search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்கில் வெற்றி தினம்"

    • கார்கில் போர் வெற்றியின் 25-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுக்க களைகட்டியுள்ளன.
    • நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்வோம்

    சென்னை:

    கார்கில் போரின் 25-வது ஆண்டு வெற்றி தின விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்,

    கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்.

    நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்வோம் என்று தெரிவித்துள்ளார்.

    • கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரருக்கும் நாடே தலைவணங்குகிறது.
    • வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் இதுவரை பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

    கார்கில் பயணத்தின் ஒரு பகுதியாக, ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

    ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டமானது 4.1 கிமீ நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்த பின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரருக்கும் நாடே தலைவணங்குகிறது.

    * கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரர்களுக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

    * தேசத்திற்காக செய்த தியாகங்கள் நிலையானவை என்பதை கார்கில் போர் வெற்றி தினம் நமக்கு நினைவூட்டுகிறது.

    * இந்தியாவை சீர்குலைக்கும் நோக்கில் எவர் ஒருவர் நம் நாட்டை அணுகினாலும் அடக்கி ஒடுக்கப்படுவர்.

    * வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் இதுவரை பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

    * மரணமே இல்லாதது தியாகம் என்பதை கார்கில் வெற்றி நமக்கு உணர்த்துகிறது.

    * அனைத்து விதமான பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் முறியடிப்போம்.

    * பயங்கரவாதிகளின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்று பாகிஸ்தானை பிரதமர் மோடி எச்சரித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி இன்று காலை கார்கில் சென்றார்.
    • கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.

    இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

    கார்கில் போர் வெற்றியின் 25-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுக்க களைகட்டியுள்ளன. அரசியல் தலைவர்கள், ராணுவம், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கார்கில் போர் 25வது நினைவு நாளையொட்டி இன்று காலை பிரதமர் மோடி கார்கில் சென்றார்.

    கார்கில் போர் நினைவிடத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.

    • போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
    • கார்கில் விஜய் திவாஸ், நமது ஆயுதப் படைகளின் அசாத்தியமான துணிச்சலுக்கும், அசாதாரண வீரத்துக்கும் நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்தும் ஒரு சந்தர்ப்பமாகும்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.

    இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

    கார்கில் போர் வெற்றியின் 25-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுக்க களைகட்டியுள்ளன. அரசியல் தலைவர்கள், ராணுவம், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

    இது தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில்,

    கார்கில் விஜய் திவாஸ், நமது ஆயுதப் படைகளின் அசாத்தியமான துணிச்சலுக்கும், அசாதாரண வீரத்துக்கும் நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்தும் ஒரு சந்தர்ப்பமாகும். 1999-ம் ஆண்டு கார்கில் சிகரத்தில் பாரத அன்னையைப் பாதுகாக்கும்போது மிக உயர்ந்த தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் நான் தலைவணங்குவதுடன் அவர்களின் புனித நினைவுகளுக்கு தலைவணங்குகிறேன். அவர்களது தியாகம் மற்றும் வீரம் அனைத்து நாட்டு மக்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி தேசிய மாணவா் படை சாா்பில் காா்கில் போா் வெற்றி தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
    • கல்லூரி மாணவா்கள் நடத்திய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.

    குன்னூர்

    குன்னூா் வெலிங்டன் ராணுவ மைய வளாகத்தில் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி தேசிய மாணவா் படை சாா்பில் காா்கில் போா் வெற்றி தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.பாகிஸ்தானுடன் 1999-ம் ஆண்டு நடந்த காா்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.


    இந்நிலையில் காா்கில் போரில் உயிா்நீத்த ராணுவ வீரா்களுக்கும், தற்போது உயிரோடு உள்ள ராணுவ வீரா்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் வெலிங்டன் ராணுவ மைய நுழைவாயில் முன்பு குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி சாா்பில் தேசிய மாணவா் படை கல்லூரி மாணவா்கள் நடத்திய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.


    இதில், காா்கில் போரின்போது நமது நாட்டு வீரா்கள் போரிட்டதை தத்ரூபமாக மாணவா்கள் நடித்துக் காட்டினா். இதனை ராணுவ அதிகாரிகளும் பொதுமக்களும் கண்டு ரசித்தனா். இந்நிகழ்ச்சியில் பிராவிடன்ஸ் கல்லூரியின் தேசிய மாணவா் படை அதிகாரி சிந்தியா ஜாா்ஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • 1999 ஆம் ஆண்டில் கார்கில் போர் 60 நாட்களுக்கு மேலாக நடந்தது.
    • போர் முடிவடைந்த போதிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிர் நீத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக இன்று கல்லூரி வளாகத்தில் கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பேசுகையில் , 1999 ஆம் ஆண்டில் கார்கில் போர் 60 நாட்களுக்கு மேலாக நடந்தது. ஜூலை 26 ம் நாளன்று இப் போர் முடிவடைந்த போதிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிர் நீத்தனர்.

    உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அவர்கள் குடும்பம் நன்றாக வாழ்ந்திட கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது என்றார்.

    நிகழ்ச்சியில் மாணவ செயலர்கள் அருள்குமார் , சுந்தரம் , பூபதிராஜா தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • சாணார்பட்டி அருகே கவராயப்பட்டி கிராமத்தில் தமிழக இளைஞர் பாராளுமன்ற சார்பில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப் பட்டது.
    • மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி அருகே கவராயப்பட்டி கிராமத்தில் தமிழக இளைஞர் பாராளுமன்ற சார்பில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

    இதற்கு சமூக ஆர்வலர் பால் தாமஸ் தலைமை தாங்கினார்.நேரு யுவகேந்திரா அமைப்பின் மாவட்ட அலுவலர் சரண், முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க மாவட்ட தலைவர் விசுவாசம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.இதில் மாணவ, மாணவிகள் அனைவரும் தேசியக் கொடியை கைகளில் ஏந்தியவாறு வந்தே மாதரம் என கோசமிட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.

    நிகழ்ச்சியில் கார்கில் போரின்போது பணியாற்றிய சுபேதார் தங்கவேல், மாறவர்மன் ஆகியோருக்கு சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இதில் இளைஞர் பாராளுமன்ற நிர்வாகிகள் ஜான்போஸ்கோ, கஸ்பார், மோகனா, ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×