என் மலர்
நீங்கள் தேடியது "Excitement"
- நல்ல பாம்பு குட்டி ஒன்று ஆசிரியையின் மொபட்டில் புகுந்ததை கண்டு அதிர்ச்சி.
- நல்ல பாம்பு குட்டியை பிடித்து வெளியே கொண்டு வந்து காட்டு பகுதியில் விட்டனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் ஆசரியர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்வது வழக்கம்.
இந்நிலையில், வழக்கம்போல் ஆசிரியை ஒருவர் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அவ்வழியாக வந்த சிலர் நல்ல பாம்பு குட்டி ஒன்று ஆசிரியையின் மொபட்டில் புகுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சலிட்டனர்.
உடனே, அப்பகுதி பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திரை சீலன், அருள் ஜோதி, பாலாஜி அமுதன் ஆகியோர் நீண்ட நேரம் போராடி மொபட்டில் இருந்த நல்ல பாம்பு குட்டியை பிடித்து வெளியே கொண்டு வந்து காட்டு பகுதியில் விட்டனர். இதனால், பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் கூறும்போது:-
பள்ளியின் அருகில் கருவை காடுகள் மண்டியிருப்பதால் அங்கிருந்து அடிக்கடி பாம்புகள், விஷபூச்சிகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகள் வருகிறது. எனவே, கருவை மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- திருப்பூர் ரெயில் நிலையத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு
- பெண்ணால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
திருப்பூர்:
திருப்பூர் ரெயில் நிலையத்தில் முதியவரிடம் செல்போனை பிடுங்கி, நீங்கள்பீடி, சிகரெட் குடிக்கிறீர்களா, தீப்பெட்டி வைத்துள்ளீர்களா நான் சேலம்கோட்ட ரெயில்வே அதிகாரி உங்களுக்கு அபராதம் விதித்து விடுவேன் எனக் கூறி 38 வயதுள்ள பெண் ஒருவர் வீடியோ எடுத்தார். பலர் வேடிக்கை பார்க்க, அங்கிருந்த தம்பதியினர்- இளம்பெண்ணையும் வீடியோ எடுத்தார்.
இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்து நீங்கள் யார் என கேட்க, கடும் வார்த்தைகளால் அப்பெண் திட்டிள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீஸ்காரர் கண்ணன் அப்பெண்ணிடம் விசாரணை நடத்த கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி, நான் சேலம் டிவிசன் ஆபீசர், திருப்பூர் ஸ்டேஷன் என்னோடுது, தினமும் வர்றேன். எல்லாத்தையும்புடுச்சி, புடுங்கிட்டாங்களா, என்ன வந்து விசாரிக்கிறீங்க, என்னை யாரும்எதுவும் கேட்க முடியாது என, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்களிடம் போலீஸ்காரர் விசாரணை நடத்திக் கொண்டிருக்க,குறுக்கிட்ட அந்த பெண்,' உனக்கு விசாரிக்கவே தெரியல, நீ எப்படி? வேலைக்கு வந்த என வாய்க்கு வந்தபடி பேசினார். அங்கு வந்த ரெயில்வே போலீஸ் எஸ்.ஐ., லதா அப்பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அழைத்துச் சென்றனர். தன்னைரெயில்வே அதிகாரி எனக்கூறி போலீசாரிடம் சண்டையிட்ட பெண்ணால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- போக்குவரத்து அதிகமுள்ள ரோட்டில் அதிகாலை நேரத்தில் சுவர் இடிந்து விழுந்தது.
- ரோட்டில் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஆட்டையாம்பாளையத்திலிந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் அடுத்தடுத்து வீடுகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று ஒரு வீட்டின் சுவர் திடீரென இடிந்து ரோட்டில் விழுந்தது. போக்குவரத்து அதிகமுள்ள அந்த ரோட்டில் அதிகாலை நேரத்தில் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது ரோட்டில் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- அரசு தலைமை மருத்து வமனை வளாகத்தில் மாவட்ட காச நோய் மையம் உள்ளது.
- சிறிய அளவிலான பாம்பு ஒன்று இருந்தது.
கடலூர்:
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் நூற்று க்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்து வமனை வளாகத்தில் மாவட்ட காச நோய் மையம் உள்ளது. இந்த நிலையில் துப்புரவு பெண் ஊழியர் ஒருவர் காசநோய் மையம் வளாகத்தில் சுத்தம் செய்வதற்காக ஓரத்தில் இருந்த துடைப்பத்தை எடுப்பதற்கு சென்றார்.
அப்போது சிறிய அளவிலான பாம்பு ஒன்று இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் துப்புரவு ஊழியர் அலறி அடித்து ஓடி அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் வன ஆர்வலர் செல்லாவிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வன ஆர்வலர் செல்லா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த சிறிய அளவிலான நல்ல பாம்பை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகம் முழுவதும் செடிகளும் முட்பு தர்களும் அதிக அளவில் உள்ளன. ஆகையால் மருத்துவமனை நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அதிக அளவில் வரக்கூடிய தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏதேனும் பாம்புகள் உள்ளதா? என்பதனை கண்டறிந்து அதனை பிடிப்பதற்கு உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- கடையடைப்பு போஸ்டரால் ஆலங்குடியில் பரபரப்பு ஏற்பட்டது
- கடையடைப்பு நடத்த போவதாக அப்பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லாலங்குடி ஊராட்சியில் சாலைகள் சீரமைப்பு பணி நடைபெற்று உள்ளது. ஆனால் இந்த பணி உரிய வகையில் முழுமையாக நடைபெற வில்லை. எனவே ஊராட்சிக்கு உட்பட்ட குளத்தில் இருந்து மண் எடுத்த சாலைகளை முழுமையாக சீர் செய்ய வேண்டும். பணம் பறிக்கும் நோக்கத்தில், தனி நபர் ஒருவர் அதிகாரிகளை தடுத்து மிரட்டி வருவதால், பணிகள் நடைபெறாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே இதனை கண்டித்தும், சாலை பணிகளை முழுமையாக முடிக்க கோரியும் கண்டன கடையடைப்பு நடத்த போவதாக அப்பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. 24-ம் தேதி கடையடைப்பு நடைபெறுவதாகவும், இதற்கு பிறகும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபா கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிக்க உள்ளதாகவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆலங்குடி கல்லாலங்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- அவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
- ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் சபாபதி முதலியார் தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 27).
இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது விஜய் திருச்சியில் திரைப்படத்துறையில் கலை பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் கடந்த 2 தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருவாரூர் நகர போலீசார் இன்று பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய விஜயை கைது செய்வதற்காக சபாபதி முதலியார் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.
அப்பொழுது வீட்டிலிருந்த விஜயை கைது செய்து திருவாரூர் நகர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது கழிவறைக்கு செல்வதாக விஜய் கூறிவிட்டு சென்றார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த எலி கேக்கை (விஷம்) எடுத்து தின்றார்.
அதனை அவர் தனது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இந்த நிலையில் எலி கேக்கை தின்றவுடன் வெளியில் வந்து போலீசாரிடம் நான் எந்த தவறும் செய்யவில்லை. தற்பொழுது வேலை பார்த்து வருகிறேன்.
ஏன் என் மீது வழக்கு போடுகிறீர்கள். அதனால் நான் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீசார் விஜயை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன். இவர்கள் இரு அணிகளாக இருந்து வருகின்றனர்.
- வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில் கடும் மோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் அருகே நெல்லிக்குப்பத்தில் நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன். இவர்கள் இரு அணிகளாக இருந்து வருகின்றனர். இன்று காலை நகர்மன்ற கூட்டத்தில் நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணனுக்கும், இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நகர செயலாளர் மணிவண்ணன் நகர தி.மு.க. அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போதுஉஇதன் காரணமாக இரு தரப்பை சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் சாலைகளில் திரண்டனர்.
மேலும் வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில் கடும் மோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் உங்களுக்குள் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாக பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. ஆகையால் இரு தரப்பினரும் அமைதியாக செல்லுங்கள் என தெரிவித்ததை தொடர்ந்து இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர் இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.
+2
- கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
- விவசாயிகள் கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து தர வேண்டுமென மனுக்கள் வழங்கினார்,
கடலூர்
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது குஞ்சிதபாதம் - என்.எல்.சி. சார்பாக விருத்தாச்சலம்,புவனகிரி,ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் உள்ள 30 ஏரிகளை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் த்துறையூர் காந்தி: -அரசூர் தென்பெண்ணை ஆற்றில் உள்ள மலட்டாறு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மற்றும் அதே பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் வீராணம் ஏரி விவசாயிகள் சங்கத் தலைவர் பாலு: - மத்திய கனிம வள நிறுவனம் சார்பில் வீராணம் ஏரியை சுற்றியும் 2017 முதல் ஆய்வு செய்து வருகிறார்கள். அப்பகுதி கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் 2020 பாதுகாத்த வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த ஆய்வு தொடரப்படுவதால் இந்த ஆய்வை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த நிலையில் என்.எல்.சி.க்கு வீடு , நிலம் கொடுத்த பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு சேர்ந்தவர்கள் திடீரென்று கூட்டத்தில் திரண்டு மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது- 2000 ஆம் ஆண்டு முதல் நிலம் வீடு எடுத்த அனைவருக்கும் நிரந்தர வேலை கொடுக்க வேண்டும். வேலை வாய்ப்புக்கு பதில் ரு 1, 09, 500 கொடுத்ததை ஏற்க முடியாது. அத்தொகையை வாங்கிய அனைவருக்கும் நிரந்தரவேலை கொடுக்க வேண்டும்.வேலை வேண்டாம் என்பவருகளுக்கு இன்றைய வாழ்வாதார தொகை கொடுக்க வேண்டும். 2000-ம் ஆண்டு முதல் நிலம் கொடுத்த அனைவருக்கும் 01.01.2014 முதல் கொடுக்க கூடிய இழப்பீடுத் தொகையை வழங்க வேண்டும். நிலத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதில் உள்ள மின் இணைப்பை என்எல்சி செலவில் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் தன்னிச்சையாக செயல்படாமல் விவசாயிகள் கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து தர வேண்டும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கினர். இதனை தொடர்ந்து விவசாய குறை கேட்பு கூட்டம் நடந்தது.
- இவருக்கும் சிதம்பரம் அடுத்த வரகூர்பேட்டையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
- இன்று காலையில்,மணமகனை காணவில்லை. .
கடலூர்:
கடலூர் மாவட்டம் உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் மகன் ஜெயக்குமார் (வயது 28). இவர் கடலூர் மாவட்ட நீதிமன்ற அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிதம்பரம் அடுத்த வரகூர்பேட்டையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டத அதன்படி சிதம்பரம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முதல்நாள் நடக்கும் பெண் அழைப்பு விழாவிற்கு மணமகன் வீட்டார் அவர்களின் உறவினர்களுடன் நேற்று மாலை வந்தடைந்தனர். பெண் அழைப்பு முடிந்த நிலையில் இன்று நடக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகள் வீட்டார் செய்து வந்தனர். மணமகன் வீட்டார் திருமண மண்டபத்திலேயே தங்கிவிட்டனர் .
இன்று காலையில் வெகுநேரமாகியும் ரூமை விட்டு மணமகன் வெளியில் வரவில்லை. இதையடுத்து ரூமுக்குள் சென்று பார்த்த போது மணமகனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மணமகனை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் செய்வதறியாது திகைத்து வந்தனர். முதல்நாள் பெண் அழைப்பில் பங்கேற்று விட்டு, மருநாள் திருமணத்தன்று மணமகன் மாயமான சம்பவம் சிதம்பரம் நகரப் பகுதியில் பரபரப்பை உருவாக்கியது.
- குடிபோதையில் இருந்த 2 பேர் அரசு பஸ்சை மறித்து கண்டக்டரிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர்.
- 2 பேரும் இருசப்பனை கல்லால் தாக்கி கீழே தள்ளி காதை கடித்துள்ளனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஆண்டி கரையை சேர்ந்தவர் இருசப்பன் (வயது 36). மேட்டூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு காவல் பணிக்காக வீட்டில் இருந்து மேட்டார் சைக்கிளில் மேட்டூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். மங்கனூர் காலனி அருகே சென்றபோது குடிபோதையில் இருந்த 2 பேர் அரசு பஸ்சை மறித்து கண்டக்டரிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனால் பஸ்ஸில் இருந்த பெண்கள், குழந்தைகள், அச்சத்துடன் இருந்தனர். இதனைப் பார்த்த போலீஸ்காரர் இருசப்பன் அந்த நபர்களை தட்டி கேட்டு உள்ளார். அப்போது அவர்கள் 2 பேரும் இருசப்பனை கல்லால் தாக்கி கீழே தள்ளி காதை கடித்துள்ளனர். இதனால் முகத்திலும், காதிலும் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து இருசப்பன் கருமலை கூடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் போலீஸ்காரரை தாக்கியது தானம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் முத்துராஜ் (45), சிவசக்தி (53), என்பது தெரியவந்தது. இவர்கள் குடிபோதையில் தங்களை கண்டு மக்கள் பயப்பட வேண்டும் என்பதற்காக அரசு பஸ்சை நிறுத்தி தகராறு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சிவசக்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முத்துராஜை தேடி வருகிறார்கள்.
- திருச்சி அருகே ெரயில்வே கிராசிங் கேட்டை உடைத்துக் கொண்டு பாய்ந்த லோடு ஆட்டோவால் பரபரப்பு ஏற்பட்டது
- உடனடியாக ெரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த வழியாக வரும் ெரயில்கள் அனைத்தும் வழியில் நிறுத்தப்பட்டன
திருச்சி:
திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே எலமனூரில் ெரயில் நிலையம் உள்ளது. இங்கு கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து எலமனுார் கிராமத்துக்கு செல்ல லெவல் கிராசிங் உள்ளது. நேற்றிரவு 7 மணியளவில் ெரயில் வருவதற்கு சற்று முன் லெவல் கிராசிங்கில் உள்ள கேட்டை பணியில் இருந்த ெரயில்வே ஊழியர் மூடியுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக அதிவேகமாக வந்த லோடு ஆட்டோ ஒன்று மூடிய கேட்டில் மோதியது. இதில் அந்த ஆட்டோ கேட்டை உடைத்து கொண்டு தண்டவாள பகுதிக்கு பாய்ந்தது. இதைக் கண்டு ெரயில்வே ஊழியர்கள் கடும் அதிர்ச்சிஅடைந்தனர்.உடனடியாக ெரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த வழியாக வரும் ெரயில்கள் அனைத்தும் வழியில் நிறுத்தப்பட்டன. அதிர்ஷ்ட வசமாக அந்த சமயத்தில் ெரயில் வராதததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.பின்னர் தண்டவாள பகுதியில் இருந்து விபத்துக்குள்ளான ஆட்டோ அப்புறப்படுத்தப்பட்டு ெரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ெரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டதில் லோடு ஆட்டோ தகுதி சான்று இல்லாமல் இருப்பதும், ஆட்டோ ஓட்டிய நபருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லாததும் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நகராட்சி கமிஷனர் போலீசாருடன் வந்து கடைகளை இழுத்து பூட்டி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- கடை வைத்திருந்த ராஜா என்பவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறியில் நகரப் பேருந்து நிலையம் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலைய வளாகத்தில் வணிக நிறுவன கடைகள் ஏராளமாக செயல்படுகிறது.
இதற்கிடையே நகரப்பேருந்து நிலையத்தின் கடைகளை இடித்து அகற்றிவிட்டு அங்கு வாரச் சந்தை கட்டுவதற்காக நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக அங்கு கடை வைத்திருப்பவர்களிடம் கடையை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று நகராட்சி கமிஷனர் போலீசாருடன் வந்து கடைகளை இழுத்து பூட்டி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடை உரிமையாளர்கள் கடைகளை காலி செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு கடை வைத்திருந்த ராஜா என்பவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். உடனடியாக விரைந்து செயல்பட்ட அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். அப்பகுதி பொதுமக்கள் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ளே பேருந்துகள் வந்து செல்லும் என்பதையும், பேருந்துகள் இங்கு நிற்கும் என்பதையும் நகராட்சி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு நகராட்சி தரப்பில் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் பரபரப்பும் ஏற்பட்டது.
நகர பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை இடித்து அப்புறப்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் பிடிவாதமாக இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.