்ணா, பெரியாா் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15, 17-ந் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மேற்கண்ட நாட்களில் காலை 10 மணிக்கு பள்ளி மாணவா்களுக்கும், பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி மாணவா்களுக்கும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது.

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு 'தாய் மண்ணுக்குப் பெயா் சூட்டிய தனயன்', 'மாணவா்க்கு அண்ணா', 'அண்ணாவின் மேடைத் தமிழ்', 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்' ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு 'பேரறிஞா் அண்ணாவும் தமிழக மறுமலா்ச்சியும்', 'பேரறிஞா் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள்', 'அண்ணாவின் தமிழ் வளம்', 'அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி !' 'மக்களிடம் செல்' ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

    பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு 'தொண்டு செய்து பழுத்த பழம்', 'தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும்', 'தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள்', 'தந்தை பெரியாா் காண விரும்பிய உலக சமுதாயம்', 'தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்' ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு 'தந்தை பெரியாரும், பெண் விடுதலையும்', 'தந்தை பெரியாரும், மூடநம்பிக்கை ஒழிப்பும்', 'பெண் ஏன் அடிமையானாள்?', 'இனிவரும் உலகம்', 'சமுதாய விஞ்ஞானி பெரியாா்', 'உலகச் சிந்தனையாளா்களும் பெரியாரும்' ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. மேலும், அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்புப் பரிசும் வழங்கப்படவுள்ளது.

    மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலராலும், கல்லூரி போட்டிக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநராலும் தோ்வு செய்து அனுப்பப்படும் மாணவா்கள் மட்டுமே பங்கேற்ற இயலும். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியா் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×