search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருட்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போதைப் பொருட்களுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம்.
    • துண்டுப்பிரசுரத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.

    மதுரை:

    தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

    அதேபோல் இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்த நல்லூர் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள 110 அடி உயர கொடிக்கம்பம் திறப்பு விழா மற்றும் கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தந்தார்.

    விமான நிலையத்தில் மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் முன் னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் புடை சூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் விரும்பத்தகாத செயலாக தொடர்ந்து அரங்கேறி வரும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் குறித்து பிரசாரம் செய்யும் வகையில் துண்டுப் பிரசுரங்களை எடப்பாடி பழனிசாமி தொண்டர்களிடம் வழங்கினார்.

    அந்த துண்டு பிரசுரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்ட மாதங்கள், அதில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. மேலும் போதைப் பொருட்களுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் அச்சிடப் பட்டு இருந்தது. 

    • சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
    • சுற்றுலா வாகனங்களில் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப், கவியருவி, சின்னகல்லார் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

    அப்போது அந்த வாகனங்கள் ஆழியார் சோதனைச்சாவடி மற்றும் டாப்சிலிப் வழித்தடத்தில் உள்ள சேத்துமடை சோதனைச்சாவடி ஆகிய பகுதிகளில் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

    இதற்கிடையே சுற்றுலாப் பயணிகள் போல ஒருசிலர் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்களை சட்டத்துக்கு புறம்பாக வாகனங்களில் கொண்டு செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின்பேரில் வனச்சரகர் ஞானமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று ஆழியார் சோதனைச் சாவடியை கடந்து கவியருவி, வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் வனத்துறையின் பைரவா மோப்பநாய் மூலம் சுற்றுலா வாகனங்களில் ஏதேனும் போதைப் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஆழியார் சோதனைச்சாவடி வழியாக கவியருவி, வால்பாறை மட்டுமின்றி அட்டக்கட்டி, சின்னகல்லார், சோலையார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். எனவே இந்த வழியாக செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே போதைப்பொருட்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான பொருட்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்க்கும் வகையில் ஆழியாறுக்கு வரும் சுற்றுலா வாகனங்களில் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    மேலும் வனப் பகுதிகளுக்குள் எவரேனும் அத்துமீறி செல்கின்றனரா என்பதையும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.

    • போதை பொருட்கள் தடுப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • ரூ.21¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போதை பொருட்கள் தடுப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதையடுத்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள், காவல்துறையினர், உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் கடைகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டனர்.

    மொத்தம் 78 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 620 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த 78 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் ரூ.21¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • 3 மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்
    • 149 கிலோ மெபெட்ரோன், 50 கிலோ எபிட்ரின் மற்றும் 200 லிட்டர் அசிட்டோன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்

    ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் 3 மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை கண்டுபிடித்து, சுமார் ₹300 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.

    ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள பின்மால், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள ஒசியான் மற்றும் குஜராத் மாநிலத்தின் காந்திநகர் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.

    அதில், சம்பவ இடத்தில் இருந்து 149 கிலோ மெபெட்ரோன், 50 கிலோ எபிட்ரின் மற்றும் 200 லிட்டர் அசிட்டோன் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் இதுவரை ₹ 4,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இன்றைக்கு கூட பாஜக ஆளும் மாநிலத்தில் 450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்
    • முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவுமே புரியாமல் பேசுகிறார் என்பது ஆச்சர்யம், வருத்தம் மட்டுமல்ல, அது நகைச்சுவை

    நேற்று சென்னையில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

    அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தை விமர்சிப்பதோடு டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்தியதாக அதிமுகவை விமர்சித்துள்ளாரே என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் அப்படித்தான் இருக்கிறது. இன்றைக்கு கூட பாஜக ஆளும் மாநிலத்தில் 450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். அதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப் போகிறார்? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது அதிமுக ஆட்சியில் தான்" எனத் தெரிவித்தார்.

    இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார்.

    அப்போது, "முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவுமே புரியாமல் பேசுகிறார் என்பது ஆச்சர்யம், வருத்தம் மட்டுமல்ல, அது நகைச்சுவை. நாகலாந்து, உத்தரகாண்ட், இமாச்சல், குஜராத் ஆகிய மாநிலங்களில் போதைப் பொருட்களை கைப்பற்றுகிறார்கள் என்றால் அதற்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் இப்படி அரைவேக்காடுத்தனமாக பதில் சொல்ல கூடாது.

    தமிழ்நாட்டில் போதை பொருட்கள் விவகாரத்தில் ஆளும்கட்சிக்கு தொடர்பு இருப்பதை தான் குற்றம் சாட்டுகிறோம். போதை பொருட்களை மத்திய அரசின் துறைகள் பிடித்து நடவடிக்கை எடுக்கிறது. திமுக அரசு மீது குற்றச்சாட்டு வைத்தால், அவர்களுக்கு பதிலாக முன்னாள் முதலமைச்சர் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    • என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்த பிறகு போதைப் பொருட்களான கஞ்சா, அபின், போதை ஸ்டாம்ப் தாராளமாக விற்கப்படுகிறது.
    • குழந்தை உயிரிழப்பானது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மகிளா காங்கிரஸ் சார்பில் சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அண்ணாசாலை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே உண்ணாவிரதம் நடந்தது.

    100-க்கும் மேற்பட்ட பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டி பங்கேற்றனர்.

    உண்ணாவிரதத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    புதுச்சேரியில் நடந்த கொடூர சம்பவம் பெண்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியா கூட்டணி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்த பிறகு போதைப் பொருட்களான கஞ்சா, அபின், போதை ஸ்டாம்ப் தாராளமாக விற்கப்படுகிறது. கல்லூரி, பள்ளி, பல்கலைக்கழகம் முன்பாகவும் விற்கப்படுகிறது.

    புதுவை கஞ்சா நகரமாகிவிட்டது. மக்கள் வசிக்கும் பகுதியில் ரெஸ்டோபார்கள் திறக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    முதல்- அமைச்சரும், உள்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் செய்யவில்லை. அதைத் தொடர்ந்தே இச்சம்பவம் நடந்துள்ளது. குழந்தை உயிரிழப்பானது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

    குழந்தைகளை பள்ளி, கல்லூரிக்கு எப்படி அனுப்புவது? யார் பாதுகாப்பு என பெற்றோர்கள் பயத்தில் உள்ளனர்.

    பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் அதுபோல் நடக்கவில்லை. பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் இதேநிலைதான் உள்ளது.

    குஜராத்தில் ஏராளமான பெண்கள் காணாமல் போயுள்ளனர். பெண்களை துச்சமாக மதிக்கும் பா.ஜனதா, பெண்களுக்கு பாதுகாப்பு தராத ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும்.

    சிறுமி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றத்தின் பின்னணியில் யார் இருக்கிறார் என தெரியவில்லை.

    புதுவை அரசு வழக்கை பூசி மெழுக பார்க்கிறது. அத்துடன் கஞ்சா விநியோகம், எங்கிருந்து வருகிறது. யார் விநியோகம் செய்கிறாகள். எந்த அரசியல்வாதி பின்னணி, பல மாநிலங்களில் சேர்ந்து வருவதால் சி.பி.ஐ. விசாரணை வைத்தால் தான் இவ்வழக்கை முழு ரூபத்தை காணமுடியும். நடவடிக்கை எடுக்க முடியும்.

    சிறுபான்மையினரை பாதிக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சி குடியுரிமை சட்டத்தை எதிர்க்கிறோம். புதுச்சேரியில் அமல்படுத்த முயற்சித்தால் எதிர்ப்போம்.

    புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நிற்க யாருமில்லா நிலை பா.ஜனதாவில் உருவாகியுள்ளது. காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. காங்கிரஸ் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவிக்கும் என்று கூறினார்.

    • உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை அடங்கிய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • குட்கா சோதனை குழுவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவரும், இரு காவலர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை அடங்கிய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    குட்கா சோதனை குழுவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவரும், இரு காவலர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    கடைகளில் 3 கிலோவுக்குள் குட்கா விற்பனை செய்யப்பட்டால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • துறை சார்ந்த அலுவலர்களுடன் வாராந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும், சமுதாய சீர்கேடுகள் குறித்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பான வாராந்திரஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் போதைபொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பான துறை சார்ந்தஅலுவலர்களுடன் வாராந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு குறித்து தொடர்ந்து காவல்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் தொடர்பாக புகார்கள் வரும்போது உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மறுவாழ்வுமையத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். அனுமதியற்ற மதுபானகூடங்கள் குறித்து தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். வருகின்ற ஜுன் 26 போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும், சமுதாய சீர்கேடுகள் குறித்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

    அதிக மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ெரயில் நிலையம், காய்கறிச்சந்தை மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் போதைப்பொருட்கள் விழிப்புணர்வு குறித்த சுவரொட்டிகள், ஒட்டுவில்லைகள் மூலம்பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சென்றடையும் வகையில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.காவல்துறை, கலால்துறை இணைந்து கூட்டாய்வு மேற்கொண்டு அனுமதியற்ற மதுபானக்கூடங்கள் மற்றும் போதைபொருள் இல்லாத நிலைக்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் , மாநகர காவல் உதவி ஆணையர் (நுண்ணறிவு பிரிவு) ஈஸ்வரன்,உதவி ஆணையாளர் (கலால்) ராம்குமார், வடிப்பக அலுவலர் துரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    • அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    • போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம், செய்திதுறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.இதில் மாவட்ட கலெக்டர் வினீத், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய், மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக போதை பொருள் ஒழிப்பு, சாலை விதிகளை பின்பற்றாததால் ஏற்படும் விபத்துக்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து போலீசார் செயல்பட வேண்டுமென அமைச்சர் அறிவுறுத்தினர்.திருப்பூர் மாவட்டத்தில் விபத்துகளை குறைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் . போதை பொருள் இல்லாத மாவட்டமாக திருப்பூர் இருக்க வேண்டும் என்றும் அதற்குரிய நடவடிக்கைகளை போலீசார் உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    • மாணவர்களிடம் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
    • கஞ்சா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ மாணவிகளின் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு சான்றிதழையும் நினைவு பரிசினையும் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசும் போது, 'மாவட்டத்தில் தாலுகா வாரியாக 9 குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களிடம் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

    பள்ளி கல்லூரிகளுக்கு அருகாமையில் கஞ்சா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப் பொருட்களை புழக்கத்தில் விடும் நபர்கள் குறித்து புகார் அளிக்கலாம்' என்றார்.

    இதில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் செல்வகுமார், நகர் மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், தி.மு.க. நகர செயலாளர் ரவிக்குமார், சேர்மன் ரவி கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-23 -ம் கல்வியாண்டில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டினார்.

    • பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • போதைப் பொருள்களின் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் முதல்வா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.

    திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- தமிழகத்தில் போதைப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். மன அழுத்தத்தைப்போக்க போதைப் பொருள்களைப் பயன்படுத்தி விடியல் ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று தவறான எண்ணம் ஏற்பட்டுள்ளது. போதைப் பொருள் பழக்கம் குழந்தைகளை, எதிா்கால சமூகத்தினை, மனித வளத்தை அழிக்கக்கூடியதாகும். ஆகவே, போதைப்பொருள் விற்பனை தொடா்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக 1098, 101 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.முன்னதாக இதில் பங்கேற்றவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை ஒழிக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
    • புகையிலை பொருட்கள் விற்றதாக 423 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு முழுவதும் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை ஒழிக்கும் வகையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்படி போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை ஒழிக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் கஞ்சா விற்றதாக 65 வழக்குகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்றதாக 423 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 424 பேரின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.9 லட்சத்து 12 ஆயிரத்து 480 முடக்கப்பட்டுள்ளது. 

    ×