search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கட்டண உயர்வு"

    • கடந்த ஆண்டே நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்வு, அனைத்து பதிவுக் கட்டணங்களும் பலமடங்கு உயர்வு என்ற இடியை இறக்கியது திமுக அரசு.
    • நகராட்சிகளுக்கும், பேரூராட்சிகளுக்கும், ஊராட்சிகளுக்கும் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணங்களும் தரத்திற்கேற்ப (Grade) உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    விடியா திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற 38 மாதங்களில்... மூன்று முறை மின்கட்டண உயர்வு! இருமடங்கு வீட்டுவரி மற்றும் சொத்துவரி உயர்வு! பலமுறை பால் பொருட்கள் விலை உயர்வு! பல மடங்கு பதிவு கட்டணங்கள் உயர்வு! விண்ணை முட்டும் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு! உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு! என்று விடியா திமுக அரசு தமிழக மக்களை பல வகைகளில் சிரமப்படுத்தி வருகிறது.

    'காணி நிலம் வேண்டும்-பராசக்தி

    காணி நிலம் வேண்டும்'

    என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளுக்கேற்ப, கால் காணி நிலத்தையாவது சொந்தமாக்கிக் கொள்ளலாமா என்று ஏங்கும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தலையில், கடந்த ஆண்டே நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்வு, அனைத்து பதிவுக் கட்டணங்களும் பலமடங்கு உயர்வு என்ற இடியை இறக்கியது இந்த விடியா திமுக அரசு.

    மேலே குறிப்பிட்ட கட்டணங்களையெல்லாம் செலுத்தி, சிரமப்பட்டு வீட்டு மனை வாங்கியவர்கள் வீடு கட்ட முயற்சிக்கும் போது, வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணங்களை வானளாவ உயர்த்தி முட்டுக்கட்டை போட்டுள்ளது இந்த அரசு.

    இம்மாதம் நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள அரசாணைகளின்படி, வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதியை இணைய வழி மூலம் உரிய கட்டணம் செலுத்திவிட்டு சுலபமாக வீடு கட்டும் அனுமதியைப் பெறலாம் என்று நாக்கில் தேன் தடவிவிட்டு, வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி தமிழக மக்களின் 'சொந்த வீடு' என்ற எண்ணத்தை கனவாகவே நீர்த்துப்போகச் செய்துள்ள நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த அரசாணைகளின்படி, சென்னை மாநகராட்சியில் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணம் 1000 சதுர அடிக்கு சுமார் ரூ. 46,000-லிருந்து ரூ. 1,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுவே, கோவை, மதுரை, திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் 1000 சதுர அடிக்கு சுமார் . 42,000- ரூ. 88,000 ஆகவும்; திருச்சி, சேலம், தாம்பரம் போன்ற மாநகராட்சிகளுக்கு சுமார் ரூ. 30,000-லிருந்து ரூ. 84,000 ஆகவும், என்று மாநகராட்சிகளின் தரத்திற்கேற்ப (Grade) வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதேபோல், நகராட்சிகளுக்கும், பேரூராட்சிகளுக்கும், ஊராட்சிகளுக்கும் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணங்களும் தரத்திற்கேற்ப (Grade) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அரசாணைகளின்படி, வரைபட அனுமதிக் கட்டணம் பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரை, 1000 சதுர அடிக்கு ரூ. 22,000 முதல் ரூ. 1,00,000 வரை செலுத்த வேண்டும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    தமிழக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின், வள்ளலார் அவர்கள் பாடிய

    குடி வரி உயர்த்தி கொள்ளை கொண்டேனோ?

    ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ?

    என்ற வரிகளை தூங்கும்போதெல்லாம் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாரோ? என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

    'தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்'

    என்பதை, நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு நினைவூட்டி, உடனடியாக உயர்த்தப்பட்ட வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பழைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே உள்ளது.
    • நாம் நமது கருத்தை ஆழமாக பதிவு செய்தால் தான் மக்களை நம்மை திரும்பி பார்ப்பார்கள்.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4-ந்தேதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் கரைசுத்து புதூரில் அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவரது சாவில் மர்மம் நீடித்து வந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசியும் நெல்லைக்கு நேரடியாக வருகை தந்து விசாரணையை மேற்கொண்டார்.

    ஆனாலும் இதுவரை பெரிதாக துப்பு துலங்கவில்லை. ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே உள்ளது.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கார்த்தி சிதம்பரம் பேசியதாவது,

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொடுங்கொலை செய்யப்பட்டார். இந்தியாவை ஆண்ட கட்சியின் மாவட்ட தலைவர் கொலை செய்யப்பட்டதற்கு இன்று வரை இந்த அரசு ஒருவரை கூட கைது செய்யவில்லை. காவல்துறை என்கவுண்டர் செய்வது சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு அல்ல.. அந்த வழக்கை முடிப்பதற்காக தான் என்கவுண்டர் செய்கிறார்கள். இப்போது கூலிப்படை கொலைகள் நடைபெறுகிறது அதை பற்றியும் நாம் பேசியாக வேண்டும். அதுபோல மின்கட்டண உயர்வு பற்றியும் நாம் பேசியாக வேண்டும். திருமாவளவனுக்கு இருக்கும் உரிமை நமக்கு இல்லையா? கம்யூனிட்டுகளுக்கு இருக்கும் உரிமை நமக்கு இல்லையா? நாம் நமது கருத்தை ஆழமாக பதிவு செய்தால் தான் மக்களை நம்மை திரும்பி பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார்.

    • போராட்டத்தில் பங்கேற்க வந்த என்னிடமோ, பிற தலைவர்களிடமோ போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறவில்லை.
    • பா.ம.க.வினர் மீது பொய்வழக்குப் பதிவு செய்ய திமுக அரசு தூண்டியுள்ளது. சென்னை மாநகரக் காவல்துறையும் அதை அப்படியே செயல்படுத்தியுள்ளது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாட்டில் பொதுமக்களையும், தொழில் துறையினரையும் கடுமையாக பாதிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்சாரக் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் போராட்டம் நடத்தியதற்காக என் மீதும், நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் மீதும் சென்னை மாநகரக் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. திமுக அரசின் தூண்டுதலில் சென்னைக் காவல்துறை கட்டவிழ்த்து விட்டுள்ள இந்த அடக்குமுறையும், பொய்வழக்கு பதிவும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

    தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு கடந்த 15-ஆம் நாள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த நாளே அதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்தது. அந்தப் போராட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த அனுமதி கோரி, பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய சென்னை வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் பி.கே.சேகர் சென்னை மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் திரு.சங்கரலிங்கம் என்பவரிடம் மனு அளித்தார். அதை ஆய்வு செய்த காவல்துறை வள்ளுவர் கோட்டம் அருகில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் போராட்டடம் நடத்திக் கொள்ள வாய்மொழியாக அனுமதி அளித்தது. அதன்படி தான் அங்கு போராட்டம் நடத்தப்பட்டது.


    எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் போராட்டம் நடத்துவதற்காக காலை முதலே தொண்டர்கள் கூடிய நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுக்கவில்லை. போராட்டத்தில் பங்கேற்க வந்த என்னிடமோ, பிற தலைவர்களிடமோ போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறவில்லை. மாறாக, போராட்டத்திற்கு பாதுகாப்பு அளித்தனர். இத்தகைய சூழலில் போராட்டம் முடிவடைந்த பிறகு அனுமதியின்றி போராடியதாக வழக்குப் பதிவு செய்திருப்பது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது.

    மின் கட்டண உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் நான் பேசினேன். தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டு, இன்னும் செயல்படுத்தப்படாத மின் திட்டங்கள் குறித்து ஆதாரங்களுடன் விளக்கினேன். அவை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் பா.ம.க.வினர் மீது பொய்வழக்குப் பதிவு செய்ய திமுக அரசு தூண்டியுள்ளது. சென்னை மாநகரக் காவல்துறையும் அதை அப்படியே செயல்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. 2021-22ஆம் ஆண்டில் 1558 படுகொலைகள், 2022-23ஆம் ஆண்டில் 1596 படுகொலைகள் மற்றும் 18 கூலிப்படை கொலைகள் நடந்துள்ளன. இவற்றை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார். 2023-24 ஆம் ஆண்டில் 1600-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியாக கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஏறக்குறைய 5 ஆயிரம் படுகொலைகள் நிகழ்ந்திருக்கும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசாலும், காவல்துறையாலும் முடியவில்லை. கள்ளக்குறிச்சியில் நடந்தது போன்ற கள்ளச்சாராய சாவுகளை தடுக்க முடியவில்லை. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. சந்துக் கடைகள் எனப்படும் சட்ட விரோத மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மாறாக, மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் வழக்குப் பதிவு செய்கிறது திமுக அரசு.

    பா.ம.க. நெருப்பாற்றில் நீந்தி வந்த கட்சி. அடக்குமுறைகளை சந்தித்து வளர்ந்த கட்சி. இத்தகைய பொய் வழக்குகள் மூலம் எங்களைக் கட்டுப்படுத்தி விட முடியாது. மின்கட்டண உயர்வைக் கண்டித்தும், திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்தும் அறவழியில் பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் தொடரும். சென்னையில் போராட்டம் நடத்தியதற்காக காவல்துறை தொடர்ந்துள்ள பொய் வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

    • மாறாக மின் கட்டணத்தை மட்டும் உயர்த்தியுள்ளது.
    • GR நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் திமுக அரசால் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரத்து செய்யப்பட்டது மட்டுமே.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது,

    மத்திய அரசின் Revamped Distribution Sector Scheme (RDSS) திட்டத்தில் நிதி பெறவே மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளோம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அதே பொய்யை மீண்டும் சொல்கிறது திமுக அரசு.

    இது தொடர்பாக 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து திமுகவின் திசைதிருப்பும் முயற்சியைத் தமிழக மக்களிடம் எடுத்துரைத்தோம்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக என்ன செய்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

    * பொருத்தப்படவேண்டிய ஸ்மார்ட் மீட்டர், DT மீட்டர், Feeder மீட்டர்களின் எண்ணிக்கை: 3,06,82,343 (மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய எண்ணிக்கை)

    * பொருத்தப்பட்ட மீட்டர்களின் எண்ணிக்கை: 1,30,861 (4%)

    * தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் தனியாரிடம் செய்த மின் கொள்முதல் மதிப்பு.

    2021-22: 39,365 கோடி ரூபாய்

    2022-23: 50,990 கோடி ரூபாய்

    2023-24: 65,000 கோடி ரூபாய்

    * கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு செய்த தனியார் மின் கொள்முதல் மதிப்பு: 1,55,355 கோடி ரூபாய்.

    * RDSS திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளவேண்டிய எந்த பணிகளையும் திமுக செய்யவில்லை, மாறாக மின் கட்டணத்தை மட்டும் உயர்த்தியுள்ளது.

    * கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த ஒரே மாற்றம், நலிவடைந்த BGR நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் திமுக அரசால் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரத்து செய்யப்பட்டது மட்டுமே.

    இவ்வாறு அவர் கூறியுள்ளர்.

    • அனைத்து பயனீட்டாளர்களுக்குமான மின் கட்டணத்தை பன்மடங்கு தி.மு.க. அரசு உயர்த்தியது.
    • ஏழைஎளிய, நடுத்தர மக்கள் கூடுதல் சுமையை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாதம் ஒரு முறை மின் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரை பயனடையலாம் என்றும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

    ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக, அனைத்து பயனீட்டாளர்களுக்குமான மின் கட்டணத்தை பன்மடங்கு தி.மு.க. அரசு உயர்த்தியது. இதனால், ஏழைஎளிய, நடுத்தர மக்கள் கூடுதல் சுமையை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

    இந்தச் சுமையிலிருந்து பொது மக்கள் மீண்டு வருவதற்குள்ளாக, மேலும் ஒரு நிதிச்சுமை அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.
    • தொழில் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டியவர்கள் தெருவில் வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    கோவை:

    கோவை இடையர்பாளையம், கணபதி, குறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் கிரைண்டர், மிக்சி உதிரி பாகங்கள், வாகன உதிரிபா கங்கள் உள்பட பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கக்கூடிய 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த தொழிற்சாலைகளில் இருந்து தயாராகும் பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மூலப்பொருட்கள் விலை உயர்வு, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல இன்னல்களை தொழில் துறையினர் சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மின் கட்டணமும் உயர்ந்துள்ளதால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்ட தொழில்துறையினர் தொடர்ந்து பல்வேறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் கூட சென்னை சென்று, அமைச்சர்களை சந்தித்து பேசினர். ஆனாலும் தொழில் முனைவோரின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடந்தது. கோவை இடைய ர்பாளையம், கணபதி, குறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. அங்கு பணியாற்றியவர்களும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.

    மேலும் கோவை மாவட்ட தொழில் முனைவோர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தபடி ஊர்வலமாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    இதேபோல் கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களிலும் இன்று கருப்பு கொடியேற்றப்பட்டு போராட்டம் நடந்தது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இன்று 50 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. அன்று மின்தடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், இன்று மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்று வருகிறது.

    நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். மேற்கூரை சூரியஒளி ஆற்றல் உற்பத்திற்கு நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

    12 கிலோ வாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3பி-யிலிருந்து 3ஏ1 பிரிவின் கீழ் மாற்றுதல், 2 ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வை கைவி டுதல் என்பன 5 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இதில் 12 கிலோவாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3பியில் இருந்து 3ஏ1 பிரிவின் கீழ் மாற்றுதல் என்ற ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் அரசு நிறைவேற்றியுள்ளது.

    மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி எங்கள் கூட்டமைப்பில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் சார்பில் இன்று கோவை உள்பட தமிழகம் முழுவதும் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

    தொழில் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டியவர்கள் தெருவில் வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அடுத்த கட்டமாக சென்னையில் வருகிற 16-ந் தேதி 25 ஆயிரம் தொழில் முனைவோர் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரத போரா ட்டம் நடத்தப்படும். எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மதுரை சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசியதாவது;-

    தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 8 ஆண்டுகள் மின் கட்டணம் உயர்வு இல்லை, சொத்து உயர்வு இல்லை. அப்போது மத்திய அரசு நிர்பந்தம் செய்து கூட மக்கள் மீது விலைவாசி ஏற்றத்தை சுமத்தவில்லை.

    தமிழக மக்களின் வாழ்க்கையை உயர்த்திட மக்கள் வாக்களித்தால், இன்றைக்கு மக்கள் மீது விலைவாசி உயர்வை இந்த அரசு சுமத்தி உள்ளது. எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தபோது அங்கு அண்ணாயிசம் இல்லாத தால், அ.தி.மு.க.வை தொடங்கினார். ஆனால் இன்றைக்கு மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆர்.யிசத்தை கையில் எடுத்து எம்.ஜி.ஆர். பெரியப்பா என்று கூறு கிறார் .

    தி.மு.க.வில் கருணா நிதியை முதலமைச்சராக்க எம்.ஜி.ஆர். உழைத்தார். ஆனால் அவரை கட்சியை விட்டு நீக்கினார்கள். உழைத்தவருக்கு அங்கு இடம் இல்லை. மக்களும் அவரை தூக்கி வைத்துக் கொண்டதால் இதன் மூலம் அ.தி.மு.க.வை தொடங்கினார். 51 ஆண்டுகாலம் அ.தி.மு.க. மக்களுக்காக பொது சேவையில் தன்னை முழுமையாக அர்ப்ப ணித்துக் கொண்டது.

    அண்ணாயிசம், அம்மாயிசம், எம்.ஜி.ஆர்.யிசம் ஆகியவை அ.தி.மு.க.விற்கு தான் சொந்தம். மு.க.ஸ்டாலின் பேச்சை எந்த தொண்டனும் நம்ப மாட்டார்கள். எம்.ஜி.ஆர். கருணாநிதிக்காக உழைத்தார். அவரை கசக்கி எறிந்ததை தாய்மார்கள் இன்னும் மறக்க மாட்டார்கள். இன்றைக்கு எம்.ஜி.ஆர்.யிசத்தை கையில் எடுத்து தி.மு.க. செல்வாக்கு காணாமல் போய்விட்டது என்பதற்கு இன்றைக்கு மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார்.தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மழையே பெய்யதாலும் கூட எடப்பாடி கொடுத்த ஒரு உத்தரவுக்காக தொண்டர்கள் குவிந்துள்ள னர். இந்த கூட்டமே விரைவில் அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக வர அத்தாட்சியாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க சார்பில் குன்னூரில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    ஊட்டி

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தி.மு.க அரசைக் கண்டித்தும் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் குன்னூரில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு ,கூடலூர்சட்டமன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் குன்னூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பேரட்டிராஜி, குன்னூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஹேம்சந்த், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, பாசறை மாவட்ட செயலாறர் அக்கீம்பாபு, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நகரசெயலாளர் நொண்டிமேடு கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மின் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை அ.தி.மு.க. தொடர்ந்து போராடும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
    • மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை ஜான்சிராணி பூங்காவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை

    தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின்கட்ட ணத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி மதுரை மாநகர் மாவட்ட அ.தி. மு.க. சார்பில் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் கறுப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். இதில் செல்லூர் ராஜூ அப்போது அவர் பேசியதாவது-

    கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. விபத்தில் ஜெயித்துவிட்டது. 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சி மாறிவிட்டது.தி.மு.க ஆட்சியில் கட்சியும் கண்ட்ரோல் இல்லை, ஆட்சியும் கண்ட்ரோல் இல்லை. இந்துக்கள் குறித்து ஆ.ராஜா எம்பி தரக்குறைவாக பேசி உள்ளார். இவ்வாறு அவர் பேசியதற்கு கட்சியை விட்டு நீக்கி இருக்க வேண்டும்.ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது முதல மைச்சரின் இயலாமை யை காட்டுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் மின்கட்டன உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் மு க ஸ்டாலின். 8 வழி சாலை வேண்டாம் என்று கூறி மக்களை திசை திருப்பியவர் மு. க. ஸ்டாலின். ஆனால் இன்றைக்கு ஆட்சிக்கு வந்ததும் இரட்டை வேடம் போடுகிறார். தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி வருகிறார்கள். இப்போது மின்கட்டண உயர்வை ஏற்றி மேலும் சுமையை அதிகரித்து உள்ளனர். இதனால் மக்களின் கோபத்துக்கு ஆளாகி உள்ளனர். மக்களுக்காக போராடும் இயக்கம் அ.தி.மு.க. தான். மின் கட்டன உயர்வை ரத்து செய்யும் வரை

    அ.தி. மு.க. தொடர்ந்து போராடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க.வை நம்பி மக்கள் ஏமாந்து விட்டனர் என்று அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் நடிகை விந்தியா ேபசினார்.
    • திருப்பரங்குன்றத்தில் அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தில் அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கொள்கை பரப்பு செயலாளர் நடிகை விந்தியா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. விடியல் ஆட்சி தருவோம் எனக் கூறி மக்களிடம் பல்வேறு பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. அ.தி.மு.க.வின் பல்வேறு நலத்திட்டங்களை நிதியை காரணம் காட்டி நிறுத்தி வைத்தது. தாலிக்கு தங்கம், மடிக்கணினி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிதி இல்லை என காரணம் காட்டி தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.

    ஆனால் அதே சமயத்தில் ரூ. 100 கோடியில் நூலகம், ரூ. 80 கோடியில் பேனா என அரசு நிதியை தங்களது சொந்த சுயலாபத்திற்காக வீணடித்து வருகின்றனர். சொத்து வரி உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, தற்போது மின் கட்டண உயர்வு என தொடர்ந்து மக்களை வஞ்சிக்கும் அரசாக தி.மு.க. உள்ளது. தி.மு.க.வை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விட்டனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன், மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் பாரி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் செல்வகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், வட்டச் செயலாளர்கள் பொன்.முருகன், பாலமுருகன், எம்.ஆர். குமார் உள்பட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே வரி உயர்வை அறிவித்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது.
    • தி.மு.க. ஆட்சியில் மக்களின் நிலை குறித்து நடத்தி தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று இரவு திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே வரி உயர்வை அறிவித்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது. இந்தநிலையில் மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. நாளுக்குநாள் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருப்பூர் குமரன் சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை அதிகம் பங்கேற்க செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் 2-வது ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அதை எழுச்சியோடு நடத்த வேண்டும். தி.மு.க. ஆட்சியில் மக்களின் நிலை குறித்து கையெழுத்து இயக்கத்தை வரும் 1 மாதகாலம் நடத்தி அதை தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜ், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் பூலுவபட்டி பாலு, மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர் கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் ஹரிகரசுதன், கருணாகரன், திலகர்நகர் சுப்பு, மகேஷ்ராம், சார்பு அணி செயலாளர்கள் கண்ணபிரான், சிட்டி பழனிசாமி, மார்க்கெட் சக்திவேல், கலைமகள் கோபால்சாமி, காங்கயம் நகர செயலாளர் வெங்கு மணிமாறன், வெள்ளகோவில் நகர செயலாளர் மணி, அம்மா பேரவை இணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • மின் கட்டண உயர்வுக்கு தடை விதித்து தனி நீதிபதி, உத்தரவிட்டிருந்தார்.
    • இடைக்கால தடையை நீக்கி 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

    தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நூற்பாலைகள் சங்கம் உள்பட பல நிறுவனங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மின் கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதற்கு எதிராக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது மின் கட்டண உயர்வுக்கு எதிரான இடைக்கால தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

    இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நூற்பாலைகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், இரு நீதிபதிகளின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கில் தங்களது தரப்பு கருத்தை கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    ×