search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 248030"

    • சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • பொது மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, எடை சரியான முறையில் வைத்து வழங்கப்படுகிறதா கேட்டறிந்தனர்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி நாதல்படுகை மற்றும் முதலைமேடுதிட்டு ஆகிய கிராமங்களில் ரூ16 கோடி மதிப்பீட்டில் 2 பேரிடர் மீட்பு மையங்கள் அமைய இருக்கும் இடத்தினை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் ஊரக உள்ளாட்சி துறை சார்பாக கொள்ளிடம் மற்றும் குத்தாலம் ஆகிய இரண்டு ஒன்றிய குழு தலைவர்களுக்கு தலா ரூ 12.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாகனங்கள் வழங்குவதற்கான சாவிகளை வழங்கி வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன்,கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் பெற்றுக்கொண்டனர்.

    கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அனுமந்தபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடைக்கு சென்ற பொது மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, எடை சரியான முறையில் வைத்து வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சட்டபேரவை உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம், நிவேதா.முருகன்,சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா,வட்டாட்சியர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் மஞ்சுளா,ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர்,அரசு அதிகாரிகள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது.
    • கடல் பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கவச உடை அணிந்த நீச்சல் வீரர்கள் நியமிக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த தீயணைப்புத்துறை இயக்குநர் ரவி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை அவ்வபோது பெய்து வருகிறது. இந்த நிலையில் தீயணைப்புத்துறை சார்பாக மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார்.

    தீயணைப்பு நிலையத்தில் மரம் வெட்டும் கருவி, கட்டிடம் இடிக்கும் கருவி, ஆபத்து காலத்தில் கதவுகளை உடைக்கும் கருவி உள்ளிட்ட நவீன மீட்பு பணி உபகரணங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவைகளை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர் கூறுகையில்;

    நாகை மாவட்டத்தில் 7 தீயணைப்பு நிலையங்களில், 7 மீட்பு படையினர், 160 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை காலங்களில் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது, பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது மற்றும் வெகுமதி கட்டாயம் உண்டு. மேலும், சுற்றுலா தலங்களாக விளங்கும் வேளாங்கண்ணி, நாகூர், தரங்கம்பாடி, பூம்புகார் ஆகிய கடல் பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கவச உடை அணிந்த நீச்சல் வீரர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    • வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்தபோது இடி, மின்னல் தாக்கி இறந்தார்.
    • மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரண உதவி தொகை வழங்கல்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே திருச்சோற்றுத்துறையை சேர்ந்த நடராஜன் மனைவி சாரதாம்பாள் (வயது 55). இவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்தபோது இடி மின்னல் தாக்கி இறந்தார்.

    இந்த நிலையில் தமிழக அரசின் மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரண உதவித் தொகையை திருவையாறு தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் பழனியப்பன் தலைமையில் சாரதாம்பாள் மகன் பாரதிராஜாவிடம் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழுத் தலைவர் அரசாபரகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்டபாணி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயசீலன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், ஊராட்சிமன்றத் தலைவர் ரேவதி முருகானந்தம், ஆகியோர் உடனிருந்தனர்.

    • நாகை மாவட்டம் பேரிடர்களால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது.
    • முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி கண்டிப்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 18--ந்தேதி நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில் பின்வருமாறு:-

    எம்.எல்.ஏ கேள்வி:

    திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை.

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நிறைவேற்றுவதற்காக கொடுக்கப்பட்டுள்ள 10 கோரிக்கைகளில் 2வது கோரிக்கையாக இதை கொடுத்துள்ளோம்.விவசாயிகள் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி திருமருகல்.

    நாகை மாவட்டம் பேரிடர்களால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது.

    எனவே அங்கு அரசு நிர்வாக அமைப்புகள் எளிதில் மக்கள் அணுகும் வகையில் இருக்க வேண்டும்.

    எனவே திருமருகலை தனி வருவாய் வட்டமாக அறிவிக்க வேண்டும்.

    அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், திருமருகல் வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள்.

    மாவட்ட கலெக்டர் வாயிலாக இதற்கான முன்மொழிவை அனுப்பி உள்ளீர்கள்.

    முதலமைச்சாடம் கலந்து பேசி நிச்சயமாக உங்கள் கோரிக்கை மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை.
    • பேரிடர் காலத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, வாய்மேடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வாய்மேடு தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமை தாங்கினார். வாய்மேடு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார்.

    வாய்மேடு கூட்டுறவு சங்கம் எதிரே உள்ள வாய்க்காலில் பேரிடர் காலத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

    நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன், கிராம நிர்வாக அலுவலர்கள், வாய்மேடு காவல் நிலைய உதவியாளர் மற்றும் வாய்மேடு இலக்குவனார் பள்ளி ஆசிரியர் மணிமொழி, பள்ளி மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பேரணி முக்கிய வீதிகள் வழியாக கபிஸ்தலம் பாலக்கரையில் வந்து நிறைவடைந்தது.
    • பேரணிக்கு வருவாய் ஆய்வாளர் சுகுணா தலைமை வகித்தார்.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தல்படி கபிஸ்தலம் அருகே கோவிந்தநாட்டுச்சேரியிலும் மற்றும் கபிஸ்தலம் பாலக்கரையிலும் சர்வதேச பேரிடர் குறைப்பு மற்றும் விழிப்புணர்வு தின சிறப்பு பேரணி நடைபெற்றது.

    கபிஸ்தலம் பாலக்கரையில் நடைபெற்ற பேரணிக்கு வருவாய் ஆய்வாளர் சுகுணா தலைமை வகித்தார்.

    பேரணியை பாபநாசம் தாசில்தார் பூங்கொடி கொடி அசைத்து தொடக்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக கபிஸ்தலம் பாலக்கரையில் வந்து நிறைவடைந்தது.

    இதில் மண்டல துணை வட்டாட்சியர் பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெகநாதன், ஜெய்சங்கர், காமராஜ், யசோதா சரவணன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    பேரணியில் தன்னார்வ தொண்டு நிறுவன முதல்நிலை பொறுப்பாளர்கள், வருவாய்துறை பணியாளர்கள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காவிரியில் ஏற்பட்டதால் குமாரபாளையத்தில் 150 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
    • தேசிய பேரிடர் மீட்பு படையினர் 22 பேர் குமாரபாளையம் வந்தனர்.

    குமாரபாளையம்:

    காவிரியில் ஏற்பட்டதால் குமாரபாளையத்தில் 150 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் 22 பேர் குமாரபாளையம் வந்தனர்.

    மணிமேகலை தெரு, கலைமகள் தெரு, அண்ணா நகர், இந்திரா நகர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளை ஆய்வு செய்த திருச்செங்கோடு வருவாய் பிரிவு அதிகாரி இளவரசி, மீட்பு படையினரிடம் ஆலோசனை வழங்கினார்.

    இவர்களுடன் வட்டாட்சியர் தமிழரசி, தி.மு.க. நகர செயலர் செல்வம், வருவாய் ஆய்வாளர் விஜய், கிராம நிர்வாக அலுவலர் முருகன், தியாகராஜன், செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • அவசரகால தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.
    • தீயணைப்போர்கள் விபத்து மற்றும் தீயணைப்பது எவ்வாறு என்பது குறித்து விளக்கம் அளித்தனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா பாடைகட்டி மாரியம்மன் கோவிலில் வலங்கைமான் தீயணைப்பு துறையினர் அவசரகால தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்று செய்முறை விளக்கம் அளித்தனர்.

    இதில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மணிகண்டன் கலந்து கொண்டு மீட்பு பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் நிலைய அலுவலர்(போக்குவரத்து) மார்த்தாண்ட பூபதி, சிறப்பு நிலைய அலுவலர் ராஜசேகரன், சிறப்பு அலுவலர் (போக்குவரத்து) பாலு, தீயணைப்போர்கள் இளங்கோவன், மாரியப்பன், வெக்காளிஸ்வரன், சந்தன குமார் ஆகியோர் விபத்து மற்றும் தீயணைப்பது பற்றி விளக்கம் அளித்தனர்.

    இந்நிகழ்வில் பாடைகட்டி மாரியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி ரமேஷ், தக்கார் ரமணி, எழுத்தர் சீனிவாசன் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×