search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர் ஓட்டம்"

    • ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
    • உடல் எடையும், 2.5 கிலோ வரை குறையும்.

    மாரத்தான் போட்டிகளில் ஓடுகிற வீரர்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்து கொள்வோமா...?

    * மாரத்தான் போட்டியின்போது வீரர்களின் உடலின் பெரும்பாலான உறுப்புகள் அதீதமாக உழைக்கின்றன.

    * தசைகள் உருவாக்கும் ஆற்றலில் 70 சதவிகிதம் வரை ஓட்டம் காரணமாக வெப்பமாக இழக்கப்படும். இதனால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும்.

    * உடல் வெப்பத்தை சம நிலைப்படுத்துவதற்காக லிட்டர் கணக்கில் வியர்வை சுரக்கும். இதனால் நீர் இழப்பு ஏற்படும்.

    * ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

    * இதய துடிப்பு நிமிடத்துக்கு 140-180 என்ற அளவில் அதிகரிக்கும்.

    * ரத்த அணுக்களின் பயணத்துக்கு உதவும் பிளாஸ்மா திரவத்தின் அளவு 4.7 சதவிகிதம் வரை குறையும்.

    * சோடியம், பொட்டாசியம் போன்ற உப்புகளின் அளவு தாறுமாறாகும்.

    * ரத்த சர்க்கரையின் அளவு ஏறக்குறைய பாதியாக குறையும்.

    * உடல் எடையும், 2.5 கிலோ வரை குறையும்.

    * 6.1 சதவிகிதம் வரை கொழுப்பு குறையும்.

    * தற்காலிகமாக 2 சென்டி மீட்டர் வரை உயரம் குறையும்

    • ஓசூரில் இருந்து மதுரை மாநாட்டிற்கு செல்லும் “வெற்றி ஜோதி தொடர் ஓட்டம்” இன்று காலை காவேரிப்பட்டினம் வந்தது.
    • “தொடர் ஓட்டம் ஜோதி” சேலம், திண்டுக்கல் வழியாக வரும் 20-ல் மதுரை மாநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி வசம் ஒப்படைக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    மதுரையில் வரும், 20-ல், அதிமுக சார்பில் பொன் விழா எழுச்சி மாநாடு நடக்கிறது. இதையொட்டி கிருஷ்ண கிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஓசூரில் இருந்து மதுரை மாநாட்டிற்கு செல்லும் "வெற்றி ஜோதி தொடர் ஓட்டம்" இன்று காலை காவேரிப்பட்டினம் வந்தது.

    தொடர் ஓட்ட வெற்றி ஜோதிக்கு" அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான அசோக் குமார், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் தலைமையில் வரவேற்று கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் தமிழ் செல்வம் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட அவை தலைவர் காத்தவராயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சமரசம், முனி வெங்கட்டப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி, முன்னாள் எம்பி பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், சோக்காடி ராஜன், சைலேஷ் கிருஷ்ணன், கன்னியப்பன், மாவட்ட கவுன்சிலர்கள் சங்கீதா கேசவன், ஜெயா ஆஜி, நகர செயலாளர்கள் கேசவன், விமல், முன்னாள் நகர செயலாளர் வாசு தேவன், வழக்கறிஞர் பிரிவு ஜெயக்குமார் மற்றும் அதிமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள் மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர்.

    "தொடர் ஓட்டம் ஜோதி" சேலம், திண்டுக்கல் வழியாக வரும் 20-ல் மதுரை மாநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி வசம் ஒப்படைக்கப்படுகிறது.

    • ஈரோட்டில் இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதியின் மாதிரிச்சுடர் ஏந்தி, தொடர் ஓட்டம் நடைபெற்றது.
    • ஈரோடு அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. உயர்நிலைப் பள்ளி, செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி மற்றும் அரசு விளையாட்டு விடுதி மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இப்போட்டியை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன் ஒருபகுதியாக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதியின் மாதிரிச் சுடர் ஏந்தி, தொடர் ஓட்டம் ஈரோட்டில் இன்று நடைபெற்றது.

    இந்தத் தொடர் ஓட்ட நிகழ்ச்சியை, கலெக்டர் அலுவலக வளாகத்தில், வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில், ஈரோடு அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. உயர்நிலைப் பள்ளி, செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி மற்றும் அரசு விளையாட்டு விடுதி மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழிப்புணர்வுத் தொடர் ஓட்டம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி, பெருந்துறை சாலை, அரசு மருத்துவமனை சந்திப்பு, பிரப் சாலை, பன்னீர் செல்வம் பூங்கா சென்று, மீண்டும் பிரப் சாலை வழியாக அரசு மருத்துவமனை சந்திப்பு, மேட்டூர் சாலை வழியாக வ.உ.சி. பூங்காவில் நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, எம்.எல்.ஏ. வெங்கடாசலம், துணை மேயர் செல்வராஜ் மற்றும் விளையாட்டுத் துறையினர் கலந்துகொண்டனர்.

    பின்னர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியாவில் எப்போதும் நடைபெறாது அளவு 44 -வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது சுமார் 188 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2000 விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    இது ஒட்டுமொத்த விளையாட்டு துறையை ஊக்குவிக்க எடுக்கும் நடவடிக்கை ஆகும். ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் சுமார் 40 ஏக்கரில் மிக பிரம்மாண்டமாக உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

    எனவே ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் சிந்தடிக் ஓடு தளம் அமைக்கும் திட்டம் அங்கு மாற்றப்படுகிறது. உள்விளையாட்டு அரங்கில் பல்வேறு விளையாட்டுகளுக்கான அடிப்படை கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    மின் கட்டண உயர்வு மக்களை பெரிதும் பாதிக்காது என்று ஏற்கனவே மின்துறை அமைச்சர் விளக்கியுள்ளார். தமிழகத்தின் நிதிநிலை எந்த அளவு உள்ளது என்று மக்களுக்கே தெரியும்.

    அதனால் தான் வீட்டு வரி கூட உயர்த்தப்பட்டது. ஈரோடு நகரில் குடிநீர் நான்கு அல்லது ஐந்து நாட்கள் வருவதாக புகார் கூறப்பட்டாலும் இதற்கு காரணம் முன்பிருந்த அ.தி.மு.க. அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. அவைகளை முறையாக அ.தி.மு.க. அரசு ஈரோட்டில் செயல்படுத்தவில்லை.

    இது குறித்து ஆய்வு மேற்கொண்டு குறைகளை களைய நடவடிக்கை எடுக்கிறோம் .பாதாள சாக்கடை திட்டத்தில் கூட பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதையெல்லாம் நாங்கள் சரி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

    • ெசஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தில் கலெக்டர்-இந்திய கடற்படையினர் பங்கேற்றனர்.
    • 188 நாடுகளைச் சேர்ந்த அணிகள் இந்தப்போட்டியில் பங்கேற்க உள்ளன.

    ராமேசுவரம்

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அனுமதியுடன் தமிழக அரசின் முழு நிதி உதவியுடன் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள இப்போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கி றார்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வுள்ளனர். 188 நாடுகளைச் சேர்ந்த அணிகள் இந்தப்போட்டியில் பங்கேற்க உள்ளன. இது தொடர்பாக பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக ராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் இருந்து 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டத்தை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் இன்று காலை தொடங்கி வைத்தார். இதில் இந்திய கடலோர காவல்படை கமாண்டன்ட் ஷா நவாஸ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரிச்சல்முனையில் தொடங்கிய ஜோதி தொடர் ஓட்டம் தனுஷ்கோடியில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஹோவர் கிராப்ட் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் கடல் வழியாக மண்டபம் வந்து சேர்ந்தனர்.

    ×