search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பணிகள்"

    • தீர்த்தக் குளத்தை சுத்திகரிப்பவன் தேவ ஆண்டில் ஆயிரமாண்டு மோட்சத்தில் வசிக்கிறான்.
    • பிரகாரம், மண்டபங்கள், கோபுரங்கள் கட்டுபவன் சிவாயுஞ்யம் அடைகிறான்.

    ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் என்னென்ன திருப்பணிகள் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை ஸ்கந்தபுராணம் கீழ்க்கண்டவாறு போற்றுகிறது.

    1. இத்தலத்தில் யார் ஒருவர் ஏழை எளியவர்களுக்கு அமுது படைக்கிறாரோ அவர் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்வார்.

    2. பால், தயிர், நெய், தேன், பழங்கள், தேங்காய் இவைகளோடு அணிகலன் கொண்டு சிறந்த துதிப் பாடலோடு ஸ்ரீ மங்களாம்பிகையும், வாஞ்சிநாதரையும் வழிபடுபவர் சிறந்த அரசனாகி சிவ சாயுஞ்யம் அடைகிறார்.

    3. இத்திருக்கோயிலுக்கு பிரகாரம், மண்டபம், கோபுரங்கள் கட்டி வைப்பவர். அனைவராலும் வணங்கத்தக்க அரசனாகிறார்.

    4. இத்திருக்கோயிலுக்கு தேர் திருப்பணி செய்து கோமுரசு, மத்தாளம் துணைக் கருவிகளோடு தேர்த்திருவிழா செய்பவர் சிறந்த போகங்கள் அனுபவித்து தேவரும் கந்தர்வரும், பகலும் இரவும் துதிக்க நூறு கற்ப கோடிகாலம் தனது மனித உருவத்தோடு இறைவனுக்கு முன் வசிப்பார்.

    5. திருவாஞ்சியத்தில் எவர் வசந்த விழா செய்கிறாரோ அவர் சிறந்த விமானம் ஏறி சிவ சன்னதியில் வசிக்கிறார்.

    6. குப்த கங்கை திருக்குளத்தினை தூர்வாரி சுத்தம் செய்து தீர்த்தத்தினை சுத்தம் செய்தால் தனது குடி, குலத்துடன் சிவலோகம் அடைந்து சத்திய வித்திலும், அபய வித்திலும் எவ்வளவு புண்ணியமோ அவ்வளவு புண்ணியத்தை அடைவார். ஸ்ரீருவாஞ்சியம் திருவாஞ்சியேசர் விமானத்திற்கு சுற்று வட்டம் கிருதாயுகத்தில் இரண்டு யோசனை தூரமும் திரேதாயுகத்தில் அதில் பாதியும், துவாபரயுகத்தில் அதிலும் பாதியும் கலியுகத்தில் ஐந்து குரோசமும் (ஐந்து நாழி வழி) ஆகும். அதில் வசிக்கும் மக்கள் முக்தியடைவது நிச்சயம்.

    7. இச்சிவாலயத்தில் எவன் ஒரு கணம் உறைகிறானோ அவன் கணங்களுக்கு அதிபதியாகிறான்.

    8. நீர் விழா, வசந்த விழா செய்பவன் சிவ சன்னதியில் வசிக்கிறான். தயிர், பால், நெய், தேன், வாழைப்பழம், தேங்காய் கொண்டு பூஜை செய்பவன் சிவனோடு வசிக்கிறான்.

    9. பிரகாரம், மண்டபங்கள், கோபுரங்கள் கட்டுபவன் சிவாயுஞ்யம் அடைகிறான்.

    10. குடை சாமரம் விசிறி வாத்திய முழக்கங்களுடன் திருத்தேர் விழா செய்பவன், செய்விப்பவன் சிறந்த மங்கையருடன் கூடி தேவர் துதிக்க நூறு கற்பகோடி காலம் உடலுடன் தேவனுக்கு முன் வசிப்பான்.

    11. தீர்த்தக் குளத்தை சுத்திகரிப்பவன் தேவ ஆண்டில் ஆயிரமாண்டு மோட்சத்தில் வசிக்கிறான்.

    12. படி கட்டுபவன் சிவகாயுஜ்யம் அடைவான். பாசி நீக்குபவன் தனது கோடி குலத்துடன் சிவலோகம் அடைவான்.

    13. வஸ்திரம் மலர் இவற்றால் மந்திரமின்றி பூசிப்பவன் கூட கோடி குலத்தை உயர்த்துவான்.

    14. கழுவாயற்ற பாவங்களும் வாஞ்சீஸ்வரரை தரிசித்தாலும், முனி தீர்த்தத்தில் நீராடினாலும் பாவங்கள் நீங்கி முக்தியுண்டாகும்.

    15. அரை கணம் இங்கு வசித்தாலும் ஊர்வசியை சேருவான். எவள் வீட்டில் இப்புராணம் எழுதப்படுகிறதோ அவள் வீட்டில் லட்சுமி செல்வம் நோயின்மையை மேன்மேலும் வளர்க்கிறாள். இதனை படிப்பவனும், கேட்பவனும் மூவகை இன்பங்களை துய்த்து முக்தியடைகிறான். - ஸ்கந்தபுராணம் சனத்குமா ரஸம் ஹிதை 58-ம் அத்தியாயம்.

    • அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஆய்வு
    • குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்கள் உள்ளன

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்கள் உள்ளன. இதில் சிறு சிறு கோவில்கள் என 100 கோவில்களை தமிழக அரசு தேர்வு செய்து 2022-23-ம் ஆண்டில் திருப்பணி மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது. அதன்படி தெங்கம்புதூர் மறுகால்தலை கண்டன் சாஸ்தா கோவிலில் ரூ.20 லட்சத்தில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த திருப்பணிகளை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது, ஊர் மக்கள் கோவிலில் கொடிமரம் வைக்க கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் அடிப்படையில் அரசிடம் பேசி நிறைவேற்றி தருவதாக அறங்காவலர் குழு தலைவர் உறுதி அளித்துள்ளார். ஆய்வின்போது தேவசம் பொறியாளர் ராஜ்குமார், ஸ்ரீகாரியம் ஹரி பத்மநாபன், ஊர் தலைவர் மற்றும் உபயதாரர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அறங்காவலர் குழுவினர் ஆய்வு
    • பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் தை மாதம் கலசாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

    மணவாளக்குறிச்சி :

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. பெண்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. கடந்த 2021 ஜூன் 2-ந்தேதி இக்கோவிலின் கருவ றைக்கூரை திடீரென தீப்பி டித்து எரிந்தது.

    இதையடுத்து கோவிலில் தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப்பட்டது. தொடர்ந்து ஜூன் 14- ந்தேதி தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. தேவ பிரசன்னத்தில் ஆகம விதி மாறாமல் திருப்பணிகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து இதற்காக தேவசம் பள்ளி வளாகத்தில் மர தச்சு தொழிலாளர்கள் முழு மூச்சில் மரப்பணி செய்து வந்தனர். மேற்கூரை பணிக்கு உத்திரம்,பட்டியல் கூட்டும் பணி நிறைவடைந்து உள்ளது. இதையடுத்து மூலஸ்தான மேற்கூரைக்கு திருப்பணிகள் திருக்கோயில் வளாகத்தில் நடந்து வருகிறது. வெளி சுற்று பிரகாரத்தில் உள்ள மர அழிகள் மற்றும் 9 அடி உயரத்தில் 14 கல் தூண்கள் நிறுவும் பணிகள் கடந்த மாதம் 22 ம் தேதி தொடங்கி யது. தூண்கள் நிறுவும் பணிகள் நிறை வடைந்து உள்ளது. தொடர்ந்து பழமை மாறாமல் மர அழிகள் அமைக்கும் பணி களும் நடந்து வருகிறது. அழிகள் அமைக்கும் பணி நிறைவடைந்ததும், அதன் மேல் உத்திரங்கள் நிறுவப் பட்டு, அதற்கு மேல் மேற்கூரை அமைக்கும் பணிகள் தொடங்கும். இதற்கு பயன்படுத்தும் மரங்கள் தேக்கு மரத்தி லானது என்பது குறிப்பி டத்தக்கது.

    இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் தை மாதம் கலசாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தச்சுப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகளை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். கோயில் ஸ்ரீகாரியம் செந்தில் குமார், மராமத்து பொறி யாளர் அய்யப்பன், அறங்கா வல் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    • நேற்று 2 மற்றும் 3-ம் கால யாகசால பூஜைகள் நடைபெற்றன.
    • நாளை பகல் 11.45 மணிக்கு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பூக்கார தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

    பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுகிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு கடந்த 29-ந் தேதி விக்னேஷ்வர பூஜை நடைபெற்றது. 30-ந் தேதி கணபதி ஹோமம் நடந்தன.

    31-ந் தேதி சிவகங்கை பூங்காவில் இருந்து யானை மீது புனிதநீர் ஊர்வலம் எடுத்து வரப்பட்டது.

    அன்றைய தினம் மாலை முதல் கால யாக பூஜைகள் தொடங்கின.

    நேற்று இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

    இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விஷேச ஹோமம், திரவியங்கள் ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இன்று மாலை ஐந்தாவது கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.

    நாளை (ஞாயிற்றுகிழமை) காலை 6 மணிக்கு 6-வது கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    பின்னர் பூர்ணாஹூதி தீபாராதனை காண்பிக்கப்படும். தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் சாவடி காமாட்சி அம்மன், விநாயகர் கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதையடுத்து கடம் புறப்பாடு நடைபெற உள்ளது.

    காலை 10 மணிக்கு சுப்பிரமணியர் மற்றும் அனைத்து விமான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து மூலஸ்தானம், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. பகல் 11.45 மணிக்கு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    • இரண்டு பிரம்மோற்சவ விழா மற்றும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.
    • மகா சாந்தி திருமஞ்சனம் ஹோமம் மற்றும் பூர்ணாஹதி நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் வருடம் தோறும் இரண்டு பிரம்மோற்சவ விழா மற்றும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பாலாலயம் கடந்த 5-ந்தேதி பாலாலயம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து பகவத் பிரார்த்தனை புண்ணியாவாஜனம், ஹோமம், பூர்ணாஹதி மற்றும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டன. நேற்று 6-ந் தேதி காலை புண்ணியாவாஜனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், ஹோமம், பூர்ணா ஹதி, மாலை மகா சாந்தி ஹோமம், மகா சாந்தி திருமஞ்சனம் ஹோமம் மற்றும் பூர்ணாஹதி நடைபெற்றது. இறுதி நாளான இன்று அக்னி பிரவேசம், மகா பூர்ணாஹதி, யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு நடைபெற்று பாலாலயம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். இதனைத் தொடர்ந்து பாலாலயம் நடைபெற்று கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • கும்பாபிஷேகம் செய்வதற்காக துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது
    • அபிஷேக ஆராதனை செய்து பூமி பூஜை மற்றும் கால் கோல் விழா நடந்தது.

    அவினாசி :

    கருவலூரில் மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பராமரிப்புப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்னதான மண்டபம் வாகன மண்டபம், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், திருச்சுற்று மண்டபம், தரைத்தளங்களில் கல்தளம் அமைத்தல் உள்ளிட்ட மராமத்துப் பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்வதற்காக துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூர்ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், குமரகுருபர சுவாமிகள் முன்னிலையில் மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து பூமி பூஜை மற்றும் கால் கோல் விழா நடந்தது. இதில் கருப்புசாமி கவுண்டர், கருவலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் அவினாசியப்பன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். 

    இதற்கான ஏற்பாடுகளை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் வெ.லோகநாதன், அறங்காவலர்அர்ச்சுனன், கோவில் செயல் தலைவர் குழந்தைவேலு ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளது.
    • 11 பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனை அடுத்து திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளது.

    இதனிடையே கோவிலில் உள்ள பரிவார மூர்த்தி தெய்வ சன்னதிக ளுக்கு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

    ஆபத்து காத்த விநாயகர், சம்ஹார வேலர், அஷ்ட பைரவர், ருணம் தீர்த்த விநாயகர், காழிபுரீஸ்வரர், காழி கணநாதர், மண்டப குமாரர், 63 நாயன்மார்கள், நவக்கிரக சன்னதி, திருஞானசம்பந்தர் ஆர்ச் உள்ளிட்ட சுமார் 11 பரிவார மூர்த்தி சன்னதிக ளுக்கு தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சா ரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

    இதில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழ் சங்க தலைவர் மார்கோனி, துணைத் தலைவர் கோவி.நடராஜன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், திருமுல்லைவாசல் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின.
    • மாயூரநாதர் கோவிலில் செப்டம்பர் மாதம் 3-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும்.

    மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயாம்பிகை உடனாகிய மாயூரநாதர் கோயில் உள்ளது.

    இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு 2022 ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின.

    தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    நேற்று திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமாக சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

    மகா பூர்ணாகுதியில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில், மாயூரநாதர் கோவிலில் செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் சிவ பாடகசாலை சிவாச்சாரியார் சுவாமிநாதன், ஆதீனம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கனேசன், காசாளர் வெங்கடேசன் மற்றும் ஆன்மீக பொறுப்பாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் தகவல்
    • ன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தங்கத்தேர் செய்யும் திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் 100 முதல் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 115 கோவில்களில் ரூ.100 கோடி செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளது என்று குமரி மாவட்ட திருக்கோவில் களின் இணை ஆணையர் ஞானசேகர் கூறினார்.

    இது குறித்து குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் கன்னியாகுமரியில் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் இயங்கும் குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 490 கோவில்கள் உள்ளன. இதில் செங்கோட்டை தாலுகாவில் உள்ள கோவில்களும் அடங்கும். இதில் சில குறிப்பிட்ட கோவில்களில் மட்டும் இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.

    இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள 100 முதல் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களை தேர்வு செய்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் குமரி மாவட்டத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுசீந்திரம் தாணு மாலயசுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவில், கன்னியாகுமரி குக நாதீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அந்த அடிப்படையில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ரூ.2½ கோடி செலவிலும், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ரூ.1 கோடி செலவிலும், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ரூ.1 கோடி செலவிலும், பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவிலில் ரூ.2½ கோடி செலவிலும் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளது.

    மேலும் 11 சிவாலயங்களில் ரூ.1 கோடியே 70 லட்சம் செலவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளது. மேலும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 100 கோவில்களில் ரூ.100 கோடி செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளது. இந்த கோவில்களில் அடுத்த ஆண்டு கும்பாபிஷேக திருப்பணிகள் முடிக்கப் பட்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தங்கத் தேர் செய்வதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை. இந்த கோவிலின் வெளிப்பிரகாரத்தில் போதுமான இடவசதி இல்லாததால் தங்கத்தேர் ஓடுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை.

    எனவே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தங்கத்தேர் செய்யும் திட்டம் கைவிடப்பட்டுஉள்ளது. அதேபோலகன்னியாகுமரி பகவதிஅம்மன்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவது சம்பந்தமான எந்த திட்டமும் தற்போது இல்லை. ஏற்கனவே கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவது குறித்து மண் ஆய்வுகள் செய்யப்பட்டு விட்டது. மேற்கொண்டு அது சம்பந்த மாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இவ்வாறு குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் கூறினார்.

    • முதற்கட்டமாக தற்காலிக மேற்கூரைகள் அகற்றம்
    • பரிகார பூஜைகளை அம்மன் ஏற்று கொண்டதா? என்பதை அறிய ஜோதிட பிரசன்னம் பார்க்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. பெண்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

    கடந்த வருடம் ஜூன் 2-ந்தேதி இக்கோவிலின் கருவறைக்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையடுத்து கோவிலில் தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப்பட்டது. தொடர்ந்து ஜூன் 14-ந் தேதி தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. தேவ பிரசன்னத்தில் ஆகம விதி மாறாமல் திருப்பணிகள் செய்யவேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் 24-ந்தேதி ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அன்று தேவ பிரசன்னத்தில் கூறியபடி வாஸ்துப்படி திருப்பணிகள் நடத்த வேண்டும் என இந்து இயக்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதை தொடர்ந்து கோவில் தந்திரி தலைமையில் இந்து இயக்க பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து குழு அமைத்து பரிகார பூஜை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே முதலில் செய்யப்பட்ட பரிகார பூஜைகளை அம்மன் ஏற்று கொண்டதா? என்பதை அறிய கடந்த டிசம்பர் 22-ந் தேதி ஜோதிட பிரசன்னம் பார்க்கப்பட்டது.

    திருவனந்தபுரம் ஜோதிடர் கண்ணன் நாயர் ஜோதிட பிரசன்னம் பார்த்தார். அதில் அம்மன் கோபம் தணியவில்லை. அம்மனின் தீக்காயங்களை ஆராய்ந்து சுத்தமான சந்தனம் அரைத்து பூச வேண்டும்.உடனே இதை செய்யாவிட்டால் நாட்டிற்கு கேடு விளையும். குரு சன்னதியில் முறையாக பூஜை நடக்கவில்லை.காலம் காலமாக ஆச்சார அனுஷ்டானங்களுடன் நடந்து வந்த பூஜைகளை முறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஜனவரி 8-ந் தேதி குரு சன்னதியில் பரிகார பூஜை நடந்தது. தொடர்ந்து மார்ச் மாதம் மாசிக்கொடை 10 நாட்கள் நடந்தது. பின்னர் கடந்த ஆவணி மாதத்தில் அசுவதி பொங்கல் விழா 3 நாட்கள் நடந்தது. இன்னும் 5 மாதத்தில் மாசிக்கொடை நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக கோவில் திருப்பணிகளை செய்து முடிக்க வேண்டும் என அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

    இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் திருவட்டார் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள திருவட்டார் வந்த அமைச்சர் சேகர்பாபு மண்டைக்காடு வந்து திருப்பணிக்காக நடந்து வந்த மர வேலைகளை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். மர வேலைகள் முடிவடைந்ததை அடுத்து நேற்று கோவில் மேற்கூரையில் அமைக் கப்பட்ட தற்காலிக கொட் டகை அகற்றும் பணி தொடங்கியது. தற்காலிக கொட்டகை அகற்றப்பட்ட தும் ஆகம விதிக்குட்பட்டு புதிய உத்திரம், பட்டியல், கழிக்கோல் அமைத்து மேற் கூரை அமைக்கப்படும் என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கோவிலில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு, 5.30 க்கு அபிஷேகம், 6.30-க்கு தீபாராதனை, நண்பகல் 12.30 க்கு உச்ச தீபாராதனை மற்றும் மாலை 6.30 க்கு தீபாராதனையும், இரவு 7.30 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கும்.

    நேற்று திருப்பணிகளுக்கு தற்காலிக கொட்டகை அகற்றும் பணி தொடங்கிய தால் உச்ச தீபாராதனை முன்னதாக முற்பகல் 11.30 மணிக்கு நடத்தப்பட்டது. புதிய கொட்டகை அமைக் கும் பணி நிறைவுறும் வரை உச்ச தீபாராதனை மட்டும் முன்னதாக 11.30 மணிக்கு நடைபெறும் என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • இக்கோவிலில் 30 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்திட திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    • அமைச்சர் சேகர்பாபு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் இன்று திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 30 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்திட திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் இன்று திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர் லலிதா, சீர்காழி கோவில் கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான், மாவட்ட செயலாளர் நிவேதா.முருகன் எம்.எல்.ஏ , மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ரவி, ஒன்றிய குழு தலைவர்கள் கமலஜோதி தேவேந்திரன், ஜெயபிரகாஷ், நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், செல்ல சேது ரவிக்குமார், சசிகுமார், மலர்விழி திருமாவளவன், மாவட்ட கவுன்சிலர் விஜயஸ்வரன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துக்கு–பேரன் உடன் இருந்தனர். தொடர்ந்து திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் சுவாமி கோயிலிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

    ×